என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    • முட்டைகள் வறுக்கும்போது எண்ணெயில் ஒட்டிக்கொள்ளும்.
    • மசாலாப் பொருட்களின் சுவை உடனடியாக மாறும்.

    சமையலறையில் வேலை செய்யும் போது, மனதில் கொள்ள வேண்டிய பல சிறிய குறிப்புகள் உள்ளன. இவை சமையலறை வேலைகளை எளிதாக்குவது மட்டுமல்லாமல், உங்கள் உணவின் சுவையையும் அதிகரிக்கின்றன. உங்களுக்கு பல சமையலறை குறிப்புகளைப் பற்றி தெரிந்திருக்கலாம். ஆனால் இந்த சமையல் குறிப்புகள் உங்கள் சமையலை எளிதாக்கும் மற்றும் சிறந்த சுவையை அளிக்கும்.

    * முட்டைகள் வறுக்கும்போது எண்ணெயில் ஒட்டிக்கொள்ளும். எனவே நீங்கள் முட்டையை எண்ணெயில் சேர்க்கும் போதெல்லாம், முதலில் ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும், பின்னர் முட்டையைச் சேர்க்கவும். இது முட்டை வாணலியின் அடிப்பகுதியில் ஒட்டாமல் தடுக்கும்.

    * உருளைக்கிழங்கு அதிகமாக வேகாமல், கொதிக்கும் போது வெடிப்பதைத் தடுக்க விரும்பினால், உருளைக்கிழங்கை வேகவைக்கும் போது ஒரு ஸ்பூன் வினிகரைச் சேர்க்கவும்.

    * தக்காளி வதக்குவதற்கு அதிக நேரம் எடுக்கும். எனவே, தக்காளியின் சுவைக்கேற்ப உப்பு சேர்க்கவும். இது அவை வேகமாக வேகவும், வதக்கவும் உதவும்.

    * கடாயில் மசாலாப் பொருட்கள் கருகினால், உடனடியாக ஒரு ஸ்பூன் தயிர் சேர்க்கவும். அவ்வாறு செய்வதால் மசாலாப் பொருட்களின் சுவை உடனடியாக மாறும்.

    * ஒரு முட்டை புதியதா என்பதைக் கண்டுபிடிக்க, அதை தண்ணீரில் போடுங்கள். மூழ்கினால், அது புதியது. அது மிதந்தால், பழையது.

    * பக்கோடாவை மொறுமொறுப்பாக செய்ய விரும்பினால் உருண்டைகள் மிகவும் மொறுமொறுப்பாக இருக்க, சிறிது அரிசி மாவை கடலை மாவுடன் கலக்கவும். இது உருண்டைகளை இன்னும் மொறுமொறுப்பாக மாற்றும்.

    * எந்த காய்கறி போட்டு குழம்பு செய்தாலும் கெட்டியாகவில்லை என்றால், ஒரு ஸ்பூன் வறுத்த கடலை மாவைச் சேர்க்கவும். இது குழம்பு கெட்டியாக வைக்க உதவும். 

    • அதிக நேரம் அமர்ந்தே இருப்பவர்களுக்கு, இதயத் தசைகள் விறைப்பாகின்றன.
    • நாள்தோறும் உடற்பயிற்சி செய்வதும், அதிக நேரம் அமர்ந்திருப்பதைத் தவிர்ப்பதும் இதய ஆரோக்கியத்துக்கு அவசியமானது.

    நம் உடம்பு ரத்த ஓட்டத்தின் மையமாக உள்ள இதயத்தின் ஆரோக்கியத்தைப் பேணுவது அவசியம். அதற்கு சில பழக்கங்களைப் பின்பற்ற வேண்டும், ஒரு பழக்கத்தைக் கைவிட வேண்டும் என இதய சிகிச்சை நிபுணர்கள் கூறுகின்றனர்.

    இதய ஆரோக்கியத்தைக் காக்க உணவுகள் மட்டும் போதாது. நல்ல உணவுகள் உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும். ஆனால் நல்ல உடல் செயல்பாடுகளே நீண்ட ஆயுளுக்கு அடிகோலும். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த, அதிக நேரம் உட்கார்ந்து இருப்பதை தவிர்க்க வேண்டும்.

    நீண்டநேரம் படுத்த நிலையில் இருக்கும் ஒரு நபருக்கு இதயத்தில் ரத்தம் 'பம்ப்' செய்யப்படும் செயல்திறன் குறைவாகவே இருக்கும். உடற்பயிற்சி செய்பவர்களுக்கு இதய வலிமை அதிகரிக்கும். நாள் முழுக்க உடலியக்கத்துடன் இருக்க இயலாவிட்டாலும், அதிக நேரம் அமர்ந்தே இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.

    அமர்ந்த வாழ்க்கை முறை, இதய ஆரோக்கியத்துக்கு எதிரானது. அதிக நேரம் அமர்ந்தே இருப்பவர்களுக்கு, இதயத் தசைகள் விறைப்பாகின்றன. இதனால் நெகிழ்ச்சித்தன்மை குறைகிறது. நாளடைவில் இதய நோய் அபாயமும் அதிகரிக்கிறது.

    நாள்தோறும் உடற்பயிற்சி செய்வதும், அதிக நேரம் அமர்ந்திருப்பதைத் தவிர்ப்பதும் இதய ஆரோக்கியத்துக்கு அவசியமானது.

    உடற்பயிற்சி செய்வது, இதய செயல்பாட்டுக்கு நேரடியாக நன்மை செய்யக்கூடியது. இது இதய தசைகளை வலுப்படுத்துகிறது. அன்றாட ஏரோபிக் உடற்பயிற்சிகள், இதயத் தசைக்கு நெகிழ்ச்சித்தன்மை, வலிமையை அளிக்கின்றன.

    இதனால் ஆயுள் அதிகரிக்கும் வாய்ப்பு கூடுகிறது. உடல் செயல்பாடு, இதயத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

    அமர்ந்து பணிபுரிபவர்கள், ஒவ்வொரு 30 நிமிடம் அல்லது ஒரு மணிநேரத்தில் எழுந்து, 5 நிமிடங்கள் வேகமாக நடக்கலாம். இது இதய வலிமையைப் பராமரிக்க உதவும். இந்த ஒரு பழக்கத்தை பின்பற்றினாலே இதயநோய் வாய்ப்பு வெகுவாகக் குறையும்.

    ஓர் ஆய்வில், வாரத்துக்கு 4 முதல் 5 முறை தீவிர உடற்பயிற்சி செய்தவர்களின் இதயம், 20 வயதுக்குள் இருப்பவர்களின் செயல்திறனை ஒத்து இருந்தது.

    மாறாக, உடற்பயிற்சிகளே செய்யாதவர்கள் எந்த நல்ல மாற்றங்களையும் காட்டவில்லை. உடற்பயிற்சி செய்வது எந்த வயதிலும் இதயத்தைப் பராமரிக்க

    உதவும் என்பது ஆய்வில் உறுதியாகி உள்ளது.

    தீவிரமான உடற்பயிற்சிகளை செய்யத் தொடங்கும் முன் நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் போன்ற மிதமான செயல்பாடுகளை மேற்கொள்ளலாம். பின்னர் தீவிர உடற்பயிற்சிகளை செய்யலாம். ஒரு நாளில் குறைந்தபட்சம் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்தால் கூட போதும். அதேநேரம், வாரத்தில் ஒன்றிரண்டு முறை தீவிர உடற்பயிற்சியில் ஈடுபடுவது அவசியம்.

    படிக்கட்டுகளில் ஏறுதல், குறுநடை என எந்த ஓர் உடலியக்கமும் இதய ஆரோக்கியத்துக்கு நல்லது.

    முடிந்தவரை நமது வேலைகளை நாமே பார்த்துக் கொள்வதும், எப்போதும் சுறுசுறுப்பாக இயங்குவதும், இதய நோய்கள் நம்மை நெருங்காமல் தடுக்கும்.

    • சப்பாத்தி மீந்துவிட்டால் மிக்சியில் பொடித்து உடன் நெய், முந்திரி, ஏலப்பொடி சேர்த்து உருட்டி கோதுமை லட்டு செய்யலாம்.
    • சப்பாத்தி, இட்லிக்கு தொட்டுக்கொள்ள சுவையாய் இருக்கும்.

    * குட்டீசுக்கு வாங்கின பிஸ்கட்டுகள் மீந்து நமுத்துவிட்டதா?அவற்றை மிக்சியில் போட்டு பொடித்து, பால், சர்க்கரை, கிரீம், முந்திரி சேர்த்து, பிரிட்ஜில் வைத்து நல்ல ஐஸ்கிரீமாக பரிமாறலாம்.

    * காலையில் செய்த ரவை உப்புமாவுடன் கரம் மசாலா சேர்த்து, பிரெட் துண்டுகள் இடையே உப்புமாவை நிரவி, 'டோஸ்ட்' செய்து சாண்ட்விச்சாக சுவைக்கலாம்.

    * சப்பாத்தி மீந்துவிட்டால் மிக்சியில் பொடித்து உடன் நெய், முந்திரி, ஏலப்பொடி சேர்த்து உருட்டி கோதுமை லட்டு செய்யலாம்.

    * கறி வகைகள் மீதமானால் வாணலியில் சீரகம், தக்காளி, வெங்காயம் வதக்கி, உடன் மீந்த காய்கறியையும் சேர்த்து மிக்சியில் அரைத்து துவையலாக்கலாம். சப்பாத்தி, இட்லிக்கு தொட்டுக்கொள்ள சுவையாய் இருக்கும்.

    * மீந்த சப்பாத்திகளை ரிப்பன் போல் வெட்டி எண்ணெயில் பொரித்து, சிறிது காரம், உப்பு சேர்த்து ஸ்னாக்ஸ் போல் மாலை வேளையில் தரலாம்.

    • இன்றைய வேகமான வாழ்க்கையில், தூக்கமின்மை ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது.
    • இவை அனைத்தும் உங்கள் தூக்கம் போதுமான அளவு ஆழமாக இல்லை என்பதைக் குறிக்கிறது.

    தூக்கம் என்பது வெறும் ஓய்வு மட்டுமல்ல, அது உடலின் ஒரு அத்தியாவசிய செயல்முறையாகும். தூக்கத்தை ஓய்வு நேரமாக நாம் நினைக்கிறோம், ஆனால் இந்த நேரத்திலும் கூட, உடல் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். தூக்கத்தின் போது, உடல் ஆற்றலைச் சேமிக்கிறது, செல்களை சரிசெய்கிறது, மூளை நினைவுகளை ஒழுங்கமைக்கிறது. அதனால்தான் தூக்கம் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம்.

    எட்டு மணி நேரம் முழுமையாகத் தூங்கியும், சோர்வாக, தலைச்சுற்றலாக, சோம்பலாக உணர்ந்தால், அது வெறும் தூக்கமின்மை மட்டும் காரணம் இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.

    8 மணி நேரம் தூங்கிய பிறகும் ஏன் சோர்வாக இருக்கிறீர்கள்?

    இன்றைய வேகமான வாழ்க்கையில், தூக்கமின்மை ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. ஆனால் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், பலர் 8 மணிநேரம் முழுமையாக தூங்கிய பிறகும் காலையில் சோர்வாக உணர்கிறார்கள். கண்கள் திறந்தாலும், மனம் கனமாகவே இருக்கும், உடல் சோம்பலாகவே இருக்கும், நாளின் தொடக்கமே பாரமாகத் தெரிகிறது. பெரும்பாலும் மக்கள் இதை மன அழுத்தம் அல்லது வேலை அழுத்தம் என கருதுகிறார்கள். ஆனால் உண்மையான காரணம் வேறு ஒன்று. இதற்கு மிகப்பெரிய காரணம் தூக்கக் கோளாறு. இதன் பொருள் நீங்கள் இரவில் பல முறை எழுந்தாலும், அதை நீங்கள் உணரவில்லை. இதன் காரணமாக, தூக்கம் முழுமையாகத் தெரிகிறது, ஆனால் உண்மையில் அதன் தரம் மோசமாக உள்ளது.

    மோசமான தூக்கத்தின் அறிகுறிகள்

    தூக்கம் மோசமாக இருப்பதற்கான சில அறிகுறிகள் சோர்வாக எழுந்திருத்தல், பகலில் மூளை மூடுபனி, மதியம் திடீரென சக்தி குறைந்து போதல், சாதாரணமாக உணர காஃபின் தேவைப்படுதல் ஆகியவை அடங்கும். இவை அனைத்தும் உங்கள் தூக்கம் போதுமான அளவு ஆழமாக இல்லை என்பதைக் குறிக்கிறது.

    தூக்கத்தைக் கெடுக்கும் பழக்கங்கள்

    இரவு நேர காஃபின், மது, கனமான உணவு மற்றும் படுக்கையில் உங்கள் தொலைபேசியைப் பயன்படுத்துதல் ஆகியவை தூக்கத்தின் மிகப்பெரிய எதிரிகள் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். பிரகாசமான விளக்குகள் மற்றும் ஸ்க்ரோலிங் ஆகியவை மூளையை தொடர்ந்து சுறுசுறுப்பாக வைத்திருக்கின்றன, ஆழ்ந்த தூக்கத்தைத் தடுக்கின்றன.

    இரவில் தாமதமாக சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள்

    படுக்கைக்குச் செல்வதற்கு முன் ஒரு கனமான இரவு உணவு செரிமானத்தை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். இது உடல் முழுமையாக ஓய்வெடுப்பதைத் தடுக்கிறது, இதனால் அடிக்கடி தூக்கக் கோளாறுகள் ஏற்படுகின்றன. இதன் விளைவாக, காலையில் நீங்கள் சோர்வாகவும் சோம்பலாகவும் உணர்கிறீர்கள்.

    சிறந்த தூக்கத்திற்கு மருத்துவரின் ஆலோசனை

    படுக்கைக்கு 8 மணி நேரத்திற்கு முன்பு காஃபின் பயன்பாட்டைக் குறைத்தல், படுக்கைக்கு 3 மணி நேரத்திற்கு முன்பு இரவு உணவு உட்கொள்வது, மது அருந்துவதைக் கட்டுப்படுத்துதல் மற்றும் படுக்கையறையை குளிர்ச்சியாகவும் இருட்டாகவும் வைத்திருப்பது ஆகியவை அடங்கும்.

    தொலைபேசியிலிருந்து தூரம் அவசியம்.

    உங்கள் தொலைபேசியை படுக்கைக்கு எடுத்துச் செல்வது தூக்கத்தின் தரத்திற்கு மிகப்பெரிய தீங்குகளில் ஒன்றாகும். திரைகளில் இருந்து வெளிப்படும் நீல ஒளி தூக்கத்திற்கு அவசியமான மெலடோனின் என்ற ஹார்மோனை அடக்குகிறது.

    மருத்துவரை எப்போது பார்க்க வேண்டும்?

    நல்ல பழக்கவழக்கங்கள் இருந்தபோதிலும் சோர்வு தொடர்ந்தால், அது தூக்கத்தில் மூச்சுத்திணறல், ஓய்வற்ற கால் நோய்க்குறி, மன அழுத்தம், மருந்துகள் அல்லது இரும்புச்சத்து குறைபாடு காரணமாக இருக்கலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், மேலும் குறிப்பிட்ட தகவலுக்கு நீங்கள் மருத்துவரை அணுகலாம்.

    • இத்தாலிய வார்த்தையான புரோக்கோலோவில் இருந்து இதற்கு பெயர் சூட்டப்பட்டது.
    • புரோக்கோலி தசை வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.

    பூங்கொத்து வடிவில் காட்சியளிக்கும் புரோக்கோலி மத்திய தரைக்கடல் பகுதியில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியதாக அறியப்படுகிறது.

    இத்தாலிய வார்த்தையான புரோக்கோலோவில் இருந்து இதற்கு பெயர் சூட்டப்பட்டது. தோற்றத்தில் காலிபிளவரை ஒத்திருக்கும். பூவாக மலரும் பகுதி பச்சை நிறத்தில் காட்சியளிக்கும். புரோக்கோலி குளிர் தட்பவெப்பநிலையில் வளரக்கூடியது. அதனால் கோடை காலத்தில் வளராது. இதை அன்றாட உணவில் சேர்த்து கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எலும்புகள் வலுப்பெறும். தசை வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.

    புற்றுநோய் ஆபத்தையும் குறைக்கும். இதில் வைட்டமின்கள் சி. கே. பி9 மற்றும் புரதம், கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம் என எண்ணற்ற ஊட்டச்சத்துகள் காணப்படுகிறது. இதில் பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி இதய நோய்கள் வராமல் தடுக்கும்.

    • தினமும் புஷ்-அப் செய்வது உடலை நேராக வைத்திருக்க உதவும், முதுகெலும்பு சார்ந்த தசைகளை செயல்படுத்தும்.
    • தண்டாலானது வயிறு மற்றும் முதுகெலும்பு தசைகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும்.

    தண்டால் அல்லது 'புஷ்-அப்' என்பது எந்தவித உபகரணங்களும் இல்லாமல் செய்யக்கூடிய மிக எளிய உடற்பயிற்சி. கைகள், மார்பு பகுதிக்கு வேலை கொடுக்கும் இந்த உடற்பயிற்சியை தினமும் சரியான முறையில் செய்து வந்தால் கைகள், கால்கள், தொடை, இடுப்பு என ஒட்டுமொத்த உடல் தசைகளும் வலுப்பெறும். தினமும் தண்டால் எடுப்பதால் தசைகள் வலுவடைவது மட்டுமின்றி வேறு பல ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கும். அவை குறித்து...

    எடை இழப்பு:

    தினமும் புஷ்-அப் செய்தால் இதயத் துடிப்பு அதிகரிக்கும், வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தும், உடலில் இருக்கும் கொழுப்பு குறையத் தொடங்கும். இந்த உடற்பயிற்சியை குறைந்த நேரத்தில் செய்தாலும் அதிக கொழுப்பை எரிக்க உதவும். எனவே எடை இழப்புக்கு இது ஒரு சிறந்த பயிற்சியாகும்.

    ஆற்றல் அதிகரிப்பு:

    நாளின் தொடக்கத்தை உற்சாகமான உடற்பயிற்சியுடன் தொடங்கினால் எண்டோர்பின், டோபமைன் போன்ற நல்ல ஹார்மோன்கள் வெளியிடப்படும். இதனால் நாள் முழுவதும் மனஅழுத்தம் இல்லாமல் மனநிலை நன்றாக இருக்கும்.

    தோரணை மேம்பாடு:

    தினமும் புஷ்-அப் செய்வது உடலை நேராக வைத்திருக்க உதவும், முதுகெலும்பு சார்ந்த தசைகளை செயல்படுத்தும். மேலும், உட்காரும், நடக்கும் நிலை மேம்படும். கணினி முன் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு இந்தப் பயிற்சி மிகவும் நன்மை பயக்கும்.

    முதுகு தசைகளுக்கு பலம்:

    தண்டாலானது வயிறு மற்றும் முதுகெலும்பு தசைகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும். இதனால் முதுகுத் தசைகள் பலப்பட்டு, முதுகு வலி குறையும்.

    தோள்பட்டை, மார்பு பகுதியில் வலிமை:

    தினமும் புஷ்-அப் செய்து வந்தால் உங்களது தோள்பட்டை மற்றும் மார்பு தசைகள் வலுப்படும். வலுவான தோள்கள் மற்றும் மார்பு, மேல் உடலை சமநிலையில் வைத்திருப்பது மட்டுமல்லாமல், காயங்கள் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கும்.

    இதயம், நுரையீரலுக்கு நன்மை:

    ஏரோபிக் மற்றும் வலிமை பயிற்சி இவை இரண்டின் கலவைதான் புஷ்-அப். எனவே தினமும் புஷ்-அப் செய்து வந்தால் இதயம் நன்றாக செயல்படுவதோடு, நுரையீரல் திறனும் அதிகரிக்கும்.

    எலும்புகளின் ஆரோக்கியம்:

    தண்டால், எலும்புகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்புச் சிதைவு அபாயத்தைக் குறைக்கப் பெரிதும் உதவுகிறது. எனவே எலும்புகள் வலுவாக, எலும்புத் தாது அடர்த்தி அதிகரிக்க தினமும் புஷ்-அப் செய்யலாம்.

    புஷ்-அப் செய்யும்போது ஏதேனும் வலி அல்லது அசவுகரியம் ஏற்பட்டால் உடனே பயிற்சியை நிறுத்திவிட்டு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

    • தினமும் தயிர் அல்லது மோரை உணவில் சேர்த்துவர வேண்டும்.
    • தினமும் தவறாமல் உட்கொண்டு வந்தால், சர்க்கரை நோயின் அபாயமும் குறையும் என்று தெரிவிக்கப்படுகிறது.

    வயதாவது, எவருக்குமே கவலையை ஏற்படுத்தும் விஷயம்தான். அதிலும் பெண்கள், வயது கூடுவதை வெறுப்பார்கள்...

    ஆனால், 50 வயது ஆனாலும், பெண்கள் சில உணவுப்பொருட்களை உட்கொண்டு வருவதன் மூலம், அழகு மாறாமல் திகழலாம், வயதான தோற்றத்தைத் தவிர்க்கலாம் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

    அந்த உணவுகள் விவரம்...

    பழங்கள்

    தினமும் ஏதாவது இரண்டு பழங்களை சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இப்படி உட்கொள்ளும்போது அது நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்குவதோடு, சருமத்தின் ஆரோக்கியத்துக்கும் நன்மை பயக்கிறது. அதுவும் பப்பாளி, ஆப்பிள், கொய்யா, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களில் சரும செல்களின் ஆரோக்கியத்துக்குத் தேவையான வைட்டமின்களும், சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடென்டுகளும் அதிகம் உள்ளன. எனவே நீண்ட காலம் இளமையாக, அழகாக இருக்க விரும்பும் பெண்கள், எந்தப் பழம் பிடிக்குமோ அதை தவறாமல் சாப்பிடுங்கள்.

    கீரைகள்

    பசலைக்கீரை, முருங்கைக்கீரை போன்ற கீரைகளில் இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் நார்ச்சத்து போன்றவை அதிகமாக உள்ளன. இந்த கீரைகளை உணவில் அதிகம் சேர்க்கும் போது, அவை எலும்புகளை வலிமையாக வைத்துக்கொள்வதோடு உடலில் ஆற்றலும் நிலையாக இருக்கும். முக்கியமாக கீரைகளை அதிகம் உணவில் சேர்க்கும்போது, சருமத்தின் ஆரோக்கியமும் அழகும் மேம்படும்.

    கொட்டைப்பருப்புகள், விதைகள்

    பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற கொட்டைப்பருப்புகள், பூசணி, ஆளி விதைகள் போன்றவற்றில் ஆரோக்கியமான கொழுப்புகளும் புரதங்களும் அதிகம் உள்ளன. இவற்றை தினமும் உட்கொள்ளும் போது, இவை இதயத்தை வலிமையாக வைத்துக்கொள்வதோடு, சருமத்தை பொலிவாகவும் இருக்கச் செய்யும்.

    தயிர் அல்லது மோர்

    தயிர் அல்லது மோரில் புரோபயாடிக்குகள் அதிகம் உள்ளன. இவை செரிமானத்தை எளிமையாக்கும், குடல் ஆரோக்கியத்தைக் காக்கும் என்பது நிபுணர்கள் கருத்து. உடலில் செரிமான மண்டலம் சிறப்பாக செயல்பட்டு வந்தாலே, பாதி சரும பிரச்சனைகள் தீர்ந்துவிடும். எனவே தினமும் தயிர் அல்லது மோரை உணவில் சேர்த்துவர வேண்டும்.

    சிறுதானியங்கள், முழுத் தானியங்கள்

    தினசரி உணவில் சிறுதானியங்கள் மற்றும் முழுத் தானியங்களை சேர்த்து வந்தால், அவை உடலில் இன்சுலினை சீராக வைத்துக்கொள்ள உதவும். நீண்ட நேரம் உடலில் ஆற்றல் நிலைத்திருக்கும். அதுவும் இவற்றை தினமும் தவறாமல் உட்கொண்டு வந்தால், சர்க்கரை நோயின் அபாயமும் குறையும் என்று தெரிவிக்கப்படுகிறது.

    ஆகவே, பெண்கள் வயது கூடிக் கொண்டே செல்லும்போதும் இளமையாகவும், பொலிவான சருமத்துடன் அழகாகவும் தோன்ற வேண்டும் என்றால், மேலே தெரிவிக்கப்பட்டுள்ள 5 உணவுகளை அன்றாடம் உட்கொள்வது நல்லது.

    • உடல் உழைப்பு இல்லாததால் உண்ணும் உணவானது உடலில் கசடுகளாகத் தங்கி துன்பம் விளைவிக்கும்.
    • அரை வயிற்றுக்குச் சாப்பிட்டு கால் வயிற்றுக்கு நீர் குடித்தாலே சரியானது.

    உடல் உழைப்பின்றி இருக்கையில் அமர்ந்து பகல் முழுவதும் வேலை பார்ப்பவர்கள் உணவைக் குறைக்க வேண்டும்.

    உடல் உழைப்பு இல்லாததால் உண்ணும் உணவானது உடலில் கசடுகளாகத் தங்கி துன்பம் விளைவிக்கும். அதனால் நாள் முழுதும் அமர்ந்து வேலை செய்பவர்கள் எளிதில் செரிக்கக் கூடிய காய்கறிகள், பழங்கள் மற்றும் ஒரு கப் அளவான சாதம் எடுத்துக் கொண்டு அரை வயிற்றுக்குச் சாப்பிட்டு கால் வயிற்றுக்கு நீர் குடித்தாலே சரியானது.

    இது மேலும் இவர்கள் கொழுப்பு சார்ந்த எண்ணெய் பொருட்கள், பால், தயிர், வெண்ணெய், நெய், தேங்காய் போன்றவற்றில் தயாரான உணவுப் பொருட்களைக் குறைத்தால் வீணாக உடலில் கூடும் கொழுப்புகளைக் குறைத்து ஆரோக்கியமாக வாழலாம்.

    • வெங்காயத்தில் அதிக ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும், அவற்றை இரவில் சாப்பிடுவது நல்லதல்ல.
    • இரவில் நீங்கள் பருகும் ஒரு கப் காபி மற்றும் டீயின் விளைவு 8 முதல் 14 மணி நேரம் வரை நீடிக்கலாம்.

    இரவு நேரத்தில் மிக எளிதில் ஜீரணிக்கும் உணவைச் சாப்பிட்டால்தான் நமது ஜீரண உறுப்புக்கள் ஆரோக்கியமாகச் செயல்பட்டு அஜீரணக்கோளாறு, அசிடிட்டி, மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து நம்மைக் காக்கும்.

    பகல் நேரத்தில் நாம் எப்படிச் சாப்பிட்டாலும் நாம் செய்யும் வேலைக்கு அவை ஜீரணித்துவிடும். ஆனால், இரவு நேரத்தில் நாம் சாப்பிடும் உணவுகள் ஜீரணிக்க நீண்ட நேரம் எடுக்கும்.

    இரவில் சாப்பிடக்கூடாத சில உணவுகள் இருக்கின்றன. கீரை, நெல்லிக்காய், கட்டித்தயிர், கஞ்சி, பாகற்காய், இஞ்சி ஆகியவற்றை இரவில் தவிர்த்து விடுவது நல்லது. அதையும் மீறி சாப்பிட்டால், அந்த வீட்டில் மகாலட்சுமி தாயார் வாசம் செய்ய மாட்டார், செல்வம் தங்காது என்பது ஐதீகம். இரவில் பால் சோறு சாப்பிடலாம். இதனால் செல்வம் பெருகும்.

    தக்காளியில் அசிடிட்டியை ஏற்படுத்தக்கூடிய அமிலங்கள் அதிகமாக இருப்பதால், இவற்றை இரவில் தவிர்ப்பது நல்லது. நடு ராத்திரியில் ஐஸ்கிரீம் உட்கொள்வது மன அழுத்த ஹார்மோன்களை அதிகரிக்கும். இதனால், இரவில் தூங்குவதற்கு சிரமம் ஏற்படும்.

    கிரீன் டீயில் காபி மற்றும் டீயை விட அதிக அமிலம் உள்ளது. இதை, இரவில் குடிக்கும் போது அதிக இதயத் துடிப்பு, பதட்டம் மற்றும் கவலை ஆகியவை ஏற்படலாம். எனவே, கிரீன் டீயை பகல் நேரத்தில் குடிப்பது நல்லது. ஆரஞ்சு மற்றும் திராட்சைப்பழம் போன்ற சிட்ரஸ் நிறைந்த பழங்கள் நெஞ்செரிச்சலை அதிகரிக்கும். எனவே, இரவு நேரத்தில் சிட்ரஸ் நிறைந்த பழங்களை தவிர்ப்பது நல்லது.

    வெங்காயத்தில் அதிக ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும், அவற்றை இரவில் சாப்பிடுவது நல்லதல்ல. இரவு நேரத்தில் வெங்காயம் சேர்த்த சாலட் சாப்பிடுவதால் வயிற்றில் வாயு உருவாகும். இதனால், உங்கள் தொண்டை பகுதியில் ரிப்ளக்ஸ் அமிலம் சுரக்கப்படும்.

    இரவில் நீங்கள் பருகும் ஒரு கப் காபி மற்றும் டீயின் விளைவு 8 முதல் 14 மணி நேரம் வரை நீடிக்கலாம். அதுமட்டும் அல்ல, இது உங்கள் தூக்கத்தை கட்டுப்படுத்தும். எனவே, இவற்றை காலையில் பருகுவது நல்லது. காரமான பொருட்களை சாப்பிடுவது நெஞ்சு எரிச்சலை ஏற்படுத்தும். அல்லது அஜீரண கோளாறுகளை ஏற்படுத்தும். இதனால், தூக்கம் பாதிக்கப்படும். அதேபோல, கொழுப்பு சத்துக்கள் நிறைந்த பீட்சா, பர்க்கர், எண்ணெயில் பொறிக்கப்பட்ட ஸ்னாக்ஸ்கள் ஆகியவற்றை சாப்பிடக்கூடாது. இந்த உணவுகள் அசவுகரியத்தை ஏற்படுத்துவதோடு, நெஞ்சு எரிச்சல், வயிற்று வலியை ஏற்படுத்தக்கூடும். 

    • தினமும் குறைவாக தூங்குவோருக்கு உடல் பருமன் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
    • நினைவாற்றல் குறைபாடு, முடிவெடுக்கும் திறன் குறைவு, கவனச் சிதறல் போன்றவையும் குறைந்த தூக்கத்தால் ஏற்படுகின்றன.

    தூக்கத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி புதிதாக ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் அதை அறிந்தும் அறியாமலும் இன்று பலர் தூக்கத்தைத் தொலைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.

    இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பலரும் அலுவலக வேலை அல்லது செல்போன் மோகம் காரணமாக இரவு நீண்ட நேரம் கண் விழித்து இருக்கிறார்கள். ஆறு மணி நேரம் அல்லது அதற்கும் குறைவாக தூங்குவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

    ஆனால், ஒருவர் இரவு சரியாக தூங்கவில்லை என்றால் அவரது ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும். தினமும் இரவு 6 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்கினால் உடலில் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை பார்க்கலாம்...

    * தினமும் 6 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு இரண்டாம் வகை நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் இரட்டிப்பாகும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    * தினமும் குறைவாக தூங்குவோருக்கு உடல் பருமன் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

    * ஒருவர் 6 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்கினால், பசியைத் தூண்டும் ஹார்மோன் அதிகரிக்கும். அதிகப்படியான பசி காரணமாக கண்ட நேரத்தில் தேவையற்ற உணவுகளை சாப்பிட நேரலாம். இதனால் உடலில் கொழுப்பு சேரும்.

    * ஆறு மணி நேரத்துக்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு, 7-8 மணி நேரம் தூங்குபவர்களை விட ரத்தக்குழாயில் அதிக கொழுப்பு படிவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

    * நீங்கள் 7 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்குகிறீர்கள் என்றால் மனஅழுத்தம், உயர் ரத்த அழுத்தம், ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

    * ஆறு மணி நேரம் அல்லது அதற்கு குறைவாக தூங்கி வந்தால், மூளையில் நச்சுக்கள் குவியும். பிறகு எதிர்காலத்தில் அறிவாற்றல் குறைபாடு அல்லது மறதி நோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டிருக்கிறது.

    * நினைவாற்றல் குறைபாடு, முடிவெடுக்கும் திறன் குறைவு, கவனச் சிதறல் போன்றவையும் குறைந்த தூக்கத்தால் ஏற்படுகின்றன.

    * தொடர்ந்து இரவு சரியாக தூங்காதவர்கள், மனச்சோர்வு, கவலை, எதிர்மறையான உணர்வுகள், பயம், அதிக கோபம், மனஅழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்படக்கூடும்.

    * தூக்கம் வரவில்லை என்று தூக்கமாத்திரை எடுத்துக்கொள்பவர்களுக்கு பின்னாளில் ஞாபக சக்தி குறைவு ஏற்படலாம்.

    * குறைவாக தூங்குபவர்கள் எதற்கு எடுத்தாலும் கோபப்படுவார்கள்.

    * தினமும் போதிய அளவு தூங்கவில்லை என்றால், உடல் பருமன், இதய நோய், பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.

    * நல்ல தூக்கத்தைப் பெற ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 7-8 மணி நேரம் தூங்க வேண்டும் என்று கூறும் நிபுணர்கள், தினமும் ஒரே நேரத்தில் தூங்குதல், ஆரோக்கியமான உணவு சாப்பிடுதல், உடற்பயிற்சி செய்தல் போன்றவற்றின் மூலம் நல்ல தூக்கத்தைப் பெறலாம் என்று ஆலோசனை தெரிவிக்கின்றனர்.

    • கால்களுக்கு வலிமையையும், உடலுக்கு சக்தியையும் அளிக்கும்.
    • மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் நடைப்பயிற்சியை தேர்வு செய்வது நல்லது.

    இன்றைய காலகட்டத்தில் உடற்பயிற்சி செய்வதற்கு நேரம் ஒதுக்குபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. உடலில் சேரும் கொழுப்பை குறைக்கவும், கூடுதல் கலோரிகளை எரிக்கவும் எளிய பயிற்சியை நாடுபவர்களுக்கு நடப்பதும், படிக்கட்டுகளில் ஏறுவதும் பயனுள்ளதாக இருக்கும். அதில் கொழுப்பை குறைப்பதற்கு எது அதிக பலன் தரும் என்று பார்ப்பாமோ?

    நடப்பது

    எளிய உடற்பயிற்சியாக விளங்கும் நடைப்பயிற்சி உடலிலுள்ள கொழுப்பை குறைக்க உதவும். அதிலும் வேகமாக நடப்பது இதயத்துடிப்பை அதிகரிக்க செய்து அதிக கலோரிகளை எரிக்க துணைபுரியும்.

    உடலில் வளர்சிதை மாற்றத்தை சமநிலைப்படுத்தி, மன அழுத்தத்தை குறைக்கும். இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

    எந்த வயதினரும் எளிதாக, பாதுகாப்பாக செய்யக்கூடிய பயிற்சியாக நடைப்பயிற்சி அமைந்திருக்கிறது.

    படிக்கட்டுகளில் ஏறுவது

    நடப்பதுடன் ஒப்பிடும்போது படிக்கட்டுகளில் ஏறுவது சற்று கடினமாக இருந்தாலும் இடுப்பு பகுதி, கால் தசைகள் மற்றும் உடலின் மைய தசை பகுதிகளுக்கு அழுத்தம் கொடுத்து அதிக கலோரிகளை எரிக்க உதவும். அதனால் வேகமாக கொழுப்பை குறைக்க முடியும். கால்களுக்கு வலிமையையும், உடலுக்கு சக்தியையும் அளிக்கும்.

    எது அதிக கலோரிகளை எரிக்கும்?

    படிக்கட்டுகளில் ஏறுவதற்கு அதிக சக்தி தேவைப்படுவதால் அதிக கலோரிகளை எரிக்கச்செய்யும். நடைப்பயிற்சி செய்வது கலோரிகளை மெதுவாக எரிக்க உதவிடும் என்றாலும் அதிக சோர்வு இல்லாமல் நீண்ட நேரம் செய்ய முடியும். அதற்கேற்ப கலோரிகளும் எரிக்கப்பட்டு விடும். மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் நடைப்பயிற்சியை தேர்வு செய்வது நல்லது. ஏனெனில் இது கால்களுக்கு அழுத்தம் தராது.

    எந்த உடல்நல பிரச்சனையுமின்றி இருப்பவர்கள், வேகமாக கொழுப்பை குறைக்க விரும்புபவர்கள் படிக்கட்டுகளில் ஏறும் வழக்கத்தை பயிற்சியாக மேற்கொள்ளலாம். எனினும் ஒவ்வொருவரின் உடல்நிலை, கொழுப்பை குறைக்கும் இலக்கு, வயது மற்றும் ஆரோக்கிய நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு எந்த பயிற்சியை மேற்கொள்வது என உடற்பயிற்சி நிபுணருடன் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்க வேண்டும்.

    • மற்ற பாத்திரங்களை போல் அதிகம் பராமரிக்க வேண்டியதில்லை.
    • குளிர்ச்சி மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளை கொண்டது வெள்ளி.

    உடல் நலனை பேணுவதற்கு தண்ணீர் குடிப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு எதில் பருகுகிறோம் என்பதும் முக்கியமானது. ஏனெனில் உலோக பாத்திரங்கள் தண்ணீரை சேமித்து மட்டும் வைப்பதில்லை. சில உலோகங்கள் தண்ணீரின் பி.எச். அளவை மாற்றும், தாதுக்களை கண்காணிக்கும், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர் கிருமிகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் என்பதை நவீன அறிவியலும் ஓரளவுக்கு ஆதரிக்க தொடங்கி இருக்கிறது. அதனால் தண்ணீரை சேமிக்க, குடிக்க பயன்படுத்தும் பாத்திர தேர்வுக்கும் முக்கியத்துவம் கொடுப்பது நல்லது. அது பற்றி பார்ப்போம்.

    கண்ணாடி:

    கண்ணாடி டம்ளரில் தண்ணீர் பருகுவதும் சிறப்பானது. தண்ணீரின் சுவையை தக்கவைத்து ருசிக்க வைக்கும்.

    துருப்பிடிக்காத எக்கு:

    'ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்' எனப்படும் துருப்பிடிக்காத எக்கு பாத்திரங்கள்தான் பெரும்பாலான வீடுகளின் சமையலறையை ஆக்கிரமித்திருக்கிறது. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கொண்டு தயாரிக்கப்படும் டம்ளரிலேயே பலரும் தண்ணீர் பருகுகிறார்கள். இது துருப்பிடிக்காதது, எதிர்வினை புரியாது.

    மற்ற பாத்திரங்களை போல் அதிகம் பராமரிக்க வேண்டியதில்லை.

    எதை தேர்வு செய்வது?

    அன்றாட பயன்பாட்டுக்கு துருப்பிடிக்காத எக்கு பாத்திரங்கள்தான் சவுகரியமானது, பாதுகாப்பானதும் கூட. செம்பு மற்றும் பித்தளை பாத்திரங்களை அவ்வப்போது பயன்படுத்திக்கொள்ளலாம். அவைகளை சரியாக சுத்தம் செய்திருந்தால் மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும். கோடை காலங்களின்போது வெள்ளி அல்லது களிமண் பாத்திரங்களை உபயோகிக்கலாம்.

    பித்தளை:

    செம்பு மற்றும் துத்தநாக கலவையில் தயாரான உலோகம், பித்தளை. இதில் இருக்கும் துத்தநாகம் உடலில் இருக்கும் செல்களை பழுதுபார்க்கும் பணியை மேற்கொள்ளும். வளர்சிதை மாற்றத்தை வலுப்படுத்தும். கூந்தல் முடி, சருமத்துக்கும் நன்மை தரும். குறிப்பாக மெதுவான வளர்சிதை மாற்றம், மந்தமான சருமம் கொண்டவர்களுக்கு பித்தளை சிறந்த தேர்வாக அமையும். அதேவேளையில் எலுமிச்சை சாறையோ, அமிலத்தன்மை கொண்ட பானங்களையோ அதில் ஊற்றக்கூடாது. ஏனெனில் அமிலம் பித்தளையுடன் வினைபுரிந்து உடலுக்கு கேடு விளைவிக்கும்.

    களிமண்:

    இயற்கையாகவே தண்ணீரை குளிர்ச்சியாக வைத்திருக்கும் தன்மை களிமண் பாத்திரங்களுக்கு உண்டு. உடலில் அமில காரத்தன்மையை சமநிலைப்படுத்தும். பி.எச். அளவை சீராக பராமரிக்க உதவும். களிமண் பாத்திரத்தில் சேமிக்கப்படும் நீரில் மெக்னீசியம், கால்சியம் உள்ளிட்ட தாதுக்களின் பங்களிப்பும் கூடும். நவீன கண்ணாடி, பிளாஸ்டிக் பாட்டில்களால் கொடுக்க முடியாத நறுமணத்தை களிமண் பாத்திரத்தில் ஊற்றப்படும் நீர் அளிக்கும். களிமண் பாத்திரத்தை கவனமாக கையாளாவிட்டால் உடைந்து போய்விடும் என்பது மட்டுமே இதன் பாதகமான அம்சமாகும்.

    வெள்ளி:

    குளிர்ச்சி மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளை கொண்டது வெள்ளி. பல நூற்றாண்டுகளாக இதன் பயன்பாடு தொடர்ந்து கொண்டிருக்கிறது. வெள்ளி அயனிகள் பாக்டீரியா வளர்ச்சியை தடுக்கக்கூடியது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் துணை புரியும். வெள்ளி டம்ளரில் நீர் ஊற்றி வைப்பது குளிர்ச்சியையும், புத் துணர்ச்சியையும் உணர வைக்கும்.

    பழங்காலத்தில் பச்சிளம் குழந்தைகள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு வெள்ளி பாத்திரங்களை பயன்படுத்தும் வழக்கம் இருந்தது.

    செம்பு:

    சுத்திகரிப்பு பணியை செவ்வனே செய்யும் தன்மை செம்புக்கு உண்டு. இதனை ஆய்வுகளும் உறுதிபடுத்தியுள்ளன. ஒரு செம்பு பாத்திரத்திலோ, செம்பு டம்ளரிலோ தண்ணீரை சில மணி நேரம் ஊற்றி வைத்தால் அதனுடன் செம்பு அயனிகள் கலந்துவிடும். இந்த செயல்முறை 'ஒலிகோ டைனமிக் விளைவு' என்று அழைக்கப்படுகிறது. தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாவை இயற்கையாகவே அழிக்க செம்பு உதவும்.

    செம்பு டம்ளரில் உள்ள தண்ணீரை குடிப்பது செரிமானத்தை ஊக்குவிக்கும். தைராய்டு செயல்பாட்டை சமநிலைப்படுத்தும். கல்லீரலில் சேரும் நச்சுக்களை நீக்கும். மெலனின் உற்பத்தியை ஒழுங்குபடுத்தவும், சருமத்தை மேம்படுத்தவும், முன்கூட்டியே முடி நரைப்பதை தடுக்கவும் உதவும் என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

    ×