உலகப் பட்டினி மற்றும் பஞ்சம் தொடர்பிலான மாநாடு... ... லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனுடனான உறவை முறித்த ரஷியாவின் நட்பு நாடு
உலகப் பட்டினி மற்றும் பஞ்சம் தொடர்பிலான மாநாடு ஒன்றில் இலங்கையின் இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கே கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
உக்ரைன், ரஷிய போர் நிறுத்தப்படாவிட்டால் உலக மக்கள் பட்டினிச் சாவை எதிர்நோக்க நேரிடும். மேற்கு உலக நாடுகளினால் விதிக்கப்பட்ட பொருளாதார தடையால் ரஷ்யா மண்டியிடவில்லை. மாறாக, மூன்றாம் உலக நாடுகளே மண்டியிட்டுள்ளது.
ரஷியா உடனடியாக போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும். நிபந்தனைகளை விதிக்காது உக்ரைன் அண்டை நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Update: 2022-07-17 21:08 GMT