மதிமுக பொதுச்செயலாளர் வை.கே. வெளியிட்டுள்ள இரங்கல்... ... ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்- லைவ் அப்டேட்ஸ்

மதிமுக பொதுச்செயலாளர் வை.கே. வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் "தந்தை பெரியாரின் பெயரனும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அன்பு சகோதரர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவு தாங்கொணா துயரத்தைத் தருகிறது .

பெரியாரின் அண்ணன் ஈ.வி. கிருஷ்ணசாமியின் மகனும், பேரறிஞர் அண்ணாவின் நெஞ்சங் கவர்ந்த தம்பியுமான ஈ.வெ.கி. சம்பத்த்தின் அருமை மகன் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பழகுவதற்கு இனிய பண்பாளர். கொண்ட கொள்கையில் உறுதியானவர்.

காங்கிரஸ் இயக்கத்தின் சுயமரியாதை தலைவர் என்று சொல்லத்தக்க அளவுக்கு காங்கிரஸ் கட்சியில் தன்னை முழுவதுமாக ஒப்படைத்துக் கொண்டு, தமிழ்நாட்டில் கட்சியை வழிநடத்துகின்ற தலைவராக உயர்ந்தவர்.

சட்டமன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் திறம்பட செயலாற்றியவர்.

டாக்டர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சர் பொறுப்பினை ஏற்று தனது ஆளுமைத் திறனை வெளிப்படுத்தியவர்.

தமிழ்நாட்டில் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியை வலிமையோடு எடுத்துச் செல்வதற்கு எவருக்கும் அஞ்சாமல் கருத்துக்களை முன்வைத்த சிறப்பு அவருக்கு உண்டு.

தேனி நாடாளுமன்ற தொகுதியில் அவர் போட்டியிட்ட பொழுது நான் பரப்பரை மேற்கொள்ள வேண்டும் என்று பெரிதும் விரும்பி அழைத்தார்.

இளங்கோவனின் 70-வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்று வாழ்த்தினேன்.

கடந்த மாதம் இறுதியில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது எப்படியும் குணமாகி மீண்டு வருவார் என்று நம்பிக்கையுடன் இருந்தேன். ஆனால் அவர் மூச்சுக்காற்று இயற்கையோடு கலந்துவிட்டது.

அன்பு சகோதரர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தகைசால் தலைவரை இழந்த காங்கிரஸ் கட்சி நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Update: 2024-12-14 06:09 GMT

Linked news