search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆர்சிபி"

    • பெங்களூரு அணி தங்களுடைய கடைசி போட்டியில் சென்னையை எதிர்கொள்கிறது.
    • அதில் பெரிய வெற்றியை பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும் என்ற நிலையில் உள்ளது.

    விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற போராடி வருகிறது. முதல் 8 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி கண்ட அந்த அணி அடுத்த 5 போட்டிகளில் வரிசையாக வெற்றி பெற்று பிளே ஆப் வாய்ப்பில் நீடிக்கிறது.

    இந்த சூழ்நிலையில் பெங்களூரு அணி தங்களுடைய கடைசி போட்டியில் சென்னையை எதிர்கொள்கிறது. அதில் பெரிய வெற்றியை பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும் என்ற நிலையில் உள்ளது.

    இந்நிலையில் ஆர்சிபி அணி வீரர்கள் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளனர். அனுஜ் ராவத், கரண் ஷர்மா, ஸ்வப்னில் சிங் மற்றும் ஆர்சிபி உதவி ஊழியர்கள் சாமி தரிசனம் செய்தனர். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • சிஎஸ்கே அணி 14 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.
    • பெங்களூரு அணி 12 புள்ளிகளை பெற்று புள்ளிப் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.

    சென்னை:

    நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை நடந்து முடிந்த ஆட்டங்கள் முடிவில் கொல்கத்தா அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. மும்பை, பஞ்சாப், குஜராத் ஆகிய 3 அணிகள் வெளியேறி விட்டன. மீதமுள்ள 3 இடங்களுக்கு 6 அணிகள் போட்டி போட்டு வருகின்றனர்.

    தற்போது உள்ள சூழ்நிலையில் கொல்கத்தா, ராஜஸ்தான் மற்றும் ஐதராபாத் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 4-வது இடத்திற்கு சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே போட்டி நடைபெறும் என கருத்துக்கள் வெளியாகி வருகிறது. டெல்லி, லக்னோ ஆகிய அணிகளுக்கும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு இருந்தாலும், அந்த அணிகளின் நெட் ரன் ரேட் மோசமாக இருப்பதால் அதற்கான வாய்ப்பு குறைவு என்றே கூறப்படுகிறது.

    நடப்பு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தான் ஆடிய முதல் எட்டு போட்டிகளில் ஏழு தோல்விகளை சந்தித்து இருந்தது. எனினும் அடுத்த ஐந்து போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று, தற்போது 13 போட்டிகளில் ஆறு வெற்றிகளுடன் 12 புள்ளிகளை பெற்று புள்ளிப் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. சிஎஸ்கே அணி 14 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.

    இந்நிலையில் மே 18-ந் தேதி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ள போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோத உள்ளன. இந்த போட்டியில் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் அல்லது 18.1 ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்றால் சிஎஸ்கே-வை முந்தி பிளே-ஆஃப் சுற்றுக்கு ஆர்சிபி அணி முன்னேறும்.

    மே 18-ந் தேதி நடைபெறும் இந்த போட்டியில் ஆர்சிபி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அல்லது சிஎஸ்கே இலக்கை 18 ஓவரில் சேஸ் செய்ய வேண்டும். இப்படி எல்லாமே 18 என்கிற வகையில் இருக்க, விராட் கோலியின் ஜெர்சி நம்பரும் 18 ஆகும். இதனால் ஆர்சிபி தான் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என நேற்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் 4 ஆண்டுகளாக மே 18-ந் தேதி நடைபெற்ற ஆட்டத்தில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றுள்ளதாக ரெக்கார்ட் சொல்கிறது. 2013 மற்றும் 2014-ம் ஆண்டில் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த இரண்டு போட்டிகளில் விராட் கோலி 56, 27 ரன்கள் எடுத்துள்ளார்.

    மேலும் 2016-ம் ஆண்டில் பஞ்சாப் அணிக்கு எதிராக விராட் சதம் அடித்தார். அந்த போட்டியில் ஆர்சிபி வெற்றி பெற்றுள்ளது. இதேபோல 2023-ம் ஆண்டில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியிலும் கோலி சதம் அடித்தார். அதிலும் ஆர்சிபி அணியே வெற்றி பெற்றுள்ளது.

    இதனால் மே 18 ஆர்சிபி அணிக்கு சாதகமாக உள்ளதாகவும் இதன் மூலம் முதல் முறையாக ஆர்சிபி அணி கோப்பை வெல்ல வாய்ப்பு இருப்பதாகவும் கருத்துக்கள் வெளியாகி வருகிறது.

    • பாகிஸ்தான் அணிக்கெதிரான தொடரில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து அணி வீரர்கள் ஐபிஎல் தொடரிலிருந்து விலகி தயாகம் திரும்பினர்.
    • ஆர்சிபி அணியில் இடம் பிடித்துள்ள வில் ஜேக்ஸ், ரீஸ் டாப்லி உள்ளிட்ட வீரர்கள் நாடு திரும்பி உள்ளனர்.

    ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரானது ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும். இத்தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கவுள்ளது. இதன்காரணமாக ஒவ்வொரு அணியும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

    அந்தவகையில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி இத்தொடருக்கு முன்னதாக பாகிஸ்தானுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடருக்கான ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இங்கிலாந்து அணியின் முக்கிய வீரர்கள் அனைவரும் இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருந்தனர்.

    இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கெதிரான தொடரில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து அணி வீரர்கள் ஐபிஎல் தொடரிலிருந்து விலகி தயாகம் திரும்பினர். அந்தவகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரரான இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தாயகம் திரும்பியுள்ளார்.

    அதேபோல் ஆர்சிபி அணியில் இடம் பிடித்துள்ள வில் ஜேக்ஸ், ரீஸ் டாப்லி உள்ளிட்ட வீரர்கள் நாடு திரும்பி உள்ளனர். ஆர்சிபி அணியின் இருந்து வில் ஜேக்ஸ் வெளியேறியது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவருக்கு பதிலாக மேக்ஸ்வெல் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இவர்களை தவிர ஜானி பேர்ஸ்டோவ், பில் சால்ட், மொயீன் அலி, சாம் கரண் ஆகியோரும் தயாகம் திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு போன்ற அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் உள்ள நிலையில் அணியின் முக்கிய வீரர்கள் விலகியுள்ளது அந்த அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.

    • சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்து 200 ரன்கள் எடுத்தால் பெங்களூரு அணி 18.1 ஓவரில் அந்த இலக்கை எட்ட வேண்டும்
    • சிஎஸ்கே அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி வீழ்த்த வேண்டும்.

    சென்னை:

    நடப்பு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தான் ஆடிய முதல் எட்டு போட்டிகளில் ஏழு தோல்விகளை சந்தித்து இருந்தது. எனினும் அடுத்த ஐந்து போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று, தற்போது 13 போட்டிகளில் ஆறு வெற்றிகளுடன் 12 புள்ளிகளை பெற்று புள்ளிப் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. சிஎஸ்கே அணி 14 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.

    இதனால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே கடும் போட்டி எழுந்துள்ளது. இந்த இரண்டு அணிகளும் மோத உள்ள லீக் போட்டியில் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் அல்லது 18.1 ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்றால் சிஎஸ்கே-வை முந்தி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என கூறப்படுகிறது.

    தற்போது உள்ள சூழ்நிலையில் கொல்கத்தா, ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, மீதமுள்ள நான்காவது இடத்தை பிடிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகளுக்கு இடையே போட்டி எழுந்துள்ளது. டெல்லி, லக்னோ மற்றும் குஜராத் ஆகிய அணிகளுக்கும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு இருந்தாலும், அந்த அணிகளின் நெட் ரன் ரேட் மோசமாக இருப்பதால் அதற்கான வாய்ப்பு குறைவு என்றே கூறப்படுகிறது.

    அதன் அடிப்படையில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் பெங்களூரு அணி பெரிய வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மே 18 அன்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ள போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோத உள்ளன.

    இந்த போட்டியில் சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்து 200 ரன்கள் எடுத்தால் பெங்களூரு அணி 18.1 ஓவரில் அந்த இலக்கை எட்ட வேண்டும். அதேபோல பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்து 200 ரன்கள் எடுப்பதாக வைத்துக் கொண்டால், சிஎஸ்கே அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும். அப்படி செய்தால் சிஎஸ்கே அணியின் நெட் ரன் ரேட்டை பெங்களூரு அணியால் முந்த முடியும். மேலும், போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் 14 புள்ளிகளை பெற்று, நெட் ரன் ரேட் அடிப்படையில் சிஎஸ்கே அணியை முந்தி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.

    மே 18-ந் தேதி நடைபெறும் இந்த போட்டியில் ஆர்சிபி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அல்லது சிஎஸ்கே இலக்கை 18 ஓவரில் சேஸ் செய்ய வேண்டும். இப்படி எல்லாமே 18 என்கிற வகையில் இருக்க, விராட் கோலியின் ஜெர்சி நம்பரும் 18 ஆகும். இதனால் ஆர்சிபி தான் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 18 என்ற நம்பர் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

    • கேப்டன் அக்சர் பட்டேல் பொறுப்புடன் விளையாடி 57 ரன்களை குவித்தார்.
    • பெங்களூரு சார்பில் யாஷ் தயால் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று (மே 12) நடைபெற்ற இரண்டாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

    அதன்படி பேட்டிங்கை துவங்கிய பெங்களூரு அணிக்கு விராட் கோலி 27 ரன்களையும், கேப்டன் பாப் டு பிளெசிஸ் 6 ரன்களையும் எடுத்து அவுட் ஆகினர். அடுத்து வந்த வில் ஜாக்ஸ் சிறப்பாக ஆடி 29 பந்துகளில் 41 ரன்களை குவித்தார். ராஜத் பட்டிதர் 32 பந்துகளில் 52 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

    இவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேமரூன் கிரீன் சிறப்பாக ஆடி 24 பந்துகளில் 32 ரன்களை சேர்த்தார். அடுத்து வந்தவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 9 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்களை குவித்தது.

    டெல்லி சார்பில் கலீல் அகமது மற்றும் ரஷிக் சலாம் தலா இரண்டு விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ், முகேஷ் குமார் மற்றும் இஷாந்த் சர்மா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    188 ரன்களை இலக்காக துரத்திய டெல்லி அணிக்கு சுமாரான துவக்கமே கிடைத்தது. அந்த அணியின் டேவிட் வார்னர் 1 ரன்னிலும், மெக்கர்க் 21 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த அபிஷேக் போரெல் 2 ரன்களில் அவுட் ஆக ஷாய் ஹோப் 23 பந்துகளில் 29 ரன்களை அடுத்து பெவிலியன் திரும்பினார்.

    இம்பேக்ட் வீரராக களமிறங்கிய குமார் குஷாக்ரா 2 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் அக்சர் பட்டேல் பொறுப்புடன் விளையாடி 57 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்டப்ஸ் 3 ரன்களிலும் ரஷிக் சலாம் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    19.1 ஓவர்களில் டெல்லி அணி அனைத்து விக்கெட்டுளை இழந்து 140 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் பெங்களூரு அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    பெங்களூரு சார்பில் யாஷ் தயால் மூன்று விக்கெட்டுகளையும் பெர்குசன் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஸ்வப்னில் சிங், முகமது சிராஜ் மற்றும் கேமரூன் கிரீன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    • டெல்லிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு வீரர் தினேஷ் கார்த்திக் டக் அவுட் ஆனார்.
    • தினேஷ் கார்த்திக் இதுவரை 18 முறை டக் அவுட் ஆகியுள்ளார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று (மே 12) நடைபெறும் இரண்டாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.

    இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 9 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்களை குவித்தது. இப்போட்டியில் பெங்களூரு வீரர் தினேஷ் கார்த்திக் டக் அவுட் ஆனார்.

    இதன் மூலம், ஐபிஎல் தொடர்களில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர்களின் பட்டியலில் தினேஷ் கார்த்திக் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். அவர் இதுவரை 18 முறை டக் அவுட் ஆகியுள்ளார்.

    ஐபிஎல் தொடரில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர்களில் ரோகித் சர்மாவும் மேக்ஸ்வெல்லும் 2-ம் இடத்தில் உள்ளனர். இவர்கள் இருவரும் 17 முறை டக் அவுட் ஆகியுள்ளார். இவர்களுக்கு அடுத்த இடத்தில் பியூஸ் சாவ்லா (15 முறை) உள்ளார்.

    • சிறப்பாக ஆடிய வில் ஜாக்ஸ் 29 பந்துகளில் 41 ரன்களை குவித்தார்.
    • கலீல் அகமது இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று (மே 12) நடைபெறும் இரண்டாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

    அதன்படி பேட்டிங்கை துவங்கிய பெங்களூரு அணிக்கு விராட் கோலி 27 ரன்களையும், கேப்டன் பாப் டு பிளெசிஸ் 6 ரன்களையும் எடுத்து அவுட் ஆகினர். அடுத்து வந்த வில் ஜாக்ஸ் சிறப்பாக ஆடி 29 பந்துகளில் 41 ரன்களை குவித்தார். ராஜத் பட்டிதர் 32 பந்துகளில் 52 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

    இவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேமரூன் கிரீன் சிறப்பாக ஆடி 24 பந்துகளில் 32 ரன்களை சேர்த்தார். அடுத்து வந்தவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.

    20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 9 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்களை குவித்தது. டெல்லி சார்பில் கலீல் அகமது மற்றும் ரஷிக் சலாம் தலா இரண்டு விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ், முகேஷ் குமார் மற்றும் இஷாந்த் சர்மா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    • ஆர்சிபி அணிக்கு எதிரான நாளைய போட்டியில் ரிஷப் பண்ட் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • முக்கியமான போட்டியில் ரிஷப் பந்த் விளையாடாமல் இருப்பது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.

    ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 62-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

    இந்த போட்டி இரு அணிகளுக்கும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற மிகவும் மிக்கியமான போட்டி என்பதால் வெற்றிகாக இரு அணிகளும் கடுமையாக போராடுவார்கள்.

    இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்டிற்கு நாளை நடைபெறும் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் நாளைய போட்டியில் யார் அணியை வழிநடத்துவார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்திருந்தன. இந்நிலையில் நாளைய போட்டிக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை நட்சத்திர ஆல் ரவுண்டர் அக்சர் படேல் வழிநடத்துவார் என அந்த அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

    இருப்பினும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான முக்கியமான போட்டியில் ரிஷப் பந்த் விளையாடாமல் இருப்பது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.

    • டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • விராட் கோலி சிறப்பாக ஆடி ரன்களை குவித்தார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஒவ்வொரு அணியும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் முனைப்பில் விளையாடி வருகின்றன. இந்த நிலையில், இன்று (மே 9) நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய பெங்களூரு அணிக்கு விராட் கோலி மற்றும் கேப்டன் பாப் டு பிளெசிஸ் ஜோடி துவக்க வீரர்களாக களமிறங்கினர். பாப் டு பிளெசிஸ் 9 ரன்களில் ஆட்டமிழக்க, விராட் கோலி சிறப்பாக ஆடி ரன்களை குவித்தார்.

    இன்றைய போட்டியில் அரைசதம் விளாசிய விராட் கோலி, 47 பந்துகளை எதிர்கொண்டு 92 ரன்களை விளாசினார். இதில் 7 பவுண்டரிகளும், 6 சிக்சர்களும் அடங்கும். இந்த போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் நடப்பு ஐ.பி.எல். தொடரில் விராட் கோலி ஆறாவது அரைசதம் விளாசியுள்ளார். நடப்பு தொடரில் அதிக ரன்களை விளாசிய விராட் கோலி ஆரஞ்சு தொப்பி தக்க வைத்துள்ளார். 

    • நல்ல ரன்களை அடிக்கும் அவரைப் போன்ற ஒருவரால் மட்டும் போட்டியை வெற்றி பெற முடியாது.
    • 16 வருடங்களாக நம்முடைய செயல்பாடுகள் ஏன் தொடர்ச்சியாக நன்றாக இல்லை என்பது பற்றி பெங்களூரு அணி நிர்வாகம் சிந்திக்க வேண்டும்.

    கராச்சி:

    ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 11 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளை பதிவு செய்து விளையாடி வருகிறது. இருப்பினும் அடுத்த 3 போட்டிகளில் வென்றாலும் அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்வது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

    முன்னதாக வழக்கம் போல இந்த வருடமும் பெங்களூரு அணிக்கு நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 500-க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து அசத்தலாக செயல்பட்டு வருகிறார். அதனால் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள அவர் ஆரஞ்சு தொப்பியையும் தன்வசம் வைத்துள்ளார். இருப்பினும் அந்த ரன்களை விராட் கோலி கொஞ்சம் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் எடுத்துள்ளார். அதனால் பெங்களூரு அணி தோற்கும் போதெல்லாம் அதற்கு விராட் கோலிதான் காரணம் என்று விமர்சனங்கள் காணப்படுகின்றன.

    இந்நிலையில் விராட் கோலி போன்ற தனிநபரால் கோப்பையை வெல்ல முடியாது என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    அவர் என்ன விமர்சனத்தை எதிர்கொள்கிறார்? ஒரு வீரர் 100 - 150 ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்கள் அடித்தால் அது நன்றாக இல்லையா? ஒருவேளை அதே ரன்களை வைத்து அணி வெற்றி பெற்றிருந்தால் இந்த விமர்சனங்கள் வருமா? கேப்டனாக இருந்தபோது சந்தித்த அதே அழுத்தத்தை இப்போதும் விராட் கோலி சந்திக்கிறார். நல்ல ரன்களை அடிக்கும் அவரைப் போன்ற ஒருவரால் மட்டும் போட்டியை வெற்றி பெற முடியாது. எனவே அவரை விமர்சிப்பது தேவையற்றது நியாயமற்றது. விராட் கோலியிடம் இன்னும் நிறைய ஆட்டம் இருக்கிறது.

    16 வருடங்களாக நம்முடைய செயல்பாடுகள் ஏன் தொடர்ச்சியாக நன்றாக இல்லை என்பது பற்றி பெங்களூரு அணி நிர்வாகம் சிந்திக்க வேண்டும். அவர்களின் பேட்டிங் நன்றாக இருக்கிறது. ஆனால் பவுலர்கள் பலவீனமாக இருக்கின்றனர். சிலர் பவுண்டரி அளவு சிறியதாக உள்ளதாக பேசுகின்றனர். ஆனால் 1987-ல் டெஸ்ட் போட்டியில் நான் விளையாடியபோது இருந்த அதே பவுண்டரி அளவு தான் பெங்களூரு மைதானத்தில் இப்போதும் இருக்கிறது.

    270 ரன்கள் அடிக்கப்படும் ஐ.பி.எல். தொடரில் ஒருவர் 150 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடினால் உடனே நங்கூரமாக விளையாடுகிறார் என்று அனைவரும் சொல்கின்றனர். அதனால் இப்போதெல்லாம் நீங்கள் முதல் பந்திலிருந்தே நிற்காமல் அடிக்க வேண்டிய நிலைமையை சந்திக்கின்றனர்.

    என்று அக்ரம் கூறினார்.

    • டு பிளிஸ்சிஸ் 23 பந்தில் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • விராட் கோலி 27 பந்தில் 42 ரன்களில் எடுத்து அவுட் ஆனார்.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் 147 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    இதனால் 148 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி அணி களம் இறங்கியது. டு பிளிஸ்சிஸ், விராட் கோலி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். விராட் கோலி முதல் ஓவரில் 2 சிக்சர்கள் விளாசினார். அடுத்த ஓவரில் இருந்து டு பிளிஸ்சிஸ் அதிரடியை தொடங்கினார். 2-வது ஓவரில் டு பிளிஸ்சிஸ் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸ் அடித்தார்.

    3-வது ஓவரில் டு பிளிஸ்சிஸ் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி அடித்தார். இதனால் 3 ஓவரில் ஆர்சிபி 46 ரன்கள் சேர்த்தது. 4-வது ஓவரில் 4 பவுண்டரிகள் விளாசினார்.

    5-வது ஓவரில் விராட் கோலி இரண்டு சிக்ஸ் அடித்தார். இந்த ஓவரின் கடைசி பந்தில் 1 ரன் எடுத்து டு பிளிஸ்சிஸ் 18 பந்தில் அரைசதம் அடித்தார். 6-வது ஓவரின் 5-வது பந்தில் டு பிளிஸ்சிஸ் 23 பந்தில் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அதன்பின் வந்த வில் ஜேக்ஸ் 1 ரன்னிலும், ரஜத் படிதர் 2 ரன்னிலும், மேக்ஸ்வெல் 4 ரன்னிலும், க்ரீன் 1 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் ஆர்சிபி 9.5 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்திருந்தது.

    92 ரன்னுக்கு விக்கெட் இழக்காத ஆர்சிபி 111 ரன்னுக்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்தது. இருந்தபோதிலும் விராட் கோலி ஆட்டமிழக்காமல் ஒரு பக்கம் நிலைத்து நின்று விளையாடினார்.

    6-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். விராட் கோலி 27 பந்தில் 42 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது ஆர்சிபி 6 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் எடுத்திருந்தது. வெற்றிக்கு 31 ரன்கள் தேவைப்பட்டது.

    தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடினார். இதனால் பெங்களூரு அணி வெற்றியை நோக்கி சென்றது. தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாட ஆர்சிபி 13.4 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    தினேஷ் கார்த்திக் 12 பந்தில் 21 ரன்களுடனும், ஸ்வப்னில் சிங் 9 பந்தில் 15 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். குஜராத் டைட்டன்ஸ் அணி சார்பில் ஜோசுவா லிட்டில் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    • குஜராத் டைட்டன்ஸ் பவர்பிளேயில் 23 ரன்கள் மட்டுமே எடுத்தது.
    • ஷாருக் கான் 37, டேவிட் மில்லர் 30, டெவாட்டியா 35.

    பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் ஆர்சிபி- குஜராத் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற ஆர்சிபி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி குஜராத் அணியின் சகா, சுப்மன் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தொடக்கத்திலேயே குஜராத் அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரின் 3-வது பந்தில் சகா 7 பந்துகள் சந்தித்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து சாய் சுதர்சன் களம் இறங்கினார். மறுமுனையில் விளையாடிய சுப்மன் கில் 7 பந்தில் 2 ரன் எடுத்த நிலையில் சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார். அதேவேளையில் சுதர்சன் 14 பந்தில் 6 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். இதனால் 19 ரன்கள் எடுப்பதற்குள் குஜராத் 3-விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

    4-வது விக்கெட்டுக்கு ஷாருக் கான் உடன் மில்லர் ஜோடி சேர்ந்தார். குஜராத் டைட்டன்ஸ் பவர்பிளேயான முதல் 6 ஓவரில் 23 ரன்களே அடித்தது.

    பின்னர் ஷாருக் கான்- மில்லர் ஜோடி மெல்ல மெல்லி சரிவில் இருந்து மீண்டது. 9 ஓவரில் 49 ரன்னைத் தொட்ட நிலையில், 10-வது ஓவரில் 12 ரன்கள் கிடைத்தன.

    மில்லர் 20 பந்தில் 30 ரன்கள் எடுத்த நிலையிலும், ஷாருக்கான் 24 பந்தில் 37 ரன்கள் எடுத்த நிலையிலும் வெளியேறினர். இதனால் மீண்டும் ஸ்கோரில் தொய்வு ஏற்பட்டது.

    குஜராத் அணி 14.3 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. 5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டெவாட்டியா, ரஷித் கான் அதிரடியில் இறங்கினர். இருந்தபோதிலும் 18-வது ஓவரில் ரஷித் கான் ஆட்டமிழந்தார். இதே ஓவரில் டெவாட்டியா 21 பந்தில் 35 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதனால் குஜராத் டைட்டன்ஸ் 18 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் அடித்திருந்தது.

    கடைசி ஓவரில் தொடர்ச்சியாக 3 விக்கெட்டுகளை இழக்க குஜராத் டைட்டன்ஸ் 147 ரன்னில் ஆல்அவுட் ஆனது. ஆர்சிபி அணி சார்பில் முகமது சிராஜ், யாஷ் தயாள், விஜயகுமார் வைசாக் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    ×