search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரஜ்வல் ரேவண்ணா"

    • சிறப்பு புலனாய்வு குழுவினர் கடந்த 31-ந் தேதி கைது செய்தனர்.
    • வருகிற 18-ந் தேதி வரை காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியானதையடுத்து பிரஜ்வல் ரேவண்ணா மீது பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகாரின் பேரில் 3 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

    இதற்கிடையே பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டிற்கு தப்பி சென்றார். இதையடுத்து அவரை பிடிக்க சிறப்பு புலனாய்வு குழுவினர் தீவிரம் காட்டி வந்தனர். அதன் பேரில் பெங்களூரு விமான நிலையத்தில் வைத்து பிரஜ்வல் ரேவண்ணாவை சிறப்பு புலனாய்வு குழுவினர் கடந்த 31-ந் தேதி கைது செய்தனர்.

    இதையடுத்து பலாத்கார வழக்குகள் குறித்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். 2 முறை போலீஸ் காவலில் எடுத்து பிரஜ்வலிடம் விசாரணை நடத்தினர். பின்னர் காவல் முடிவடைந்த நிலையில் அவர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்தநிலையில் பெங்களூருவில் சைபர் கிரைம் போலீசில் பதிவான பாலியல் வழக்கு தொடர்பாக பிரஜ்வல் ரேவண்ணாவை சிறப்பு புலனாய்வு குழுவினர் காவலில் எடுக்க முடிவு செய்தனர். இதற்காக அவரை மக்கள் பிரதிநிதிகள் கோர்ட்டில் நேற்று போலீசார் ஆஜர் படுத்தினர்.

    அப்போது பிரஜ்வல் ரேவண்ணாவை காவலில் எடுத்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவினர் தரப்பில் அனுமதி கோரப்பட்டது. அதனை ஏற்ற நீதிபதி, பிரஜ்வல் ரேவண்ணாவை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவுக்கு அனுமதி வழங்கினார்.

    அதன்படி வருகிற 18-ந்தேதி வரை பிரஜ்வல் ரேவண்ணாவை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • போலீசார் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
    • 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கும்படி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்ட முன்னாள் எம்.பி.யான பிரஜ்வல் ரேவண்ணா (வயது 33) பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோக்கள் கர்நாடகத்தில் முதற்கட்ட பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக அவர் மீது 3 பலாத்கார வழக்குகள் பதிவானது. இந்த வழக்குகளில் போலீசாரிடம் சிக்காமல் ஒரு மாதத்திற்கும் மேலாக அவர் ஜெர்மனியில் தலைமறைவாக இருந்தார்.

    பின்னர் கடந்த மாதம் 31-ந் தேதி ஜெர்மனியில் இருந்து பெங்களூரு திரும்பிய பிரஜ்வல் ரேவண்ணா கைது செய்யப்பட்டார். அவரை 6-ந்தேதி முதல் 10-ந்தேதி (நேற்று) வரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். போலீஸ் விசாரணைக்கு அவர் ஒத்துழைப்பு அளிக்காமல் இருந்து வந்ததாக தகவல்கள் வெளியானது.

    இந்த நிலையில் நேற்று காலையில் பெங்களூரு பசவனகுடியில் உள்ள பிரஜ்வல் ரேவண்ணா வீட்டுக்கும், அவரை போலீசார் அழைத்து சென்றார்கள்.

    பிரஜ்வல் ரேவண்ணாவை போலீசார் அழைத்து சென்றபோது வீட்டின் முதல் மாடியில், அவரது தாய் பவானி ரேவண்ணா இருந்தார். ஆனாலும் தாயை சந்திக்கவும், அவருடன் பேசுவதற்கும் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. பிரஜ்வல் ரேவண்ணாவால் பலாத்காரத்திற்கு உள்ளான பெண்ணை கடத்திய வழக்கில் பவானி ரேவண்ணா முன்ஜாமீன் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

    நேற்றுடன் போலீஸ் காவல் நிறைவடைந்ததை தொடர்ந்து பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டில் நேற்று மதியம் 3 மணியளவில் பிரஜ்வல் ரேவண்ணாவை நீதிபதி முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினா்.

    இதையடுத்து, பிரஜ்வல் ரேவண்ணாவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கும்படி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். அதைத்தொடர்ந்து, கோர்ட்டில் இருந்து அவர் பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.

    ஏற்கனவே பிரஜ்வல் ரேவண்ணாவால் பலாத்காரத்திற்கு உள்ளான பெண்ணை கடத்தியதாக, அவரது தந்தையான முன்னாள் மந்திரி எச்.டி.ரேவண்ணா இதே பரப்பனஅக்ரஹாரா சிறையில் கடந்த மாதம் 8-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை 6 நாட்கள் அடைக்கப்பட்டிருந்தார். அதன்பிறகு அவர் ஜாமீனில் விடுதலை ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • காதலிக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன்.
    • காதலி குறித்து வேறு எந்த தகவலையும் வெளியிட போலீசார் மறுத்து விட்டனர்.

    பெங்களூரு:

    கர்நாடகா மாநிலம் ஹாசன் தொகுதியின் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியானதை யடுத்து அவர் ஜெர்மனிக்கு தப்பி சென்றார்.

    இதையடுத்து அவரை சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் தேடிவந்த நிலையில் கடந்த 31-ந் தேதி அதிகாலை ஜெர்மனியில் இருந்து பெங்களூரு வந்த போது பிரஜ்வல் ரேவண்ணா கைது செய்யப்பட்டார்.

    இதையடுத்து போலீசார் பிரஜ்வல் ரேவண்ணாவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். கடந்த 6-ந் தேதியுடன் அவரது காவல் முடிவடைந்தது.

    இதையடுத்து போலீசார் மீண்டும் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது மேலும் 5 நாட்கள் போலீசார் விசாரணை நடத்த அனுமதி கேட்டனர். இதையடுத்து மீண்டும் 5 நாட்கள் போலீஸ் காவலுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

    இதைதொடர்ந்து பிரஜ்வல் ரேவண்ணாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். ஆனால் அவர் பெரும்பாலான கேள்விகளுக்கு எந்த பதிலும் தெரிவிக்காமல் மவுனமாக இருந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    இதற்கிடையே பிரஜ்வல் பிறந்து வளர்ந்த ஹோலே நரசிப்பூர் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் நேற்று அழைத்து சென்று சோதனை நடத்தினர்.

    கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ் நாயுடு தலைமையில் இந்த சோதனை நடந்தது. சுமார் 4 மணி நேரம் அவரது வீட்டில் இந்த சோதனை நடந்தது. அப்போது பிரஜ்வலை பார்த்து அவரது தந்தை ரேவண்ணா கண்ணீர் விட்டு அழுதார். இதைப்பார்த்த பிரஜ்வலும் அழுதார். பின்னர் போலீசார் பிரஜ்வலை அங்கிருந்து மீண்டும் விசாரணை அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர்.

    பிரஜ்வல் ஜெர்மனியில் பதுங்கி இருந்த போது அவர் தொடர்பில் இருந்தவர்கள் பற்றி நடத்திய விசாரணையின் அடிப்படையில் பிரஜ்வல் தங்க மற்றும் அவருக்கு தேவையான பண உதவிகளை அவரது காதலி செய்து இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் அவரது காதலிக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி உள்ளனர். மேலும் பிரஜ்வல் காதலி குறித்து வேறு எந்த தகவலையும் வெளியிட போலீசார் மறுத்து விட்டனர்.

    இதே போல் பிரஜ்வல் ரேவண்ணாவின் காவல் நாளையுடன் முடிவடைகிறது. எனவே அவரை மீண்டும் நாளை மாலை கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். 3-வது முறையாகவும் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    • நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பிரஜ்வல் ரேவண்ணா தோல்வியடைந்தார்.
    • சிறப்பு விசாரணைக்குழு போலீசார் பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்தனர்.

    கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா, பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச வீடியோ வெளியாகி கடும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல்வேறு பெண்களை துன்புறுத்தி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக கர்நாடகா மாநிலம் சிறப்பு விசாரணைக்குழு அமைத்து விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையே பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு சென்றுவிட்டார். கர்நாடகா மற்றும் மத்திய அரசு கொடுத்த அழுத்தம் காரணமாக இந்தியா திரும்பி விசாரணையை எதிர்கொள்வேன் என அறிவித்திருந்தார்.

    இந்த நிலையில் மே 31 அன்று பிரஜ்வல் ரேவண்ணா பெங்களூரு வந்தடைந்தார். பெங்களூரு வந்து இறங்கியதும் சிறப்பு விசாரணைக்குழு போலீசார் அவரை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணா அன்று பிற்பகல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது பிரஜ்வல் ரேவண்ணாவை ஜூன் 6-ந்தேதி வரை காவலில் வைத்து விசாரணை நடத்த போலீஸ்க்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

    இதனிடையே நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பிரஜ்வல் ரேவண்ணா தோல்வியடைந்தார்.

    இந்நிலையில், பிரஜ்வல் ரேவண்ணாவின் போலீஸ் காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் பெங்களூரு நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ரேவண்ணாவின் போலீஸ் காவலை ஜூன் 10 வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியில் போட்டியிட்ட அமித்ஷா முன்னிலை.
    • டெல்லியில் 7 இடங்களில் பா.ஜ.க. முன்னிலையில் உள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றது. தற்போதைய நிலவரப்படி தேசிய ஜனநாயக கூட்டணி 264 இடங்களிலும், இந்தியா கூட்டணி 198 இடங்களிலும், மற்றவை 20 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றது.

    கர்நாடக மாநிலம் ஹாசன் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட பிரஜ்வல் ரேவண்ணா முன்னிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, பாலியல் வழக்கில் சிக்கி வெளிநாட்டில் தலைமறைவாக இருந்தபிரஜ்வல் ரேவண்ணா தற்போது கைதாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    * குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியில் போட்டியிட்ட அமித்ஷா முன்னிலை.

    * இமாச்சலப் பிரதேசம் ஹமீர்பூர் தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் அனுராக் தாகூர் முன்னிலையில் உள்ளார்.

    * இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியில் போட்டியிட்ட நடிகை கங்கனா ரனாவத் முன்னிலை வகிக்கிறார்.

    * டெல்லியில் 7 இடங்களில் பா.ஜ.க. முன்னிலையில் உள்ளது.

    * கேரள மாநிலம் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்ட நடிகர் சுரேஷ் கோபி பின்னடைவை சந்தித்துள்ளார்.

    • வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
    • பின்னால் உள்ள காரணத்தை கண்டறியுமாறு அதிகாரிகளிடம் பிரஜ்வல் கோரிக்கை.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் ஹாசன் பாராளுமன்ற தொகுதி எம்.பி.யாக இருப்பவர் பிரஜ்வல் ரேவண்ணா. இவர் பல பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனியில் இருந்து பெங்களூரு திரும்பி வந்ததும் அவரை கைது செய்து கடந்த 31-ந்தேதி முதல் 6 நாட்கள் வரை தங்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள்.

    பெங்களூரு அரண்மனைசாலையில் உள்ள சி.ஐ.டி. தலைமையகத்தில் சிறப்பு புலனாய்வு குழு போலீசார் அவரிடம் துருவி, துருவி விசாரித்து வருகிறார்கள்.

    நேற்று முன்தினம் இரவு அவரிடம் பலாத்கார வழக்கு தொடர்பாக அடுக்கடுக்கான கேள்விகளை போலீசார் எழுப்பினர். அப்போது அவர் போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. வெளியே வந்தவுடன் பார்த்துக் கொள்கிறேன் என அதிகாரிகளை மிரட்டியதாக கூறப்படுகிறது.

    இன்று 3-வது நாளாக போலீசார் மீண்டும் பிரஜ்வல் ரேவண்ணாவிடம் விசாரணை மேற்கொண்டனர். பாதிக்கப்பட்ட பெண்ணை பற்றி உங்களுக்கு தெரியுமா? என கேள்வி கேட்டனர். அதற்கு பிரஜ்வல் ரேவண்ணா புகார் அளித்த பெண் யாரென்று எனக்கு தெரியாது. நான் அவரை பார்த்ததில்லை. நான் பெங்களூர், ஹாசன், டெல்லியில் இருக்கிறேன். அவர் யாரென்று தெரியவில்லை என்றார்.

    உங்களது மற்ற செல்போன்கள் எங்கே? என கேட்டபோது நான் பயன்படுத்தும் செல்போன் இப்போது உங்களிடம் உள்ளது. அதை தவிர வேறு செல்போன் இல்லை. மற்றொரு செல்போன் தொலைந்து போயிருக்கலாம். நான் அந்த செல்போனை பயன்படு த்தவில்லை.

    மேலும் அரசியல் சதி காரணமாக என் மீது பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நான் எந்த தவறும் செய்யவில்லை. 4 ஆண்டுகளுக்கு பிறகு பலாத்கார புகாருக்கு பின்னால் உள்ள காரணத்தை கண்டறியுமாறு அதிகாரிகளிடம் பிரஜ்வல் கோரிக்கை விடுத்தார்.

    மேலும் சித்தரிக்கப்பட்ட ஆபாச வீடியோக்களை வெளியிட்டு என்னை சிக்க வைத்துள்ளனர். இந்த வீடியோக்களை வெளியிட்டு அரசியல் கட்சியினர் விளம்பரப்படுத்தியுள்ளனர். இந்த வீடியோக்களின் பின்னணியில் இருக்கும் கார்த்திக் உள்ளிட்டோரை கைது செய்து விசாரித்தால் உண்மை நிலை தெரியவரும் என பிரஜ்வல் கூறியதாக தெரிகிறது.

    அவர் கூறியபடி கார்த்திக் என்பவரிடம் விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் பெண்கள் பலத்காரம் செய்யப்பட்ட ஹாசன் பகுதியில் உள்ள வீட்டிற்கு அழைத்து சென்று ஆதராங்களை திரட்ட உள்ளனர்.

    முதல் நாள் விசாரணையில் எதிர்ப்பார்த்தபடி பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. அவர் அச்சுறுத்தும் வகையில் பேசினார். இது குறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும். நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்படும். 2 நாட்கள் விசாரணை முடிவடைந்துள்ள நிலையில் குற்றம் நடந்த இடமான ஹாசனுக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது என சிறப்பு புலனாய்வு குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    • தொலைந்து செல்போன் மூலம் வீடியோக்களை எடுத்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றன.
    • IMEI நம்பர் மூலம் செல்போனை கண்டுபிடிக்க போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

    கர்நாடகா மாநிலம் ஹசன் தொகுதி எம்.பி.யாக இருப்பவர் பிரஜ்வல் ரேவண்ணா (வயது 33). இவர் முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரன் ஆவார். ஹசன் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டுள்ளார். அந்த தொகுதிக்கு கடந்த மாதம் 26-ந்தேதி தேர்தல் நடைபெற்றது.

    தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ அடங்கிய பென் டிரைவ் வெளியானது. பல பெண்களுடன் பிரஜ்வல் இருப்பது போன்ற ஏராளமான வீடியோ கிளிப் அதில் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    பெண்களை வற்புறுத்தி வீடியோ எடுத்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. மேலும் 3 பெண்கள் பாலியல் பலாத்கார புகார் அளித்தனர்.

    இது தொடர்பாக கர்நாடகா மாநிலம் சிறப்பு விசாணைக்குழு அமைத்தது. இதற்கிடையே பிரஜ்வல் ஜெர்மனிக்கு சென்றுவிட்டார்.

    கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டதால் நேற்று அதிகாலை பெங்களூரு திரும்பிய அவரை போலீசார் கைது செய்தனர். நீதிமன்றம் அவரை வருகிற 6-ந்தேதி வரை காவலில் வைத்து விசாரணை நடத்த போலீசாருக்கு அனுமதி அளித்துள்ளது.

    அதன்படி பிரஜ்வல் ரேவண்ணாவிடம் சிறப்பு விசாரணைக்குழு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று பிரஜ்வலை ஆண்மை பரிசோதனைக்கு உட்பட்டதாக தகவல் வெளியானது.

    பெண்கள் உடன் இருக்கும் வீடியோவை அவரது செல்போன் மூலம் எடுக்கப்பட்டிருக்கலாம் என சிஐடி நம்புகிறது. இதனால் அவரது செல்போனை கண்டுபிடித்தால் மேலும் பல தகவல்களை பெற முடியும் என நினைக்கிறது.

    ஆனால் பிரஜ்வல் செல்போன் கடந்த வருடமே தொலைந்து விட்டதாம். இது தொடர்பாக காவல் நிலையத்திலும் புகார் அளித்ததுள்ளார்.

    இதனால் புகார் அளிக்கப்பட்ட காவல் நிலையத்தில் செல்போன் குறித்த தகவலை எஸ்ஐடி கேட்டுள்ளது. அவர்கள் செல்போனை கண்டுபிடிக்க முடியவில்லை எனத் தெரிவித்துள்ளனர். இதனால் IMEI நம்பர் மூலம் செல்போனை கண்டுபிடிக்க முயற்சி செய்ய தீர்மானித்துள்ளது.

    ஒருவேளை போன் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், போனை பிரஜ்வால் அழித்து இருக்கலாம் என்று நம்பும் நிலை ஏற்படும். அப்படி இருந்தால், ஆதாரங்களை சேதப்படுத்துதல் என்ற கூடுதல் குற்றச்சாட்டை பிரஜ்வல் மீது பதிவு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • ஆண்மை பரிசோதனை செய்யப்பட்டது.
    • நீதிமன்ற ஜாமீனில் வெளியே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பெங்களூரு:

    முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவை தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா (வயது 33) தற்போது நடந்த பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார். அவர் பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் சுமார் 3 ஆயிரம் வீடியோக்கள் வெளியானது.

    ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

    மேலும் அவருடைய வீட்டு பணிப்பெண், ம.ஜ.த. முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் உள்பட 3 பெண்கள் தனித்தனியாக பாலியல் பலாத்கார புகார் அளித்தனர். அதன் பேரில் பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் பலாத்காரம், பெண்கள் வன்கொடுமை உள்ளிளட்ட 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    இதனிடையே பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு தப்பி ஓடினார். இதையடுத்து கர்நாடக மாநில சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி.) போலீசார் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கை களை எடுத்தனர். வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு புளூ கார்னர் நோட்டீஸ் விடுக்கப்பட்டது. நோட்டீஸ் அனுப்பியும் ஜெர்மனியில் இருந்து அவர் திரும்பி வரவில்லை.

    இதனால் அவரது டிப்ளோமேடிக் பாஸ்போர்ட்ைட ரத்து செய்ய மத்திய அரசு தீவிர நடவடிக்கையில் இறங்கியது. இதையடுத்து அவர் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) ஜெர்மனி முனிச் நகரிலிருந்து புறப்பட்டு நேற்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 1.30 மணி அளவில் பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையம் வந்தார். அங்கு காத்திருந்த சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படை, குடியேற்ற அதிகாரிகள் உதவியுடன் பெண் போலீஸ் அதிகாரிகள் அதிரடியாக பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்தனர்.

    இதையடுத்து சுமார் 6 மணி நேரம் விசாரணைக்கு பிறகு பெங்களூரு அரசு போரிங் மருத்துவமனையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவருக்கு ஆண்மை பரிசோதனை செய்யப்பட்டது.

    மருத்துவப் பரிசோதனைக்கு பிறகு பிரஜ்வல் ரேவண்ணா பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் பெங்களூரு நகர சிவில் மற்றும் செசன்ஸ் நீதிமன்றத்தின் 4-வது மாடியில் உள்ள 42-வது மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு (ஏசிஎம்எம்) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    அப்போது நீதிபதி கே.என்சிவகுமாரிடம் சிறப்பு புலனாய்வு குழு போலீசார் 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரினர். சிறப்பு புலனாய்வு குழுவினரின் மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி.க்கு வருகிற 6-ந்தேதி வரை 6 நாட்கள் எஸ்ஐடி காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது.

    இதையடுத்து அவரை சிறப்பு புலனாய்வு குழு அலுவலகத்திற்கு அழைத்து சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போலீசார், பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி.யிடம் பாலியல் வழக்கு தொடர்பாக அடுக்கடுக்கான கேள்விகள் கேட்டனர். போலீசார் விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீசு அனுப்பியும் நீங்கள் ஏன் கண்டுகொள்ள வில்லை?, விசாரணைக்கு ஆஜராக வேண்டாம் என யாராவது சொன்னார்கள்? பெண்களை கடத்தி பாலியல் பலத்காரம் செய்தீர்களா?, ஆபாச வீடியோ எடுத்த சம்பவத்தில் உடந்தையாக இருந்தவர்கள் யார்? பாலியல் பலாத்காரம் பென்டிரைவில் பதிவேற்றம் செய்தது யார்? என பல்வேறு கேள்விகள் கேட்டனர்.

    ஒவ்வொரு கேள்விகளுக்கும் பதில் தெரிவக்க பிரஜ்வல் ரேவண்ணா நேரத்தை கடத்தி வருகிறார். அவர் அளித்த வாக்குமூலத்தை வீடியோவில் போலீசார் பதிவு செய்து வருகின்றனர்.

    இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், பெண்களை மதிக்காமல் மிரட்டி பலாத்காரம் செய்த பிரஜ்வலுக்கு பெண் சக்தியையும், அதிகாரத்தையும், உணர்த்தும் விதத்தில் பெண் அதிகாரிகளை வைத்தே அவரை கைது செய்துள்ளோம்.

    தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர் சொல்லும் பதிலை பொறுத்து ஒவ்வொரு நடவடிக்கையும் எடுக்கப்படும். விசாரணை முடிந்ததும் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம் என்றார்.

    பிரஜ்வல் ரேவண்ணாவால் பலாத்காரத்திற்கு உள்ளான பெண்ணை கடத்திய வழக்கில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா எம்.எல்.ஏ. கடந்த 4-ந்தேதி இரவில் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் நீதிமன்ற ஜாமீனில் வெளியே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கர்நாடகா மற்றும் மத்திய அரசின் அழுத்தம் காரணமாக விசாரணைக்கு ஆஜராவேன் என பிரஜ்வால் தெரிவித்திருந்தார்.
    • இன்று அதிகாலை ஜெர்மனியில் இருந்து பெங்களூரு வந்தடைந்த அவரை போலீசார் கைது செய்தனர்.

    கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா, பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச வீடியோ வெளியாகி கடும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெண்கள் துன்புறுத்தி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக கர்நாடகா மாநிலம் சிறப்பு விசாரணைக்குழு அமைத்து விசாரணை நடத்தி வருகிறது இதற்கிடையே பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு சென்றுவிட்டார். கர்நாடகா மற்றும் மத்திய அரசு கொடுத்த அழுத்தம் காரணமாக இந்தியா திரும்பி விசாரணையை எதிர்கொள்வேன் என அறிவித்திருந்தார்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை பிரஜ்வல் ரேவண்ணா பெங்களூரு வந்தடைந்தார். பெங்களூரு வந்து இறங்கியதும் சிறப்பு விசாரணைக்குழு போலீசார் அவரை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணா இன்று பிற்பகல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது பிரஜ்வல் ரேவண்ணாவை ஜூன் 6-ந்தேதி வரை காவலில் வைத்து விசாரணை நடத்த போலீஸ்க்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

    • பிரஜ்வால் ரேவண்ணா ஜெர்மனி தப்பிச் சென்றார்.
    • ரேவண்ணாவை கைது செய்ய போலீசார் தயார் நிலையில் இருந்தனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா. மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த இவர் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் ஆவார்.

    இதற்கிடையே பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும் புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானது.

    மேலும் அவருடைய வீட்டு பணிப்பெண், ம.ஜ.த. முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் உள்பட 4 பெண்கள் அளித்த புகாரின் பேரில் பிரஜ்வல் மீது 4 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக பிரஜ்வல் ரேவண்ணா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் அவர் வெளிநாடு தப்பிச்சென்றார். இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணை குழுவை கர்நாடக அரசு நியமித்தது. இதற்கிடையே ஜெர்மனியில் இருந்த பிரஜ்வல் ரேவண்ணாவை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    அவரை கைதுசெய்ய சி.பி.ஐ. புளூகார்னர் நோட்டீஸ் அனுப்பியது. அதேபோல், அவரை கைதுசெய்ய சிறப்பு கோர்ட்டு கைது வாரண்ட் பிறப்பித்தது.

    இதற்கிடையே கடந்த 27-ம் தேதி பிரஜ்வல் ரேவண்ணா பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் ஆபாச வீடியோ விவகாரத்தில் தன்னை சிலர் சதிசெய்து சிக்க வைத்துள்ளனர். என் மீதான புகாருக்காக தேவகவுடா, குமாரசாமி, எனது பெற்றோர், கட்சி தொண்டர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

    31-ம் தேதி பெங்களூரு வந்து சிறப்பு விசாரணை குழு முன்பு ஆஜராகி முழு ஒத்துழைப்பு வழங்குவேன் என தெரிவித்தார். இதையடுத்து விமான நிலையத்தில் அவரை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இந்நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா இன்று அதிகாலை ஜெர்மனியில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு வந்தடைந்தார். அங்குள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை சிறப்பு விசாரணை குழு போலீசார் கைது செய்தனர். பெண் ஐ.பி.எஸ். அதிகாரி தலைமையிலான மகளிர் போலீஸ் குழுவினர் அழைத்துச் சென்றனர். 35 நாட்களாக வெளிநாட்டில் இருந்த அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

    பிரஜ்வல் ரேவண்ணாவை சிறப்பு விசாரணை குழு போலீசார் காரில் சி.ஐ.டி அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். முன்னதாக அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இன்று காலை 10 மணிக்கு சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி) முன் பிரஜ்வல் ரேவண்ணா விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

    கைது செய்யப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணாவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி விசாரணைக்கு எடுக்க சிறப்பு விசாரணை குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையில் பிரஜ்வல் தரப்பில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முன் ஜாமீன் மனு அவசர வழக்காக விசாரணைக்கு வருகிறது.

    இவ்விவகாரம் தொடர்பாக மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு அவரது தாத்தாவான முன்னாள் பிரதமர் தேவகவுடா கடும் எச்சரிக்கை விடுத்தார்.

    தனது பொறுமையைச் சோதிக்க வேண்டாம். நாடு திரும்பி விசாரணையை சந்திக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பிரஜ்வல் ரேவண்ணாவின் தந்தையும், எம்.எல்.ஏ.வுமான எச்.டி.ரேவண்ணா மீதும் பாலியல் குற்றச்சாட்டு அளிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது ஜாமீனில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    தற்போது நடந்து வரும் பாராளுமன்ற தேர்தலில் ஹாசன் தொகுதியில் பிரஜ்வல் ரேவண்ணா மீண்டும் போட்டியிட்டார். அந்த தொகுதிக்கு கடந்த 26-ம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.

    • ஆபாச வீடியோ வெளியானதால் ஜெர்மனி சென்றதாக தகவல் வெளியானது.
    • பிர்ஜவலுக்கு எதிராக மத்திய அரசு ஷோகாஸ் நோட்டிஸ் அனுப்பியது.

    கர்நாடகா மாநிலம் ஹசன் தொகுதி எம்.பி.யாக இருப்பவர் முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா. இவர் தொடர்பான வீடியோ ஒன்று கடந்த மாதம் வெளியானது. அந்த ஆபாச வீடியோவில் பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தது. பல பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

    இதனால் கர்நாடகா அரசு சிறப்பு விசாரணைக் குழு அமைத்து ஆபாச வீடியோ தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையே பிரஜ்வால் ரேவண்ணா ஜெர்மனிக்கு ஓடிவிட்டதாக தகவல் பரவியது.

    அவரை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா இரண்டு முறை பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.

    இதனால் கடந்த வாரம் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பியது. இந்த நிலையில் சிறப்பு விசாரணைக் குழு முன் வருகிற 31-ந்தேதி ஆஜராவேன் என பிரஜ்வால் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக டி.வி. சேனல் மூலமாக பிரஜ்வல் தெரிவித்த தகவலில் "நான் வருகிற 31-ந்தேதி காலை 10 மணிக்கு சிறப்பு விசாரணைக்குழு முன் ஆஜராவேன். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன். என் மீதான குற்றச்சாட்டுக்கு பதில் அளிப்பேன். நான் நீதிமன்றம் மீது நம்பிக்கை வைத்துள்ளேன். பொய் வழக்குகள் என்பது நீதிமன்றம் மூலம் வெளியே வரும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது." என்றார்.

    மேலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிற மூத்த தலைவர்கள் தனது பாலியல் துஷ்பிரயோக வீடியோக்கள் குறித்து பேசினர்.  இதனால் தான் மன அழுத்தம் அடைந்தேன். மற்றும் தனிமைப்படுத்தப்பட்டேன். இது அரசியல் சதி எனக் குற்றம்சாட்டினார்.

    ஆனால் மதசார்பற்ற ஜனதா தளம் அல்லது குடும்பத்தில் உள்ளவர்கள் மூலம் தனிப்பட்ட முறையில் எந்த தகவலும் இது தொடர்பாக தெரிவிக்கவில்லை. ஹசன் தொகுதி தேர்தல் முடிவடைந்து மே 27-ந்தேதி தனது சிறப்பு தூதர பாஸ்போர்ட் மூலமாக ஜெர்மனி சென்றதாக தகவல் வெளியானது.

    • வீடியோ வெளியானதும் தூதரக பாஸ்போர்ட்டை பயன்படுத்தி பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு ஓடிவிட்டார்.
    • அவரை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என முதல் மந்திரி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான பாலியல் வீடியோ வெளியாகி கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. பல பெண்களுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு அமைத்து கர்நாடகா மாநில போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வீடியோ வெளியானதும் தூதரக பாஸ்போர்ட்டை பயன்படுத்தி பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு ஓடிவிட்டார். அவரை இந்தியா கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என முதல் மந்திரி சித்தராமையா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    இந்நிலையில், பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரிஜ்வல் ரேவண்ணா எங்கிருந்தாலும் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என அவரது தாத்தாவும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தேவகவுடா, எனது பொறுமைக்கும் எல்லை உண்டு. சட்ட ரீதியிலான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டும். பிரஜ்வல் ரேவண்ணா மீது தவறு இருப்பது உறுதியானால் கடும் நடவடிக்கை எடுக்க தயங்க வேண்டாம்.

    பொதுமக்கள் என்னையும், என் குடும்பத்தையும் திட்டித் தீர்க்கிறார்கள். எல்லாம் என் கவனத்திற்கு வந்தது. எனவே எங்கிருந்தாலும் நாடு திரும்பவேண்டும் என தெரிவித்துள்ளார்.

    ×