உக்ரைனுக்கு ஒரு பில்லியன் யூரோ, மானியமாக... ... லைவ் அப்டேட்ஸ்: கிராமடோர்ஸ்க் நகரில் வான் தாக்குதல்- உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்

உக்ரைனுக்கு ஒரு பில்லியன் யூரோ, மானியமாக வழங்குவதாக ஜெர்மனி அறிவித்துள்ளது. உக்ரைன் நிதி அமைச்சர் செர்ஜி மார்ச்சென்கோ மற்றும் ஜெர்மனி நிதி அமைச்சர் கிறிஸ்டியன் லிண்ட்னர் ஆகியோர் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்த நிதியானது ராணுவச் சட்ட ஆட்சியின்போது சமூக மற்றும் மனிதாபிமான செலவினங்களுக்கு பயன்படுத்தும் வகையில் உக்ரைன் பட்ஜெட்டுக்கு அனுப்பப்படும். சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் கணக்கு நடைமுறையின்மூலம் இந்த நிதி அனுப்பப்படும்.

Update: 2022-06-25 13:11 GMT

Linked news