என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    • ஜிவி பிரகாஷ்-க்கு ஜோடியாக ஸ்ரீ கௌரி பிரியா நடிக்கிறார்.
    • மரியா ராஜா இளஞ்செழியன் பிரதீப் ரங்கநாதனின் 'லவ் டுடே' படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.

    இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ்-ன் அடுத்த படத்தை அறிமுக இயக்குனரான மரியா ராஜா இளஞ்செழியன் இயக்குகிறார். அவர் பிரதீப் ரங்கநாதனின் 'லவ் டுடே' படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.

    இந்தப் படத்தில் ஜிவி பிரகாஷ்-க்கு ஜோடியாக ஸ்ரீ கௌரி பிரியா நடிக்கிறார். மேலும் இந்த படத்தின் மூலம் 11 வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு அப்பாஸ் கம்பேக் கொடுக்கிறார். இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.

    மேலும் இப்படத்தை பியாண்ட் பிக்சர்ஸ் (Beyond Pictures) நிறுவனம் தயாரிக்கிறது.

    இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்திற்கு ஹேப்பி ராஜ் என பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் ஒரு ரொமாண்டிக் காமெடி படமாக இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. 




    • சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
    • நடிகர் ராஜ் கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    நலன் குமாரசாமி இயக்கத்தில் "வா வாத்தியார்" படத்தில் நடித்து முடித்துள்ளார் கார்த்தி. கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இவர் தமிழில் எல்ஐகே, ஜீனி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

    கார்த்தியின் 26-வது படம் இதுவாகும். இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சத்யராஜ் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். மேலும் நடிகர் ராஜ் கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    'வா வாத்தியார்' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகும் என படக்குழு அறிவித்து இருந்தது. ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தால் நேற்று வெளியாகவில்லை.


    இந்த நிலையில், 'வா வாத்தியார்' திரைப்படம் வருகிற 12-ந்தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு படக்குழு தெரிவித்து உள்ளது. மேலும் படத்தின் டிரெய்லரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி தீவிர எம்ஜிஆர் ரசிகரும், போலீஸ் அதிகாரியுமான கார்த்தி எதிர்கொள்ளும் சவால்களை மையமாக கொண்டு 'வா வாத்தியார்' எடுக்கப்பட்டுள்ளது. 



    • அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விஸ்வாசம் ஆகிய ஹிட் படங்களை கொடுத்தவர் சிறுத்தை சிவா.
    • அஜித் குமாருடன் சிறுத்தை சிவா கடந்த சில நாட்களாக நேரம் செலவிட்டு வருகிறார்.

    நடிகர் அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விஸ்வாசம் ஆகிய ஹிட் படங்களை கொடுத்தவர் சிறுத்தை சிவா. விவேகம் படம் மட்டும் சொதப்பியது.

    தொடர்ந்து சூர்யாவை வைத்து சிறுத்தை சிவா இயக்கிய கங்குவா படமும் பிளாப் ஆனது. இதன்பின் புதிய படங்களை இயக்காமல் இருந்த சிவா பொதுவெளியில் அதிகம் காணப்படவில்லை.

    இந்நிலையில் மலேசியாவில் கார் பந்தயத்திற்கான பயிற்சிகளை மேற்கொண்டு வரும் அஜித் குமாருடன் சிறுத்தை சிவா கடந்த சில நாட்களாக நேரம் செலவிட்டு வருகிறார். அங்கு அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திராவுடன் சிறுத்தை சிவா இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

    இதனால் சிறுத்தை சிவா அஜித்துக்கு கதை சொல்ல அங்கு சென்றுள்ளதாகவும், இருவரின் கூட்டணியில் புதிய படம் உருவாக வாய்ப்புள்ளதாகவும் ஊகங்கள் எழுந்துள்ளது.

    அஜித்தின் ரேஸிங் வாழ்க்கை பற்றி ஆவணப்படம் ஒன்று உருவாக இருப்பதாக தகவல்கல் வெளியாகி வந்த நிலையில் அந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

    குட் பேட் அக்லி வெற்றிக்கு பிறகு அஜித் அடுத்ததாக மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • ஒப்பந்தம் செய்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
    • வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தின் ஹாரி பாட்டர் திரைப்படங்கள், டிசி காமிக்ஸ் திரைப்படங்கள், கேம் ஆஃப் த்ரோன்ஸ் பல வெப் சீரிஸ்கள் ஆகியவை நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமாகியுள்ளது.

    உலகளவில் முன்னணி ஓடிடி தளமாக நெட்பிளிக்ஸ் திகழ்ந்து வருகிறது.

    இந்நிலையில் நெட்பிளிக்ஸ், பிரபல ஹாலிவுட் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தைக் கையகப்படுத்த ஒப்பந்தம் செய்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

    வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை ரூ.7.44 லட்சம் கோடிக்கு நெட்பிளிக்ஸ் வாங்கியுள்ளது. 

    இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தின் ஸ்டூடியோக்கள், அவர்கள் தயாரித்த பிரபல திரைப்படங்கள், HBO MAX ஓடிடி தளம் ஆகியவற்றை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கையகப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

    வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தின் ஹாரி பாட்டர் திரைப்படங்கள், டிசி காமிக்ஸ் திரைப்படங்கள், கேம் ஆஃப் த்ரோன்ஸ் பல வெப் சீரிஸ்கள் ஆகியவை நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமாகியுள்ளது. இதனால் இவை இனி நெட்பிளிக்ஸ் தளத்தில் கணக்கிடைக்க உள்ளது.

    முன்னதாக, வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் விற்பனைக்கு வருவதாக அறிவிப்பு வெளியான நிலையில் பல நிறுவனங்கள் வாங்க போட்டியிட்ட நிலையில் நெட்பிளிக்ஸ் வெற்றிகரமாக நிறுவனத்தை கைப்பற்றி உள்ளது. 

    • கடந்த 2013 இல் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் 'ராஞ்சனா'. தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் வெளியானது.
    • இதுவும் ராஞ்சனா போலவே காதல் படமாக அமைந்துள்ளது.

    பாலிவுட்டில் 'ராஞ்சனா' மற்றும் 'அட்ராங்கி ரே' போன்ற படங்களை இயக்கிய பிரபல பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய்யின் படத்தில் தனுஷ் நடித்துள்ளார்.

    பாலிவுட்டில் இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ், சோனம் கபூர் நடிப்பில் கடந்த 2013 இல் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் 'ராஞ்சனா'. தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் வெளியானது. படத்தில் ஏஆர் ரகுமான் இசையில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடலும் ஒரு கிளாசிக்.

    இந்நிலையில் தனுஷ் - ஆனந்த் எல் ராய் - ஏஆர் ரகுமான் கூட்டணியில் புதிதாக உருவாகி உள்ள படம் "தேரே இஸ்க் மேன்" (Tere Ishk Mein).

    இதுவும் ராஞ்சனா போலவே காதல் படமாக அமைந்துள்ளது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கிரித்தி சனோன் நடித்துள்ளார். கடந்த வாரம் வெளியான இப்படம் பாலிவுட்டில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    இந்நிலையில், 'தேரே இஷக் மெய்ன்' படம் 7 நாட்களில் உலகளவில் ரூ.118.76 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருவதால் வரும் நாட்களில் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.   

    • ஏ.வி.எம். சரவணன் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் எம்.பி இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டிருந்தார்.
    • ஏவிஎம் சரவணன் 1958ஆம் ஆண்டு முதல் தலைமையேற்று பல வெற்றித் தமிழ் படங்களை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    நேற்று காலை வயது மூப்பின் காரணமாக பழம்பெரும் திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்தனர்.

    ஏ.வி.எம். சரவணன் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் எம்.பி இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் ஏவிஎம் என்ற தோப்பில் நடப்பட்ட ஒரு சிறு மரம் நான் என்று கமல் பேசியிருந்தார்.

    இந்நிலையில் ஏவிஎம் சரவணன் குடும்பத்தினரை நேரில் சந்தித்து கமல்ஹாசன் ஆறுதல் கூறி உள்ளார்.

    ஏ.வி. மெய்யப்பன் தொடங்கிய பழம்பெரும் ஏவிஎம் தயாரிப்பு நிறுவனத்தை அவரது மகனான ஏவிஎம் சரவணன் 1958ஆம் ஆண்டு முதல் தலைமையேற்று பல வெற்றித் தமிழ் படங்களை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கன்னட திரை உலகின் முன்னணி நட்சத்திரமான கிச்சா சுதீப் இப்பாடலை பாடியுள்ளார்.
    • இந்த இசை ஆல்பத்தில், ஷாமுடன் நடிகை நிரா இணைந்து நடித்துள்ளார்.

    தமிழ் சினிமாவில் கடந்த 25 வருடங்களாக தனக்கென ஒரு நிலையான இடத்தை தக்கவைத்து பயணித்து வருபவர் நடிகர் ஷாம். தற்போது முதன் முறையாக ஆல்பம் தயாரிப்பில் இறங்கி, 'வரும் வெற்றி' என்கிற இசை ஆல்பத்தை இயக்கியுள்ளதன் மூலம் ஒரு இயக்குநராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார் ஷாம்.

    SIR ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் ஷாம் தயாரித்து இயக்கியுள்ள இந்த இசை ஆல்பத்தில், ஷாமுடன் நடிகை நிரா இணைந்து நடித்துள்ளார். அம்ரிஷ் இசையமைத்துள்ள இப்பாடலுக்கு ஸ்ரீதர் மாஸ்டர் நடனம் வடிவமைத்துள்ளார். 

    கன்னட திரை உலகின் முன்னணி நட்சத்திரமான கிச்சா சுதீப் இப்பாடலை பாடியுள்ளார் என்பது தான் இந்த ஆல்பத்தின் இன்னொரு ஹைலைட்டான அம்சம்.

    பிரபலமான டி சீரிஸ் நிறுவனம் இந்த ஆல்பத்தை வெளியிடுகிறது.

    தொழில்நுட்பக் கலைஞர்கள் விபரம்

    இயக்கம் ; ஷாம்

    ஒளிப்பதிவு ; K.A.சக்திவேல்

    இசை ; அம்ரீஷ்

    படத்தொகுப்பு ; லாரன்ஸ் கிஷோர்

    நடனம் ; ஸ்ரீதர்

    பாடல் ; ஜெகன்

    கலை ; வி.ஆர் ராஜவேல்

    ஸ்டன்ட் ; மான்ஸ்டர் முகேஷ்

    ஆடை வடிவமைப்பு ; நிரா

    ஒப்பனை ; வீரசேகர்

    விளம்பர வடிவமைப்பு ; தினேஷ் அசோக்

    மக்கள் தொடர்பு ; A. ஜான்

    • இசையமைப்பாளர் முகமது மக்பூல் மன்சூரின் பின்னணி இசை கதையோடு இணைந்து பயணித்து இருக்கிறது.

    கிராமத்தில் இரண்டு மகன்களுடன் வாழ்ந்து வரும் கீதா கைலாசம், பால் வியாபாரம், விவசாயம் என்று கடுமையாக உழைத்து வருகிறார். இவர் தைரியமான பெண்ணாகவும், மேல் சட்டை (ஜாக்கெட்) அணியாமல் பழமைவாத பெண்மணியாகவும் வலம் வருகிறார்.

    மூத்த மகனான பரணி திருமணமாகி அம்மாவுடன் இருக்க, இரண்டாவது மகன் சரண் நன்றாக படித்து மருத்துவராகிறார். இவர் பணக்கார வீட்டு பெண்ணை காதலிக்க, அவரது காதலுக்கு பெண் வீட்டார் சம்மதம் தெரிவிக்கிறார்கள். பெண் வீட்டார் ஜாக்கெட் அணியாமல் இருக்கும் தனது தாயை பார்த்து தவறாக நினைப்பார்கள் என்று சரண் வருந்துகிறார்.

    இதனால் தனது தாய் மேல் சட்டை அணிய வேண்டும் என்று விரும்புகிறார். இதற்காக அவர் நேரடியாக தனது தாயிடம் சொல்லாமல், அண்ணி மற்றும் ஊர் மக்கள் மூலமாக தாயை மேல் சட்டை அணிய வைக்கிறார். ஆனால், அவர் தினங்களில் மீண்டும் மேல் சட்டையை அணிய மறுக்கிறார்.

    இறுதியில் கீதா கைலாசம் மேல் சட்டை அணிந்தாரா? மேல் சட்டை அணிய மறுக்க காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கீதா கைலாசம், ஜாக்கெட் அணியாமல் இருப்பது, சுருட்டு பிடிப்பது படத்தின் முழு கதையையும் தாங்கி பிடித்து இருக்கிறார். இவரது அலட்டல் இல்லாத நடிப்பு படத்திற்கு பெரிய பலம்.

    மூத்த மகனாக நடித்திருக்கும் பரணி, அவரது மனைவியாக நடித்திருக்கும் தென்றல், இளைய மகனாக நடித்திருக்கும் சரண், அவரது காதலியாக நடித்திருக்கும் முல்லையரசி, சரணின் நண்பராக நடித்திருக்கும் சுதாகர், ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

    இயக்கம்

    அங்கம்மாள் என்ற பெண்மணியின் வாழ்வியலை சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர் விபின் ராதாகிருஷ்ணன். சுதந்திரமான பெண்ணாக இருந்தாலும், பிள்ளைகள் மூலம் அவரது சுதந்திரம் பரிக்கப்படுவதும், அவர்களுக்காக அடிபனிவதும் என்று திரைக்கதை அமைத்து இருக்கிறார். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார் இயக்குனர்.

    இசை

    இசையமைப்பாளர் முகமது மக்பூல் மன்சூரின் பின்னணி இசை கதையோடு இணைந்து பயணித்து இருக்கிறது.

    ஒளிப்பதிவு

    அன்ஜாய் சாமுவேல் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்து இருக்கிறது. பல காட்சிகள் கவனத்தை ஈர்த்து இருக்கிறது.

    ரேட்டிங்- 3.5/5

    • படத்தின் பாடல்களை பாடலாசிரியர்கள் விவேகா மற்றும் பத்மாவதி ஆகியோர் எழுதியுள்ளனர்.
    • 2005-ல் நடக்கும் காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது.‌

    செல்ஃப் ஸ்டார்ட் புரொடக்சன்ஸ் (Self Start Productions) சார்பில், KJ சுரேந்தர் தயாரித்து, இயக்கியிருக்கும் படம் மாயபிம்பம். புதுமுகங்கள் ஜானகி, ஆகாஷ் பிரபு, ஹரி கிருஷ்ணன், ராஜேஷ், அருண் குமார் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

    புதுமுக நடிகர் - நடிகைகள் மட்டுமில்லாமல் இசையமைப்பாளர் நந்தா, படத்தொகுப்பாளர் வினோத், ஒளிப்பதிவாளர் எட்வின் என தொழில்நுட்ப கலைஞர்களும் முழுக்க முழுக்க புதுமுகங்களே. படத்தின் பாடல்களை பாடலாசிரியர்கள் விவேகா மற்றும் பத்மாவதி ஆகியோர் எழுதியுள்ளனர். 

    2005-ல் நடக்கும் காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தின் போஸ்டரை இயக்குநர் சுந்தர்.சி வெளியிட்டு, படத்தின் ஒரு பாடலையும் பார்ததுவிட்டு படக்குழுவை பாராட்டினார்.

    • விமான சேவை பாதிப்பால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • நாடு முழுவதும் 550 விமானங்கள் ரத்தான நிலையில் பல்வேறு தரப்பினர் ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்திய விமான போக்குவரத்து வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் 550 இண்டிகோ விமானங்கள் ரத்தாகியுள்ளன.

    விமானிகளுக்கான புதிய விதிமுறைகள், ஊழியர்கள் பற்றாக்குறை, மோசமான வானிலை, பயணிகள் நெரிசல் உள்ளிட்ட காரணங்களுக்காக இந்த நடவடிக்கை என நிர்வாக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. விமான சேவை பாதிப்பால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    நாடு முழுவதும் இண்டிகோ நிறுவனத்தில் 550 விமானங்கள் ரத்தான நிலையில் பல்வேறு தரப்பினர் ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், விமான சேவை பாதிப்புக்கு நடிகை மெஹ்ரீன் பிர்சாடா தனது எக்ஸ் தள பக்கத்தில் ஆதங்கத்தை பதிவாக வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    நரகத்திற்கு போ இண்டிகோ! இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. விமான நிலையங்களில் பயணிகள் பல நாட்களாக சிக்கித் தவிக்கின்றனர், ஆனால் உங்கள் செயலி விமானங்கள் ஏறும் நேரத்தில் ரத்து செய்யும் வரை "சரியான நேரத்தில்" இருப்பதைக் காட்டுகிறது. இது ஒரு தொழில்நுட்ப கோளாறு அல்ல - இது அலட்சியம்.

    புதிய DGCA விதிகள் நடைமுறையில் இருப்பதால், வாடிக்கையாளர்களை தவறாக வழிநடத்துவதற்குப் பதிலாக உங்கள் அட்டவணையை நீங்கள் சரிசெய்திருக்க வேண்டும். நீங்கள் உருவாக்கிய குழப்பம் அபத்தமானது. என்ன நடக்கிறது என்பதை விளக்குங்கள், உங்களால் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு இழப்பீடு வழங்குங்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • நடிகை சாய் பல்லவி மற்றும் நடிகர் கதிர் இப்படத்தில் முக்கிய நடிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று உள்ளதாகவும் கூறப்பட்டது.
    • இனிவரும் நாட்களில் ‘தலைவர் 173’ குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் 173-வது படத்தை 'பார்க்கிங்' படத்தை இயக்கி கவனம் ஈர்த்த ராம்குமார் பாலகிருஷ்ணன் தான் இயக்கப்போவதாக தகவல் வெளியாகி இருந்தது. மேலும், நடிகை சாய் பல்லவி மற்றும் நடிகர் கதிர் இப்படத்தில் முக்கிய நடிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று உள்ளதாகவும் கூறப்பட்டது.

    இருப்பினும் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்தும் எவ்வித தகவலும் வெளியாகாத நிலையில், தற்போது 'தலைவர் 173' படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளதாக சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.



    படத்திற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருவதால் இனிவரும் நாட்களில் 'தலைவர் 173' குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சினிமாவில் வளர்ந்து வரும் இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கருக்கு இப்படம் ஒரு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாய் அபயங்கர் தற்போத சூர்யாவின் 'கருப்பு', ராகவா லாரன்ஸின் 'பென்ஸ்', அல்லு அர்ஜூன் - அட்லீயின் கூட்டணியில் உருவாகி வரும் AA22XA6 மற்றும் கார்த்தியின் மார்ஷல் உள்ளிட்ட படங்களில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • உயிரிழந்த சரவணனின் உடல் ஏ.வி.எம். ஸ்டுடியோவில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
    • ஏ.வி.எம். சரவணன் உடலுக்கு திரைப்பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்

    இன்று காலை வயது மூப்பின் காரணமாக பழம்பெரும் திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் உயிரிழந்தார். அவரது உடல் சென்னை வடபழனியில் உள்ள ஏ.வி.எம். ஸ்டுடியோவில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

    மறைந்த ஏ.வி.எம். சரவணன் உடலுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.

    இந்நிலையில், ஏ.வி.எம். சரவணன் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் எம்.பி இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில், "ஏ.வி.எம். சரவணன் அவர்களுக்கும் எனக்கும் உள்ள உறவு அண்ணன் - தம்பி உறவு போன்றது. குகனுக்கு இருக்கும் சோகத்தில் எனக்கும் பங்கு இருப்பதாக நான் உரிமை கொண்டாடுகிறேன். நான் தனி மரம் அல்ல, AVM என்ற பெரும் தோப்பில் நடப்பட்ட ஒரு சிறு செடி இன்று வளர்ந்து வந்திருக்கிறேன். இந்த தோப்பில் பல ஆசான்கள் எனக்கு கற்றுக்கொடுத்திருக்கிறார்கள். உங்கள் பெயர் சொல்லும் பிள்ளைகளில் ஒருவனின் அஞ்சலி இது" என்று பேசியுள்ளார்.

    ×