கடலில் தாமரை அழுகிப்போய் விடும்- உதயநிதி ஸ்டாலின் பேச்சு

கடலில் தாமரை மலராது அழுகிப்போய்விடும் என்றும் உதயசூரியன் தான் உதிக்கும் என்றும் தேர்தல் பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசினார். #LoksabhaElections2019 #UdhayanidhiStalin #BJP
கடலில் தாமரை அழுகிப்போய் விடும்- உதயநிதி ஸ்டாலின் பேச்சு
Published on

ஓட்டப்பிடாரம்:

தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனையில் கனிமொழிக்கு ஆதரவாக உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

மோடி ஆட்சி என்பது மோசடியான ஆட்சியாக இருந்தது. ஒவ்வொரு வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவேன் என்று சொன்னார். ஆனால் போட்டாரா? அது மாதிரி கருப்பு பணத்தை ஒழிப்பேன் என கூறினார். ஒழித்தாரா? நம்ம பணத்தை கார்ப்பரேட் மூலம் வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டார்.

இப்போது தேர்தல் வந்ததையொட்டி தமிழகத்திற்கு மூன்று முறை மோடி வந்துள்ளார். தமிழ்நாட்டில் கஜாபுயல் உள்ளிட்ட எவ்வளவோ பிரச்சனையில் வரவில்லை. தூத்துக்குடியில் மக்களே நடத்திய போராட்டத்தை ஒடுக்கவேண்டும் என்று 13 பேரை சுட்டுக்கொன்றார்கள். மறந்து விடுவோமா? இப்படிப்பட்ட ஆட்சி தேவையா? சுட்டுக்கொன்ற போது இரங்கல் அறிக்கை கூட தெரிவிக்கவில்லை. நீங்கள் ஏப்ரல் 18-ந்தேதி உதய சூரியனுக்கு வாக்கு அளித்தால் மோடி மட்டும் அல்ல. மோடியின் அடிமை ஆட்சிக்கும் முடிவு கட்டப்படும்.

ஒரு படத்துக்கு கதாநாயகன், வில்லன் இருப்பர். நம்முடைய தேர்தல் அறிக்கை கதாநாயகன். மோடி வில்லன். தமிழிசை கடலில் தாமரை மலரும் என கூறினார். கடலில் தாமரை மலராது. அழுகிப்போய்விடும். கடலில் தாமரை மலராது. உதயசூரியன் உதிக்கும்.

அ.தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது. பொள்ளாச்சி சம்பவத்தில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தலில் கனிமொழி வெற்றி பெற்றார் என்றால் மோடி வீட்டுக்கு போய்விடுவார். அதே போல் விளாத்திகுளம் இடைத்தேர்தலில் ஜெயக்குமாருக்கு ஓட்டு போட்டால் இ.பி.எஸ். வீட்டுக்கு போய்விடுவார்.

இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார். #LoksabhaElections2019 #UdhayanidhiStalin #BJP

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com