என் மலர்
- விஜய் சேதுபதி, கார்த்தி, தனுஷ், ஆர்.பார்த்திபன், சூர்யா, ஆர்யா, விக்ரம் பிரபு சிறந்த நடிகர் விருதை பெற்றனர்.
- விஜய் சேதுபதி, கார்த்தி, தனுஷ், ஆர்.பார்த்திபன், சூர்யா, ஆர்யா, விக்ரம் பிரபு சிறந்த நடிகர் விருதை பெற்றனர்.
2016 முதல் 2022 வரையிலான திரைப்பட விருதுகளும், 2014 முதல் 2022 வரையிலான சின்னத்திரை விருதுகளும், 2015-16 முதல் 2021-22 வரையிலான மாணவர் விருதுகளும் தேர்வு செய்யப்பட்டு அரசாணை சமீபத்தில் வெளியானது. இந்த விருதுகள், சமூக சிந்தனைகளை பிரதிபலிக்கும் திரைப்படங்கள், மக்களின் அன்றாட வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கும் சின்னத்திரை தொடர்கள் மற்றும் மாணவர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்படுகின்றன.
இந்த நிலையில் விருதுகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார்.
விஜய் சேதுபதி, கார்த்தி, தனுஷ், ஆர்.பார்த்திபன், சூர்யா, ஆர்யா, விக்ரம் பிரபு ஆகியோர் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றனர்.
கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜோதிகா, மஞ்சுவாரியார், அபர்ணா பாலமுரளி, லிஜோமோல் ஜோஸ், சாய்பல்லவி ஆகியோர் சிறந்த நடிக்கைக்கான விருதை பெற்றனர்.
மாநகரம், அறம், பரியேறும் பெருமாள், அசுரன், கூழாங்கல், ஜெய்பீம், கார்கி ஆகிய திரைப்படங்கள் சிறந்த படங்களுக்கான விருதை பெற்றன.
சிறந்த திரைப்படங்களுக்கு முதல் பரிசாக ரூ.2 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ.1 லட்சம், மூன்றாம் பரிசாக ரூ.75 ஆயிரம், சிறப்புப் பரிசாக ரூ.75 ஆயிரம், பெண்களைப் பற்றி உயர்வாகச் சித்தரிக்கும் படத்திற்கு ரூ.1.25 லட்சம் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு தலா 1 பவுன் தங்கப்பதக்கம், நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
படத்தின் நாயகன் அஜயும்- நாயகி தனுஷாவும் சில வருடங்களாக காதலித்து வருகிறார்கள். இருவரும் திருமணத்திற்கு தயாராகும்போது இருவருக்கும் சண்டை வருகிறது.
இந்த சண்டை எல்லை மீறி போக ஒரு கட்டத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ள, அதை வீடியோ எடுத்து சிலர் நெட்டில் தட்டிவிட பிறகு என்ன இவர்கள் வைரக் ஆகின்றனர். இருவரும் பிரேக் அப் செய்து விடுகின்றனர்,
ஆனால், பிரேக் அப்பில் இருந்து அஜய், தனுஷா இருவருமே வெளிவர முடியாமல் தவிக்கின்றனர். இருவரும் தங்களின் நினைவுகளை மறக்க சாப்பாடு, பைக் ட்ரிப், ஷாப்பிங், ஆன்மிகம், ஜிம் என பல விஷயங்களில் கவனத்தை செலுத்துகின்றனர்,
இருவருக்கும் இன்னொரு காதலும் மலர்கிறது. ஆனால், பழைய காதலின் நினைவுகள் அவர்களை எதிலும் ஈடுப்படவிடாமல் தடுக்கிறது. ஒரு கட்டத்தில் இருவம் திருமணமே இதற்கு பதில் என வேறு ஒருவரை திருமணம் செய்ய முடிவு செய்கின்றனர்.
இறுதியில், அஜயும்- தனுஷாவும் இணைந்தார்களா? அல்லது வேறு ஒருவரை திருமணம் செய்தார்களா? என்பது படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
துறுதுறு இளைஞராக வரும் அஜய், முதுமுகமாக இருந்தாலும் நன்றாகவே நடித்திருக்கிறார். காதலிகளிடம் சிக்கித்தவிக்கும்போதும், முடிவெடுக்க முடியாமல் திணறும்போதும் அவரது இன்னொசன்ஸ் நடிப்பு வெளிப்படுகிறது. ஹீரோயினாக நடித்து இருக்கும் தனுஷா கதைக்கு பலம். அழகு.
ஷியாரா காதல் சீன்களில் விறுவிறுப்பாக நடித்துள்ளார்.
இயக்கம்
இன்றைய இளம் தலைமுறையினர் மனநிலை, அவர்கள் காதலையும், வாழ்க்கையையும் பார்க்கும் விதத்தை படமாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் கணேஷ் சந்திரா.
கதையும், படத்தில் இடம்பெற்றுள்ள காதல் காட்சிகளிலும் புதிதாக ஒன்றுமில்லை. திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
இசை
விஜய் ஆண்டனியின் இசை படத்திற்கு பலம் சேர்க்கவில்லை.
ஒளிப்பதிவு
ஒளிப்பதிவாளரான கணேஷ் சந்திரா, இப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்து இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார். ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.
ரேட்டிங்: 1.5/5
- பிரபல படத்தயாரிப்பு நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
- ரூ.20 கோடி இழப்பை ஈடுகட்ட வேண்டும்.
இந்திய சினிமா மட்டுமின்றி ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து வருபவர் நடிகர் தனுஷ். நடிப்பு மட்டுமின்றி திரைத்துறையில் பல பணிகளில் தீவிரமாக இயங்கி வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான இந்தி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த நிலையில், நடிகர் தனுஷுக்கு எதிராக பிரபல படத்தயாரிப்பு நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
திரைப்பட ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தில் நடிகர் தனுஷ் முடிவு எடுக்காததால், தங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதற்காக அவர் இழப்பை ஈடுகட்ட வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் கோரியுள்ளது.
"பிற படங்களுக்கு கால்ஷீட் கொடுத்ததால் 'ருத்ரன்' திரைப்படம் பாதியிலேயே முடங்கியுள்ளது. கால்ஷீட் தருவது தொடர்பான முடிவை, நடிகர் தனுஷ் விரைவில் தெரிவிக்க வேண்டும், இல்லாவிட்டால் ரூ.20 கோடி இழப்பை ஈடுகட்ட வேண்டும்," என்று தேனாண்டாள் பிலிம்ஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நாயகன் சசிகுமார் தனது மனைவியுடன் கோவில்பட்டியில் வாழ்ந்து வருகிறார். மத்திய மந்திரியாக இருக்கும் ஆஷா சரத் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து அவருக்கு உடனடியாக மாற்று சிறுநீரக சிகிச்சை தேவைப்படுகிறது. அவருடைய ரத்தவகை மிகவும் அரிய வகை என்பதால் நீண்ட தேடலுக்கு பிறகு சிறுநீரக தானத்திற்கு 2 பேரை தேர்வு செய்கிறார்கள். அதில் ஒருவர் சசிகுமார்.
ஆஷா சரத்தின் உடல்நிலை வெளியுலகிற்கு தெரியாமல் இருக்க வேண்டும் என அறுவை சிகிச்சையை ரகசியமாக நடத்த திட்டமிட்டு சசிகுமாரை அழைத்து வர முயற்சியில் ஆஷா சரத் குழு முயற்சி செய்கிறது. அதே சமயம் கோவில்பட்டியில் பல பிரச்சனைகளுடன் போராடி வரும் சசிகுமார் சிறுநீரகம் கொடுக்க மறுப்பு தெரிவிக்கிறார்.
இறுதியில் சசிகுமார் சிறுநீரகம் கொடுத்தாரா? சசிகுமாருக்கு இருக்கும் பிரச்சனை என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் சசிகுமார் அறிமுக காட்சியிலேயே கைத்தட்டல் வாங்கி இருக்கிறார். கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்ட நிலையில் பிணவறையில் இருந்து உயிருடன் வெளியே வந்து நடனம் ஆடும் காட்சி சிறப்பு.
மனைவி சைத்ராவுடன் பாசம், அரசாங்கம் மீது கோபம், மற்றவர்கள் மீது இருக்கும் மனிதநேயம் என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். மனைவியாக வரும் சைத்ரா, பீடி பிடிப்பது, சாமியாடுவது சசிகுமாருடன் மருத்துவமனைக்கு அலைவது என நடிப்பில் கவனிக்க வைத்து இருக்கிறார்.
ஆஷா சரத்தின் நடிப்பு படத்திற்கு பெரிய பலம். இறக்க போகிறோம் என்ற பயத்தையும், அரசியல்வாதி என்ற திமிரையும், அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார். பத்திரிகையாளராக குரு சோமசுந்தரம், நீதிபதியாக ஜெயபிரகாஷ், வழக்கறிஞராக கோபி நயினார் ஆகியோர் நடிப்பு கூடுதல் பலம்.
இயக்கம்
ஆட்சியும் அதிகாரமும் இருந்தால் எதுவென்றாலும் செய்ய முடியும். சாதாரண மனிதனின் வாழ்க்கையை எப்படி வேண்டும் என்றாலும் மாற்ற முடியும் என்பதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் ராஜு முருகன்.
சாதாரண மக்களின் ஏழ்மையை பயன்படுத்தி, செல்வந்தர்கள் மற்றும் அரசியல்வாதிகள் எப்படி ஏமாற்றுகிறார்கள் என்பதை அழுத்தமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர். சாதாரண மனிதனின் வாழ்க்கை, அரசியல் அதிகாரம் இரண்டையும் இணைத்து திரைக்கதையை அமைத்து இருக்கிறார். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். முதல்பாதியில் மெதுவாக செல்லும் திரைக்கதை பலவீனம்.
இசை
ஷான் ரோல்டன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையை ரசிக்கும் படி கொடுத்து இருக்கிறார்.
ஒளிப்பதிவு
நீரவ்ஷா ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது.
ரேட்டிங்-3/5
- இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்.
- இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்- All the songs in Ilayaraja's music are worth listening to.
வனவிலங்கு புகைப்படக் கலைஞரான நாயகன் ஸ்ரீராம் கார்த்தி, பறவை ஒன்றை புகைப்படம் எடுப்பதற்காக ஊட்டிக்கு வருகிறார். அங்கு பறவைகள் பூங்கா ஒன்றை நடத்தி வரும் நாயகி கிரிஷா குரூப் உடனான நட்பு கிடைக்கிறது.
நட்பு காதலாக மாறுகிறது. தன் காதலை கிரிஷா குரூப்பிடம் சொல்ல நினைக்கும் போது, கிரிஷா குரூப் தான் ஒருவரை காதலிப்பதாகவும், அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியாது என்றும், காதலனுடன் சேர்த்து வைக்குமாறு ஸ்ரீராம் கார்த்திக்கிடம் கேட்கிறார்.
வருத்தம் அடையும் ஶ்ரீராம் கார்த்திக், கிரிஷா குரூப்பின் காதலை சேர்த்து வைப்பதாக சொல்லி ஏமாற்றுகிறார். ஒரு கட்டத்தில் அந்த காதலன் ஊட்டி வருகிறார். இறுதியில் கிரிஷா குரூப் காதலன் யார்? கிரிஷா குரூப் காதலை ஶ்ரீராம் கார்த்திக் சேர்த்து வைத்தாரா? ஶ்ரீராம் கார்த்திக் தன் காதலை கிரிஷா குரூப்பிடம் சொன்னாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
நாயகனாக நடித்திருக்கும் ஸ்ரீராம் கார்த்திக், இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்து நடித்து இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் கிரிஷா குரூப், வெகுளித்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர முயற்சி செய்திருக்கிறார். கிரிஷா குரூப்பின் ஒருதலை காதலனாக வருபவர் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்.
முனிஷ்காந்த், சிங்கம்புலி இருவரும் அங்காங்கே சிரிக்க வைத்து இருக்கிறார்கள். மற்ற கதாபாத்திரங்களின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு உதவி இருக்கிறது.
இயக்கம்
காதல் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் அஜயன் பாலா. காதல் காட்சிகள், வசனங்கள் உணர்வு பூர்வமாக இல்லாதது வருத்தம். காதலித்த பெண்ணின் காதலை சேர்த்து வைக்க முயற்சிக்கும் நாயகனின் காதல் கதையை ஏற்கனவே பல படங்களில் பார்த்து இருந்தாலும் இதில் கொஞ்சம் வித்தியாசம் காண்பித்து இருக்கிறார்.
இசை
இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசை சிறப்பு.
ஒளிப்பதிவு
செழியனின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம். ஊட்டி மலையின் பசுமையை அழகாக காண்பித்து இருக்கிறார்.
ரேட்டிங்-2/5
- திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி இருக்கிறது.
- அண்ணாமலையார் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தனர்.
தமிழ் திரையுலகில் இயக்குநர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவர் சசிகுமார். கடந்த சில ஆண்டுகளாக நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான "டூரிஸ்ட் ஃபேமிலி" திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி படமாக மாறியது.
இந்த வரிசையில், நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் "மை லார்ட்" திரைப்படம் இன்று (பிப். 13) வெளியானது. இயக்குநர் ராஜூமுருகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் சைத்ரா கதாநாயகியாக நடித்துள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி இருக்கிறது.
மை லார்ட் வெளியீட்டை ஒட்டி நடிகர் சசிகுமார், சைத்ரா ஆகியோர் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தனர். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.
- படம் உருவாக அனைத்தும் சரியாக அமைய வேண்டும்.
- மென்டல் மனதில் திரைப்படம் இந்த ஆண்டே திரைக்கு வரும்.
இந்திய திரையுலகில் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவர் செல்வராகவன். நடிப்பு மட்டுமின்றி சமீபத்தில் பல படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே இயக்குநர் செல்வராகவன் மென்டல் மனதில் மற்றும் 7ஜி ரெயின்போ காலணி 2 படங்களை இயக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், இயக்குநர் செல்வராகவன் அளித்த சமீபத்திய பேட்டியில் தான் இயக்கும் புதிய படங்கள் பற்றி பேசியுள்ளார். அப்போது அவர், "புதுப்பேட்டை 2 திரைப்படம் நிச்சயம் உருவாகும். ஆனால், ஆயிரத்தில் ஒருவன் 2 உருவாவது என் கையில் இல்லை. இந்தப் படம் உருவாக அனைத்தும் சரியாக அமைய வேண்டும். தற்போது வி.எஃப்.எக்ஸ். தொழில்நுட்பம் முன்னேறி இருப்பதால், அது எளிமையானது தான்."
"7ஜி ரெயின்போ காலனி 2 மற்றும் மென்டல் மனதில் திரைப்படங்கள் இந்த ஆண்டே திரைக்கு வரும். இதுதவிர புதிதாக கதை ஒன்றை எழுதி வருகிறேன்," என்றார்.
நாளை (பிப்ரவரி 14) காதலர் தினம் கொண்டாடப்படும் நிலையில் பல்வேறு காதல் படங்கள் ரிலீஸ் மற்றும் ரீ ரிலீஸ் ஆகியுள்ளன.
அந்த வரிசையில் நடிகர் டி. ராஜேந்தர் இயக்கி நாயகனாக நடித்த "உயிருள்ளவரை உஷா" திரைப்படம் 43 ஆண்டுகளுக்கு பிறகு இன்று ரீரிலீஸ் ஆகி உள்ளது.
கடந்த 1983 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இப்படத்திற்கு, டி. ராஜேந்தரே இசையமைத்திருந்தார்.
அதுபோல கவுதம் மேனன் இயக்கிய மாதவனின் மின்னலே, அமீர் இயக்கிய சூர்யாவின் மௌனம் பேசியதே படங்களும் காதலர் தினத்தை முன்னிட்டு ரீ ரிலீஸ் ஆகி உள்ளன.
நாளை (பிப்ரவரி 14) தமிழ் சினிமாவின் கிளாசிக் காதல் படமான காதலர் தினம் படமும் ரீ ரிலீஸ் ஆகிறது.
அதேபோல அஜித்தின் வீரம், சிம்புவின் சிலம்பாட்டம் படங்களும் ரீ ரிலீஸில் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றன.
புதிய வெளியீடாக வித் லவ் படம் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது. மேலும் மயிலாஞ்சி, விஜய் ஆண்டனியின் தயாரிப்பில் பூக்கி ஆகிய காதல் படங்களும் இன்று ரிலீஸ் ஆகி உள்ளன.
- வித் லவ் படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
சவுந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்து மதன் இயக்கத்தில் அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம், 'வித் லவ். இந்த படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தின் வெற்றியை படக்குழுவினர் கொண்டாடினார்கள்.
இதில் தயாரிப்பாளர் சவுந்தர்யா ரஜினிகாந்த் பேசும்போது, 'வித் லவ்' படத்துக்கு ரசிகர்கள் தரப்பில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
அந்த சந்தோஷத்துடன் படக்குழுவை அழைத்துக்கொண்டு என் அப்பாவை (ரஜினிகாந்த்) பார்க்க சென்றேன். என் அப்பா என்னை கட்டிப் பிடித்து, என்னை பார்த்து ஒருமாதிரியாக சிரித்தார். அப்போது நான் கேட்டேன். 'அப்பா இது தான் வெற்றியா?" என்று...
அப்பாவின் அந்த சிரிப்பை என்னால் வாழ்க்கையில் மறக்கவே முடியாது. 18 ஆண்டு திரைப்பயணத்தில் நான் அடைந்த முதல் வெற்றி இது. 'வித் லவ்' படக்குழுவால் தான் அது அமைந்தது. அனஸ்வரா ராஜனை பார்த்து, 'இத்தனை நாள் எங்கங்க இருந்தீங்க...' என்று அப்பா ஆச்சரியத்துடன் கேட்டார். அபிஷனையும் பாராட்டி தீர்த்துவிட்டார். இந்த குழு மீண்டும் இணைந்தாலும் நான் ரெடி. ஓகே சொல்லட்டும். பட்டறையை போட்டுடலாம், என்றார்.
- படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.
- படம் மார்ச் 26 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
நடிகர் நானி மற்றும் இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா மீண்டும் இணைந்துள்ள படம் தி பாரடைஸ். 'தசரா' படத்திற்குப் பிறகு நானி-ஸ்ரீகாந்த் ஒடேலா இணையும் இரண்டாவது படம் இது. இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். கயாடு லோஹர் கதாநாயகியாக நடிக்கிறார். மோகன் பாபு, ராகவ் ஜுயல், சோனாலி குல்கர்னி மற்றும் சம்பூர்ணேஷ் பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் இப்படத்தை SLV சினிமாஸ் தயாரிக்கிறது.
1980-களில் செகந்திராபாத் பின்னணியில் நடக்கும் கதைக்களத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இதில் ஒடுக்கப்பட்ட சமூகத்திற்காகப் போராடும் தலைவராக நானி நடித்துள்ளார். இந்தப் படம் மார்ச் 26 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் படம் ஆகஸ்ட் 21 அன்று வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- நடிகை ஸ்ருதிஹாசனுடன் ஆல்பம் பாடல் ஒன்றில் நடித்திருந்தார்
- டிசி படத்தின்மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி, தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநராக வலம்வருபவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். நடிகை ஸ்ருதிஹாசனுடன் ஆல்பம் பாடல் ஒன்றில் நடித்திருந்தார். அதனைத்தொடர்ந்து தற்போது இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் டிசி படத்தின்மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
இப்படம் முழு ஆக்ஷன் படமாக உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் லோகேஷ் கனகராஜிற்கு ஜோடியாக ஹிந்தியின் முன்னணி நடிகையான வாமிகா கபி நடிக்கிறார். அனிருத் ரவிச்சந்திரன் படத்திற்கு இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ பிப்.14ம் தேதி காதலர் தினத்தன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
- வித் லவ் திரைப்படம் மூன்று நாட்களில் ரூ. 11 கோடி வசூலித்தது.
- வித் லவ் படக்குழுவினரை நடிகர் ரஜினிகாந்த் நேரில் அழைத்து பாராட்டினார்.
சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில் அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் நடிப்பில் வெளியான திரைப்படம் 'வித் லவ்'. இந்தப் படத்தின் மூலம் அபிஷன் கதாநாயகனாக அறிமுகமானார். அபிஷன் ஜீவிந்த் முன்னதாக தமிழில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற "டூரிஸ்ட் ஃபேமிலி" படத்தின் இயக்குநர் ஆவார்.
காதல் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு இருக்கும் "வித் லவ்" படத்தில் காவ்யா அனில், ஹரிஷ்குமார், சச்சின் நாச்சியப்பன், தேனி முருகன், ஆர்.ஜே. ஆனந்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வித் லவ் திரைப்படம் கடந்த வாரம் வெளியானது.
வித் லவ் திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் உலகளவில் ரூ. 11 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான நிலையில், வித் லவ் திரைப்படம் வெற்றி பெற்றுள்ளது.
இந்த நிலையில், வித் லவ் திரைப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நடிகை அனஸ்வரா ராஜன், "வித் லவ் திரைப்படத்தை மிகுந்த அன்புடன் பெற்றதற்கு பார்வையாளர்களுக்கு மிக்க நன்றி. திரையரங்கிற்கு வந்த போது கிடைத்த வரவேற்பை பார்த்து நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். பார்வையாளர்கள் படத்தை மிகவும் ரசிக்கிறார்கள். தலைவர் ரஜினி காந்தை நாங்கள் சந்தித்தோம், அவரது கருத்து எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது," என்றார்.








