என் மலர்
ஆன்மிகம்
- பராசக்தி பீடங்களுள் ஒன்றான கமலாம்பிகை கோவிலின் மேற்கு மூலையில் 'அக்சர' பீடம் உள்ளது.
- துறவற வாழ்க்கையை விரும்பும் பக்தர்களுக்கு யோகாசனத்தில் வீற்றிருக்கும் கமலாம்பிகை அருள்பாலிக்கிறார்.
பஞ்சபூத தலங்களில் பூமிக்கான திருத்தலமாக திருவாரூர் தியாகராஜர் கோவில் விளங்குகிறது. 'திருவாரூர் பிறந்தார்கள் எல்லோர்க்கும் அடியேன்' என்று சுந்தரர் தேவாரத்தில் புகழ்ந்து பாடியுள்ளார். திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்கு சொந்தமான ஆழித்தேர் உலக அளவில் பிரபலமான, பிரமாண்டமான தேராகும். 'ஆழி' என்பதற்கு பரந்து விரிந்த அளவிட முடியாத என்பது பொருள். இதனால் கடலுக்கு 'ஆழி' என பெயர் வந்தது. இதில் அளவில் பெரியதும், புராணம், வரலாற்று சிறப்புடையதுமான தேர் என்பதால் திருவாரூர் தேருக்கு 'ஆழித்தேர்' என பெயர் வந்தது.
திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்கு என்று பல சிறப்பம்சங்கள் உள்ளன. அன்னை பராசக்தி இத்தலத்தில் வீற்றிருக்கும் திருக்கோலங்களுக்கு என்று தனி மகத்துவம் உண்டு. இங்கு அன்னை பராசக்தி கமலாம்பிகையாகவும், நீலோத்பலாம்பாளாகவும் இருவேறு திருக்கோலங்களில் தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலிக்கிறார். திருவாரூர் தியாகராஜர் கோவிலின் மூன்றாவது பிரகாரத்தில் வடமேற்கு திசையில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது கமலாம்பிகையின் தனிக்கோவில். இங்கு அம்பிகை தனது தலையில் ஈசனைப் போன்று கங்கையையும், பிறையையும் தரித்து யோகாசனத்தில் அமர்ந்திருக்கிறார்.
பராசக்தி பீடங்களுள் ஒன்றான கமலாம்பிகை கோவிலின் மேற்கு மூலையில் 'அக்சர' பீடம் உள்ளது. இதில் பீடமும், 51 எழுத்துகள் எழுதப்பட்ட திருவாசியும் உள்ளன. இங்கு வந்தால் சில நிமிடங்கள் நின்று தியானித்து செல்ல வேண்டும். கோவிலின் இரண்டாம் பிரகாரத்தில் நீலோத்பலாம்பாளுக்கு தனிக்கோவில் உள்ளது. அங்கு நின்ற கோலத்தில் அருள்புரியும் நீலோத்பலாம்பாள் திருக்கரத்தில் கருங்குவளை மலர் ஏந்தி உள்ளார்.
இந்த அம்பிகையின் அருகே தோழி ஒருத்தி தமது தோள் மீது பாலமுருகனை சுமந்திருக்க முருகனின் சுட்டு விரலை தனது இடது கரத்தால் பற்றி நிற்கிறார் அம்பிகை. வேறு எந்த தலத்திலும் அம்பிகையின் இந்த அற்புத கோலத்தை தரிசிக்க முடியாது. நீலோத்பலாம்பிகை தன் இளைய பிள்ளையோடு எழுந்தருளி உள்ள காட்சியானது இல்லற வாழ்வின் மாண்பை உணர்த்துகிறது. இந்த அன்னை, இல்லற வாழ்வு அமைதியாக, ஆனந்தமாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு அருள்புரிகிறார்.
அதேபோல துறவற வாழ்க்கையை விரும்பும் பக்தர்களுக்கு யோகாசனத்தில் வீற்றிருக்கும் கமலாம்பிகை அருள்பாலிக்கிறார். தனிக்கோவிலில் தவக்கோலத்தில் காட்சி தரும் கமலாம்பிகை பாசம், தாமரை, அபயம் தாங்கிய திருக்கரங்களுடன் காட்சி தருகிறார். திருவாரூரில் அன்னை பராசக்தி இருவேறு திருக்கோலங்களில் காட்சி தருவதற்கு காரணம் உண்டு.
குழந்தை பாலமுருகனுடன் காட்சி தரும் நீலோத்பலாம்பாள் இம்மை வாழ்க்கையின் தத்துவ விளக்கமாகும். கமலாம்பிகை தவத்திருக்கோலத்தில் காணப்படுவது மறுமைக்கு வழிகாட்டும் தத்துவமாகும். இம்மைக்கும், மறுமைக்கும் அருளதிகாரியாக அன்னை பராசக்தி திகழ்கிறாள் என்ற தத்துவ விளக்கமாகவே அன்னை பராசக்தி திருவாரூரில் இருவித கோலங்களுடன் எழுந்தருளி காட்சி தருவதாக ஐதீகம்.
- சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
- திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு தை-19 (திங்கட்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : பிரதமை பின்னிரவு 3.37 மணி வரை பிறகு துவிதியை
நட்சத்திரம் : ஆயில்யம் நள்ளிரவு 12.29 மணி வரை பிறகு மகம்
யோகம் : சித்த, மரணயோகம்
ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
திருவிடைமருதூர், திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர் சிவன் கோவில்களில் காலையில் சோமவார அபிஷேகம், அலங்காரம்
சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் சப்தாவர்ணம். சென்னை ஸ்ரீ சிங்கார வேலவர் தெப்பம். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்கு திருமஞ்சனம். நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாளுக்கு காலையில் அலங்கார திருமஞ்சனம். கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ பூவண்ணநாதருக்கு காலையில் பால் அபிஷேகம்.
திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத்சுந்தர குசாம்பாள் சமேத ஸ்ரீ மகாலிங்க சுவாமி, திருமயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர், திருவான்மியூர், ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் ஸ்ரீ அரளாகேசி அம்பாள் சமேத ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோவில்களில் காலையில் சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சன சேவை. திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு. தேவக்கோட்டை ஸ்ரீ சிலம்பணி விநாயகர், ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் கோவில்களில் காலையில் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஜெயம்
ரிஷபம்-சிறப்பு
மிதுனம்-சுகம்
கடகம்-உயர்வு
சிம்மம்-நட்பு
கன்னி-அமைதி
துலாம்- புகழ்
விருச்சிகம்-ஆதரவு
தனுசு- பெருமை
மகரம்-சுபம்
கும்பம்-வரவு
மீனம்-போட்டி
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
பிரச்சனை அகலும் நாள். பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். தொழில் சம்பந்தமாக முக்கியப் புள்ளிகளைச் சந்திப்பீர்கள்.
ரிஷபம்
காரிய வெற்றி ஏற்படும் நாள். கட்டிடம் கட்டும் முயற்சியில் இருந்த தடை அகலும். வெளிவட்டார பழக்கம் விரிவடையும். பண வரவு திருப்தி தரும்.
மிதுனம்
மனக்குழப்பம் அகலும் நாள். செயல்பாடுகளில் கடைசி நேரத்தில் வெற்றி கிடைக்கும். சுபச்செய்திகள் வந்து சேரும். புதிய வேலை வாய்ப்பு பற்றிய செய்தி மகிழ்ச்சி தரும்.
கடகம்
ரொக்கத்தால் வந்த சிக்கல்கள் அகலும் நாள். நினைத்த காரியத்தை உடனடியாக செய்து முடிப்பீர்கள். உற்சாகம் உடலில் குடிகொள்ளும்.
சிம்மம்
திடீர் பயணங்களால் திசை திருப்பங்கள் ஏற்படும் நாள். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். மதிப்பும், மரியாதையும் உயரும். வியாபாரத்தில் அதிக முதலீடு செய்வீர்கள்.
கன்னி
அலைபேசி வழித் தகவலால் ஆச்சரியமளிக்கும் நாள். நேற்றைய பிரச்சனை நல்ல முடிவிற்கு வரும். வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் விலகும்.
துலாம்
எதிர்பார்த்த காரியம் எளிதில் முடியும் நாள். வாகனம் வாங்குவது பற்றி சிந்திப்பீர்கள். தொழில் முன்னேற்றம் கருதி பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள்.
விருச்சிகம்
சந்தோஷ வாய்ப்புகளைச் சந்திக்கும் நாள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.
தனுசு
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். விரயங்கள் கூடும். உறவினர் பகையால் நல்ல காரியம் ஒன்று தடைபடலாம். உடல் நலனில் கவனம் தேவை.
மகரம்
வரவைவிட செலவு கூடும் நாள். நண்பர்களை நம்பி எதிலும் இறங்க வேண்டாம். உறவினர் பகை உண்டு. விலை உயர்ந்த பொருட்களைக் கையாள்வதில் கவனம் தேவை.
கும்பம்
முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு உண்டு. பொருளாதாரத் தடை அகலும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு பற்றிய செய்தி வந்து சேரும்.
மீனம்
வம்பு வழக்குகள் விலகி வளர்ச்சி காணும் நாள். கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். இல்லத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
- ரிஷபம் தன்னம்பிக்கை உயரும் வாரம்.
- மிதுனம் பொருளாதார முன்னேற்றம் அதிகரிக்கும் வாரம்.
மேஷம்
மாற்றங்களை சந்திக்கும் வாரம். உச்சம் பெற்ற ராசி அதிபதி செவ்வாய் தனது 4-ம் பார்வையால் தன் வீட்டை தானே பார்க்கிறார். செவ்வாயின் நான்காம் பார்வைக்கு சொத்துக்களை வழங்கக்கூடிய சக்தி உண்டு. இதுவரை வீடு நில புலம் இல்லாதவர்களுக்கு புதிய சொத்துக்கள் சேரும். பழைய சொத்துக்களின் மதிப்பு உயரும். உங்கள் திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். ஏழரைச் சனி துவங்கினாலும் குருவின் பார்வை பாக்கிய ஸ்தானத்திற்கு இருப்பதால் எப்பொழுதும் உழைத்துக் கொண்டே இருக்கும் ஆர்வம் மிகுதியாகும்.
துணிந்து சில முடிவுகளை எடுத்து முன்னேறுவீர்கள். தொழில் உத்தியோக நிமித்தமாக அடிக்கடி பிரயாணம் செய்ய நேரும். நிரந்தரமான நிலையான வருமானம் உண்டாகும். சேமிப்புகள் உயரும். மனைவி மூலம் செல்வாக்கு உயரும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. திருமண தடைகள் நீங்கி வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும். சுப நிகழ்ச்சிகளால் அலைச்சல் அதிகமாகும். முருகன் வழிபாட்டால் முத்தாய்ப்பான முன்னேற்றங்களை அடைய முடியும்.
ரிஷபம்
தன்னம்பிக்கை உயரும் வாரம். பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராசி அதிபதி சுக்கிரன் வார இறுதியில் பத்தாம் இடமான தொழில் ஸ்தானம் சென்று ராகுவுடன் இணைந்து குரு பார்வை பெறுகிறார். பெரிய முதலீடுகளை பயன்படுத்தி தொழிலை விரிவுபடுத்துவது பற்றி திட்டமிடுவீர்கள். கடின உழைப்பை வெளிப்படுத்துவீர்கள். வீடு, மனை, பூமி தொடர்பான நெடுநாள் கனவுகள் நிறைவேறும். உத்தியோகத்தில் பணி நிரந்தரமாகும். சிலருக்கு உஷ்ணம் சார்ந்த பிரச்சிினைகளும் ஜீரணக் கோளாறுகளும் ஏற்படும்.
இன்னல்களை எதிர்கொள்ளும் மனோதிடம் உருவாகும். கடன் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். புத்திர பிராப்த்தம் உண்டாகும். உயர்கல்வி முயற்சி வெற்றி தரும். பெரிய மனிதர்களின் ஆதரவில் கவுரவப் பதவி கிடைக்கும். சமுதாயத்தில் செல்வாக்கு உயரும். பெண்களுக்கு கணவர் மற்றும் புகுந்த வீட்டாரின் ஆதரவு மகிழ்ச்சி தரும். பிள்ளைகளின் எதிர்கால நலனிற்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றிதரும்.ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும். முருகனுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து வழிபடவும்.
மிதுனம்
பொருளாதார முன்னேற்றம் அதிகரிக்கும் வாரம். ராசி அதிபதி புதன் ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்திற்கு சென்று ராகுவுடன் இணைந்து குரு பார்வை பெறுகிறார். தெளிவான முடிவு எடுக்கும் தன்மையும் ஞாபக சக்தியும் கூடும். குடும்பத்தில் நிலவிய பிணக்குகள் நீங்கும். புதிய தொழில் சார்ந்த சிந்தனைகள் உருவாகும். பொறுப்புகள் அதிகரிக்கும். பணிபுரியும் இடங்களில் ஏற்பட்ட அவப்பெயர் விலகும். பெண்களுக்கு சிறு தொழில், சுய தொழில் செய்யும் ஆர்வம் அதிகமாகும். விண்ணப்பித்த அரசு வேலை கிடைக்கும். மறைமுக வருமானம் பெருகும். வாடகை வீட்டில் வாழ்ந்தவர்கள் சொந்த வீடு வாங்கி குடியேறுவார்கள்.
கடந்த கால வம்பு வழக்குகளின் தீர்ப்பு சாதகமாகும். பிள்ளைகளின் திருமணத்திற்கு சீர்வரிசைகள் வாங்குவீர்கள். யாருக்கும் ஜாமீன் போடக்கூடாது. பெரிய பண பரிவர்த்தனைக்கான முக்கிய ஆவணங்களை கவனமாக வைத்திருக்க வேண்டும். நோயால் கடனால் ஏற்பட்ட கவலைகள் குறையும். ஆயுள் பலம் உண்டு. முருகனுக்கு இளநீர் அபிஷேகம் செய்து வழிபடவும்.
கடகம்
நம்பிக்கை அதிகரிக்கும் வாரம். ராசியை ஏக யோகாதிபதி செவ்வாய் பார்ப்பது சந்திரமங்கள யோகமாகும். தெளிவான சிந்தனைகள் பிறக்கும். வாழ்வில் முக்கியமான சில முடிவுகளை எடுப்பதன் மூலம் வெற்றியை உறுதி செய்வீர்கள். பணத்தேவைகள் நிறைவேறும். சில குழப்பங்களுக்கு முடிவு கிடைக்கும். சொத்து விற்பனையில் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் உண்டாகும். பூர்வீகத்தில் புதிய அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புகள் உண்டு. விவசாயிகளுக்கு அரசு வகை ஆதாயம் கிடைக்கும். வாழ்க்கை துணைக்கு வட்டியில்லா கடன் கிடைக்கும்.
பங்குச்சந்தை இழப்புகள் குறையும். நண்பர்கள் மூலம் ஆதாயம் உண்டு. தொழில் தொடர்பான முயற்சிக்கு தந்தையின் ஆதரவு கிடைக்கும். இதுவரை இருந்து வந்த சகோதர, சகோதரி பிணக்குகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். நல்ல வரன்கள் தேடி வரும். சிலருக்கு அரசியல் ஆசை துளிர் விடும். திருமணத் தடை அகலும். பார்த்துச் சென்ற வரனிடமிருந்து நல்ல தகவல் கிடைக்கும். அஷ்டம ராகுவால் சிலருக்கு விபரீத ராஜயோகம் ஏற்படும். பேச்சில் நிதானம் தேவை. அமைதியாக இருப்பது அவசியம். விபூதி அபிஷேகம் செய்து முருகனை வழிபடவும்.
சிம்மம்
சிந்தித்து செயல்பட வேண்டிய வாரம். ராசி அதிபதி சூரியன் 4,9-ம் அதிபதி செவ்வாயுடன் ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் இணைந்திருக்கிறார். பெரியளவு முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. யாருக்கும் பணம் பொருள் இவற்றிற்கு ஜாமீன் போடக்கூடாது. பங்குச் சந்தை முதலீடுகளில் மிகவும் கவனம் தேவை. பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சினைகளை ஒத்தி வைக்கவும். கடன்கள் மற்றும் மீது கவனம் தேவை. தொழில் மற்றும் குடும்ப ரகசியங்களை வெளி நபர்களிடம் பகிர்வதை தவிர்க்கவும். தொழில் ரீதியான முன்னேற்றமும் இருக்கும்.
தர்ம காரியங்கள் செய்து மகிழ்வீர்கள். அஷ்டமச் சனியின் காலம் என்பதால் எதைச் செய்தாலும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்யவும். கோட்ச்சார கிரகங்கள் சுமாராக இருந்தாலும் வாழும் கலையை உணர்ந்த உங்களை எந்த வினையும் பாதிக்காது. திருமணத்திற்கு ஏற்ற காலம் அல்ல. தம்பதிகளிடம் ஒற்றுமை உணர்வு மேலோங்கும். சிலருக்கு கண், காது சார்ந்த பிரச்சினைக்கு மருத்துவம் செய்ய நேரும். முருகனுக்கு மஞ்சள் அபிஷேகம் செய்து வழிபடவும்.
கன்னி
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வாரம். கடந்த சில வாரங்களாக ஐந்தாம் இடத்தில் சஞ்சரித்து அபரிமிதமான சுப பலன்களை வழங்கிய ராசி அதிபதி புதன் ஆறாம் இடமான ருண ரோக சத்ரு ஸ்தானத்திற்கு சென்று குருவின் பார்வையை பெறுகிறார். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் விரும்பிய மாற்றம் கிடைக்கும். பணிபுரிபவர்களின் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை தானாகவே வந்து சேரும். வெளிநாடு சென்றவர்கள் பூர்வீகம் வந்து செல்லும் வாய்ப்பு உள்ளது.
கன்னி ராசியினர் தாத்தா பாட்டியாகும் யோகம் உள்ளது. சில பிள்ளைகள் கல்விக்காக விடுதிக்கு செல்வார்கள். குருவின் பார்வை ஆறாம் இடத்திற்கு இருப்பதால் கடன் நோய் சார்ந்த பாதிப்புகள் அதிகரிக்கும். அதிக கோபம் மற்றும் மன அழுத்த பாதிப்பு உருவாகும். அனைத்து செயலிலும் நிதானம் மற்றும் பொறுமை மிக முக்கியம். நேர் மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். திருமணம், வளைகாப்பு, கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்விற்கான அறிகுறிகள் தென்படும். முருகனுக்கு செவ்வரளி மாலை அணிவித்து வழிபடவும்.
துலாம்
தடைகள் தகரும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் லாப அதிபதி சூரியனுடன் இணைந்து நான்காம் இடமான சுக ஸ்தானத்தில் இணைந்திருப்பது துலாம் ராசிக்கு அபரிமிதமான சுப பலன்களை வழங்கும் அமைப்பாகும். வளர்ச்சிக்கான அறிகுறிகள் தென்படும். அன்றாட செயல்களில் நிலவிய தடை தாமதங்கள் அகலும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கடனால் கவலை, கணவன் மனைவி பிரிவினை அல்லது வழக்கு, பிரச்சினைகள் முற்றிலும் நீங்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
குல தெய்வ அனுகிரகத்தால் தடுமாற்றங்கள் அகன்று எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். தொழில் மற்றும் உத்தியோகத்தின் மூலம் சமுதாய அங்கீகாரம் உயரும். சித்தப்பா மற்றும் மூத்த சகோதரருடன் பூர்வீக சொத்து தொடர்பான பேச்சு வார்த்தை நடக்கும். இந்த வாரத்தில் வீட்டுக்கடன், தொழில் விரிவாக்க கடன் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு தந்தையின் பூர்வீக வீடு, சொத்துக்கள் கிடைக்கும். திடீர் எதிர்பாராத பணவரவால் தேவைகள் அனைத்தும் நிறைவு பெறும் என்பதால் பயப்படத் தேவையில்லை. முருகனுக்கு சந்தன அபிஷேகம் செய்து வழிபடவும்.
விருச்சிகம்
பரிபூரண வெற்றியும் மகிழ்ச்சியும் உண்டாகும் வாரம். உச்சம் பெற்ற ராசி அதிபதி செவ்வாய் முயற்சி மற்றும் வெற்றி ஸ்தானத்தில் சஞ்சரிப்பது இழந்த அனைத்து இன்பங்களையும் மீட்டு தரக்கூடிய அமைப்பாகும். மூன்றாம் இடமான உபஜெய ஸ்தானம் வளம் பெறும் போது எண்ணங்கள், லட்சியங்கள், கனவுகள் நிறைவேறும். இதுவரை உடலாலும், உள்ளத்தாலும் வேதனைப்பட்டு வந்த உங்களுக்கு இனி வெற்றிக்கனியை சுவைக்கும் வாய்ப்பு வரப்போகிறது. சகோதரரால் சகாயங்கள் உண்டாகும். சிலருக்கு பணிக் காலம் முடிந்தப் பிறகும் பதவி நீடிப்புகள் ஏற்படலாம்.
நிரந்தர வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். கோட்சார கிரகங்களால் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கி நல்ல சுப பலன்கள் உண்டாகும். விலகிச் சென்ற உறவுகள் உண்மையை புரிந்து கொள்வார்கள். அரை குறையாக நின்ற அனைத்துப் பணிகளும் துரிதமாகும். பெண்களுக்கு ஆடை அலங்காரத்தில் ஆர்வம் குறையும். எதிர் பாலினத்தவரிடம் தேவையற்ற சகவாசத்தை தவிர்க்கவும். உடல் நிலையில் இருந்த பாதிப்புகள் அகலும். முருகனுக்கு தயிர் அபிஷேகம் செய்து வழிபடவும்.
தனுசு
நல்லவிதமான திருப்பங்கள் உண்டாகும் வாரம். வெகு விரைவில் ராசி அதிபதி குரு வக்ர நிவர்த்தி அடையப் போகிறார். இழந்த அனைத்து இன்பங்களையும் மீட்டு பெறப் போகிறீர்கள். அர்தாஷ்டம சனியையும் மீறி சில பாக்கிய பலன்கள் நடைபெறும். உங்களின் திட்டங்கள் எண்ணங்கள் செயலாக்கம் பெறும். குடும்பத்தில் நிலவிய சிறு சிறு குழப்பங்கள் மறையும். உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். அடுத்த குரு பெயர்ச்சிக்கு முன் முக்கிய சுப விசேஷங்களை நடத்தி முடிப்பது நல்லது.
அண்ணன் தம்பிகளுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். திட்டமிட்டபடி பாகப் பிரிவினைகள் சுமூகமாகும். தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் உணர்வுப் பூர்வமாக செயல்படாமல் நிதானத்துடன் செயல்பட வேண்டும். கணவன், மனைவி ஒற்றுமையில் அன்பு மிளிரும். 2.2.2026 அன்று இரவு 10.48 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மனதில் உணர்ச்சி போராட்டம் அதிகமாகும். வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து முருகனை வழிபட முத்தாய்ப்பான முன்னேற்றம் உண்டாகும்.
மகரம்
மனக் குறைகள் நீங்கும் வாரம். கடந்த சில வாரங்களாக ராசியில் நிலவிய கிரகச் சேர்க்கைகளில் சில மாற்றங்கள் இந்த வாரத்தில் ஏற்படப் போகிறது. புதனும் சுக்கிரனும் தன ஸ்தானத்திற்கு செல்ல போகிறார்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சில தொழில் வாய்ப்புகள் கைகூடி வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். திறமைக்கும் தகுதிக்கும் தகுந்த நல்ல வேலை கிடைக்கும். நம்பிக்கையான புதிய வேலையாட்கள் கிடைப்பார்கள். அரசு உத்தியோக அனுகிரகம் உண்டாகும்.
பிரிந்து வாழ்ந்த தாயும், தந்தையும் சேர்ந்து வாழ்வார்கள். திருமண முயற்சி கைகூடும். சிலருக்கு மறுமணத்திற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன. 2.2.2026 அன்று இரவு 10.48 முதல் 5.2.2026 அன்று அதிகாலை 4.20 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பேச்சில் நிதானம் தேவை. அமைதியாக இருப்பது அவசியம். அமைதியால் அனைத்து பிரச்சினைகளும் அடிப்பட்டு போகும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணம் அறிந்து செயல்படுவது நல்லது. பஞ்சகவ்ய அபிஷேகம் செய்து முருகனை வழிபட பாவங்கள் அகலும்.
கும்பம்
விரும்பிய மாற்றங்கள் நடைபெறும் வாரம். ராசியில் உள்ள ராகுவுடன் புதனும் சுக்கிரனும் இணையப் போகிறார்கள். இது கும்ப ராசிக்கு சில மாற்றங்களையும் ஏற்றங்களையும் வழங்கும் அமைப்பாகும். எதிர்காலம் சார்ந்த தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். வாழ்க்கைத் துணைக்கு நல்ல வேலை கிடைக்கும். சிலர் புதிய கூட்டுத் தொழில் துவங்கலாம். தொழில் சார்ந்த அனைத்து முயற்சிகளும் வெற்றி தரும். சிலருக்கு நல்ல வெளிநாட்டு வேலை கிடைக்கும். பெயர், புகழ், அந்தஸ்து அதிகரிக்கும். தந்தையின் அன்பும் ஆசியும் கிடைக்கும். கணவன், மனைவி ஒற்றுமை அதிகரிக்கும்.
பொன், பொருள் ஆபரணச் சேர்க்கை உண்டாகும். அதிர்ஷ்டசாலியாக திகழ்வீர்கள். கடவுள் நம்பிக்கை அதிகரிக்கும். கணவன் அல்லது மனைவிக்கு உத்தியோக ரீதியான மாற்றங்கள் உண்டாகும். வங்கி கடனை திரும்பச் செலுத்த கால அவகாசம் கிடைக்கும். 5.2.2026 அன்று அதிகாலை 4.20 முதல் 7.2.2026 அன்று பகல் 1.22 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் திருமண வரன் பார்ப்பதில் கவனம் மற்றும் பொறுமை தேவை. நம்பிய வேலையாட்களால் சில அசவுகரியங்கள் உண்டாகும். தேன் அபிஷேகம் செய்து முருகனை வழிபடவும்.
மீனம்
கொள்கை பிடிப்போடு செயல்பட வேண்டிய வாரம். ஜென்ம ராசியில் நிற்கும் சனி பகவான் சுயசாரத்தில் சஞ்சரிப்பதால் பல்வேறு விதமான புண்ணிய பலன்கள் தேடி வரும். ஒரு மனிதன் தன் வாழ்நாளில் எப்படி எல்லாம் வாழ்ந்தால் முன் ஜென்ம கர்மாவை கழித்து ஆன்மாவை சுத்தப்படுத்தி பிறவியற்ற நிலையை அடையலாம் என்பதை இந்த ஜென்ம சனியின் காலத்தில் உணர்ந்து இருப்பீர்கள். ஜென்மச் சனியை மீறிய சுப பலன்கள் உண்டாகும். கூப்பிட்ட குரலுக்கு குல தெய்வம் வந்து நிற்கும்.
பிள்ளைகளால் ஏற்பட்ட கவலைகள் அகலும். உடன் பிறந்தவர்கள் அனைவரும் ஒற்றுமையாக பேசி முறையாக பாகப் பிரிவினைகளை முடிப்பீர்கள்.
கவுரவப் பதவிகள் கிடைக்கும். தந்தை மகன் ஒற்றுமை பலப்படும். திருமணத் தடை அகலும். பெண்களுக்கு ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். 7.2.2026 அன்று பகல் 1.22 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். வழக்குகளை ஒத்தி வைப்பது நல்லது. தேவையற்ற வாக்கு வாதங்கள் வீண் பேச்சுக்களைத் தவிர்க்கவும். தேனும் திணையும் படைத்து முருகனை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
- மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில், 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
- இன்று காலை நடைபெற்ற ஜோதி தரிசனத்தில் பனி, குளிரை பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான பக்தர்கள் ஜோதி தரிசனம் செய்தனர்.
கடலூர் மாவட்டம் வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் சத்திய ஞானசபையையும், பசிப்பிணி போக்க சத்ய தருமசாலையும் நிறுவினார். வள்ளலார் நிறுவிய ஞான சபையில் ஆண்டு தோறும் தைப்பூசவிழா நடைபெறும். இந்த ஆண்டு 155-வது ஆண்டு தைப்பூச விழாவாக நடைபெற்றது.
இந்தநிலையில் நேற்று வள்ளலார் பிறந்த மருதூர், தண்ணீரால் விளக்கு எரித்த கருங்குழியிலும், வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பத்திலும், தருமச்சாலையிலும், சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது.
தொடர்ந்து ஞான சபையில் கொடியோற்றம், பார்வதிபுரம் கிராமமக்கள் சார்பில் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து தர்மசாலை மேடையில் திருவருட்பா இன்னிசையும், இரவு 6 மணி முதல் 9 மணி வரை சன்மார்க்க சொற்பொழிவும் நடைபெற்றது.
தைப்பூச விழாவில் சிறப்பு நிகழ்ச்சியான ஜோதி தரிசனம் தைப்பூச திருவிழாவையொட்டி இன்று காலை 6 மணி, 10 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, நாளை காலை 5.30 மணி என 6 காலம் 7 திரை நீக்கிய ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.
இதனை காண தமிழகம் மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் லட்சக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள் திரண்டு ஜோதி தரிசனம் பெற்றனர்.
தைப்பூச விழாவிற்கு பின்னர் ஒருநாள் இடைவெளிவிட்டு நாளைமறுநாள் (3-ந்தேதி) மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பத்தில் திருஅறை தரிசனம் நடைபெறுகிறது.
முன்னதாக வடலூர் ஞானசபையில் இருந்து வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய பெட்டியை (பேழை) பூக்களால் அலங்கரித்து மேளதாளம் முழங்க வள்ளலார் சித்தி பெற்ற திருஅறை உள்ள மேட்டுக்குப்பம் கொண்டு செல்லப்படும். அங்கு பக்தர்கள் வழிபாட்டுக்கு பின்னர் மீண்டும் வடலூர் கொண்டு வரப்படும்.
தைப்பூச விழாவையொட்டி அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில், 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இன்று காலை நடைபெற்ற ஜோதி தரிசனத்தில் பனி, குளிரை பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான பக்தர்கள் ஜோதி தரிசனம் செய்தனர்.
- பக்தர்கள் பால்காவடி, பன்னீர் காவடி, பால்குடம் எடுத்து வந்தனர்.
- கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
தை மாதம் பூச நட்சத்திரமும், பவுர்ணமி திதியும் கூடிய நாளில் முருகன் கோவில்களில் தைப்பூச விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. சிவபெருமான், உமா தேவியுடன் சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள் தைப்பூசம் என்பார்கள்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த தைப்பூச திருவிழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைத்து முருகன் கோவில்களிலும் பக்தர்கள் குவிந்தனர்.
சென்னையில் உள்ள வடபழனி முருகன்கோவில், கந்தகோட்டம், குன்றத்தூர், வளசரவாக்கம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட முருகன் கோவில்களில் இன்று அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.
வடபழனி முருகன் கோவிலில் இன்று காலை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பால்காவடி, பன்னீர் காவடி, பால்குடம் எடுத்து வந்தனர். இதனால் வடபழனி முருகன்கோவில் வீதிகளில் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
இதேபோல் கந்த கோட்டம், குன்றத்தூர் கோவிலில் பக்தர்கள் குவிந்து இருந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய கோவில்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
சாமி தரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்களின் பசியை போக்கும் வகையில், பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொது மக்கள் சார்பில் ஆங்காங்கே இலவசமாக அன்னதானம் வழங்கப்பட்டது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
- வடலூர் ஸ்ரீராமலிங்க சுவாமிகள் அருட்பெருஞ்ஜோதி தரிசனம்.
- திருப்போரூர் ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு தை-18 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : பவுர்ணமி நாளை விடியற்காலை 4.45 மணி வரை பிறகு பிரதமை
நட்சத்திரம் : பூசம் நள்ளிரவு 1.01 மணி வரை பிறகு ஆயில்யம்
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று பவுர்ணமி, தைப்பூசம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்
இன்று பவுர்ணமி, தைப்பூசம். வடலூர் ஸ்ரீராமலிங்க சுவாமிகள் அருட்பெருஞ்ஜோதி தரிசனம். சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், காஞ்சீபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள், மதுரை ஸ்ரீ கூடலழகர் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.
திருப்போரூர் ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம். காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன், தஞ்சை புன்னைநல்லூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலையில் அபிஷேகம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு. தேவக்கோட்டை ஸ்ரீ சிலம்பணி விநாயகர், ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் காலையில் அபிஷேகம், அலங்காரம், ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாதருக்கு சிறப்பு அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஆதாயம்
ரிஷபம்-ஆதரவு
மிதுனம்-உயர்வு
கடகம்-போட்டி
சிம்மம்-லாபம்
கன்னி-உவகை
துலாம்- உழைப்பு
விருச்சிகம்-ஆரோக்கியம்
தனுசு- வாழ்வு
மகரம்-கீர்த்தி
கும்பம்-ஈகை
மீனம்-பயணம்
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
கிரிவலம் வந்து கீர்த்தியை காண வேண்டிய நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். சந்தர்ப்பங்கள் சாதகமாகும்.
ரிஷபம்
எதிர்பார்த்த காரியம் எளிதில் முடியும் நாள். வருமானம் உயரும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.
மிதுனம்
அலைபேசி வழித்தகவல் அனுகூலம் தரும் நாள். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் அகலும். இடமாற்றங்கள் நன்மையை தரும்.
கடகம்
கோவில் வழிபாட்டில் குதூகலம் கூடும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
சிம்மம்
மனக்குழப்பம் அகலும் நாள். பொருளாதார நிலை திருப்தி தரும். பொதுவாழ்வில் புதிய திருப்பங்கள் ஏற்படலாம். நண்பர்களால் நல்ல காரியம் நடைபெறும்.
கன்னி
கனவுகள் நனவாகும் நாள். காரியங்களில் வெற்றி கிடைக்கும். திரும்பி சென்ற வரன்கள் மீண்டும் வரலாம். நாடாளும் நபர்களின் நட்பால் நன்மை உண்டு.
துலாம்
பாக்கிகள் வசூலாகும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். எதிரிகள் விலகுவர். உத்தியோகத்தில் உங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும்.
விருச்சிகம்
ஆலய வழிபாட்டில் ஆர்வம் காட்டும் நாள். புகழ் கூடும். பொருளாதார நிலை உயரும். நண்பர்கள் நல்ல தகவலை தருவர். தொழில் வளர்ச்சி மேலோங்கும்.
தனுசு
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். முயற்சிகளில் தடைகளும், தாமதங்களும் வந்து சேரும். சேமிப்பு கரைகின்றதே என்று கவலைப்படுவீர்கள்.
மகரம்
போராட்ட நிலை மாறும் நாள். புதிய பாதை புலப்படும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். உடல்நலம் சீராகும். சான்றோர்களின் சந்திப்பு உண்டு.
கும்பம்
உயர்ந்த மனிதர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். வசதி, வாய்ப்புகள் பெருகும். தொழிலில் பங்குதாரர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பர்.
மீனம்
தாமதித்த காரியங்கள் தடையின்றி நடைபெறும் நாள். தனித்து இயங்க வேண்டும் என்று விரும்புவீர்கள். தொழிலில் முன்னேற்றம் உண்டு.
- நாளை காலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, முருகப் பெருமானுக்கு பூஜை நடக்கிறது.
- மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை நடக்க உள்ளது.
தோரணமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா பிப்ரவரி 1-ந்தேதி நாளை நடக்க இருக்கிறது. நாளை காலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, முருகப் பெருமானுக்கு பூஜை நடக்கிறது. காலை 5 மணிக்கு கணபதி ஹோமம் நடைபெறும். 9 மணிக்கு வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணிய சாமி திருக்கல்யாண நிகழ்ச்சி ஆரம்பமாகிறது.
முதலில் அபிஷேகமும் அதன்பின் அலங்காரம் நடைபெறும். இதனை அடுத்து மண மகன், மணமகள் ஊர்வலம், எதிர்சேவை, சீர்வரிசை தட்டு கொண்டு வருதல் நடைபெறும். அதன்பின் மேடையில் திருக்கல்யாணம் நடைபெறும். தொடர்ந்து, ஊட்டி திருக்குந்த சப்பை படுகர் இன மக்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடக்கிறது.
மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை நடக்க உள்ளது. பக்தர்கள் எடுத்து வரும் பால்குடங்கள் மூலம் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. மாலை 5 மணிக்கு கோவில் அடிவாரத்தில் மகா சரவண ஜோதி ஏற்றப்படுகிறது.
மதியம் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும், இரவில் வள்ளியம்மாள்புரம் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடக்க உள்ளது. காலை முதல் மாலை வரை தொடர் அன்னதானமும் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ஆ.செண்பகராமன் செய்து வருகிறார்.
- மயான பூஜையையொட்டி இன்று காலை முதலே கோவிலில் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.
- 3-ந்தேதி காலை 7.30 மணி முதல் 8.30 மணிக்குள் பக்தர்கள் குண்டம் இறங்குகிறார்கள்.
கோவை மாவட்டம் ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலுக்கு கோவை மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் அதிகளவிலான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
குறிப்பாக அமாவாசை உள்ளிட்ட விசேஷ நாட்களில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் குண்டம் திருவிழா 18 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொட ங்கியது. அதனை தொடர்ந்து தினமும் மாசாணியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மயான பூஜை இன்று நள்ளிரவு 1 மணிக்கு ஆழியாற்றங்கரை மயானத்தில் நடக்க உள்ளது. இதற்காக மயான பூஜை நடைபெறும் பகுதி சுத்தம் செய்யப்படுகிறது. மக்கள் அமர்ந்து மயான பூஜையை பார்ப்பதற்கு வசதியாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
மயான பூஜையையொட்டி இன்று காலை முதலே கோவிலில் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
நள்ளிரவில் மயான பூஜை நடைபெறும் ஆழியாற்றங்கரையில் மாலை முதலே பக்தர்கள் குவிய தொடங்கினர். அவர்கள் அங்கு அமர்ந்து இருந்து நள்ளிரவில் நடைபெறும் மயான பூஜையை பார்க்க உள்ளனர். இதனையொட்டி அங்கு ஆனைமலை போலீசார் தீவிர பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர்.
மயான பூஜையை தொட ர்ந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.30 மணிக்கு சக்தி கும்பஸ்தாபனம், மாலை 6.30 மணிக்கு மகா பூஜை, 2-ந் தேதி காலை 9.30 மணிக்கு ஆனைமலை குண்டம் மைதானத்தில் குண்டம் கட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது.
அன்று மாலை 6.30 மணிக்கு சித்திரைத் தேர் வடம்பிடித்தல், அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடக்க உள்ளது. இரவு 10 மணிக்கு குண்டம் பூ வளர்க்கப்படுகிறது.
3-ந்தேதி காலை 7.30 மணி முதல் 8.30 மணிக்குள் பக்தர்கள் குண்டம் இறங்குகிறார்கள். 4-ந் தேதி காலை 6.30 மணிக்கு மேல் 7.30க்குள் கொடி இறக்குதல், காலை 10 மணிக்கு மஞ்சள் நீராடுதல், இரவு 8 மணிக்கு மகாமுனி பூஜை ஆகியவை நடக்கிறது. 5-ந்தேதி காலை 11.30 மணிக்கு மகா அபிஷேகம், அலங்கார பூஜையுடன் குண்டம் திருவிழா நிறைவடைகிறது.
- மலையின் உச்சியில் உள்ள குகையில் தான் முருகப்பெருமான் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
- பத்திரகாளி அம்மனுக்கு தனியே ஒரு சன்னதி உள்ளது.
தென்காசியில் இருந்து கடையம் செல்லும் சாலையில் மேற்கே வெள்ளைப் பட்டை தீட்டியது போல் ஒரு அழகிய மலைக்குன்று நம் கண்களுக்கு தென்படும். யானை படுத்திருப்பது போன்று காட்சியளிக்கும் அந்த மலைதான், தோரணமலை. யானைக்கு 'வாரணம்' என்ற பெயர் உண்டு. அந்த வகையில் 'வாரணமலை' என்று அழைக்கப்பட்ட இந்த மலை, காலப்போக்கில் மருவி, 'தோரணமலை' என்று அழைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
2 நதிகளுக்கிடையே ஒரு கோவில் இருந்தால் அது சிறப்பான புனிதத்தலமாக கருதப்படும். அந்த வகையில் தோரணமலையும் தனிச்சிறப்பு பெற்றது. தோரணமலைக்கு தென்புறம் மலையில் இருந்து பாய்ந்து வருகிறது ராமநதி, மலையின் வடபுறம் ஜம்பு நதி தவழ்ந்து வருகிறது.

இந்த 2 நதிகளுக்கு இடையேதான் தோரண மலை கம்பீரமாக காட்சியளிக்கிறது. இந்த நதிகள் இரண்டும் தோரணமலைக்கு மாலையிட்டது போல் காணப்படுகிறது. இந்த மலைக்குச் சென்றாலே நம்மை அறியாமல் உடல் நம் சிலிர்ப்தை நாம் அறிய முடியும்.
வழியில் சுயம்பாக அமைந்த சிவபெருமானை தரிசிக்கலாம். இந்த இடங்கள் எல்லாம் நல்லசுவாச காற்றும், அருமையான நறுமணம் தரும் மூலிகை காற்றும் நமது உடல் பிணியை போக்கும் வண்ணம் நம்மை தொட்டு செல்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையின் இயற்கை அழகையும் அதில் தவழ்ந்து வரும் மேகக்கூட்டங்களையும், ரசித்துக்கொண்டே உச்சியை அடையலாம்.

சுனை
மலையின் உச்சியில் உள்ள குகையில் தான் முருகப்பெருமான் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். கையில் வேல் ஏந்தி மயில் வாகனத்தோடு நின்ற கோலத்தில் அழகின் அரசனாக திகழ்கிறார் மூலவர் முருகப்பெருமான். இந்த குகை இயற்கையில் கிழக்கு நோக்கி அமைந்திருப்பது தனிச்சிறப்பு. இந்த முருகன் திருச்செந்தூர் முருகனை நோக்கிய வண்ணம் இருப்பதால் இவரை வழிபட்டால் திருச்செந்தூர் முருகனை வணங்கிய புண்ணியம் கிடைக்கும். அதேபோல் முருகப்பெருமானின் வலதுபுறம்பாறையில் ஒரு கை மட்டுமே போகும் அளவுக்கு துவாரம் ஒன்று உள்ளது. அது சாதாரண துவாரம் அல்ல அதுவும் ஒரு சுனை தான். அதனுள்ளும் தண்ணீர் எப்போதும் இருக்கும். எதிரே ராமர் பாதம் உள்ளது. அதன் அருகே பத்திரகாளி அம்மனுக்கு தனியே ஒரு சன்னதியும் உள்ளது.
அடிவாரத்தில் வல்லப விநாயகர், கன்னிமார் அம்மன், வியாழ பகவான் மற்றும் நவகிரகங்களுக்கு தனி சன்னதி, சிவபெருமான், சரஸ்வதி, மகாலட்சுமி சன்னதிகளும் உள்ளன. அரச மரத்தடியில் வீற்றிருக்கும் சப்த கன்னியரை வணங்கி வளையல்களும் தொட்டில்களும் பிராத்தனையாக கட்டினால் வேண்டுதல் நிறைவேறுகிறது. மலைக்கு செல்லும் படிக்கட்டு தொடங்கும் இடத்தில் தனிச் சன்னிதியில் பாலமுருகன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். மலை ஏறி மூலவரை தரிசிக்கும் முன் இவரை வணங்கிச் செல்வது நலம் பயக்கும்.

துன்பம் தீர்க்கும் தோரணமலை முருகனுக்கு ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசம், வைகாசி விசாகம், சித்திரை திருநாளும் முக்கிய திருவிழாக்களாக வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. பாவம் போக்கும் புண்ணியமலை, யானை முகம் கொண்ட மலையின் மேல் வீற்றிருக்கும் இம்முருகனின் திருவீடு ஏழாம் படை வீடு என்று சொன்னால் மிகை அல்ல. பல நூறு ஆண்டுகளாக மலை உச்சியில் இருப்பதாலோ என்னவோ, இந்த முருகன் மிகச்சிறந்த வரப்பிரசாதியாகத் திகழ்கிறார்.
பல சித்தர்கள் அரூபமாக இன்றும் வாழ்ந்து வருகிறார்கள். இன்றும் சித்தர்கள் அரூபமாக உலாவும் இந்த மலையில் பல அபூர்வ மூலிகைகளும், நோய் தீர்க்கும் சுனைகளும், அரியவகை உயிரினங்களும் காணப்படுகின்றன. இங்கு வந்து சென்றாலே எல்லா வகை உடல்-மன வியாதிகளும் நீங்குவதாக பல அன்பர்கள் கூறுகிறார்கள்.
இங்கு வந்து குகை முருகப்பெருமானை தரிசித்தால் திருமண வரம், குழந்தை பாக்கியம் உடனே கிடைப்பதாகவும் பலரும் கூறுகிறார்கள். கடுமையான மூட்டு வலி கொண்டவர்கள் கூட இங்கு வந்தால், நெட்டுக்குத்தாக அமைந்துள்ள இந்த மலை மீது ஏறத்துவங்கி விடுகிறார்கள் என்று ஆச்சர்யமாக சொல்கிறார்கள் இந்த ஊர் மக்கள். இங்கு வந்து எந்த வேண்டுதலை வேண்டிக் கொண் டாலும் அவை உடனே நிறைவேறி விடுவதாகவும், அந்த அன்பர்களே இந்த கோயிலுக்கு பல திருப்பணிகள் செய்துள்ள தாகவும் கூறுகிறார்கள். நலம் தரும் தோரணமலை தைப்பூச நாயகனை வணங்கி அருள் பெறலாம்.
- நாளை (1-ந்தேதி) சப்தா வர்ணம் நிகழ்ச்சி நடக்கிறது.
- பக்தர்கள் தேரின் முன் தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி பெருமாளை தரிசனம் செய்தனர்.
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவத்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் தை மாதத்தில் பூபதித் திருநாள் எனப்படும் தை தேர்த்திருவிழா 11 நாட்கள் சிறப்பாக நடைபெறும்.
அதன்படி இந்த ஆண்டுக்கான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேர் திருவிழா கடந்த 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினமும் காலை, மாலை வேளைகளில் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் உத்திர வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவின் 4-ம் திருநாளான 26-ந்தேதி தங்க கருடவாகனத்தில் நம்பெருமாள் உத்தரவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவிழாவின் 8-ம் நாளான நேற்று மாலை தங்க குதிரை வாகனத்தில் நம்பெருமாள் புறப்பட்டு உத்திரவீதிகளில் வலம் வந்து வையாளி கண்டருளுளினார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் அதிகாலை 4 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு தைத்தேர் மண்டபத்திற்கு அதிகாலை 4.30 மணிக்கு வந்தார். காலை 4.45 மணி முதல் காலை 5.30 மணிவரை ரதரோஹணம் (தனுர் லக்னத்தில்) நிகழ்ச்சி நடைபெற்றது.
அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் எழுந்தருளிய பின்னர் காலை 6 மணிக்கு பக்தர்கள் ரெங்கா, ரெங்கா என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு உத்திர வீதிகள் வழியாக காலை 9.15 மணிக்கு நிலையை வந்தடைந்தது. பின்னர் பக்தர்கள் தேரின் முன் தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி பெருமாளை தரிசனம் செய்தனர்.
நாளை (1-ந்தேதி) சப்தா வர்ணம் நிகழ்ச்சி நடக்கிறது. நிறைவு நாளான 2-ந்தேதி மாலை 3 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு மாலை 3.30 மணிக்கு ரெங்கவிலாச மண்டபம் வருகிறார். அங்கிருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு வாகன மண்டபம் சென்றடைகிறார். வாகன மண்டபத்தில் இருந்து இரவு 8 மணிக்கு நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் புறப்பட்டு நான்கு உத்திர வீதிகளில் வலம் வந்து இரவு 9 மணிக்கு வாகன மண்டபம் வந்தடைகிறார்.
பின்னர் அங்கிருந்து இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானம் சென்றடைவதோடு தைத்தேர் திருவிழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் சிவராம் குமார் மற்றும் கோவில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.






