பணநாயகத்தின்மூலம் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற வைத்துள்ளனர்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் முடிவுகள் குறித்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பணநாயகத்தின்மூலம் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற வைத்துள்ளனர். ஈரோடு கிழக்கு பார்முலா என ஒன்றை உருவாக்கு ஜனநாயக படுகொலையை அரங்கேற்றி உள்ளது திமுக.
அதிமுக வேட்பாளர் தென்னரசுவுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Update: 2023-03-02 13:34 GMT