search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிடிவி தினகரன்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாநிலப் பல்கலைக் கழகங்கள் அனைத்திலும் கடும் நிதி நெருக்கடி நிலவிவருவதாக தொடர் புகார்கள் எழுந்துள்ளன.
    • பல்கலைக் கழகத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் துணைவேந்தர் ஒருவரே ராஜினாமா செய்யும் அளவிற்கான அவலநிலை உருவாகியுள்ளது.

    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    துணைவேந்தர்களை ராஜினாமா செய்யத் தூண்டும் அளவிற்கு பல்கலைக்கழகங்களில் நிலவும் கடும் நிதி நெருக்கடிகள்-இளைய சமுதாயத்தின் எதிர் காலத்தை வளப்படுத்தும் பல்கலைக் கழகங்களை பாதுகாக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் பல ஆண்டுகளாக நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்துவரும் நிலையில் அப்பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் குமார், அண்மையில் தமிழக ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியிருப்பதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

    மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மட்டுமல்லாது, சென்னைப் பல்கலைக்கழகம், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், சேலம் பெரியார் பல்கலைக் கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் என தமிழகத்தில் இருக்கும் மாநிலப் பல்கலைக் கழகங்கள் அனைத்திலும் கடும் நிதி நெருக்கடி நிலவிவருவதாக தொடர் புகார்கள் எழுந்துள்ளன. பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள், ஓய்வூதியர்கள் என அனைவருக்கும் மாத ஊதியம் கூட வழங்க இயலாத சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கும் நிலையில், அதற்கு உரிய தீர்வு காண வேண்டிய அரசு, கண்டுகொள்ளாமல் கடந்து செல்வது கடும் கண்டனத்திற்குரியது.

    மாநிலப் பல்கலைக் கழகங்களில் நிலவும் நிதி நெருக்கடிகளை களைய உயர்கல்வித்துறையால் அமைக்கப்பட்ட உயர் மட்டக்குழுவும் மாநில அரசைப் போலவே உறங்கிக் கொண்டிருப்பதன் விளைவாக, பல்கலைக் கழகத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் துணைவேந்தர் ஒருவரே ராஜினாமா செய்யும் அளவிற்கான அவலநிலை உருவாகியுள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடங்கப்பட்டதன் நோக்கத்தையே அடியோடு சீர்குலைப்பதாகும்.
    • 298 கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் சுமார் 30 ஆயிரம் மாணவ, மாணவிகள் அரசின் சிறப்பு உதவித்தொகையுடன் கூடிய கல்வி பயின்று வருகின்றனர்.

    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-

    மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இயங்கி வரும் 298 கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் சுமார் 30 ஆயிரம் மாணவ, மாணவிகள் அரசின் சிறப்பு உதவித்தொகையுடன் கூடிய கல்வி பயின்று வரும் நிலையில், அதனை பள்ளிக் கல்வித்துறையுடன் இணைக்கும் நடவடிக்கை அம்மாணவ, மாணவியர்களுக்கான சலுகைகளை பறிப்பதோடு, கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடங்கப்பட்டதன் நோக்கத்தையே அடியோடு சீர்குலைப்பதாகும்.

    எனவே, சிறுபான்மை சமூகமான பூர்வ பழங்குடி மக்களான பிரமலைக் கள்ளர்களின் உரிமையை பறிக்கும் செயலான கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை, பள்ளிக்கல்வித்துறையுடன் இணைக்கும் முடிவை உடனடியாக கைவிடு வதோடு, சீர்மரபினர் நலச்சங்கத்தின் கோரிக்கையின் படி பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் துறையின் கீழாகவே கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் தொடர்ந்து இயங்கிட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



    • கடத்தல் சம்பவங்கள் நடைபெறுகிறதோ? என்ற ஐயம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
    • போதையில்லா தமிழகத்தை உருவாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே நடத்தப்பட்ட வாகன சோதனையில் வெளிமாநிலங்களில் இருந்து 440 கிலோ குட்கா கடத்தி வந்ததாக தி.மு.க.வின் தென்காசி மாவட்ட ஊராட்சி தலைவியின் கணவர் போஸ் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    2000 கோடி ரூபாய் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் தொடங்கி தமிழகத்தில் அடிக்கடி பறிமுதல் செய்யப்படும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தல் வழக்கில் தி.மு.க. நிர்வாகிகள் தொடர்பில் இருப்பதன் மூலம் ஆளுங்கட்சியின் ஆதரவுடனே இதுபோன்ற கடத்தல் சம்பவங்கள் நடைபெறுகிறதோ? என்ற ஐயம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    எனவே, போதைப்பொருட்களுக்கு அடிமையாகி தங்களின் எதிர்காலத்தை இழந்து வரும் தமிழக இளைஞர்களை பாதுகாக்கும் வகையில், குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் அவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கி போதையில்லா தமிழகத்தை உருவாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • எடப்பாடி பழனிசாமி தலைமையிலான சிலரின் சுயநலத்தினால், பதவி வெறியால் துரோக புத்தியால் அ.தி.மு.க. வியாபார நிறுவனமாக செயல்படுகிறது.
    • தமிழகம் முழுவதும் போதைப்பொருள் வியாபாரம் ஆளும் கட்சியினரின் உதவியுடன் நடைபெறுகிறது.

    திருச்செந்தூர்:

    சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், சுவாமி தரிசனம் செய்து இரவு ராக்கால அபிஷேகத்திற்கு பால் வழங்கி விழாவில் கலந்து கொண்டு மூலவர் மற்றும் சண்முகரை வழிபட்டார்.

    பின்னர் சூரசம்கார மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு செய்தார். பின்னர் அவர் நிருப்ர்களிடம் கூறியதாவது:-

    கட்சியை அபகரித்து வைத்திருப்பவர்கள் தலைவராக முடியுமா?. எடப்பாடி பழனிசாமி தன்னை தலைவர் என போட்டுக்கொண்டால் தலைவராக முடியாது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கட்டிக்காத்த இயக்கம் இன்று பலவீனமாகி இருக்கிறது.

    எடப்பாடி பழனிசாமி தலைமையிலான சிலரின் சுயநலத்தினால், பதவி வெறியால் துரோக புத்தியால் அ.தி.மு.க. வியாபார நிறுவனமாக செயல்படுகிறது. பழனிசாமியின் 4 ஆண்டுகால ஆட்சி மீதான கோபத்தின் காரணமாகவும், தி.மு.க. திருந்தியிருக்கும் என்றும்தான் மக்கள் தி.மு.க.விற்கு வாக்களித்தார்கள்.

    ஆனால் தி.மு.க. 90 சதவீத தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தமிழகம் முழுவதும் போதைப்பொருள் வியாபாரம் ஆளும் கட்சியினரின் உதவியுடன் நடைபெறுகிறது.

    எடப்பாடி பழனிசாமியும், தி.மு.க.வும் கள்ள உறவு வைத்துக்கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றிடக்கூடாது என்று வேலை பார்த்தனர். வாக்குகளை பிரிப்பதற்காக இரட்டை இலை சின்னத்தை தி.மு.க.விற்கு உதவி செய்வதற்காக பயன்படுத்தினர். தி.மு.க.விற்கு எதிராகவும், துரோகத்திற்கு எதிராகவும் உருவாக்கப்பட்ட இயக்கம் இன்று துரோகம் செய்வதற்காகவே ஒரு கும்பலால் பயன்படுத்தப்படுகிறது.

    அ.தி.மு.க.வை அழிக்க நினைக்கும் கட்சி பா.ஜ.க. அல்ல. தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் உறுதியாக வெற்றிபெறும். வாக்கு சதவீதமும் அதிகமாக இருக்கும். பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 40 தொகுதிகளிலும் 3-ம் இடத்திற்கு தள்ளப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அப்போது மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் மாணிக்கராஜா, மாநில அமைப்பு செயலாளர் பி.ஆர். மனோகரன், இளைஞர் பாசறை மாநிலச் செயலாளர் மணிகண்டன், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் பொன்ராஜ், நகர செயலாளர் முருகேசன் உட்பட பலர் உடன் இருந்தனர்.

    • 2011ம் ஆண்டுக்கு பிறகுதான் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாசாரத்தை அதிக அளவில் பரவ விட்டுள்ளனர்.
    • நான் பொதுமக்களுக்கு கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் உதவி செய்துள்ளேன்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம் நந்த கோபாலன் கோவில் சித்திரை திருவிழாவில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தேர்தல் முடிந்த பிறகு செல்லும் இடங்களில் எல்லாம் நீங்கள்தான் வெற்றி பெறுவீர்கள் என மக்கள் கூறுகின்றனர். நான் எந்த வித கருத்து கணிப்பும் நடத்தவில்லை. கடந்த 1999-ம் ஆண்டு இங்கு போட்டியிட்டதில் இருந்து 2011ம் ஆண்டு நடந்த பல தேர்தல்களில் ஓட்டுக்கு பணம் கொடுக்கவில்லை.

    2011ம் ஆண்டுக்கு பிறகுதான் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாசாரத்தை அதிக அளவில் பரவ விட்டுள்ளனர். சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் முன்னாள் முதல்வர் பழனிசாமி கோஷ்டியினர் தான் பணம் கொடுத்தனர். அதைப் பார்த்து டோக்கன் கொடுத்த விவகாரம் தெரியவரவே அதை நான் தடுத்து நிறுத்தினேன். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுத்து நான் வெற்றிபெற வில்லை.

    தற்போது தேனி பாராளுமன்ற தொகுதியில் டோக்கன் கொடுத்தது யார்? என்று உங்களுக்கே தெரியும். மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மீது பா.ஜ.வுக்கு நல்ல மரியாதை உள்ளது. அதனால்தான் மாநில தலைவர் அண்ணாமலை அ.தி.மு.க. என் கைக்கு வரும் என்று பேசினார். அவர் படித்தவர். 3 ஆண்டுகளாக யாத்திரை நடத்தி வருகிறார். எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க. அழிந்து விடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில்தான் அவர் அவ்வாறு பேசினார்.

    நான் பொதுமக்களுக்கு கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் உதவி செய்துள்ளேன். மோடி மீண்டும் பிரதமராக வர இந்த தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதன் பிறகு எடப்பாடி பழனிசாமி குறித்து கேள்வி எழுப்பிய போது, கோவில் விழாவுக்கு வந்துள்ளேன். எனவே அவரைப்பற்றி பேசி டென்சனாக்கி விடாதீர்கள் என கூறினார்.

    விழாவுக்கு வந்த தி.மு.க. எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன், தினகரனுடன் கைகுலுக்கி நலம் விசாரித்துக் கொண்டனர்.

    • அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் எக்காலத்திற்கும் பொருந்தக் கூடியது மகாவீரரின் போதனைகள்.
    • சமண சமயப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    பகவான் மகாவீரர் அவதரித்த தினத்தை மகாவீர் ஜெயந்தியாக கொண்டாடி மகிழும் சமண சமயப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    அன்பு, அமைதி, அகிம்சை, வாழ்க்கை, மனிதநேயம் பற்றி அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் எக்காலத்திற்கும் பொருந்தக் கூடிய மகாவீரரின் போதனைகளை மக்கள் அனைவரும் பின்பற்றி உயரிய நெறிமுறைகளுடன் வாழ்ந்திட உறுதியேற்போம் எனக் கூறிக்கொண்டு, சமண சமயப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குக்குர் மாதிரிதானே அவருடைய முகமும் குண்டா இருக்கு.
    • அவரை பார்க்கும்போதெல்லாம் உங்களுக்கு குக்கர் நியாபகம் வரணும்.

    மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் நடந்த பரப்புரையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அவரது மனைவி அனுராதா வாக்கு சேகரித்தார்.

    அப்போது கூட்டத்தில் பேசிய அவர், " குக்குர் மாதிரிதானே அவருடைய முகமும் குண்டா இருக்கு. அதனால.. அவரை பார்க்கும்போதெல்லாம் உங்களுக்கு குக்கர் நியாபகம் வரணும்.

    குக்கர் சின்னம் எல்லாம் இடத்திற்கும் தெரிய வேண்டும். டிடிவி தினகரனின் சின்னம் குக்கர் சின்னம். குக்கர் சின்னத்தில் குழப்பம் இல்லாமல் ஓட்டு போடுவதற்கு வயதானவர்களுக்கு எடுத்து கூறவேண்டும்.

    அவர் இதை செய்வார் அதை செய்வார் என்று உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. ஏனென்றால், என்னைவிட உங்களுக்கு நல்லாவே தெரியும். அவர் மீது உங்களுக்கு நம்பிக்கை உள்ளது.

    அவர் உங்கள் வீட்டு பிள்ளை. உங்கள் வீட்டில் ஒருவராய் இருந்திருக்கிறார்.

    குக்கர் சின்னம் ஆர்.கே.நகரில் போட்டியிட்டபோது வெற்றிபெற்ற சின்னம். அதேமாதிரி தேனி தொகுதியிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற வைக்க வேண்டும்.

    குக்கர் சின்னத்திற்கு அளிக்கும் ஓட்டு, தேனி தொகுதி வளர்ச்சிக்கான ஓட்டு.

    குக்கர் என்றால் டிடிவி.. டிடிவி என்றால் குக்கர்..

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • அண்ணாமலைக்கு ஆதரவாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிரச்சாரம் மேற்கொண்டார்
    • குக்கரும் தாமரையும் ஒரே கூட்டணியில் உள்ள சின்னங்கள் தான் அதனால் எந்த பிரச்சனையும் இல்லை - டிடிவி தினகரன்

    கோவை மாவட்டம் சூலூரில் பாஜக கோவை வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று இரவு பிரச்சாரம் மேற்கொண்டார்.

    அப்போது, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு குக்கர் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் வாக்கு சேகரிக்க, கூட்டத்தில் இருந்த பொதுமக்கள் தாமரை சின்னம் என கூச்சலிட்டனர்.

    அதற்கு பதில் அளித்த டிடிவி தினகரன், நேற்று நான் போட்டியிடும் தேனி தொகுதியில் குக்கர் சின்னத்தில் வாக்கு சேகரித்தேன். அதே நியாபகத்தில் குக்கர் சின்னம் என கூறிவிட்டேன் என்று விளக்கம் அளித்தார்.

    குக்கரும் தாமரையும் ஒரே கூட்டணியில் உள்ள சின்னங்கள் தான் அதனால் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறிய அவர் பின்பு அண்ணாமலைக்கு தாமரை சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.

    மோடி அவர்களின் நம்பிக்கைக்கு உரிய அண்ணாமலையை வெற்றி செய்வதன் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதைப் போல தீய சக்தியையும் துரோக சக்தியையும் "தாமரையை வீழ்த்த" நீங்கள் துணை புரிய வேண்டும் அவர் பேசினார்.

    அதன் பின்னர் சுதாரித்து கொண்ட டிடிவி தினகரன், தாமரை வெற்றி பெற்றது என்ற செய்தி தமிழகம் முழுவதும் பறை சாற்ற வேண்டும் என பேசி சமாளித்தார்.

    • சமத்துவப் போராட்டத்தில் ஆங்கிலேயர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட பெருங்காமநல்லூர் வீரத்தியாகிகளின் தினம் இன்று.
    • உயிர்நீத்த மாயாக்காள் உள்ளிட்ட 16 பேரின் தியாகமும், வீரமும் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் நிலைத்து நிற்கும்.

    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-

    குற்றப்பரம்பரை எனும் கைரேகைச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற சமத்துவப் போராட்டத்தில் ஆங்கிலேயர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட பெருங்காமநல்லூர் வீரத்தியாகிகளின் தினம் இன்று.

    ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறைக்கு எதிராக துணிச்சலுடன் போராடி உயிர்நீத்த மாயாக்காள் உள்ளிட்ட 16 பேரின் தியாகமும், வீரமும் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் நிலைத்து நிற்கும்.

    இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

    • ஜெயலலிதா இருந்தவரை டிடிவி தினகரன் வீட்டுக்கு காவல் நாயாக இருந்திருக்கிறோம்
    • இப்ப நீங்க எங்களை சீண்டி பார்த்தீங்கன்னு சொன்னா அதுக்கு அ.தி.மு.க. இரண்டரை கோடி தொண்டர்கள் சீறும் சிங்கமாக விஸ்வரூபம் எடுத்து இருக்கிறோம்

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் தேனி தொகுதியில் போட்டியிடும் நாராயணசாமியை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    அப்போது பேசிய அவர், "பாஜக கூட்டணியில் அமமுக என்று சொல்லுபவர் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பக்கம் எட்டிப்பார்க்காதவர், வராதவர். ஜெயலலிதாவால் நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியில் இருந்து 10 ஆண்டுகளுக்கும் மேலே ஒதுக்கி வைக்கப்பட்டார். ஜெயலலிதா மறைந்த பிறகுதான் அவர் தமிழ்நாட்டிலேயே தலை காட்ட ஆரம்பித்தார்.

    ஆர்.கே.நகர் தேர்தலில் நின்று மக்களிடையே 20 ரூபாய் நோட்டை காண்பித்து ஏமாற்றி அந்த தொகுதி பக்கமே போகாமல் அந்த தொகுதியிலே நிற்க முடியாமல் கோவில்பட்டியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் நின்றார். அங்கேயும் மக்கள் அவர் மீது நம்பிக்கை வைக்காமல் அவரை புறக்கணித்து தோல்வி அடையச் செய்தார்கள். கடைசி புகலிடமாக தேனி பாராளுமன்ற தொகுதியை தேடி வந்திருக்கிறார். இங்கேயும் மக்கள் ஏற்க தயாராக இல்லை. வீராப்பு எல்லாம் தேனி தொகுதியில் எடுபடாது என்று அவருக்கு தெரியும்.

    ஜெயலலிதா இருந்தவரை உங்களை பார்த்து பயந்தது உண்மைதான். இப்ப எல்லாம் நீங்கள் காட்டுகிற பூச்சாண்டிக்கு எல்லாம் புழு கூட பயப்படாது. அ.தி.மு.க. தொண்டன் சுதந்திர காற்றை சுவாசிக்கிறான். உங்களிடம் இருந்து விடுதலை பெற்று இந்த இயக்கமும், இந்த இயக்க தொண்டர்களும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சுதந்திர காற்றை சுவாசிக்கிறோம். அதனால் இந்த பூச்சாண்டி காட்டுறது, நையாண்டி பண்றது எல்லாம் ஜெயலலிதா இருந்தவரைக்கும் கேட்டுக்கிட்டு இருந்தது உண்மைதான். உங்க வீட்டுக்கு காவல் நாயாக இருந்திருக்கிறோம். இப்ப நீங்க எங்களை சீண்டி பார்த்தீங்கன்னு சொன்னா அதுக்கு அ.தி.மு.க. இரண்டரை கோடி தொண்டர்கள் சீறும் சிங்கமாக விஸ்வரூபம் எடுத்து இருக்கிறோம் என்று கூறினார்.

    இந்நிலையில் ஆர்.பி.உதயகுமார் பேசியதற்கு "நாய் என்றைக்கும் சிங்கமாகாது.. ஓநாயாக வேண்டுமானால் ஆகலாம்" என்று டிடிவி தினகரன் பதிலடி கொடுத்துள்ளார்.

    செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிடிவி தினகரன், துரோகிகளின் கைகளில் தற்போது அதிமுக உள்ளது. அதை மீட்பதற்கு தான் நானும் ஓ.பன்னீர்செல்வமும் போராடி கொண்டிருக்கிறோம். வீட்டுக்காவலில் இருந்தவர்கள் நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள். இவர்களை போல துரோகம் செய்யமாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாராயணசாமிக்கு தான் வெற்றி உறுதியாகி இருக்கிறது.
    • ஜெயலலிதா இருந்தவரை உங்களை பார்த்து பயந்தது உண்மைதான்.

    தேனி:

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் தேனி தொகுதியில் போட்டியிடும் நாராயணசாமியை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    பாஜக கூட்டணியில் அமமுக என்று சொல்லுபவர் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பக்கம் எட்டிப்பார்க்காதவர், வராதவர். ஜெயலலிதாவால் நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியில் இருந்து 10 ஆண்டுகளுக்கும் மேலே ஒதுக்கி வைக்கப்பட்டார். ஜெயலலிதா மறைந்த பிறகுதான் அவர் தமிழ்நாட்டிலேயே தலை காட்ட ஆரம்பித்தார்.

    ஆர்.கே.நகர் தேர்தலில் நின்று மக்களிடையே 20 ரூபாய் நோட்டை காண்பித்து ஏமாற்றி அந்த தொகுதி பக்கமே போகாமல் அந்த தொகுதியிலே நிற்க முடியாமல் கோவில்பட்டியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் நின்றார். அங்கேயும் மக்கள் அவர் மீது நம்பிக்கை வைக்காமல் அவரை புறக்கணித்து தோல்வி அடையச் செய்தார்கள். கடைசி புகலிடமாக தேனி பாராளுமன்ற தொகுதியை தேடி வந்திருக்கிறார். இங்கேயும் மக்கள் ஏற்க தயாராக இல்லை. வீராப்பு எல்லாம் தேனி தொகுதியில் எடுபடாது என்று அவருக்கு தெரியும்.

    நாராயணசாமிக்கு தான் வெற்றி உறுதியாகி இருக்கிறது. ஜெயலலிதா இருந்தவரை உங்களை பார்த்து பயந்தது உண்மைதான். இப்ப எல்லாம் நீங்கள் காட்டுகிற பூச்சாண்டிக்கு எல்லாம் புழு கூட பயப்படாது. அ.தி.மு.க. தொண்டன் சுதந்திர காற்றை சுவாசிக்கிறான். உங்களிடம் இருந்து விடுதலை பெற்று இந்த இயக்கமும், இந்த இயக்க தொண்டர்களும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சுதந்திர காற்றை சுவாசிக்கிறோம். அதனால் இந்த பூச்சாண்டி காட்டுறது, நையாண்டி பண்றது எல்லாம் ஜெயலலிதா இருந்தவரைக்கும் கேட்டுக்கிட்டு இருந்தது உண்மைதான். உங்க வீட்டுக்கு காவல் நாயாக இருந்திருக்கிறோம். இப்ப நீங்க எங்களை சீண்டி பார்த்தீங்கன்னு சொன்னா அதுக்கு அ.தி.மு.க. இரண்டரை கோடி தொண்டர்கள் சீறும் சிங்கமாக விஸ்வரூபம் எடுத்து இருக்கிறோம் என்று கூறினார்.

    • டி.டி.வி.தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி வேட்பாளர்களை ஆதரித்து 2-வது கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளார்.
    • 3-ந்தேதி மதுரை, திருச்சி தொகுதிகளிலும் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    சென்னை:

    அ.ம.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி வேட்பாளர்களை ஆதரித்து 2-வது கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளார். 1-ந்தேதி தூத்துக்குடி, நெல்லை தொகுதிகளிலும், 2-ந்தேதி தென்காசி, விருதுநகர் தொகுதிகளிலும், 3-ந்தேதி மதுரை, திருச்சி தொகுதிகளிலும் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    4-ந்தேதி மயிலாடுதுறை, தஞ்சாவூர் தொகுதிகளிலும், 6-ந்தேதி கோயம்புத்தூர் தொகுதியிலும், 7-ந்தேதி வேலூர் தொகுதியிலும், 8-ந்தேதி திருச்சி தொகுதியிலும் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×