என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    • எதை சினிமாவாக மாற்றவேண்டும் என்று உணர்ந்த படைப்பாளிகளின் வருகை அடுத்த தலைமுறைக்கு பெரும் நம்பிக்கையையையும் துணிச்சலையும் கொடுக்கும்.
    • ஒட்டு மொத்த படக்குழுவுக்கும் என் வாழ்த்துக்களையும், நன்றியையும் பகிர்ந்துகொள்கிறேன்

    விக்ரம் பிரபுவின் முக்கிய படங்களில் ஒன்று டாணாக்காரன். இப்படத்தில் விக்ரம் பிரபுவின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.  இதனைத்தொடர்ந்து தற்போது மற்றொரு போலீஸ் கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ள படம் 'சிறை'. அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ள இப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. படம் கிறிஸ்துமஸ் அன்று வெளியான நிலையில் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்நிலையில் படத்தை பாரட்டியுள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ். படம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 

    "சிறை பார்த்தேன். மனம் அவ்வளவு நிறைவாக இருக்கிறது. எந்த மாதிரியான கதைகளை, எந்த மாதிரியான மனிதர்களை, எந்த மாதிரியான அரசியலை, எந்த மாதிரியான பிரியத்தை சினிமாவாக மாற்றவேண்டும் என்று உணர்ந்த படைப்பாளிகளின் வருகை அடுத்த தலைமுறைக்கு பெரும் நம்பிக்கையையையும் துணிச்சலையும் கொடுக்கும். அப்படியொரு அசாத்தியமான படைப்பாக சிறை வந்திருக்கிறது.

    தனது முதல் படத்திலே பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கும் இயக்குநர் சுரேஷ் இராஜகுமாரிக்கும், இக்கதைதான் எனக்கு வேண்டும் என்று களமிறங்கியிருக்கும் விக்ரம் பிரபு சார் அவர்களுக்கும் , நல்ல படைப்பு நிச்சயம் வெல்லும் என்ற உறுதியோடு இப்படைப்பை தயாரித்து இருக்கும் லலித் அவர்களுக்கும் அறிமுக நாயகனாக களமிறங்கி நம்பிக்கையான நடிப்புக்கு முயற்சித்திருக்கும் எல்.கே அக்ஷய்குமார் அவர்களுக்கும் , சிறந்த இசையை கொடுத்திருக்கும் நண்பர் ஜஸ்டின் பிரபாகரன் அவர்களுக்கும். மற்றும் ஒட்டு மொத்த படக்குழுவுக்கும் என் வாழ்த்துக்களையும், நன்றியையும் பகிர்ந்துகொள்கிறேன். இந்த சிறைக்காக நிச்சயம் திரையரங்குகள் நிரம்பவேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

    • திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷிற்கு தாத்தா கேரக்டரில் நடித்திருந்தார்.
    • மலேசியாவில் உள்ள தனது மகள் வீட்டில் சில மாதங்கள் ஓய்வெடுத்து பின்னர் சென்னை திரும்பினார்.

    '16 வயதினிலே' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பாரதி ராஜா. அவரது முதல் படத்திலேயே ரஜினி, கமல், ஸ்ரீதேவி என முன்னணி நடிகர், நடிகைகளை வைத்து படத்தை இயக்கினார்.

    தொடர்ந்து பல படங்களை இயக்கிய பாரதிராஜா ராதிகா, ராதா, கார்த்திக் உட்பட பல முன்னணி நடிகர், நடிகைகளை அறிமுகம் செய்த பெருமை இவரை சாரும். முதல் மரியாதை, கிழக்கே போகும் ரெயில், அலைகள் ஓய்வதில்லை உட்பட பல வெற்றி படங்களை இயக்கியிருக்கிறார். இயக்குனராக மட்டுமல்லாமல் தற்போது நடிகராகவும் படங்களில் நடித்துள்ளார்.

    திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷிற்கு தாத்தா கேரக்டரில் நடித்திருந்தார். தொடர்ந்து பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

    இந்நிலையில் அவரது ஒரே மகனும் நடிகரும் இயக்குனருமான மனோஜ் பாரதிராஜா கடந்த மார்ச் மாதம் திடீரென காலமானார். மகன் மரணம் பாரதி ராஜாவை மிகவும் நிலைகுலைய செய்தது. இதை தொடர்ந்து மலேசியாவில் உள்ள தனது மகள் வீட்டில் சில மாதங்கள் ஓய்வெடுத்து பின்னர் சென்னை திரும்பினார்.

    இந்நிலையில் 80 வயதை கடந்துள்ள பாரதிராஜா தற்போது உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 3 நாட்களாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாரதிராஜாவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் பாரதிராஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஜனநாயகன் எப்படி இருக்கும் என நிறைய பேருக்கு சந்தேகம் இருக்கிறது.
    • படத்தின் முடிவில் நம்பிக்கை மட்டும்தான் இருக்கிறது என்றார் இயக்குநர் வினோத்.

    கோலாலம்பூர்:

    நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாலம்பூரில் இருக்கும் புக்கீட் ஜலீல் ஸ்டேடியத்தில் மிக பிரம்மாண்டமாக இன்று நடைபெற்றது. இதில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் பங்கேற்றனர்.

    இந்நிலையில் ஜன நாயகன் பட இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஹெச்.வினோத் பேசியதாவது:

    ஜனநாயகன் படத்தின் கடைசி 20 நிமிடங்களில், விஜய் சாருடைய பேர்வல் வீடியோ இருக்கிறது. அழவைக்க போகிறோம் என சிலர் சொல்கிறார்கள்.

    அதெல்லாம் எதுவும் இல்லை. படத்தின் முடிவில் நம்பிக்கை மட்டும்தான் இருக்கிறது. ஏன் என்றால் தளபதிக்கு என்ட்-டே கிடையாது, பிகினிங் மட்டும்தான். ரெண்டே விஷயம் சொல்லி முடித்துக்கொள்கிறேன்.

    ஜனநாயகன் எப்படி இருக்கும் என நிறைய பேருக்கு சந்தேகம் இருக்கிறது. ஒரு ரீமேக் படமாக இருக்குமா? இல்லை கொஞ்சம்தான் ரீமேக்கா என்ற குழப்பம் இருக்கிறது.

    ஒன்று மட்டும் சொல்கிறேன். ஐயா இது தளபதி படம். அதனால் உங்கள் மைண்டில் இருக்கும் டவுட் எல்லாத்தையும் அழித்துவிட்டு வாருங்கள். இது 100 சதவீதம் பொழுதுபோக்கான படம் என தெரிவித்தார்.

    • ரசிகர்கள் எனக்காக 33 வருஷமா பலவற்றைக் கொடுத்திருக்காங்க.
    • அடுத்த 33 வருஷத்துக்கு நான் அவங்களுக்கு அதைத் திருப்பிக் கொடுக்கப் போறேன்.

    கோலாலம்பூர்:

    ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய், டைரக்டர் எச்.வினோத் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இந்நிலையில், இசைவெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசியதாவது:

    இலங்கைக்குப் பிறகு மலேசியா தமிழ் மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதி. நான் சினிமாவில் நடிக்க வரும்போது சிறிய மணல் வீடு கட்டதான் விரும்பினேன். ஆனால், என்னுடைய ரசிகர்கள் பெரிய கோட்டையே கட்டிக் கொடுத்திருக்காங்க.

    என்னுடைய ரசிகர்கள் எனக்காக 33 வருஷமா பலவற்றைக் கொடுத்திருக்காங்க. அடுத்த 33 வருஷத்துக்கு நான் அவங்களுக்கு அதைத் திருப்பிக் கொடுக்கப் போறேன்.

    எனக்கு ஒன்னுனா தியேட்டர் வாசல்ல வந்து நிக்கிறாங்க. நாளைக்கு அவங்களுக்கு ஒன்னுனா, அவங்க வீட்ல போய் நிப்பேன்.

    எனக்காக அனைத்தையும் விட்டுக் கொடுத்த ரசிகர்களுக்காக நான் சினிமாவை விட்டுக் கொடுக்கிறேன்.

    அதுக்காக நான் அவங்களுக்கு நன்றி மட்டும் சொல்லப் போறதில்ல. நன்றிக் கடனை தீர்த்துட்டுத்தான் போவேன்.

    நீங்க உங்க வாழ்க்கையில ஜெயிக்க உங்களுக்கு நண்பர்கள் தேவையில்லை. ஆனா, உங்களுக்கு வலுவான ஒரு எதிரி தேவை.

    சும்மா, வர்றவங்க போறவங்களை எதிர்த்துட்டு இருக்க முடியாது இல்லையா! வலுவான எதிரி இருந்தால் மட்டுமே நீங்கள் வலிமையானவராக மாற முடியும்.

    விஜய் தனியா வருவாரா, அணியாக வருவாரானு சமீபத்துல ஒரு பேச்சு வந்தது.

    நம்ம எப்போ தனியா இருந்திருக்கோம். 33 வருஷமா மக்களோடதானே இருக்கேன். அது அணிதானே என தெரிவித்தார்.

    • உங்களை யாரும் விமர்சிக்கப் போறது கிடையாது. விமர்சனங்கள் வரும்.
    • ஏனெனில் நீங்கள் விமர்சனங்களைத் தாங்கக்கூடிய பாதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறீர்கள்.

    மலேசியா:

    ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் விஜய், டைரக்டர் எச்.வினோத் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இந்நிலையில், இசைவெளியீட்டு விழாவில் நடிகர் நாசர் பேசியதாவது:

    அமைதியும் பணிவும் தவிர கூர்மையான ஆயுதம் எதுவும் இல்லை.

    படுத்த படுக்கையாக இருந்த என் மகனை எழுந்து நடக்க வைத்தவர் நீங்கள். அதற்கு நன்றிகூற இந்த மேடை மட்டுமின்றி, எந்தச் சூழலிலும் நான் அதை சொல்லிக் கொண்டே இருப்பேன்.

    இந்த விழாவுக்கு நான் போறேன்னு சொன்னதும், அவன் விஜய் அண்ணாவுக்கு விஷ் பண்னேன்னு சொல்லிடுங்க என்றான்.

    நடிகர் சங்கத்துக்காக நீங்கள் ஒரு கோடி ரூபாய் நன்கொடை கொடுத்தீர்கள். அதற்கு என்னுடைய நன்றி.

    இந்தப் படத்தில் இயக்குனர் உள்பட டீ தருகிற பையன் வரை அனைவரிடமும் ஒரு பதட்டம் இருந்தது. தளபதியின் கடைசி படம், ஒரு தவறும் நேர்ந்து விடக்கூடாதே என.

    நீங்கள் புத்தனைப்போல சிரித்துக்கொண்டு எப்போதும்போல நடித்துக் கொண்டிருந்தீர்கள்.

    எனக்கு ஒரே ஒரு வருத்தம் மட்டும். நீங்கள் டயலாக் பேசலாம், நான் எடுத்த முடிவை நானே மாத்த மாட்டேன் என்று.

    ஆனால், ஒரு முடிவு, இங்க இருக்கிற ரசிகர்களோட வேண்டுதலா உங்க முன் வைக்கிறேன். உங்க எல்லார் சார்பாகவும் தம்பிக்கு நான் ஒரு வேண்டுதலா வைக்கிறேன்.

    உங்களை யாரும் விமர்சிக்கப் போறது கிடையாது. விமர்சனங்கள் வரும். ஏனென்றால் நீங்கள் விமர்சனங்களைத் தாங்கக்கூடிய பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறீர்கள்.

    இவர்கள் எல்லோருக்கும் நீங்கள் வேண்டும். தயவு செய்து நீங்கள் மீண்டும் படத்தில் நடிக்க வேண்டும். எங்களுடைய வேண்டுகோளை தயவு செய்து ஏற்றுக் கொள்ளுங்கள்.

    ஜனநாயகன் வெற்றி பெறுவது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு விட்டது. அந்த நாளுக்காக நானும் காத்திருக்கிறேன் மிக்க நன்றி என தெரிவித்தார்.

    • படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் இன்று கோலாகலமாக தொடங்கியது.
    • மலேசியாவில் அதிகம் பேர் கலந்துகொண்ட இசை வெளியீட்டு விழா ஜனநாயகன்.

    ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் 'ஜன நாயகன்'. இப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற 9-ந்தேதி வெளியாக உள்ளது. இதனிடையே, 'ஜன நாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் இன்று கோலாகலமாக தொடங்கியது.

    இந்த விழாவில் படத்தில் நடித்து உள்ள நடிகர்கள், நடிகைகள், திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் பங்கேற்றுள்ளனர். 80 ஆயிரம் இருக்கைகள் கொண்ட புக்கிட் ஜலில் மைதானத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இந்நிலையில் மலேசியாவில் அதிகம் பேர் கலந்துகொண்ட இசை வெளியீட்டு விழா என மலேசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்-ல் இடம்பிடித்து 'ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா வரலாறு படைத்துள்ளது.

    • ஜனநாயகன் உங்க கடைசிப் படம் என்பது வருத்தமாக இருக்கிறது.
    • மாஸ்டர் மற்றும் லியோ என் திரையுலகப் பயணத்தில் முக்கியமான படங்கள்.

    ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் 'ஜன நாயகன்'. இப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற 9-ந்தேதி வெளியாக உள்ளது. இதனிடையே, 'ஜன நாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் இன்று நடைபெற்று வருகிறது.

    மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலில் மைதானத்தில் நடைபெறும் இசை வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்து உள்ள நடிகர்கள், நடிகைகள், திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் பங்கேற்றுள்ள நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக தொடங்கியது. குறிப்பாக இயக்குனர் நெல்சன், லோகேஷ் கனகராஜ், அட்லீ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

    இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேசுகையில்:-

    ஜனநாயகன் வெற்றி பெற வாழ்த்துகள். அப்படியே உங்க உங்க பெரிய ஆசையும் வெற்றி பெற வாழ்த்துகள். ஜனநாயகன் உங்க கடைசிப் படம் என்பது வருத்தமாக இருக்கிறது. இருந்தாலும், வாழ்த்துகள் அண்ணா. மாஸ்டர் மற்றும் லியோ என் திரையுலகப் பயணத்தில் முக்கியமான படங்கள் என கூறினார்.

    • ஜன நாயகன் படம் பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற 9-ந்தேதி வெளியாக உள்ளது.
    • 'ஜன நாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் இன்று கோலாகலமாக தொடங்கியது.

    ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் 'ஜன நாயகன்'. இப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற 9-ந்தேதி வெளியாக உள்ளது. இதனிடையே, 'ஜன நாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் இன்று நடைபெற்று வருகிறது.

    மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலில் மைதானத்தில் நடைபெறும் இசை வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்து உள்ள நடிகர்கள், நடிகைகள், திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் பங்கேற்றுள்ள நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக தொடங்கியது. இசை வெளியிட்டு விழாவில் நடைபெறும் பல சுவாரஸ்சிய சம்பவங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அந்த வகையில் விழாவிற்கு ரசிகர்கள் கரகோசத்துடன் நடிகர் விஜய் கோட் சூட் அணிந்தபடி வருகை தந்தார். அதன்பின்னர் விஜய் ரேம்ப் வாக் மேடையில் ரசிகர்களை நோக்கி கை அசைத்தவாறு சென்றார்.

    இதனையடுத்து மேடையில் விஜய் நின்று கொண்டிருந்த போது ரசிகர்கள் TVK... TVK... என கோஷமிட்டனர். இதனை சிரித்தபடி கேட்டுக் கொண்டிருந்த விஜய், ஒரு கட்டத்தில் இது அதற்கான மேடை இல்லை என்பது போல சைகை காட்டினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக தொடங்கியது.
    • இந்த விழாவிற்கு ரசிகர்கள் கரகோசத்துடன் நடிகர் விஜய் கோட் சூட் அணிந்தபடி வருகை தந்தார்.

    விஜய்யின் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மலேசியாவில் நடக்கிறது. கோலாலம்பூரில் இருக்கும் புக்கீட் ஜலீல் ஸ்டேடியத்தில் மிக பிரம்மாண்டமாக இசை வெளியீட்டு விழா நடக்கிறது. அதில் கலந்து கொள்வதற்காக விஜய், பூஜா ஹெக்டே, அனிருத், இயக்குனர் நெல்சன் உள்ளிட்ட பலர் நேற்று விமானத்தில் மலேசியாவுக்கு சென்றனர்.

    இம்முறை இசை வெளியீட்டு விழாவாக நடத்தாமல் தளபதி கச்சேரி என்கிற பெயரில் கான்செர்ட்டாக நடத்தப்பட உள்ளது. தற்போது புக்கட் ஜலீல் ஸ்டேடியம் அருகே ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். சுமார் 80,000 பேர் கலந்து கொள்வார்கள் என கலந்து கொள்கிறார்கள்.

    இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக தொடங்கியது. இந்த விழாவிற்கு ரசிகர்கள் கரகோசத்துடன் நடிகர் விஜய் கோட் சூட் அணிந்தபடி வருகை தந்தார். அதன்பின்னர் விஜய் ரேம்ப் வாக் மேடையில் ரசிகர்களை நோக்கி கை அசைத்தவாறு சென்றார்.

    அதனை தொடர்ந்து தனது வழக்கமான பாணியில் அவருடன் சேர்ந்து ரசிகர்களை செல்பி வீடியோ எடுத்துக் கொண்டார்.

    அதன்பிறகு விஜய், பூஜா ஹெக்டே, அனிருத், லோகேஷ் கனகராஜ், அட்லி ஆகியோர் நடனமாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.


    அதனை தொடர்ந்து தளபதி பாய்ஸ் என்ற டைட்டில் திரையில் வெளியிடப்பட்டது. அப்போது மேடையில் விஜய் உடன் இயக்குனர்களான அட்லி, லோகேஷ் கனகராஜ், நெல்சன் ஆகியோர் கட்டி அணைத்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



    • ஜன நாயகன் படம் பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற 9-ந்தேதி வெளியாக உள்ளது.
    • 'ஜன நாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் இன்று நடைபெறுகிறது.

    ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் 'ஜன நாயகன்'. இப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற 9-ந்தேதி வெளியாக உள்ளது. இதனிடையே, 'ஜன நாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் இன்று நடைபெறுகிறது.

    மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலில் மைதானத்தில் நடைபெறும் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக படத்தில் நடித்து உள்ள நடிகர்கள், நடிகைகள், திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் மலேசியாவிற்கு படையெடுத்துள்ளதால் கோலாம்பூர் நகரமே களை கட்டியுள்ளது.

    இந்நிலையில் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சாலையில் சுமார் 2 கி.மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணி வகுத்து காணப்படுகிறது. மேலும் இசை வெளியீட்டு விழா நடைபெறும் மைதானத்தில் வெளியே ரசிகர்கள் விஜய் முகம் பொறித்த கொடியுடன் நடனாமாடி கொண்டாடி வருகின்றனர்.

    போக்குவரத்து நெரிசல் தொடர்பான புகைப்படம் மற்றும் மைதானத்திற்கு வெளியே ரசிகர்கள் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து அடுத்தக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
    • இத்திரைப்படம் அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு வெளியாக இருக்கிறது.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா. இவர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்துள்ள 45-வது படமான 'கருப்பு' படத்தின் பணிகள் நிறைவடைந்து வெளியிட தயாராக உள்ளது. இதனால் இப்படத்தின் வெளியீட்டு தேதி குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனிடையே, வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் சூர்யா தனது 46-வது படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக மமிதா பைஜு நடித்துள்ளார். ராதிகா சரத்குமார் மற்றும் ரவீனா தாண்டன் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதற்கிடையே இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து அடுத்தக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திரைப்படம் அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு வெளியாக இருக்கிறது.

     

    இந்த நிலையில், 'சூர்யா 46' படத்தின் கதை குறித்து தயாரிப்பாளர் நாக வம்சி கூறியுள்ளது தற்போது இணையத்தில் வைரலாகிறது. அதாவது 'சூர்யா 46' படத்தின் கதை 45 வயது இளைஞனுக்கும் 20 வயது பெண்ணுக்கும் இடையிலான உறவைப் பற்றியது. இந்தப் படம் பலவிதமான உணர்ச்சிகளை கொண்டு இருக்கும். மேலும் கஜினியில் வரும் சஞ்சய் ராமசாமி கதாபாத்திரத்தின் பாணியில் இருக்கும் என்று தயாரிப்பாளர் நாக வம்சி கூறியுள்ளார். 



    • பல்வேறு யூகங்களை தெரிவித்து வருகின்றனர்.
    • சில நாட்களில் தவிர்க்க முடியாத காரணங்களில் அப்படத்தில் இருந்து விலகுவதாக சுந்தர் சி தெரிவித்தார்.

    கடந்த 2004-ம் ஆண்டு இயக்குநர் சுந்தர் சி. மற்றும் அவருடைய மனைவியும் நடிகையுமான குஷ்பு ஆகியோர் இணைந்து தொடங்கப்பட்ட தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனம் அவ்னி சினிமேக்ஸ். சுந்தர் சி. இயக்கும் படங்களை இந்நிறுவனம் தயாரித்துள்ளது.

    இந்த நிலையில், அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் தற்போது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். அதாவது, இது ஒரு முக்கியமான மெசேஜ்... உங்க சார்ஜர்ல இருக்கிற ஹோல்ல இருந்து படிங்க... என்று ஒரு புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் சுந்தர் சி-யின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு, தமன்னா மீண்டும் நடிக்க வருகிறார் என பல்வேறு யூகங்களை தெரிவித்து வருகின்றனர்.

    ஆனால் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள புகைப்படத்தின் படி அது Sundar C's Next Loading என தெரியவருகிறது.

    முன்னதாக, கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள படத்தை சுந்தர் சி இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. சில நாட்களில் தவிர்க்க முடியாத காரணங்களில் அப்படத்தில் இருந்து விலகுவதாக சுந்தர் சி தெரிவித்தார். இதனால் இது அவரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பாக இருக்கும் என கருதப்படுகிறது. 



    ×