என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Tamizhaga Vetri kazhagam"
- 40 தொகுதிகளுக்கு நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது.
- விஜய் பலத்த பாதுகாப்புடன் வாக்குச்சாவடிக்குள் சென்று வாக்களித்தார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கு நேற்று ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடந்து முடிந்தது.
வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், அரசியல் கட்சி தலைவர்களும், திரைப் பிரபலங்களும் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து சென்றனர்.
அதன்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் நேற்று நண்பகலில் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க சென்றார்.
அப்போது அங்கு கூட்டம் அலைமோதியது. இதனால், விஜய் பலத்த பாதுகாப்புடன் வாக்குச்சாவடிக்குள் சென்று வாக்களித்தார்.
இந்நிலையில், விஜய் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் புகார் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், 200க்கும் மேற்பட்ட நபர்களுடன், தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்குச்சாவடிக்குள் சென்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
- நடிகர்கள் அஜித், ரஜினிகாந்த், விக்ரம், சூர்யா, கார்த்தி, பிரபு, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் வாக்களித்தனர்.
- விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சென்னை:
பாராளுமன்ற மக்களவை தேர்தலானது ஏழு கட்டமாக நடைபெறுகிறது. இதில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உட்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். அதே போல் அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.
அதன்படி, நடிகர்கள் அஜித், ரஜினிகாந்த், விக்ரம், சூர்யா, கார்த்தி, பிரபு, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் வாக்களித்தனர்.
இதையடுத்து நடிகரும், தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய், சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
வாக்களிக்க வந்த விஜயால் வாக்குச்சாவடியில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்ட விஜய் தனது வாக்கினை பதிவு செய்தார்.
இதையடுத்து விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
நான் எனது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளேன். நீங்களும் உங்கள் வாக்குச் சாவடிக்குச் சென்று உங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.
நான் எனது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளேன். நீங்களும் உங்கள் வாக்குச் சாவடிக்குச் சென்று உங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
— TVK Vijay (@tvkvijayhq) April 19, 2024
விஜய்,
தலைவர்,
தமிழக வெற்றிக் கழகம் pic.twitter.com/SboEtwyt83
- இரண்டு கோடி உறுப்பினர்கள் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளோம்.
- இந்தப் புதிய அணி, கழக உள்கட்டமைப்பைச் சார்ந்து விரைவில் விரிவாக்கம் செய்யப்படும்.
தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை அணி நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள் என்று அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தமிழக வெற்றிக் கழகத்தின் அடிப்படைக் கட்டமைப்புகளை வலுப்படுத்தி வருகின்றோம். இரண்டு கோடி உறுப்பினர்கள் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளோம். இதன் முதற்கட்டமாக, உறுப்பினர் சேர்க்கை அணியை உருவாக்கியுள்ளோம்.
மகளிர் தலைமையில் முதன்முதலாக உருவாக்கப்பட்டுள்ள இந்த அணியினர். கழகத் தோழர்களோடு இணைந்து, மக்களுக்கு உதவி செய்வார்கள்.
தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை அணிக்கு, மாநிலச் செயலாளர் சி.விஜயலட்சுமி, மாநில இணைச் செயலாளர் எஸ்.என். யாஸ்மின், மாநிலப் பொருளாளர் வி. சம்பத்குமார், மாநிலத் துணைச் செயலாளர் ஏ. விஜய் அன்பன், மாநிலத் துணைச் செயலாளர் எம்.எல். பிரபு ஆகிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் புதிய அணி, கழக உள்கட்டமைப்பைச் சார்ந்து விரைவில் விரிவாக்கம் செய்யப்படும். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர் சேர்க்கை அணி நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று விஜய் தெரிவித்துள்ளார்.
- குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
- சிறுமியின் பெற்றோர்களுக்கு என் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.
புதுச்சேரியில் 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவு வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரியில் 9 வயது சிறுமி கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பேரதிர்ச்சியையும் – தாங்கொணாத் துயரையும் ஏற்படுத்தியுள்ளது.
மழலை முகம் மாறாத அச்சிறுமியையும் - அவரது எதிர்கால ஆசைகள் - கனவுகளையும் ஒரே அடியாக சிதைத்துள்ள இக்கொடுமை மனித குலத்திற்கே விரோதமானது. இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ள சமூக விரோதிகளுக்கு உச்சபட்ச தண்டனையை உடனே வழங்க வேண்டும். மேலும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
யாராலும் தேற்ற முடியாத சோகத்தில் தவிக்கும் அச்சிறுமியின் பெற்றோர்களுக்கு என் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில் பதிவு.
- சிறுமியின் பெற்றோருக்குக் கனத்த இதயத்துடன் ஆறுதல் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.
புதுச்சேரியில் கடத்தப்பட்ட 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டு கால்வாயில் தூக்கி வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தை கண்டித்து எதிர்க்கட்சிகள் புதுச்சேரி அரசுக்கு எதிராக கண்டனங்களை எழுப்பி வருகின்றனர்.
புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் தங்களின் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், புதுச்சேரி சிறுமி படுகொலை சம்பவம் தொடர்பாக தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
புதுச்சேரி, முத்தியால்பேட்டையைச் சேர்ந்த 9 வயதுச் சிறுமி, பாலியல் துன்புறுத்தலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், நெஞ்சைப் பதற வைக்கிறது.
பெற்ற மகளை இழந்து, பெருந்துயரத்துடன் உள்ள சிறுமியின் பெற்றோருக்குக் கனத்த இதயத்துடன் ஆறுதல் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.
சிறுமியை மிருகத்தனமாக, ஈவு இரக்கமின்றிப் படுகொலை செய்த கொலையாளிகளுக்குச் சட்டப்படி அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர, புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்கியது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்டோர் மாணவர்களுக்கு வாழ்த்து.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்கியது. தேர்வை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்டோர் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12ம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதும் மாணவ- மாணவிகளுக்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்றிலிருந்து 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதும் என் அன்புத் தம்பி, தங்கைகள் அனைவரும் அனைத்துத் தேர்வுகளையும் உற்சாகத்துடன் எதிர்கொண்டு வெற்றி பெற்று, விரும்பிய துறைகளில் உச்சம் தொட வாழ்த்துகிறேன்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- சமூக வலைதளங்களில் கட்சியின் உறுப்பினர் படிவம் என வதந்தி.
- அதிகாரப்பூர் செயலி வாயிலாக மட்டுமே உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெறும்.
பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகே விஜய் மக்களை சந்திப்பார் என தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது.
சமூக வலைதளங்களில் கட்சியின் உறுப்பினர் படிவம் என பரவி வந்த நிலையில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதிகாரப்பூர் செயலி வாயிலாக மட்டுமே உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெறும்.
கட்சியின் அதிகாரப்பூர்வமான சமூக வலைத்தளங்களில் மட்டுமே அறிவிப்புகள் வெளியாகும்.
யூகத்தின் அடிப்படையில் பரப்பப்படும் செய்திகளை கழகத் தோழர்களும், பொது மக்களும் நம்ப வேண்டாம்.
கடந்த பிப்ரவரி 2ம் தேதி விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே பொதுமக்கள் சந்திப்பு குறித்து தெளிவாக விளக்கியுள்ளார்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- மாநாட்டில் கட்சி கொடி மற்றும் கொள்கைகள் அறிவிக்கப்பட உள்ளன.
- புதிய உறுப்பினர் சேர்க்கைக்காக உருவாக்கப்பட்ட சிறப்பு செயலி அடுத்த வாரத்தில் தொடங்கப்பட உள்ளது.
சென்னை:
தமிழக வெற்றிக் கழகம் என புதிய அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் தொடர்ந்து கட்சி வளர்ச்சி பற்றி அடுத்தடுத்து புதிய திட்டங்களை அறிவித்து வருகிறார்.
அரசியல் பணிகளுக்காக புதிய வியூகங்களை அமைப்பது தொடர்பாக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் ஓய்வுப்பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடம் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
முதலில் உள்கட்சி கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக சமீபத்தில் விஜய் உத்தரவின் பேரில் புஸ்சி ஆனந்த் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை பனையூரில் நடந்தது.
இதில் கட்சிக்கு 2 கோடி உறுப்பினர்களை புதிதாக சேர்க்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அடுத்த கட்டமாக மாவட்ட தலைவர்கள், மகளிரணி நிர்வாகிகள், பிற அணி நிர்வாகிகள் என புதிய நிர்வாகிகள் அறிவிப்பு வெளியாக உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள மாவட்டங்களை 100 ஆக பிரித்து புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
விஜய் தற்போது 'தி கோட்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளது.
இதைத் தொடர்ந்து புதிய அரசியல் பயணத்தை அதிரடியாக அறிவித்த விஜய் கட்சியின் முதல் மாநாட்டை மதுரையில் பிரமாண்டமாக நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. விஜய் பிறந்தநாளான ஜூன் 22-ந்தேதி மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டில் கட்சி கொடி மற்றும் கொள்கைகள் அறிவிக்கப்பட உள்ளன. பெண்கள் மற்றும் இளைஞர்கள், இளம்பெண்களை கவரும் வகையில் கட்சி கொள்கைகள் மாநாட்டில் அறிவிக்கப்பட உள்ளது.
இந்த நிலையில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்காக உருவாக்கப்பட்ட சிறப்பு செயலி அடுத்த வாரத்தில் தொடங்கப்பட உள்ளது.
- மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன்.
- கட்சியின் விரிவாக்கம், கட்சியை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்ப்பது தொடர்பாக அனைத்து மாவட்ட நிர்வாகிகளிடமும் கருத்துக்கள் கேட்கப்பட்டன.
சென்னை:
நடிகர் விஜய் அரசியல் பிரவேசம் எப்போது என்று அவரது ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து இருந்த நிலையில் கடந்த 2-ந்தேதி 'தமிழக வெற்றிக்கழகம்' என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கினார். முறைப்படி இந்திய தேர்தல் ஆணையத்திலும் அவரது கட்சியை பதிவு செய்தார்.
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் விஜய் கட்சி தொடங்கியதால் பாராளுமன்ற தேர்தலை சந்திப்பாரா? கூட்டணி அமைப்பாரா? தனித்து போட்டியிடுவாரா? என்று பல்வேறு கேள்விகள் எழுந்தன.
அதற்கும் தனது அறிக்கையின் மூலம் விடை சொன்னார். அதாவது பாராளுமன்ற தேர்தலில் போட்டியும் இல்லை. எந்த கட்சிக்கும் ஆதரவும் இல்லை என்றும் தனது இலக்கு 2026 சட்டமன்ற தேர்தல்தான் என்பதையும் தெளிவுபடுத்தினார்.
இந்த நிலையில் கட்சிக்கான கொடி, சின்னத்தை தயார் செய்வதில் தீவிரம் காட்டி வருகிறார். சின்னத்தை பொறுத்தவரை பெண்களை கவரும் வகையில் இருக்க வேண்டும் என்று கருதுகிறார். அதற்கு ஏற்ற வகையில் சின்னத்தை தேர்வு செய்யும்படி நிர்வாகிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.
ஏற்கனவே நான்கைந்து சின்னங்கள் பரிசீலனையில் உள்ளது. மேலும் புதிய சின்னங்களையும் தேட தொடங்கி இருக்கிறார்கள்.
அடுத்தக்கட்ட நடவடிக்கையாக அனைத்து மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்கள். இதற்காக அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. தலைமையின் அழைப்பை ஏற்று அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் நேற்று மாலையிலேயே சென்னைக்கு வந்துவிட்டார்கள்.
இன்று காலை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமை தாங்கினார். கூட்டம் தொடங்கியதும் அனைவரும் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். உறுதிமொழி வருமாறு:-
நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன்.
மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடனும் ஒற்றுமை, சகோதரத்துவம், மத நல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக் காக்கின்ற பொறுப்புள்ள தனிமனிதராகச் செயல்படுவேன். மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதிப்பாதையில் பயணித்து என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமையாற்றுவேன்.
சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளைக் களைந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சமவாய்ப்பு, சமஉரிமை, கிடைக்கப் பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையைக் கடைப்பிடிப்பேன் என்று உளமார உறுதி அளிக்கின்றேன்.
கூட்டத்தில் கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்ப்பது, கட்சியின் கட்டமைப்பை விரிவாக்கம் செய்வது, மாவட்ட தலைவர்களை நியமிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்கள்.
விஜய் மக்கள் இயக்கத்துக்கு அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட செயலாளர்கள் இருக்கிறார்கள். அவர்களில் சிறப்பாக பணியாற்றுபவர்கள் தமிழக வெற்றிக்கழகத்தின் மாவட்ட தலைவர்களாகவும் நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
கட்சியின் விரிவாக்கம், கட்சியை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்ப்பது தொடர்பாக அனைத்து மாவட்ட நிர்வாகிகளிடமும் கருத்துக்கள் கேட்கப்பட்டன.
- ரசிகர் மன்றத்தை அரசியல் கட்சியாகவும் பதிவு செய்துள்ளதாக அறிவித்தார்.
- அரசியல் வருகைக்கு பலதரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர்.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் விஜய். அதிகளவில் ரசிகர் பட்டாளம் கொண்ட விஜய் அரசியலில் களமிறங்குவதை சமீபத்தில் உறுதிப்படுத்தி இருந்தார். மேலும் தனது ரசிகர் மன்றத்தை அரசியல் கட்சியாகவும் பதிவு செய்துள்ளதாக அறிவித்தார்.
தனது அரசியல் கட்சிக்கு "தமிழக வெற்றி கழகம்" என விஜய் பெயர் சூட்டியிருந்தார். இவரின் அரசியல் வருகை குறித்து ஏற்கனவே பலரும் தகவல் தெரிவித்து வந்தனர். அந்த வகையில், விஜயின் அரசியல் வருகைக்கு பலதரப்பினரும் தங்களது வாழ்த்துகள் மற்றும் கருத்துக்களை தெரிவித்தனர்.
மேலும், இவரது அரசியல் கட்சியின் பெயர் தொடர்பாக பலரும் கருத்துக்களை தெரிவித்தனர். சிலர் கட்சி பெயரில் எழுத்து பிழை இருப்பதாகவும், சிலர் தமிழகமா தமிழ்நாடா? என்பதில் சந்தேகம் தெரிவித்தனர். இந்த நிலையில், கட்சி பெயரில் எழுத்து பிழை இருப்பதை விஜய் ஏற்றுக் கொண்டிருப்பதாகவும், அதனை திருத்தவும் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே தேர்தல் ஆணையத்தில் தமிழக வெற்றி கழகம் என்ற பெயர் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது வெற்றிக்கு பக்கத்தில் "க்" என்ற எழுத்தை சேர்த்து "தமிழக வெற்றிக் கழகம்" என திருத்தம் செய்து மீண்டும் பதிவு செய்யப்படும் என கூறப்படுகிறது.
- நடிகர் விஜய் சமீபத்தில் தனது கட்சி பெயரை அறிவித்தார்.
- இவருக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பதோடு மட்டுமல்லாமல் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் அரசியல் கட்சிகளுக்கு இணையாக பல்வேறு மக்கள் நலப்பணிகளை செய்து வந்தார். சமீபத்தில் நடிகர் விஜய் தனது கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என பெயர் வைத்துள்ளதாக அறிவித்தார்.
தொடர்ந்து 2026-ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதே நம் இலக்கு என்று குறிப்பிட்டிருந்தார். அதுமட்டுமல்லாமல், தனது 69-வது படத்திற்கு பிறகு இனி படங்களில் நடிக்க மாட்டேன் என்று தெரிவித்தார். இவருக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் விஷாலும் கட்சி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, தனது ரசிகர் மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்றி அதற்கான பெயரை இன்று காலை விஷால் அறிவிக்கிறார் என கூறப்படுகிறது. மேலும், விஷாலும் விஜய்யை போன்று 2026- ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடவுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
நடிகர் விஷால் தனது ரசிகர் மன்றத்தை 'விஷால் மக்கள் நல இயக்கம்' என பெயர் மாற்றம் செய்துள்ளார். இவர் ஏற்கெனவே அரசியல் பணிகளில் ஆர்வம் காட்டி வருகிறார். சென்னை ஆர்.கே. நகர் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பினார். ஆனால் அவரது வேட்புமனுவில் தவறு இருப்பதாக கூறி அவரது வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- நடிகர் விஜய் 'தி கோட்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் 'தி கோட்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் திரைப்பிரபலங்கள் பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
விஜய் நடிப்பதோடு மட்டுமல்லாமல் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் அரசியல் கட்சிகளுக்கு இணையாக பல்வேறு மக்கள் நலப்பணிகளை செய்து வந்தார். சமீபத்தில் நடிகர் விஜய் தனது கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என பெயர் வைத்துள்ளதாக அறிவித்தார்.
தொடர்ந்து 2026-ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதே நம் இலக்கு என்று குறிப்பிட்டிருந்தார். அதுமட்டுமல்லாமல், தனது 69-வது படத்திற்கு பிறகு இனி படங்களில் நடிக்க மாட்டேன் என்று தெரிவித்தார். இவருக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்திற்கு சென்ற நடிகர் ரஜினியிடம் விஜய் கட்சி ஆரம்பித்துள்ளது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு, 'வாழ்த்துகள்' என்று ஒரு வரியில் மகிழ்ச்சியை வெளிப்படுத்திவிட்டு சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்