என் மலர்tooltip icon
    • மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் பெயரில் சட்டமன்ற தொகுதி வாரியாக சுற்றுப் பயணம்
    • ஞாயிற்றுக்கிழமை திருப்போரூர், சோழிங்கநல்லூர் தொகுதிகளில் சுற்றுப் பயணம் செய்கிறார்

    அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற உன்னத நோக்கத்தை லட்சியமாகக் கொண்டு, தமிழகம் முழுவதும் சட்டமன்றத் தொகுதி வாரியாக `புரட்சித் தமிழரின் எழுச்சிப் பயணம்' என்ற தொடர் பிரச்சார சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    அதன் தொடர்ச்சியாக, 28.12.2025 முதல் 30.12.2025 வரை, கீழ்க்கண்ட அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, தொடர் பிரச்சார சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

    28.12.2025 – ஞாயிறு- திருப்போரூர், சோழிங்கநல்லூர்

    29.12.2025 – திங்கள்- திருத்தணி, திருவள்ளூர்

    30.12.2025 – செவ்வாய்- கும்மிடிபூண்டி

    புரட்சித் தமிழரின் எழுச்சிப் பயணத்திற்கான ஏற்பாடுகளை, சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் சிறப்பான முறையில் செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

    புரட்சித் தமிழரின் எழுச்சிப் பயணத்தின்' போது, சம்பந்தப்பட்ட கழக மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டப் பொறுப்பாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அணிகளின் மாநில, மாவட்ட நிர்வாகிகள்; கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள்

    மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இது எனக்கும், என் குடும்பத்திற்கும் உண்மையிலேயே ஒரு கனவு ஆண்டாக அமைந்துள்ளது.
    • இதுவரை விளையாடிய 27 போட்டிகளில் 139.66 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 507 ரன்கள் குவித்துள்ளார்.

    டெல்லி கேபிடல்ஸ் (DC) அணியின் புதிய கேப்டனாக இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் அறிவிக்கப்பட்டார். டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த மெக் லானிங் ஏலத்தில் UP வாரியர்ஸ் அணியால் வாங்கப்பட்ட நிலையில், டெல்லியால் தக்கவைக்கப்பட்ட ஜெமிமா கேப்டனாக்கப்பட்டுள்ளார்.

    இதுதொடர்பாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள ஜெமிமா,

    "டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டது மிகப்பெரிய பெருமை. அணியை வழிநடத்த என் மீது நம்பிக்கை வைத்த உரிமையாளர்களுக்கும், துணைப் பணியாளர்களுக்கும் நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உலகக் கோப்பையை வென்றது, இப்போது, WPL-இன் முதல் சீசனிலிருந்தே என் இதயத்தில் ஒரு சிறப்பான இடத்தைப் பிடித்திருக்கும் இந்த அணியில் இந்த அற்புதமான வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது என, இது எனக்கும், என் குடும்பத்திற்கும் உண்மையிலேயே ஒரு கனவு ஆண்டாக அமைந்துள்ளது.

    கடந்த மூன்று ஆண்டுகளில் நான் நிறைய கற்றுக்கொண்டேன். இந்த அணி எனது குடும்பம். பழைய வீரர்களை மிஸ் செய்வேன். அதே நேரத்தில் பழக்கமான முகங்கள் மற்றும் புதிய வீரர்களுடன் புதிய நினைவுகளை உருவாக்குவதில் நான் உற்சாகமாக இருக்கிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.  

    ஜெமிமா ரோட்ரிக்ஸ் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக இதுவரை விளையாடிய 27 போட்டிகளில் 139.66 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 507 ரன்கள் குவித்துள்ளார். இதில் மூன்று அரை சதங்கள் அடங்கும். மேலும் முதல் மூன்று சீசன்களிலும் அணியின் துணைத்தலைவராக ஜெமிமா செயல்பட்டார்.


    • புதிதாக போட்ட சாலை பெயர்ந்து வந்ததால் பெண் மந்திரி அதிர்ச்சி.
    • பொதுப்பணித்துறை அதிகாரிகளை கடுமையாக எச்சரித்தார்.

    மத்திய பிரதேச மாநிலம் ரைகான் தொகுதிக்கு உட்பட்ட சாட்னாவில் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அம்மாநில பெண் மந்திரியான பிரதிமா பக்ரி ஆய்வுக்கான சென்றார்.

    அப்போது அவர் செல்லும் போடி- மங்காரி பகுதியில் சாலை போடப்பட்டிருந்தது. அந்த சாலையில் தரம் குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தார். உடனடியாக தனது காரில் இருந்து இறங்கினார்.

    நேராக சாலையின் கரையோரம் சென்று தனது காலால் சாலையை மிதித்தார். அப்போது சாலை பெயர்ந்தது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் தனது காலால் மிதிக்க மிதிக்க சாலையோரம் பெயர்ந்து கொண்டே சேதமானது. இதனால் கோபம் அடைந்து, இதுதான் புதிய சாலையின் லட்சணமா என திட்டினார். மேலும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • காவல்நிலையத்தில் இருக்கும்போது பெண்ணின் தந்தை உயிரிழந்தார்
    • விசாரணை நீதிமன்றத்திலிருந்து டெல்லிக்கு வழக்குகள் மாற்றப்பட்டன

    உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்காரின் சிறைத்தண்டனையை டெல்லி உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. 

    நீதிபதிகள் சுப்ரமணியம் பிரசாத் மற்றும் ஹரிஷ் வைத்தியநாதன் சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு, தனிப்பட்ட பிணையில் செங்காரை ஜாமினில் விடுவித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டைச்சுற்றி 5 கி.மீ. தூரத்திற்கு செங்கார் செல்லக்கூடாது என்றும், அப்பெண்ணையோ அல்லது அவரது தாயாரையோ அச்சுறுத்தக்கூடாது என்றும் நிபந்தனை விதித்துள்ளது. வாரம் ஒருமுறை காவல்நிலையத்தில் ஆஜராக வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிபந்தனைகளை மீறினால் ஜாமின் ரத்து செய்யப்படும் என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

    கடந்த 2017 ஆம் ஆண்டு 16வயதான சிறுமி செங்காரால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கடந்த 2019ஆம் ஆண்டு செங்காருக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதனிடையே இந்த குற்றத்திற்கு நீதிக்கேட்டு போராடியதால் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக கைது செய்யப்பட்டு காவல்நிலையத்தில் இருக்கும்போது இச்சிறுமியின் தந்தை உயிரிழந்தார். இந்த காவல் மரண வழக்கிலும் செங்கருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

    பாலியல் வன்கொடுமை வழக்கு மற்றும் இதுதொடர்புடைய பிற வழக்குகள் அனைத்தும் ஆகஸ்ட் 1, 2019 அன்று உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் உத்தரபிரதேசத்தில் உள்ள விசாரணை நீதிமன்றத்திலிருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டன. இந்நிலையில் செங்காரின் மேல்முறையீட்டில் டெல்லி உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது. 

    • ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.
    • பயங்கரவாதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் ராணுவம் நியாயப்படுத்தியது.

    ஆப்கானிஸ்தான் எல்லையில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கூறி பாகிஸ்தான் ராணுவம் ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது. இதில் அப்பாவி பொதுமக்கள் பலர் உயிரிழந்தனர். நாங்கள் பயங்கரவாதிகளை குறிவைத்துதான் தாக்குதல் நடத்தினோம் என பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதலை நியாயப்படுத்தி வருகிறது.

    இந்த நிலையில் ஜமியாத் உலேமா-இ-இஸ்லாம்-எஃப் {Jamiat Ulema-e-Islam-F (JUI-F)} தலைவர் மவுலானா பஸ்லுர் ரஹ்மான், பாகிஸ்தான் லாஜிக் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

    இந்தியாவின் ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையை ஆப்கானிஸ்தான் தாக்குதலுடன் ஒப்பிட்டு பாகிஸ்தானின் பாசாங்குதனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக மவுலானா பஸ்லுர் ரஹ்மான் கூறுகையில் "ஆப்கானிஸ்தானில் உள்ள நம்முடைய எதிரிகள் மீது நாம் தாக்குதல் நடத்தினோம் என்று சொல்லி, அதை நியாயப்படுத்தினால், பின்னர் காஷ்மீர் தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்ற குழுக்களின் தலைமையகம் மற்றும் பஹவல்பூர், முரித்கே போன்ற இடங்களில் தாக்குதல் நடத்தியதற்கு, இந்தியாவும் இதேபோன்று நியாயப்படுத்த முடியும்.

    அதன்பின் நீங்கள் எப்படி ஆட்சேபனை தெரிவிக்க முடியும்?. எப்படி இந்தியா பாகிஸ்தானுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியது என்று நாம் குற்றம்சாட்டினோமோ, அதே குற்றச்சாட்டை தற்போது பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தான் சுமத்துகிறது. இரண்டை நீங்கள் எப்படி நியாயப்படுத்த முடியும்?.

    பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா கடந்த மே மாதம் 7-ந்தேதி ஆபரேசன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து 9 பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுகள் வீசி தாக்கி அளித்தது.

    • எதிர்க்கட்சியாக விளங்கும் காங்கிரசுக்கு இந்த ஆண்டு சொல்லிக் கொள்ளும்படி இல்லை.
    • டெல்லியில் காங்கிரசுக்கு ஒரு இடம் கூட கிடைக்காதது அக்கட்சியை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    புதுடெல்லி:

    உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. 145 கோடி மக்கள்தொகையைக் கொண்டுள்ள இந்தியாவில் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் மிகப்பெரிய அளவில் திருவிழா போன்று நடைபெற்று வருகின்றன.

    இந்த ஆண்டு நடைபெற்ற மாநில தேர்தல்கள் முதல் உள்ளாட்சி தேர்தல்கள் வரை மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு உற்சாகம் அளித்த ஆண்டாகவே அமைந்தது.

    ஆனால், பிரதான எதிர்க்கட்சியாக விளங்கும் காங்கிரசுக்கு இந்த ஆண்டு சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை.

    தலைநகர் டெல்லி மற்றும் பீகார் மாநிலங்களில் நடந்த சட்டசபைத் தேர்தல்களிலும் அக்கட்சி தோல்வியே அடைந்துள்ளது.


    தலைநகர் டெல்லிக்கு பிப்ரவரி மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 48 தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றி அசத்தியது. ரேகா குப்தா முதலமைச்சர் ஆனார்.

    தொடர்ந்து 10 ஆண்டாக ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களில் மட்டுமே வென்றது. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்காதது அக்கட்சியினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    தலைநகரிலேயே ஒரு இடம் கூட வாங்க முடியாத அளவுக்கு காங்கிரஸ் தேய்ந்து வருகிறது என அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர்.

    இதேபோல், நாடு முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட பீகார் மாநில தேர்தலிலும் இந்தியா கூட்டணி தோல்வி அடைந்தது.

    பா.ஜ.க. மகத்தான வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 இடங்களைக் கைப்பற்றி அசத்தியது. பாஜகவுக்கு 89 இடமும், கூட்டணிக்கு தலைமை தாங்கிய நிதிஷ்குமார் கட்சிக்கு 85 இடமும் கிடைத்தது.

    காங்கிரஸ் கட்சி 61 இடங்களில் போட்டியிட்டு வெறும் 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

    இதுபோலவே, இந்தியா முழுவதும் நடந்த உள்ளாட்சி தேர்தல்களிலும் காங்கிரஸ் சொல்லிக் கொள்ளும் அளவு வெற்றி பெறவில்லை.

    பொதுவாக 2025-ம் ஆண்டு பா.ஜ.க.வுக்கு அதிர்ஷ்டகரமான ஆண்டாகவே அமைந்தது. காங்கிரசுக்கு இந்த ஆண்டு ராசி இல்லாத ஆண்டாகவே முடியப் போகிறது.


    சிறந்த ஜனநாயகத்திற்கு வலுவான எதிர்க்கட்சி அவசியம். எதிர்க்கட்சிதான் மக்களின் பிரதிநிதியாக, அரசை விழிப்புடன் செயல்படவைக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக அமர்வதற்கு 543 தொகுதிகளில் குறைந்தது 55 தொகுதிகளை வென்றிருக்க வேண்டும்.

    கடந்த 10 ஆண்டுகளில் எதிர்க்கட்சி இல்லாமல்தான் பா.ஜ.க ஆட்சிசெய்தது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில்தான் 99 தொகுதிகளை வென்ற காங்கிரஸ், ராகுல் காந்தியை எதிர்க்கட்சித் தலைவராக அமர்த்தியது.

    பல்வேறு மாநிலங்களில் மாநில கட்சிகளுடன் கூட்டணியில் இருந்து வருகிறது. அப்படி இருக்கும் நிலையில், வரும் தேர்தல்களில் மாநில கட்சிகள் ஒதுக்கீடு செய்யும் தொகுதிகளும் குறைந்துவிடும். இதே நிலை மற்ற மாநிலங்களில் நீடித்தால், நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான இடத்தில்கூட இந்தியா கூட்டணியில் காங்கிரசால் போட்டியிட முடியாத நிலை ஏற்படலாம். எனவே, இதுபோன்ற சிக்கல்களை சரியாகக் கையாண்டால் மட்டுமே காங்கிரசால் மீண்டும் தீவிர அரசியல் களத்தில் நிலைத்து நிற்க முடியும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

    • அஜிதா இன்று முழுவதும் தவெக தலைமை அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் மற்றும் முற்றுகையில் ஈடுபட்டிருந்தார்.
    • தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளராக சாமுவேல் ராஜ் என்பவர் நியமனம்

    தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பதவிக்கோரி இன்று முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டாலும், தவெக நிர்வாகி அஜிதாவிற்கு அப்பதவி வழங்கப்படவில்லை. தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளராக சாமுவேல் ராஜை நியமித்தார் அக்கட்சித் தலைவர் விஜய்.

    தமிழ்நாட்டில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளநிலையில், தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார் தவெக தலைவர் விஜய். அதன் ஒருபகுதியாக இன்று விடுபட்ட மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். அதே நேரத்தில், தூத்துக்குடி மத்திய மாவட்டத்தின் மாவட்டச் செயலாளராக சாமுவேல் என்பவர் நியமிக்கப்பட உள்ளார் என்ற செய்தியும் நேற்றே பரவியது.

    இதனால் தனக்கு தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட வேண்டும் என அக்கட்சியின் பெண் நிர்வாகி அஜிதா இன்று முழுவதும் தவெக தலைமை அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் மற்றும் முற்றுகையில் ஈடுபட்டிருந்தார். இருப்பினும் அவருக்கு எந்தப் பதவியும் வழங்கப்படவில்லை. விஜய் காரை மறித்தும் விஜய் இடமிருந்தும் எந்தப் பதிலும் வரவில்லை. 

    இந்நிலையில் தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளராக சாமுவேல் ராஜ் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

     

    • கபிலனின் பாடல் வரிகளுக்கு மிஷ்கின் இசையமைத்துள்ளார்.
    • இம்மாத இறுதியில் படம் வெளியாக வாய்ப்புள்ளது.

    விஜய் சேதுபதி நடிப்பில் கடைசியாக வெளியான படம் 'தலைவன் தலைவி'. அதனைத்தொடர்ந்து தற்போது வெளியீட்டிற்கு தயாராக உள்ள படம் டிரெயின். யாரும் எதிர்பார்க்காத மிஸ்கின்-விஜய் சேதுபதி கூட்டணி என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறியுள்ளது. இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். ஸ்ருதிஹாசன், நரேன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை ஃபௌசியா பாத்திமா மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை ஸ்ரீவத் மேற்கொள்கிறார். படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இம்மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்தின் முதல் பாடலான கன்னக்குழிக்காரா தற்போது வெளியாகி உள்ளது. 

    இப்பாடலை நடிகை ஸ்ருதிஹாசன் பாடியுள்ளார். கபிலனின் பாடல் வரிகளுக்கு மிஷ்கின் இசையமைத்துள்ளார். 


    • ஆஸ்திரேலிய வீராங்கனை சுதர்லேண்டு 736 புள்ளிகளுடன் 2-வது இடத்திற்கு சரிந்துள்ளார்.
    • தீப்தி சர்மா தரவரிசைக்கான 737 புள்ளிகளை பெற்றுள்ளார்.

    ஐ.சி.சி. சிறந்த வீராங்கனைகள், அணிகளுக்கான தரவரிசையை வெளியிட்டுள்ளது. இதில் பெண்களுக்கான டி20 கிரிக்கெட்டில் சிறந்த பந்து வீச்சாளர் வரிசையில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா முதல் இடத்தை பிடித்துள்ளது.

    இவர் தரவரிசைக்கான 737 புள்ளிகளை பெற்றுள்ளார். ஆஸ்திரேலிய வீராங்கனை சுதர்லேண்டு 736 புள்ளிகளுடன் 2-வது இடத்திற்கு சரிந்துள்ளார்.

    பாகிஸ்தான் வீராங்கனை சதியா இக்பால் 732 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளார். இந்திய வீராங்கனை ரேணுகா சிங் தாகூர் 3 இடங்களை சரிந்து 14-வது இடத்தில் உள்ளார். ராதா யாதவ் 15-வது இடத்தில் உள்ளார்.

    பேட்டிங் தரவரிசையில் ஸ்மிரிதி மந்தனா 3-வது இடத்தை தக்கவைத்துள்ளார். ஆஸ்திரேலியா வீராங்கனை பெத் மூனி முதல் இடத்தையும், வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை ஹெய்லே மேத்யூஸ் 2வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

    ஜெர்மையா ரோட்ரிக்ஸ் 5 இடங்கள் முன்னேறி 9-வது இடத்தை பிடித்துள்ளார். ஷஃபாலி வர்மா 1 இடம் பின்தங்கி 10-வது இடத்தில் உள்ளார்.

    ஹர்மன்ப்ரீத் கவுர் 15-வது இடத்தில் உள்ளார்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் ப்ரோமோ வெளியிட்டுள்ளார்.
    • Young Champions-கூட Passion, Pressure, Perseverance பற்றி என்னோட உரையாடல்

    தமிழ்நாட்டின் இளம் சாம்பியன்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாடியுள்ளார்.

    இளம் தலைமுறை சாம்பியன்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடும் VIBE WITH MKS நிகழ்ச்சி நாளை மாலை 4 மணிக்கு வெளியாகிறது.

    இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோவை வெளியிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனை அறிவித்தார். 

    ×