search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ruturaj Gaikwad"

    • குஜராத் அணி சாய் சுதர்சன், சுப்மன் கில் ஆகியோரின் சதங்களால் 231 ரன்கள் குவித்தது.
    • சிஎஸ்கே 196 ரன்கள் அடித்து 35 ரன்னில் தோல்வியை சந்தித்தது.

    குஜராத் டைட்டன்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று அகமதாபாத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் குஜராத்தை மீண்டும் ஒரு முறை வீழ்த்தி சிஎஸ்கே பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை ஏறக்குறைய உறுதி செய்யும் ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

    ஆனால் முதலில் விளையாடிய குஜராத் அணி சாய் சுதர்சன், சுப்மன் கில் ஆகியோரின் சதங்களால் 231 ரன்கள் குவித்து விட்டது. பின்னர் விளையாடிய சிஎஸ்கே அணியால் 8 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

    குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தது குறித்து சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியதாவது:-

    எங்கள் பீல்டிங் எங்களை வீழ்த்தியது, நாங்கள் கூடுதலாக 10-15 ரன்களை கொடுத்தோம். திட்டத்தை செயல்படுத்துவதில் நாங்கள் நன்றாக இருந்தோம், ஆனால் அவர்கள் சில நல்ல ஷாட்களை விளையாடினர். பேட்ஸ்மேன்கள் நன்றாக விளையாடி, சிறப்பாக நிலையில் சென்று கொண்டிருக்கும்போது உங்களால் அவர்களை கட்டுப்படுத்த முடியாது.

    இது மிகவும் விரைவானது (சென்னையில் நடைபெறும் போட்டி குறித்து). நாங்கள் விரைவாக சென்னைக்கு செல்ல வேண்டும். சென்னையில் எங்களுக்கு ஒரு கடினமான ஆட்டம் உள்ளது. அதில் சிறப்பாக விளையாடி வெற்றி பெறும் அளவிற்கு நாங்கள் மாற வேண்டும்.

    இவ்வாறு ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.

    நாளை சென்னை சேப்பாக்கத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் சிஎஸ்கே விளையாட இருக்கிறது. ஒரு நாள் இடைவெளியில் போட்டி இருப்பதால் ருதுராஜ் கெய்க்வாட் அவ்வாறு தெரிவித்துள்ளார்.

    குஜராத் அணி பேட்டிங் செய்யும்போது சென்னை அணியின் பீல்டிங் மிகவும் மோசமாக இருந்தது. பல கேட்ச்களை தவறவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பேட்டிங்கில் 180 முதல் 200 ரன்கள் வரை அடிக்க முயற்சித்தோம்.
    • இம்பேக்ட் வீரராக பேட்டரை களமிறக்க நினைத்தோம்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பஞ்சாப் அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

    இன்றைய வெற்றியின் மூலம் நடப்பு ஐ.பி.எல். தொடரின் கடந்த போட்டியில் பஞ்சாப் அணியிடம் சந்தித்த தோல்விக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பதிலடி கொடுத்துள்ளது. போட்டி முடிந்த பிறகு பேசிய சென்னை அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக பந்துவீசி அசத்திய சிமர்ஜித் சிங்கிற்கு பாராட்டு தெரிவித்தார்.

    "பிட்ச் ஸ்லோவாக இருந்ததை அனைவரும் நம்பினர். எனினும், பேட்டிங்கில் 180 முதல் 200 ரன்கள் வரை அடிக்க முயற்சித்தோம். பிறகு, துவக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்த சமயத்தில் 160 முதல் 170 வரை அடித்தாலே நல்ல ஸ்கோராக இருக்கும் என்று நினைத்தோம்."

    "சிமர்ஜித் சிங்கிற்கு அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை, ஆனால் இதுவும் தாமதம் இல்லை. நாங்கள் இம்பேக்ட் வீரராக பேட்டரை களமிறக்க நினைத்தோம், ஆனால் சிமர்ஜித் சிங் 2 அல்லது 3 விக்கெட்டுகளை வீழ்த்துவார் என நம்பிக்கை இருந்தது," என்று தெரிவித்தார்.

    • விராட் கோலி 500 ரன்கள் அடித்துள்ளார்.
    • ருதுராஜ் கெய்க்வாட் 509 ரன்கள் அடித்து முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்துள்ளது.

    சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 48 பந்தில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் 62 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் இந்த சீசனில் 10 போட்டிகளில் 509 ரன்கள் குவித்துள்ளார். இந்த போட்டிக்கு முன்னதாக ஆர்சிபி அணியின் விராட் கோலி 10 போட்டிகளில் 500 ரன்கள் அடித்து ஆரஞ்ச் தொப்பியை கைவசப்படுத்தியிருந்தார்.

    இந்த போட்டியில் 62 ரன் அடித்ததன் மூலம் 509 ரன்களுடன் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து ஆரஞ்ச் தொப்பியை விராட் கோலியுடன் இருந்து பெற்றுள்ளார்.

    சாய் சுதர்சன் 418 ரன்களுடன் 3-வது இடத்தில் உள்ளார். கே.எல். ராகுல் 406 ரன்களுடன் 4-வது இடத்தில் உள்ளார். ரிஷப் பண்ட் 398 ரன்களுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.

    • பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • சென்னை அணி ஒரு போட்டியில் மட்டுமே டாஸ் வென்றுள்ளது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று தனது 10-ஆவது போட்டியில் விளையாடுகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் சென்னை அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    இன்றைய போட்டியில் டாஸ் தோற்றதன் மூலம் சென்னை அணி பத்து போட்டிகளில் ஒரே போட்டியில் மட்டுமே டாஸ் வென்றுள்ளது. தொடர்ச்சியாக டாஸ்-இல் தோல்வியை தழுவி வருவது தொடர்பாக சென்னை அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கருத்து தெரிவித்துள்ளார்.

    அப்போது பேசிய அவர், "எனது டாஸ் சாதனையை பார்த்து எங்களின் அணி வீரர்களில் பெரும்பாலானோர், நான் டாஸ் இழப்பேன் என்று தெரிந்து முதலில் பேட்டிங் ஆட தயாராகி விட்டனர்," என்று தெரிவித்தார். 

    • டி20 கிரிக்கெட்டில் சுப்மன் கில்லை விட ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக விளையாடுகிறார்.
    • கில் தொடர்ந்து சொதப்பி வரும் நிலையில், தொடர்ந்து வாய்ப்பு பெற்று வருகிறார்.

    டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா, ரிங்கு சிங் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவர்களுக்கு வாய்க்கு கிடைக்கவில்லை. ரிங்கு சிங் ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

    இந்திய அணியின் தேர்வு குறித்து கிரிக்கெட் விமர்சகர்கள், முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். ஒருவேளை விராட் கோலி தொடக்க வீரராக களம் இறங்கப்பட்டால் ஜெய்ஸ்வால் ஆடும் லெவன் அணியில் இடம் பெறமாட்டார். ஒருவேளை காயம் ஏற்பட்டால் மாற்று வீரராக களம் இறக்க சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு இடம் கிடைக்கவில்லை.

    ருதுராஜ் கெய்க்வாட் சமீப காலமாக சிறப்பாக விளையாடி வருகிறார். ஆசிய விளையாட்டில் இவரது தலைமையில் இந்திய அணி தங்கம் வென்றது. இந்த ஐபிஎல் தொடரில் அற்புதமாக விளையாடி வருகிறார். 9 போட்டிகளில் ஒரு சதம், 3 அரைசதங்களுடன் 447 ரன்கள் குவித்துள்ளார்.

    இந்த நிலையில் ருதுராஜ் கெய்க்வாட்டிற்குப் பதிலாக சுப்மன் கில்லை தேர்வு செய்தது முற்றிலும் பாரபட்சம் என இந்திய அணியின் முன்னாள் வீரரும், தேர்வாளருமான ஸ்ரீகாந்த் தேர்வுக்குழுவினர் மீது சாடியுள்ளார்.

    இது தொடர்பாக ஸ்ரீகாந்த் கூறியதாவது:-

    ருதுராஜ் கெய்க்வாட்டை பின்னுக்குத் தள்ளி சுப்மன் கில் தேர்வானது எனக்கு குழப்பமாக உள்ளது. சுப்மன் கில் அவுட் ஆஃப் பார்மில் உள்ளார். ருதுராஜ் கெய்க்வாட் டி20 கிரிக்கெட்டில் சுப்மன் கில்லை விட சிறப்பாக உள்ளார்.

    சுப்மன் கில் தோல்வியடைந்த நிலையிலும், தொடர்ந்து அணியில் வாய்ப்பு பெற்று வருகிறார். அவர் தேர்வாளர்களின் ஆதரவை பெறுள்ளார். இது மிகப்பெரிய பாரபட்சம்.

    இவ்வாறு ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

    5 முறை சாம்பியனான சென்னை அணி இந்த சீசனில் நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் 49-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பஞ்சாப் கிங்சை எதிர்கொள்கிறது.

    5 முறை சாம்பியனான சென்னை அணி இந்த சீசனில் நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த அணி 9 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 4 தோல்வியுடன் 10 புள்ளி பெற்றுள்ளது.

    சென்னையில் நடைபெறும் 6-வது லீக் ஆட்டம் இதுவாகும். இங்கு சென்னை அணி 5 ஆட்டங்களில் ஆடி 4-ல் வெற்றி, ஒன்றில் தோல்வி (லக்னோவுக்கு எதிராக) கண்டுள்ளது.

    இந்நிலையில் டாஸில் வெற்றி பெற பயிற்சி செய்து வருவதாக எஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.

    டாஸ் குறித்து பேசிய அவர், "டாஸை உன்னால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால், அதை நீ வென்றாக வேண்டும். எனவே, அதற்கு பயிற்சி எடு என டோனி பாய் கூறினார். அப்போதில் இருந்து டாஸ் போடுவதை தொடர்ச்சியாக டக் அவுட்டில் பயிற்சி செய்து வருகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    நடப்பு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இதுவரை 9 போட்டிகளில் வழிநடத்தியிருக்கும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், அதில் 8 முறை டாஸில் தோற்றுள்ளார். கொல்கத்தா அணிக்கு எதிராக சென்னையில் நடந்த போட்டியில் மட்டும் தான் அவர் டாஸ் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது.
    • லக்னோ அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 39 ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் சென்னை அணி லக்னோவிடம் தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது.

    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்த நிலையில், தோல்வி குறித்து பேசிய சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் லக்னோ அணி வீரர் ஸ்டோயினிஸ்-க்கு பாராட்டு தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், "13 ஆவது ஓவர் வரை போட்டி எங்களின் கையில் தான் இருந்தது, ஆனால் ஸ்டோயினிஸ் சிறப்பாக விளையாடினார். எங்களது தோல்விக்கு பனி முக்கிய காரணமாக அமைந்தது."

    "பனி அதிகம் இருந்ததால், பந்துவீச்சாளர்கள் தங்களது திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை. போட்டியை இன்னும் சிறப்பாக கொண்டு சென்றிருக்கலாம். ஆனால் இதுவும் போட்டின் ஒரு பகுதி தான். இதை கட்டுப்படுத்த முடியாது. போட்டி முடிவில் லக்னோ அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது," என்று தெரிவித்தார். 

    • 28 பந்தில் ஏழு பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார்.
    • ருதுராஜ் கெய்க்வாட் சதத்தில் 11 பவுண்டரி, 3 சிக்ஸ் அடங்கும்.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 39-வது லீக் ஆட்டம் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற லக்னோ பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கத்தில் சென்னை அணி ரன்கள் குவிக்க திணறியது. நேரம் செல்ல செல்ல ரன்வேகத்தை அதிகரித்தது. ருதுராஜ் கெய்க்வாட்டில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    28 பந்தில் அரைசதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய அவர் 18-வது ஓவரில் பவுண்டரி அடித்து சதம் விளாசினார். அவர் 56 பந்தில் சதம் அடித்தார். இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் ஒரு வீரர் அடிக்கும் முதல் சதம் இதுவாகும். ருதுராஜ் கெய்க்வாட் சதத்தில் 11 பவுண்டரி, 3 சிக்ஸ் அடங்கும்.

    இந்த சீசனில் பட்லர் 2 சதம், டிராவிட் ஹெட், சுனில் நரைன், ஜெய்ஸ்வால், விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் தலா ஒரு சதம் விளாசியுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் நேற்று மோதின
    • 177 ரன்களை துரத்திய லக்னோ அணி 19 ஓவர்கள் முடிவில் 180 ரன்களை குவித்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 34 ஆவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் நேற்று மோதின.

    அதில், முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா சிறப்பாக ஆடி 57 ரன்களை குவித்தார். கடைசியில் களமிறங்கிய எம்.எஸ். டோனி 9 பந்துகளில் 28 ரன்களை குவித்தார்.

    177 ரன்கள் என்ற இலக்கை துரத்திய லக்னோ அணி 19 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 180 ரன்களை குவித்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சி.எஸ்.கே. சார்பில் முஸ்தாஃபிசுர் மற்றும் பத்திரனா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    அதைத் தொடர்ந்து லக்னோவுக்கு எதிரான போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்க தவறியதால் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருதுராஜ்க்கு ₹12 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதாக ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • சிஎஸ்கே 20 ரன்னில் தோல்வியடைந்தது.
    • டோனி கடைசி ஓவரில் இரண்டு சிக்ஸ், இரண்டு பவுண்டரியுடன் 20 ரன் விளாசினார்.

    டெல்லி கேப்பிட்டல்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

    கடந்த இரண்டு போட்டிகளில் பேட்டிங் செய்யாத எம்எஸ் டோனி இந்த போட்டியில் களம் இறங்கினார். அவர் களத்திற்கு வரும்போது 23 பந்தில் 70 ரன்கள் தேவைப்பட்டது, முதல் பந்தை பவுண்டரி விரட்டி அசத்தினார்.

    எம்எஸ் டோனி களம் இறங்கியதும் ரசிகரக்ள் டோனி டோனி என கோஷமிட்டனர். விசாகப்பட்டினம் டெல்லியின் ஹோம் கிரவுண்ட் ஆகும். ஆனால் நேற்று கேலரியில் எங்கு பார்த்தாலும் மஞ்சளாக காட்சியளித்தது. அந்த அளவிற்கு சிஎஸ்கே ரசிகர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது.

    வெற்றியோ... தோல்வியோ... டோனி டோனி என கோஷம் எழுப்பினர். அதற்கு ஏற்ப டோனியும் சிக்ஸ், பவுண்டரி விளாசினார். கடைசி ஓவரை நோர்ஜே வீசினார். இந்த ஓவரில் இரண்டு சிக்ஸ், இரண்டு பவுண்டரியுடன் 20 ரன்கள் விளாசினார்.

    மொத்தம் 16 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் எம்எஸ் டோனி 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஸ்டிரைக் ரேட் 231.25 ஆகும்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியடைந்த நிலையிலும் மைதானத்தில் இருந்த சிஎஸ்கே ரசிகர்கள் ஆரவாரம் எழுப்பினர். இதனால் வெற்றி பெற்ற அணி எது என்ற குழப்பம் கூட டெல்லி கேப்பிட்டல்ஸ் ரசிகர்களுக்கு ஏற்பட்டிருக்கலாம்.

    போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற்றதோ இல்லையோ... அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. நாங்கள் டோனி ஆட்டத்தை பார்க்க வந்தோம். என்ஜாய் செய்தோம் என ரசிகர்கள் ஆரவாரம் எழுப்பினர். அதற்கு ஏற்பட டோனியின் ஆட்டமும் அமைந்தது.

    • சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் 3 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து ஏழு ரன்கள் மட்டுமே எடுத்தது.
    • டெல்லியை 191 ரன்னுக்குள் கட்டுப்படுத்தியது நல்ல முயற்சிதான்.

    டெல்லி கேப்பிட்டல்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. முதலில் விளையாடிய டெல்லி 191 ரன்கள் குவித்தது. பின்னர் 192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 171 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    போட்டியில் தோல்வியடைந்தது குறித்து சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியதாவது:-

    பவர்பிளே ஓவர்களுக்குப் பிறகு பந்து வீச்சாளர்கள் நல்ல நிலைக்கு திரும்பியது மகிழ்ச்சி அளித்தது. 191 ரன்னுக்குள் கட்டுப்படுத்தியது நல்ல முயற்சிதான். முதல் இன்னிங்ஸ் போது ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது. 2-வது இன்னிங்சில் எக்ஸ்ட்ரா சீம் மூவ்மென்ட் இருந்தது. ரச்சின் ரவீந்திரா 12 பந்தில் 2 ரன் என்பது மிகப்பெரிய வித்தியாசம் என நினைக்கிறேன். முதல் மூன்று ஓவர்கள் எங்களுக்கு சரியாக அமையவில்லை. இதுதான் போட்டியின் தோல்விக்கான வித்தியாசம். பாதி நேரத்தில் ஆட்டத்தை தங்கள் பக்கம் திருப்பினோம்.

    எக்ஸ்ட்ரா சீம் மூவ்மென்ட்-ஐ நாங்கள் எங்களுக்கு சாதமாக மாற்றிக் கொள்ள முடியவில்லை. ரன்ரேட்டை குறைக்க மிகப்பெரிய ஓவராக அமையாமல் போனது. தீபக் சாஹர் முதல் மூன்று ஓவர்கள் வீசினார். நாங்கள் முதல் நான்கு ஓவர்களை நன்றாக வீசினார். ஆனால் பவர்பிளேயின் கடைசி இரண்டு ஓவர்களில் அதிக ரன்கள் கொடுத்துவிட்டோம். நாங்கள் ஒன்றிரண்டு பவுண்டரிகளை நிறுத்தியிருந்தால் அது மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும்.

    இவ்வாறு ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்தார்.

    டெல்லி அணி கேப்டன் ரிஷப் பண்ட் கூறியதாவது:-

    பந்து வீச்சாளர்கள் இன்று சிறப்பான தங்களது பணியை செய்து முடித்தார்கள். நாங்கள் தவறில் இருந்து பாடம் கற்றுக் கொண்டோம். கடந்த இரண்டு வாரங்களாக பிரித்வி ஷா கடுமையான வகையில் பயிற்சி மேற்கொண்டார். இந்த நேரத்தில் அவருக்கு வாய்ப்பு கொடுத்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்தோம்.

    இது போட்டி எவ்வாறு செல்கிறது. அதைச் சார்ந்ததாக இருக்கும். முகேஷ் குமார் டெத் ஓவர்களில் சிறப்பாக பந்து வீச முடியும் என்றால், அது சிறப்பாக இருக்கும். ஒரு கிரிக்கெட்டராக நான் என்னுடைய 100 சதவீத முயற்சியை வெளிப்படுத்துகிறேன்.

    கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விளையாடாத காரணத்தால், கொஞ்சம் நேரம் எடுத்து கொள்கிறது. எது நடந்தாலும், மீண்டும் களத்திற்கு வருவது முக்கியம் என்ற தன்னம்பிக்கை எப்போதும் இருந்தது.

    இவ்வாறு ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் 3 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து ஏழு ரன்கள் மட்டுமே எடுத்தது.

    • எம்.எஸ் டோனி என்ற பெயர்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இன்ஸ்டாகிராமில் அதிக பேர் பின்தொடர்பவதற்கு காரணம்
    • சென்னைக்கு அடுத்தபடியாக 13.5 மில்லியன் பின் தொடர்பவர்களுடன் பெங்களூரு அணி இரண்டாவது இடத்தில் உள்ளது

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவர்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 15 மில்லியன் பின் தொடர்பவர்களை பெற்ற முதல் அணி என்ற சாதனையை படைத்துள்ளது.

    சென்னைக்கு அடுத்தபடியாக 13.5 மில்லியன் பின் தொடர்பவர்களுடன் ஆர்.சி.பி அணி இரண்டாவது இடத்திலும், 13.2 மில்லியன் பின் தொடர்பவர்களுடன் மும்பை இந்தியன்ஸ் அணி மூன்றாவது இடத்திலும் உள்ளது.

    எம்.எஸ் டோனி என்ற பெயர்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இன்ஸ்டாகிராமில் அதிக பேர் பின்தொடர்பவதற்கு காரணம் என்றால் மிகையாகாது. இந்திய முழுவதும் சென்னை அணிக்கு ரசிகர்கள் இருப்பதற்கும் அவர்தான் காரணம். இதுவரை 5 ஐபிஎல் கோப்பைகளை சென்னை அணி வென்றுள்ளது.

    இந்நிலையில், ஐபிஎல் 2024 தொடரில் சிஎஸ்கே கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகி, ருதுராஜ் கெய்க்வாட் இடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைத்தார். இந்த தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் முதல் 2 போட்டிகளிலும் சென்னை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    ×