இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு உத்தரகாண்ட் முதல்வர் பாராட்டு

சந்திரயான்-3 விண்கலத்தை சுமந்து கொண்டு ராக்கெட் சீறிப்பாயும் வீடியோவை உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி டுவிட்டரில் ஷேர் செய்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தை ‘புதிய இந்தியாவின் புதிய விமானம்’ என்று வர்ணித்துள்ள அவர், சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டி உள்ளார். மேலும் பிரதமர் மோடியின் தலைமையின்கீழ் இந்தியா புதிய வரலாறு படைக்கப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

Update: 2023-07-14 14:14 GMT

Linked news