ரஷியாவின் தென்மேற்கு பகுதியில் செயல்பட்டு வந்த... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு
ரஷியாவின் தென்மேற்கு பகுதியில் செயல்பட்டு வந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஆலை முழுவதும் தீப்பிடித்து எாிந்து நாசமானது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆளில்லா விமானங்கள் நடத்திய தாக்குதலில் தீ விபத்து ஏற்பட்டது. இது ஒரு பயங்கரவாத செயல் என ஆலை நிர்வாகம் தொிவித்துள்ளது.
உக்ரேனிய டிரோன்கள் ஆலையில் மேலே பறந்ததாகவும், அவை ஆலையின் மீது மோதி விபத்து ஏற்படுத்தியதாக உள்ளுா் செய்தி நிறுவனங்கள் கூறியுள்ளன. ஆனால் இத்தாக்குதலுக்கு உக்ரைன் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
Update: 2022-06-22 21:01 GMT