search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேக்ஸ்வெல்"

    • பாகிஸ்தான் அணிக்கெதிரான தொடரில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து அணி வீரர்கள் ஐபிஎல் தொடரிலிருந்து விலகி தயாகம் திரும்பினர்.
    • ஆர்சிபி அணியில் இடம் பிடித்துள்ள வில் ஜேக்ஸ், ரீஸ் டாப்லி உள்ளிட்ட வீரர்கள் நாடு திரும்பி உள்ளனர்.

    ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரானது ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும். இத்தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கவுள்ளது. இதன்காரணமாக ஒவ்வொரு அணியும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

    அந்தவகையில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி இத்தொடருக்கு முன்னதாக பாகிஸ்தானுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடருக்கான ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இங்கிலாந்து அணியின் முக்கிய வீரர்கள் அனைவரும் இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருந்தனர்.

    இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கெதிரான தொடரில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து அணி வீரர்கள் ஐபிஎல் தொடரிலிருந்து விலகி தயாகம் திரும்பினர். அந்தவகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரரான இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தாயகம் திரும்பியுள்ளார்.

    அதேபோல் ஆர்சிபி அணியில் இடம் பிடித்துள்ள வில் ஜேக்ஸ், ரீஸ் டாப்லி உள்ளிட்ட வீரர்கள் நாடு திரும்பி உள்ளனர். ஆர்சிபி அணியின் இருந்து வில் ஜேக்ஸ் வெளியேறியது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவருக்கு பதிலாக மேக்ஸ்வெல் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இவர்களை தவிர ஜானி பேர்ஸ்டோவ், பில் சால்ட், மொயீன் அலி, சாம் கரண் ஆகியோரும் தயாகம் திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு போன்ற அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் உள்ள நிலையில் அணியின் முக்கிய வீரர்கள் விலகியுள்ளது அந்த அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.

    • டெல்லிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு வீரர் தினேஷ் கார்த்திக் டக் அவுட் ஆனார்.
    • தினேஷ் கார்த்திக் இதுவரை 18 முறை டக் அவுட் ஆகியுள்ளார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று (மே 12) நடைபெறும் இரண்டாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.

    இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 9 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்களை குவித்தது. இப்போட்டியில் பெங்களூரு வீரர் தினேஷ் கார்த்திக் டக் அவுட் ஆனார்.

    இதன் மூலம், ஐபிஎல் தொடர்களில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர்களின் பட்டியலில் தினேஷ் கார்த்திக் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். அவர் இதுவரை 18 முறை டக் அவுட் ஆகியுள்ளார்.

    ஐபிஎல் தொடரில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர்களில் ரோகித் சர்மாவும் மேக்ஸ்வெல்லும் 2-ம் இடத்தில் உள்ளனர். இவர்கள் இருவரும் 17 முறை டக் அவுட் ஆகியுள்ளார். இவர்களுக்கு அடுத்த இடத்தில் பியூஸ் சாவ்லா (15 முறை) உள்ளார்.

    • இதுவரை 57 லீக் ஆட்டங்கள் முடிவடைந்துவிட்டன.
    • இனி வரும் ஒவ்வொரு ஆட்டமும் முக்கியமானதாகும்.

    தர்மசாலா:

    17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகங்களில் நடந்து வருகிறது. இதில் 10 அணிகள் பங்கேற்றுள்ளன.

    ஒவ்வொரு அணியும், குறிப்பிட்ட 5 அணிக்கு எதிராக 2 முறையும், 4 அணிக்கு எதிராக ஒரு முறையும் என மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

    இதுவரை 57 லீக் ஆட்டங்கள் முடிவடைந்து இருக்கின்றன. இன்னும் 13 ஆட்டங்களே மீதமுள்ளன. இருப்பினும் அதிகாரபூர்வமாக எந்தவொரு அணியும் அடுத்த சுற்றுக்கு முன்னேறவில்லை. கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகள் அடுத்த சுற்றை நெருங்கி விட்டன.

    அடுத்த சுற்று வாய்ப்புக்கு அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இனி வரும் ஒவ்வொரு ஆட்டமும் முக்கியமானதாகும்.

    இந்த நிலையில், இன்று (வியாழக்கிழமை) தர்மசாலாவில் உள்ள இமாசலபிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெறும் 58-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    பஞ்சாப் அணி

    பஞ்சாப் கணிக்க முடியாத அணியாக விளங்குகிறது. அந்த அணி இதுவரை 11 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 7 தோல்வியுடன் 8 புள்ளி பெற்றுள்ளது. கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 262 ரன் இலக்கை விரட்டிபிடித்து புதிய சரித்திரம் படைத்த பஞ்சாப் அணி தர்மசாலாவில் அரங்கேறிய கடந்த லீக் ஆட்டத்தில் 28 ரன் வித்தியாசத்தில் சென்னையிடம் பணிந்தது.

    தனது எஞ்சிய 3 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற நெருக்கடியில் இருக்கும் அந்த அணிக்கு இன்றைய ஆட்டம் வாழ்வா-சாவா போன்றதாகும். இதில் தோற்றால் அந்த அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு அம்பேல் ஆகி விடும்.

    பஞ்சாப் அணியில் பேட்டிங்கில் ஷசாங் சிங் (315 ரன்), பேர்ஸ்டோ, பிரப்சிம்ரன் சிங், அஷூதோஷ் ஷர்மா நல்ல நிலையில் உள்ளனர்.

    பந்து வீச்சில் ஹர்ஷல் பட்டேல், அர்ஷ்தீப் சிங், சாம் கர்ரன், ரபடா, ராகுல் சாஹர், ஹர்பிரீத் பிரார் ஆகியோர் வலுசேர்க்கிறார்கள்.

    தோள்பட்டை காயம் காரணமாக கடந்த 6 ஆட்டங்களை தவற விட்ட கேப்டன் ஷிகர் தவான் இன்னும் முழு உடல் தகுதியை எட்டாததால் இந்த ஆட்டத்திலும் ஆடமாட்டார்.

    தங்களது உள்ளூர் மைதானங்களான முல்லாப்பூரில் 5 ஆட்டங்களில் ஆடி ஒரு வெற்றி, 4 தோல்வியும், தர்மசாலாவில் ஒன்றில் ஆடி அதில் தோல்வியும் கண்டுள்ள பஞ்சாப் அணி சொந்த மைதானத்தில் தங்களது பரிதாப நிலையை மாற்ற முனைப்பு காட்டும் என்பதில் சந்தேகமில்லை.

    பெங்களூர் அணி

    இதேபோல் பெங்களூரு அணியும் 11 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 7 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று அடுத்த சுற்று வாய்ப்பில் நூலிழையில் தொங்கி கொண்டிருக்கிறது. எஞ்சிய 3 ஆட்டங்களிலும் வென்றால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பில் தொடர முடியும் என்ற நிலையில் உள்ள அந்த அணிக்கு இந்த ஆட்டம் தலைவிதியை முடிவு செய்யக்கூடியது எனலாம்.

    முதல் 8 ஆட்டங்களில் 7-ல் தோல்வி கண்டு பெருத்த சரிவை சந்தித்த பெங்களூரு அணி கடந்த 3 ஆட்டங்களில் வரிசையாக ஐதராபாத் மற்றும் குஜராத்தை 2 முறை அடுத்தடுத்து வீழ்த்திய உற்சாகத்துடனும், எழுச்சியுடனும் இந்த ஆட்டத்தில் களம் இறங்குகிறது.

    பெங்களூரு அணியில் பேட்டிங்கில் விராட்கோலி (ஒரு சதம், 4 அரைசதம் உள்பட 542 ரன்கள்), கேப்டன் டுபிளிஸ்சிஸ் (352), தினேஷ் கார்த்திக், ரஜத் படிதார், வில் ஜாக்சும், பந்து வீச்சில் யாஷ் தயாள், முகமது சிராஜ், கரண் ஷர்மா, விஜய்குமார் வைஷாக்கும் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

    அடுத்த சுற்று வாய்ப்பை தக்கவைக்க வெற்றி பெற வேண்டியது அவசியம் என்பதால் இரு அணிகளும் கடுமையாக வரிந்து கட்டும்.

    எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 32 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் பஞ்சாப் அணி 17 முறையும், பெங்களூரு அணி 15 தடவையும் வெற்றி பெற்று இருக்கின்றன.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    பஞ்சாப்: பிரப்சிம்ரன் சிங், ஜானி பேர்ஸ்டோ, ரிலீ ரோசவ், ஷசாங் சிங், சாம் கர்ரன் (கேப்டன்), ஜிதேஷ் ஷர்மா, அஷூதோஷ் ஷர்மா, ஹர்பிரீத் பிரார் அல்லது ராகுல் சாஹர், ஹர்ஷல் பட்டேல், அர்ஷ்தீப் சிங், ரபடா.

    பெங்களூரு: விராட் கோலி, பாப் டு பிளிஸ்சிஸ், வில் ஜாக்ஸ், ரஜத் படிதார், மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக், யாஷ் தயாள் அல்லது ஸ்வப்னில் சிங், கரண் ஷர்மா, முகமது சிராஜ், விஜய்குமார் வைஷாக்.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    • என்னால் சிறப்பாக விளையாட முடியவில்லை.
    • நடப்பு ஐபிஎல் தொடரின் சில போட்டிகளில் விளையாடப்போவதில்லை.

    17-வது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த 30 லீக் போட்டிகள் முடிவில் ராஜஸ்தான் அணி முதல் இடத்திலும் கொல்கத்தா 2-வது இடத்திலும் உள்ளது. 3 முதல் 10 இடங்கள் முறையே சென்னை, ஐதராபாத், லக்னோ, குஜராத், பஞ்சாப், மும்பை, டெல்லி, பெங்களூரு ஆகிய அணிகள் உள்ளனர்.

    இந்த தொடரில் மிகவும் மோசமான ஆட்டத்தை பெங்களூரு அணி வெளிப்படுத்தி வருகிறது. பெங்களூரு அணி தான் மோதிய 7 ஆட்டத்தில் 6 தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் அந்த அணி பிளேஆப் சுற்றுக்கு முன்னேறுவது கடினாமான ஒன்றாக உள்ளது.

    இந்நிலையில் ஐபிஎல் தொடரில் இருந்து சிறிதுகாலம் ஓய்வு எடுத்துக் கொள்வதாக அந்த அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நடப்பு ஐபிஎல் தொடரின் சில போட்டிகளில் விளையாடப்போவதில்லை. என்னால் சிறப்பாக விளையாட முடியவில்லை. எனக்கு பதிலாக வேறு யாராவது விளையாடட்டும் என ஃபாஃப் மற்றும் பயிற்சியாளர்களிடம் கூறினேன். உடல் மற்றும் மன நலனில் முன்னேற்றம் ஏற்பட்டு, இந்த சீசனிலேயே மீண்டும் விளையாடுவேன் என நம்புகிறேன்.

    இவ்வாறு மேக்ஸ்வெல் கூறினார்.

    • ஆர்சிபி - சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி வருகிற 15-ந் தேதி நடக்கிறது.
    • ஆர்சிபி அணி 6 போட்டிகளில் விளையாடி 1-ல் மட்டும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஆர்சிபி மற்றும் மும்பை அணிகள் மோதின. இதில் மும்பை அணி 15.3 ஓவரில் இலக்கை 199 ரன்கள் குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த தோல்வி மூலம் ஆர்சிபி அணி 5 தோல்விகளை சந்தித்துள்ளது. அந்த அணி 6 போட்டிகளில் விளையாடி 1-ல் மட்டும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.

    இந்நிலையில் ஆர்சிபி அணியின் ஆல் ரவுண்டர் மேக்ஸ்வெல் காயம் காரணமாக ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது ஆர்சிபி அணிக்கு பின்னடைவாக அமையும்.

    ஆர்சிபி - சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி வருகிற 15-ந் தேதி நடக்கிறது.

    • இந்த தொடரில் ஆறு இன்னிங்சில் 3 முறை டக்அவுட்.
    • ஒட்டுமொத்தமாக ஐபிஎல் கிரிக்கெட்டில் 17 முறை டக்அவுட் ஆகியுள்ளார்.

    ஆஸ்திரேலியாவின் அதிரடி வீரர் மேக்ஸ்வெல்லுக்கு இந்த ஐபிஎல் சீசன் இதுவரை சிறப்பானதாக அமையவில்லை. பார்ம் இன்றி தவித்து வருகிறார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக இன்று நான்கு பந்துகளை சந்தித்த நிலையில் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட்டாகி வெளியேறினார். இந்த சீசனில் இதுவரை ஆறு போட்டிகளில் களம் இறங்கியுள்ளார். அதில் மூன்று முறை டக்அவுட்டாகியுள்ளார்.

    சிஎஸ்கே-வுக்கு எதிரான முதல் போட்டியிலும், எல்எஸ்ஜி-க்கு எதிரான 4-வது போட்டியிலும் டக்அவுட் ஆகியுள்ளார். மொத்தம் ஆறு இன்னிங்சில் 32 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். சராசரி 5.4 ஆகும். கேகேஆர் அணிக்கெதிராக மட்டுமே 28 ரன்கள் அடித்துள்ளார்.

    மேலும், ஐபிஎல் கிரிக்கெட்டில் இது ஒட்டுமொத்தமாக 17-வது டக்அவுட் ஆகும். இதன்மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிகமுறை டக்அவுட்டாகிய பேட்ஸ்மேன் பட்டியலில் ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக் ஆகியோருடன் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

    • மயங்க் அகர்வால் பந்தில் மேக்ஸ்வெல் டக்அவுட் ஆனார்.
    • ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிகமுறை டக்அவுட் ஆன பேட்ஸ்மேன் பட்டியலில் 2-வது இடம் பிடித்துள்ளார்.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆர்சிபி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    இதில் முதலில் விளையாடிய லக்னோ அணி 181 ரன்கள் குவித்தது. பின்னர் 182 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி அணி களம் இறங்கியது. ஆனால் லக்னோ அணியின் வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் அபாரமாக பந்து வீச ஆர்.சி.பி. அணி முக்கிய விக்கெட்டுகளை சாய்த்தார். மேக்ஸ்வெல் மற்றும் கேமரூன் க்ரீனை வீழ்த்தி அசத்தினார். அந்த அணியால் 153 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.

    இதனால் ஆர்.சி.பி. 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. மேலும் தனது சொந்த மைதானத்தில் அந்த அணியின் இரண்டாவது தோல்வி இதுவாகும்.

    அந்த அணியின் அதிரடி வீரரான மேக்ஸ்வெல் தான் சந்தித்த 2-வது பந்திலேயே ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை மேக்ஸ்வெல் 16 முறை டக்அவுட் ஆகியுள்ளார். மேலும் அதிக முறை டக்அவுட்டாகிய வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்துள்ளார்.

    முன்னதாக ரோகித் சர்மா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் தலா 17 முறை டக்அவுட் ஆகி ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக முறை டக்அவுட் ஆனவர்கள் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளனர். மந்தீப் சிங், பியூஸ் சாவ்லா மற்றம் சுனில் நரைன் ஆகியோர் 15 முறை டக்அவுட்டாகி மூணாவது இடத்தில் உள்ளனர்.

    • சென்னையில் ஆர்சிபி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர்.
    • விராட் கோலியைப் போன்று மேக்ஸ்வெல் பேட்டிங் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளை சென்னை சேப்பாக்கத்திலுள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் தொடங்கவுள்ளது. இத்தொடரின் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகிறது.

    இதற்காக சென்னையில் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்ரனர். இந்நிலையில் ஆர்சிபி அணியின் நட்சத்திர பேட்டர் விராட் கோலி பயிற்சியில் ஈடுப்பட்டிருந்தார். அப்போது அவரது பின்னாடி நின்று கொண்டிருந்த மேக்ஸ்வெல், விராட் கோலியைப் போன்று பேட்டிங் செய்து காட்டினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    முன்னதாக மேக்ஸ்வெல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய போது ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பேட்டிங் செய்வதை போன்று இமிடேட் செய்திருந்தார்.

    இந்த இரு வீடியோக்களை வைத்து ரசிகர்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    • சென்னை வந்த ஆர்சிபி, தங்களது புதிய பச்சை நிற ஜெர்சியை அறிமுகப்படுத்தியது.
    • இந்த நிகழ்ச்சியில் மேக்ஸ்வெல் மற்றும் விராட் கோலி நகைச்சுவையான சில விஷயங்களை அரங்கேற்றி உள்ளனர்.

    10 அணிகள் பங்கேற்கும் ஐபிஎல் தொடர் நாளைமறுநாள் தொடங்க உள்ளது. இதில் ஆர்சிபி- சிஎஸ்கே அணிகள் மோதுகிறது. இதற்காக இரு அணிகள் வீரர்களும் சென்னையில் பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் சென்னை வந்த ஆர்சிபி, தங்களது புதிய பச்சை நிற ஜெர்சியை அறிமுகப்படுத்தியது. இந்த நிகழ்ச்சியில் மேக்ஸ்வெல் மற்றும் விராட் கோலி நகைச்சுவையான சில விஷயங்களை அரங்கேற்றி உள்ளனர். அந்த வகையில் புதிய ஜெர்சி அறிமுகப்படுத்த 6 ஆர்சிபி வீரர்கள் இடம் பெற்றனர். அதில் டுபிளிசிஸ், விராட், மேக்ஸ்வெல், சிராஜ், பட்டித்தார், மணிபால் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

    அப்போது முன்பக்க ஜெர்சியை புகைப்படம் எடுக்கப்பட்டது. அதேபோல பின்பக்க ஜெர்சியை படம் எடுக்க திரும்புமாறு செய்தியாளர்கள் தெரிவித்தனர். திரும்பிய வீரர்களில் மேக்ஸ்வெல் மட்டும் இடுப்பை ஆட்டி நடனம் ஆடினார். இதனை பார்த்த டுபிளிசிஸ், விராட், சிராஜ் ஆகியோர் சிரித்தனர்.

    இது மட்டுமல்லாம் ஸ்பான்சர் (KEI) நிறுவனத்தின் பெயரை கேப்டன் டுபிளிசிஸ் திறந்து வைத்தார். அப்போது வெடி சத்தத்துடன் வண்ண காகிதங்கள் பூக்களை போன்று சிதறியது. இதை எதிர்பாராத டுபிளிசிஸ் காதை மூடிக்கொண்டு ஓடினார். இதனை பார்த்த விராட் மற்றும் மேக்ஸ்வேல் வாய்விட்டு சிரித்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றியது.
    • டி20 போட்டியில் அதிக சிக்சர் அடித்த ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை மேக்ஸ்வெல் படைத்தார்.

    ஆக்லாந்து:

    நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா 72 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் அந்த அணி தொடரை கைப் பற்றியது.

    இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் 1 சிக்சர் அடித்தார். இது அவரது 126-வது சிக்சர் ஆகும். இதன்மூலம் சர்வதேச டி20 போட்டியில் அதிக சிக்சர் அடித்த ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

    இதற்கு முன் ஆரோன் பிஞ்ச் 125 சிக்சர்கள் அடித்ததே சாதனையாகும். அவரை தற்போது மேக்ஸ்வெல் முந்தியுள்ளார். மற்ற ஆஸ்திரேலிய வீரரர்களில் டேவிட் வார்னர், 113 சிக்சர்களும், வாட்சன் 83 சிக்சர்களும் அடித்துள்ளனர்.

    சர்வதேச அளவில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் மேக்ஸ்வெல் 3-வது இடத்தில் இருக்கிறார்.

    ரோகித் சர்மா 190 சிக்சர்களுடன் முதல் இடத்திலும், குப்தில் (நியூசிலாந்து) 173 சிக்சர்களுடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.

    • வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் மேக்ஸ்வெல் சதம் அடித்தார்.
    • இந்த போட்டியில் ஆஸ்திரேலியா 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    அடிலெய்டு:

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமனில் முடிந்தது. இதையடுத்து நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என ஆஸ்திரேலியா கைப்பற்றியது.

    தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி அடிலெய்டில் இன்று நடைபெற்றது.

    முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, மேக்ஸ்வெல்லின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் மட்டுமே எடுத்தது, இதனால் ஆஸ்திரேலியா 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

    இந்நிலையில் இந்த ஆட்டத்தில் மேக்ஸ்வெல் சதம்(120) அடித்ததன் மூலம் ரோகித் சாதனை ஒன்றை சமன் செய்துள்ளார். அதாவது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் ரோகித் (5 சதம்) சாதனையை மேக்ஸ்வெல் (5 சதம்) பகிர்ந்துள்ளார். இவர்களுக்கு அடுத்தபடியாக சூர்யகுமார் யாதவ் ( 4 சதம்), பாபர் அசம் (3 சதம்), காலின் முன்ரோ (3 சதம்) ஆகியோர் உள்ளனர்.

    மேலும் நாட் அவுட் மூலம் அதிக சதம் விளாசியவர்கள் பட்டியலில் மேக்ஸ்வெல் முதல் இடத்திலும் ரோகித் 2-வது இடத்திலும் உள்ளனர். இதுபோக 4-வது இடத்தில் களமிறங்கி அதிக ரன்கள் குவித்த சூர்யகுமார் யாதவ் (117), பாப் டு பிளெசிஸ்(119) சாதனையை இவர் முறியடித்துள்ளார்.

    • மேக்ஸ்வெல் சதம் அடித்து அசத்தினார். அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 55 பந்துகளில் 120 ரன்கள் குவித்தார்.
    • டிம் டேவிட் 14 பந்துகளில் 31 ரன்கள் குவித்தார்.

    சிட்னி:

    ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் - இங்கிலீஸ் களமிறங்கினர். இங்கிலீஸ் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மிட்செல் மார்ஷ் அதிரடியாக விளையாடி 29 ரன்னில் ஆட்டமிழந்தார். நிதானமாக விளையாடிய வார்னர் 22 ரன்னில் அவுட் ஆனார். ஸ்டோய்னிஸ் 16 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    இதனையடுத்து ருத்ர தாண்டவம் ஆடிய மேக்ஸ்வெல் சதம் அடித்து அசத்தினார். அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 55 பந்துகளில் 120 ரன்கள் குவித்தார். டிம் டேவிட் 14 பந்துகளில் 31 ரன்கள் குவித்தார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 240 ரன்கள் குவித்தது.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஹோல்டர் 2 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடி வருகிறது.

    ×