search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vijayakanth"

    • எனது வாழ்க்கை முழுவதையும் கட்சிக்காகவும், தொண்டர்களுக்காகவும் அர்ப்பணித்து விட்டேன்.
    • கேப்டன் மறைவுக்கு பிறகு அந்த கட்சி இல்லாமல் போய் விடும் என்று எண்ணினர்.

    கோவை:

    கோவை சிங்காநல்லூரில் தே.மு.தி.க. முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடந்தது. விழாவில் விஜயகாந்தின் மகனும், கட்சியின் இளைஞர் அணி செயலாளருமான விஜய பிரபாகரன் கலந்து கொண்டு பேசினார்.

    அவர் பேசுகையில் மறைந்த தனது தந்தையை நினைத்து மேடையிலேயே கண்ணீர் வடித்தார். அதை பார்த்து அங்கு திரண்டு இருந்த தொண்டர்களும், பெண்களும் கண் கலங்கினர்.

    மதுரையில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை 20 ஆண்டுகளுக்கு முன்பு தலைவர் விஜயகாந்த் தொடங்கினார். கட்சிக்கு பெயர் வைக்கும் பொழுது எங்களிடம் பெயர் குறித்து விவாதித்தார். முடிவில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்று பெயர் தேர்வு செய்யப்பட்டு இன்று 20 வருடத்தை கடந்து நிற்கிறது.

    இந்த மக்கள் தொண்டு என்றும் தொடரும். தே.மு.தி.க.வை நீங்கள் தூக்கி எறிந்தாலும் சுற்றில் அடித்த பந்துபோல திரும்பி வந்து மக்களுக்கு உதவி செய்து கொண்டே இருப்போம். தே.மு.தி.க. மத, இன, மொழி, பாகுபாடு பார்க்காத கட்சி.

    அனைத்து மொழிகளையும் கற்றுக் கொள்வதில் தவறு இல்லை. நான் அரசியலுக்கு வந்திருப்பதால் வாரிசு அரசியல் என்று கூறுவதை ஏற்க முடியாது.

    என்னை மற்ற பெற்றோர்களை போல எனது பெற்றோர்களும் நன்றாக படிக்க வைத்து வேலைக்கு அனுப்ப வேண்டும். திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். ஆனால் தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கட்சி தொண்டர்கள் என்னை கட்சி பணிக்கு அழைத்தார்கள்.

    நான் எனது வாழ்க்கை முழுவதையும் கட்சிக்காகவும், தொண்டர்களுக்காகவும் அர்ப்பணித்து விட்டேன். எனது தாயார், விஜயகாந்த் உயிர் பிரியும் வரை அவரது கையை தனது கைக்குள் வைத்துக் கொண்டார்.

    கேப்டன் மறைவுக்கு பிறகு அந்த கட்சி இல்லாமல் போய் விடும் என்று எண்ணினர். மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்த முயன்றனர். ஆனால் தொண்டர்கள் வியர்வை சிந்தி கட்சியை வளர்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

    எனது தாயார் பிரேமலதா விஜயகாந்த், ஒரு தோளில் கட்சியையும், மறு தோளில் கேப்டனையும், எங்களையும் சுமந்துட்டு தொண்டர்களுக்காக இந்த கட்சியை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

    நல்லவர்கள் லட்சியம், வெல்வது நிச்சயம். அது என்றுமே தோற்க கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் தே.மு.தி.க. மாநகர், மாவட்ட செயலாளர் சிங்கை சந்துரு உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • விஜயகாந்த் மரணம் அடைந்த நாளில் இருந்து தினமும் நினைவிடத்தில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
    • விஜயகாந்த் மனைவி பிரேமலதா நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.

    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28-ந் தேதி மறைந்தார். கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. விஜயகாந்த்தின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கோவில் போன்ற தோற்றத்தை உருவாக்கி கேப்டன் கோவில் என்றே கட்சியினர் அழைத்து வருகிறார்கள்.

    விஜயகாந்த் மரணம் அடைந்த நாளில் இருந்து தினமும் நினைவிடத்தில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. யார் சந்திக்க வந்தாலும் அவர்களை நன்றாக சாப்பிட வைத்து விட்டே விஜயகாந்த் பேச தொடங்குவார். இப்படி அவர் பசியாற்றியதை நினைவு கூறும் வகையிலேயே கடந்த 8 மாதங்களாக தொடர்ச்சியாகவே அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் விஜயகாந்த் பிறந்தநாள் நாளை (25-ந் தேதி) கொண்டாடப்பட உள்ளது. விஜயகாந்த்தின் மரணத்துக்கு பிறகு வரும் முதல் பிறந்தநாள் என்பதால் கட்சியினர் கனத்த இதயத்துடனேயே இந்த பிறந்தநாளை கொண்டாடுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் விஜயகாந்த் பிறந்தநாள் வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தனது பிறந்தநாள் அன்று விஜயகாந்த் கட்சி அலுவலகத்துக்கு நேரில் சென்று நலத்திட்ட உதவிகளை வழங்குவார்.

    இந்த ஆண்டு விஜயகாந்த் மனைவி பிரேமலதா நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.

    ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தே.மு.தி.க. பொதுச் செயலாளரான பிரேமலதா செய்து வருகிறார். சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் விஜயகாந்த் பிறந்தநாளை கட்சியினர் சிறப்பாக கொண்டாட முடிவு செய்துள்ளனர்.

    தே.மு.தி.க. அலுவலகத்தில் விஜயகாந்த்திற்கு நாளை சிலை ஒன்றும் அமைக்கப்பட உள்ளது. இதற்காக மார்பளவு மற்றும் முழு உருவசிலை ஆகியவை வடிவமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. இந்த இரண்டில் ஒரு சிலை நாளை நிறுவப்பட உள்ளது.

    சென்னை மாவட்ட செயலாளர் வி.சி.ஆனந்தன், இ.ஆர்.எஸ்.பிரபாகரன், எஸ்.கே.மாறன், செந்தில் குமார் , செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் அனகை.முருகேசன் ஆகியோரும் தங்களது பகுதியில் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளனர்.

    • விஜயகாந்த் பிறந்து 71 ஆண்டுகள் இன்று நிறைவடைவதை ஒட்டி 71 நபர்களுக்கு டாட்டூ போட்டு உலக சாதனை நிகழ்வு நடைபெற உள்ளது.
    • கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் என 71 பேருக்கு டாட்டூ போடுகின்றனர்.

    சென்னை:

    விஜயகாந்தின் 72-வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது. 

    இதையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்தின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது.

    விஜயகாந்த் பிறந்து 71 ஆண்டுகள் இன்று நிறைவடைவதை ஒட்டி 71 நபர்களுக்கு டாட்டூ போட்டு உலக சாதனை நிகழ்வு நடைபெற உள்ளது.

    71 பேருக்கு 71 நிமிடங்களில் விஜயகாந்த் முகத்தை டாட்டூ போட்டு உலக சாதனை நிகழ்த்தப்பட உள்ளது.

    கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் என 71 பேருக்கு 71 டாட்டூ கலைஞர்கள் ஒரே நேரத்தில் 71 நிமிடத்தில் டாட்டூ போடுகின்றனர்.

    டாட்டூ போடும் நிகழ்ச்சியை பிரேமலதா விஜயகாந்த் தொடங்கி வைக்க உள்ளார்.

    • எந்த விதத்தில் பயன்படுத்துவதாக இருந்தாலும் முறையாக அனுமதி பெற்ற பின்பே, அறிவிப்பை வெளியிட வேண்டும்.
    • அனுமதியில்லாமல் பத்திரிகை செய்திகள், ஊடக செய்திகள், ஆடியோ வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளில் வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

    சென்னை:

    தே.மு.தி.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ் திரை உலகை சேர்ந்த அனைவருக்கும் அன்பான வேண்டுகோள், விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பத்தின் (AI TECHNOLOGY) மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வருகிறது.

    எனவே இதுபோன்ற செய்திகள் ஆடியோ வெளியீட்டு விழாவில் வருகின்றது. எங்களிடம் முன் அனுமதியில்லாமல் இது மாதிரியான அறிவிப்புகள் வருவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும். எந்த விதத்தில் பயன்படுத்துவதாக இருந்தாலும் முறையாக அனுமதி பெற்ற பின்பே, அறிவிப்பை வெளியிட வேண்டும்.

    ஏஐ தொழில்நுட்பத்தின் (AI TECHNOLOGY) மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாக இதுவரை யாரும் எந்த அனுமதியும் பெறவில்லை என்பதை நாங்கள் தெரிவித்துக்கொள்கிறோம். எனவே அனுமதியில்லாமல் பத்திரிகை செய்திகள், ஊடக செய்திகள், ஆடியோ வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளில் வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • என்னை நடிக்க வைக்க ஆசைப்பட்டவர் என் தந்தை என விஜயபிரபாகரன் உருக்கம்.
    • காலமும் நேரமும் எப்படி கை கொடுக்கிறது என பார்ப்போம்.

    ஜெட்லியின் சீனப்படமான 'மை பாதர் இஸ் ஏ ஹீரோ' என்கிற படத்தை விஜயகாந்தின் மகன் மூத்த மகன் விஜயபிரபாகன் ரீமேக் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் உருக்கமான கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், " ஜெட்லியின் சீனப்படமான 'மை பாதர் இஸ் ஏ ஹீரோ' என்ற படம் அப்பாவுக்கு மிகவும் பிடிக்கும்.

    நானும் அவரும் நடிக்க வேண்டும் என்று அப்பா மிகவும் விரும்பினார்.

    ஆனால் அது நடக்காமலேயே போய்விட்டது. அப்பாவின் ஆசையை நிறைவேற்ற அந்த படத்தை எடுக்க முடிவு செய்துள்ளேன். காலமும் நேரமும் எப்படி கை கொடுக்கிறது என பார்ப்போம்" என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் பொதுமக்கள் தே.மு.தி.க. அலுவலகத்திற்கு சென்று விஜயகாந்த் நினைவிடத்தில் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
    • விஜயகாந்தை பொருத்தவரையில் எல்லோருக்கும் உதவும் எண்ணம் கொண்டவராகவும் தன்னை தேடி வந்தவர்களை சாப்பாடு போட்டு அனுப்பும் பழக்கம் உள்ளவராகவே இருந்து வந்துள்ளார்.

    சென்னை:

    நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் கடந்த ஆண்டு டிச. 28-ந்தேதி உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

    வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் பொதுமக்கள் தே.மு.தி.க. அலுவலகத்திற்கு சென்று விஜயகாந்த் நினைவிடத்தில் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வருபவர்களுக்கு தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது.

    விஜயகாந்தை பொருத்தவரையில் எல்லோருக்கும் உதவும் எண்ணம் கொண்டவராகவும் தன்னை தேடி வந்தவர்களை சாப்பாடு போட்டு அனுப்பும் பழக்கம் உள்ளவராகவே இருந்து வந்துள்ளார். மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அவர் செய்துள்ளார்.

    இதுபோன்ற நல்ல உள்ளம் கொண்டவராக அவர் திகழ்ந்ததன் காரணமாகவே விஜயகாந்த் மீது பொதுமக்கள் அளவு கடந்த அன்பு வைத்துள்ளனர். அவர் உயிரிழந்த பிறகும் அவரது நினைவை போற்றும் வகையில் பொதுமக்கள் அவருக்கு தொடர்ச்சியாக மரியாதை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் 125 நாட்களில் தமிழ்நாடு முழுவதும் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அஞ்சலி செலுத்தி உள்ளனர். மேலும் பார்வையாளர்களுக்கு உணவு வழங்கும் உலகின் முதல் நினைவிடமாக இது போற்றப்படுகிறது.

    • ஜாதி, மதம், இனம், மொழி, நிறம் என்ற வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, மனித குலம் முழுவதும் கொண்டாடும் நாள் மே தினமாகும்
    • உலகெங்கிலும் உள்ள உழைக்கும் தொழிலாளர்கள் உரிய உரிமை பெற வேண்டும். சமுதாயத்தில் உயர்வு காண வேண்டும்

    மே தினத்தை முன்னிட்டு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜாதி, மதம், இனம், மொழி, நிறம் என்ற வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, மனித குலம் முழுவதும் கொண்டாடும் நாள் மே தினமாகும். உலகெங்கிலும் உள்ள உழைக்கும் தொழிலாளர்கள் உரிய உரிமை பெற வேண்டும். சமுதாயத்தில் உயர்வு காண வேண்டும் என்ற லட்சியத்தின் அடிப்படையில் உருவானதே மே தின நாளாகும்.

    நாடுகள் பலவாயினும் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுவது மே தினம் மட்டுமே. அதே போல மனிதர்களும் உழைத்து வாழ வேண்டும் என்பதுதான் இயற்கையின் நியதி. எல்லோரும் இன்ப வாழ்வு காண பாடுபடுவதே தேமுதிகவின் லட்சியமாகும். வறுமையை ஒழித்து, எல்லோருக்கும் எல்லா நலமும், வளமும் கிடைத்திட இந்த மே தின நன்னாளில் சூளுரை மேற்கொள்வோம்.

    இரத்தத்தை வியர்வையாக்கி உழைக்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் தேமுதிக சார்பில் எனது மே தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். எரிமலை எப்படிப் பொறுக்கும் நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம், ரத்தச்சாட்டை எடுத்தால் கையை நெறிக்கும் விலங்கு தெறிக்கும், மே தினம் உழைப்பவர் சீதனம், மே தினம் உழைப்பவர் சீதனம், மே தினம் உழைப்பவர் சீதனம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • ஜனநாயக ரீதியாக நம்முடைய கடமையை நேர்மையுடன் மக்களுக்காக சிறப்பாக பணியாற்றி இருக்கிறோம்
    • "மக்கள் தீர்ப்பே மகேசன் நீர்ப்பு" என்ற வகையில், மக்கள் நல்ல தீர்ப்பு அதிமுக தேமுதிக கூட்டணிக்கு வழங்குவார்கள் என்று நம்புவோம்

    மக்களவைத் தேர்தலில் அதிமுக - தேமுதிக கூட்டணியின் வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அதில், "2024 நாடாளுமன்ற தேர்தலில் அண்ணன் எடப்பாடியார் தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், தேசிய முற்போக்கு திராவிட கழகம் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெற மனதார எனது வாழ்த்துக்களை தேரிவித்துக் கொள்கிறேன்.

    தமிழகத்தில் நடைபெற்று முடிந்த இந்த தேர்தலுக்காக கூட்டணி சார்பாக களத்தில் இணைந்து கூட்டணி வேட்பாளர்களுக்காக அரும்பாடு பட்டு உழைத்த அனைவருக்கும் தேமுதிக சார்பில் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். கூட்டணி தர்மத்தோடு வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு களத்தில் இறங்கி உழைத்த அனைத்து வெற்றி வீரர்களுக்கும், களப்பணி ஆற்றிய கழக வீரர்களுக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக மீண்டும் பாராட்டுக்களை தெரிவித்தும் கொள்கிறேன்.

    ஜனநாயக ரீதியாக நம்முடைய கடமையை நேர்மையுடன் மக்களுக்காக சிறப்பாக பணியாற்றி இருக்கிறோம். வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். "மக்கள் தீர்ப்பே மகேசன் நீர்ப்பு" என்ற வகையில், மக்கள் நல்ல தீர்ப்பு அதிமுக தேமுதிக கூட்டணிக்கு வழங்குவார்கள் என்று நம்புவோம்" என்று அவர் தெரிவித்துள்ளார். 

    • வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் ‘தி கோட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
    • படத்தின் முதல் பாடலான விசில் போடு பாடல் தமிழ் புத்தாண்டிற்கு வெளியானது

    வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் 'தி கோட்' என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு தற்போது ரஷியாவில் நடந்து வருகிறது. படத்தின் முதல் பாடலான விசில் போடு பாடல் தமிழ் புத்தாண்டிற்கு வெளியானது. மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. யூடியூப் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் இருக்கிறது.

    இந்நிலையில் பிரேமலதா விஜயகாந்த் அளித்துள்ள ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    'தி கோட்' படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு 5, 6 முறை எங்கள் வீட்டுக்கு வந்து விஜய் நடித்து வரும் படத்தில் விஜயகாந்த் தோற்றம் இடம்பெறுவது பற்றி என்னிடம் அனுமதி கேட்டார்.

    ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலமாக விஜயகாந்தை ஒரு காட்சியில் நாங்கள் கொண்டு வர இருக்கிறோம். அதற்கு உங்கள் அனுமதி வேண்டும் என்று கேட்டார். விஜய்யும் தேர்தலுக்குப் பிறகு என்னை சந்திப்பதாக கூறி இருந்தார்.

    விஜயகாந்த் இல்லாத நேரத்தில் அவருடைய இடத்தில் இருந்து நான் யோசிக்க வேண்டும் அவர் இருந்திருந்தால் அவர் விஜய்க்கு என்ன சொல்லி இருப்பார்? செந்தூரப்பாண்டி படத்தில் விஜய்யை கேப்டன் அறிமுகப்படுத்தியது உலகத்துக்கே தெரியும்.

    எஸ்.ஏ. சந்திரசேகர் மீதும் விஜய் மீதும் அவருக்கு எப்போதும் மிகப் பெரிய பாசம் உண்டு. எனவே ஏ.ஐ. தொழில் நுட்பம் மூலம் கேப்டனை படத்தில் கொண்டு வருவது குறித்து அவர்கள் கேட்கும் போது விஜயகாந்த் இருந்திருந்தால் கண்டிப்பாக மறுப்பு தெரிவித்து இருக்க மாட்டார்.

    விஜய் என்னை வந்து சந்திக்கும்போது நல்ல முடிவாக கூறுகிறேன் என்று சொன்னேன். வெங்கட் பிரபுவிடம் உனக்கும் விஜய்க்கும் என்னால் நோ சொல்ல முடியாது என்று அந்த நேர் காணலில் கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சமூக வலை தளங்களில் அவரை கேலிப் பொருளாக்கியவர்கள் எல்லாம் இப்போது புகழ் பாடுகிறார்கள்.
    • மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்கிற அவரது எண்ணத்தை வரும் காலங்களில் நிச்சயம் செயல்படுத்துவோம்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ள நிலையில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா மாலைமலருக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:-பாராளுமன்ற தேர்தல் களம் எப்படி உள்ளது?

    பதில்:-தேர்தல் களம் எங்களுக்கு என்றும் புதிது இல்லை. 19 ஆண்டுகளாக பார்க்கும் அதே தேர்தல் களம்தான். தேர்தல் என்றாலே போர்தான். போர் களத்தில் போர் வீரர்கள் எப்படி சண்டை போடு வார்களோ அப்படித்தான் இருக்கும். தேர்தலில் பண பலம், அதிகார பலம் ஆகியவற்றோடுதான் வருவார்கள். அதையெல்லாம் சந்திக்க வேண்டியது தான்.

    மக்களிடம் இன்று மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்து நமது வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் என்னவெல்லாம் செய்வார்கள் என்று வாக்குறுதிகளை சொல்லி வருகிறோம். அடுத்தவர்களை குறை சொல்லி பேசாமல் தொகுதிக்கு நல்லது செய்வது பற்றியே மக்களிடம் பேசி வருகிறோம்.

    தேர்தல் களம் நிச்சயமாக நன்றாக உள்ளது. நாளை நமதே... 40-ம் நமதே.. எங்களது வேட்பாளர்கள் உறுதியாக வெற்றி பெறுவார்கள். மக்கள் விரும்பும் கூட்டணியாக எங்கள் கூட்டணி உள்ளது. தொண்டர்கள் இணைந்து வேலை செய்து வருகிறார்கள். அதனால் மாபெரும் வெற்றியை பெறுவோம்.

    கேள்வி:-தே.மு.தி.க.வின் வளர்ச்சிக்கு எதிர்கால திட்டங்கள் என்ன வைத்துள்ளீர்கள்?

    பதில்:-தே.மு.தி.க.வில் உள்கட்சி தேர்தலை ஏற்கனவே நடத்தி முடித்துவிட்டோம். கேப்டன் மறைந்து 100 நாள்தான் ஆகிறது. அந்த சோகத்தில் இருந்து இன்னும் நாங்கள் வெளியே வரவில்லை. தேர்தல் என்கிற மிகப்பெரிய சவால் எங்கள் முன்பு இருப்பதால் அதை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். தேர்தல் பணிகள் முடிந்து முடிவுகள் வந்த பின்னர் கட்சியை மேலும் வலுப்படுத்த உள்ளோம்.

    கேப்டன் எப்படி மிகப்பெரிய வலிமையோடு கட்சியை நடத்தினாரோ, அதே போல மக்கள் பிரச்சினைகளை கையில் எடுத்து மக்களுக்காக உழைப்போம்.

    கேள்வி:-அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வும் சேர்ந்திருந்தால் மேலும் வலுவாக இருந்திருக்கும் என்கிற கருத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

    பதில்:-தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் ஏற்கனவே 10 ஆண்டுகள் இருந்தோம். நீங்கள் குறிப்பிடும் கட்சியும் அப்போது கூட்டணியில் இருந்தது. ஆனால் பெரிய வெற்றி எதையும் பெற முடியவில்லையே.

    இந்த முறை எங்கள் மாவட்ட செயலாளர்கள் அனைவருமே அ.தி.மு.க.வோடு கூட்டணி வைக்க வேண்டும் என்றே கூறினார்கள். அதுவே அவர்களது முடிவாகவும் இருந்தது. அந்த வகையிலேயே அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பது என்கிற நிலைப்பாட்டை எடுத்தோம். அண்ணன் எடப்பாடி பழனிசாமி எங்களுக்கு உரிய மரியாதையை அளித்தார்.

    ஆரம்பத்திலேயே எங்களை அணுகி பேசியதால் அ.தி.மு.க. கூட்டணி சிறப்பாக அமைந்துள்ளது. இது மக்கள் விரும்பும் கூட்டணியாக உள்ளது. தொண்டர்கள் விரும்பும் கூட்டணியாகவும் எங்கள் கூட்டணியை பார்க்கிறேன். அதனால் பெரிய வெற்றி எதிர் பார்க்கிறோம்.

    கேள்வி:-அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிளவை எப்படி பார்க்கிறீர்கள்?

    பதில்:-அ.தி.மு.க.வில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இறந்த போது ஒரு பிளவு ஏற்பட்டது. அதன் பின்னர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகும் பிளவு ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க.வில் இது ஒன்றும் புதிது அல்ல. இந்த கேள்விக்கு நான் பதில் சொல்வதை விட அ.தி.மு.க. நிர்வாகிகள் பதில் அளித்தால்தான் சரியாக இருக்கும்.

    அதே நேரத்தில் அது உள்கட்சி பிரச்சினை. சேருவதும், சேராததும் அவர்களது விருப்பம். எப்போதும் ஒன்றாக இருந்தால் அது நல்லது தானே? அதில் மாற்று கருத்து இல்லையே. இந்த விஷயத்தில் அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

    கேள்வி:-கூட்டணி விஷயத்தில் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் அணுகுமுறை எப்படி உள்ளது?

    பதில்:-மிக மிக சிறப்பாக உள்ளது. அதனை எல்லா கூட்டங்களிலுமே நீங்கள் பார்க்கலாம். எல்லா பிரசாரத்திலும் நான் சொல்லி வருகிறேன். அண்ணன் எடப்பாடி பழனிசாமி மிக மிக மரியாதையோடு கூட்டணியை வழி நடத்துகிறார். எப்போது போன் செய்தாலும் எடுத்து பேசுவார். அன்பாக கனிவாக பேசுவது, வழி நடத்துவது எல்லாமே மிக மிக அபாரமாக உள்ளது. பாராட்டுதலுக்குரிய எதிர்க்கட்சி தலைவராகவே எடப்பாடி பழனிசாமியை நான் பார்க்கிறேன்.

    கேள்வி:-விஜய பிரபாகரன் தேர்தல் களத்தில் புதிதாக இறங்கியுள்ளார். எதிர் காலத்தில் கட்சியில் அவரது பங்கு என்னவாக இருக்கும்?

    பதில்:-தேர்தல் களத்துக்குத்தான் விஜயபிரபாகரன் புதியவர். ஆனால் பிறந்ததில் இருந்தே அப்பாவையே பார்த்து வளர்ந்தவர் அவர். எனவே அவருக்கு எதுவும் புதிது அல்ல. அப்பாவோடும் என்னோடும் தேர்தல் பிரசாரத்துக்கு வந்துள்ளார். கட்சிக்குள் நடக்கும் அனைத்து விழாக்களிலும் அவர் பங்கேற்றுள்ளார். ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டங்களிலும் கலந்து கொண்டுள்ளார். இதுவரை கட்சியில் அவருக்கு எந்த பொறுப்பும் கொடுக்கப்படாமலேயே உள்ளது. ஆனால் கட்சியில் அனைவரும் விஜய பிரபாகரனுக்கு பதவி வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.

    கேப்டன் இவ்வளவு சீக்கிரம் எங்களை விட்டுச் செல்வார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. உடனடியாக தேர்தல் வந்ததால் சவாலுடன் எதிர்கொண்டுள்ளோம். அனைவரும் விஜயபிரபாகரன் போட்டியிட வேண்டும் என்றே விரும்பினார்கள். எனவே எங்களது பூர்வீக தொகுதியான விருதுநகர் தொகுதியில் அவர் போட்டியிடுகிறார்.

    எங்களது மாமனார், மாமியர் பிறந்த ஊர் அங்குதான் உள்ளது. எங்கள் குல தெய்வமும் அங்கேதான் இருக்கிறது. திருப்பரங்குன்றத்தில்தான் எங்கள் திருமணம் நடந்தது. இப்படி எங்கள் வாழ்க்கையே விருதுநகரில்தான் தொடங்கியுள்ளது. எனவே விஜய பிரபாகரன் அங்கு நிற்க வேண்டும் என்று விருதுநகர் தொகுதி மக்களும் விரும்பினார்கள். கட்சி நிர்வாகிகள், தொண்டர்களும் விரும்பினார்கள். இப்படி அனைவரின் விருப்பத்துக்கும் இணங்கவே விருதுநகரில் அவர் போட்டியிடுகிறார்.

    தொகுதி மக்கள் விஜயபிரபாகரனை தங்களது செல்லப்பிள்ளையாகவே பார்க்கிறார்கள். தேர்தல் முடிநதவுடன் விஜய பிரபாகரனுக்கு வழங்கப்பட வேண்டிய பொறுப்பு பற்றி முடிவெடுத்து அறிவிக்க உள்ளோம்.

    கேள்வி:-விஜயகாந்த் மறைவில் இருந்து எப்படி மீண்டு வருகிறீர்கள்?

    பதில்:-கேப்டன் இவ்வளவு சீக்கிரம் எங்களை விட்டுச் செல்வார் என்று எதிர்பார்க்கவில்லை. அவரது மறைவில் இருந்து இன்னமும் மீண்டு வர முடியாமலேயே உள்ளோம். 3 மாதங்களாக வெளியில் எங்கும் செல்லாமலேயே இருந்தேன். அலுவல கம், வீட்டை தாண்டி எங்கேயும் போகவில்லை. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீங்களும் பிரசாரத்துக்கு வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் கூட்டணி தர்மத்தை மதித்து பிரசாரம் செய்து வருகிறேன். கேப்டன் எங்களிடம் மிகப்பெரிய பொறுப்பை ஒப்படைத்து விட்டு சென்றுள்ளார். கட்சியை எதிர்காலத்தில் நன்றாக வழிநடத்தி அவர் கண்ட கனவை எட்டுவதற்கு உழைப்போம்.

    எப்போதும் மக்களை பற்றியே சிந்தித்து வந்த அவர் முதல்-அமைச்சராகி நலத்திட்டங்களை செய்ய விரும்பினார். ஆனால் சமூக வலை தளங்களில் அவரை கேலிப் பொருளாக்கியவர்கள் எல்லாம் இப்போது புகழ் பாடுகிறார்கள்.

    விஜயகாந்தை முதல்-அமைச்சராக்காமல் விட்டுவிட்டோமே என்று மக்கள் இப்போது வருத்தப்படுகிறார்கள். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்கிற அவரது எண்ணத்தை வரும் காலங்களில் நிச்சயம் செயல்படுத்துவோம்.

    இவ்வாறு பிரேமலதா கூறினார்.

    • நடிகர் மற்றும் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் கடந்த ஆண்டில் உடல் நலக்குறைவால் காலமானார்
    • விஜயகாந்த் மறைந்து 100 நாள் நிறைவடைந்த நிலையில் அவரது நினைவிடத்தில் பிரேமலதா விஜயகாந்த் அஞ்சலி செலுத்தினார்

    நடிகர் மற்றும் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் கடந்த ஆண்டில் உடல் நலக்குறைவால் காலமான சூழலில் அவரது சமாதிக்கு தினந்தோறும் ஏராளமான ரசிகர்கள், தொண்டர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வந்தவண்ணம் உள்ளனர்.

    இன்று விஜயகாந்த் மறைந்து 100 நாள் நிறைவடைந்த நிலையில் அவரது நினைவிடத்தில் மகன் சண்முக பாண்டியனுடன் சென்ற பிரேமலதா விஜயகாந்த் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். இதனையடுத்து, விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்த ஏராளமான பொதுமக்களுக்கு பிரேமலதா அன்னதானம் வழங்கினார்.

    இந்நிலையில் இன்றைய தினம் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் தன்னுடைய 31வது பிறந்த நாளை எளிமையான முறையில் கொண்டாடி வருகிறார். அவரது நடிப்பில் உருவாகி வரும் படை தலைவன் படத்தின் டீசர் இன்றைய தினம் பிறந்த நாள் ஸ்பெஷலாக வெளியானது.

    சண்முக பாண்டியன் இந்த ஆண்டில் தன்னுடைய அப்பாவை இழந்து முதல் முறையாக அவர் இல்லாமல் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அதனால் அவரது பிறந்தநாள் மிகவும் எளிமையாக கொண்டாடப்பட்டது.

    இந்நிலையில் சண்முக பாண்டியன் பிறந்தநாளை சிறப்பாக்கும் வகையில் அவரது அண்ணன் விஜய பிரபாகரன் தம்பிக்கு காஸ்ட்லியான Porsche கார் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். இந்த விஷயம் ரசிகர்கள் மற்றும் தொண்டர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எங்கு தேடினாலும் இதுபோன்ற உண்மையான பாசமான தொண்டர்களை பார்க்க முடியாது.
    • முன்னதாக அ.தி.மு.க. வேட்பாளர் குமரகுரு விஜயகாந்த் குறித்து பேசிய போது அவரும் கண் கலங்கினார்.

    ரிஷிவந்தியம்:

    கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் குமரகுருவை ஆதரித்து தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி வாணாபுரத்தில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார்.

    ரிஷிவந்தியம் வந்த எனக்கு தலைவர் விஜயகாந்த் வாழ்ந்த நாட்கள் தான் ஞாபகம் வருகிறது. கேப்டன் விஜயகாந்த் மக்களை சந்தித்து எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறார். விஜயகாந்த் மறைவிற்கு பிறகு பொதுச்செயலாளராக பதவி ஏற்ற பிறகு ரிஷிவந்தியம் மக்களை சந்திக்க வந்துள்ளேன்.

    நான் எந்த தொகுதிக்கு சென்றாலும் தைரியமாக பேசுவேன். ஆனால் கேப்டன் விஜயகாந்த் வாழ்ந்த இந்த பூமியை நிச்சயமாக என்னால் மறக்க முடியவில்லை. எங்கு தேடினாலும் இதுபோன்ற உண்மையான பாசமான தொண்டர்களை பார்க்க முடியாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் செய்த திட்டங்கள் குறித்து பேசிய போது திடீரென அவர் தேம்பி, தேம்பி அழ தொடங்கினார். இதைப்பார்த்த அங்கிருந்த தொண்டர்களின் கண்களிலும் கண்ணீர் வரத் தொடங்கியது. பின்னர் அவர் தனது அழுகையை அடக்கிக் கொண்டு மீண்டும் தனது பேச்சை தொடங்கினார். முன்னதாக அ.தி.மு.க. வேட்பாளர் குமரகுரு விஜயகாந்த் குறித்து பேசிய போது அவரும் கண் கலங்கினார்.

    ×