என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    • ஆழ்நிலை தியானத்தில் பயிற்சி பெற்ற பலரை பல்வேறு நகரங்களில் குழுவாக தியானம் செய்ய வைத்தனர்.
    • ஒரு மனிதரிடம் நல்ல உணர்வுகள் வெளிப்படும் போது அது சக மனிதர்களை அமைதிப்படுத்துகிறது என்பது உண்மை.

    தியானம் பல நாடுகளில் பல்வேறு வடிவங்களில் பயிற்சியாக கற்று தரப்படுகிறது. இந்த தியானத்தால் ஒரு மனிதனின் உடலில் நல்ல மாற்றங்கள் ஏற்படுகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பல்வேறு நோய்களை போக்க தியானம் ஒரு சிறந்த வழி என்று மருத்துவர்கள் கூட பரிந்துரைக்கின்றனர்.

    இது ஒரு புறம் இருக்க, ஒருவர் அல்லது ஒரு குழு செய்யும் தியானம் என்ன மாதிரியான விளைவுகளை சமூகத்தில் ஏற்படுத்துகிறது என்று ஆய்வு செய்ய அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்தனர்.

    ஆழ்நிலை தியானத்தில் பயிற்சி பெற்ற பலரை பல்வேறு நகரங்களில் குழுவாக தியானம் செய்ய வைத்தனர். பின்னர் இந்த தியான நிகழ்வு நடைபெற்ற நகரங்களில் அந்த தியான நிகழ்வுக்கு முன் பின் நடைபெற்ற சம்பவங்களை ஆய்வு செய்தனர். அதில், இந்த தியான நிகழ்வுக்கு பிறகு அந்த நகரங்களில் குற்றம், வன்முறை சம்பவங்கள், விபத்துகள், நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது.

    இது போன்ற மாற்றங்களுக்கு காரணம் என்னவாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் விவாதித்தனர். அதில், தோராயமாக ஒரு நகரில் வெறும் 1 சதவீத மக்கள் தொடர்ந்து தியானம் செய்தால், அந்த இடத்தில் இருந்து பரவும் கண்ணுக்கு தெரியாத அமைதி அலைகள் அந்த நகரைச் சுற்றி சுமார் 5 மைல் தொலைவுக்கு ஒரு வித அமைதியை அந்த பகுதியில் வாழும் மனிதர்களிடத்தில் ஏற்படுத்துகிறது. இது அந்த பகுதியில் வாழும் தியானத்தில் ஈடுபடாத மக்களின் மனதில் மாற்றத்தை உருவாக்கி அமைதியை உருவாக்குவதால் அந்த மக்களின் மன அழுத்தம் குறையத் தொடங்குகிறது. பொதுவாக மனிதர்கள் ஒருவரையொருவர் ஏதோ ஒரு வகையில் பாதிக்கின்றனர். ஒரு மனிதரிடம் நல்ல உணர்வுகள் வெளிப்படும் போது அது சக மனிதர்களை அமைதிப்படுத்துகிறது என்பது உண்மை. பொதுவாக தியானம் அமைதியை தருகிறது. அது ஒரு சமூகத்தில் பரவும் போது ஒட்டுமொத்த சமூகமும் அமைதிக்கு திரும்புகிறது என்றனர்.

    கீரைகளில் அதிக சத்து உள்ள பருப்பு கீரை பற்றி தான் இன்று பார்க்கப் போகிறோம்.

    நாம் தினந்தோறும் அன்றாட வேலைகளை செய்ய நம்மை சுறுசுறுப்பாகவும், புத்துணர்வோடும் வைப்பதற்கு நம் உடலில் உள்ள சத்துகளின் நிலை முக்கிய பங்கு வகிக்கிறது.

    அந்த வகையில், நம் உடலில் சத்து குறைபாடு ஏற்படுவதை தடுக்க நாம் உண்ணும் உணவில் தினமும் காய்கறிகளுடன் கீரை சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியம்.

    ஆம்.. அப்படி கீரைகளில் அதிக சத்து உள்ள பருப்பு கீரை பற்றி தான் இன்று பார்க்கப் போகிறோம்..!

    கிராமங்களில் சாதாரணமாக வீட்டைச்சுற்றி பருப்பு கீரை வளர்ந்து கிடப்பதை பார்க்கலாம். இதற்கு கங்கா வள்ளி என்ற பெயரும் உண்டு. ஏராளமான சத்துக்கள் இந்த கீரையில் உள்ளன.

    இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் ஒமேகா-3 சத்தானது பருப்பு கீரையில் ஏராளம். குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு ஒமேகா-3 தேவை. இது, ஆட்டிசம் போன்ற வளர்ச்சி குறைபாடுகளை தடுக்க உதவுகிறது. இது உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை குறைப்பதுடன், இதயத்தை சுற்றி படியும் கொழுப்பையும் தடுக்கிறது.

    வைட்டமின்-ஏ சத்தும் இருப்பதால் தோல் எப்போதும் பொலிவுடன் இருக்கவும், சருமம் தொடர்பான பிரச்சினைகளை குணப்படுத்தவும், கண் பார்வை தெளிவாக இருக்கவும் இந்த கீரை உதவுகிறது.

    வைட்டமின்-சி, இரும்புச்சத்து, மக்னீசியம், பொட்டாசியம் போன்ற முக்கிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த கீரையில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கல் தீரும். உடல் எடையை குறைக்கும் மற்றும் குடல் நோய்களை தடுக்கும் ஆற்றல் உள்ளது.

    ஆஸ்டியோபோரோசிஸ், சொரியாசிஸ் போன்ற நோய்களுக்கு பருப்பு கீரை அருமருந்தாக உள்ளது, என்று நாட்டு மருத்துவ நூல்கள் கூறுகின்றன. எலும்புகள் மற்றும் தசைகளுக்கு வலிமை தரும் கால்சியமும் இந்த கீரையில் ஏராளம்.

    உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், நீண்ட நேரம் பசி உணர்வு இல்லாமல் தவிர்க்க இந்த கீரை உதவுகிறது. தமிழ்நாட்டில் சாதாரணமாக எங்கும் முளைத்து கிடக்கும் இந்த கீரை இந்த மண்ணின் பொக்கிஷம் என்றே உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்..!

    • வேகநடை, ஓட இயலாத முதியோர் பலருக்கு உதவும் ஓர் உடற்பயிற்சியாக உள்ளது.
    • மெல்லோட்டமே உடல் எடை குறைக்க சிறந்த வழி என்போரும் உண்டு.

    காலை மெல்லோட்டம் உடலுக்கு பலவித நன்மைகளை அளிப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் உடற்பருமனானவர்கள் பலர் மெல்லோட்டம் ஓட மிகுந்த சிரமத்துக்குள்ளாவர்.

    இன்று வெறும் 10 அடி தூரம் மெல்லோட்டம் செய்தாலே பலருக்கு மூச்சு வாங்கும், வியர்த்துக்கொட்டும். இதனால் வேக நடையே சிறந்தது என எண்ணி பலர் கை, கால்களை வீசியபடி வேக நடை செல்வர்.

    வேகநடை, ஓட இயலாத முதியோர் பலருக்கு உதவும் ஓர் உடற்பயிற்சியாக உள்ளது. ஆனால் மெல்லோட்டமே உடல் எடை குறைக்க சிறந்த வழி என்போரும் உண்டு. காலை நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி செய்வோர் வேக நடை, மெல்லோட்டம் இடையே உள்ள வேறுபாட்டை அறிவது நல்லது.

    நடக்கும் வேகத்தில் மெல்லோட்டம் செய்வது, அதாவது நிமிடத்துக்கு 50 அடி எடுத்து வைத்து மெல்லோட்டம் செய்வது உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் ஓர் உடற்பயிற்சி முறை.

    கட்டுடல் கொண்டவர்கள், விளையாட்டு வீரர்கள் இதுபோல தினமும் காலை பல கி.மீ., மெல்லோட்டம் செல்வார்கள். இது இதயத்துடிப்பை அதிகரித்து, வியர்வையை வெளியேற்றி மன அழுத்தத்தைக் குறைக்கும். ஆனால் மெல்லோட்டம் கால்களின் தசை நாரில் தசைப்பிடிப்பு, காயம் ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

    இளைஞர்கள், நடுத்தர வயதினர் மெல்லோட்டம் ஓடும்போது சரியான வேகத்தில் ஓடுவது நல்லது.

    வேகநடை மூலம் குறைவான கலோரிகளே எரிக்கப்படும். வேக நடை பயிலும்போது கைகளை முன்னும் பின்னும் வேகமாக ஆட்டி நடப்பது அதிக பலனைத் தரும். வேகநடை முதியோருக்கு ஏற்ற ஓர் சிறந்த கார்டியோ பயிற்சி. இதனை தினமும் செய்வதால் உடற்பருமனானவர்களின் உடற்தசைகளின் அடியில் உள்ள கொழுப்புப் படலம் எரிக்கப்பட்டு உடல் எடை குறையும். வேக நடை பயில்வது மிக எளிய கார்டியோ உடற்பயிற்சிக்கு சமமானது. வேக நடை பயில்வது மெல்லோட்டம் அளவுக்கு விரைவில் பலனைத் தராது என்றபோதும், உடல் களைப்படையாமல் நீண்டநேரம் செய்ய ஏற்ற உடற்பயிற்சிகளுள் சிறந்தது.

    வேகநடை, மெல்லோட்டம் ஆகிய இரண்டிலுமே சாதக பாதகங்கள் உள்ள நிலையில் உங்கள் உடல் நிலைக்கேற்ப நீங்கள் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்துகொள்ளலாம்.

    • புற்று நோய்க்கு எதிராக போராடி நமது உடல் நலனை பாதுகாக்கின்றன.
    • திராட்சை பழம் மலச்சிக்கலை தடுப்பதில் பெரும் பங்கு ஆற்றுகிறது.

    திராட்சையில் பல சத்துக்கள் அடங்கியுள்ளன. அதிலும் குறிப்பாக திராட்சையில் வைட்டமின் டி, சர்க்கரை, மாவு சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளன. திராட்சை பழத்தில் முகம், தலை முடி மற்றும் சருமத்திற்கான பயன்கள் மிக அதிகமாக உள்ளன.

    திராட்சையை உண்டால் நமது உடலுக்கு உடனடியாக தேவையான ஆற்றலும், நமது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடும், வலிமையும் அதிகரிக்கும். திராட்சை பழங்களில் கருப்பு திராட்சை, பச்சை திராட்சை, பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என்று பல வகைகள் உள்ளது.

    திராட்சை அதுவும் குறிப்பாக கருப்பு திராட்சை சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது. ஒவ்வொரு நாளும் காலையில் ஒரு கையளவு திராட்சையை சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டு வந்தால் இரத்தத்திலுள்ள சர்க்கரை அளவை குறைத்து விடும். திராட்சை பழம் மலச்சிக்கலை தடுப்பதில் பெரும் பங்கு ஆற்றுகிறது. அதிலும் குறிப்பாக கருப்பு திராட்சை சிறந்தது.

    திராட்சை பழத்தில் சர்க்கரை அதிகளவில் உள்ளது. மற்றும் ஆர்கானிக் அமிலம் மற்றும் செல்லுலோஸ் போன்றவையும் உள்ளன. இவை வயிற்றின் அமைப்பை நல்ல முறையில் வைத்திருக்க உதவுகின்றன.

    பொதுவாக திராட்சை பாசம் பலவகையான புற்றுநோய்களையூம் எதிர்த்து போராடும் ஆற்றல் தரும். அதிலும் குறிப்பாக கருப்பு திராட்சை வகை மார்பக புற்றுநோயையும் மற்ற பிற புற்றுநோய்களையும் கட்டுப்படுத்தும்தன்மை கொண்டது. திராட்சையிலுள்ள அதிகளவிலான "ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள்" உதவுகின்றன.

    இவை புற்று நோய்க்கு எதிராக போராடி நமது உடல் நலனை பாதுகாக்கின்றன. திராட்சையை தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால் நமது சிறுநீரகங்களை நன்றாக பாதுகாத்து நலமாக வாழலாம். திராட்சை பழத்தை தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால் நமது இரத்தத்திலுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை படிப்படியாக குறைத்து நமது உடலை சீராக்கும் பணியை செய்யும். திராட்சை பழத்திலுள்ள "லிவோலியிக் அமிலம்" அமிலம் நமது மயிர்கால்களை முடியின் வேர்ப்பகுதியில் இருந்து முடியை வலிமையாக்கும். இதனால் முடி உதிர்வது தடுக்கப்படும்.

    • வறட்டு இருமல், சளி பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால் விரைவில் பலன் கிடைக்கும்.
    • இலவங்கம் பாக்டீரியாவை அழிக்கக்கூடியது.

    நம் உடலில் நோய் வருவதற்கு முக்கிய காரணம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதுதான். அதனை அதிகரிக்க அதிமதுர மிளகுப்பாலும் பருகி வரலாம். இந்த பாலை தயாரிக்க அதிமதுரம் கால் டீஸ்பூன், இலவங்கம் ஒரு துண்டு, மஞ்சள் தூள் இரண்டு டீஸ்பூன், மிளகுத்தூள் இரண்டு டீஸ்பூன் தேவைப்படும். இவை அனைத்தையும் ஒரு டம்ளர் காய்ச்சிய பாலில் கலந்து குடித்தால் போதும். காரத்தன்மை சற்று அதிகமாக இருந்தால் அவற்றுடன் பனங்கற்கண்டு சேர்த்துக்கொள்ளலாம்.

    வறட்டு இருமல், சளி பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால் விரைவில் பலன் கிடைக்கும். இதை காலை உணவுக்கு பிறகும், இரவு உணவுக்கு முன்பும் குடிக்க வேண்டும். மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம்.

    அதிமதுரத்தில் உள்ள ஆண்டி மைக்ரோபியல் பண்புகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து உடலில் நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாக்கும். உடல் பலவீனம் மற்றும் சோர்வாக இருப்பவர்களுக்கு உடல் ஆற்றலின் அளவை அதிகரிக்கச் செய்யும். இலவங்கம் பாக்டீரியாவை அழிக்கக்கூடியது. இதில் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை தடுக்கும். மேலும் வைரஸ் தொற்று, காய்ச்சலை தவிர்க்கவும், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யவும் இந்த அதிமதுர மிளகுப்பால் பெரிதும் உதவும்.

    • ஒரு கப் கருப்பு காபியில் பெரும்பாலும் கலோரிகள் இருப்பதில்லை.
    • கருப்பு காபியை அதிகம் பருகுவது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கக்கூடும்.

    டீ, காபியுடன் பால் கலந்து பருகும் வழக்கத்தைத்தான் பலரும் பின்பற்றுகிறார்கள். பாலை தவிர்த்து பிளாக் டீ, பிளாக் காபி என்ற கருப்பு நிற பானம் பருகுபவர்களும் இருக்கிறார்கள். இதில் எந்த கருப்பு பானம் ஆரோக்கியமானது என்று பார்ப்போம்.

    கருப்பு காபி (பிளாக் காபி):

    கருப்பு காபியை அதிகம் விரும்புபவர்கள் உடற்பயிற்சி ஆர்வலர்களாகத்தான் இருக்கிறார்கள். ஜிம்முக்கு செல்வதற்கு முன்பு ஒரு கப் காபி பருகுவது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. காபியில் உள்ளடங்கி இருக்கும் அதிக காபின் உடற்பயிற்சி செய்வதற்கு தேவையான ஆற்றலை அளிக்கும்.

    மேலும் கருப்பு காபியில் உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் பல்வேறு வகையான ஆன்டி ஆக்சிடென்டுகள், மெக்னீசியம், பொட்டாசியம் போன்றவை நிறைந்துள்ளன. ஒரு கப் கருப்பு காபியில் பெரும்பாலும் கலோரிகள் இருப்பதில்லை. சர்வதேச தொற்றுநோயியல் ஆய்விதழில், 'கருப்பு காபி' குடிப்பவர்களுக்கு உடல் பருமன் மற்றும் டைப்-2 நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து குறைவாக இருப்பதாக ஆய்வு முடிவின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    காபியில் இருக்கும் அதிக காபின் சிலருக்கு நடுக்கம், பதற்றம் அல்லது தூக்க கோளாறு பிரச்சினையை ஏற்படுத்தும். அதிக அமிலத்தன்மை கொண்டது என்பதால் வயிற்று அசவுகரியத்தை உண்டாக்கும். கருப்பு காபியை அதிகம் பருகுவது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கக்கூடும்.

    கருப்பு தேநீர் (பிளாக் டீ):

    கருப்பு காபி, கருப்பு தேநீர் இரண்டுமே ஒரே மாதிரியானவை என்றாலும் பிளாக் டீயில் காபின் குறைவாக இருக்கும். அத்துடன் நிறைவுற்ற கொழுப்புகள் இருப்பதில்லை. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மையும் கொண்டது. இதய ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.

    ஐரோப்பிய ஊட்டச்சத்து இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், கருப்பு தேநீரை தொடர்ந்து பருகுபவர்களால் கூடுதலாக உடல் எடையை குறைக்க முடியும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. அதனால் உடல் பருமன் கொண்டவர்கள் பருகுவதற்கு ஏற்ற பானமாக கருப்பு தேநீர் விளங்குகிறது. ஒரு கப் கருப்பு தேநீரில் 2 கலோரிகளே உள்ளது குறிப்பிடத்தக்கது. வயிற்றுப் பிரச்சினைகளை தவிர்க்க கருப்பு டீ சிறந்த தேர்வாகும்.

    எது சிறந்தது?

    இரண்டு பானங்களையும் மிதமாக பருகினால் ஆரோக்கியமானவை. உடல் இயக்க செயல்பாடு மற்றும் உடல் நலனை கருத்தில் கொண்டு எந்த பானத்தை தேர்வு செய்வது என்று முடிவு செய்யலாம். குறிப்பாக காலையில் உடற்பயிற்சி செய்யும் வழக்கத்தை கொண்டிருப்பவர்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், உடலுக்கு தேவையான ஆற்றலை பெறவும் கருப்பு காபியை தேர்ந்தெடுப்பது சிறந்தது.

    சின்ன விஷயத்திற்கும் சட்டென்று பதற்றம் கொள்பவர்கள் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கருப்பு காபியை தவிர்க்க வேண்டும். மேலும் மாலை மற்றும் இரவு நேரத்தில் கருப்பு காபி பருகக்கூடாது. ஏனெனில் அது தூக்கத்தை பாதிக்கும். காபின் அதிகமாக உட்கொள்ள விரும்பவில்லை என்றால் கருப்பு தேநீர் சிறந்த தேர்வாக அமையும்.

    • குளிர்காலத்தின்போது மற்ற நபர்களை விட சைனஸ் பாதிப்பு இருக்கும் நபர்களுக்கு காது வலி ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
    • வீட்டில் இருக்கும் போது காதுகளை முழுவதுமாக மூடும் வகையில் குல்லா அணிந்து கொள்ளலாம்.

    டிசம்பர் மாதத்தில்தான் பொதுவாக குளிர்காலம் தொடங்கும் என்றாலும், பருவமழைக்காலமான அக்டோபர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை குளிர்ந்த காற்று வீசக்கூடும். அதனால் இந்த காலகட்டங்களில் நாம் பாதுகாப்பாக இருப்பது நல்லது. குறிப்பாக முதியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் காது வலி அடிக்கடி ஏற்படும். குளிர்காலத்தின் போது ஏற்படும் காது வலி இயல்பானது என பலர் நினைக்கின்றனர். ஆனால் உரிய நேரத்தில் கவனிக்கத் தவறினால், காதில் ஏற்படும் வலி அதிகரித்து பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். குளிர்காலத்தில் ஏன் காது வலி ஏற்படுகிறது? இதை சமாளிப்பது எப்படி? என்பதை பற்றி பார்ப்போம்.

    சளி, மூக்கடைப்பு பிரச்சனையால் காது வலி வருமா?

    குளிர்காலத்தின் போது காற்றில் வழக்கத்தை விட அதிகமாக தூசு நிறைந்து இருக்கும். இதன் காரணமாக சுவாசிக்கும் காற்று மூக்கு வழியாக நுழையும் போது அலர்ஜி ஏற்படுகிறது. குறிப்பாக சளி தொந்தரவு இருக்கும் நபர்களுக்கு யூஸ்டேஷியன் குழாயினுள் தூசு நுழைவதன் காரணமாக காது வலி இயல்பாகவே ஏற்படுகிறது. காதில் ஏற்படும் இந்த வலியின் காரணமாக முகத்துடன் இணைந்துள்ள நரம்பில் அழுத்தம் ஏற்பட்டு, அந்த நரம்பின் செயல்பாடு பாதிப்புக்குள்ளாகிறது. இதன் விளைவாக முகத்தில் உள்ள தசைகளின் செயல்பாடும் முடங்கிப்போய்விடுகிறது. இது 'பெல்ஸ் பாலஸி' என்று அழைக்கப்படுகிறது.

    குளிர்காலத்தின்போது மற்ற நபர்களை விட சைனஸ் பாதிப்பு இருக்கும் நபர்களுக்கு காது வலி ஏற்படும் வாய்ப்பு அதிகம். குறைந்த ஈரப்பதம் கொண்ட வறண்ட குளிர் காற்று உள் நுழையும்போது மூக்குக்கு உள்ளே இருக்கும் சதைகள் வீங்கும். இதனால் அவர்களுக்கு காது வலி, தலை வலி போன்ற பாதிப்புகள் ஏற்படும்.



    காது வலி ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

    வீட்டில் இருக்கும் போது காதுகளை முழுவதுமாக மூடும் வகையில் குல்லா அணிந்து கொள்ளலாம். அது குளிர் காற்று காதுக்குள் செல்வதைத் தடுக்க உதவும். வீட்டை விட்டு வெளியே செல்லும் போது காதையும், மூக்கையும் சேர்த்து மூடும் வகையில் 'ஸ்கார்ப்' அணிந்து கொள்ளலாம்.

    குளிர் காற்று காரணமாக ஏற்படும் காது வலிக்கு நீராவி பிடிப்பது நல்லது. அப்போது மூக்கினுள் ஈரப்பதம் நிறைந்த சூடான காற்று சென்று நிவாரணம் தேடித்தரும். அதன் பிறகும் காது வலி இருந்தால், மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியம்.

    எதனால் ஏற்படுகிறது?

    நமது மூக்கையும், காதையும் இணைக்கும் ஒரு குழாய்தான் குளிர்காலத்தில் ஏற்படும் காது வலிக்கு முக்கிய காரணம். யூஸ்டேஷியன் குழாய் என்று அழைக்கப்படும் இந்தக் குழாய், குளிர்காலத்தின் போது மூக்கின் வழியாக உடலுக்குள் நுழையும் குறைந்த ஈரப்பதம் கொண்ட வறண்ட குளிர் காற்றின் காரணமாக மூடிக்கொள்கிறது. இந்தக்குழாய் மூடுவதன் விளைவாக, காது சவ்வுகள் இறுக்கமாகி காது வலி உண்டாகிறது.

    • ரசாயனப் பொருட்களை அடிக்கடி பயன்படுத்துவது ஒரு நாளைக்கு 20 சிகரெட்டுகளை புகைப்பதற்கு சமமான அளவிற்கு நுரையீரலுக்கு தீங்கு விளைவிக்கும்.
    • சுத்தம் செய்யும்போது வெளியாகும் புகை மற்றும் துகள்கள் சுவாச பாதைகளை சேதப்படுத்தி நுரையீரலுக்கு பங்கம் விளைவிக்கின்றன.

    வீட்டை சுத்தம் செய்வதற்கு ஸ்ப்ரேக்கள் மற்றும் ரசாயனப் பொருட்களை அடிக்கடி பயன்படுத்துவது ஒரு நாளைக்கு 20 சிகரெட்டுகளை புகைப்பதற்கு சமமான அளவிற்கு நுரையீரலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

    குறிப்பாக தொடர்ந்து வீட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடும் பெண்களுக்கு காலப்போக்கில் நுரையீரல் செயல்பாடு பாதிப்புக்குள்ளாவதையும் நார்வே ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

    சுத்தம் செய்யும்போது வெளியாகும் புகை மற்றும் துகள்கள் சுவாச பாதைகளை சேதப்படுத்தி நுரையீரலுக்கு பங்கம் விளைவிக்கின்றன. எனவே நுரையீரல் ஆரோக்கியத்தை பாதுகாக்க ரசாயன கலப்பில்லாத இயற்கை பொருட்களை பயன்படுத்துமாறு பரிந்துரைக்கின்றனர்.

    • ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒருமுறை 20 அடி தூரத்தில் இருக்கும் ஒரு பொருளை 20 வினாடிகள் பார்க்க வேண்டும்.
    • நீண்டநேரம் செல்பேசி, கணினி பார்த்தால் கண்களில் வறட்சி, அரிப்பு ஏற்படும்.

    கண்களிண்களின் மதிப்பு, பார்வைத் திறன் குறையும்போதும், பாதிக்கும்போதும்தான் நமக்குத் தெரியும். ஆனால், எப்போதுமே சில விஷயங்களில் கவனமாக இருந்தால், கண் பார்வையை காத்துக்கொள்ளலாம். தவிர்க்க வேண்டிய அந்த விஷயங்கள் குறித்து பார்ப்போம்...

    நீண்ட நேர செல்பேசி, கணினி பயன்பாடு:

    தற்போது செல்பேசி, கணினி பயன்பாடு அதிகமாக உள்ளது. ஆனால் தொடர்ந்து நீண்டநேரம் இவற்றை பார்த்தால் நிரந்தர கண் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் இவை, தலை வலி, மங்கலான பார்வை, கண்களில் வறட்சி மற்றும் அழுத்தத்தை ஏற்படுத்தும். அத்துடன், மின்னணுத் திரைகளில் இருந்து வரும் நீல ஒளி, தூக்கத்தைப் பாதிக்கும். எனவே இந்த பிரச்சனையைத் தவிர்க்க 20-20-20 என்ற வழிமுறையைப் பின்பற்ற வேண்டும். இதற்கு, ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒருமுறை 20 அடி தூரத்தில் இருக்கும் ஒரு பொருளை 20 வினாடிகள் பார்க்க வேண்டும்.

    'சன் கிளாஸ்' அணியாமல் வெளியே செல்வது:

    சூரியனிலிருந்து வரும் தீங்கு விளைவிக்கும் கதிர்கள் நம்முடைய சருமத்தை மட்டுமின்றி கண்களையும் மோசமாக பாதிக்கும். இது கண் புரை, கண் புற்றுநோய் வருவதற்கு வழிவகுக்கக்கூடும். எனவே வீட்டை விட்டு வெளியே செல்லும்போது, அதிலும் வெயிலில் செல்லும்போது 'சன் கிளாஸ்' அணிவது நல்லது.

    கண்களைத் தேய்ப்பது :

    நீண்டநேரம் செல்பேசி, கணினி பார்த்தால் கண்களில் வறட்சி, அரிப்பு ஏற்படும். இதனால் நம்மை அறியாமலேயே நாம் கண்களை அடிக்கடி தேய்க்க நேரும். இப்படிச் செய்வது கண்களை மேலும் பாதிக்கும். கண்களை அதிகமாக தேய்க்கும்போது, ரத்த நாளங்கள் சேதமடையும்.

    இதனால் கருவளையங்கள் போன்றவை ஏற்படும். இவை தவிர, கண்களைத் தேய்க்கும் போது, கைகளில் இருக்கும் பாக்டீரியாக்கள், வைரஸ் தொற்றுகள் கண்களைப் பாதிக்கும்.

    தூக்கமின்மை:

    சரியாக தூங்கவில்லை என்றால் நம்முடைய உடல், மன ஆரோக்கியம் மட்டுமல்ல, கண் ஆரோக்கியமும் மோசமாக பாதிப்படையும். தூக்கமின்மையானது, மங்கிய பார்வை, கண்களில் வறட்சி, ஒளியின் உணர்திறன் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். இது தொடர்ந்து நீடித்தால், தீவிர கண் நோய்க்கும் வழிவகுக்கும். எனவே தினமும் குறைந்தது 7-8 மணி நேரம் தூங்குவதை கட்டாயமாக வைத்திருக்க வேண்டும்.

    கண் பரிசோதனையைத் தவிர்ப்பது:

    பெரும்பாலானோர், வழக்கமான கண் பரிசோதனை செய்வதை தவிர்த்துவிடுகின்றனர். பார்வை பாதிக்கப்பட்ட பிறகுதான் மருத்துவரை நாடுகின்றனர். ஆனால், கண் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால், ஆண்டுக்கு ஒருமுறை கண்டிப்பாக கண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இதனால், கண் பிரச்சனைகளை முன்கூட்டியே கண்டறியலாம். உடனே உரிய சிகிச்சையையும் எடுத்துக் கொள்ளலாம்.

    • வாரத்திற்கு மூன்றுமுறையாவது பீட்ரூட் எடுத்துக்கொள்ளுங்கள்.
    • பீட்ரூட் வயதானவர்களில் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

    நாம் சுவைக்காகவே பெரும்பாலும் நிறைய காய்கறிகளை எடுத்துக்கொள்வோம். அதுவும் சைடிஸ் இல்லாமல் சாதம் இறங்காது என்பதற்காகத்தான், எதாவது ஒரு பொரியலை சாப்பிடுவோம். அப்படி நாம் சாப்பிடக்கூடிய பொரியல்களில் ஒன்றுதான் பீட்ருட். பலரும் அதிகமாக உருளைக்கிழங்குதான் எடுத்துக்கொள்வார்கள். ஆனால் பீட்ரூட்டின் ஊட்டச்சத்து நன்மைகளை நீங்கள் அறிந்தால் தினசரியாக எடுத்துக்கொள்ள தொடங்கிவிடுவீர்கள். பீட்ரூட்டின் ஆரோக்கிய நன்மைகளை காண்போம். 

    இரத்த அழுத்த மேலாண்மை

    பீட்ரூட்டில் அதிகளவு நைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன. இந்த நைட்ரேட்டுகள் உடலில் நைட்ரிக் ஆக்சைடாக மாற்றப்படுகின்றன. நைட்ரிக் ஆக்சைடு இரத்த நாளங்களைத் தளர்த்தி, விரிவுபடுத்தும். மேலும் ஊட்டச்சத்து மற்றும் ஆக்ஸிஜன் சுழற்சியை மேம்படுத்துகிறது.

    செரிமானம்

    ஒரு கப் பச்சை பீட்ரூட் 3.81 கிராம் நார்ச்சத்தை உடலுக்கு வழங்குகிறது. இது தினசரி மதிப்பில் (DV) சுமார் 13.61% ஆகும். நார்ச்சத்து என்பது செரிமானத்தை ஆதரிக்க உதவும் ஒரு கார்போஹைட்ரேட் ஆகும். இது குடல் இயக்கத்தை சீராக, மலச்சிக்கலைத் தடுக்கிறது மற்றும் செரிமான செயல்முறையை மெதுவாக்குவதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது உதவுகிறது. மேலும் நீண்டநேரம் வயிறு நிரம்பி இருக்கும் உணர்வை தருகிறது.

    ஆக்ஸிஜனேற்ற அழற்சி எதிர்ப்பு பண்புகள்

    பீட்ரூட்டில் அதிகளவு பெட்டாலைன் உள்ளது. இது சிறந்த ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்ட ஒரு சேர்மமாகும். ஆக்ஸிஜனேற்றிகள் ஃப்ரீ ரேடிக்கல் சேதங்களிலிருந்து காக்க உதவுகிறது. 

    இதய ஆரோக்கியம்

    பீட்ரூட் ரத்தத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, இதில் உள்ள பீட்டெய்ன் அமினோ அமிலமும் இரத்தத்தில் ஹோமோசைஸ்டீன் அளவைக் குறைக்க உதவுகிறது. இது உடலில் உள்ள அதிகப்படியான ஹோமோசைஸ்டீன் அளவைக் குறைப்பதன் மூலம் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. பீட்டெய்ன், ஹோமோசைஸ்டீன்-ஐ மற்ற இரசாயனங்களாக மாற்ற உதவுகிறது, இதனால் அதன் இரத்த அளவு குறைகிறது.

    பீட்ரூட் ரத்தத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், இதில் உள்ள பீட்டீன் அமினோ அமிலமும் இரத்தத்தில் ஹோமோசைஸ்டீன் அளவைக் குறைக்கிறது. உதவுகிறது. இது உடலில் உள்ள அதிகப்படியான ஹோமோசைஸ்டீன் அளவைக் குறைப்பதன் மூலம் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. பீட்டெய்ன், ஹோமோசைஸ்டீன்-ஐ மற்ற இரசாயனங்களாக மாற்ற உதவுகிறது, இதனால் அதன் இரத்த அளவு குறைகிறது. 


    பீட்ரூட் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்

    மூளை ஆரோக்கியம்

    பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட்டுகள் வயதானவர்களில் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. வயதாகும்போது இரத்த ஓட்டம் இயற்கையாகவே குறையத்தொடங்கும். நைட்ரிக் ஆக்சைடு மூளையில் ஆக்ஸிஜன் நிறைந்த இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும். இதனால் நினைவாற்றல் மற்றும் முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கிறது. 

    கல்லீரல் ஆரோக்கியம்

    கல்லீரல் இரத்தத்தை வடிகட்டுதல், நச்சு நீக்குதல், செரிமானத்திற்கு உதவுதல் மற்றும் வைட்டமின்கள் மற்றும் இரும்புச்சத்து போன்ற அத்தியாவசியப் பொருட்களைச் சேமித்தல் என உடலின் பல்வேறு முக்கிய பணிகளை செய்கிறது. பீட்ரூட்டில் உள்ள பீட்டெய்ன், கல்லீரலில் கொழுப்பு படிவதைக் குறைத்து, கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்த உதவும். கல்லீரல் தொடர்பான பிற நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.  

    ஒரு கப் பீட்ரூட்டில் உள்ள ஊட்டச்சத்துகள்

    கலோரிகள் 58, கொழுப்பு 0.231 கிராம் , சோடியம் 78 மிகி, கார்போஹைட்ரேட்டுகள் 13 கிராம், நார்ச்சத்து 3.81 கிராம், புரதம் 2.19 கிராம் உள்ளது. மேலும் பொட்டாசியம், ஃபோலேட் மற்றும் பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. பொட்டாசியம் இதயம், தசை மற்றும் நரம்பு செயல்பாட்டை ஆதரிக்கிறது. ஃபோலேட் திசு வளர்ச்சி மற்றும் இரத்த சிவப்பணு உற்பத்தியை ஆதரிக்கும் ஒரு பி வைட்டமின் ஆகும். வைட்டமின் சி தோல், எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. 

    • அன்பின் வழியது வருவது அனைத்துமே அழகானதுதான்.
    • யாரை பார்த்தால் நம் முகம் பூக்கிறதோ அவர்கள்தான் உண்மையில் அழகானவர்கள்.

    நான், என் முகம், என் சருமம் பார்ப்பதற்கு அழகாக, பொலிவாக தெரியவேண்டும் என பலரும் நினைப்போம். இதற்கு பொருட்செலவு, பணச்செலவு, நேரச்செலவு என அனைத்தையும் செய்வோம். ஆனால் எதற்கு இவ்வளவு மெனக்கெடல்கள்? பொருட்செலவு? பணச்செலவு? நம் முகத்தில் மாற்றத்தை உண்டாக்குவதுதான் உண்மையான அழகா? உண்மையில் எது அழகு? பார்ப்போம்.

    "அழகு என்பது ஒருவரின் பார்வையில்தான் உள்ளது". ஆம், நாம் பலமுறை புத்தகங்களில் அல்லது பேச்சாளர்களால் அல்லது ஏதோ ஒருவகையில் கேள்விப்பட்டிருக்கும் இந்த சொற்றொடர் உண்மையில் அழகு என்பது நாம் ஒருவரை பார்க்கும் விதத்தில்தான் உள்ளது. ஒருவரை அப்படியே அவராகவே ஏற்றுக்கொள்வதில்தான் உள்ளது. இந்த சமூகத்தில் அழகு என்றால் அளவு உள்ளது. அதாவது முகம் உட்பட உதடு, மூக்கு, உடல்வாகு என அனைத்திற்கும் ஒரு அளவு உள்ளது. அது இந்த அளவில் இருந்தால்தான் அழகு என்று கூறப்பட்டுள்ளது. மேலும் நிறமும். தமிழர்களின் நிறமே, ஏன் இந்தியர்களின் நிறமே கருப்புதான் எனக்கூறுவார்கள். ஆனால் அவர்களுக்கே வெள்ளையாக வேண்டும் என்பதுதான் ஆசை. வெள்ளையாக இருப்பதுதான் இங்கு அழகு. அழகென்றால் இப்படித்தான் இருக்கும் என ஒரு இலக்கணம் இந்த சமூகத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது. உண்மையில் இந்த இலக்கணத்தை தாண்டிய அழகு எது? இந்த கேள்வியை ஒரு  10 பொதுமக்களிடம் முன்வைத்தால், அவர்கள் அனைவரிடத்திலும் இருந்து பத்து பதில்கள் வரும். 

    ஒவ்வொரு பதிலும் ஒவ்வொன்றாக இருக்கும்போது அவர்களின் புரிதல்கள், பார்வைகள் வேறுபட்டது என்பது நமக்குத் தெரியும். ஆம், உண்மையில் அனைவரின் பார்வையும் வேறுபட்டது. எல்லோருடைய கண்களுக்கும் நாம் அழகாக தெரிவோமா என்றால் இல்லை. சமூகத்தின் அழகு இலக்கண வரையறைப்படி இருக்கும் ஒருவரை அனைவருக்கும் பிடிக்காது. அந்த இலக்கணத்தை விரும்புபவர்களுக்கு மட்டும்தான் அவர்களை பிடிக்கும். அப்போது எப்படி நம்மை பிடிக்கும்? எதனால் நம்மை பிடிக்கும்? எதுதான் அழகு?


    குழந்தைகளின் புன்னகையும் ஒரு அழகுதான்

    உலகில் படைக்கப்பட்ட அனைத்துமே அழகுதான். நான், நீங்கள், உங்களைச் சுற்றியுள்ளவர்கள், எழில் கொஞ்சும் இயற்கை வளம், தெரியாதோரின் கருணை, காரணமே இன்றி அழுத்தத்தில் சாலையில் தனியாக நடந்து செல்லும் நம் மனதை புன்னகைக்க வைக்கும் குழந்தை, என்றோ ஓர்நாள் தடவியதற்காக பார்க்கும்போதெல்லாம் வாலாட்டும் நாய்க்குட்டி, பாதையை அறிந்து பயணம் செய்யும் நமக்கு பயணத்தின்போது வழிசொல்லி "பத்திரமாக செல்" எனக்கூறும் யாரென்றே தெரியாத நரைவிழுந்த மூதாட்டி, அம்மாவின் தலையில் இருக்கும் கனகாம்பரம் என அடுக்கிக்கொண்டே போகலாம். இவையனைத்தும்தான் அழகு. ஆறுதல் தரும் அன்பை உமிழும் அனைவருமே அழகானவர்கள்தான். அவர்களின் வார்த்தைகள்தான் அழகானவை. அன்பின் வழியது வருவது அனைத்துமே அழகானதுதான்.

    யாரை பார்த்தால் நம் முகம் பூக்கிறதோ அவர்கள்தான் உண்மையில் அழகானவர்கள். பிடித்த பெண்கள் அனைவரும் ஆண்களின் கண்களுக்கு தேவதைதான். பிடித்த ஆண்கள் அனைவரும் பெண்களுக்கு இளமாறன்தான். மொத்தமாக அகமும், அகத்தின்வழி நாம் ஒருவருக்கு அளிக்கும் புன்னகையும்தான் உண்மையான அழகு. இறுதியாக, நீங்கள் அழகாக தெரியவேண்டும் என்றால் எதுவும் செய்யவேண்டாம், புன்னகையை மற்றவருக்கு பரிசளியுங்கள். 

    • பாஞ்சாலி, தனது கணவர்கள் பேச்சை கேட்டதில்லை. தனது அன்புத் தோழன் கண்ணனின் பேச்சை மட்டுமே கேட்டு நடந்தவர்.
    • சிறந்த உறவில் கணவன் தோழனாகவும் இருப்பான்.

    கணவனா? தோழனா? என்னும் நம் தலைப்பிலேயே எவ்வளவு அர்த்தங்கள், பொருட்கள் நிறைந்துள்ளன. பெரும்பாலான பெண்களிடம் உங்கள் கணவரா? தோழரா? எனக்கேட்டால், தோழரையே சொல்வார்கள். ஏன் மகாபாரத நாயகி திரௌபதியை கேட்டிருந்தால்கூட தனது தோழர் கிருஷ்ணனைத்தான் கூறியிருப்பார். " ஐந்து ஆண்களுக்கு மனைவியான பாஞ்சாலி தனது கணவர்கள் எவரின் பேச்சையும் கேட்டதில்லை, தனது அன்புத் தோழன் கண்ணனின் பேச்சை மட்டுமே கேட்கவில்லை. நடந்தவர்" என பலரும் சொல்வதே அந்த பதிலுக்கு காரணமாக இருக்கலாம். ஆனால் இந்த பதிலுக்கான உண்மையான காரணம் என்ன?

    குந்தியின் சொல்லோ, அல்லது முன்ஜென்ம வரமோ ஏதோ ஒரு காரணத்தால் திரௌபதி ஐந்து கணவர்களை ஏற்க வேண்டிய சூழல். ஏற்றாள். ஐந்து கணவர்கள் இருந்தும் அவளுக்கு ஆறுதலாக இருந்தது யார்? அவளது தோழன் கிருஷ்ணன்தானே. எப்போதெல்லாம் அவள் மனம் குழப்பத்தில் ஆழ்கிறதோ, எப்போதெல்லாம் அவள் இடரை அனுபவிக்கிறாளோ அப்போதெல்லாம் உறுதுணையாக இருந்து தோள் கொடுத்தவன் கண்ணன் ஒருவன்தானே. தனது மனைவியை சூதாட்டத்தில் வைத்து விளையாடியவர்களா? இல்லை சபையில் தனது துயில் உரியபோது துணி கொடுத்து அவள் மானத்தை காப்பாற்றியவனா? யாரைச் சொல்வாள்?

    தர்மத்தில் சிறந்தவன் யுதிர்ஷ்டன். பலத்தில் சிறந்தவன் பீமன். வில்வித்தையில் சிறந்தவன் அர்ஜுனன். திரௌபதியால் முதலில் மாலை சூட்டப்பட்ட, முதலில் நேசிக்கப்பட்ட கணவன். குதிரைகள் பற்றிய அறிவிலும், அழகிலும் சிறந்து விளங்கியவன் நகுலன். திரௌபதி துயில் உரியப்படுவது உட்பட முக்காலத்தையும் முன்னரே அறிந்தவன் சகாதேவன். இப்படி உலகில் சிறந்திருந்த இவர்களின் தர்மமோ, அறமோ, திறனோ, எதுவாலும் திரௌபதி துயில் உரியப்படுவதை தடுக்க முடியவில்லை. தடுக்கவில்லை. அத்தனை பலம் கொண்ட பீமன், வில்வித்தையில் சிறந்த அர்ஜூனன், ஞானத்திலும், வீரத்திலும், தர்மத்திலும் சிறந்திருந்த பீஷ்மர் உட்பட அரங்கில் சில தர்மர்கள் நினைத்திருந்தால், தடுத்திருந்தால் திரௌபதி அந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்கமாட்டாள். தன்னை அர்ப்பணித்த கணவன்மார்களே உதவாதபோது, கையில் சிறிது காயம் பட்டபோது தனது உடையை கிழித்து கண்ணனுக்கு கட்டியதை நினைவுகூர்ந்து, துணியை விட்டு மானம் காத்தான் கிருஷ்ணன். இதில் யார் சிறந்தவர்கள்? யார் திரௌபதி மீது உண்மையான பாசமும், அன்பும், அக்கறையும் கொண்டிருந்தவர்கள்? நட்பின் அடிப்படையில் வந்த ஒருவர் தனக்காக இவ்வளவு செய்யும்போது, காதல், திருமணப் பந்தம் மூலம் வந்த கணவர்கள் பயனற்றதாக இருந்தது ஏன்?


    திரௌபதிக்கு கண்ணன் உதவும் காட்சி

    இந்த பாண்டவர்களைப் போல பல கணவர்மார்கள் உள்ளனர். எப்போது தனது துணைக்கு தேவையோ அப்போது உதவமாட்டார்கள். சிறந்த உறவில் கணவன் தோழனாகவும் இருப்பான். அப்படி இருந்தால்தான் அந்த உறவு சிறக்கும். தோழன் கணவனாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஒரு கணவன் கண்டிப்பாக தோழனாக மாறமுடியும். பெண்களின் பதிலுக்கும் இதுதான் காரணம். தன் உணர்வுகளை மதிக்கும் ஒருவரையே பெண் தேர்ந்தெடுப்பாள். 

    ×