தோஷ பரிகாரங்கள்

பூர்வீகச் சொத்து யாருக்கெல்லாம் கிடைக்கும்... பிரச்சனை தீர்க்கும் பரிகாரம்...

Published On 2022-07-27 06:12 GMT   |   Update On 2022-07-27 06:12 GMT
  • முன்னோர்களால் கிடைக்கும் சொத்தே பூர்வீகச் சொத்தாகும்.
  • பூர்வீகச்சொத்து பிரச்சனை உள்ளவர்கள் இந்த பரிகாரங்களை செய்யலாம்...

ஒருவருக்கு தாய், தந்தை மற்றும் தாய், தந்தை வழி முன்னோர்களால் கிடைக்கும் சொத்தே பூர்வீகச் சொத்தாகும். ஜனன கால ஜாதகத்தில் 5,9-ம்மிடத்துடன் செவ்வாய் சுப வலிமை பெறுவதுடன் குரு,சனி, சம்பந்தம் இருப்பவர்கள் வம்சாவழியாக பூர்வீகச் சொத்தை பயன்படுத்தும் பாக்கியம் பெற்றவர்கள்.

பூர்வீக சொத்துக்கள் அதிகம் இருந்திருந்தாலும் அவர்கள் பிறந்தபின் பூர்வீக சொத்து முழுவதும் ஒவ்வொன்றாக காலியாகிவிடும். ஜனன கால ஜாதகத்தில் 5-ம் அதிபதி 6-ல் இருந்தால் பூர்வீகச் சொத்தை கடனுக்காக இழக்க நேரும். 5-ம் அதிபதி எட்டில் இருந்தால் பூர்வீகச் சொத்தால் அங்காளி, பங்காளி வம்பு,வழக்கு, அவமானம் ஏற்படும். 8ம் இடத்திற்கு சுப கிரக சம்பந்தம் இருப்பவர்களுக்கு வழக்கில் வெற்றியுண்டாகும்.

ஆனால் பல வருடங்களாக வழக்கு நடத்தி சொத்தின் மதிப்பிற்கு மேல் பணம் செலவு செய்ய நேரும். 5-ம் அதிபதி 12-ல் நின்றால் பூர்வீக சொத்தை இழந்து பூர்வீகத்தைவிட்டு வெளியேற நேரும்.

ஐந்தாம் அதிபதி அல்லது ஐந்தாமிடத்தில் நீசம், அஸ்தமனம் வக்ர கிரகங்கள் நிற்பது, திதி சூன்யத்தால் பாதிப்பு,லக்னத்தில் சூரியன்,ஒன்பதில் சூரியன், சனி, சனி +ராகு/கேது,அல்லது 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறும் சூரியன், சனி, ராகு/கேதுக்கள்.சூரியன், சந்திரன்+ ராகு,கேது, சனிபோன்ற கிரக சேர்க்கைகள் இருந்தால் பயன்களை விட துன்பமே அதிகம்.

மேலே கூறிய அமைப்பை பெற்றவர்கள் பூர்வீக சொத்துக்களை விற்று புதிய சொத்துக்களை வாங்கிக்கொள்ள வேண்டும் அல்லது பூர்வீகச் சொத்தில் வசிக்கக் கூடாது. 5, 9ம்மிடத்திற்கு ராகு ,கேது சம்பந்தம் இருந்தால் தொடர்ந்து துர்க்கை அல்லது காளியை சனிக் கிழமை ராகு காலத்தில் வழிபட்டால் பூர்வீக சொத்தால் ஏற்படும் இன்னல்கள் நீங்கி நலம் உண்டாகும்.

சொத்துக்களை இழந்தோரும், ஏமாற்றி பிடுங்கப்பெற்றோரும்,வர வேண்டிய நியாயமான பூர்வீகச்சொத்துக்கள் வராமல் தவிப்போரும், இழந்த செல்வம், புகழ் , கவுரவம் அனைத்தையும் திரும்ப பெற வராகி அம்மனுக்கு 8 சனிக்கிழமைகள் காலை 6 முதல் 7மணி அல்லது இரவு 8 முதல் 9 மணி அளவில் மண் அகலில் கரு நீல துணியில் சிறிது வெண் கடுகை முடிந்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் இழந்த அனைத்தையும் திரும்ப பெறலாம்.

Tags:    

Similar News