என் மலர்
திரையுலகின் மிகவும் மதிப்புமிக்க ஒன்றாக ஆஸ்கார் அகாடமி விருதுகள் இருக்கின்றன.
98 வது ஆஸ்கார் விருதுகள் விழா 16 ஆம் தேதி நடைபெறவுள்ள அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சிறந்த ஒலி அமைப்புக்கான ஆஸ்கர் விருதை F1 திரைப்படம் வென்றது.
டாப் கன் மேவ்ரிக் படத்தை இயக்கிய ஜோசஃப் கொசின்ஸ்கி இயக்கத்தில் பிராட் பிட் நடிப்பில் வெளியான F1 படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுது. இப்படம் உலகளவில் 3626 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.
திரையுலகின் மிகவும் மதிப்புமிக்க ஒன்றாக ஆஸ்கார் அகாடமி விருதுகள் இருக்கின்றன.
98 வது ஆஸ்கார் விருதுகள் விழா 16 ஆம் தேதி நடைபெறவுள்ள அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு ஆஸ்கார் நிகழ்ச்சியை இந்தியாவை சேர்ந்த பான் உலக நட்சத்திர நடிகை பிரியங்கா சோப்ரா தொகுத்து வழங்கி வருகிறார். ஹாலிவுட் பிரபலங்களான ராபர்ட் டவுனி ஜூனியர், வில் ஆர்னெட் ஆகியோருடன் இணைந்து பிரியங்கா மேடையைப் பகிர்ந்து கொண்டுள்ளார்
இந்நிலையில், சிறந்த Visual Effects பிரிவில் Avatar: Fire And Ash திரைப்படம். ஆஸ்கர் விருதை வென்றது
ஜேம்ஸ் காம்ரூன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளியான அவதார் படம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு பெரும் வெற்றியை பெற்று கிளாசிக் ஆனது. தொடர்ந்து கடந்த 2022 இல் அவதார் 2 ஆம் பாகமான தி வே ஆப் வாட்டர் வெளியாகி வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து கடந்தாண்டு வெளியான அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் பாகமும் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.
திரையுலகின் மிகவும் மதிப்புமிக்க ஒன்றாக ஆஸ்கார் அகாடமி விருதுகள் இருக்கின்றன.
98 வது ஆஸ்கார் விருதுகள் விழா 16 ஆம் தேதி நடைபெறவுள்ள அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு ஆஸ்கார் நிகழ்ச்சியை இந்தியாவை சேர்ந்த பான் உலக நட்சத்திர நடிகை பிரியங்கா சோப்ரா தொகுத்து வழங்கி வருகிறார். ஹாலிவுட் பிரபலங்களான ராபர்ட் டவுனி ஜூனியர், வில் ஆர்னெட் ஆகியோருடன் இணைந்து பிரியங்கா மேடையைப் பகிர்ந்து கொண்டுள்ளார்
ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் வெள்ளை நிற உடையில் நடிகை பிரியங்கா சோப்ரா வந்தது அனைவரையும் கவர்ந்தது.
ஆஸ்கார் விருதை பிரியங்கா தேர்வு தொகுத்து வழங்குவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பு 2016-ம் ஆண்டும் அவர் இந்த கௌரவத்தைப் பெற்றிருந்தார்.
பிரியங்கா சோப்ரா நடித்த The Bluff என்ற ஹாலிவுட் திரைப்படம் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதற்கிடையே ராஜமௌலி மற்றும் மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகி வரும் 'வாரணாசி' திரைப்படத்தில் பிரியங்கா நடித்து வருகிறார்.
காதலை மையமாக கொண்டு உருவாகியிருக்கும் படம் வௌவல்ஸ் (Vowels). ஆங்கிலத்தில் உள்ள A,E,I,O,U என்கிற வௌவல்ஸ் எழுத்துகளின் பின்னணியில் ஐந்து கதைகளாக படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர்.
முதல் கதை கற்பனை காட்சியை நிஜமாக்க நினைக்கும் காதலால் நடக்கும் கொலை.
2வது கதை ஆபத்தான பயணத்தை விரும்பும் ஒருவரால் மற்றவர்களுக்கு நேரும் பாதிப்பு.
3வது கதை காதல் பிரிவால் தற்கொலைக்கு தயாராகும் மனங்களை மாற்றும் உணர்வுப்பூர்வமான காதல்.
4வது கதை உண்மை அன்பை தேடி வரும் காதல் மருத்துவம் தொடர்புடையது.
5வது கதை உதடுகள் சொல்லும் காதல் பொய், உள்ளத்தில் இருக்கும் காதலே மெய் என்பதை சொல்லும் கதை.
நடிகர்கள்
யூகி சேது, சின்னி ஜெயந்த், ராஜ் ஐயப்பா, சம்யுக்தா விஸ்வநாதன், நண்டு, தீபக் ரமேஷ், பரமேஷ், காஜல் செளத்ரி, பீட்டர்.கே, சரத் ரவி, அக்ஷிதா போபையா, பிரியங்கா சந்திரசேகர், பரத் போபண்ணா, விஜிதா வசிதா உள்ளிட்ட ஐந்து கதைகளில் நடித்திருக்கும் அனைத்து நடிகர், நடிகைகளும் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப நடித்திருக்கிறார்கள்.
யூகி சேதுவின் வேடமும்,பேசும் வசனங்களும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கின்றன.
இயக்கம்
5 இயக்குநர்கள் இயக்கியிருக்கும் 5 குறும்படங்களை ஒன்றாக்கி ஒரு முழு நீளத் திரைப்படமாக கொடுத்திருப்பது தான் 'வெளவல்ஸ்'. தொடக்கம் மற்றும் முடிவு என்று குறிப்பிட்ட நேரத்திற்குள் தாங்கள் சொல்ல வேண்டிய விசயங்களை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்கள். 5வது கதையில் குழப்பம் ஏற்படுகிறது.
இசை
ஐந்து கதைகளுக்கு ஒரே இசையமைப்பாளர்.சரவண சுப்பிரமணியம் இசையமைத்திருக்கிறார்.
ஒளிப்பதிவு
ஐந்து இயக்குநர்களுக்கு இரண்டு ஒளிப்பதிவாளர்கள். கீர்தன் பூஜாரி மற்றும் சந்தீப் அல்லூரி ஆகியோர் கதைக்கு மெனக்கெட்டிருக்கிறார்கள்.
ரேட்டிங்-2/5
தமிழ் திரைப்பட உலகில் 30 வருடங்களுக்கும் மேலாக கொண்டாடப்படும் நடிராகவும், திறமையான மோட்டார் ஸ்போர்ட்ஸ் ஆர்வலராகவும் திகழ்பவர் அஜித் குமார். 'கிங் ஆஃப் ஓப்பனிங்ஸ்' என ரசிகர்களால் கொண்டாடப்படும் அவர், வசூல் சாதனைகள் படைத்த பல வெற்றி படங்களையும், பல்வேறு சவாலான கதாபாத்திரங்களில் தனது நடிப்புத் திறனையும் நிரூபித்து விமர்சகர்களின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.
நடிப்பு, ரேசிங் மட்டுமின்றி பிஸ்டல் ஷூட்டிங் மற்றும் அட்வென்ச்சரில் அதிக ஈடுபாடு கொண்டவர் அஜித் குமார். 46 ஆவது மற்றும் 47 ஆவது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்று மாநில அளவிலான பிஸ்டல் ஷூட்டராக அஜித் குமார் திகழ்கிறார்.
தற்போது ரேசிங்கில் அதிக கவனம் செலுத்தி வரும் அஜித் குமார் அடுத்த ஒரு ஆண்டு பங்கேற்க இருக்கும் ரேஸ் விவரங்களை பகிர்ந்துள்ளார். அதன்படி வரும் மாதங்களில் க்ரெவென்டிக் ஐரோப்பிய தொடர், மிஷெலின் லீ மான்ஸ் கப் மற்றும் ஆசிய லீ மான்ஸ் கோப்பை தொடரில் அஜித் குமார் பங்கேற்றகிறார். மேலும், இந்த இரு தொடர்களின் அட்டவணையும் வெளியாகி உள்ளது.
க்ரெவென்டிக் ஐரோப்பிய தொடர்
ரேஸ் 1: மார்ச் 20-22, 2026 - முகெல்லோ சர்க்யூட், இத்தாலி
ரேஸ் 2: ஏப்ரல் 17-19, 2026 சர்க்யூட் டி ஸ்பா-ஃபிராங்கோர்சாம்ப்ஸ், பெல்ஜியம்
ரேஸ் 3: ஜூன் 5-7, 2026 - சர்க்யூட் பால் ரிக்கார்ட், பிரான்ஸ்
ரேஸ் 4: ஜூலை 3-5, 2026 நூர்பர்க், ஜெர்மனி
ரேஸ் 5: செப்டம்பர் 18-20, 2026 சர்க்யூட் டி பார்சிலோனா, ஸ்பெயின்
மிஷெலின் லீ மான்ஸ் கப்
ரேஸ் 1: 12 ஏப்ரல் 2026 - பார்சிலோனா, ஸ்பெயின்
ரேஸ் 2:3 மே 2026 - லீ காஸ்டெல்லெட், பிரான்ஸ்
ரேஸ் 3:5 ஜூலை 2026 - இமோலா, இத்தாலி
ரேஸ் 4: 23 ஆகஸ்ட் 2026 - சர்க்யூட் டி ஸ்பா-ஃபிராங்கோர்சாம்ப்ஸ், பெல்ஜியம்
ரேஸ் 5:13 செப்டம்பர் 2026 - சில்வர்ஸ்டோன், யுகே
ரேஸ் 6:10 அக்டோபர் 2026 - போர்டிமாவோ, போர்ச்சுகல்
ஆசிய லீ மான்ஸ் தொடர் 2026/ 27
ரேஸ் 1: நவம்பர் 13-15, 2026-யாஸ் மெரினா சர்க்யூட், அபுதாபி
ரேஸ் 2: நவம்பர் 20-22, 2026 -துபாய் ஆட்டோட்ரோம், யுஏஇ
ரேஸ் 3: ஜனவரி 15-17, 2027-செபாங் இன்டர்நேஷனல் சர்க்யூட், மலேசியா
தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களை இயக்குவதில் புகழ் பெற்றவர் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். இயக்கம் மட்டுமின்றி திரைப்பட தயாரிப்பிலும் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் ஈடுபட்டு வருகிறார். இதற்காக இவர் ஸ்டோன் பெஞ்ச் ஸ்டூடியோ என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இயக்கம் போன்றே திரைப்பட தயாரிப்பிலும் தனி கவனம் செலுத்தும் கார்த்திக் சுப்பராஜ் தனது ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மூலம் பல்வேறு வெற்றிப் படங்கள் மற்றும் வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களை தயாரித்துள்ளார். இந்த வரிசையில் கார்த்திக் சுப்பராஜ் தயாரிக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது. இந்தப் படத்திற்காக ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மற்றொரு படத்தயாரிப்பு நிறுவனத்துடன் கூட்டணி அமைத்துள்ளது.
அதன்படி நடிகர் ராணாவின் ஸ்பிரிட் மீடியா மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை (மார்ச் 16) மதியம் 12.12 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அணு ஆயுத போட்டி காரணமாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது கொடூர தாக்குதல் நடத்தி வருகிறது. மறுப்பக்கம் ஈரான் தன் பங்கிற்கு பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் காரணமாக வளைகுடா நாடுகளில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த போர் 16-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஈரான்-இஸ்ரேல் போர் ஆஸ்கர்ஸ் மேடையிலும் எதிரொலிக்க இருக்கிறது.
ஆஸ்கர்ஸ் 2026 நிகழ்ச்சி நாளை நடைபெற இருக்கிறது. 98-வது ஆஸ்கர்ஸில் ஈரான் மற்றும் இஸ்ரேல் சார்பில் தலா இரு படைப்புகள் போட்டியிடுகின்றன. உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான திரைப்படங்கள் பல்வேறு பிரிவுகளில் ஆஸ்கர்ஸ் பெற போட்டியிடும் நிலையில், போர் சூழலுக்கு மத்தியில் ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளில் இருந்து தலா இரு படைப்புகள் தேர்வாகி இருப்பது கவனம் பெற்றுள்ளது.
ஆஸ்கர்ஸ் போட்டியில் உள்ள ஈரான் மற்றும் இஸ்ரேல் படைப்புகள்
ஈரான் - இட் வாஸ் ஜஸ்ட் அன் ஆக்சிடென்ட் (It Was Just An Accident)
பிரபல ஈரானிய திரைப்பட இயக்குநர் ஜாஃபர் பனாஹி இயக்கத்தில் உருவாகி இருக்கும் இட் வாஸ் ஜஸ்ட் அன் ஆக்சிடென்ட் திரைப்படம் சிறந்த சர்வதேச திரைப்படம் மற்றும் சிறந்த ஒரிஜினல் திரைக்கதை ஆகிய இரு பிரிவுகளின் கீழ் ஆஸ்கர்ஸில் போட்டியிடுகிறது.
ஈரான் - கட்டிங் த்ரூ ராக்ஸ் (Cutting Through Rocks)
ஈரானில் பிறந்தவர்களாகிய முகமத்ரெஸா எய்னி மற்றும் சாரா காகி இணைந்து உருவாக்கி இருக்கும் "கட்டிங் த்ரூ ராக்ஸ்" சிறந்த ஆவணத் திரைப்படம் பிரிவில் போட்டியிடுகிறது.
இஸ்ரேல் - சில்ட்ரன் நோ மோர்: வேர் அண்ட் ஆர் கான் (Children No More: "Were and Are Gone)
ஹிலா மெடாலியா இயக்கத்தில் உருவாகி இருக்கும் சில்ட்ரன் நோ மோர் சிறந்த சிறு ஆவணப்படம் பிரிவில் போட்டியிடுகிறது.
இஸ்ரேல் - பட்சர்ஸ் ஸ்டெயின் (Butcher's Stain)
மேயெர் லெவின்சன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பட்சர்ஸ் ஸ்டெயின் சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படம் பிரிவில் போட்டியிடுகிறது.
இந்தியில் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்ஷய் கண்ணா, சாரா அர்ஜுன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த டிசம்பரில் வெளியான படம் 'துரந்தர்'. இத்திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.1350 கோடிக்கும் மேல் வசூலித்து மெகா ஹிட் ஆனது
.மூன்றரை மணி நேரம் நீளம் கொண்ட இந்த படம் இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதற்றத்தை மையமாகக் கொண்டு, இந்திய உளவுத்துறை மேற்கொள்ளும் ரகசிய மிஷன் குறித்த விறுவிறுப்பான கதையாகும். இதையடுத்து 'துரந்தர்: தி ரிவெஞ்ச்' (Dhurandhar: The Revenge) திரைப்படம் வருகிற மார்ச் 19ஆம் தேதி வெளியாகவுள்ளது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகும் நிலையில், துரந்தர்: தி ரிவெஞ்ச் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. மேலும், இந்தப் படத்திற்கான டிக்கெட் முன்பதிவும் முன்கூட்டியே தொடங்கப்பட்டு விட்டது. இந்த நிலையில், துரந்தர் 2 திரைப்படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
இந்தப் படம் இன்னும் வெளியாக நிலையில், முன்பதிவில் மட்டும் துரந்தர் 2 படத்தின் 1,63,428 டிக்கெட்டுகள் இதுவரை விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. துரந்தர் 2 திரைப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடா மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகும் நிலையில், இந்தி மொழியில் மட்டும் 1,51,953 டிக்கெட்டுகள் விற்பனையாகி உள்ளன. இந்தப் படம் இதுவரை ரூ. 28.19 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
`கூத்தாச்சாரி' மற்றும் `டெவில்: தி பிரிட்டிஷ் சீக்ரெட் ஏஜென்ட்' போன்ற பிளாக்பஸ்டர் படங்களைத் தயாரித்தவர் அபிஷேக் நாமா. தற்போது இவர் தனது அபிஷேக் பிக்சர்ஸ்-இன் "புரொடக்சன் 9" ஆக உருவாகும் `நாகபந்தம்' எனும் திரைப்படத்தை, தண்டர் ஸ்டுடியோஸ் சார்பில் மதுசூதன் ராவ் உடன் இணைந்து தயாரிக்கிறார்.
கே.ஜி.எப். புகழ் அவினாஷ் நடிப்பில் உருவாகும் "நாகபந்தம்" திரைப்படத்திற்கு சௌந்தர் ராஜன் ஒளிப்பதிவு செய்ய, அபே இசையமைக்கிறார். ஸ்ரீகாந்த் விசா வசனம் எழுதியுள்ளார், ஆர்.சி. பிரனாவ் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். அசோக் குமார் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார்.
நாகபந்தம் ஒரு பான் இந்தியா திரைப்படமாக உருவாகிறது. இந்தப் படம் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், நாகபந்தம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் "நமோ ரே" வெளியிடப்பட்டுள்ளது. ஆன்மிக பாடலாக உருவாகி இருக்கும் "நமோ ரே" பிரமாண்ட காட்சிகளை கொண்டிருக்கிறது.
இந்திய அளவில் புகழ் பெற்ற ராப் பாடகர் பாட்ஷா. இவரது சமீபத்திய பாடல் "ததீரி" வெளியாகி வரவேற்புக்கு இணையான சர்ச்சையிலும் சிக்கியிருக்கிறது. இந்தப் பாடல் தொடர்பான சர்ச்சையில் இவருக்கு எதிராகவும், ஆதரவாகவும் கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில், 'ததீரி' பாடலில் பெண்கள் மற்றும் சிறார்களைப் பற்றி ஆட்சேபனைக்குரிய பாடல் வரிகளைப் பயன்படுத்திய குற்றச்சாட்டை தொடர்ந்து, பாடகர்-ராப்பர் பாட்ஷாவுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் கொலை மிரட்டல் விடுத்துதுள்ளது.
லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் உறுப்பினர்கள், பேஸ்புக்கில் வெளியிட்ட பதிவில், பாட்ஷாவை "அவரது நெற்றியில் சுடுவதாக" மிரட்டினர். "பாடகர் பாட்ஷா, நீங்கள் ஹரியானாவின் கலாச்சாரத்தை அழிக்க முயற்சித்தீர்கள். 2024-இல் உங்கள் கிளப்பில் டிரெய்லரை உங்களுக்குக் காட்டினோம்; அடுத்த முறை நாங்கள் உங்கள் நெற்றியில் நேரடியாகச் சுடுவோம்" என்று கூறப்பட்டுள்ளது.
2024-ஆம் ஆண்டில், சண்டிகரில் உள்ள ஒரு கிளப்பிற்கு வெளியே, பாடகரும் ராப்பருமான பாட்ஷாவுக்குச் சொந்தமான செவில்லே பார் மற்றும் லவுஞ்சில் ஒரு வெடி விப்த்து ஏற்பட்டது - இதற்கு லாரன்ஸ் பிஷ்னோயுடன் தொடர்புடைய கனடாவைச் சேர்ந்த பயங்கரவாதி கோல்டி பிரார் பொறுப்பேற்றிருந்தார்.
பாத்ஷாவின் சமீபத்திய ஹரியான்வி பாடல் `ததீரி' (Tateeree) தொடர்பாகக் கடும் எதிர்ப்பைச் சந்தித்து வருகிறார்; இந்தப் பாடலில் ஆட்சேபனைக்குரிய வரிகளும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. பஞ்ச்குலாவைச் சேர்ந்த ஒரு நபர் அளித்த புகாரின் அடிப்படையில், பாத்ஷா மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்தப் பாடல் பாட்ஷாவின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டு, இணையத்தில் வெகுவாகப் பரவியது. கடந்த வாரம், இந்தப் பாடலின் மூலம் யாரையும் புண்படுத்தும் நோக்கம் தனக்கு ஒருபோதும் இருந்ததில்லை என்று கூறி, பாட்ஷா மன்னிப்பு கோரினார்.
நடிகை தமன்னா தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் புருஷன் படத்தில் நடித்து வருகிறார்.
அண்மையில் ஒரு தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அதில் நடிகர் விஜய் குறித்து அவரிடம் கேள்வி எழுபப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், மிகவும் எளிமையான, மென்மையான மனிதர். நடனம் ஆடுவதில் அவரும், ஜூனியர் என்.டி.ஆரும் தான் சிறந்தவர்கள்" என்று கூறினார்.
அதேபோல் அஜித் குறித்த கேள்வுக்கு பதில் அளித்த அவர், "வீரம் படப்பிடிப்பின்போது கேரவனில் வைத்து எனக்கு இட்லி செய்து கொடுத்தார். அவருக்கு சமைப்பது மிகவும் பிடிக்கும். அவர் மிகவும் நல்ல மனிதர், மென்மையானவர். நல்ல குடும்பஸ்தர்" என்று தெரிவித்தார்.
மேலும் நிகழ்வில் தனது முதல் திரைப்படமான 'கல்லூரி' படத்தை நினைவு கூர்ந்த அவர் மாணவ மாணவிகள் கல்லூரி வாழ்க்கையை ரசித்து வாழ வேண்டும் என்று தெரிவித்தார்.
அஜித்தின் 54 வது படமான வீரம் படத்திலும், விஜய்யின் 50 வது படமான சுறா படத்திலும் தமன்னா கதாநாயகியாக நடித்தது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் வெற்றி மாறன் மற்றும் நடிகர் சிலம்பரசன் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் `அரசன்.' அனிருத் இசையமைக்கும் இந்த திரைப்படம் வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான வடசென்னை படத்தின் கதைக்களத்தில் உருவாகிறது. இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து விட்டது.
படத்தின் முதல் அறிவிப்பு தொடங்கி, டைட்டில் மற்றும் இதர அப்டேட் வீடியோக்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தப் படத்தினை இந்த ஆண்டுக்கு இறுதிக்குள் ரிலீஸ் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. படத்தின் படப்பிடிப்பு தொடர்பான தகவல்களும் இணையத்தில் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், இயக்குநர் வெற்றி மாறன் அரசன் படத்தின் அப்டேட் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து பேசிய வெற்றி மாறன், "இந்த முறை கதையை முழுமையாக எழுதி முடித்த பிறகே படப்பிடிப்புக்கு சென்றேன். எனது மற்றப் படங்களை விட இந்தப் படம் வேகமாக நிறைவடையும். சில நாட்களில் இந்தப் படத்தின் காட்சிகளில் சிலவற்றை எங்களால் வெளியிட முடியும். அதுவரை நாங்கள் இந்த விஷயததில் அமைதி காக்க விரும்புகிறோம்," என்றார்.
அரசன் திரைப்படத்தில் நடிகர் சிலம்பரசன் இரட்டை வேடங்களில் நடிப்பதாகவும், நடிகர் விஜய் சேதுபதியும் இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.








