என் மலர்
- திருமணத்திற்காக விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா குடும்பத்துடன் சில தினங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் இருந்து உதய்ப்பூர் புறப்பட்டு சென்றனர்.
- திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் நேற்றுமுன்தினம் முதல் தொடங்கி நடைபெற்றது.
தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கும் நேஷனல் கிரஷ் என்று வர்ணிக்கப்படும் ராஷ்மிகா மந்தனாவுக்கும் இன்று காலை திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.
நடிகர் விஜய்தேவரகொண்டா -ராஷ்மிகா காதல் திருமணம் உதய்ப்பூரில் உள்ள நட்சத்திர ஆடம்பர ரிசார்ட்டில் நடைபெற்றது. இவர்களின் திருமணம் இன்று காலை 10.10 மணிக்கு பாரம்பரிய சடங்குகளின் படி குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் புடைசூழ கோலாகலமாக நடைபெற்றது.
திருமணத்திற்காக விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா குடும்பத்துடன் சில தினங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் இருந்து உதய்ப்பூர் புறப்பட்டு சென்றனர். திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் நேற்றுமுன்தினம் முதல் தொடங்கி நடைபெற்றது.
இருப்பினும் அதிகாரப்பூர்வ விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா திருமண புகைப்படங்களுக்காக ரசிகர்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
- இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
- இப்படத்தை கோடையில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த 2009-ம் ஆண்டு ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான 'சிவா மனசுல சக்தி' திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இக்கூட்டணி மீண்டும் இணையுமா? என்று ரசிகர்கள் காத்துக்கொண்டு இருந்தனர்.
இதனிடையே, ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார். அப்படத்திற்கு 'ஜாலியா இருந்த ஒருத்தன்' என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். Malik Streams Corporation தயாரிக்கும் இப்படத்தை கோடையில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. மேற்படி இப்படம் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.

இந்த நிலையில், 'ஜாலியா இருந்த ஒருத்தன்' படத்தின் கதாநாயகியாக இவானா நடித்துள்ளார். இவானாவின் பிறந்தநாளை படக்குழுவினர் கொண்டாடிய நிலையில் புகைப்படத்தை பகிர்ந்து படக்குழு அறிவித்துள்ளது.
- விசாரணை இன்னும் நடைபெறாத நிலையில் படம் நாளை வெளியாகுமா? என பரபரப்பு ஏற்பட்டு வந்தது.
- வெளிநாட்டு விநியோக உரிமைகள் ஏற்கனவே விற்றுவிட்டதாகவும் நீதிபதியிடம் தெரிவித்தார்.
மத தீவிரமயமாக்கலை சித்தரிப்பது போன்று வெளியான 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் கேரளா மட்டுமின்றி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த படத்திற்கு எதிராக பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டன. இந்த நிலையில் அதன் தொடர்ச்சியாக 'தி கேரளா ஸ்டோரி 2' தயாரிக்கப்பட்டு நாளை (வெள்ளிக்கிழமை) வெளியாக உள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தை தடை செய்ய கேட்டு கேரள ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த படத்தில் கேரளாவை வகுப்பு வாத கண்ணோட்டத்தில் காட்டுவதாகவும், இது சட்டம், ஒழுங்கை பாதிக்ககூடும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்னும் நடைபெறாத நிலையில் படம் நாளை வெளியாகுமா? என பரபரப்பு ஏற்பட்டு வந்தது.
இது தொடர்பாக கேரள ஐகோர்ட்டில் நேற்று மூத்த வக்கீல் ஸ்ரீகுமார் ஆஜராகி, படம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகும் என்றும், வெளிநாட்டு விநியோக உரிமைகள் ஏற்கனவே விற்றுவிட்டதாகவும் நீதிபதியிடம் தெரிவித்தார்.
இதனை கேட்ட நீதிபதி, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்பதாகவும், இந்த வாதங்கள் முடியும் வரை வெளியீட்டை ஒத்திவைக்கலாம் என்றும் நீதிபதி குறிப்பிட்டார். அப்போது வக்கீல் ஸ்ரீகுமார் 2 நிமிட டீசரை மட்டும் வைத்து நிவாரணங்களை வழங்க முடியாது என்று வாதிட்டார்.
படம் அனைத்து சட்டத் தேவைகளையும் பூர்த்தி செய்து உள்ளது என்றும், மத்திய திரைப்பட வாரியம் அதைச் சான்றளித்தவுடன், ஐகோர்ட்டு அதன் சொந்தக் கருத்தை மாற்ற முடியாது என்றும் அவர் வாதிட்டார். டீசர் வெளியான 16 நாட்களுக்குப் பிறகு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதாகவும், மனுதாரர்கள் "கேரள மக்களின் கூட்டு கண்ணியத்தை" பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூற முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
இருப்பினும் படத்திற்கு எதிரான நிலுவையில் உள்ள மனுக்கள் இறுதியாக விசாரிக்கப்பட்டு முடிவு செய்யும் வரை படத்தை வெளியிட வேண்டாம் என்று தயாரிப்பாளர்களுக்கு கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
- விஜயை விமர்சித்து வீடியோ வெளியிட்டதால், அவரது ரசிகர்கள் பலரும் ஜூலியை விமர்சித்தனர்.
- விஜய் ரசிகர்களின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜூலி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
வேலூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் நேற்று முன்தினம் தனது கட்சி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தை நடத்தினார்.
அந்த கூட்டத்தில் விஜய் கூறிய குட்டிக்கதையை விமர்சித்து பிக்பாஸ் ஜூலி வீடியோ வெளியிட்டிருந்தார். விஜயை விமர்சித்து வீடியோ வெளியிட்டதால், அவரது ரசிகர்கள் பலரும் ஜூலியை ஆபாச வார்த்தைகளில் விமர்சித்தனர்.
இந்நிலையில் விஜய் ரசிகர்களின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜூலி புது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கரூர் கூட்டநெரிசல் சம்பவத்திற்கு பின்னர் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை நோக்கி விஜய் பேசியதைப் போலவே, ஸ்லோ மாடுலேஷனில் பேசி ஜூலி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில், "விஜய் அண்ணா உங்களுக்கு என்னை பழி வாங்கணும்னா நான் என் வீட்டில் இருப்பேன், இல்லைனா ஆபீஸ்ல இருப்பேன். என்னை என்ன வேணாலும் பண்ணுங்க. ஆனால் அவங்களை விட்டுவிடுங்க. நீங்க பனையூரை விட்டு வெளியே வரமாட்டீங்கல்ல?. நான் இன்னும் உயிரோட தான் இருக்கிறேன், நான் வேண்டுமானால் பனையூர் வருகிறேன்" என்று கிண்டலாக பேசியுள்ளார்.
இந்நிலையில், விஜய்க்கு சவால் விட்ட பிக்பாஸ் ஜூலிக்கு நடிகை சனம் ஷெட்டி பதிலடி கொடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், "ஒவ்வொரு முறையும் விஜய் பேசினால் என்ன ஒரு பயம் ஏற்படுகிறது. விஜய் இப்படி பேசுகிறார். அவரின் ரசிகர்கள் இப்படி செய்வார்கள். இதனால உயிர்கள் போயிரும்ன்னு நடக்காத ஒன்றை இவர்களே சீன்களை உருவாக்கி மக்களை தூண்டி விட்டு ஒரு அஜென்டா செட் செய்து இப்படி பண்ணுவது நியாயமா?
ஜூலி உங்க மேல இருக்கும் அக்கறையில் ஒரு விஷயம் சொல்றேன் என கூறி தன்னுடைய டிசர்ட்டில் இடம் பெற்றிருந்த "Be Yourself" என்ற வார்த்தையை காட்டினார்.
யாரோ எப்பவோ பிக்பாஸில் போய் ட்ரெண்ட் செட் செய்தார்கள். நாமும் அப்படியே செய்யலாம் என அவர்கள் பண்ணியதை நீங்கள் பண்ணினால் இதோ இப்படித்தான் நடக்கும்.
அப்படி விஜய் என்ன சொல்லி விட்டார். குட்டி கதை கூறுகிறார். தமிழ்நாடு அரசியல் அடங்காத ஒரு காளை மாடு மாதிரி. அனுபவம் இல்லாத ஒரு புது கட்சியாக நாங்க வந்திருக்கிறோம். அனுபவத்தை பார்க்க வேண்டாம். நோக்கத்தைப் பாருங்கள் என பேசினார். மக்கள் பிரச்னை என்ன என்பது எங்களுக்கு புரியும். உங்களுக்காக நாங்க நிறைய செய்வோம். நம்பி ஓட்டு போடுங்க என்று தானே கூறுகிறார். இதில் தவறாக புரிந்து கொள்வதற்கான இடமே இல்லையே.
உண்மையிலே விஜய் பேச்சைக் கேட்டு சின்ன பசங்க தப்பு பண்ணி விடக்கூடாதுன்னு அக்கறையில் பேசுகிறீர்கள் என பார்த்தால் அதுவும் இல்லை. முதல் வீடியோ விஜயை தாக்கியும் இரண்டாவது வீடியோ தனி மனித தாக்குதல் என்பதும் தெளிவாக தெரிகிறது. சட்டப்படி தனி மனித தாக்குதல் என்பது தவறு. அது உங்களுக்கு நடந்தாலும் நான் கண்டிப்பேன்" என்று சனம் ஷெட்டி பேசியுள்ளார்.
- நகை விற்பனையகம் தொடங்கி தொழில் அதிபராகவும் கலக்க தொடங்கி இருக்கிறார்.
- சரியாக முதலீடு செய்து பல மடங்கு பெருக்குவது எப்படி? என யோசித்து பார்க்க வேண்டும்.
வெள்ளாவி வச்சு வெளுத்த மேனி கொண்ட நடிகையான தமன்னா, இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்கிறார். தற்போது நகை விற்பனையகம் தொடங்கி தொழில் அதிபராகவும் கலக்க தொடங்கி இருக்கிறார். இதற்கிடையில் சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை என்ன செய்யலாம்? என்பது குறித்து 'டிப்ஸ்'களை நடிகர்- நடிகைகளுக்கு அறிவுரையாக வழங்கியுள்ளார்.
அவர் கூறுகையில், "சினிமா பிரபலங்கள் என்னதான் கோடிகளில் சம்பாதித்தாலும், அதை சரியாக முதலீடு செய்து பல மடங்கு பெருக்குவது எப்படி? என யோசித்து பார்க்க வேண்டும். இல்லை என்றால் இறுதியில் எதுவுமே இல்லாமல் போய்விடும். எனவே சரியான முதலீடு தான் நம்மை காப்பாற்றும்" என்று அறிவுறுத்தியுள்ளார்.
என்ன ஒரு தொலைநோக்கு பார்வை...
- நீண்ட இடைவெளிக்கு பிறகு முக்கிய வேடத்தில் நடிகை ரோஜா நடித்துள்ளார்.
- மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
ஜமா புகழ் பாரி இளவழகன் - NEEK படத்தில் நடித்த ரம்யா ரங்கநாதன் இணைந்து நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. பாரி இளவழகன் இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு முக்கிய வேடத்தில் நடிகை ரோஜா நடித்துள்ளார். இந்த படத்தை வரும் கோடையில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. 'குட் நைட்', 'டூரிஸ்ட் ஃபேமிலி' ஆகிய வெற்றி படங்களை தயாரித்திருந்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
இந்த நிலையில், பாரி இளவழகன் இயக்கி நடிக்கும் புதிய படத்திற்கு 'அன்பே டயானா' என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டு படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விரைவில் இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது.
- ‘ஓ பட்டர்பிளை’ படம் வருகிற 6-ந்தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது.
ஆண்ட்ஹில் சினிமா மற்றும் பாலம்பூர் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள படம் 'ஓ பட்டர்பிளை'. விஜய் ரங்கநாதன் எழுதி இயக்கி உள்ள இப்படத்தில் நிவேதிதா சதீஷ், சிபி, நாசர், லட்சுமி பிரியா, சந்திர மௌலி, கீதா கைலாசம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கணவன், மனைவிக்குள்ளான காதல் மற்றும் திகில் கலந்த கதைக்களத்தில் உருவாகி உள்ள இப்படத்திற்கு வைசாக் சோமநாத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது.
மேலும், 'ஓ பட்டர்பிளை' படம் வருகிற 6-ந்தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்தது.
இந்த நிலையில், 'ஓ பட்டர்பிளை' படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. 2.28 நிமிடங்கள் கொண்ட டிரெய்லரில் தம்பதிக்குள் ஏற்படும் பிரச்சனை, இதனிடையே, அவர்களுக்கிடையே வரும் கதாநாயகியின் முன்னாள் காதலனால் ஏற்படும் பிரச்சனை அதனால் நடைபெறும் கொலை என முடிவடைகிறது. இந்த டிரெய்லர் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.
- அஞ்சு குரியன், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் முன்னணி நடிகையாக திகழ்கிறார்.
- பட விழாக்களில் கவர்ச்சி உடைகளில் தரிசனம் தந்தும் பார்ப்போர் கண்களை கவர்ந்தும் வருகிறார்.
'நேரம்', 'சென்னை டூ சிங்கப்பூர்', 'சில நேரங்களில் சில மனிதர்கள்', 'ஓஹோ எந்தன் பேபி', 'அதர்ஸ்' போன்ற படங்களில் நடித்த அஞ்சு குரியன், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் முன்னணி நடிகையாக திகழ்கிறார்.
சமீபகாலமாக பட விழாக்களில் கவர்ச்சி உடைகளில் தரிசனம் தந்தும் பார்ப்போர் கண்களை கவர்ந்தும் வருகிறார். இதுதவிர சமூக வலைதளங்களில் கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியும் வருகிறார்.
அவர் கூறுகையில், "அழகை ரசிப்பதில் என்றுமே தவறு கிடையாது. எல்லை மீறாத வரை இங்கு எதுவுமே ஏற்புடையது தான். எனக்காக ரசிகர்கள் தரும் அன்பும், ஆதரவும் என்னை எப்போதுமே ஆனந்தமாய் வைத்திருக்கிறது. ரசிகர்களின் அன்புதான் என் அழகுக்கு காரணம் என்று சொல்வேன்", என்கிறார்.
மாலி மான்வி மூவி மேக்கர்ஸ், D Studios, சன்னி டென்வி (Denvi Productions) தயாரிப்பில், பிரபா பிரேம்குமார் இணை தயாரிப்பில், விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள 'காதல் ரீசெட் ரிபீட்' திரைப்படத்தின் டீசர் வெளியானது.
முன்னணி இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஏற்கனவே வெளியான பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், புதுமையான காதல் கதையை சொல்லும் இந்தப் படத்தின் டீசர், சமூக வலைத்தளங்களில் வெளியான சில மணி நேரங்களிலேயே ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது.
இந்தப் படத்தில் மதும்கேஷ், ஜியா சங்கர் ஜோடியோடு மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரமான அர்ஜுன் அசோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களோடு எம்.எஸ். பாஸ்கர், ஜெயபிரகாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா காட்சிகளுக்கு அழகிய காட்சித் தன்மையை வழங்கியிருக்கிறார், ஆண்டனி படத்தொகுப்பை மேற்கொண்டிருக்க, கலை இயக்கத்தை சரவணன் வசந்த், சண்டை இயக்கத்தை மனோகர் வர்மா, உடை வடிவமைப்பை ருச்சி முனோத் கவனித்துள்ளனர்.
மார்ச் 6ஆம் தேதி 'காதல் ரீசெட் ரிபீட்' திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், காதல் ரீசெட் ரிபீட் படத்தின் டிரெயிலர் வெளியாகியுள்ளது.
'சார்மிங் ஸ்டார்' ஷர்வா முதன்முறையாக அதிரடி ஆக்சன் இயக்குநர் சம்பத் நந்தி இயக்கத்தில் 'போகி' எனும் பிரம்மாண்டமான பான் இந்திய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை ஸ்ரீ சத்ய சாய் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் கே.கே. ராதா மோகன் தயாரிக்கிறார். மேலும் இதனை லட்சுமி ராதா மோகன் வழங்குகிறார். ஷர்வாவின் திரையுலக பயணத்தில் மிக பிரம்மாண்டமான படைப்பாக இந்த திரைப்படம் தயாராகி வருகிறது. இதன் ஃபர்ஸ்ட் லுக்கை தயாரிப்பாளர்கள் இன்று வெளியிட்டுள்ளனர்.
இதில் ஷர்வா முரட்டுத்தனமான மற்றும் மூர்க்கத்தனமான தோற்றத்தில் தோன்றுகிறார். இந்த போஸ்டர் கடுமையான மற்றும் நெருக்கடியான காட்சியை பிரதிபலிக்கிறது. அத்துடன் வெகுஜன மக்களை கவரும் அவதாரமாகவும் தோன்றுகிறது. அவரது அடர்த்தியான ஒழுங்கற்ற தாடி, மீசை, சுருள் முடி.. ஆகியவை அவருக்குள் ஒரு தீவிரமான போர்க்குணம் இருப்பதை காட்சிப்படுத்துகிறது.
ஷர்வா 'போகி' படத்திற்காக ஒரு தீவிரமான மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். அவரது கதாபாத்திரத்தின் தீவிரத்தை முழுமையாக வெளிப்படுத்தும் வகையில் ஒரு துணிச்சலான தோற்றத்தையும் ஏற்றுக் கொண்டிருக்கிறார். இதற்கு முன் பார்த்திராத நடிகரின் மற்றொரு பக்கத்தையும் இது காட்டுகிறது. அத்துடன் போஸ்டரில் இடம் பிடித்துள்ள ஒவ்வொரு அம்சமும் ஒரு விசயத்தை குறிக்கிறது. அது ஷர்வா முழுமையாக ஒரு மிருகத்தனமான முயற்சியில் அடியெடுத்து வைக்கிறார் என்பதை குறிக்கிறது.
இந்தப் படக்குழு தற்போது ஐதராபாத்தில் மிகப்பெரிய அரங்கில் அதிரடி ஆக்சன் காட்சிகளை படமாக்கி வருகிறது. இதில் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் இரண்டு பெரிய அளவிலான அதிரடி அத்தியாயங்களை படமாக்குகிறார். இந்தப் படத்தில் அனுபமா பரமேஸ்வரன் மற்றும் டிம்பிள் ஹயாதி ஆகியோர் முன்னணி நடிகைகளாக நடிக்கிறார்கள். மேலும் பல பிரபல நடிகர்களும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்தப் படம் ஆகஸ்ட் 28ஆம் தேதி ரக்ஷா பந்தன் பண்டிகையின் போது தமிழ், தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமான முறையில் திரையரங்குகளில் வெளியாகிறது.
- நல்லகண்ணு மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- நல்லகண்ணு இன்று பிற்பகல் 1.55 மணி அளவில் காலமானார் என அரசு மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு. அவருக்கு வயது 101. வயதுமூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த சில தினங்களாக சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவிற்கு நல்லகண்ணு மாற்றப்பட்டு அங்கு மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல் நலம் குறித்து முதலமைச்சர் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று விசாரித்தனர்.
இதனை தொடர்ந்து, சிகிச்சை பலனின்றி நல்லகண்ணு இன்று பிற்பகல் 1.55 மணி அளவில் காலமானார் என அரசு மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதையடுத்து நல்லகண்ணு மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நல்லகண்ணு மறைவிற்கு நடிகர் ரஜினிகாந் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
மாறாத கொள்கைப் பிடிப்புடன் வாழ்ந்து மறைந்த தோழர் திரு. நல்லகண்ணு அவர்களின் இழப்பு தமிழக மக்களுக்கு ஈடு செய்ய முடியாதது.
அவரது ஆத்மா சாந்தியடையட்டும். ஆழ்ந்த அனுதாபங்கள் என்று கூறியுள்ளார்.
- விரைவில் ‘LIK' (லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி) படம் வெளியாக உள்ளது.
- சம்பளம் குறித்து சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
தமிழ் சினிமாவில் இயக்குநராக ஆரம்பித்து தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரதீப் ரங்கநாதன். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான 'டியூட்' படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூலையும் குவித்தது. இதனை தொடர்ந்து இவரது நடிப்பில் விரைவில் 'LIK' (லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி) படம் வெளியாக உள்ளது.
இதனிடையே, பிரதீப் ரங்கநாதன் ஆரம்பத்தில் வாங்கிய சம்பளமும், தற்போதும் வாங்கும் சம்பளம் குறித்தும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில், நடிப்பு மற்றும் இயக்குநரை தொடர்ந்து தமிழ் சினிமாவில் புதிய பாதையில் பிரதீப் ரங்கநாதன் பயணிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன் படி, பிரதீப் ரங்கநாதன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி புதிய மற்றும் வளர்ந்து வரும் திறமையாளர்களை சினிமாத்துறைக்குக் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தனது தயாரிப்பில் உருவாகும் முதல் படத்தின் கதை பெண்களை மையமாகக் கொண்டிருக்கும் என்றும் இந்த படத்தில் மமிதா பைஜூ நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.








