search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க., அ.தி.மு.க. தான் மொத்த ஊழலுக்கும் காரணம்: பிரேமலதா விஜயகாந்த்
    X

    தி.மு.க., அ.தி.மு.க. தான் மொத்த ஊழலுக்கும் காரணம்: பிரேமலதா விஜயகாந்த்

    • விஜயகாந்த் மக்களை சந்திக்க வேண்டிய நேரத்தில் நிச்சயம் சந்திக்க வருவார்.
    • தமிழகம் பல லட்சம் கோடி கடனில் உள்ளது.

    விழுப்புரம் :

    விழுப்புரம் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் விஜயகாந்த் பிறந்த நாள் விழா, தே.மு.தி.க. 18-ம் ஆண்டு தொடக்க விழா, ஏழை, எளியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நேற்று விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் நடைபெற்றது.

    விழாவில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு 5 மாணவ - மாணவிகளுக்கு ரூ.1¼ லட்சத்தில் மடிக்கணினி, 1,350 பேருக்கு ரூ.3½ லட்சத்தில் வேட்டி- சேலை, 50 பேருக்கு ரூ.2½ லட்சத்தில் மருத்துவ உதவி என ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    ஏழை மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்கவே விஜயகாந்த், இந்த இயக்கத்தை நடத்தி வருகிறார். விஜயகாந்த் நன்றாக இருக்கிறார். பேசுவதிலும், நடப்பதிலும்தான் கொஞ்சம் தொய்வு. மக்களை சந்திக்க வேண்டிய நேரத்தில் நிச்சயம் சந்திக்க வருவார்.

    இன்றைக்கு தமிழகத்தில் மின் கட்டண உயர்வு ஒரு பக்கம், மற்றொரு பக்கம் மின்வெட்டு பிரச்சினை உள்ளது. காட்பாடியில் துரைமுருகன் பங்கேற்ற விழாவில் 3 முறை மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அவர் பாதியிலேயே புறப்பட்டுவிட்டார். அதன் பிறகு 2 என்ஜினீயர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். உங்களுக்கு மின்தடை வந்தால் சஸ்பெண்டு, கோடிக்கணக்கான மக்கள், மின்சாரம் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள், எத்தனை பேரை சஸ்பெண்டு செய்யப்போகிறீர்கள். தமிழகம் பல லட்சம் கோடி கடனில் உள்ளது. ஒவ்வொரு மனிதர்கள் மீதும் 900 ரூபாய் கடன் உள்ளது. தி.மு.க., அ.தி.மு.க.தான் இங்கு நடந்த மொத்த ஊழலுக்கும் காரணம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×