search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    • கனவாய் மீன்களில் அதிக அளவு நல்ல கொழுப்பு உள்ளது.
    • இதயத்தை பாதுகாக்கவும் உதவுகிறது.

    கனவாய் மீன் தான் கடம்பா மீன் என்று அழைக்கப்படும். இந்த கடம்பா மீன்கள் உடலுக்கு பல நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கக் கூடியவை. இந்த கனவாய் மீன்களில் அதிக அளவு நல்ல கொழுப்பு பொட்டாசியம், கால்சியம் மற்றும் காப்பர் உள்ளது. ஆண்மை குறைபாடு உள்ளவர்களுக்கு விந்து அதிகரிப்பதற்கு உதவுகிறது. இதில் நல்ல கொழுப்புகள் இருப்பதால் இந்த மீன்களை வறுவல் செய்து சாப்பிடும்போது அதிக அளவு பலன்கள் கிடைக்கின்றன. இந்த நல்ல கொழுப்புகள் இதயத்தை பாதுகாக்கவும் உதவுகிறது.

    தேவையான பொருட்கள்:

    கனவா- 500 கிராம்

    வெங்காயம்- 20

    பூண்டு-8

    இஞ்சி- ஒரு துண்டு

    மல்லி- இரண்டு ஸ்பூன்

    சீரகம்- ஒரு ஸ்பூன்

    சோம்பு- ஒரு ஸ்பூன்

    வர மிளகாய்- மூன்று

    பட்டை- இரண்டு

    கிராம்பு- இரண்டு

    அண்ணாச்சி பூ- ஒன்று

    மஞ்சள் தூள்- கால் ஸ்பூன்

    உப்பு- தேவையான அளவு

    எண்ணெய்- தேவையான அளவு

    கொத்தமல்லி- சிறிதளவு

    செய்முறை:

    முதலில் ஒரு கடாயில் மல்லி, சீரகம் சோம்பு, வரமிளகாய், பட்டை, கிராம்பு, அண்ணாச்சி பூ இதை எல்லாம் எண்ணெய் இல்லாமல் வறுக்க வேண்டும். நன்கு வறுத்த பிறகு மிக்சியில் சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

    மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்த பிறகு சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். இஞ்சி பூண்டு விழுதை வெங்காயத்தில் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அதன்பிறகு தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும், அதோடு தனியாக அரைத்துவைத்த மசாலா கலவையை சேர்த்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளற வேண்டும்.

    மசாலா கலவையில் எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்க வேண்டும். கடைசியாக கழுவி வைத்துள்ள கனவா மீனை சேர்க்க வேண்டும். மசாலா கலவையின் சாறு கனவாய் மீனில் இறங்கும் வரை வேகவைத்து இறக்கினால் சுவையான செட்டிநாடு கனவா மீன் கிரேவி தயார்.

     

    • சுவையான ஆரஞ்சு ஐஸ்கிரீம் எப்டி செய்யாலாம்னு பார்க்கலாம்.
    • குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

    அடிக்கிற வெயிலுக்கு ஐஸ்கிரீம் என்றால் யார் தான் வேண்டாம் என்று சொல்வார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஐஸ்கிரீமை யாரும் வேண்டாம் என்று சொல்லமாட்டார்கள். கோடை வெயிலில் குளுகுளுனு சாப்பிட சூப்பரான ஆரஞ்சு ஐஸ்கிரீம் இப்படி வீட்டிலயே செஞ்சி பாருங்க. ஆரஞ்சு பழத்தை கொண்டு செய்யப்படும் சுவையான ஆரஞ்சு ஐஸ்கிரீம் எப்டி செய்யாலாம்னு பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    பால்- 1 லிட்டர்

    ஆரஞ்சு பழம்- 3

    பாதாம், முந்திரி- 10

    செய்முறை:

    முதலில் ஒரு முழு ஆரஞ்சை பழத்தை எடுத்து அதன் மேல் பகுதியை வட்டமாக வெட்டி எடுத்துவிட்டு, அதனுள் இருக்கும் சதை பகுதியை மட்டும் வெட்டி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது முழு ஆரஞ்சு பழம் போல் முழுவதுமாக நமக்கு வேண்டும்.

    இதற்கிடையே அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் அரை லிட்டர் கொழுப்பு நிறைந்த பால் சேர்த்து அதில் 3 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து பாலை கிண்டி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

    கடாயின் ஓரங்களில் பிடிக்கும் ஏடுகளை கரண்டியால் எடுத்து பாலிலேயே மீண்டும் சேர்த்து விட வேண்டும். இந்த பால் வற்றி பால்கோவா பதத்திற்கு முன்புள்ள நிலையான கிரீம் பதம் வர வேண்டும். கிரீம் பதம் வந்ததும் இதில் பொடியாக நறுக்கிய பாதாம் , முந்திரி சேர்த்து, அரை ஸ்பூன் பாலாடை ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும்.

    இப்போது அடுப்பை அணைத்து விட வேண்டும். இதை 15 நிமிடம் அப்படியே ஆற விட வேண்டும். இந்த கலவை இட்லி மாவை விட சற்று கெட்டியான பதத்திற்கு வந்து விடும்.

    இப்போது நாம் எடுத்து வைத்துள்ள ஆரஞ்சின் சதை பகுதியில் இருந்து விதைகளை நீக்கி விட்டு, அதன் ஜூசை மட்டும் ஒரு பாத்திரத்தில் கைகளை பயன்படுத்தி பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

    இப்போது இந்த ஜூசை நாம் கிரீம் போல் தயாரித்து வைத்துள்ள பாலில் சேர்த்து கரண்டியால் கலந்து விட்டு, பின்னர் இதை நாம் உடையாமல் எடுத்து வைத்துள்ள ஆரஞ்சு பழத்திற்குள் கரண்டியை பயன்படுத்தி ஊற்றிக் கொள்ள வேண்டும்.

    இப்போது நாம் ஏற்கனவே வெட்டி எடுத்து வைத்துள்ள ஆரஞ்சு தோலின் மேல் பகுதியை கொண்டு இதை மூடிக் கொள்ள வேண்டும். இதை இரண்டரை மணி நேரம் ஃப்ரீசருக்குள் வைத்து பின்பு வெளியே எடுத்து பரிமாறலாம். இதன் சுவை மிகவும் நன்றாக இருக்கும். 

     

    • பாத்திரத்தில் அடி பிடித்துவிட்டால் கவலை வேண்டாம்.
    • எளிதாக சுத்தம் செய்ய சில டிப்ஸ்.

    சமைக்கும்போது பாத்திரத்தில் அடி பிடித்துவிட்டால் கவலை வேண்டாம். எளிதாக சுத்தம் செய்ய சில டிப்ஸ் உங்களுக்காக....

    சமைக்கும் போது பால் பாத்திரம், டீ போடும் பாத்திரம் மற்றும் குழம்பு வகைகள் உள்ளிட்டவை கடுமையாக அடிபிடித்து விட்டால், இனி அதை கஷ்டப்பட்டு தேய்த்து கழுவ வேண்டாம். இப்படி செய்து பாருங்கள்.

    பாத்திரத்தில் அடிபிடித்த இடம் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும். இதில் அரை டீஸ்பூன் பேங்கிங் சோடா, இரண்டு ஸ்பூன் வினிகர் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து, அந்த பாத்திரத்தை அடுப்பில் வைக்க வேண்டும்.

    தண்ணீர் சூடானதும் ஒரு ஸ்பூன் பாத்திரம் தேய்க்கும் லிக்யூடை சேர்க்க வேண்டும். பின்னர் ஒரு கரண்டியை கொண்டு பாத்திரத்தின் அடிப்பிடித்த பகுதிகளை சுரண்டி விட வேண்டும்.

    இப்போது பாத்திரத்தில் உள்ள நீர் பால் போல் பொங்கி வரும். தொடர்ந்து கரண்டியால் சுரண்டி விடவும். பின்னர் அடுப்பை அணைத்து விட்டு, பாத்திரத்தில் உள்ள தண்ணீரை கீழே கொட்டிவிடலாம்.

    அதன்பிறகு பாத்திரத்தை ஒரு துணியால், பிடித்துக் கொண்டு பாத்திரம் சூடாக இருக்கும்போதே, கம்பி நார் ஸ்க்ரப் கொண்டு அடிபிடித்த பகுதியை லேசாக தேய்த்தால் போதும் அந்த கறைகள் நீங்கி விடும். இப்போது பாத்திரத்தை கழுவினால், பாத்திரம் பளிச்சென்று இருக்கும். நீங்களும் செய்து பாருங்கள். உதவியாக இருக்கும்.

    • மணத்தக்காளி கீரை வாயிலும், வயிற்றிலும் உண்டாகும் புண்களை ஆற்றும்.
    • வெங்காயம் நன்கு வதங்கியதும் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்க்க வேண்டும்.

    மணத்தக்காளி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு சத்துக்களை கொண்டு வந்து சேர்க்கும். இதன் இலை, காய் பழம், வேர் ஆகிய அனைத்துமே பலன்களை கொண்டுள்ளது. மணத்தக்காளி கீரை வாயிலும், வயிற்றிலும் உண்டாகும் புண்களை ஆற்றுவதுடன், சளியை நீக்கி உடலை வலுப்பெறச் செய்கிறது.

    தேவையான பொருட்கள்:

    மணத்தக்காளி கீரை - ஒரு கட்டு

    சின்ன வெங்காயம் - 15

    பூண்டு - 10

    சீரகம் - 1 ஸ்பூன்

    சோம்பு - 1 ஸ்பூன்

    மிளகு - 1 ஸ்பூன்

    தக்காளி - 2 பொடியாக நறுக்கியது

    பெருங்காய தூள் - சிறிதளவு

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு எண்ணெய் சூடானதும் பூண்டை தட்டி சேர்க்கவும். பூண்டு பொரிந்தவுடன் மிளகு, சோம்பு, சீரகத்தை பொடித்து சேர்க்க வேண்டும்.

    அதனுடன் வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் நன்கு வதங்கியதும் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்க்க வேண்டும். உப்பு, மஞ்சள் தூள், பெருங்காய தூள் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு சுத்தம் செய்த கீரையை போட்டு 10 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

    சுவையான மணத்தக்காளி கீரை சூப் ரெடி. மணத்தக்காளி கீரை சூப் வளரும் குழந்தைகள், இளம்பருவத்தினர், கருவுற்றிருக்கும் பெண்கள், நடுத்தர வயதுடையவர்கள் என அனைவருமே சாப்பிடலாம்.

    • அரைத்ததை டம்ளரில் ஊற்றி ஃபிரிட்ஜில் 1 மணி நேரம் வைத்து குளிரூட்டவும்.
    • சாப்பிடுவதற்கு முன் பாதாம், முந்திரியை தூவி அலங்கரிக்கவும்.

    தேவையான பொருட்கள்:

    மாம்பழம் - 1

    பால் - 1/4 கப் (பாலுக்கு மாற்றாக தேங்காய் பால் (அ) ஊற வைத்து அரைத்த பாதாம் விழுது பயன்படுத்தலாம்)

    தயிர் - 4 ஸ்பூன்

    சர்க்கரை - 3 ஸ்பூன்

    தேன் - 2 ஸ்பூன்

    ஏலக்காய் - சிறிதளவு

    பாதாம், முந்திரி துருவியது

    செய்முறை:

    மிக்சியில் மாம்பழத்தை துண்டுகளாக்கி சேர்க்கவும். அதனுடன் பால் அல்லது தேங்காய் பால் சேர்க்கவும்.

    பின்னர் சர்க்கரை, தயிர், தேன் சேர்த்து கலக்கவும். அதனுடன் ஏலக்காயை தூளாக்கி போடவும். அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து அரைக்கவும்.

    அரைத்ததை டம்ளரில் ஊற்றி ஃபிரிட்ஜில் 1 மணி நேரம் வைத்து குளிரூட்டவும். சாப்பிடுவதற்கு முன் பாதாம், முந்திரியை தூவி அலங்கரிக்கவும். கோடையில் குழந்தைகள் விரும்பும் சுவையான மாம்பழ ஸ்மூத்தி ரெடி. 

    • பானகம் உடலின் களைப்பை நீக்கி, புதுத்தெம்பை ஏற்படுத்தும்.
    • வெல்லத்தை தூளாக்கி தண்ணீரை ஊற்றி கரைக்கவும்.

    பானகம் என்பது இனிப்பு, புளிப்பு சுவை கலந்த பானம். கோடை காலத்தில் இந்த பானகம், உடலின் களைப்பை நீக்கி, புதுத்தெம்பை ஏற்படுத்தும். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து கோடை வெயிலில் ஏற்படும் உடல் சூட்டை தணிக்கும் பானகம் தயாரிக்கும் முறையை விரிவாக பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    எலுமிச்சை பழம் - 1

    வெல்லம் - தேவையான அளவு

    சுக்கு - சிறிதளவு

    ஏலக்காய் - சிறிதளவு

    பச்சை கற்பூரம் - சிறிதளவு

    செய்முறை:

    * வெல்லத்தை தூளாக்கி தண்ணீரை ஊற்றி கரைக்கவும். கரைந்த பின் தண்ணீரை வடிகட்டிக்கொள்ளவும்.

    * அதனுடன் சுக்குப்பொடி, ஏலக்காய் தூளை சேர்க்கவும். கலந்து விட்டு பச்சை கற்பூரம் சிறிதளவு சேர்க்கவும்.

    * பின்னர் அதனுடன் எலுமிச்சை பழச்சாறை கொட்டையை இல்லாமல் சேர்த்து நன்கு கலக்கினால் பானகம் தயார்.

    • நம்மை ஆரோக்கியமாக வைத்து கொள்வது அவசியமான ஒன்றாக இருக்கிறது.
    • எல்லாரும் வீட்டிலும் இருக்க கூடிய ஒன்றாக இருப்பது வெந்தயம் தான்.

    இந்த வெயிலுக்கு என்ன சாப்பிடுவது, உடலை எப்படி குளிர்ச்சியாக வைத்து கொள்வது எப்படி என்று ஆராய்ந்து கொண்டிருப்பீர்கள். ஏனென்றால் வெயில் அந்த அளவிற்கு அதிகமாக இருக்கிறது. இதனால் நம்மை ஆரோக்கியமாக வைத்து கொள்வது அவசியமான ஒன்றாக இருக்கிறது. இந்த வெயில் காலத்தில் அம்மை, காய்ச்சல், வயிற்று வலி, வயிற்று போக்கு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள குளிர்ச்சியான உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். குளிர்ச்சியான உணவாகவும், எல்லாரும் வீட்டிலும் இருக்க கூடிய ஒன்றாக இருப்பது வெந்தயம் தான். இந்த வெந்தயத்தை அப்படியே சாப்பிடுவது பலருக்கும் பிடிக்காத ஒன்றாக இருக்கிறது. அதற்கு தான் வெந்தயத்தை வைத்து கஞ்சி செய்வது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாங்க..

    தேவையான பொருட்கள்:

    வெந்தயம்- 3 தேக்கரண்டி

    பச்சரிசி- 1 கப்

    பாசி பருப்பு- 2 கப்

    தேங்காய் - 1/2 மூடி

    பூண்டு - 6 பற்கள்

    செய்முறை:

    முதலில் ஒரு கப் பச்சரிசி எடுத்து கொள்ள வேண்டும். அதனுடன் 2 கப் பாசி பருப்பு, 2 தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து 3 முறை தண்ணீர் ஊற்றி கழுவ வேண்டும்.

    பின் இதனை ஒரு குக்கர் அல்லது பாத்திரத்தில் சேர்த்து கொள்ள வேண்டும். பிறகு 3 கப் தண்ணீர் சேர்த்து கொள்ள வேண்டும். பூண்டு பற்கள் 6 சேர்த்து கொள்ள வேண்டும். இதனை வேக விட வேண்டும். குக்கரில் வைத்தால் 4 விசில் விட வேண்டும்.

    அதுவே நீங்கள் பாத்திரத்தில் வைத்தால் தண்ணீர் குறையும் வரை வேக விட வேண்டும். அரிசியானது அளவாக வெந்திருக்க வேண்டும்.

    பிறகு 1/2 மூடி தேங்காய் எடுத்து திருகி கொள்ள வேண்டும், இதனை அரைத்து பாலாக எடுத்து கொள்ள வேண்டும். இந்த தேங்காய் பாலை வேக வைத்த அரிசியில் சேர்த்து கலந்து விட வேண்டும்.

    இந்த கஞ்சியை காலை நேரத்தில் சாப்பிடுவது நல்லது. இரவு மற்றும் மதிய நேரத்தில் இந்த கஞ்சியை எடுத்து கொள்ளாதீர்கள்.

    • வாணலியில் வெல்லத்தை தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டிக்கொள்ளவும்.
    • நெய், தேங்காய் துருவல், ஏலக்காய்ப்பொடி சேர்த்து கிளற வேண்டும்.

    தேவையான பொருட்கள்:

    பலாச்சுளை பொடியாக நறுக்கியது - 1/2 கப்

    அவல் - 1 கப்

    வெல்லம் - 1 கப்

    அரிசி மாவு - 1 மேசைக்கரண்டி

    தண்ணீர் - 1 1/2 கப்

    தேங்காய் துருவல் - 1/4 கப்

    ஏலக்காய் பொடி - 1 தேக்கரண்டி

    நெய் - 1 மேசைக்கரண்டி

    செய்முறை:

    * வாணலியில் நெய் சேர்த்து அவலை வறுத்து மிக்சியில் பொடித்துக்கொள்ள வேண்டும்.

    * பலாப்பழத்தை துண்டுகளாக்கி கொள்ளவும்.

    * வாணலியில் வெல்லத்தை தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டிக்கொள்ளவும். வடிகட்டிய வெல்ல தண்ணீரை கொதிக்க வைத்து அதனுடன் பொடித்த அவல், அரிசி மாவை சேர்த்து கிளற வேண்டும்.

    * அதனுடன் நெய், தேங்காய் துருவல், ஏலக்காய்ப்பொடி சேர்த்து கிளற வேண்டும்.

    * பின்னர் கொழுக்கட்டையாக பிடித்து ஆவியில் வேக வைத்தால் பலாப்பழ கொழுக்கட்டை ரெடி. இந்த மாவை வாழை இலையில் தட்டியும் ஆவியில் வேக வைக்கலாம்.

    • சட்னி கொஞ்சம் தண்ணீர் போல் இருந்தால் தான் நல்லா இருக்கும்.
    • தக்காளியை மட்டும் 1 எடுத்து அதனை மட்டும் அரைத்து கொள்ளவும்.

    தேவையான பொருட்கள்:

    பூண்டு – 5

    மிளகாய் – 7

    புளி – எலுமிச்சை பழம் அளவு

    சின்ன வெங்காயம் – 10

    கடுகு – சிறிதளவு

    தக்காளி – 1

    கருவேப்பிலை – 1 கொத்து

    செய்முறை:

    முதலில் மிக்சி ஜாரில் 5 பல் பூண்டு, மிளகாய் 7 எடுத்துக் கொள்ளவும். அதில் புளி சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

    கொஞ்சம் கொரகொரப்பாக இருக்கும். அதனுடன் 10 சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.

    அடுத்து வெறும் தக்காளியை மட்டும் 1 எடுத்து அதனை மட்டும் அரைத்து கொள்ளவும்.

    இப்போது ஒரு கடாயை வைத்து அதில் 1 கடாயில் நல்ல எண்ணெய் ஊற்றி அதில் சிறிதளவு கடுகு போட்டு பொரிந்தவுடன் அதில் கருவேப்பிலை போடவும். அடுத்து நாம் அரைத்து வைத்துள்ள மிளகாயை சேர்த்து வதக்கவும்.

    அதன் பிறகு அதில் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து அதனுடைய பச்சை வாடை போகும் வரை வதக்கவும். அப்போது தான் சட்னி நன்றாக இருக்கும்.

    இந்த சட்னி கொஞ்சம் தண்ணீர் போல் இருந்தால் தான் நல்லா இருக்கும். ஆகவே கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு அதன் பின் சட்னியை சூடாக தோசை மற்றும் இட்லிக்கு சேர்த்து சாப்பிடுங்கள்..! சும்மா சுவை அள்ளும்..!

    • கீரை இரத்த சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்வதால் அனிமீயா நோய் வராமல் இருக்க உதவுகிறது.
    • பாலக்கீரை தொக்கை சாப்பாடு மற்றும் சப்பாத்திக்கு வைத்து சாப்பிட கொடுத்தால் குடும்பத்தினர் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

    பாலக்கீரையில் இரும்புச்சத்து, பீட்டா கரோட்டின், போலிக் அமிலம், கால்சியம் போன்றவை இதில் அடங்கியுள்ளன. பாலக்கீரையில்போலிக் அமிலம் அதிகளவில் உள்ளதால் கர்ப்பிணிகள் இதனை அதிகம் எடுத்துக் கொண்டால் நல்லது.

    குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்களும் இதனை சாப்பிட்டால் பால் அதிகம் சுரக்க உதவுகிறது. பாலக்கீரையில் மெக்னீசியம், காப்பர் மற்றும் வைட்டமின் கே அதிகளவில் உள்ளதால் எலும்புகள் மற்றும் பற்கள் உறுதியாக உதவுகிறது.


    இக்கீரை இரத்த சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்வதால் அனிமீயா நோய் வராமல் இருக்க உதவுகிறது. பாலக்கீரை தொக்கை எப்படி எளிமை செய்வது என்று பார்ப்போம்.

    தேவையான பொருட்கள்:

    பாலக்கீரை - 2 கட்டு

    பெரிய வெங்காயம் - 1

    பூண்டு - 1 முழு அளவு

    தனி மிளகாய் தூள் - 2 ஸ்பூன்

    எண்ணெய் - தேவையான அளவு

    கடுகு - தேவையான அளவு

    கடலை பருப்பு - 2 ஸ்பூன்

    உளுத்தம் பருப்பு - 2 ஸ்பூன்

    வரமிளகாய் - 4

    மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்

    கருவேப்பிளை - ஒரு கொத்து

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    முதலில் பாலக்கீரையை நன்கு பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். பின்னர் பெரிய வெங்காயம், பூண்டு, தனி மிளகாய் தூள் இவை மூன்றையும் ஒரு மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

    பின்னர் அடுப்பில் அடிகனமாக ஒரு பத்திரத்தை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, வர மிளகாய், கறிவேப்பிளை ஆகியவற்றை சேர்ந்து தாளிக்கவும்.

    அதன்பின் அரைத்து வைத்திருந்த கலவையை அதனுடன் சேர்த்து நன்கு வதக்கவும், பின்னர் இதனுடன் மஞ்சள் தூள் சிதளவும், உப்பு தேவையான அளவு சேர்க்கவும், பின்னர் நறுக்கி வைத்திருந்த பாலக்கீரையை அதனுடன் சேர்ந்து நன்கு கிளரவும்.

    5 நிமிடங்களுக்கு பின்னர் பாலக்கீரையின் நிறம் கரும் பச்சையாக மாறும். அதன் பின்னர் பாலக்கீரை தொக்கை பரிமாறலாம்.

    இந்த பாலக்கீரை தொக்கை சாப்பாடு மற்றும் சப்பாத்திக்கு வைத்து சாப்பிட கொடுத்தால் குடும்பத்தினர் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

    • சமையல் மேடையை சுத்தமாக துடைத்து ஈரமில்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
    • மூலிகைகள் மற்றும் மூலிகை கீரைகளை பிளாஸ்டிக் கவரில் கட்டித்தான் பிரிட்ஜில் வைக்க வேண்டும்.

    * சாமி அறை போல் சமையல் அறையும் தூய்மையாக இருந்தால் தான் ஈ, எறும்பு, புழு, பூச்சிகள் வராது. வெங்காயம், பூண்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி போட்டால் அந்த வாசத்திற்கே பூச்சிகள் வராது. மேலும் சமையல் முடிந்ததும் சமையல் மேடையை சுத்தமாக துடைத்து ஈரமில்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

    * அரிசி பாத்திரத்தில் வேப்பிலை போட்டு வைத்தால் வண்டு வராது. பருப்பு டப்பாக்களில் பூண்டின் நடுக்காம்புடன் உப்பை சேர்த்து துணியால் முடிச்சு போட்டு வைத்தால் பருப்பின் சுவையும் குறையாது, வண்டும் வராது.

    * காளான் மற்றும் கத்தரிக்காயை பிளாஸ்டிக்கவரில் போட்டு பிரிட்ஜில் வைக்கக்கூடாது.

    * ஏலக்காய், கிராம்பு, மிளகு ஆகியவற்றை ஒரே டப்பாவில் மூடி வைக்கலாம்.


    * உலர் திராட்சை, பேரீச்சையை வைக்கும் டப்பாக்களில் ஓரிரு கிராம்புகளை போட்டு வைத்தால் கெடாமலிருக்கும்.

    * மூலிகைகள் மற்றும் மூலிகை கீரைகளை பிளாஸ்டிக் கவரில் கட்டித்தான் பிரிட்ஜில் வைக்க வேண்டும்.

    * அரைத்த மிளகாய் தூள் வைத்திருக்கும் டப்பாவின் மையப்பகுதியில் இரண்டு மிளகாய் வற்றல் போட்டு வைக்க தூளின் நிறம் மற்றும் தரம் மாறாது. பெருங்காயத்தையும் போடலாம்.

    * முருங்கைக்காயை அப்படியே பேப்பரில் சுருட்டி வைத்தால் ஒருவாரம் கெடாது. இதேபோல வாழை இலையை வைத்தால் காய்ந்தோ பழுத்தோ போகாது.

    * ஆப்பிளை நறுக்கி சர்க்கரை தண்ணீரில் போட்டு எடுத்து பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு டப்பாவில் கொடுத்து அனுப்பினால் அப்படியே நிறம் மாறாமல் இருக்கும்.

    * அத்தி, கிஸ்மிஸ் பழம் போன்றவற்றை பிரிட்ஜில் வைக்கக்கூடாது. அக்ரூட் பழத்தை வெந்நீரில் சிறிது நேரம் ஊறவைத்தால் எளிதாக உடைக்கலாம்.

    * முருங்கை பிஞ்சை ரசத்தில் போட்டால் ரசம் ருசியாக இருக்கும். மோரில் சுக்கு பொடித்து சேர்க்க சுவை கூடும். கடலை மாவு மற்றும் பார்லி மாவை பாதி பாதி சேர்த்து பக்கோடா செய்தால் ருசி அமோகமாக இருக்கும்

    * அப்பளம், வடகம், வற்றலில் (காய்ந்த) வற மிளகாயை போட்டு வைக்க வண்டு, பூச்சிகள் வராது.


    * டீ தூள் டப்பாவில் ஆரஞ்சு பழத்தோலை போட்டு வைத்தால் டீ தூளில் ஆரஞ்சு வாசம் வரும். டீயும் ருசியாக இருக்கும்.

    * பச்சைநிற காய்கறிகளை சமைக்கும் போது தாளிக்கும் எண்ணெய்யில் சிறிது மஞ்சள் தூள் போட்டு வதக்க காய்கறிகள் நிறம் மாறாமல் இருக்கும்.

    * முறுக்கு மாவில் சிறிது நெய் சேர்த்து பிசைந்து முறுக்கு சுட, மொறுமொறுப்பாக நெய் வாசத்துடன் இருக்கும்.

    * நூடுல்ஸ் மீதமானால் அதனுடன் பச்சை காய்கறிகளை நறுக்கிப் போட்டு தயிர் சேர்த்து சாலட் செய்ய சூப்பராக இருக்கும்.

    • இப்படி செய்து கொடுத்தால் இன்னும் அதிகமாக விரும்பி சாப்பிடுவார்கள்.
    • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றிக் கொள்ளவும்.

    சிக்கன் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். அதுவும் இப்படி செய்து கொடுத்தால் இன்னும் அதிகமாக விரும்பி சாப்பிடுவார்கள். வாங்க சிக்கன் பாப்கார்ன் எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.

    தேவையான பொருட்கள்:

    எலும்பில்லாத சிக்கன் - 250 கிராம்

    பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

    எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்

    உப்பு - சுவைக்கேற்ப

    சீரகப் பொடி - 1 டீஸ்பூன்

    கரம் மசாலா - 1 டீஸ்பூன்

    பிரட் - 4

    முட்டை - 1

    பால் - 1 டேபிள் ஸ்பூன்

    மைதா - 1/2 கப்

    செய்முறை:

    * முதலில் சிக்கனை சிறு துண்டுகளாக வெட்டி, நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின் கழுவிய சிக்கனை ஒரு பெளலில் போட்டு, அத்துடன் பூண்டு விழுது, எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி 20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.


    * பின்பு பிரட் துண்டுகளை நன்கு பொன்னிறமாக டோஸ்ட் செய்து, மிக்சர் ஜாரில் போட்டு பொடி செய்து, ஒரு தட்டில் போட்டுக் கொள்ள வேண்டும். அதன் பின் பிரட் தூளுடன் சீரகப் பொடி மற்றும் கரம் மசாலா சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

    * பிறகு ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி, அதனுடன் பாலை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

    * பின் ஒரு தட்டில் மைதாவை போட்டுக் கொள்ள வேண்டும்.

    * இப்போது ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றிக் கொள்ளவும்.

    * பின்னர் ஒரு சிக்கன் துண்டை எடுத்து, முதலில் முட்டை கலவையில் பிரட்டி, பின் மைதாவில் பிரட்டி, அதன் பின் மீண்டும் முட்டையில் பிரட்டி, இறுதியாக பிரட் தூளில் பிரட்டி பின்னர் அதனை எண்ணெயில் போட வேண்டும்.

    * இப்படி அனைத்து சிக்கனையும் பொன்னிறமாக பொரித்து எடுத்தால், கிரிஸ்பியான சிக்கன் பாப்கார்ன் ரெடி.

    ×