search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "parliament election"

    • பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
    • அரசியல் கட்சி தலைவர்கள், திரைபிரபலங்கள் என பலரும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

    பாராளுமன்ற தேர்தலில் 5-ம் கட்ட வாக்குப்பதிவு 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் நடந்து வருகிறது.

    5-ம் கட்டமாக இன்று நடைபெற்று வரும் தேர்தலில் உத்தரபிரதேசத்தில் 14, மகாராஷ்டிராவில் 13, மேற்கு வங்கத்தில் 7, பீகாா், ஒடிசாவில் தலா 5, ஜார்க்கண்டில் 3, ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் தலா ஒரு தொகுதி அடங்கி உள்ளன. இந்த தொகுதிகளில் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோல் அரசியல் கட்சி தலைவர்கள், திரைபிரபலங்கள் என பலரும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

    இந்த நிலையில், பிற்பகல் 1 மணி நிலவரப்படி 5-ம் கட்ட தேர்தலில் 36.73 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

    பீகார் - 34.62 சதவீதம்

    மகாராஷ்டிரா- 27.78 சதவீதம்

    மேற்கு வங்காளம்- 48.41 சதவீதம்

    ஒடிசா - 35.31 சதவீதம்

    ஜார்கண்ட்- 41.89 சதவீதம்

    ஜம்மு காஷ்மீர்- 34.79 சதவீதம்

    லடாக்- 52.02 சதவீதம்

    உத்தரபிரதேசம்- 38.55 சதவீதம்


    • வெறுப்பு அரசியலால் சலித்துப்போன இந்த நாடு இப்போது தனது பிரச்சனைகளில் வாக்களித்து வருகிறது.
    • உங்கள் குடும்பங்களின் செழிப்புக்காகவும், உங்கள் சொந்த உரிமைகளுக்காகவும், இந்தியாவின் முன்னேற்றத்திற்காகவும் அதிக எண்ணிக்கையில் வாக்களியுங்கள்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

    இன்று 5-வது கட்ட வாக்குப்பதிவு. அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க மக்கள் எழுந்து நின்று பா.ஜ.க.வை தோற்கடிக்கிறார்கள் என்பது முதல் 4 கட்டங்களில் தெளிவாகி விட்டது.

    வெறுப்பு அரசியலால் சலித்துப்போன இந்த நாடு இப்போது தனது பிரச்சனைகளில் வாக்களித்து வருகிறது.

    இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, கடனில் இருந்து விடுதலை உள்பட பல்வேறு பிரச்சனைகளுக்காக வாக்களிக்கிறார்கள்.

    இந்த தேர்தலில் இந்திய மக்கள் ஒன்றிணைந்து போராடுகிறார்கள், மாற்றத்தின் புயல் நாடு முழுவதும் வீசுகிறது.

    அமேதி மற்றும் ரேபரேலி உள்பட நாடு முழுவதும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். உங்கள் குடும்பங்களின் செழிப்புக்காகவும், உங்கள் சொந்த உரிமைகளுக்காகவும், இந்தியாவின் முன்னேற்றத்திற்காகவும் அதிக எண்ணிக்கையில் வாக்களியுங்கள்.

    இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.


    • 25 ஆண்டுகால பிஜு ஜனதா தள அரசு ஒடிசா மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை.
    • ஜூன் 10-ந்தேதி ஒடிசாவில் முதன்முறையாக இரட்டை என்ஜின் ஆட்சி அமைக்கப்படும்.

    புவனேஸ்வர்:

    பிரதமர் நரேந்திர மோடி இன்று ஒடிசா மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

    பிரதமர் மோடி இன்று காலை பூரியில் உள்ள ஜெகநாதர் கோவிலில் வழிபாடு நடத்தினார். அதை தொடர்ந்து அவர் ரோடு ஷோ நடத்தினார். சாலையின் இரு புறத்திலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரளாக நின்று அவருக்கு உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

    ரோடு ஷோவை முடித்த பிறகு தேன்கனலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-

    25 ஆண்டுகால பிஜு ஜனதா தள அரசு ஒடிசா மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. இன்று ஒட்டு மொத்த ஒடிசாவும் இதை சிந்திக்கிறது.

    ஒடிசா மாநிலம் இயற்கை வளங்கள் மிக்கதாக இருந்த போதிலும் அங்கு அதிக வறுமை இருப்பதை கண்டு நான் வேதனைப்படுகிறேன். பிஜு ஜனதா தளம் ஆட்சியில் ஒடிசாவில் கனிமங்கள், கலாச்சாரம் பாதுகாப்பாக இல்லை. இந்த ஆட்சியில் பூரியில் உள்ள ஜெகன்நாதர் கோவில் பாதுகாப்பற்றதாக இருக்கிறது. கடந்த 6 ஆண்டுகளாக ஜெகநாதரின் கருவூலகத்தின் சாவிகள் காணவில்லை.

    ஒடிசா முதல்-மந்திரி அலுவலகம், வீடு போன்றவற்றை ஒரு சிலர் ஆக்கிரமித்துள்ளனர்.

    ஒடிசாவில் பா.ஜ.க.வை தேர்ந்தெடுங்கள். மாநிலத்தின் மகன் அல்லது மகளை முதல்-மந்திரி ஆக்குவோம். ஜூன் 10-ந்தேதி ஒடிசாவில் முதன்முறையாக இரட்டை என்ஜின் ஆட்சி அமைக்கப்படும். பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள உங்கள் அனைவரையும் அழைக்க வந்துள்ளேன்.

    புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்ட கனிம நிதியில் இருந்து ஒடிசா ரூ.26,000 கோடி பெற்றது. அந்தப் பணத்தை சாலைகள், பள்ளிகள் மற்றும் குடிநீருக்காகச் செலவழித்து இருக்க வேண்டும். ஆனால் பிஜு ஜனதா தளம் அரசு அதை தவறாகப் பயன்படுத்தியுள்ளது. இந்த ஆட்சியில் சிறு தொழிலாளர்கள் கோடீஸ்வரர்கள் ஆகிவிட்டனர்.

    இங்கு பா.ஜ.க. ஆட்சி அமைந்தால், சத்தீஸ்கரை போன்று, நெல் பயிருக்கு குவிண்டாலுக்கு 3,100 ரூபாயாக உயர்த்துவோம் என்பது மோடியின் உத்தரவாதம். இன்னும் 2 நாட்களில் நெற்பயிர்க்கான பணம் விவசாயிகளுக்கு வரவு வைக்கப்படும்.

    இவ்வாறு மோடி பேசினார்.

    • நாடு முழுவதும் நாங்கள் ஒரே மாதிரியான இலக்குடன்தான் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். அதற்கு உரிய பலன் கிடைக்கும்.
    • தென் மாநிலங்களில் பாரதிய ஜனதாவுக்கு மக்களிடம் ஆதரவு இல்லை என்பது போல ஒரு மாயை ஊக்குவிக்கப்பட்டுள்ளது.

    பிரதமர் மோடி பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நான் சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக பேசுவதாகவும், செயல்படுவதாகவும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து சொல்லி வருகின்றன. உண்மையில் நான் சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக ஒரு வார்த்தைக் கூட பேசியது இல்லை.

    அதுபோல சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக இப்போது மட்டுமல்ல எப்போதுமே நான் நடந்து கொண்டது இல்லை. நாட்டு மக்களில் யாரையும் நான் சிறப்பு மக்கள் என்று அழைக்கப்படுவதை விரும்பவில்லை என்றுதான் சொன்னேன். அதை இப்படி திரித்து சொல்கிறார்கள்.

    காங்கிரஸ் கட்சி இந்த தடவை நான் சொல்லாததை எல்லாம் பிரசாரத்தில் சொல்கிறார்கள். அரசியலமைப்பு சட்டத்தை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து மீறி வருகிறது.

    காங்கிரஸ் கட்சியினர் சிறுபான்மை இன மக்களை தூண்டும் வகையில் பிரசாரங்களில் பேசுகிறார்கள். வாக்கு வங்கி அரசியலுக்காக சிறுபான்மை இன மக்களை காங்கிரஸ் கட்சியினர் இப்படி பயன்படுத்துகிறார்கள்.

    இதை நான் குறிப்பிட்டு சொன்னவுடன் அவர்கள் நான் சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக செயல்படுவதாக வதந்தி பரப்புகிறார்கள். மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்யக்கூடாது என்று இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் அம்பேத்கரும், நேருவும் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர்.

    ஆனால் காங்கிரஸ் கட்சியினர் இன்று அதில் இருந்து விலகி செல்கிறார்கள். அதை சுட்டிக்காட்ட வேண்டியது எனது கடமையாகும். அதைத்தான் நான் செய்து வருகிறேன்.

    தேர்தல் பிரசார கூட்டங்களில் நான் எப்போதுமே சிறுபான்மை இன மக்கள் பற்றி பேசுவது கிடையாது. ஆனால் காங்கிரசார் தொடர்ந்து ஒவ்வொரு கூட்டத்திலும் சிறுபான்மை இன மக்களை குறிப்பிட்டு பேசுவது தேர்தல் சமயத்தில் அவர்களை திசை திருப்புவது போல் உள்ளது.

    நாங்கள் அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கருதுகிறோம். சமுதாயத்தில் உள்ள ஒவ்வொரு பிரிவு மக்களும் எங்களுடன் சுமூகமாக இருக்க வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அனைவரும் சமம் என்பதை அனைத்து தரப்பினரும் உணர வேண்டும்.

    இந்த விசயத்தில் காங்கிரஸ் கட்சியின் சூழ்ச்சிக்கு சிறுபான்மை இன மக்கள் பலியாகி விடக்கூடாது.

    நாடு முழுவதும் நாங்கள் ஒரே மாதிரியான இலக்குடன்தான் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். அதற்கு உரிய பலன் கிடைக்கும். தென் மாநிலங்களில் பாரதிய ஜனதாவுக்கு மக்களிடம் ஆதரவு இல்லை என்பது போல ஒரு மாயை ஊக்குவிக்கப்பட்டுள்ளது.

    2019-ம் ஆண்டு தேர்தல் முடிவை பாருங்கள். தென் மாநிலங்களில் அதிக இடங்களை கைப்பற்றியது பா.ஜ.க. மட்டுமே. மீண்டும் சொல்கிறேன். இந்த தடவையும் தென் மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சிதான் அதிக இடங்களில் வெற்றி பெறும்.

    தென் மாநிலங்களில் அதிக இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக பாரதிய ஜனதா திகழும். தென் மாநிலங்களில் பாரதிய ஜனதாவுக்கு கிடைக்கும் வாக்கு சதவீதம் கணிசமான அளவுக்கு உயரப்போவதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்.

    காங்கிரஸ் கட்சி மத ரீதியாக இட ஒதுக்கீடு செய்ய நினைக்கிறது. அதை நடக்க விடமாட்டேன். அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்றுவேன். நாடு முழுவதும் இதற்கு மக்களிடம் ஆதரவு உள்ளது.

    நாடு முழுவதும் மக்கள் ஆதரவு இருப்பதால் இந்த முறை அனைத்துப் பகுதிகளிலும் வரலாற்று சாதனை படைக்கும் வகையில் வெற்றிகளை பெறுவோம். குறிப்பாக தெற்கிலும், கிழக்கிலும் பாரதிய ஜனதாவுக்கு அதிக இடங்கள் கிடைக்கும்.

    நாங்கள் நிர்ணயித்துள்ள 400 இடங்கள் லட்சியத்தை மிக எளிதாக கடப்போம். உண்மையில் பாரதிய ஜனதா கட்சிதான் தேசிய அளவில் உணர்வுப்பூர்வமான கட்சி. நாங்கள் எந்த மாநிலத்தை கருத்தில் கொண்டு முடிவெடுத்தாலும் அது தேசிய நலனை அடிப்படையாக கொண்டு தான் அமையும்.

    ஆனால் பாரதிய ஜனதாவின் நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் வேறு விதமாக பேசி திசை திருப்புகின்றன. நாட்டின் நலனை சீரழிக்கும் வகையில் உள்ளன.

    பாரதிய ஜனதாவை பிராமணர்கள் கட்சி என்று சொன்னார்கள். ஆனால் பாரதிய ஜனதாவில் தலித், இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்தான் அதிகளவு எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர்.

    இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

    • 49 தொகுதிகளிலும் இன்று காலை முதல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
    • பைசாபாத் பாராளுமன்றத் தொகுதி, அயோத்தி நகரை உள்ளடக்கியதாகும்.

    பாராளுமன்ற தேர்தலில் 5-ம் கட்ட வாக்குப்பதிவு 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் நடந்து வருகிறது. வாக்குப்பதிவையொட்டி வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    அமேதி, ரேபரேலி, பைசாபாத் உள்ளிட்ட அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பாராளுமன்றத் தொகுதிகளில் இத்தோ்தல் நடைபெறுகிறது. இதில் பைசாபாத் பாராளுமன்றத் தொகுதி, அயோத்தி நகரை உள்ளடக்கியதாகும்.

    5-ம் கட்டமாக இன்று நடந்து வரும் தேர்தலில் உத்தரபிரதேசத்தில் 14, மகாராஷ்டிராவில் 13, மேற்கு வங்கத்தில் 7, பீகாா், ஒடிசாவில் தலா 5, ஜார்க்கண்டில் 3, ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் தலா ஒரு தொகுதி அடங்கி உள்ளன. இந்த தொகுதிகளில் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

    இந்த நிலையில், இன்று காலை 11 மணி நிலவரப்படி 5-ம் கட்ட தேர்தலில் 23.66 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

    பீகார் - 21.11 சதவீதம்

    உத்தரபிரதேசம்- 27.76 சதவீதம்

    ஜம்மு & காஷ்மீர் - 26.18 சதவீதம்

    ஜார்க்கண்ட் - 26.18 சதவீதம்

    லடாக்- 27.87 சதவீதம்

    மகாராஷ்டிரா - 15.93 சதவீதம்

    ஒடிசா- 21.07 சதவீதம்

    மேற்கு வங்காளம்- 32.70 சதவீதம்


    • வாக்குப்பதிவையொட்டி வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
    • அமேதி, ரேபரேலி, பைசாபாத் உள்ளிட்ட அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பாராளுமன்றத் தொகுதிகளில் தோ்தல் நடைபெறுகிறது.

    நாட்டில் புதிய அரசுடன் 18-வது பாராளுமன்றத்தை தோ்வு செய்ய 7 கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.

    கடந்த மாதம் (ஏப்ரல்) 19, 26, இந்த மாதம் (மே) 7, 13-ந்தேதிகளில் முதல் 4 கட்ட தேர்தல் நடத்தப்பட்டது. இந்த 4 கட்டத் தோ்தல்களில் சராசரியாக 66.95 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் இதுவரை 379 இடங்களுக்கு தோ்தல் நிறைவடைந்துள்ளது.

    இதைத் தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) 5-ம் கட்ட தேர்தல் 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் நடந்து வருகிறது. வாக்குப்பதிவையொட்டி வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    அமேதி, ரேபரேலி, பைசாபாத் உள்ளிட்ட அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பாராளுமன்றத் தொகுதிகளில் இத்தோ்தல் நடைபெறுகிறது. இதில் பைசாபாத் பாராளுமன்றத் தொகுதி, அயோத்தி நகரை உள்ளடக்கியதாகும்.

    5-ம் கட்டமாக இன்று நடந்து வரும் தேர்தலில் உத்தரபிரதேசத்தில் 14, மகாராஷ்டிராவில் 13, மேற்கு வங்காளத்தில் 7, பீகாா், ஒடிசாவில் தலா 5, ஜார்க்கண்டில் 3, ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் தலா ஒரு தொகுதி அடங்கி உள்ளன. இந்த தொகுதிகளில் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.


    49 தொகுதிகளிலும் இன்று காலை முதல் விறுவிறுப்பான வாக்குப்பதிவை காண முடிந்தது. உத்தரபிரதேசத்தில் முந்தைய 4 கட்ட தேர்தல்களை விட இன்று அதிகளவு வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

    இதை அடுத்து, காலை 9 மணி நிலவரப்படி 5-ம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் 10.28 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

    பீகார் - 8.86 சதவீதம்

    உத்தரபிரதேசம்- 10.88 சதவீதம்

    ஜம்மு & காஷ்மீர் - 7.63 சதவீதம்

    ஜார்க்கண்ட் - 11.68 சதவீதம்

    லடாக்- 10.51 சதவீதம்

    மகாராஷ்டிரா - 6.33 சதவீதம்

    ஒடிசா- 6.87 சதவீதம்

    மேற்கு வங்காளம்- 15.35 சதவீதம்


    • வாக்குச்சாவடிகளில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடக்கிறது.
    • பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்து மை வைத்த விரலை காண்பித்தார்.

    புதுடெல்லி:

    543 உறுப்பினர்களை கொண்ட இந்திய பாராளுமன்ற மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது.

    உலகமே எதிர்பார்க்கும் இந்த தேர்தலில் முதல் 4 கட்ட வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. இதன் மூலம் 379 தொகுதிகளுக்கு தேர்தல் நிறைவடைந்து உள்ளது. இதில் பா.ஜனதா வேட்பாளர் போட்டியின்றி தேர்வான குஜராத்தின் சூரத் தொகுதியும் அடங்கும்.

    இதுவரை நடந்த 4 கட்ட தேர்தல்களின் மூலம் 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பாராளுமன்ற தேர்தல் நிறைவடைந்து விட்டது. இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற தென் இந்திய மாநிலங்கள் முக்கியமானவை ஆகும்.

    4 கட்ட தேர்தல்கள் நிறைவடைந்துள்ள நிலையில் 5-வது கட்டமாக 49 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியது.

    அந்தவகையில் உத்தரபிரதேசம் (14 தொகுதிகள்), மகாராஷ்டிரா (13), மேற்கு வங்காளம் (7), பீகார் (5), ஒடிசா (5), ஜார்கண்ட் (3), ஜம்மு-காஷ்மீர் (1), லடாக் (1) ஆகிய 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த தேர்தல் நடக்கிறது.

    வாக்குச்சாவடிகளில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடக்கிறது.

    ஏற்கனவே நடந்த 4 கட்ட தேர்தல்களில் மொத்தம் 66.95 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. அடுத்தடுத்த கட்டங்களில் வாக்கு சதவீதத்தை மேலும் அதிரிக்க தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    அதன்படி இன்றைய தேர்தலுக்காக வாக்காளர்களிடம் தீவிர விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. குறிப்பாக நகர்ப்புற வாக்காளர்கள் பெருமளவில் வாக்களிக்க வருமாறு தேர்தல் கமிஷன் வேண்டுகோள் விடுத்து உள்ளது.

    இந்நிலையில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். வாக்களித்த பின் அவர் விரலில் உள்ள மை அடையாளத்தை காட்டினார்.

    பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

    எனது இந்தியா வளர்ச்சியடைந்து வலுவாக இருக்க வேண்டும். அதை மனதில் வைத்து வாக்களித்தேன். இந்தியாவிற்கு எது சரி என்று நினைத்து அதற்கு வாக்களிக்க வேண்டும். வாக்களிக்கும் சதவீதம் நன்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன் என்று கூறினார்.

    தொழிலதிபர் அனில் அம்பானி மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று வாக்குப்பதிவு தொடங்கும் வரை காத்திருந்து தனது வாக்கை பதிவு செய்தார்.

    ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தனது குடும்பத்துடன் வந்து மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

    பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்து மை வைத்த விரலை காண்பித்தார்.

    • பா.ஜ.க. மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக தராசு சாய்ந்துள்ளது அனைவருக்கும் தெரியும்.
    • 4 விஷயங்களையும் ஒன்றாக சேர்ந்ததால் நாங்கள் நிறைய சாதிக்கிறோம் என்று நான் நம்புகிறேன்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தனித்து 370 இடத்தையும், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் 400 இடங்களையும் வெற்றி இலக்காக கொண்டுள்ளது.

    இந்த நிலையில் பாரதிய ஜனதா சாதனை வெற்றியை பெறும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆங்கில சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் 4 கட்டங்கள் முடிந்துள்ள நிலையில் பா.ஜனதா சாதனை வெற்றியை பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. பா.ஜ.க. மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக தராசு சாய்ந்துள்ளது அனைவருக்கும் தெரியும். பா.ஜனதா தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை பிடிக்கும்.

    இந்தியா மிகப்பெரிய நாடு. அவர்கள் வேட்பாளர்கள் பெயர், அனுபவம் ஆகியவற்றை பார்க்கிறார்கள். இந்தியா கூட்டணி பிரதமர் வேட்பாளரை அறிவிக்காததால் வாக்காளர்கள் அவர்களை மதிப்பிடுவதற்கான வாய்ப்பை இழக்கிறது.

    நோக்கம் மிகவும் பெரியதாக இருக்க வேண்டும். அது பகுதிகளாக இருக்க கூடாது. 2-வது அளவு கோல். அதுவும் பெரிதாக அமைய வேண்டும். வேகம் இந்த இரண்டும் ஒத்திசைவாக இருக்க வேண்டும.

    எனவே நோக்கம், அளவு மற்றும் வேகம் பின்னர் திறமை இருக்க வேண்டும். இந்த 4 விஷயங்களும் ஒன்றாக சேர்ந்ததால் நாங்கள் நிறைய சாதிக்கிறோம் என்று நான் நம்புகிறேன்.

    இவ்வாறு மோடி கூறியுள்ளார்.

    • தேர்தலின் போது பல்வேறு இடங்களில் கலவரம் நடந்தது.
    • வீட்டு காவலில் வைக்கப்பட்டு இருந்த சகோதரர்கள் இருவரும் தலைமரைவாகி விட்டனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றத்திற்கு கடந்த 13-ந் தேதி தேர்தல் நடந்தது. தேர்தலின் போது பல்வேறு இடங்களில் கலவரம் நடந்தது. கலவரத்தை அடக்க 25 கம்பெனி துணை ராணுவ படையினர் துப்பாக்கி ஏந்தியபடி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் மாச்சர்லா சட்டமன்றத் தொகுதியில் ஒஸ்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தற்போதைய எம்எல்ஏ பில்லினேனி ராமகிருஷ்ண ரெட்டி போட்டியிடுகிறார்.

    தேர்தல் நாள் அன்று நடந்த கலவரத்திற்கு பில்லினேனி ராமகிருஷ்ண ரெட்டியும், அவரது சகோதரர் வெங்கட்ராம ரெட்டியும் தான் காரணம் என தெலுங்கு தேசம் கட்சியினர் குற்றம்சாட்டினர். வீட்டு காவலில் வைக்கப்பட்டு இருந்த சகோதரர்கள் இருவரும் தலைமரைவாகி விட்டனர். போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புல்டோசர் அரசியலை உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தான் அறிமுகம் செய்து வைத்தார்.
    • பா.ஜ.க. அரசுக்கு எதிராக விமர்சனங்களை கூறும் பொதுமக்களின் சொத்துகளை இடித்து அகற்றுவதற்காக பயன்படுத்தினர்.

    சென்னை:

    பிரதமர் நரேந்திர மோடி வடமாநிலங்களில் 5-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தின் போது பேசிய கருத்துகள் கடுமையான சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதில் குறிப்பாக காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலை புல்டோசர் கொண்டு இடித்து விடுவார்கள் என்று பேசினார்.

    இந்த பேச்சு எதிர்க்கட்சியினர் மத்தியில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. பிரதமர் மோடியின் இந்த பேச்சு குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் கூறுகையில்,

    புல்டோசர் அறம் என்பது உத்தரபிரதேச முதல்வரின் அடையாளமாக இருக்கலாம். ஆனால் காங்கிரசுக்கோ, இந்தியா கூட்டணிக்கோ இதில் முற்றிலும் உடன்பாடு கிடையாது.

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சட்டத்தை தவறாக பயன்படுத்துவது, மூன்றாம் தரமாக மலிவான முறையில் அரசியல் செய்வது, சட்டவிரோத சோதனைகள் நடத்துவது, அரசுத் துறைகளை பயன்படுத்தி பறிமுதல் செய்வது, தவறான முறையில் நபர்களை கைது செய்வது, காவல்துறை, சிறைத்துறை மரணங்கள் ஆகியவற்றிக்கு முடிவு கட்டப்படும் என உறுதியளிக்கிறேன்.

    ராமர் கோவில் புல்டோசர் கொண்டு இடித்து அகற்றப்படும் என்ற இந்தியா கூட்டணியின் மீதான பிரதமர் மோடியின் தவறான குற்றச்சாட்டுக்கு இதுதான் எங்களது உறுதியான பதிலாகும் என்றார்.

    அதேபோல் உத்தரபிரதேசத்தில் உள்ள பாரபங்கி என்ற இடத்தில் பிரதமர் மோடி பேசுகையில், புல்டோசரை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை இந்தியா கூட்டணி கட்சியினர் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று பேசியிருந்தார்.

    இதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகையில், முன்பு பிரசாரத்தின் போது பிரதமரும், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவும் பேசுகையில், பா.ஜ.க. 370 இடங்களில் இருந்து 400 இடங்கள் வரை பிடிக்கும் என தெரிவித்தனர். தற்போது காங்கிரஸ் ஆட்சி அமைத்து விடுமோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே அவர்கள் இருவரும் பேசும் போது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.

    புல்டோசர் அரசியலை உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தான் அறிமுகம் செய்து வைத்தார். பா.ஜ.க. அரசுக்கு எதிராக விமர்சனங்களை கூறும் பொதுமக்களின் சொத்துகளை இடித்து அகற்றுவதற்காக பயன்படுத்தினர். இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு கண்டித்த போதிலும் கூட புல்டோசர் அரசியலை அவர்கள் கைவிட தயாராக இல்லை.

    பிரதமர் மோடியின் புல்டோசர் அரசியல் குறித்த பேச்சு மிகவும் தரம் தாழ்ந்த ஒன்றாகும் என்றார்.

    • கருத்துக்கணிப்பு முடிவுகளின் படி ஒரு சில தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணி 2-வது இடத்தை பிடிக்க வாய்ப்பு உள்ளது.
    • மாவட்ட அளவிலும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படலாம்.

    சென்னை:

    தமிழகத்தில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி முறிந்ததை தொடர்ந்து, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க. தலைமையில் தனி கூட்டணியை அமைத்து பாராளுமன்ற தேர்தலை சந்தித்தார். பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் இரட்டை இலக்க சதவீதத்தில் ஓட்டுகளை பெற வேண்டும், குறைந்த பட்சம் 5 முதல் 8 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் தமிழக பா.ஜ.க. கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் முடிவு தி.மு.க.வுக்கு சாதகமாக அமைந்தால் தமிழக பா.ஜ.க.வில் நிர்வாகிகள் மாற்றப்படலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அண்ணாமலைக்கும் நெருக்கடி உருவாகலாம் என்றும் கூறப்படுகிறது. எனவே பாராளுமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு தமிழக பா.ஜ.க. தலைவர் பதவியில் அண்ணாமலை நீடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இது தொடர்பாக பா.ஜ.க. மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். பாராளுமன்ற தேர்தல் முடிவு சாதகமாக இல்லாவிட்டால் அண்ணாமலை தலைவர் பதவியை தக்க வைக்க போராட வேண்டி இருக்கும். அவர் தலைவர் பதவியை இழக்கவும் நேரிடலாம்.

    அண்ணாமலை தனது செல்வாக்கை வளர்த்துக்கொள்ள தனிப்பட்ட முறையில் முயற்சி செய்தார். அ.தி.மு.க.வுடன் உறவை முறித்துகொண்ட அவர் பா.ஜ.க. மேலிடத்தின் கட்டளைக்கு உட்பட்டு தனது தலைமையில் கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலை சந்தித்தார். ஆனால் அவரால் தேர்தலில் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.

    கருத்துக்கணிப்பு முடிவுகளின் படி ஒரு சில தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணி 2-வது இடத்தை பிடிக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் எந்த தொகுதியிலும் வெற்றி பெற வாய்ப்பு இல்லை. 2014-ம் ஆண்டு கோவை தொகுதியில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் 3 லட்சத்துக்கும் அதிகமான ஓட்டுகள் பெற்றிருந்தார். தற்போது அண்ணாமலைக்கு அந்த அளவுக்கு ஓட்டு கிடைக்குமா என்பது தெரியவில்லை. கோவையில் நிலைமை இப்படியென்றால் மற்ற தொகுதிகளில் நிலைமை என்னவாகும்?

    தேர்தல் முடிவு வெளியான பிறகு தமிழக பா.ஜ.க.வில் புதிய பொறுப்பாளர்களை நியமிக்க அதிக வாய்ப்பு உள்ளது. தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அண்ணாமலை மற்றும் மாநில நிர்வாகிகள் மீது கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்கும். அதன்படி தலைவர் மற்றும் நிர்வாகிகள் மாற்றப்பட வாய்ப்பு உள்ளது. மாவட்ட அளவிலும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இது தொடர்பாக மற்றொரு பா.ஜ.க. நிர்வாகி கூறுகையில், 'தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மாற்றப்படுவார் என்பது யூகத்தின் அடிப்படையிலான செய்தி. 2026-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தல் வரை தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை நீடிப்பார். இதில் எந்தவித மாற்றமும் இல்லை' என்றார்.

    • நடத்தை விதிமீறலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்தது.
    • சி-விஜில் செயலி மூலமாக பொதுமக்கள் புகார் வழங்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் இதுவரை 4 கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன.

    நடத்தை விதிமீறலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்தது.

    பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பான புகார்களை தெரிவிக்க 'சி-விஜில்' என்ற செல்போன் செயலியை தேர்தல் கமிஷன் அறிவித்தது. இந்த செயலி மூலமாக பொதுமக்கள் புகார்களை வழங்கலாம் என அறிவித்தது. அதன்படி இந்த செயலி வழியாக தொடர்ந்து புகார்கள் வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

    இந்நிலையில், இதுவரை 4.24 லட்சத்துக்கு மேற்பட்ட புகார்கள் வந்திருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இதில் 409 புகார்கள் விசாரணையில் உள்ளன.

    இதுவரை வந்துள்ள புகார்களில் 100 நிமிடங்களுக்குள் 89 சதவீத புகார்களுக்கு தீர்வு காணப்பட்டு இருக்கிறது என தேர்தல் ஆணையம் செய்திக்குறிப்பில் கூறியுள்ளது.

    ×