Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 13 ஆகஸ்ட் 2026...

தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
Live news

ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்

* ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

* மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர் அவர்களது 9 பேரை படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன்

* துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியில் நடக்கும் புத்தக வெளியிட்டு விழாவில் பங்கேற்கிறார்.

* தஞ்சையில் உள்ள சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

டிரம்ப் பதவிக்காலம் முடியும் வரை போரை நீட்டிப்போம் - ஈரான் தடாலடி

*அமெரிக்க ராணுவம் நினைத்ததை விட பலவீனமாக இருப்பதை இந்தப் போரின் மூலம் அறிந்துகொண்டதாக தெரிவித்தார்.

*பெரும் விலை கொடுக்க நேரிடும் என்பதைப் புரிந்துகொள்வார்கள்

மூடத்தனத்தால் ஒரு தலைமுறையையே முடக்கிய தாலிபான்.. ஆப்கானிஸ்தானில் 24 லட்சம் பெண் குழந்தைகளுக்கு கல்வி மறுப்பு

*2030ஆம் ஆண்டிற்குள் உயர்நிலை பள்ளிக் கல்வி மறுக்கப்பட்ட பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 40 லட்சமாக உயரும்

*முற்றிலுமாகத் தடை செய்துள்ள ஒரே நாடு ஆப்கானிஸ்தான் மட்டுமே.

'ஜந்தர் மந்தர் சீசன் 2' போராட்டத்தை அறிவித்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சி

*தலைகீழாக தொங்கவிடப்படுவீர்கள் என்று மிரட்டியுள்ளனர்.

*சீசன் 2 போராட்டம் தொடங்கும் என்பதை அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்

ஆளே மாறிட்டீங்க.. திருமண விழாவில் மோடியுடன் கார்கே கலகல - வீடியோ உண்மையா?

*கார்கே, "நீங்கள் ஆள் கொஞ்சம் மாறிவிட்டீர்கள்" என கூற, அதற்கு மோடி "ஓ அப்படியா" என கூறுவது பதிவாகியுள்ளது.

*தற்போதைய நிகழ்வோடு இதற்கு எவ்வித தொடர்பும் இல்லை

சிறுநீர் நிரம்பிய பாட்டில்கள்.. கன்வர் யாத்திரை நிறைவில் ஹரித்வாரில் 7 ஆயிரம் டன் குப்பைகள்

*கங்கை நதி உற்பத்தியாகும் இமயமலைப் பகுதியான கங்கோத்ரியிலும் இதே போன்ற சூழலே நிலவுகிறது.

*சுமார் 5 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் ஹரித்வாருக்கு வருகை தந்தனர்.

எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைமேடை 1 முதல் 5 வரை மூடல்

* எழும்பூரிலிருந்து புறப்பட்டு தென்மாவட்டங்களுக்குச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சில தாம்பரம் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

* எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 6 முதல் 9 வரை உள்ள நடைமேடைகளில் இருந்து இயக்கப்படும். மின்சார ரெயில்கள் வழக்கம்போல நடைமேடை 10, 11-ல் இருந்து இயக்கப்படும்.

தந்தை மறைந்த 5வது நாளில் ஆடுகளத்திற்கு திரும்பிய மெஸ்ஸி - ரசிகர்கள் நெகிழ்ச்சி

*நீங்கள் எனது தந்தையும், நண்பனும், பிரதிநிதியும் ஆவீர்கள்

*கால்பந்தில் தான் தொடர்வது குறித்து உறுதியாக தெரியவில்லை என உருக்கமாக பதிவிட்டிருந்தார்.

GOLD PRICE TODAY: நாளுக்கு நாள் ஏறும் தங்கம் விலை - இன்றைய நிலவரம்

* தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.14,220-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

* வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.

சென்னை கிண்டியில் 'வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு' தொடங்கியது.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கியது வெற்றி முதலீட்டாளர்கள் மாநாடு.

சென்னையில் நடைபெறும் வெற்றி முதலீட்டாளர்கள் மாநாட்டில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு.

வெற்றி முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.67,452 கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்படும் என தமிழ்நாடு அரசு உறுதி.

மாநாட்டில் 1,06,998 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு.

ஜெர்மனி, அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட 15 நாடுகளை சேர்ந்த நிறுவனங்களுடன் ஒப்பந்த கையெழுத்தாகிறது.

தமிழக வெற்றிக்கழகத்தில் 100 நாள் ஆட்சியில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கான முதலீடுகள் ஈர்ப்பு - அமைச்சர் கீர்த்தனா

முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழக அரசின் அனைத்து துறைகளும் ஓரணியில் உள்ளது - அமைச்சர் கீர்த்தனா

முதலமைச்சர் முன்னிலையில் இந்துஜா குரூப் நிறுவனத்துடன் ரூ.2,500 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து.

அக்னி கோல் நிறுவனம் ரூ.400 கோடி முதலீடு செய்வதற்கான ஒப்பந்தம் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் கையெழுத்தானது.

டைட்டன் நிறுவனம் ரூ.1000 கோடி முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

மின் வாகன தயாரிப்பு நிறுவனமான அல்ட்ரா வைலட் தமிழகத்தில் ரூ.777 கோடி முதலுடு செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

கேப்லின் குரூப் நிறுவனம் ரூ.925 கோடியில் 2000 பேருக்கு வேலைவாய்ப்பு தரும் வகையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

ஜே.கே. டயர்ஸ் ரூ.5,143 கோடி முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து.

தூத்துக்குடியில் 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ரூ.250 கோடி முதலீடு செய்கிறது ஸ்கை ரூட்.

ரூ.1000 கோடியில் பீனிக்ஸ் கோத்தாரி நிறுவனம் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

செயிண்ட் கோபைன் நிறுவனம் தமிழகத்தில் ரூ.2,000 கோடி முதலீடு செய்தவற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

ரூ.400 கோடி முதலீட்டில் 1500 பேருக்கு வேலை தரும் வகையில் தூத்துக்குடியில அக்னிகுல் காஸ்மோஸ் புரிந்துணர்வு ஒப்பந்தம்.

அமெரிக்காவை சேர்ந்த FORTUNE நிறுவனம் 4,000 பேருக்கு வேலை கிடைக்கும் வகையில் ரூ.477 கோடி முதலீடு செய்கிறது.

ஜப்பானின் YKK நிறுவனம் திருவள்ளூரில் ரூ.1651 கோடி முதலீட்டில் 4,316 பேருக்கு வேலை தரும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்.

ஷைலி என்ஜினீயரிங் பிளாஸ்டிக்ஸ் நிறுவனம் தமிழகத்தில் 400 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ரூ.500 கோடி முதலீடு.

ஆஸி.ன் Avid Group திருவள்ளூர், தூத்துக்குடியில் ரூ.7000 கோடி முதலீட்டில் 12,000 பேருக்கு வேலை தரும் வகையில் ஒப்பந்தம்.

ஜெர்மனியின் முன்னணி நிறுவனமான BIZER தமிழகத்தில் ரூ.300 கோடி முதலீடு செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஜெர்மனி நாட்டை சேர்ந்த டைம்லர் நிறுவனம் 400 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ரூ.4,000 கோடி முதலீடு செய்கிறது.

WOWsemi நிறுவனம் கோவையில் செமிகண்டக்டர் துறை திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் அமைக்க திட்டம்.

அடுத்த 2 ஆண்டில் ரூ.75 கோடி முதலீட்டில் Wafer on Wheels அனுபவ மையம், திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் அமைக்கப்படும்.

அடுத்த 5 ஆண்டுகளில் 75,000-க்கும் மேற்பட்டோருக்கு பயிற்சி அளித்து, 15,000 நபர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

வெற்றி முதலீட்டாளர்கள் மாநாட்டில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.

தனியார் நிறுவனங்களில் பணி பெற்றோருக்கு நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் விஜய்.

மும்பையில் கொட்டித்தீர்த்த கனமழை: கட்கோபர் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு 6 பேர் பரிதாப பலி; மீட்புப் பணிகள் தீவிரம்!...

*7 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

*நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி மிகவும் குறுகலான பாதைகளைக் கொண்டதாக இருப்பதால், பெரிய இயந்திரங்களை அங்கு கொண்டு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

ரூ.10.74 கோடி டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி: பிரபல சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்ஸர் புனேயில் கைது!

* ரூ.10.74 கோடி மோசடி: புனே 82 வயது முதியவரிடம் டிஜிட்டல் அரெஸ்ட் என பணம் பறிப்பு.

* இன்ஃப்ளூயன்ஸர் கைது: ரீல்ஸ் பிரபலம் ரோஹன் ஜாதவ் போலி வங்கி கணக்கு கொடுத்ததாக போலீஸ் கைது.

என்னைத் தீண்டத்தகாதவனாக நடத்துகிறீர்கள்.. மாநிலங்களவையில் கொந்தளித்த கார்கே - என்ன நடந்தது?

*என்னைத் தீண்டத்தகாதவராக நடத்தி, மேடையைச் 'சுத்தம்' செய்து அவமானப்படுத்துகிறீர்கள்.

*கோஷங்கள் எழுப்பப்பட்டதற்கும் எதிர்ப்பு தெரிவித்தே இந்த சடங்கு நடத்தப்பட்டதாக அமைப்பாளர்கள் கூறினர்.

தெலங்கானா அரிசி ஆலைகளில் அதிரடி சோதனை: ரூ.700 கோடி நெல் நிலுவைத் தொகையை மீட்டு அரசு சாதனை!...

*தெலங்கானா மாநிலத்தில் அரசுக்கு சொந்தமான நெல் நிலுவையைத் திரும்பச் செலுத்தாத அரிசி ஆலை அதிபர்கள் மீது மாநில அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

*நேர்மையாகச் செயல்படும் ஆலை அதிபர்களுக்கு அரசு துணையாக இருக்கும்.

கடன் வட்டி விகிதங்களில் அதிரடி மாற்றம்: ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள் வெளியீடு!

* புதிய விதிகள் ஏப்ரல் 1, 2027 முதல் அமல்: வங்கிகள், NBFC அனைத்திற்கும் தினசரி குறையும் நிலுவை வட்டி கட்டாயம்.

* பழைய கடன் மாற்றம் 2029 வரை: ஒருமுறை மட்டும் வாய்ப்பு, கூடுதல் கட்டணம் வசூலிக்கவோ வட்டி உயர்த்தவோ கூடாது.

வங்கதேசம் அபார பந்துவீச்சு: ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 198 ரன்களுக்கு ஆல் அவுட்

* வங்கதேசம் சார்பில் ஹசன் மகமுது 6 விக்கெட் வீழ்த்தினார்.

* இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது.

பாலி தீவு அருகே பயங்கரம்: பயணிகள் படகில் தீ விபத்து - 211 பேர் மீட்பு, இளம் பெண் பலி!

* பாலி தீவு அருகே லோம்போக் சென்ற 'புத்ரி யாஸ்மின்' படகில் அதிகாலை 4:15 மணிக்கு தீப்பிடித்தது.131 பேர் என்ற பட்டியல் இருந்தும் 211 பேரை மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர்.

* இந்த விபத்தில் 19 வயது இந்தோனேசிய பெண் உயிரிழந்தார், மேலும் 5 பேரை தேடும் பணி நடக்கிறது

தொடர் தோல்வி எதிரொலி: 2027 உலகக் கோப்பை வரை பயிற்சியாளர் பதவியில் நீடிப்பாரா கம்பீர்?

* இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன் பும்ரா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் காயத்தால் விலகினர்.

* கவுதம் கம்பீரின் ஒப்பந்தம் 2027 டிசம்பர் வரை இருக்கிறது.

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இலங்கை அணி அறிவிப்பு

* இலங்கை, இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் காலேயில் நாளை மறுதினம் தொடங்குகிறது.

* உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் இந்த டெஸ்ட் தொடர் முக்கியத்துவம் பெறுகிறது.

டிஎன்பிஎல்: ரித்திக் ஈஸ்வரன் அதிரடியில் கோவையை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது நெல்லை

* முதலில் ஆடிய கோவை கிங்ஸ் அணி 162 ரன்களை எடுத்தது.

* நெல்லை அணி 19.5 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்து வென்றது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com