என் மலர்
- இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார்.
- ‘சிறை’ படம் ரசிகர்களிடையே மட்டுமின்றி திரைப்பிரபலங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'சிறை'. இயக்குநர் வெற்றிமாறனின் இணை இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார்.
7 ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில், SS லலித் குமார் இந்த படத்தை தயாரித்துள்ளார். ஒரு காவலதிகாரிக்கும், விசாரணைக் கைதிக்குமான பயணம் தான் இப்படத்தின் மையம்.
நடிகர் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்க, ஜோடியாக நடிகை அனந்தா நடித்துள்ளார். இப்படத்தில் தயாரிப்பாளர் SS லலித் குமார் மகன் LK அக்ஷய் குமார் அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக அனிஷ்மா நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். 'சிறை' திரைப்படம் கிறிஸ்துமஸ் தினத்தன்று உலகமெங்கும் வெளியானது.
'சிறை' படம் ரசிகர்களிடையே மட்டுமின்றி திரைப்பிரபலங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை பார்த்த பிரபலங்கள் படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் 'சிறை' படம் வெளியான 2 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அந்த வகையில், 'சிறை' படம் முதல் நாளிலேயே உலக அளவில் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1 கோடிக்கு மேல் வசூல் குவித்துள்ளது என்றும் இதனால் 2 நாட்களில் ரூ.2 கோடிக்கு மேல் வசூல் குவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
- விமர்சனங்களை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.
- அடுத்தப்படங்களில் அதிக விமர்சனங்களை தவிர்ப்பதற்கான முயற்சியில் ஈடுபடப்போகிறேன்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் 'கூலி.' கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான இப்படத்தின் மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டது. மேலும் படம் வசூல் குறித்தும் எந்த தகவலும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், 'கூலி' படம் ரூ.500 கோடி வசூலித்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், 'கூலி' படம் மீது 1000 விமர்சனங்கள் இருந்தன. விமர்சனங்களை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். அடுத்தப்படங்களில் அதிக விமர்சனங்களை தவிர்ப்பதற்கான முயற்சியில் ஈடுபடப்போகிறேன்.
ரசிகர்களிடமிருந்து ஒரு படத்திற்கு விமர்சனம் வரும்போது, அதை ஏற்றுக்கொள்வது முக்கியம். அதே நேரத்தில், விமர்சனங்களை தாண்டியும் ரஜினி சாருக்காக மக்கள் தியேட்டரில் போய் படம் பார்த்து இருக்காங்க. படம் 500 கோடி ரூபாய் வசூலித்து இருக்கிறது. மக்களுக்கு நன்றி.
அடுத்த படத்தின் படப்பிடிப்பில் மும்முரமாக இருந்ததாலும், வாய்ப்பு கிடைக்காததாலும், படம் வெளியான நேரத்தில் விமர்சனம் குறித்து பேச முடியவில்லை என்று கூறினார்.
- அரபு நாடுகள் துரந்தர் படத்தை வெளியிட தடை விதித்துள்ளன.
- மக்கள் மத்தியில் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.
மும்பை:
பாலிவுட் இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில், ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த 5-ம் தேதி வெளியான படம் துரந்தர். இப்படத்தில் மாதவன், அக்ஷய் கன்னா, அர்ஜுன் ராம்பால், சஞ்சய் தத், சாரா அர்ஜுன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மக்கள் மத்தியில் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.
பாகிஸ்தானில் 'ஆபரேஷன் லியாரி' மற்றும் இந்திய உளவுத்துறை நிறுவனமான 'ரா' மேற்கொண்ட ரகசியப் பணிகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம், 6 வளைகுடா நாடுகளில் தடை செய்யப்பட்டாலும், வசூலில் சாதனை படைத்து வருகிறது.
இந்நிலையில், படம் வெளியாகி 21 நாளான நிலையில், துரந்தர் திரைப்படம் உலகளவில் ரூ. 1000 கோடி வசூலைக் கடந்துள்ளது. இதன்மூலம் 2025-ம் ஆண்டு அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது.
- விஜய் நடிக்கும் கடைசிப் படம் இது என்பதால், ரசிகர்கள் மத்தியில் இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
- இப்படத்தின் பாடல்களான "தளபதி கச்சேரி", 'ஒரே பேரே வரலாறு' ஆகியவை வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில், உருவாகி உள்ள படம் 'ஜன நாயகன்'. இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் வாசுதேவ் மேனன், நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
அரசியலால் விஜய் நடிக்கும் கடைசிப் படம் இது என்பதால், ரசிகர்கள் மத்தியில் இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் பாடல்களான "தளபதி கச்சேரி", 'ஒரே பேரே வரலாறு' ஆகியவை வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், 'ஜன நாயகன்' படத்தின் 3-வது பாடல் 'செல்ல மகளே...' இன்று வெளியாகி உள்ளது. பாடலாசிரியர் விவேக்கின் வரிகளில் அனிருத் இசையில் தளபதி விஜய் இந்த பாடலை பாடியுள்ளார். இந்த பாடலை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வர இருக்கும் படம் 'பராசக்தி'. இந்தப் படத்தில் ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் படத்தை தயாரித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், இந்தப் படத்தை வெளியிட தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தனது "செம்மொழி" என்ற கதையை திருடி தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என உதவி இயக்குனர் ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
கதை திருட்டு புகார் தொடர்பாக விசாரித்து வரும் ஜனவரி 2ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனால் 'பராசக்தி' திரைப்படம் குறிப்பிட்ட நாளில் திரையரங்குகளில் வெளியாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
- 'ஜன நாயகன்' படத்தின் இசை வெளியீட்டு நாளை மலேசியாவில் நடைபெறுகிறது.
- இந்த விழாவிற்கு ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என பலரும் மலேசியாவில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
'ஜன நாயகன்' படத்தின் இசை வெளியீட்டு நாளை மலேசியாவில் நடைபெறுகிறது. இந்த விழாவிற்கு ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என பலரும் மலேசியாவில் குவிந்த வண்ணம் உள்ளனர். இதன் காரணமாக மலேசியா நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலில் மைதானத்தில் 'ஜன நாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெறுகிறது. இவ்விழாவில் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவா, இசையமைப்பாளர் அனிருத், இயக்குநர் நெல்சன், பாடகர்கள், எஸ்.பி.பி. சரண், கிரிஷ், ஹரிஷ் ராகவேந்திரா, திப்பு, பாடகிகள் அனுராதா ஸ்ரீராம், சுஜாதா மோகன் ஆகியோர் பங்கேற்கின்றனர். இவர்கள் மலேசியாவிற்கு பயணம் மேற்கொள்ளும் வீடியோ தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இவர்களை தவிர நடிகர் தனுஷ் உள்ளிட்ட பலரும் மலேசியாவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் படத்தின் நாயகன் விஜய், மமீதா பைஜு, இயக்குனர் ஹெச் வினோத், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் மலேசியாவுக்கு சென்றடைந்தனர்.

மலேசியாவுக்கு சென்றடைந்த விஜய்க்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- அம்மாவிற்கு இறுதி சடங்கு பண்ணுவதற்கு உதவி பண்ணுங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இது போன்ற மோசடி நபர்கள் இருப்பதால் உண்மையில் உதவி கேட்பவர்களுக்கும் சிக்கல் ஏற்படுகிறது.
தமிழ் திரை உலகில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் இருப்பவர் ஜி.வி.பிரகாஷ்குமார். இசையமைப்பாளர், நடிகர் என சினிமாவில் பிசியாக ஓடிக் கொண்டிருக்கும் ஜி.வி.பிரகாஷ் யாரேனும் உதவி என்று கேட்டால் உடனடியாக தன்னால் முடிந்தளவு பண உதவி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்த நிலையில் ஒரு எக்ஸ்தள கணக்கில் இருந்து ஜி.வி.பிரகாசுக்கு உதவி கேட்டு பதிவு வந்துள்ளது. அந்த பதிவில் எங்களுக்கு சிறு வயதில் அப்பா தவறி விட்டார். அம்மா தான் வேலைக்கு போய் படிக்க வைத்து கொண்டிருந்தார். இப்போது அம்மாவும் இறந்து விட்டார். இறுதி சடங்கு நடத்துவதற்கு கூட பண வசதி இல்லை. இதனால் நானும் தங்கையும் என்ன செய்வது என தெரியாமல் இருக்கிறோம். அம்மாவிற்கு இறுதி சடங்கு பண்ணுவதற்கு உதவி பண்ணுங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதைப் பார்த்த ஜி.வி.பிரகாஷ் பரிதாபப்பட்டு உதவி கேட்டவரின் நம்பரை வாங்கி ரூ.20,000 அனுப்பி உள்ளார். ஜி.வி.பிரகாஷ் அவர் செய்த பண உதவியை ஸ்கிரீன்ஷாட் எடுத்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அதை பார்த்து பலரும் அந்த கணக்கிற்கு பணம் அனுப்பி இருக்கின்றனர்.
இந்த நிலையில் தனது அம்மா இறந்து விட்டதாக சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்ட பதிவு 3 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டது. அந்த வீடியோ யூடியூப்பில் இருப்பதாகவும் ஜி.வி.பிரகாஷ் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் சோசியல் மீடியாவில் ஆதாரத்துடன் பதிவிட்டு வருகின்றனர். இது போன்ற மோசடி நபர்கள் இருப்பதால் உண்மையில் உதவி கேட்பவர்களுக்கும் சிக்கல் ஏற்படுகிறது.
- கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலில் மைதானத்தில் ‘ஜன நாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெறுகிறது.
- ‘தளபதி திருவிழா’ என்ற கார் கோலாலம்பூரில் வலம் வருகிறது.
நடிகர் விஜயின் 'ஜன நாயகன்' படத்தின் மீதான ஆர்வம் ரசிகர்கள் மட்டுமின்றி திரைப்பிரபலங்களுக்கும் உள்ளது என்றால் அது மிகையல்ல...
இதனால் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என பலரும் மலேசியாவில் குவிந்த வண்ணம் உள்ளனர். இதன் காரணமாக மலேசியா நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலில் மைதானத்தில் 'ஜன நாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெறுகிறது. இவ்விழாவில் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவா, இசையமைப்பாளர் அனிருத், இயக்குநர் நெல்சன், பாடகர்கள், எஸ்.பி.பி. சரண், கிரிஷ், ஹரிஷ் ராகவேந்திரா, திப்பு, பாடகிகள் அனுராதா ஸ்ரீராம், சுஜாதா மோகன் ஆகியோர் பங்கேற்கின்றனர். இவர்கள் மலேசியாவிற்கு பயணம் மேற்கொள்ளும் வீடியோ தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இவர்களை தவிர நடிகர் தனுஷ் உள்ளிட்ட பலரும் மலேசியாவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், 'தளபதி திருவிழா' என்ற கார் கோலாலம்பூரில் வலம் வருகிறது.
- 'ஜன நாயகன்' படத்தின் இசை வெளியீட்டு நாளை மலேசியாவில் நடைபெறுகிறது.
- பல்வேறு நிபந்தனைகளை மலேசிய அரசு விதித்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக அரசியலில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் விஜய். நடிப்பில் பயணித்த வந்த விஜய், ரசிகர் மன்றம் மூலம் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வந்தார். இதனை தொடர்ந்து தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இதனால் நடிப்பில் இருந்து விலகுவதாக கூறி ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜன நாயகன்' படமே தனது கடைசி படம் என்று கூறியுள்ளார்.
இதனால் 'ஜன நாயகன்' படத்தின் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. மேலும், விஜய் போன்ற நடிகனை தமிழ் சினிமா இழப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, 'ஜன நாயகன்' படத்தின் இசை வெளியீட்டு நாளை மலேசியாவில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, விழாவுக்கு மலேசியா அரசு சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அதில், முழுக்க முழுக்க சினிமா சார்ந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மட்டுமே இருக்க வேண்டும். யாரும் அரசியல் பேச கூடாது. ரசிகர்கள் கட்சி கொடி, டி-சர்ட், துண்டு அணிந்து வரக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை போன்ற நிபந்தனைகளை மலேசிய அரசு விதித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நாளை நடைபெறும் இசை வெளியீட்டுக்காக நூற்றுக்கணக்கான ரசிகர்கள் மலேசியா புறப்பட்ட வண்ணம் உள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதனால் மலேசியா நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
- இப்படம் வருகிற 9-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
- இன்று மாலை பாடலாசிரியர் விவேக்கின் வரிகளில் அனிருத் இசையில் தளபதி விஜய் பாடியுள்ள 'செல்ல மகளே...' பாடல் வெளியாக உள்ளது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜயின் நடிப்பில் வெளியாக உள்ள படம் 'ஜன நாயகன்'. இப்படம் விஜயின் கடைசி படம் எனக்கூறப்படுவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலோங்கி உள்ளது.
பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் வருகிற 9-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இதனிடையே, இப்படத்தின் பாடல்களான "தளபதி கச்சேரி", 'ஒரே பேரே வரலாறு' ஆகியவை வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து பாடலாசிரியர் விவேக்கின் வரிகளில் அனிருத் இசையில் தளபதி விஜய் பாடியுள்ள 'செல்ல மகளே...' பாடல் இன்று மாலை வெளியாக உள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.

இதற்கிடையே, மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலில் மைதானத்தில் 'ஜன நாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெற உள்ளது. இசை வெளியீட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், 'ஜன நாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் நடிகர் விஜய் மலேசியாவுக்கு புறப்பட்டார்.
- சோனியா அகர்வால், அதிக வசனம் இல்லாமல், அதிக காட்சிகள் இல்லாமல் வந்து சென்று இருக்கிறார்.
- குட்டிப்புலி சரவணன், அண்ணன் தம்பியாக நடித்திருப்பவர்கள் ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.
அண்ணன், தம்பி இரண்டு பேர் கிராமத்தில் வாழ்ந்து வருகிறார்கள். அண்ணன் ஜாதிதான் உயர்ந்தது என்று வாழ்ந்து வருகிறார். இவரது மகன் வேறொரு ஜாதி பெண்ணை காதலித்து வருகிறார். இவர்களது காதல் விஷயம் தெரிந்து மகனை கண்டிக்கிறார். மேலும் காதலிக்கும் பெண்ணை மிரட்டவும் செய்கிறார்.
தம்பி அனைத்து ஜாதியினரும் சமம் என்று வாழ்ந்து வருகிறார். இவரது மகள் பள்ளியில் படிக்கும் சக மாணவனிடம் நட்பாக பழகி வருகிறார். மகளுடன் பழகும் மாணவன் வேற ஜாதியாக இருந்தாலும் மகளை பழக அனுமதிக்கிறார். இந்த ஜாதி பிரச்சினையால் அண்ணன் தம்பி இருவரும் சண்டை போட்டுக் கொள்கிறார்கள்.
அதே சமயம் இந்த ஊருக்கு வெளியே வசிக்கும் சோனியா அகர்வால், விவசாய கூலி வேலை செய்து வாழ்ந்து வருகிறார்.
இறுதியில் சோனியா அகர்வால் ஊருக்கு வெளியே வாழ்ந்து வர காரணம் என்ன? அண்ணன், தம்பி இருவரும் ஜாதி பிரச்சனை என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகியாக நடித்திருக்கும் சோனியா அகர்வால், அதிக வசனம் இல்லாமல், அதிக காட்சிகள் இல்லாமல் வந்து சென்று இருக்கிறார். குழந்தை நட்சத்திரங்களாக நடித்திருக்கும் திலிப்ஸ், வர்ஷிட்ட சுகன்யா இருவரின் நடிப்பு படத்திற்கு பெரிய பலம். குட்டிப்புலி சரவணன், அண்ணன் தம்பியாக நடித்திருப்பவர்கள் ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.
இயக்கம்
ஜாதி பாகுபாடு மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஏ.குரு. ஜாதிதான் முக்கியம் என்று வாழும் மனிதர்களுக்கு சாட்டை அடி கொடுத்திருக்கிறார். சொல்ல வந்த விஷயத்தை தெளிவாக சொல்லாமல் விட்டிருக்கிறார் இயக்குனர். காட்சிகள் அங்கு இங்குமாக தொடர்ச்சில்லாமல் செல்கிறது. நல்ல கதையை தெளிவில்லாத திரைக்கதை வைத்து இயக்கி இருக்கிறார்.
ஒளிப்பதிவு, இசை
ரஞ்சித் வாசுதேவன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. ராஜேஷின் ஒளிப்பதிவு கிராமத்து அழகை மாறாமல் படம் பிடித்து இருக்கிறது.
- ரெட்டை வேடத்தில் அருண் விஜய் சிறப்பாக நடித்துள்ளார்.
- பணத்தின் மீது அதீத ஆசை கொண்டிருக்கும் நடிகை சித்தி.
கதைக்களம்
கதாநாயகன் காளி (அருண் விஜய்) மற்றும் கதாநாயகி ஆந்த்ரே (சித்தி இத்நானி) ஆகிய இருவரும் அனாதை. இருவரும் சிறு வயதில் எதிர்ச்சியாக சந்திக்கின்றனர். இருவரும் அனாதை என தெரிய வந்ததும் இருவரும் அவர்களுக்குள் ஆறுதலாக பேசி கொள்கிறார்கள்.
இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறுகிறது. காதலித்த சில மாதங்களில் வேலை காரணமாக வெளியூருக்குச் சென்ற காளி ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு காதலி ஆந்த்ரேவைச் சந்திக்க வருகிறார். ஆனால், பணத்தின் மீது அதீத ஆசை கொண்டிருக்கும் ஆந்த்ரே உன்னிடம் பணம் இருந்தால் மட்டுமே நம் காதல் சேரும் எனக் கூறி தடை போட்டுவிடுகிறார்.
இதனையடுத்து அருண் விஜய் அங்கிருந்து செல்கிறார். சாலையில் சென்று கொண்டிருக்கும் போது மயங்கி நிலையில் தன்னைப் போலவே உருவம் கொண்ட உபேந்திராவைச் சந்திக்கிறார் காளி.
இருவரும் உபேந்திராவின் வீட்டிற்கு செல்கிறார்கள். அங்கு காளியையும் தன்னை போல ஸ்டைலாக மாற்றுகிறார். இருவரும் நண்பர்களாகின்றனர். பின்னர் ஒருநாள் என்னை போல் வெளியே சென்று வாழ்ந்து பாரு என உபந்தேர் கூறினார்.
உடனே காளி தனது காதலியை சந்திக்கிறார். இந்த விஷயம் காதலிக்கு தெரிய வருகிறது. பெரிய பணக்காரராக இருக்கும் அவரைக் கொன்றுவிட்டு, அவருடைய அடையாளத்தை வைத்து செல்வத்தை அனுபவிக்கலாம் என காளியும், ஆந்த்ரேவும் திட்டமிடுகிறார்கள்.
உபேந்திராவைக் கொலை செய்த பிறகு காளிக்கு எப்படியான பிரச்னைகள் வருகின்றன. இறுதியில் இருவரும் வசதியாக வாழ்ந்தார்களா? இணைந்தார்களா என்பது தான் மீதி கதை.
நடிகர்கள்
அருண் விஜய் இந்த மாதிரி ரோல் எல்லாம் அவருக்கு அல்வா சாப்பிடுவது போல், ஆக்ஷன் காட்சிகள் எல்லாம் அடி தூள் கிளப்புகிறார். கதாநாயகி சித்திக்கு நல்ல கதாபாத்திரம் என்றாலும், என்னமோ அவரை இந்தளவிற்கு சாடிஸ்ட் வில்லிதனமான கேரக்டரில் செட் ஆகவில்லை.
பழிவாங்கும் எண்ணம் கொண்டு துரத்தும் வழக்கமான வில்லன்களாக இந்த யுத்தக்களத்தில் பங்குபெறும் ஹரீஷ் பேரடி, யோகேஷ், தன்யா ரவிச்சந்திரன் ஆகியோருக்கு அழுத்தமான காட்சிகள் இல்லை.
இயக்கம்
இரட்டை வேடம், கதாநாயகியின் ஆசை, எதற்கும் துணிந்து களத்தில் இறங்கி துப்பாக்கி முனையில் சிக்கிக்கொள்ளும் நாயகன் எனச் சுவாரஸ்யமான ஒன் லைனைப் பிடித்து நிமிர்ந்து உட்கார வைக்கிறார் இயக்குநர் கிரிஷ் திருக்குமரன்.
ஒளிப்பதிவு இசை
டெக்னிக்கலாக ஒளிப்பதிவு சூப்பராகவே உள்ளது. சாம் சி எஸ் பின்னணி இசை மிரட்டல், படத்தின் காட்சியை நல்ல எலிவேட் செய்துள்ளது.








