search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cooking"

    • பிஸ்கெட்டை வைத்து எளிமையா செய்யலாம் பிஸ்கெட் பர்ஃபி.
    • குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

    என்னது பிஸ்கெட்டை வைத்து சாக்லேட் பர்ஃபியா, அதெப்படி என்று தானே யோசிக்கிறீங்க... நம்ம வீட்டில் இருக்கும் பிஸ்கெட்டை வைத்து எளிமையா செய்யலாம் பிஸ்கெட் பர்ஃபி. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அதுமட்டுமல்ல குழந்தைகளே எளிமையா இதனை செய்ய முடியும். அரைமணிநேரத்திலேயே இதனை செய்து முடித்துவிடலாம்.

    தேவையான பொருட்கள்:

    பிஸ்கெட்- ஒரு பாக்கெட்

    கோ கோ பவுடர்- அரைகப்

    பொடித்த நட்ஸ்- ஒரு கப்

    வெண்ணெய்- 50 கிராம்

    சர்க்கரை- அரைகப்

    செய்முறை:

    இந்த சாக்லேட் பர்ஃபி செய்வதற்கு கிரீம் இல்லாத பிஸ்கெட்டை எடுத்துக்கொள்ள வேண்டும். முதலில் பிஸ்கெட்டை எடுத்து அதனை சிறிது சிறிதாக உடைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பு மிக்சியில் போட்டு பொடித்துவிடக்கூடாது.

    அதன்பிறகு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் பிடித்த சர்க்கரை, கோ கோ பவுடர் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இந்த கலவை கெட்டியாகும் போது வெண்ணெய் சேர்க்க வேண்டும்.

    வெண்ணெய் சேர்த்தவுடன் இந்த கலவை சிறிது கெட்டியாகத்தொடங்கும். இந்த நேரத்தில் இந்த கலவையை எடுத்து நாம் ஏற்கனவே உடைத்து வைத்துள்ள பிஸ்கெட் கலவையில் சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும்.

    இந்த கலவையை வெண்ணெய் தடவிய கேக் மோல்டில் கொட்டி சரி சமமாக சமப்படுத்த வேண்டும். பின்னர் இதனை மூடி ஃப்ரிட்ஜில் 2 மணிநேரம் வைத்து எடுத்து சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்து பரிமாறலாம். கோடை விடுமுறையை கொண்டாடும் குழந்தைகளுக்கு செய்து கொடுத்து அசத்துங்கள். 

     

    • சாக்லேட் என்று கூறினால் யாருக்கு தான் பிடிக்காது.
    • சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.

    சாக்லேட் என்று கூறினால் யாருக்கு தான் பிடிக்காது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவுப் பொருள். இந்த சாக்லேட்டை வைத்து பல விதமான ஸ்வீட் வகைகளும், ஐஸ்கிரீம் வகைகளையும், கேக் வகைகளையும் நாம் வீட்டிலேயே தயாரிக்கலாம். உங்க வீட்டில் இருக்கும் குட்டீஸ்களுக்கு இந்த ராகி சாக்லேட் கேக்கை செய்து கொடுத்து அசத்துங்கள். வாங்க எப்படி செய்யலாம்னு பாக்கலாம்...

    தேவையான பொருட்கள்:

    ராகி மாவு- ஒரு கப்

    கோ கோ பவுடர்- அரை கப்

    முட்டை- 2

    நாட்டுசர்க்கரை- ஒரு கப்

    பேக்கிங் சோடா- ஒரு ஸ்பூன்

    பேக்கிங் பவுடர்- கால் டீஸ்பூன்

    ஆயில்- ஒரு குழு கரண்டி

    வெனிலா எசன்ஸ்- ஒரு ஸ்பூன்

    செய்முறை:

    முதலில் ஒரு மிக்சி ஜாரில் இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்ற வேண்டு. பின்னர் அதில் ஆயில், கோ கோ பவுடர் மற்றும் வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக அடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    அதன்பிறகு அதே மிக்சி ஜாரில் ஜலித்து வைத்துள்ள ராகி மாவு, நாட்டு சர்க்கரை, பேக்கிங் சோடா மற்றும் பேக்கிங் பவுடர், தேவைப்பட்டால் சிறிதளவு பால் சேர்த்து மிக்சியில் அடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    இதனை வெண்ணெய் தடவிய ஒரு கேக் மோல்டில் ஊற்றி ஓவன் அல்லது குக்கரில் வைத்து வேக வைத்து எடுத்தால் சுவையான, ஊட்டச்சத்து நிறைந்த ராகி சாக்லேட் கேக் தயார். கோடை விடுமுறையில் வீட்டில் இருக்கும் உங்க வீட்டு குட்டீஸ்களுக்கு செய்து கொடுத்து அசத்துங்க.

     

    • அனைவருக்கும் பனீர் பக்கோரா மிகவும் பிடிக்கும்.
    • பனீரில் புரோட்டின்ஸ் அதிகம் உள்ளது.

    நூடுல்ஸ் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும் பனீர் சேர்த்து என்றால் விட்டு வைக்கவே மாட்டார்கள். பனீரில் புரோட்டின்ஸ் அதிகம் உள்ளது. பனீரையும், நூடுஸ்சையும் வைத்து பன்னீர் பக்கோரா செய்தால் அவ்வளவுதான் செய்த உடனேயே காலியாகிவிடும். அந்த அளவிற்கு அனைவருக்கும் இந்த டிஷ் மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்

    பனீர்- ஒரு கப் துருவியது

    நூடுல்ஸ் - 2 பாக்கெட்டுகள்

    கான்பிளார் - 2 தேக்கரண்டி

    வெங்காயம் - கால் கப்

    குடைமிளகாய் - 1

    முட்டைக்கோஸ் - 1 கப்

    பூண்டு விழுது - 2 தேக்கரண்டி

    பச்சை கொத்தமல்லி - 2 தேக்கரண்டி

    சீஸ் - அரை கப்

    உப்பு - தேயான அளவு

    செய்முறை

    முதலில், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும் போது, நூடுல்ஸ் மசாலாப் பொருள்களைச் சேர்த்து நன்கு கலந்துவிட வேண்டும். பின்னர் நூடுல்ஸ் வெந்ததும் எடுத்து தனியே வைக்க வேண்டும்.

    நூடுல்ஸ் ஆறிய பிறகு அதில் நறுக்கிய வெங்காயம், முட்டைக்கோஸ், குடைமிளகாய், பச்சை கொத்தமல்லி, மிளகாய் தூள், ரவை, பூண்டு விழுது, சீஸ் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.

    இந்த கலவையை உருண்டைகளாக உருட்டி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். மேலும் உருண்டைகளுக்கு நடுவே விருப்பப்பட்டால் சீஸ் துண்டுகளையும் வைத்து மூடி வைக்கலாம்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் போட்டு பொன்னிறமாக மாறும் வரை விட்டு பொறித்து எடுக்கலாம். இதற்கு தொட்டுக்கொள்ள தக்காளி, கொத்தமல்லி சாஸுடன் பரிமாறவும்.

    மிச்சம் வைக்காமல் அனைத்தும் உடனேயே காலியாகிவிடும்.

     

    • மட்டனில் உள்ள கொழுப்பு வெப்பத்தை குறைக்க உதவுகிறது.
    • ஆந்திரா ஸ்டைலில் நல்ல காரசாரமாக மட்டன் கிரேவி.

    அசைவ வகைகளிலே ஆரோக்கியம் என்பதால் அடிக்கடி செய்வது மட்டன் தான். பலரும் இந்த மட்டனுக்கு அடிமையாகவே இருக்கிறார்கள். அந்த அளவிற்கு இதன் சுவையும் நன்றாவே இருக்கும். மட்டன் சாப்பிடுவதன் மூலம், நம்முடைய இதயம் நன்கு வலுப்பெறுகின்றது. மேலும் மட்டனில் உள்ள கொழுப்பு வெப்பத்தை குறைக்க உதவுகிறது. ஆட்டுக்கறி சாப்பிட்டால், அதில் உள்ள வைட்டமின் பி, செலினியம் மற்றும் கோலைன் போன்றவை, எந்த வகையான புற்றுநோயும் தாக்காமல் உடலைப் பாதுகாக்கும்.

    ஆந்திரா ஸ்டைலில் நல்ல காரசாரமாக மட்டன் கிரேவி செய்வது எப்படி என்பதை தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

    தேவையான பொருட்கள்:

    மட்டன்- 1/2 கிலோ

    மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன்

    உப்பு- தேவையானஅளவு

    இஞ்சி பூண்டு விழுது- 1 டீஸ்பூன்

    எண்ணெய்- 4 டீஸ்பூன்

    வெங்காயம்- 2 பெரியது பொடியாக நறுக்கி கொள்ளவும்

    பச்சை- 2

    தக்காளி- 2

    தனி மிளகாய் தூள்- 1/2 டீஸ்பூன்

    மிளகு தூள்- 1/2 டீஸ்பூன்

    கொத்தமல்லி, கறிவேப்பிலை- தேவையான அளவு

    அரைப்பதற்கு:

    ஏலக்காய்- 1

    கிராம்பு- 2

    பெருஞ்சீரகம்- 1/2 டீஸ்பூன்

    பட்டை- 2

    கொத்தமல்லி விதை- 1/2 டீஸ்பூன்

    மிளகு- 1/2 டீஸ்பூன்

    சோம்பு- 1/4 டீஸ்பூன்

    செய்முறை:

    குக்கரை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு தண்ணீருடன், மட்டன், உப்பு மற்றும் மஞ்சள் தூள் கலந்து 6 விசில் வரும் வரை மட்டனை வேக வைக்க வேண்டும்.

    மட்டன் வேகவைத்த தண்ணீரை எடுத்து வைத்துகொள்ள வேண்டும். பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு, கருவேப்பிலை மற்றும் வெங்காயத்தை பொன் நிறம் வரும் வரை வதக்க வேண்டும்.

    பின்னர் இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய், மிளகாய் தூள் மற்றும் மிளகு தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். தக்காளி மற்றும் மட்டன் சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை அதிக வெப்பத்தில் வதக்க வேண்டும்.

    உப்பு மற்றும் அரைத்து வைத்த கலவையை சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடம் வதக்க வேண்டும். மட்டன் வேகவைத்த தண்ணீரை சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

    நன்கு கிரேவி பதம் வந்தவும் மீதம் உள்ள மிளகு தூள் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் அடுப்பில் இருந்து இறக்கி சிறிது கொத்தமல்லி தழையை தூவினால் சுவையான காரசாரமான, மணமான ஆந்திரா ஸ்டைல் மட்டன் கிரேவி ரெடி.

     

    • காளான்களில் கலோரிகள் மற்றும் கொழுப்பு குறைவாக உள்ளன.
    • ஊட்டச்சத்துக்கள் காளான்களில் நிரம்பியுள்ளன.

    அனைத்து வகையான காளான்களில் கலோரிகள் மற்றும் கொழுப்பு குறைவாக உள்ளன. அதோடு கூட அவை நிறைந்த அளவு நார்ச்சத்துக்களையும் கொண்டுள்ளன. புரதங்கள், வைட்டமின் C, B கொண்டுள்ளன. D, தாமிரம், பொட்டாசியம், பாஸ்பரஸ், செலினியம், பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் போன்ற பிற ஊட்டச்சத்துக்களும் காளான்களில் நிரம்பியுள்ளன. காளான் குழந்தைகளுக்கு வலிமையை தரும் ஒரு உணவு ஆகும்.

    தேவையான பொருட்கள்:

    கிராம்பு- 2

    சோம்பு- ஒரு ஸ்பூன்

    பேப்ரிக்கா சில்லி- 20

    வெங்காயம்- 2

    பூண்டு- 10 பல்

    தனியா- ஒரு ஸ்பூன்

    மிளகு- கால் டீஸ்பூன்

    சீரகம்- கால் டீஸ்பூன்

    வெந்தயம்- சிறிதளவு

    காளான்- கால் கிலோ

    எண்ணெய்- தேவையான அளவு

    உப்பு- தேவையான அளவு

    புளி- சிறிதளவு

    வெல்லம்- சிறிதளவு

    செய்முறை:

    முதலில் காளானை சுத்தம் செய்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சில்லி, வெங்காயம், தனியா, பூண்டு, சீரகம், மிளகு, சோம்பு, கிராம்பு, வெந்தயம் போன்றவற்றை மிக்சி ஜாரில் போட்டு பேஸ்ட் மாதிரி அரைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    அதன்பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் 3 கரண்டி நெய் விட்டு காய்ந்தவுடன் அதில் கறிவேப்பிலை தாளித்து அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை அதில் சேர்க்க வேண்டும். நன்றாக கலந்துவிட வேண்டும். மசாலாவின் பச்சை வாசனை போன பிறகு அதில் சிறிதளவு புளியை கரைத்து சேர்க்க வேண்டும்.

    பின்னர் இந்த கலவை கொத்தவுடன் சிறிதளவு வெல்லம் சேர்க்க வேண்டும். அதன்பிறகு காலானை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். தண்ணீர் வேண்டும் என்றால் சேர்த்துக்கொள்ளலாம். இல்லை என்றால் காளனிலேயே தண்ணீர் இருக்கும். இந்த கலவை வெந்து கிரேவி பதம் வந்ததும் கறிவேப்பிலை தூவி இறக்கினால் சுவையான காளான் கீ ரோஸ்ட் தயார். 

     

    • கடல் உணவுகளில் எப்போதுமே சத்துக்கள் அதிகம்.
    • சாச்சுரேட் கொழுப்பு மீன் உணவுகளில் உள்ளதால் உடல் எடையை அதிகரிக்காது.

    அனைத்து அசைவ உணவுகளைவிட, கடல் உணவுகளில் எப்போதுமே சத்துக்கள் அதிகம். காரணம், சாச்சுரேட் கொழுப்பு இந்த மீன்களில் உள்ளதால் உடல் எடையை அதிகரிக்காது.

    மீன் உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் வயதான பெண்களுக்கு ஏற்படும் இதயநோய் அபாயம் குறைகிறது.

    நரம்புத் தளர்ச்சி நோயும் நீங்குகிறது. மீன் உணவு சாப்பிட்டால் மன அழுத்த நோய் வராமல் தடுக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இறால் மீனில் உள்ள சத்துக்கள் அபரிமிதமானவை.

    இறாலில் அயோடின் சத்து நிறைய உள்ளதால், உடலில் தைராய்டு ஹார்மோன்கள் சுரக்க பேருதவி புரிகின்றன. இந்த ஹார்மோன்கள் குழந்தை பருவத்திலும், கர்ப்பமாக இருக்கும் நேரத்திலும், மூளையின் வளர்ச்சிக்காக தேவைப்படுகிறது.

    இறாலில் புரதம், கால்சியம், பொட்டாசியம் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளன. பல வகை புற்று நோய்களில் இருந்து காப்பதுடன், நுரையீரல் புற்றுநோய்க்கு எதிராக போராடும்.

    தேவையான பொருட்கள்:

    இறால் - 250 கிராம்

    மைதா - 1 டேபிள் ஸ்பூன்

    முட்டை - 1

    உப்பு, எண்ணெய் - தேவைக்கு ஏற்ப

    பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1

    நசுக்கிய பூண்டு - 5 பல்

    நசுக்கிய இஞ்சி - 1 துண்டு

    பச்சை மிளகாய்- 1

    வெங்காயத்தாள் - 1 கப்

    மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்

    சில்லி சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்

    உப்பு, எண்ணெய், - தேவைக்கு ஏற்ப

    கார்ன்ஃப்ளார் - 1 டீஸ்பூன்

    சர்க்கரை - 1/4 டீஸ்பூன்

    டொமேட்டோ சாஸ்

    தாய் சில்லி பேஸ்ட்- ஒரு ஸ்பூன்

    துளசி இலைகள்- 10

    செய்முறை:

    ஒரு பவுலில் சுத்தம் செய்து வைத்துள்ள இறால்களை சேர்க்க வேண்டும். இதில் உப்பு, கார்ன்பிளார் மாவு, முட்டை, மிளகுத்தூள் சேர்த்து கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்தது. அதில் கலந்து வைத்துள்ள இறாலை பொறித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    அதன்பிறகு மீண்டும் வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடியாக நறுக்கி வைத்துள்ள பூண்டு, இஞ்சி, பச்சைமிளகாய், வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர் குடைமிளகாயை சேர்த்து வதக்க வேண்டும்.

    இந்த கலவையில் சில்லி சாஸ், தக்காளி சாஸ், தாய் சில்லி பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும். இதில் துளசி இலைகளை சேர்த்து நன்றாக வதக்கி எடுத்தால் சுவையான தாய் பேசில் சில்லி பிரான் தயார். நீங்களும் உங்கள் வீட்டில் செய்து பாருங்கள்.

     

    • இலங்கையில் மிகவும் பிரபலமான ஒரு இனிப்பு வகையாகும்.
    • சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.

    வட்டலப்பம் என்பது இஸ்லாமிய வீடுகளில் திருமண விசேஷங்கள் ரம்ஜான் பண்டிகை போன்றவற்றின் போது பாரம்பரியமாக செய்யக்கூடிய ஒரு இனிப்பு வகையாகும். இதில் தேங்காய் பால், வெல்லம், முந்திரி பருப்பு, முட்டை, ஏலக்காய், கிராம்பு மற்றும் ஜாதிக்காய் உள்ளிட்ட பல்வேறு மசாலாப் பொருட்களாலும் செய்யக்கூடிய ஒரு இனிப்பு வகையாகும்.

    இது இலங்கையில் மிகவும் பிரபலமான ஒரு இனிப்பு வகையாகும். இதை வேண்டாம் என்று கூறாதவர்கள் யாரும் இருக்க முடியாது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதை விரும்பி சாப்பிடுவார்கள். ஆகவே வாயில் வைத்ததும் கரையக்கூடிய இந்த இனிப்பை எப்படி வீட்டிலேயே செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க...

    தேவையான பொருட்கள்:

    தேங்காய்ப்பால்- 1 டம்ளர்

    முட்டை- 10

    ஏலக்காய்ப்பொடி- சிறிது

    முந்திரிப்பருப்பு- 15

    பாதாம் பருப்பு- 10

    உலர் திராட்சை- 15

    சர்க்கரை- 400 கிராம்

    நெய்- 1 தேக்கரண்டி

    செய்முறை

    முதலில் 10 முட்டைகளை மிக்சியில் அடித்து எடுத்துவைத்துக்கொள்ள வேண்டும். சர்க்கரையை மிக்சியில் போட்டு பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    தேங்காயை துருவி மிக்சி ஜாரில் போட்டு கெட்டியான பால் ஒரு டம்ளர் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில், அடித்துவைத்துள்ள முட்டையை ஊற்றி, பொடித்துவைத்துள்ள சர்க்கரை மற்றும் தேங்காய்ப் பால், ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு அடித்து கலக்க வேண்டும்.

    மற்றொரு பாத்திரத்தில் நெய் தடவிவிட்டு அதில், இந்த கலவையை ஊற்ற வேண்டும். பின்னர் குக்கரில் தண்ணீரை ஊற்றி சூடுபடுத்தி, அதினுள் ஒரு ஸ்டாண்ட் வைத்து நெய் தடவி வைத்த பாத்திரத்தை குக்கருக்குள் மூடி போடாமல் வைக்க வேண்டும். குக்கரை மூடி 30 நிமிடம் வேகவைக்க வேண்டும்.

    30 நிமிடம் கழித்து அடுப்பை அனைத்து ஆவி அடங்கிய பின்னர் குக்கரை திறக்கவும். ஒரு கத்தியை வைத்து குத்தி பார்த்தால் ஒட்டாமல் வரும். அப்போது சரியாக வெந்துள்ளது என அறிந்து கொள்ளலாம். பாதாம் பருப்பு, முந்திரி, திராட்சை மேலே தூவி பரிமாறவும். இதனை ஃப்ரிட்ஜில் வைத்து சில்லென்றும் பரிமாறலாம்.

    • கனவாய் மீன்களில் அதிக அளவு நல்ல கொழுப்பு உள்ளது.
    • இதயத்தை பாதுகாக்கவும் உதவுகிறது.

    கனவாய் மீன் தான் கடம்பா மீன் என்று அழைக்கப்படும். இந்த கடம்பா மீன்கள் உடலுக்கு பல நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கக் கூடியவை. இந்த கனவாய் மீன்களில் அதிக அளவு நல்ல கொழுப்பு பொட்டாசியம், கால்சியம் மற்றும் காப்பர் உள்ளது. ஆண்மை குறைபாடு உள்ளவர்களுக்கு விந்து அதிகரிப்பதற்கு உதவுகிறது. இதில் நல்ல கொழுப்புகள் இருப்பதால் இந்த மீன்களை வறுவல் செய்து சாப்பிடும்போது அதிக அளவு பலன்கள் கிடைக்கின்றன. இந்த நல்ல கொழுப்புகள் இதயத்தை பாதுகாக்கவும் உதவுகிறது.

    தேவையான பொருட்கள்:

    கனவா- 500 கிராம்

    வெங்காயம்- 20

    பூண்டு-8

    இஞ்சி- ஒரு துண்டு

    மல்லி- இரண்டு ஸ்பூன்

    சீரகம்- ஒரு ஸ்பூன்

    சோம்பு- ஒரு ஸ்பூன்

    வர மிளகாய்- மூன்று

    பட்டை- இரண்டு

    கிராம்பு- இரண்டு

    அண்ணாச்சி பூ- ஒன்று

    மஞ்சள் தூள்- கால் ஸ்பூன்

    உப்பு- தேவையான அளவு

    எண்ணெய்- தேவையான அளவு

    கொத்தமல்லி- சிறிதளவு

    செய்முறை:

    முதலில் ஒரு கடாயில் மல்லி, சீரகம் சோம்பு, வரமிளகாய், பட்டை, கிராம்பு, அண்ணாச்சி பூ இதை எல்லாம் எண்ணெய் இல்லாமல் வறுக்க வேண்டும். நன்கு வறுத்த பிறகு மிக்சியில் சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

    மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்த பிறகு சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். இஞ்சி பூண்டு விழுதை வெங்காயத்தில் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அதன்பிறகு தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும், அதோடு தனியாக அரைத்துவைத்த மசாலா கலவையை சேர்த்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளற வேண்டும்.

    மசாலா கலவையில் எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்க வேண்டும். கடைசியாக கழுவி வைத்துள்ள கனவா மீனை சேர்க்க வேண்டும். மசாலா கலவையின் சாறு கனவாய் மீனில் இறங்கும் வரை வேகவைத்து இறக்கினால் சுவையான செட்டிநாடு கனவா மீன் கிரேவி தயார்.

     

    • நம்மை ஆரோக்கியமாக வைத்து கொள்வது அவசியமான ஒன்றாக இருக்கிறது.
    • எல்லாரும் வீட்டிலும் இருக்க கூடிய ஒன்றாக இருப்பது வெந்தயம் தான்.

    இந்த வெயிலுக்கு என்ன சாப்பிடுவது, உடலை எப்படி குளிர்ச்சியாக வைத்து கொள்வது எப்படி என்று ஆராய்ந்து கொண்டிருப்பீர்கள். ஏனென்றால் வெயில் அந்த அளவிற்கு அதிகமாக இருக்கிறது. இதனால் நம்மை ஆரோக்கியமாக வைத்து கொள்வது அவசியமான ஒன்றாக இருக்கிறது. இந்த வெயில் காலத்தில் அம்மை, காய்ச்சல், வயிற்று வலி, வயிற்று போக்கு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள குளிர்ச்சியான உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். குளிர்ச்சியான உணவாகவும், எல்லாரும் வீட்டிலும் இருக்க கூடிய ஒன்றாக இருப்பது வெந்தயம் தான். இந்த வெந்தயத்தை அப்படியே சாப்பிடுவது பலருக்கும் பிடிக்காத ஒன்றாக இருக்கிறது. அதற்கு தான் வெந்தயத்தை வைத்து கஞ்சி செய்வது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாங்க..

    தேவையான பொருட்கள்:

    வெந்தயம்- 3 தேக்கரண்டி

    பச்சரிசி- 1 கப்

    பாசி பருப்பு- 2 கப்

    தேங்காய் - 1/2 மூடி

    பூண்டு - 6 பற்கள்

    செய்முறை:

    முதலில் ஒரு கப் பச்சரிசி எடுத்து கொள்ள வேண்டும். அதனுடன் 2 கப் பாசி பருப்பு, 2 தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து 3 முறை தண்ணீர் ஊற்றி கழுவ வேண்டும்.

    பின் இதனை ஒரு குக்கர் அல்லது பாத்திரத்தில் சேர்த்து கொள்ள வேண்டும். பிறகு 3 கப் தண்ணீர் சேர்த்து கொள்ள வேண்டும். பூண்டு பற்கள் 6 சேர்த்து கொள்ள வேண்டும். இதனை வேக விட வேண்டும். குக்கரில் வைத்தால் 4 விசில் விட வேண்டும்.

    அதுவே நீங்கள் பாத்திரத்தில் வைத்தால் தண்ணீர் குறையும் வரை வேக விட வேண்டும். அரிசியானது அளவாக வெந்திருக்க வேண்டும்.

    பிறகு 1/2 மூடி தேங்காய் எடுத்து திருகி கொள்ள வேண்டும், இதனை அரைத்து பாலாக எடுத்து கொள்ள வேண்டும். இந்த தேங்காய் பாலை வேக வைத்த அரிசியில் சேர்த்து கலந்து விட வேண்டும்.

    இந்த கஞ்சியை காலை நேரத்தில் சாப்பிடுவது நல்லது. இரவு மற்றும் மதிய நேரத்தில் இந்த கஞ்சியை எடுத்து கொள்ளாதீர்கள்.

    • சட்னி கொஞ்சம் தண்ணீர் போல் இருந்தால் தான் நல்லா இருக்கும்.
    • தக்காளியை மட்டும் 1 எடுத்து அதனை மட்டும் அரைத்து கொள்ளவும்.

    தேவையான பொருட்கள்:

    பூண்டு – 5

    மிளகாய் – 7

    புளி – எலுமிச்சை பழம் அளவு

    சின்ன வெங்காயம் – 10

    கடுகு – சிறிதளவு

    தக்காளி – 1

    கருவேப்பிலை – 1 கொத்து

    செய்முறை:

    முதலில் மிக்சி ஜாரில் 5 பல் பூண்டு, மிளகாய் 7 எடுத்துக் கொள்ளவும். அதில் புளி சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

    கொஞ்சம் கொரகொரப்பாக இருக்கும். அதனுடன் 10 சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.

    அடுத்து வெறும் தக்காளியை மட்டும் 1 எடுத்து அதனை மட்டும் அரைத்து கொள்ளவும்.

    இப்போது ஒரு கடாயை வைத்து அதில் 1 கடாயில் நல்ல எண்ணெய் ஊற்றி அதில் சிறிதளவு கடுகு போட்டு பொரிந்தவுடன் அதில் கருவேப்பிலை போடவும். அடுத்து நாம் அரைத்து வைத்துள்ள மிளகாயை சேர்த்து வதக்கவும்.

    அதன் பிறகு அதில் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து அதனுடைய பச்சை வாடை போகும் வரை வதக்கவும். அப்போது தான் சட்னி நன்றாக இருக்கும்.

    இந்த சட்னி கொஞ்சம் தண்ணீர் போல் இருந்தால் தான் நல்லா இருக்கும். ஆகவே கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு அதன் பின் சட்னியை சூடாக தோசை மற்றும் இட்லிக்கு சேர்த்து சாப்பிடுங்கள்..! சும்மா சுவை அள்ளும்..!

    • கீரை இரத்த சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்வதால் அனிமீயா நோய் வராமல் இருக்க உதவுகிறது.
    • பாலக்கீரை தொக்கை சாப்பாடு மற்றும் சப்பாத்திக்கு வைத்து சாப்பிட கொடுத்தால் குடும்பத்தினர் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

    பாலக்கீரையில் இரும்புச்சத்து, பீட்டா கரோட்டின், போலிக் அமிலம், கால்சியம் போன்றவை இதில் அடங்கியுள்ளன. பாலக்கீரையில்போலிக் அமிலம் அதிகளவில் உள்ளதால் கர்ப்பிணிகள் இதனை அதிகம் எடுத்துக் கொண்டால் நல்லது.

    குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்களும் இதனை சாப்பிட்டால் பால் அதிகம் சுரக்க உதவுகிறது. பாலக்கீரையில் மெக்னீசியம், காப்பர் மற்றும் வைட்டமின் கே அதிகளவில் உள்ளதால் எலும்புகள் மற்றும் பற்கள் உறுதியாக உதவுகிறது.


    இக்கீரை இரத்த சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்வதால் அனிமீயா நோய் வராமல் இருக்க உதவுகிறது. பாலக்கீரை தொக்கை எப்படி எளிமை செய்வது என்று பார்ப்போம்.

    தேவையான பொருட்கள்:

    பாலக்கீரை - 2 கட்டு

    பெரிய வெங்காயம் - 1

    பூண்டு - 1 முழு அளவு

    தனி மிளகாய் தூள் - 2 ஸ்பூன்

    எண்ணெய் - தேவையான அளவு

    கடுகு - தேவையான அளவு

    கடலை பருப்பு - 2 ஸ்பூன்

    உளுத்தம் பருப்பு - 2 ஸ்பூன்

    வரமிளகாய் - 4

    மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்

    கருவேப்பிளை - ஒரு கொத்து

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    முதலில் பாலக்கீரையை நன்கு பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். பின்னர் பெரிய வெங்காயம், பூண்டு, தனி மிளகாய் தூள் இவை மூன்றையும் ஒரு மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

    பின்னர் அடுப்பில் அடிகனமாக ஒரு பத்திரத்தை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, வர மிளகாய், கறிவேப்பிளை ஆகியவற்றை சேர்ந்து தாளிக்கவும்.

    அதன்பின் அரைத்து வைத்திருந்த கலவையை அதனுடன் சேர்த்து நன்கு வதக்கவும், பின்னர் இதனுடன் மஞ்சள் தூள் சிதளவும், உப்பு தேவையான அளவு சேர்க்கவும், பின்னர் நறுக்கி வைத்திருந்த பாலக்கீரையை அதனுடன் சேர்ந்து நன்கு கிளரவும்.

    5 நிமிடங்களுக்கு பின்னர் பாலக்கீரையின் நிறம் கரும் பச்சையாக மாறும். அதன் பின்னர் பாலக்கீரை தொக்கை பரிமாறலாம்.

    இந்த பாலக்கீரை தொக்கை சாப்பாடு மற்றும் சப்பாத்திக்கு வைத்து சாப்பிட கொடுத்தால் குடும்பத்தினர் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

    • சமையல் மேடையை சுத்தமாக துடைத்து ஈரமில்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
    • மூலிகைகள் மற்றும் மூலிகை கீரைகளை பிளாஸ்டிக் கவரில் கட்டித்தான் பிரிட்ஜில் வைக்க வேண்டும்.

    * சாமி அறை போல் சமையல் அறையும் தூய்மையாக இருந்தால் தான் ஈ, எறும்பு, புழு, பூச்சிகள் வராது. வெங்காயம், பூண்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி போட்டால் அந்த வாசத்திற்கே பூச்சிகள் வராது. மேலும் சமையல் முடிந்ததும் சமையல் மேடையை சுத்தமாக துடைத்து ஈரமில்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

    * அரிசி பாத்திரத்தில் வேப்பிலை போட்டு வைத்தால் வண்டு வராது. பருப்பு டப்பாக்களில் பூண்டின் நடுக்காம்புடன் உப்பை சேர்த்து துணியால் முடிச்சு போட்டு வைத்தால் பருப்பின் சுவையும் குறையாது, வண்டும் வராது.

    * காளான் மற்றும் கத்தரிக்காயை பிளாஸ்டிக்கவரில் போட்டு பிரிட்ஜில் வைக்கக்கூடாது.

    * ஏலக்காய், கிராம்பு, மிளகு ஆகியவற்றை ஒரே டப்பாவில் மூடி வைக்கலாம்.


    * உலர் திராட்சை, பேரீச்சையை வைக்கும் டப்பாக்களில் ஓரிரு கிராம்புகளை போட்டு வைத்தால் கெடாமலிருக்கும்.

    * மூலிகைகள் மற்றும் மூலிகை கீரைகளை பிளாஸ்டிக் கவரில் கட்டித்தான் பிரிட்ஜில் வைக்க வேண்டும்.

    * அரைத்த மிளகாய் தூள் வைத்திருக்கும் டப்பாவின் மையப்பகுதியில் இரண்டு மிளகாய் வற்றல் போட்டு வைக்க தூளின் நிறம் மற்றும் தரம் மாறாது. பெருங்காயத்தையும் போடலாம்.

    * முருங்கைக்காயை அப்படியே பேப்பரில் சுருட்டி வைத்தால் ஒருவாரம் கெடாது. இதேபோல வாழை இலையை வைத்தால் காய்ந்தோ பழுத்தோ போகாது.

    * ஆப்பிளை நறுக்கி சர்க்கரை தண்ணீரில் போட்டு எடுத்து பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு டப்பாவில் கொடுத்து அனுப்பினால் அப்படியே நிறம் மாறாமல் இருக்கும்.

    * அத்தி, கிஸ்மிஸ் பழம் போன்றவற்றை பிரிட்ஜில் வைக்கக்கூடாது. அக்ரூட் பழத்தை வெந்நீரில் சிறிது நேரம் ஊறவைத்தால் எளிதாக உடைக்கலாம்.

    * முருங்கை பிஞ்சை ரசத்தில் போட்டால் ரசம் ருசியாக இருக்கும். மோரில் சுக்கு பொடித்து சேர்க்க சுவை கூடும். கடலை மாவு மற்றும் பார்லி மாவை பாதி பாதி சேர்த்து பக்கோடா செய்தால் ருசி அமோகமாக இருக்கும்

    * அப்பளம், வடகம், வற்றலில் (காய்ந்த) வற மிளகாயை போட்டு வைக்க வண்டு, பூச்சிகள் வராது.


    * டீ தூள் டப்பாவில் ஆரஞ்சு பழத்தோலை போட்டு வைத்தால் டீ தூளில் ஆரஞ்சு வாசம் வரும். டீயும் ருசியாக இருக்கும்.

    * பச்சைநிற காய்கறிகளை சமைக்கும் போது தாளிக்கும் எண்ணெய்யில் சிறிது மஞ்சள் தூள் போட்டு வதக்க காய்கறிகள் நிறம் மாறாமல் இருக்கும்.

    * முறுக்கு மாவில் சிறிது நெய் சேர்த்து பிசைந்து முறுக்கு சுட, மொறுமொறுப்பாக நெய் வாசத்துடன் இருக்கும்.

    * நூடுல்ஸ் மீதமானால் அதனுடன் பச்சை காய்கறிகளை நறுக்கிப் போட்டு தயிர் சேர்த்து சாலட் செய்ய சூப்பராக இருக்கும்.

    ×