search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "படம்"

    • இதில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கர் ,கோல்டன் குளோப் விருது வென்றது.
    • ரூ.500 கோடியில் உருவான படம் உலக அளவில் ரூ. 1000 கோடி வசூலித்தது.

    சமீப காலமாக பல ஆண்டுகளுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மனதில் இடம் பெற்ற படங்கள் தியேட்டர்களில் "ரீ ரிலீஸ்" செய்யப்பட்டு மீண்டும் வசூல் அள்ளி குவித்து வருகிறது.

    இந்நிலையில் சமீபத்தில் வெளியான படங்கள் கூட 'மீண்டும் ரீ ரிலீஸ்' செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது. 2022 - ஆண்டு தியேட்டர்களில் 'ஆர்ஆர்ஆர்' படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றது.



    இப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அஜய்தேவ்கன், ஆலியா பட், ஸ்ரேயா உள்பட பலர் நடித்தனர்.

    பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி இதனை இயக்கினார். எம்.எம்.கீரவாணி இசை அமைத்திருந்தார்.

    இதில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கர் மற்றும் கோல்டன் குளோப் விருது வென்றது. 500 கோடியில் உருவான படம் உலக அளவில் 1000 கோடிக்கு மேல் வசூலித்தது.




    இந்நிலையில் 'ஆர்ஆர்ஆர்' படம் மீண்டும் தியேட்டர்களில் 'ரீ ரிலீஸ்' செய்யப்பட உள்ளது. இதுகுறித்து தயாரிப்பு குழுவினர் நாளை மறுநாள் (10-ந் தேதி) தியேட்டர்களில் இப்படம் 'ரீ ரிலீஸ்' செய்யப்படும் என அறிவித்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஜூன் 22 - ந் தேதி விஜயின் 50 -வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது.
    • வில்லு" படம் ஜூன் 21- ந் தேதி 'ரீ-ரிலீஸ்' செய்யப்படுகிறது.


    பிரபல நடிகர் விஜய் நடிப்பில் 2009 -ம் ஆண்டு வெளியான படம் 'வில்லு'. இப்படம் அதிரடி நகைச்சுவைப்படமாகும். பிரபு தேவா இயக்கியுள்ளார்.இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகை நயன்தாரா , பிரகாஷ் ராஜ் , வடிவேலு ஆகியோர் நடித்துள்ளனர்.




    இப்படத்தை ஐங்கரன் இண்டர்நேஷனல் தயாரித்துள்ளது. தேவி ஸ்ரீபிரசாத்  இசையமைத்துள்ளார். இப்படத்தில் விஜய் - வடிவேலு காமெடி படத்துக்கு வலு சேர்த்து இருந்ததால் "வில்லு" திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது.

    இந்நிலையில் விஜய்யின் 'கில்லி' படம் ரீ ரிலீஸாகி தமிழ்நாட்டில் பெரிய அளவில் வசூல் சாதனை படைத்தது.



    இதை தொடர்ந்து வருகிற ஜூன் 22 - ந் தேதி விஜயின் 50 -வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு 'வில்லு" படத்தை ஜூன் 21- ந்தேதி அன்று 'ரீ-ரிலீஸ்' செய்யப்படும் என ஜங்கரன் நிறுவனம் அறிவித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தற்பொழுது செல்வம் மாதப்பன் இயக்கத்தில் படிக்காத பக்கங்கள் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இத்திரைப்படம் வரும் மே 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    2016 ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளிவந்த கவலை வேண்டாம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவிரற்கு அறிமுகமாகினார் யாஷிகா ஆனந்த். 2018 ஆம் ஆண்டு வெளிவந்த இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் நடித்து மக்கள் கவனத்தை பெற்றார்.

    பின் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றார். சமீபத்தில் வெளிவந்த டபுள் டக்கர் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.

    அதைத்தொடர்ந்து தற்பொழுது செல்வம் மாதப்பன் இயக்கத்தில் படிக்காத பக்கங்கள் திரைப்படத்தில் நடித்துள்ளார். பிரஜின், ஜார்ஜ் மர்யன், முத்து குமார், பாலாஜி, லொல்லுசபா மனோகர் மற்றும் பல இப்படத்தில் நடித்துள்ளனர். படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகியுள்ளது. தாய்மை மற்றும் பெண்மையை மையமாக கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் வரும் மே 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விஜய்யின் பிறந்த நாளை யொட்டி ஜூன் 22- ந்தேதி இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
    • ஏப்ரல் 14 - ந் தேதி தமிழ் புத்தாண்டில் படத்தை வெளியிட திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    ஏஜிஎஸ்' பட நிறுவன தயாரிப்பில் GOAT என்ற படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். இது விஜய் க்கு 68- வது படமாகும்.இப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார்.

    இந்த படத்தில் பிரசாந்த்,பிரபுதேவா, மோகன், மீனாட்சி சௌத்ரி,சினேகா, லைலா, ஜெயராம்,யோகிபாபு, ஆகியோர் நடித்துள்ளனர். படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

    கோட் படத்தில் நடிகர் விஜய் கதாநாயகன், வில்லன் உள்ளிட்ட 2 வேடத்தில் நடிக்கிறார்.மேலும் கடந்த மாதம் கேரளாவில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இதில் விஜய் பங்கேற்று நடித்தார். அப்போது விஜய்க்கு கேரள ரசிகர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.




    இந்நிலையில் கடந்த வாரம் 'கோட்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக விஜய் துபாய் சென்றார். 'கோட்' படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5-ந்தேதி தியேட்டர்களில் வெளியாகும் என படக்குழு அறிவித்தது.

    இந்நிலையில் விஜயின் 69 -வது படத்தை எச்.வினோத் இயக்குவதாக கூறப்படுகிறது. தற்போது இந்த படம் குறித்து புது அப்டேட் வெளியாகி உள்ளது. விஜய்யின் பிறந்த நாளை யொட்டி ஜூன் 22- ந்தேதி இந்த படம் குறித்து அறிவிப்பு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.



    மேலும் இந்த ஆண்டுக்குள் இப்படத்தின் மொத்த படப்பிடிப்பு முடித்து விட்டு அடுத்த ஆண்டு ஏப்ரல் 14 - ந் தேதி தமிழ் புத்தாண்டில் தியேட்டர்களில் படத்தை வெளியிட திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டரை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் அவரது எக்ஸ் பக்கத்தில் மாலை வெளியிட்டார்
    • தடம் படத்திற்கு பிறகு இரு வேடங்களில் நடித்திருக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த ஜனவரி மாதம் விஜய் ஏ.எல் இயக்கத்தில் அருண் விஜய் , எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் இணைந்து நடித்து மிஷன் சாப்டர் 1 திரைப்படம் வெளியாகியது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பாலா இயக்கத்தில் வனங்கான், பார்டர், AV 36 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

    சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மான் கராத்தே படத்தை இயக்கிய திருக்குமரன் அருண் விஜயின் படத்தை இயக்குகிறார். இப்படத்தின் நாயகியாக சித்தி இத்னானி நடிக்கவுள்ளார். இவர் இதற்கு முன் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படத்தின் கதாநாயகியாக நடித்தது குறிப்பிடத்தக்கது.

    இவர்களுடன் தான்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார். படத்தின் இசையை சாம். சி.எஸ் மேற்கொள்கிறார். அன்பறிவு ஸ்டண்ட் காட்சிகளை கையாளுகின்றனர். பிடிஜி யூனிவர்சல் என்ற நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளனர்.

    படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டரை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் அவரது எக்ஸ் பக்கத்தில் மாலை வெளியிட்டார்.

    இப்படத்திற்கு 'ரெட்ட தல' என்ற தலைப்பை வைத்துள்ளனர் அதைத்தொடர்ந்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் படக்குழுவினர் வெளியிட்டனர். இப்படத்தில் அருண் விஜய் இரு வேடங்களில் நடித்துள்ளார். தடம் படத்திற்கு பிறகு இரு வேடங்களில் நடித்திருக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    அப்போஸ்டரில் அருண் விஜய் மற்றொரு அருண் விஜயின் கழுத்தை கடிப்பது போன்ற காட்சி அமைந்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இப்படத்தின் நாயகியாக சித்தி இத்னானி நடிக்கவுள்ளார்.
    • அன்பறிவு ஸ்டண்ட் காட்சிகளை கையாளுகின்றனர். பிடிஜி யூனிவர்சல் என்ற நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளனர்.

    கடந்த ஜனவரி மாதம் விஜய் ஏ.எல் இயக்கத்தில் அருண் விஜய் , எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் இணைந்து நடித்து மிஷன் சாப்டர் 1 திரைப்படம் வெளியாகியது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பாலா இயக்கத்தில் வனங்கான், பார்டர், AV 36 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

    சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மான் கராத்தே படத்தை இயக்கிய திருக்குமரன் அருண் விஜயின் படத்தை இயக்குகிறார். இப்படத்தின் நாயகியாக சித்தி இத்னானி நடிக்கவுள்ளார். இவர் இதற்கு முன் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படத்தின் கதாநாயகியாக நடித்தது குறிப்பிடத்தக்கது.

    இவர்களுடன் தான்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார். படத்தின் இசையை சாம். சி.எஸ் மேற்கொள்கிறார். அன்பறிவு ஸ்டண்ட் காட்சிகளை கையாளுகின்றனர். பிடிஜி யூனிவர்சல் என்ற நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளனர்.

    இப்படத்தின் தலைப்பு இன்று மாலை வெளியாகும் என படக்கிழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் அவரது எக்ஸ் பக்கத்தில் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடவுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மான் கராத்தே படத்தை இயக்கிய திருக்குமரன் இந்த படத்தை இயக்குகிறார்.
    • நடிகர் அருண் விஜய் நடிக்கும் அவரின் 36 வது படத்திற்கான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

    நடிகர் அருண் விஜய் நடிக்கும் அவரின் 36 வது படத்திற்கான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

    தனக்கென கதைகளை தேர்ந்தெடுத்து வித்தியாசமான கதைக்களத்தில் நடித்து வருகிறார் அருண் விஜய். அவர் நடிப்பில் ஜனவரி மாதம் ஏ.எல். விஜய் இயக்கத்தில் மிஷன் சாப்டர்-1 படம் வெளியாகியது. இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

    இதைத்தொடர்ந்து அருண் விஜய் அடுத்த படம் நடிக்கவிருக்கிறார். மான் கராத்தே படத்தை இயக்கிய திருக்குமரன் இந்த படத்தை இயக்குகிறார். இப்படத்தின் நாயகியாக சித்தி இத்னானி நடிக்கவுள்ளார். இவர் இதற்கு முன் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படத்தின் கதாநாயகியாக நடித்தது குறிப்பிடத்தக்கது.

    இவர்களுடன் தான்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார். படத்தின் இசையை சாம். சி.எஸ் மேற்கொள்கிறார். அன்பறிவு ஸ்டண்ட் காட்சிகளை கையாளுகின்றனர். பிடிஜி யூனிவர்சல் என்ற நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளனர்.

     

    படத்தின் பூஜை விழா இன்று சென்னையில் நடந்தது. அதில் பேசிய இயக்குனர் திருக்குமரன் " எப்படி சிவகார்த்திகேயனுக்கு மான் கராத்தே ஒரு திருப்பு முனை படமாக அமைந்ததோ , அதேப் போல் அருண் விஜய் - க்கும் ஒரு முக்கியமான படமாக அமையும். இது ஒரு அதிரடி ஆக்ஷன் படமாக அமையும்" எனக் கூறியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கதிர் நடித்திருந்தார்
    • கதிர், மாணவன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்

    நடிகர் கதிர் 2013-ம் ஆண்டு வெளியான மதயானைக்கூட்டம் படத்தின் மூலமாக நாயகனாகி அறிமுகமானார். அதன் பின்னர் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த பரியேறும் பெருமாள் திரைப்படம் மூலம், நல்ல நடிகர் என்ற பெயர் வாங்கினார்.

    பின்னர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கதிர் நடித்திருந்தார். அடுத்ததாக அமேசான் பிரைமில் வெளியான சூழல் வெப் தொடரில் நடித்திருந்தார். விரைவில் சுழல் 2-ம் பாகம் வெளியாக உள்ளது.

    இந்நிலையில் கதிர், மாணவன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்..இப்படத்தை எஸ்.எல்.எஸ் ஹென்றி இயக்குகிறார். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றிந்தது. இப்படத்தை பார்ச்சூன் ஸ்டுடியோஸ் மற்றும் எமினன்ட் என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.

    தற்போது, இப்படத்தின் முதல் பாடலாக கொல்லுறாளே என்கிற பாடல் இன்று மாலை வெளியாகியது. இப்பாடலை சந்துரு வரிகளில் பிரதீப் குமார் பாடியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • நுழைவுச்சீட்டு இருந்தும் நரிக்குறவர் இனமக்கள் திரையரங்க வாசலில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
    • அனைவரும் சமம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் திரைப்படம் பார்க்கும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    தஞ்சாவூர்:

    சென்னையில் உள்ள திரையரங்கில் புதிய படம் பார்க்க சென்ற நரிக்குறவர் இன மக்கள் நுழைவுச்சீட்டு இருந்தும் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

    இது சர்ச்சையானது.

    இந்நிலையில், தஞ்சை நகர பகுதிகளில் வாழும் சுமார் 55 நரிக்குறவர்கள் நேற்று வெளியான புதிய படத்தை திரையரங்கத்தில் கட்டண முதல் வகுப்பில் அமர்ந்து பார்க்க ஜோதி அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இதுகுறித்து ஜோதி அறக்கட்டளை நிர்வாகிகள் கூறுகையில்:-

    உரிய நுழைவுச்சீட்டு இருந்தும் நரிக்குறவர் இன மக்கள் சென்னை திரையரங்க வாசலில் தடுத்து நிறுத்தப்பட்டது வருத்தத்துக்குரியது.

    அனைவரும் சமம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் நரிக்குறவர் இன மக்களுடன் ஒன்றாக அமர்ந்து தஞ்சை நகர பொதுமக்கள் திரையங்கத்தில் திரைப்படம் பார்க்கும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    சென்னை திரையரங்கத்தில் நடைபெற்றது போன்ற சம்பவங்கள் இனி நடக்க கூடாது என்பதே அனைவரின் விருப்பம் என்றனர்.

    ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் மேற்பார்வையில் அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • தியேட்டர்களில் கட் அவுட் வைக்க அனுமதி மறுப்பு
    • ரசிகர்கள் ஏமாற்றம்

    நாகர்கோவில்:

    பொங்கல் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாட பொதுமக்கள் தயாராகி வரும் நிலையில் பொதுமக்களுக்கு விருந்தளிக்கும் வகையில் பொங்கல் பண்டிகையை யொட்டி விஜய் நடித்த வாரிசு படமும், அஜித் நடித்த துணிவு படமும் வெளியாகிறது.

    இதையடுத்து விஜய், அஜித் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். நீண்ட நாட்களுக்கு பிறகு விஜய் அஜித் இருவரது படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆவது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. நாகர்கோவிலில் விஜய் நடிக்கும் வாரிசு படம் 2 தியேட்டர்களில் வெளியாக உள்ளது. இதே போல் அஜித் நடித்த துணிவு படமும் 2 தியேட்டர்களில் வெளியிடப்படுகிறது.

    இதையடுத்து ரசிகர்கள் தியேட்டர் முன்பு கட் அவுட்கள் வைக்க ஏற்பாடுகள் செய்தனர். 2 ரசிகர்களும் கட் அவுட்டு கள் வைக்க போலீசாரின் அனுமதி கேட்டனர். இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். மாநகராட்சி அதிகாரிகளை சந்தித்து அனுமதி கேட்டனர்.அவர்களும் தியேட்டருக்கு வெளியே கட் அவுட் வைக்க அனுமதி மறுத்துள்ளனர்.

    தியேட்டருக்குள் கட் அவுட் வைத்தால் அதில் ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டால் தியேட்டர் நிர்வாகமே முழு பொறுப்பு என்று தெரிவித்தனர். இத னால் தியேட்டர் உரிமை யாளர்களும் கட்அவுட் வைப்பதற்கு அனுமதி மறுத்துள்ளதாக கூறப்படு கிறது. வழக்கமாக புதிய படங்கள் வெளியானால் தியேட்டர்களின் வெளியே கட்அவுட்டுகள் வைப்பது வழக்கமாகும். ஆனால் தற்பொழுது கட்அவுட்டுகள் வைக்க அனுமதி மறுக்கப் பட்டுள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    நாகர்கோவிலில் விஜய் நடித்த வாரிசு படம் நாளை 11-ந்தேதி அதிகாலை 6.00 மணிக்கு முதல் காட்சி வெளியிடப்பட உள்ளது. இதற்கான டிக்கெட்டுகள் விற்பனை தற்போது நடைபெற்று வருகிறது. இதே போல் அஜித் நடித்த வாரிசு படம் நாளை காலை 7.30 மணிக்கு திரையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    2 படத்திற் கான டிக்கெட்டுகளும் விறுவிறுப்பாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு டிக்கெட்டுகளை வாங்கி வருகிறார்கள்.முதல் நாள் காட்சிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டதாக ரசிகர்கள் தெரிவித்து உள்ளனர்.

    நாகர்கோவிலை தவிர்த்து வெள்ளிச்சந்தை, குழித்துறை பகுதியில் உள்ள தியேட்டர்களிலும் விஜய் அஜித் படங்கள் வெளியிடப்படுகிறது.

    ×