search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "aap"

    • கெஜ்ரிவால் வீட்டில் வைத்து ஸ்வாதி மாலிவால் தாக்கப்படவில்லை என ஆம் ஆத்மி குற்றம்சாட்டியது.
    • ஆம் ஆத்மி எம்.பி. தாக்கப்பட்டது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    புதுடெல்லி:

    ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யான ஸ்வாதி மாலிவால், கெஜ்ரிவால் வீட்டில் அவரது தனிச்செயலாளரால் தாக்கப் பட்டேன் என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுகுறித்து டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஸ்வாதி மாலிவால் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். அப்போது, பிபவ் குமார் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தினர்.

    கெஜ்ரிவால் வீட்டில் வைத்து ஸ்வாதி மாலிவால் தாக்கப்படவில்லை. இது பா.ஜ.க.வின் சதி என ஆம் ஆத்மி கட்சியின் மந்திரி அதிஷி குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அதிஷி கூறுகையில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் கிடைத்ததில் இருந்து பா.ஜ.க. கலக்கம் அடைந்துள்ளது. இதனால் ஸ்வாதி மாலிவாலை கெஜ்ரிவால் வீட்டிற்கு கடந்த 13-ம் தேதி அனுப்பி பா.ஜ.க. சதித்திட்டம் வகுத்துள்ளது. முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை குற்றம்சாட்ட வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம். ஆனால், அவர் அங்கே இல்லை என்பதால் அவர் பாதுகாக்கப்பட்டார். பா.ஜ.க.வின் இந்த சதியில் ஸ்வாதி மாலிவால் பயன்படுத்தப்பட்டுள்ளார் என தெரிவித்தார்.

    இதற்கிடையே, ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரத்தில் கெஜ்ரிவாலின் தனிச்செயலாளரான பிபவ் குமாரை டெல்லி போலீசார் நேற்று கைது செய்தனர்.

    இந்நிலையில், டெல்லியில் உள்ள திஸ் ஹசாரி நீதிமன்றத்தில் பிபவ் குமார் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

    • ஆம் ஆத்மி கட்சி வீடியோ வெளியிட்டு இது பா.ஜ.க. சதி என குற்றம்சாட்டியது.
    • ஸ்வாதி மாலிவால் மீது சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் பிபவ் குமார் புகார் கொடுத்தார்.

    புதுடெல்லி:

    ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யான ஸ்வாதி மாலிவால், கெஜ்ரிவால் வீட்டில் அவரது தனிச்செயலாளரால் தாக்கப் பட்டேன் என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுகுறித்து டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஸ்வாதி மாலிவால் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். அப்போது, பிபவ் குமார் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தினர்.

    கெஜ்ரிவால் வீட்டில் வைத்து ஸ்வாதி மாலிவால் தாக்கப்படவில்லை. இது பா.ஜ.க.வின் சதி என ஆம் ஆத்மி கட்சியின் மந்திரி அதிஷி குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அதிஷி கூறுகையில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் கிடைத்ததில் இருந்து பா.ஜ.க. கலக்கம் அடைந்துள்ளது. இதனால் ஸ்வாதி மாலிவாலை கெஜ்ரிவால் வீட்டிற்கு கடந்த 13-ம் தேதி அனுப்பி பா.ஜ.க. சதித்திட்டம் வகுத்துள்ளது. முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை குற்றம்சாட்ட வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம். ஆனால், அவர் அங்கே இல்லை என்பதால் அவர் பாதுகாக்கப்பட்டார் என தெரிவித்தார்.

    இதற்கிடையே, முதல் மந்திரி கெஜ்ரிவாலின் தனிச்செயலாளர் பிபவ் குமார், ஸ்வாதி மாலிவால் மீது சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    இந்நிலையில், ஸ்வாதி மாலிவாக் தாக்கப்பட்ட விவகாரத்தில் கெஜ்ரிவாலின் தனிச்செயலாளரான பிபவ் குமாரை டெல்லி போலீசார் இன்று செய்தனர்.

    • டெல்லி முதல் மந்திரியின் தனிச்செயலர் தாக்கியதாக ஆம் ஆத்மி பெண் எம்.பி. குற்றச்சாட்டு.
    • ஆம் ஆத்மி கட்சி வீடியோ பதிவை வெளியிட்டு சதி என பா.ஜ.க.வை குற்றம்சாட்டியது.

    புதுடெல்லி:

    ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யான ஸ்வாதி மாலிவால், கெஜ்ரிவால் வீட்டில் அவரது தனிச்செயலாளரால் தாக்கப் பட்டேன் என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுகுறித்து டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஸ்வாதி மாலிவால் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். அப்போது, பிபவ் குமார் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையே, கெஜ்ரிவால் வீட்டில் வைத்து ஸ்வாதி மாலிவால் தாக்கப்படவில்லை. இது பா.ஜ.க.வின் சதி என ஆம் ஆத்மி கட்சியின் மந்திரி அதிஷி குற்றம்சாட்டியுள்ளார்.

    இதுதொடர்பாக அதிஷி கூறுகையில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் கிடைத்ததில் இருந்து பா.ஜ.க. கலக்கம் அடைந்துள்ளது. இதனால் ஸ்வாதி மாலிவாலை கெஜ்ரிவால் வீட்டிற்கு கடந்த 13-ம் தேதி அனுப்பி பா.ஜ.க. சதித்திட்டம் வகுத்துள்ளது. முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை குற்றம்சாட்ட வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம். ஆனால், அவர் அங்கே இல்லை என்பதால் அவர் பாதுகாக்கப்பட்டார். பா.ஜ.க.வின் இந்த சதியில் ஸ்வாதி மாலிவால் பயன்படுத்தப்பட்டுள்ளார் என தெரிவித்தார்.

    இந்நிலையில், முதல் மந்திரி கெஜ்ரிவாலின் தனிச்செயலாளர் பிபவ் குமார், ஸ்வாதி மாலிவால் மீது சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

    அந்தப் புகாரில், ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. தவறான அழுத்தத்தை உருவாக்கும் முயற்சியில் என்னை சிக்கவைக்க முயன்றார். மே 13 அன்று டெல்லி முதல் மந்திரி இல்லத்திற்குள் பலவந்தமாகவும், அங்கீகரிக்கப்படாமலும் நுழைந்துள்ளார். ஒரு குழப்பத்தை உருவாக்கி என்னை தாக்க முயன்றார் என குறிப்பிட்டுள்ளார்.

    • அரவிந்த் கெஜ்ரிவால் தனிச் செயலாளர் தாக்கியதாக மாநிலங்களவை பெண் எம்.பி. குற்றச்சாட்டு.
    • ஆம் ஆத்மி கட்சி வீடியோ பதிவை வெளியிட்டு சதி என பா.ஜனதாவை குற்றம்சாட்டியுள்ளது.

    ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை பெண் எம்.பி.யான ஸ்வாதி மாலிவால், தான் கெஜ்ரிவால் வீட்டில் அவரது தனிச் செயலாளரால் தாக்கப்பட்டேன் என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

    இது தொடர்பாக டெல்லி மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அப்போது கெஜ்ரிவாலின் தனிச்செயலாளர் பிபவ் குமார் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் கெஜ்ரிவால் வீட்டில் வைத்து ஸ்வாமி மாலிவால் தாக்கப்படவில்லை. இது பா.ஜனதாவின் சதி என 52 வினாடி வீடியோவை சுட்டிக்காட்டி ஆம் ஆத்மி கட்சியின் அதிஷி என குற்றம்சாட்டியுள்ளார்.

    அந்த வீடியோவில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வீட்டிற்கு வந்திருந்த ஸ்வாதி மாலிவாலை, வெளியேறும்படி பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். இதனைக் கேட்டு ஸ்வாமி மாலிவால் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். பாதுகாப்பு அதிகாரிகளை மிரட்டுகிறார். அவர்களை வெளியேற்ற முற்படுகிறார் என்பதுபோல் உள்ளது.

    இந்த வீடியோவை பார்க்கும்போது, டெல்லி மாநிலத்தில் நடைபெற இருக்கும் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவுக்கு முன்னதாக கெஜ்ரிவாலை குறிவைத்து பா.ஜனதாவல் நடத்தப்பட்ட திட்டம் தற்போது வெளியாகியுள்ளது என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

    அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் கிடைத்ததில் இருந்து பா.ஜனதா கலக்கம் அடைந்துள்ளது. இதனால் ஸ்வாதி மாலிவாலை கெஜ்ரிவால் வீட்டிற்கு கடந்த 13-ந்தேதி அனுப்பி பா.ஜனதா சதித்திட்டம் வகுத்துள்ளது. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை குற்றம்சாட்ட வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம். ஆனால், அவர் அங்கே இல்லை என்பதால், அவர் பாதுகாக்கப்பட்டார். பா.ஜனதாவின் இந்த சதியில் ஸ்வாதி மாலிவால் பயன்படுத்தப்பட்டுள்ளார் என அதிஷி தெரிவித்துள்ளார்.

    மேலும், போலீஸ் புகாரில் அவர் தாக்கப்பட்டதாக கூறியுள்ளார். ஆனால், வீடியோ காட்சியில் அவர் வசதியாக உட்கார்ந்து கொண்டு அதிகாரிகளை மிரட்டுகிறார். மேலும், பிபவ் குமாரை மிரட்டுவதையும் பார்க்க முடிகிறது என அதிஷி தெரிவித்துள்ளார்.

    • அமலாக்கத்துறை இதுவரை எட்டு முறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
    • முதன்முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் பெயர் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளது.

    டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி மாநில முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்த நிலையில், திகார் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அவர் இடைக்கால ஜாமின் பெற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    இந்த நிலையில் இன்று ரோஸ் அவென்யூவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை துணை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இதில் தேசிய அரசியல் கட்சியான ஆம் ஆத்மி கட்சியை குற்றம்சாட்டப்பட்டவராக அமலாக்கத்துறை இணைத்துள்ளது. அதேபோல் குற்றப்பத்திரிகையில் அரவிந்த் கெஜ்ரிவால் பெயரையும் இணைத்துள்ளது.

    டெல்லி மாநில மதுபானக் கொள்கை வழக்கில் பணமோசடி என்ற கோணத்தில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை அமலாக்கத்துறை எட்டு முறை இந்த வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ஆனால் தற்போது முதன்முறையாக அரவிந்த கெஜ்ரிவால் பெயர் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளது.

    குற்றம்சாட்டப்பட்டவராக ஆம் ஆத்மி கட்சியை பெயரை இணைத்துள்ளதால் அந்த கட்சிக்கு பாதிப்பு ஏற்படும் என தகவல் தெரிவிக்கின்றன.

    ஆம் ஆத்மி கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுத முடியும். கட்சியின் சொத்துகளை முடக்க முடியும். டெல்லியில் உள்ள தலைமைக் கழகம் உள்ளிட்ட சொத்துகளை முடக்க முடியும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

    • ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவாலிடம் போலீசார் நேற்று வாக்குமூலம் வாங்கினர்.
    • டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஸ்வாதி மாலிவாலுக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது.

    புதுடெல்லி:

    டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் வைத்து அவரது தனிச்செயலாளர் பிபவ் குமார் தாக்கியதாக ஆம் ஆத்மியின் மாநிலங்களவை பெண் எம்.பி ஸ்வாதி மாலிவால் கடந்த 13-ம் தேதி டெல்லி போலீசில் முறையிட்டார். இதுகுறித்து டெல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    குற்றம் சாட்டப்பட்ட பிபவ் குமார் மே 17-ம் தேதி தேசிய மகளிர் ஆணையத்தின் முன் நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக கெஜ்ரிவால் அரசுமீது எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனம் செய்து வருகின்றன.

    இதற்கிடையே, ஸ்வாதி மாலிவால் வீட்டுக்குச் சென்ற போலீசார் அவரிடம் 4 மணி நேரம் வாக்குமூலம் பெற்றனர்.

    இந்நிலையில், ஸ்வாதி மாலிவாலிடம் வாக்குமூலம் வாங்கிய போலீசார் கூறியதாவது:

    முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலைச் சந்திக்க காத்திருந்தபோது பிபவ் குமார் அறைக்குள் வந்து ஸ்வாதி மாலிவாலை திட்டினார். மேலும், பலமுறை அறைந்துள்ளார். அவரது முகம், மார்பு, வயிறு மற்றும் உடலின் கீழ் பகுதியில் தாக்கியுள்ளார். மாலிவால் தன்னை விடும்படி கெஞ்சியுள்ளார். பிறகு அங்கிருந்து வெளியே ஓடி வந்துள்ளார் என தெரிவித்தனர்.

    இதையடுத்து, டெல்லி போலீசார் ஸ்வாதி மாலிவாலை மருத்துவ பரிசோதனைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவ பரிசோதனை முடிந்தபின் ஸ்வாதி மாலிவால் நேற்று இரவு வீடு திரும்பினார் எனவும் போலீசார் தெரிவித்தனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக பிபவ் குமார் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி அரசுமீது எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் செய்துவருகின்றன.
    • ஸ்வாதி மாலிவால் வீட்டுக்குச் சென்ற போலீசார் அவரிடம் 4 மணி நேரம் வாக்குமூலம் பெற்றனர்.

    புதுடெல்லி:

    டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் வைத்து அவரது தனிச்செயலாளர் பிபவ் குமார் தன்னைத் தாக்கியதாக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை பெண் எம்.பி ஸ்வாதி மாலிவால் கடந்த 13-ம் தேதி டெல்லி போலீசிடம் போன் மூலம் முறையிட்டார். இதையடுத்து, டெல்லி போலீசார் இந்த குற்றச்சாட்டு குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

    குற்றம் சாட்டப்பட்ட பிபவ் குமார் மே 17-ம் தேதி காலை 11 மணி அளவில் தேசிய மகளிர் ஆணையத்தின் முன் நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக கெஜ்ரிவால் அரசுமீது எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனம் செய்து வருகின்றன.

    இதற்கிடையே, ஸ்வாதி மாலிவால் வீட்டுக்குச் சென்ற போலீசார் அவரிடம் 4 மணி நேரம் வாக்குமூலம் பெற்றனர். அப்போது அவர் எழுத்துப்பூர்வமாக போலீசிடம் புகார் அளித்தார்.

    இந்நிலையில், முதல் மந்திரியின் தனிச்செயலர் பிபவ் குமார் மீது டெல்லி போலீசார் நேற்று எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.

    • சுப்ரீம் கோர்ட் கடந்த 10-ம் தேதி முதல் மந்திரி கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது.
    • ஜாமினில் வெளிவந்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    புதுடெல்லி:

    டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். தன் மீதான கைது நடவடிக்கையை எதிர்த்து கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் கடந்த 10-ந்தேதி அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

    இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து டெல்லியில் மக்களவை தேர்தலைச் சந்திக்கின்றன.

    இந்நிலையில், டெல்லி சாந்தினி சவுக் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜே.பி.அகர்வாலை ஆதரித்து அரவிந்த் கெஜ்ரிவால் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    நான் சிறையிலிருந்து நேராக உங்களிடம் வந்துள்ளேன். பா.ஜ.க.வினர் என்னை சிறையில் அடைத்தபோது உங்களைப் பிரிந்து மிகவும் வருத்தமடைந்தேன்.

    நான் ஒரு சாதாரண நபர். நமது ஆம் ஆத்மி கட்சியானது டெல்லி மற்றும் பஞ்சாபில் மட்டுமே ஆட்சி செய்துவரும் சிறிய கட்சியாகும். என்னை எதற்காக கைது செய்தார்கள் என்று நான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். நான் செய்த தவறு என்ன?

    பா.ஜ.க.வைப் பொறுத்தவரை நான் ஏழை மக்களுக்காக தரமான பள்ளிகள், இலவச கல்வி, 24 மணி நேர மின்சாரம் உள்ளிட்டவற்றை கொடுத்ததுதான் நான் செய்த தவறாகும். இப்பொழுது நான் மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

    நீங்கள் வாக்கு செலுத்தும்போது கெஜ்ரிவால் மீண்டும் சிறைக்கு செல்லவேண்டுமா? என சிந்தித்து வாக்களியுங்கள். நான் மீண்டும் ஜூன் 2-ம் தேதி சிறைக்கு செல்லவேண்டுமா, இல்லையா என்பது உங்கள் கையில்தான் இருக்கிறது. நீங்கள் தாமரை சின்னத்தை அழுத்தினால் நான் சிறைக்கு செல்வேன். நீங்கள் இந்தியா கூட்டணி வேட்பாளரை தேர்ந்தெடுத்தால் நான் சிறைக்கு செல்ல வேண்டியிருக்காது. எனவே சிந்தித்து வாக்களியுங்கள் என தெரிவித்தார்.

    • டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லத்தில் வைத்து அவரின் தனிச் செயலாளர் பிபவ் குமார் தன்னை தாக்கியதாக ஆம் ஆத்மி மாநிலங்களவை பெண் எம்.பி ஸ்வாதி மலிவால் குற்றம் சாட்டியிருந்தார்
    • இந்த விவகாரம் குறித்து மவுனம் காத்து வந்த ஆம் ஆத்மி கட்சி தற்போது ஸ்வாதி மலிவால் தாக்கப்பட்டது உண்மைதான் என விளக்கமளித்துள்ளது

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லத்தில் வைத்து அவரின் தனிச் செயலாளர் பிபவ் குமார் தன்னை தாக்கியதாக ஆம் ஆத்மி மாநிலங்களவை பெண் எம்.பி ஸ்வாதி மலிவால் குற்றம் சாட்டியிருந்தார். இதுதொடர்பாக நேற்று (மே 13) ஸ்வாதியிடம் இருந்து வந்த போன் அழைப்புகளை அடுத்து சம்பவ கெஜ்ரிவால் இல்லத்துக்கு விரைந்த டெல்லி காவல்துறை 2 வது நாளாக இன்று (மே 14) விசாரணை நடத்தி வருகிறது.

    2 நாட்களுக்குள் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று டெல்லி காவல் துறையை மகளிர் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள டெல்லி பாஜக, ஆம் ஆதமியினரை கடுமையாக விமர்சித்து வருகிறது.

    இந்த விவகாரம் குறித்து மவுனம் காத்து வந்த ஆம் ஆத்மி கட்சி தற்போது ஸ்வாதி மலிவால் தாக்கப்பட்டது உண்மைதான் என விளக்கமளித்துள்ளது. ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் ராவத் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், கெஜ்ரிவாலின் இல்லத்தில் வைத்து ஸ்வாதி மலிவால் பிபவ் குமாரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுவது உண்மை தான் என்றும் இது மிகுந்த கண்டனத்துக்குரிய சம்பவம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையான நடவடிக்கை எடுப்பார் என்றும் அவர் தெரிவித்துள்துளார். பிபவ் குமார் மீது ஏற்கனவே இதுபோன்ற தாக்குதல் குற்றச்சாட்டுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் ஆம் ஆத்மி ஆளும்கட்சியாக உள்ளது.
    • கெஜ்ரிவாலின் தனி செயலாளர் தன்னை தாக்கியதாக ஆம் ஆத்மி பெண் எம்.பி குற்றம்சாட்டியுள்ளார்.

    புதுடெல்லி:

    டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் ஆளும்கட்சியாக உள்ள ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை பெண் எம்.பி. சுவாதி மலிவால்.

    இந்நிலையில், டெல்லி முதல் மந்திரியும், ஆம் ஆத்மி கட்சித் தலைவமான அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி செயலாளர் பிபவ் குமார் தன்னை தாக்கியதாக சுவாதி மாலிவால் குற்றம் சாட்டியுள்ளார். இது டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தற்போது கிடைத்துள்ள தகவலின்படி முதல் மந்திரி கெஜ்ரிவாலின் வீட்டில் வைத்து தன்னை பிபவ் தாக்கியதாக சுவாதி டெல்லி போலீசிடம் போன் செய்து முறையிட்டுள்ளார். இதையடுத்து, கெஜ்ரிவாலின் இல்லத்துக்கு விரைந்த போலீசார் இதுதொடர்பான விசாரணையை தொடங்கினர்.

    சமீபத்தில் பிபவ் குமார், சட்டத்துக்குப் புறம்பான வகையில் கெஜ்ரிவாலின் பி.ஏ.வாக நியமிக்கப்பட்டுள்ளதாக டெல்லி லஞ்ச ஒழிப்புத் துறை குற்றம்சாட்டியிருந்தது. அதுமட்டுமின்றி, கடந்த 2007-ம் ஆண்டு அரசு அதிகாரியை வேலை செய்யவிடாமல் தடுத்து தாக்குதல் நடத்தியதாகவும் பிபவ் குமார் மீது குற்றச்சாட்டு உள்ளது.

    டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் நீண்ட போராட்டத்துக்கு பிறகு மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஜாமினில் வெளியே வந்துள்ள நிலையில் அவரது சொந்த கட்சி பெண் எம்.பி.யின் குற்றச்சாட்டு அக்கட்சிக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

    • கெஜ்ரிவால் அரசை வீழ்த்த முடியாது என்று நினைத்தவர்கள், சூழ்ச்சி செய்கிறார்கள்.
    • தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை என்றால் ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்கின்றனர்.

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெற்கு டெல்லியில் உள்ள மெஹராஜ் சந்தையில் வாகன பேரணியில் ஈடுபட்டார்.

    வாகன பேரணியில் அரவிந்த் கெஜ்ரிவாலுடன், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பங்கேற்றார்.

    சிறையில் இருந்து வெளியே வந்த பின் கெஜ்ரிவால் பங்கேற்கும் முதல் தேர்தல் பிரசார வாகன பேரணி நடைபெற்றது.

    அப்போது பொது மக்கள் மத்தியில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    கெஜ்ரிவால் அரசை வீழ்த்த முடியாது என்று நினைத்தவர்கள், சூழ்ச்சி செய்கிறார்கள்.

    என்னை ஏன் அமலாக்கத்துறையை கொண்டு கைது செய்தீர்கள்? முதல்வரான என்னை கைது செய்ததன் மூலம், நாட்டில் எவரையும் கைது செய்ய என்னால் முடியும் என அனைவருக்கும் காட்ட விரும்புகிறாரா பிரதமர் மோடி ?

    தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை என்றால் ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்கின்றனர்.

    நாட்டு மக்களை முட்டாள்கள் என நினைக்க வேண்டாம். அவர்கள் அனைத்தையும் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

    ஒரே நாடு ஒரே திட்டத்தை கொண்டு வருவதே பிரதமர் மோடியின் ஒரே லட்சியம்.

    எதிர்க்கும் அனைத்து தலைவர்களையும் முடித்து கட்ட பிரதமர் மோடி நினைக்கிறார்.

    ஸ்டாலின் அமைச்சர்களை சிறையில் அடைத்துவிட்டார் பிரதமர் மோடி. ஹேமந்த் சோரனை சிறையில் அடைத்துவிட்டார். மம்தா பானர்ஜியின் அமைச்சர்களையும் சிறையில் அடைத்துவிட்டார்.

    ஒருவேளை இந்த தேர்தலில் வெற்றி பெற்றால், ஸ்டாலினையும், மம்தா பானர்ஜியையும் கூட சிறையில் அடைப்பார்கள்.

    சிவராஜ் சவுகான், வசுந்தரா ராஜே, மனோகர் லால் கட்டார் ஆகியோரின் அரசியலை முடித்தவர் பிரதமர் மோடி.

    உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத்தின் அரசியலுக்கும் விரைவில் முடிவு கட்டுவார். ஒரே நாடு ஒரே தலைவரை தான் பிரதமர் மோடி விரும்புகிறார்.

    சர்வாதிகாரத்தை எதிர்த்து ஒன்றிணைந்து வலிமையோடு போராட வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.     

    • தேர்தல் பிரசாரத்திற்காக ஜூன் 1ம் தேதி வரை ஜெக்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின்.
    • ஆத் ஆத்மி தொண்டர்கள் கெஜ்ரிவாலை கோஷம் எழுப்பி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் இடைக்கால ஜாமின் பெற்ற அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

    அமலாக்கத்துறையின் எதிர்ப்பை மீறி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம், சில நிபந்தனைகளுடன் இடைக்கால ஜாமின் வழங்கியது.

    பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக ஜூன் 1ம் தேதி வரை ஜெக்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்நிலையில், கெஜ்ரிவாலின் மானைவி சுனிதா கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உள்ளிட்டோர் திகார் சிறையில் இருந்து கெஜ்ரிவாலை வரவேற்று அழைத்துச் சென்றனர்.

    ஆத் ஆத்மி தொண்டர்கள் கெஜ்ரிவாலை கோஷம் எழுப்பி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    தொண்டர்கள் மத்தியில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் "சர்வாதிகாரத்தை ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும். சர்வாதிகார சக்திகளிடம் இருந்து நாட்டை பாதுகாக்க வேண்டும்.

    மேலும், எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. " என பேசினார்.

    ×