என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    • ஆரண்ய காண்டம், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களை இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ளார்.
    • 2019-இல் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதி திருநங்கை வேடத்தில் நடித்து தேசிய விருது பெற்றார்.

    பிரபல இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா. இவர் ஆரண்ய காண்டம், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் இயக்குநர் தியாகராஜன் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    2019-இல் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதி திருநங்கை வேடத்தில் நடித்து தேசிய விருது பெற்றார். இந்த வெற்றிக்குப் பிறகு இருவரும் மீண்டும் புதிய படத்தில் இணையும் தகவல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்தப் புதிய படத்துக்கான பேச்சுவார்த்தைகள் விரைவில் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படப்பிடிப்பு பிப்ரவரி 2026 முதல் தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

    • 6 வளைகுடா நாடுகளில் தடை செய்யப்பட்டாலும், வசூலில் சாதனை படைத்து வருகிறது.
    • 2025-ம் ஆண்டு அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது.

    பாலிவுட் இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில், ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த 5-ம் தேதி வெளியான படம் 'துரந்தர்'. இப்படத்தில் மாதவன், அக்ஷய் கன்னா, அர்ஜுன் ராம்பால், சஞ்சய் தத், சாரா அர்ஜுன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மக்கள் மத்தியில் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

    பாகிஸ்தானில் 'ஆபரேஷன் லியாரி' மற்றும் இந்திய உளவுத்துறை நிறுவனமான 'ரா' மேற்கொண்ட ரகசியப் பணிகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம், 6 வளைகுடா நாடுகளில் தடை செய்யப்பட்டாலும், வசூலில் சாதனை படைத்து வருகிறது.

    இந்நிலையில், படம் வெளியாகி 24 நாளான நிலையில், 'துரந்தர்' திரைப்படம் உலகளவில் ரூ. 1100.23 கோடி வசூலை குவித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. அதன்படி இந்தியாவில் 862.23 கோடியும், மற்றநாடுகளில் 238 கோடியும் குறிவித்துள்ளது. இதன்மூலம் 2025-ம் ஆண்டு அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது.



    • ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என பலரும் குவிந்ததால் மலேசியாவே குலுங்கியது.
    • ‘ஜன நாயகன்’ படம் வெளியாவதற்கு இன்னும் 11 நாட்களே உள்ளது.

    ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'ஜன நாயகன்' படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ந்தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது. விஜய் நடிப்பில் வெளியாக உள்ள 'ஜன நாயகன்' தான் விஜயின் கடைசி படம் என்று கூறப்படுவதால் இப்படத்தின் மீதான ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

    இதனிடையே நேற்று முன்தினம் மலேசியாவில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக நடைபெற்றது. உலகமெங்கும் இருந்து விஜயின் ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என பலரும் குவிந்ததால் மலேசியாவே குலுங்கியது.

    இந்த நிலையில், 'ஜன நாயகன்' படம் வெளியாவதற்கு இன்னும் 11 நாட்களே உள்ள நிலையில், கேரளாவில் 'ஜன நாயகன்' படத்தின் முதல் நாள் முதல் காட்சி காலை 6 மணிக்கு ஒளிப்பரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக எஸ்.எஸ்.ஆர். எண்டர்டெயின்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    கேரளாவில் 'ஜன நாயக'னின் முதல் நாள் முதல் காட்சியை அதிகாலை 4:00 மணிக்கு நடத்துவதற்கு நாங்கள் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டோம். ஆரம்பத்தில், அதிகாலை 4:00 மணி நிகழ்ச்சிக்கான அனுமதி தயாரிப்பாளரிடமிருந்து வழங்கப்பட்டது. இருப்பினும், தற்போதைய சூழ்நிலை மற்றும் தமிழ்நாட்டில் எழுந்த சில சிக்கல்கள் காரணமாக, அதிகாலை 4:00 மணி நிகழ்ச்சிக்கான அனுமதி வழங்கப்படவில்லை.

    எனவே, கேரளாவில் 'ஜன நாயக'னின் முதல் நாள் முதல் காலை 6:00 மணிக்கு ஒளிப்பரப்படும். அனைத்து கேரள தளபதி ரசிகர்களிடமும் நாங்கள் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது. 



    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.
    • அது மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கும்.

    தமிழ் சினிமாவின் வெற்றிகரமான இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன் தற்போது சிம்புவை வைத்து 'அரசன்' படத்தை இயக்கி வருகிறார். இப்படம் வடசென்னை கதையை மையமாகக் கொண்டு கேங்ஸ்டர் படமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.

    இதனிடயே, கமல்ஹாசன் மற்றும் வெற்றிமாறன் ஆகியோர் ஒரு புதிய படத்திற்காகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் அது குறித்து எந்த அறிவிப்பும் உறுதியாக அறிவிக்கப்படவில்லை.

    இந்த நிலையில், கமல்ஹாசன் - வெற்றிமாறன் கூட்டணி பிரமாண்டமான படத்திற்கான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டால், அது மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

    • அடுத்த படத்திற்கான கதைகளை தீவிரமாக எழுதி வருகிறேன்.
    • உங்கள் எதிர்பார்ப்புகளை நான் பூர்த்தி செய்வேனா என்று எனக்கு தெரியாது.

    விருதுநகர் மாவட்ட பொதுமக்கள் சார்பில் இயக்குனர் மாரி செல்வராஜூக்கு சிவகாசியில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு விருதுநகர் மாவட்ட மாரி செல்வராஜ் நற்பணி இயக்கம் மாவட்ட தலைவர் மான்ராஜன் வரவேற்றார். விழாவில் சிறந்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையை இயக்குனர் மாரி செல்வராஜ் வழங்கினார். தொடர்ந்து அவர் பேசியதாவது:-

    அடுத்த படத்திற்கான கதைகளை தீவிரமாக எழுதி வருகிறேன். ரசிகர்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.

    உங்கள் எதிர்பார்ப்புகளை நான் பூர்த்தி செய்வேனா என்று எனக்கு தெரியாது. ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை உடனுக்குடன் பூர்த்தி செய்ய முடியுமா என்ற தயக்கம் என்னிடம் இருக்கிறது. நான் அரசியலில் இல்லை. எதற்காகவும் சமரசம் ஆக மாட்டேன். நான் யார்? எங்கிருந்து வருகிறேன் என்று கூறிவிட்டு தான் எனது முதல் படத்தை எடுக்க தொடங்கினேன். வரும் காலங்களில் நான் அரசியல் இயக்கம் தொடங்கினால் அந்த இயக்கம் சாதிக்கு எதிராகத்தான் இருக்கும் என்றார்.

    • 2026 மே முதல் டிசம்பர் வரை சுமார் 60 முதல் 65 இசை நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக தகவல்.
    • 2026ம் ஆண்டின் முற்பகுதியில் மும்பையில் இசை நிகழ்ச்சியை நடத்த என தகவல்.

    பிரபல தென்கொரிய இசைக்குழுவான BTS (Bangtan Boys), 2026-ஆம் ஆண்டில் தங்களின் பிரம்மாண்ட உலகளாவிய இசைப் பயணத்தின் ஒரு பகுதியாக முதன்முறையாக இந்தியாவுக்கு வரக்கூடும் என்ற தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    2026ம் ஆண்டின் முற்பகுதியில் மும்பையில் இசை நிகழ்ச்சியை நடத்த BTS குழுவின் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கடந்த 27ம் தேதி அன்று ஒரு நேரலை நிகழ்ச்சியில், BTS உறுப்பினர் கிம் டேஹியுங் (Kim Taehyung - V), இந்திய ரசிகர்களை நோக்கி "நமஸ்தே இந்திய ஆர்மி, அடுத்த ஆண்டு சந்திப்போம்" என்று கூறியது இந்திய ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    BTS-ன் ஏழு உறுப்பினர்களும் (RM, Jin, Suga, J-Hope, Jimin, V, Jungkook) தங்களின் கட்டாய இராணுவப் பணியை 2025 ஜூன் மாதத்திற்குள் முடித்துவிட்டனர்.

    அவர்கள் தற்போது புதிய ஆல்பம் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், 2026 மே முதல் டிசம்பர் வரை சுமார் 60 முதல் 65 இசை நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    BTS-ன் மேலாண்மை நிறுவனமான HYBE, கடந்த செப்டம்பர் 2025-ல் மும்பையில் 'HYBE India' என்ற தனது அலுவலகத்தைத் தொடங்கியது. இது BTS போன்ற பெரிய குழுக்கள் இந்தியாவுக்கு வருவதற்கான வாய்ப்புகளை உறுதிப்படுத்துகிறது.

    இருப்பினும், இதுவரை இந்த இசைக்குழுவின் நிறுவனமான BIGHIT MUSIC அல்லது HYBE, இந்தியாவுக்கான தேதிகள் அல்லது இடங்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    சமூக வலைத்தள மூலம் ஒரு குடும்பத்தில் வரும் பிரச்சினையை மையமாக வைத்து படம் உருவாக்கப்பட்டுள்ளது.

    நாயகி ஸ்வேதா ஸ்ரீம்டன் திருமணமாகி கணவன், குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார். இவருக்கு விருப்பமில்லாத திருமணம் என்றாலும் கணவர் குழந்தை மீது அன்பாக இருந்து வருகிறார். ஸ்வேதாவுக்கு ஸ்மார்ட் போன் மீது ஆசை இருக்கிறது. திருமண நாளன்று கணவர், ஸ்வேதா ஸ்ரீம்டனுக்கு ஸ்மார்ட் போன் ஒன்றை பரிசாக கொடுக்கிறார்.

    ஸ்மார்ட் போனில் சமூக வலைதளம் உபயோகிக்கும் ஸ்வேதா, நாளடைவில் அதற்கு அடிமையாகிறார். சமூக வலைதளத்தில் ஒருவருடன் நட்பாக பேச ஆரம்பிக்கும் ஸ்வேதா, கொஞ்ச நாளில் வாட்ஸ் அப் மூலம் அதிக நேரம் பேசிக்கொண்டே இருக்கிறார். கணவர் கண்டித்தும் நண்பருடன் பேசிக்கொண்டே இருக்கிறார். இதனால் வீட்டில் பிரச்சனை வருகிறது.

    இறுதியில் ஸ்வேதா ஸ்ரீம்டன் வாழ்க்கை என்ன ஆனது? நண்பருடன் பேசுவதை நிறுத்தினாரா? என்பதை படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    படத்தில் நாயகியாக நடித்திருக்கும் ஸ்வேதா ஸ்ரீம்டன், இயல்பான நடிப்பின் மூலம் கவர்ந்து இருக்கிறார். பல காட்சிகளை அசால்டாக நடித்து கவனத்தை ஈர்த்து இருக்கிறார். நாயகனாக நடித்திருக்கும் குரு பிரகாஷ் எதார்த்தமாக நடித்திருக்கிறார். மனைவியின் செயலை கண்டு வருந்துவது, சந்தேகப்படுவது என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார்.

    ரகசிய சினேகிதனாக நடித்திருக்கும் வேல்முருகன், கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். நாயகியின் அம்மாவாக நடித்திருக்கும் பத்மா, ரகசிய சினேகிதனின் மனைவியாக நடித்திருக்கும் நிஷா, நாயகனின் நண்பராக நடித்திருக்கும் பாக்யராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் கந்தவேலு ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

    இயக்கம்

    சமூக வலைத்தள மூலம் ஒரு குடும்பத்தில் வரும் பிரச்சினையை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் சேகர் கன்னியப்பன். நாயகிக்கும் ரகசிய சினேகிதனுக்கு இடையே நடக்கும் உரையாடலை ஆபாசம் இல்லாமல் இருப்பது சிறப்பு. குறைந்த பட்ஜெட்டில் ஓரளவுக்கு ரசிக்கும் படியான படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

    இசை, ஒளிப்பதிவு

    டாக்டர் சுரேஷ் மற்றும் எஸ்.சுப்பிரமண்யா ஆகியோர் பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். ஒளிப்பதிவாளர் ஷாம்ராஜ்க்கு அதிகம் வேலை இல்லை. வீட்டிற்குள்ளேயே அதிக காட்சிகளை படம் பிடித்திருக்கிறார்.

    • எதை சினிமாவாக மாற்றவேண்டும் என்று உணர்ந்த படைப்பாளிகளின் வருகை அடுத்த தலைமுறைக்கு பெரும் நம்பிக்கையையையும் துணிச்சலையும் கொடுக்கும்.
    • ஒட்டு மொத்த படக்குழுவுக்கும் என் வாழ்த்துக்களையும், நன்றியையும் பகிர்ந்துகொள்கிறேன்

    விக்ரம் பிரபுவின் முக்கிய படங்களில் ஒன்று டாணாக்காரன். இப்படத்தில் விக்ரம் பிரபுவின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.  இதனைத்தொடர்ந்து தற்போது மற்றொரு போலீஸ் கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ள படம் 'சிறை'. அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ள இப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. படம் கிறிஸ்துமஸ் அன்று வெளியான நிலையில் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்நிலையில் படத்தை பாரட்டியுள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ். படம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 

    "சிறை பார்த்தேன். மனம் அவ்வளவு நிறைவாக இருக்கிறது. எந்த மாதிரியான கதைகளை, எந்த மாதிரியான மனிதர்களை, எந்த மாதிரியான அரசியலை, எந்த மாதிரியான பிரியத்தை சினிமாவாக மாற்றவேண்டும் என்று உணர்ந்த படைப்பாளிகளின் வருகை அடுத்த தலைமுறைக்கு பெரும் நம்பிக்கையையையும் துணிச்சலையும் கொடுக்கும். அப்படியொரு அசாத்தியமான படைப்பாக சிறை வந்திருக்கிறது.

    தனது முதல் படத்திலே பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கும் இயக்குநர் சுரேஷ் இராஜகுமாரிக்கும், இக்கதைதான் எனக்கு வேண்டும் என்று களமிறங்கியிருக்கும் விக்ரம் பிரபு சார் அவர்களுக்கும் , நல்ல படைப்பு நிச்சயம் வெல்லும் என்ற உறுதியோடு இப்படைப்பை தயாரித்து இருக்கும் லலித் அவர்களுக்கும் அறிமுக நாயகனாக களமிறங்கி நம்பிக்கையான நடிப்புக்கு முயற்சித்திருக்கும் எல்.கே அக்ஷய்குமார் அவர்களுக்கும் , சிறந்த இசையை கொடுத்திருக்கும் நண்பர் ஜஸ்டின் பிரபாகரன் அவர்களுக்கும். மற்றும் ஒட்டு மொத்த படக்குழுவுக்கும் என் வாழ்த்துக்களையும், நன்றியையும் பகிர்ந்துகொள்கிறேன். இந்த சிறைக்காக நிச்சயம் திரையரங்குகள் நிரம்பவேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

    • திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷிற்கு தாத்தா கேரக்டரில் நடித்திருந்தார்.
    • மலேசியாவில் உள்ள தனது மகள் வீட்டில் சில மாதங்கள் ஓய்வெடுத்து பின்னர் சென்னை திரும்பினார்.

    '16 வயதினிலே' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பாரதி ராஜா. அவரது முதல் படத்திலேயே ரஜினி, கமல், ஸ்ரீதேவி என முன்னணி நடிகர், நடிகைகளை வைத்து படத்தை இயக்கினார்.

    தொடர்ந்து பல படங்களை இயக்கிய பாரதிராஜா ராதிகா, ராதா, கார்த்திக் உட்பட பல முன்னணி நடிகர், நடிகைகளை அறிமுகம் செய்த பெருமை இவரை சாரும். முதல் மரியாதை, கிழக்கே போகும் ரெயில், அலைகள் ஓய்வதில்லை உட்பட பல வெற்றி படங்களை இயக்கியிருக்கிறார். இயக்குனராக மட்டுமல்லாமல் தற்போது நடிகராகவும் படங்களில் நடித்துள்ளார்.

    திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷிற்கு தாத்தா கேரக்டரில் நடித்திருந்தார். தொடர்ந்து பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

    இந்நிலையில் அவரது ஒரே மகனும் நடிகரும் இயக்குனருமான மனோஜ் பாரதிராஜா கடந்த மார்ச் மாதம் திடீரென காலமானார். மகன் மரணம் பாரதி ராஜாவை மிகவும் நிலைகுலைய செய்தது. இதை தொடர்ந்து மலேசியாவில் உள்ள தனது மகள் வீட்டில் சில மாதங்கள் ஓய்வெடுத்து பின்னர் சென்னை திரும்பினார்.

    இந்நிலையில் 80 வயதை கடந்துள்ள பாரதிராஜா தற்போது உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 3 நாட்களாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாரதிராஜாவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் பாரதிராஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஜனநாயகன் எப்படி இருக்கும் என நிறைய பேருக்கு சந்தேகம் இருக்கிறது.
    • படத்தின் முடிவில் நம்பிக்கை மட்டும்தான் இருக்கிறது என்றார் இயக்குநர் வினோத்.

    கோலாலம்பூர்:

    நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாலம்பூரில் இருக்கும் புக்கீட் ஜலீல் ஸ்டேடியத்தில் மிக பிரம்மாண்டமாக இன்று நடைபெற்றது. இதில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் பங்கேற்றனர்.

    இந்நிலையில் ஜன நாயகன் பட இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஹெச்.வினோத் பேசியதாவது:

    ஜனநாயகன் படத்தின் கடைசி 20 நிமிடங்களில், விஜய் சாருடைய பேர்வல் வீடியோ இருக்கிறது. அழவைக்க போகிறோம் என சிலர் சொல்கிறார்கள்.

    அதெல்லாம் எதுவும் இல்லை. படத்தின் முடிவில் நம்பிக்கை மட்டும்தான் இருக்கிறது. ஏன் என்றால் தளபதிக்கு என்ட்-டே கிடையாது, பிகினிங் மட்டும்தான். ரெண்டே விஷயம் சொல்லி முடித்துக்கொள்கிறேன்.

    ஜனநாயகன் எப்படி இருக்கும் என நிறைய பேருக்கு சந்தேகம் இருக்கிறது. ஒரு ரீமேக் படமாக இருக்குமா? இல்லை கொஞ்சம்தான் ரீமேக்கா என்ற குழப்பம் இருக்கிறது.

    ஒன்று மட்டும் சொல்கிறேன். ஐயா இது தளபதி படம். அதனால் உங்கள் மைண்டில் இருக்கும் டவுட் எல்லாத்தையும் அழித்துவிட்டு வாருங்கள். இது 100 சதவீதம் பொழுதுபோக்கான படம் என தெரிவித்தார்.

    • ரசிகர்கள் எனக்காக 33 வருஷமா பலவற்றைக் கொடுத்திருக்காங்க.
    • அடுத்த 33 வருஷத்துக்கு நான் அவங்களுக்கு அதைத் திருப்பிக் கொடுக்கப் போறேன்.

    கோலாலம்பூர்:

    ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய், டைரக்டர் எச்.வினோத் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இந்நிலையில், இசைவெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசியதாவது:

    இலங்கைக்குப் பிறகு மலேசியா தமிழ் மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதி. நான் சினிமாவில் நடிக்க வரும்போது சிறிய மணல் வீடு கட்டதான் விரும்பினேன். ஆனால், என்னுடைய ரசிகர்கள் பெரிய கோட்டையே கட்டிக் கொடுத்திருக்காங்க.

    என்னுடைய ரசிகர்கள் எனக்காக 33 வருஷமா பலவற்றைக் கொடுத்திருக்காங்க. அடுத்த 33 வருஷத்துக்கு நான் அவங்களுக்கு அதைத் திருப்பிக் கொடுக்கப் போறேன்.

    எனக்கு ஒன்னுனா தியேட்டர் வாசல்ல வந்து நிக்கிறாங்க. நாளைக்கு அவங்களுக்கு ஒன்னுனா, அவங்க வீட்ல போய் நிப்பேன்.

    எனக்காக அனைத்தையும் விட்டுக் கொடுத்த ரசிகர்களுக்காக நான் சினிமாவை விட்டுக் கொடுக்கிறேன்.

    அதுக்காக நான் அவங்களுக்கு நன்றி மட்டும் சொல்லப் போறதில்ல. நன்றிக் கடனை தீர்த்துட்டுத்தான் போவேன்.

    நீங்க உங்க வாழ்க்கையில ஜெயிக்க உங்களுக்கு நண்பர்கள் தேவையில்லை. ஆனா, உங்களுக்கு வலுவான ஒரு எதிரி தேவை.

    சும்மா, வர்றவங்க போறவங்களை எதிர்த்துட்டு இருக்க முடியாது இல்லையா! வலுவான எதிரி இருந்தால் மட்டுமே நீங்கள் வலிமையானவராக மாற முடியும்.

    விஜய் தனியா வருவாரா, அணியாக வருவாரானு சமீபத்துல ஒரு பேச்சு வந்தது.

    நம்ம எப்போ தனியா இருந்திருக்கோம். 33 வருஷமா மக்களோடதானே இருக்கேன். அது அணிதானே என தெரிவித்தார்.

    • உங்களை யாரும் விமர்சிக்கப் போறது கிடையாது. விமர்சனங்கள் வரும்.
    • ஏனெனில் நீங்கள் விமர்சனங்களைத் தாங்கக்கூடிய பாதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறீர்கள்.

    மலேசியா:

    ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் விஜய், டைரக்டர் எச்.வினோத் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இந்நிலையில், இசைவெளியீட்டு விழாவில் நடிகர் நாசர் பேசியதாவது:

    அமைதியும் பணிவும் தவிர கூர்மையான ஆயுதம் எதுவும் இல்லை.

    படுத்த படுக்கையாக இருந்த என் மகனை எழுந்து நடக்க வைத்தவர் நீங்கள். அதற்கு நன்றிகூற இந்த மேடை மட்டுமின்றி, எந்தச் சூழலிலும் நான் அதை சொல்லிக் கொண்டே இருப்பேன்.

    இந்த விழாவுக்கு நான் போறேன்னு சொன்னதும், அவன் விஜய் அண்ணாவுக்கு விஷ் பண்னேன்னு சொல்லிடுங்க என்றான்.

    நடிகர் சங்கத்துக்காக நீங்கள் ஒரு கோடி ரூபாய் நன்கொடை கொடுத்தீர்கள். அதற்கு என்னுடைய நன்றி.

    இந்தப் படத்தில் இயக்குனர் உள்பட டீ தருகிற பையன் வரை அனைவரிடமும் ஒரு பதட்டம் இருந்தது. தளபதியின் கடைசி படம், ஒரு தவறும் நேர்ந்து விடக்கூடாதே என.

    நீங்கள் புத்தனைப்போல சிரித்துக்கொண்டு எப்போதும்போல நடித்துக் கொண்டிருந்தீர்கள்.

    எனக்கு ஒரே ஒரு வருத்தம் மட்டும். நீங்கள் டயலாக் பேசலாம், நான் எடுத்த முடிவை நானே மாத்த மாட்டேன் என்று.

    ஆனால், ஒரு முடிவு, இங்க இருக்கிற ரசிகர்களோட வேண்டுதலா உங்க முன் வைக்கிறேன். உங்க எல்லார் சார்பாகவும் தம்பிக்கு நான் ஒரு வேண்டுதலா வைக்கிறேன்.

    உங்களை யாரும் விமர்சிக்கப் போறது கிடையாது. விமர்சனங்கள் வரும். ஏனென்றால் நீங்கள் விமர்சனங்களைத் தாங்கக்கூடிய பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறீர்கள்.

    இவர்கள் எல்லோருக்கும் நீங்கள் வேண்டும். தயவு செய்து நீங்கள் மீண்டும் படத்தில் நடிக்க வேண்டும். எங்களுடைய வேண்டுகோளை தயவு செய்து ஏற்றுக் கொள்ளுங்கள்.

    ஜனநாயகன் வெற்றி பெறுவது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு விட்டது. அந்த நாளுக்காக நானும் காத்திருக்கிறேன் மிக்க நன்றி என தெரிவித்தார்.

    ×