search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாட்னா"

    • பிகார் தலைநகர் பாட்னாவில் தனியார் பள்ளியின் கழிவுநீர் கால்வாயில் 3 வயது சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • சிசிடிவி காட்சிப்படி, பள்ளிக்கு உள்ளே சென்ற சிறுவன் மீண்டும் வெளியில் வரவே இல்லை.

    பிகார் தலைநகர் பாட்னாவில் தனியார் பள்ளியின் கழிவுநீர் கால்வாயில் 3 வயது சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை பள்ளி முடிந்து சிறுவன் வீட்டுக்கு வராத நிலையில் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஊர் முழுவதும் தேடி வந்துள்ளனர்.

    இன்று காலை சிறுவன் படித்து வந்த தனியார் பள்ளிக்கு வந்த பெற்றோர்களுக்கு பள்ளியில் உள்ளவர்கள் மழுப்பலாக பதிலளித்து அவரைகளை உள்ளே விட மறுத்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த சிறுவனின் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டுள்ளனர்.

    அப்போது பள்ளியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் சிறுவனின் சடலம் கிடந்துள்ளது. இதுகுறித்து உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் கும்பலைக் கட்டுப்படுத்தி பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர். முற்றக்கட்டமாக சிறுவன் பள்ளிக்குள் செல்லும் சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அந்த சிசிடிவி காட்சிப்படி, பள்ளிக்கு உள்ளே சென்ற சிறுவன் மீண்டும் வெளியில் வரவே இல்லை.

    எனவே சிறுவனைக் கொன்று சடலத்தை மறைத்து வைத்ததாக கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் சிறுவனின் உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் அந்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டு ரப்பர் டயர்களுக்கும் பள்ளியின் சுவர்களுக்கும்  தீ வைத்து போராட்டம் நடத்தி வருவதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. 

    • பீகார் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, பாட்னாவில் உள்ள சீக்கியர்களின் புனித தலமான குருத்வாராவுக்கு சென்றார்.
    • அப்போது பிரதமர் மோடி ஆரஞ்சு நிற தலைப்பாகை அணிந்திருந்தார்.

    பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக பீகார் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, பாட்னாவில் உள்ள சீக்கியர்களின் புனித தலமான குருத்வாராவுக்கு சென்றார்.

    அங்கு வழிபாடு நடத்திய பிரதமர் மோடி அங்குள்ள உணவுக் கூடத்தில் சில உணவுகளை சமைத்தார். அதன்பின் அங்கிருந்த சீக்கியர்களுக்கு உணவு பரிமாறினார்.

    இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன. அப்போது பிரதமர் மோடி ஆரஞ்சு நிற தலைப்பாகை அணிந்திருந்தார்.

    இந்நிலையில், பாதுகாப்பு காவலர்களைக்கொண்டு நீதிக்காக போராடிய சிங் சமூகத்தினர் மீது தடியடி நடத்திவிட்டு, தற்போது தேர்தல் சமயத்தில் உணவளிக்கும் மோடியை விமர்சித்து, நடிகர் பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் ட்வீட் போட்டுள்ளார்.

    அதில், "வாக்களிக்க செல்லும் போது, மோடியின் கபட நாடகத்தை மறக்க வேண்டாம். ஜனநாயகத்தையும், இந்தியாவையும் காப்பாற்றுவோம்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    • பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் மோடி பீகார் சென்றுள்ளார்.
    • பாட்னாவில் உள்ள சீக்கியர்களின் புனித தலமான குருத்வாரா சென்று பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார்.

    பாட்னா:

    பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் நரேந்திர மோடி பீகார் சென்றுள்ளார்.

    இந்நிலையில், இன்று காலை பாட்னாவில் உள்ள சீக்கியர்களின் புனித தலமான குருத்வாராவுக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு வழிபாடு நடத்திய பிரதமர் மோடி அங்குள்ள உணவுக் கூடத்தில் சில உணவுகளை சமைத்தார். அதன்பின் அங்கிருந்த சீக்கியர்களுக்கு உணவு பரிமாறினார்.

    இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன. அப்போது பிரதமர் மோடி ஆரஞ்சு நிற தலைப்பாகை அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இரண்டு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்.
    • ஓட்டலில் இன்னும் சிலர் சிக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

    பீகார் மாநிலம் பாட்னாவில் ரெயில்வே நிலையம் அருகே உள்ள மூன்று அடுக்கு மாடி ஓட்டலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    இந்த தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். தீ விபத்தில் காயமடைந்தோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இதில், இரண்டு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும், ஓட்டலில் இன்னும் சிலர் சிக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

    சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் ஓட்டலின் உள்ளே சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும், தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்கு அநீதி இழைக்கப்படுகிறது
    • பீகார் அரசியலின் 'நரம்பு மையம்' நாட்டில்மாற்றம் வரும்போது எல்லாம் இங்கு இருந்துதான் தொடங்குகிறது

    பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் இன்று ராஷ்ட்ரிய ஜனதாதளம் (ஆர்ஜேடி) சார்பில் 'ஜன்விஸ்வாஸ்' பேரணி நடந்தது.இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டார்.

    இந்த பேரணியில் ஆர்ஜேடி தலைவர் லாலுபிரசாத்யாதவ்,தேஜஸ்வி யாதவ்காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சமாஜ்வாதி கட்சியின் தேசிய தலைவர் அகிலேஷ் யாதவ், சிபிஐ பொதுச் செயலாளர் டி.ராஜா, சிபிஐஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி பங்கேற்றனர்.இந்த பேரணியில் சுமார் 10 லட்சம் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    பேரணியின் போது ராகுல்காந்தி எம்.பி. பேசியதாவது:-

    பீகார் அரசியலின் 'நரம்பு மையம்'. நாட்டில் மாற்றம் வரும் போது எல்லாம் அது பீகாரில் இருந்துதான் தொடங்குகிறது. இதன் பிறகு இந்த மாற்றம் மற்ற மாநிலங்களை நோக்கி நகர்கிறது. இன்று நாட்டில் சித்தாந்தங்கள் மீது சண்டை நடக்கிறது. வெறுப்பும், வன்முறையும், ஆணவமும் இருக்கிறது. மறுபுறம், ஒருவருக்கொருவர் அன்பு, சகோதரத்துவம் மற்றும் மரியாதை உள்ளது.

    பாஜக, ஆர்எஸ்எஸ் நாட்டில் வெறுப்புணர்வை பரப்புகிறது.. மக்களுக்கு அநீதி இழைக்கப்படுவதால் நாட்டில் வெறுப்பு அதிகமாக உள்ளது. நாட்டின் இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்கு அநீதி இழைக்கப்படுகிறது.

    மத்தியஅரசு ஒருசில 10 தொழிலதிபர்களுக்காக மட்டுமே செயல்படுகிறது.கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் சில தொழிலதிபர்களின் ரூ.16 லட்சம் கோடி மதிப்பிலான கடனை மோடி அரசு தள்ளுபடி செய்து உள்ளது. ஆனால், மத்தியில் ஆட்சியில் உள்ள மோடி அரசு விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசு மற்றும் தனியார் பள்ளிகளை மூடுமாறு பாட்னா மாவட்ட நீதிபதி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
    • அதிக வெப்பநிலை காரணமாக, குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் உயிருக்கு ஆபத்து இருப்பதாக தெரிகிறது.

    வெப்பச்சலனம் காரணமாக பாட்னா மாவட்டத்தில் ஜூன் 28 ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு வரையிலான அரசு மற்றும் தனியார் பள்ளிகளை மூடுமாறு பாட்னா மாவட்ட நீதிபதி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    இதுதொடர்பாக மாவட்ட மாஜிஸ்திரேட் டாக்டர். சந்திர சேகர் சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பாட்னா நீதிமன்றத்தின் ஆர்டர் வீடியோவின் தொடர்ச்சியாக 16.06.2023 தேதியிட்ட மெமோ எண்.-8534/L, மாவட்டத்தில் அதிக ஈரப்பதத்துடன் கூடிய அதிக வெப்பநிலை காரணமாக, குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் உயிருக்கு ஆபத்து இருப்பதாக எனக்குத் தோன்றியது.

    எனவே, நான், குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973ன் பிரிவு 144ன் கீழ், பாட்னா மாவட்டத்தில் உள்ள 12-ஆம் வகுப்பு வரையிலான அனைத்து தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளின்(முன்பள்ளி மற்றும் அங்கன்வாரி மையங்கள் உட்பட) கல்வி நடவடிக்கைகளை 28.06.2023 வரை தடை செய்கிறேன்.

    மேலே குறிப்பிட்டுள்ள உத்தரவு 26.06.2023 மற்றும் 28.06.2023 வரை அமலில் இருக்கும். 24.06.2023 அன்று எனது கையொப்பம் மற்றும் நீதிமன்ற முத்திரையுடன் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 10 நாள் வரையிலான கொண்டாட்டங்கள் முடிந்து, வடமாநிலத்தவர் பலர் திருப்பூர் வர தொடங்கியுள்ளனர்.
    • திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை தோறும் எர்ணாகுளத்தில் இருந்து புறப்படும்.

    திருப்பூர் :

    ேஹாலி பண்டிகை முடிந்து வடமாநில தொழிலாளர்கள் பலர் திருப்பூர் திரும்ப தொடங்கி உள்ளனர். இவர்களின் தொடர் வருகையால், பின்னலாடை தொழிலில் தொழிலாளர் தட்டுப்பாடு சீராகும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.கடந்த 8-ந் தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. வட மாநில தொழிலாளர்கள், தங்கள் குடும்பத்தினருடன் பண்டிகை கொண்டாட ஒரு வாரம் முன்னரே தங்கள் சொந்த மாநிலங்களுக்கு படையெடுத்தனர்.

    இது ஒருபுறமிருக்க வடமாநிலத்தவர் குறித்தும், அவர்களது செயல்பாடுகள் குறித்து தேவையற்ற பிரச்சினை கிளப்பும் வகையிலான வீடியோக்கள் வதந்தியாக பரவியது. வீடியோ பரப்பியவர்களை கைது செய்து போலீசார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். தமிழகம் பாதுகாப்பான நகரம், திருப்பூர் உங்களை பிழைக்க வைக்கும் ஊர் என தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில் பண்டிகை நிறைவு பெற்று ஒரு வாரம் முதல் 10 நாள் வரையிலான கொண்டாட்டங்கள் முடிந்து, வடமாநிலத்தவர் பலர் திருப்பூர் வர தொடங்கியுள்ளனர்.

    திருப்பூர் ரெயில் நிலைய முன்பதிவு மைய அதிகாரிகள் கூறுகையில், வடமாநில ெரயில்களில், பொதுப்பெட்டியில் பயணிப்பவரே அதிகம். கடந்து 10 நாட்களில், 12 ஆயிரம் பேர் வரை ெரயில் மூலம் திருப்பூர் வந்தனர். ேஹாலி முடிந்தாலும் கூட வடமாநிலத்தவர் சொந்த மாநிலம் பயணிப்பதும் தொடர்கிறது. தினமும் 4 ஆயிரம் பேர் செல்கின்றனர். அங்கு சென்று குடும்பத்தினர் உறவினர்களை பார்த்து விட்டு இவர்களும் ஒரு மாதத்துக்குள் திருப்பூர் திரும்புவர் என்றனர்.

    ெரயில்களில் வந்திறங்குபவர்களுக்கு உடனே வேலை தர நிறுவனங்கள் பல விசிட்டிங் கார்டுகளுடன் காத்திருக்கின்றன. தங்கள் பணிபுரியும் நிறுவனத்தில் இந்தி தெரிந்த, வடமாநில தொழிலாளர்களை தேர்வு செய்து அவர்களை அழைத்து வந்து ெரயில் நிலையத்தில் நிறுத்தி விடுகின்றனர். ெரயிலை விட்டு இறங்குபவர்களை அழைத்து ஈர்க்கும் வகையில் பேசும் இவர்கள் வேலை, சம்பளம், தங்குமிடம் தருகிறோம் என அழைத்து சென்று விடுகின்றனர்.

    இதனிடையே பீகார் தொழிலாளர்கள் திருப்பூர் வருகையையொட்டி பாட்னா ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை தோறும் கேரளா எர்ணாகுளத்தில் இருந்து புறப்படும் பாட்னா எக்ஸ்பிரஸ் 3-ம் நாளில் பாட்னா செல்கிறது.இதில் இதுவரை 24 பெட்டிகள் இருந்தது.

    என்ஜினை அடுத்துள்ள இரண்டு பெட்டி, ெரயிலின் கடைசி இரண்டு பெட்டிகள் என மொத்தம் நான்கு பெட்டிகள் பொது பெட்டிகளாக உள்ளது. பீகார் மாநிலத்தவர் தொடர் வருகையால் இந்த ெரயிலுக்கான பயணிகள் நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனால் வருகிற 27-ந் தேதி முதல் ஒரு பொதுப்பெட்டி கூடுதலாக சேர்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் ரெயில் பாட்னாவில் இருந்து எர்ணாகுளம் வரும் போதும் (30-ந் தேதி முதல்) ஒரு பொதுப்பெட்டி இணைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • செல்போன்களில் பயணிகள் சிலரால் பதிவு செய்யப்பட்ட வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவியது.
    • தகவல்களை ஒளிபரப்பும் ஏஜென்சி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாட்னா:

    பீகார் மாநிலம் பாட்னா ரெயில் நிலைய பிளாட்பாத்தில் உள்ள எல்இடி திரையில் திடீரென ஆபாச காட்சிகள் ஒளிபரப்பானதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். நேற்று காலை 10 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பயணிகளை முகம் சுளிக்க வைக்கும் இந்த வீடியோ சுமார் 3 நிமிடங்களுக்கு பிளே ஆகி உள்ளது. பயணிகள் சிலர் இதை தங்கள் செல்போன்களில் பதிவு செய்துள்ளனர்.

    அந்த பிளாட்பாரத்தில் நின்றிருந்த பலர் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இதையடுத்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் வேகமாக சென்று அந்த வீடியோவை ஆப் செய்தனர்.

    அதன்பின்னர், செல்போன்களில் பயணிகள் சிலரால் பதிவு செய்யப்பட்ட வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவியது. முதல்வர் நிதிஷ் குமாரையும், ரெயில்வே மந்திரியையும் பயனர்கள் டேக் செய்து அந்த வீடியோவை ஷேர் செய்யத் தொடங்கினர்.

    ரெயில் நிலைய எல்இடி திரைகளில் விளம்பரம் மற்றும் ரெயில்வே மற்றும் பொது தகவல்களை ஒளிபரப்பும் ஏஜென்சி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×