

தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க.வுக்குள் நடப்பது தர்மயுத்தமா? தர்ம சங்கட யுத்தமா? என்பது எனக்கு தெரியாது. அது அவர்களுக்குள் நடக்கும் போர்.
இதற்கு முன் தினகரன் கட்சியினரும் எங்களை சந்திக்க தூது அனுப்பினார்கள். யார் யாரை எந்த சூழ்நிலையில் எதற்காக சந்தித்தார்கள் என்பது அந்த அந்த சூழ்நிலையை பொறுத்தது.
துணை முதல்-அமைச்சர்- டி.டி.வி. தினகரன் சந்திப்பு எந்த சூழ்நிலையில் எதற்காக நடந்ததோ எனக்கு தெரியாது. அவர்களுக்குள் நடப்பது தர்மயுத்தமா, தர்மசங்கட யுத்தமா என்பது தெரியாது. ஆனால் அவர்கள் ஒருவர் மீது ஒருவர் கொடுக்கும் குற்றச்சாட்டு தமிழக அரசியலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த போவதில்லை. ஆனால் டி.டி.வி. தினகரன் குழப்பத்தை ஏற்படுத்த நினைப்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.
கடந்த கால ஆட்சிகளும் சரி, இப்போதைய ஆட்சியும் சரி கோவில்களை பாதுகாக்க தவறிவிட்டன. கோவில்களில் காணாமல் போன சிலைகளும், தூண்களும், எங்கெல்லாம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன என்பதை பார்க்கும் போது அதிர்ச்சியாக உள்ளன.
அதற்கு முன்பு துணை வேந்தர்கள் நியமிக்கப்பட்டது பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ரூ.400 கோடி ஒதுக்கப்பட்டு மண் பரிசோதனை நடக்கிறது. இந்த நேரத்தில் முதல்வர் டெல்லி செல்வது ஆக்கப்பூர்வமான திட்டங்களுக்காக என்றால் நல்லது.