குஜராத்தின் மக்கள் சக்திக்கு தலைவணங்குகிறேன்- பிரதமர் மோடி
குஜராத், இமாச்சல பிரதேச தேர்தல் முடிவுகள் தொடர்பாக பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:-
நன்றி குஜராத். இந்த அற்புதமான தேர்தல் முடிவுகளைப் பார்த்து நான் மிகுந்த உணர்ச்சிகளில் மூழ்கிவிட்டேன். மக்கள் வளர்ச்சிக்கான அரசியலை ஆசீர்வதித்தனர். அதே நேரத்தில் இந்த வேகம் இன்னும் அதிக வேகத்தில் தொடர வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர். குஜராத்தின் மக்கள் சக்திக்கு தலைவணங்குகிறேன்
கடினமாக உழைத்த குஜராத் பாஜக தொண்டர்களுக்கு நான் சொல்ல விரும்புவது நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு சாம்பியன்! நமது கட்சியின் உண்மையான பலமாக விளங்கும் நமது தொண்டர்களின் அதீத உழைப்பின்றி இந்த வரலாற்று வெற்றி சாத்தியமாகாது.
இமாச்சல பிரதேச மக்களுக்கும் எனது நன்றிகள், உ.பி. ராம்பூர் தொகுதியில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இடைத்தேர்தல் வெற்றி பாஜகவின் வளர்ச்சியை காட்டுகிறது, இமாச்சல் மாநில வளர்ச்சிக்கு தொடர்ந்து பாடுபடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.