உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷிய படையினர்,... ... லைவ் அப்டேட்ஸ்: கிராமடோர்ஸ்க் நகரில் வான் தாக்குதல்- உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷிய படையினர், அந்நாட்டின் முக்கிய நகரமான கிரெமென்சுக் பகுதியில் உள்ள வணிக வளாகம் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில் 10 பேர் கொல்லப்பட்டதாகவும், 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் முதல் கட்ட தகவல் வெளியானது.
இந்நிலையில், வணிக வளாகம் மீது ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 50க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த கொடூர தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
Update: 2022-06-28 09:30 GMT