search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எம்எஸ் டோனி"

    • நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து சிஎஸ்கே அணி வெளியேறியது.
    • இதனை தொடர்ந்து டோனி தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் 18-ந் தேதி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதனால் சென்னை அணி பிளே ஆஃப் சுற்றில் இருந்து வெளியேறியது.

    இந்நிலையில் சிஎஸ்கே அணியில் இருந்து முன்னாள் கேப்டன் எம் எஸ் டோனி விடை பெற்றார். அவர் விமான நிலையத்தில் அதனை தொடர்ந்து அவரது சொந்த ஊரான ராஞ்சிக்கு சென்றார். அங்கு அவர் பைக்கில் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • டோனி பெங்களூரு அணி வீரர்களுக்கு கை குலுக்காமல் டிரெசிங் ரூம் சென்றுவிட்டார்.
    • இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் சென்னை அணி தனது கடைசி லீக் போட்டியில் விளையாடியது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால், பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலையில் சென்னை அணி களமிறங்கியது.

    பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை அணி கடைசி ஓவர் வரை சென்று தோல்வி அடைந்தது. இதன் மூலம் நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து சென்னை அணி வெளியேறியது. வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

    போட்டி முடிந்த பிறகு சென்னை அணி வீரர்கள், ஆர்.சி.பி. வீரர்களுக்கு கை குலுக்க வரிசையில் நின்றிருந்தனர். சி.எஸ்.கே. வீரர்களில் முதல் ஆளாக நின்ற டோனி பெங்களூரு அணி வீரர்களுக்கு கை குலுக்காமல் டிரெசிங் ரூம் சென்றுவிட்டார்.

    களத்தில் இருந்து வெளியே செல்லும் போது வழியில் இருந்த ஆர்.சி.பி. அணியின் பணியாளர்களுக்கு கை கொடுத்த டோனி சோகத்துடன் டிரெசிங் ரூம் சென்றார். டோனி ஆர்.சி.பி. வீரர்களிடம் கை குலுக்காமல் சென்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் வந்த வண்ணம் இருந்தது.

    இந்நிலையில் டோனி தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் போன வருடம் நடந்த ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. அந்த மகிழ்ச்சியில் சிஎஸ்கே வீரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டு வந்தனர்.

    அந்த கொண்டாட்டத்தில் இருந்த டோனி அனைவரையும் குஜராத் வீரர்களுக்கும் கைகுலுக்கி விட்டு வரலாம் வாங்க என அழைத்து சென்றார். இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவு செய்து டோனிக்கும் ஆர்சிபி வீரர்களுக்கு இதுதான் வித்தியாசம் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து சென்னை அணி வெளியேறியது.
    • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் சென்னை அணி நேற்று தனது கடைசி லீக் போட்டியில் விளையாடியது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால், பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலையில் சென்னை அணி களமிறங்கியது.

    பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் சென்னை அணி கடைசி ஓவர் வரை சென்று தோல்வி அடைந்தது. இதன் மூலம் நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து சென்னை அணி வெளியேறியது. நேற்றைய போட்டியில் வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

    இதையடுத்து, நேற்றைய போட்டி முடிந்த பிறகு சென்னை அணி வீரர்கள், ஆர்.சி.பி. வீரர்களுக்கு கை குலுக்க வரிசையில் நின்றிருந்தனர். சி.எஸ்.கே. வீரர்களில் முன்னே நின்றிருந்த எம்.எஸ். டோனி பெங்களூரு அணி வீரர்களுக்கு கை குலுக்காமல் டிரெசிங் ரூம் சென்றுவிட்டார்.

    களத்தில் இருந்து வெளியே செல்லும் போது வழியில் இருந்த ஆர்.சி.பி. அணியின் பணியாளர்களுக்கு கை கொடுத்த டோனி சோகத்துடன் டிரெசிங் ரூம் சென்றார். எம்.எஸ். டோனி ஆர்.சி.பி. வீரர்களிடம் கை குலுக்காமல் சென்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில், எம்.எஸ். டோனி சென்ற பிறகு பெங்களூரு அணியின் விராட் கோலி செய்த காரியம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், இது தொடர்பான வீடியோவும் வைரல் ஆகி வருகிறது. வைரல் வீடியோவின் படி, சென்னை வீரர்களிடம் கை குலுக்கிய விராட் கோலி, எம்.எஸ். டோனியை தேடிக் கொண்டு டிரெசிங் ரூம் செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. 

    • பிளே ஆஃப் சுற்றுக்கு மூன்று அணிகள் தகுதி பெற்றன.
    • அடுத்த சுற்றுக்கு முன்னேற சென்னை - பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை நடைபெற்று முடிந்த போட்டிகளின் அடிப்படையில், தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டன. அந்த வகையில், பிளே ஆஃப் சுற்றுக்கு நான்காவது அணியாக தகுதி பெறப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    வருகிற 18 ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற இருக்கும் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பெற முடியும்.

    அந்த வகையில், பெங்களூரு அணிக்கு எதிரான போட்டிக்கு தயாராகும் வகையில் சென்னை அணியின் நட்சத்திர வீரர் மகேந்திர சிங் டோனி இன்று பயிற்சியில் ஈடுபட்டார். சி.எஸ்.கே. அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்டராக இருக்கும் டோனி இன்றைய பயிற்சியின் போது பந்துவீசினார். இது தொடர்பான வீடியோவை சி.எஸ்.கே. அணி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் அக்கவுண்டில் பகிர்ந்து இருக்கிறது. 


    • நேற்றைய போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிராக சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது.
    • சேப்பாக்கத்தில் நடைபெறும் இந்தப் போட்டி தான் டோனியின் கடைசி போட்டியாக இருக்குமா? என்று கேள்வி எழுப்பினார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 141 ரன்களை மட்டுமே எடுத்தது.

    இதனையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18.2 ஓவர்களில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இப்போட்டியில் அபாரமாக பந்துவீசிய சிமர்ஜீத் சிங் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

    இந்நிலையில், இந்தப் போட்டியின் போது ஜியோ சினிமாவில் கிரிக்கெட் வர்ணனையாளராக வந்த சுரேஷ் ரெய்னாவிடம், அபினவ் முகுந்த் கேள்வி எழுப்பினார். அப்போது சேப்பாக்கத்தில் நடைபெறும் இந்தப் போட்டி தான் டோனியின் கடைசி போட்டியாக இருக்குமா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சுரேஷ் ரெய்னா கண்டிப்பாக இல்லை என்று கூறினார். இந்நிலையில் சுரேஷ் ரெய்னாவின் காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • சிஎஸ்கே அணி நாளை ராஜஸ்தான் அணியை எதிர் கொள்கிறது.
    • இந்த போட்டி சென்னை சேப்பாகத்தில் நடைபெறுகிறது.

    சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஒய்வு பெற்ற டோனி தற்போது ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரையில் 17 சீசன்கள் ஐபிஎல் கிரிக்கெட்டில் இடம் பெற்று விளையாடியுள்ளார்.

    கடந்த சீசனுடன் டோனி ஓய்வு பெறப் போவதாக கூறப்பட்ட நிலையில், இன்னொரு சீசனும் விளையாடுவேன் என்று இந்த சீசனில் விளையாடி வருகிறார். இந்த சீசன் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்த நிலையில் இந்த சீசனில் எந்த அணி சாம்பியன் பட்டம் வெல்லும் என்பதை தெரிந்து கொள்வதை விட, டோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா? என்ற கேள்வி தான் ஒவ்வொரு ரசிகரிடமும் எழுந்துள்ளது.

    எந்த ஊரில் விளையாடினாலும் சிஎஸ்கே ரசிகர்கள் அதிகமாக காணப்படுகின்றனர். இவை அனைத்தும் டோனிக்காக என்பது மிகையாகாது. சிஎஸ்கே தோல்வியடைந்தாலும் பரவாயில்லை. டோனி பேட்டிங் செய்தால் மட்டும் போதும் என்ற வகையில் ரசிகர்கள் மைதானத்தில் ஆர்ப்பரிக்கின்றனர்.

    நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே தோல்வியை தழுவியது. ஆனால் கடைசியில் டோனி அடித்த சிக்சரால் அந்த போட்டியில் சிஎஸ்கே அணி வென்றதா அல்லது டெல்லி அணி வென்றதா என்ற கேள்வி எழுப்பும் வகையில் சிஎஸ்கே ரசிகர்கள் டோனியை கொண்டாடி தீர்த்தனர்.

    இதுமட்டுமல்லாமல் டோனியின் புகைப்படம், வீடியோ என எது கிடைத்தாலும் அது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி விடுகிறது. நேற்றைய போட்டியில் கூட ரசிகர் ஒருவர் மைதானத்துக்குள் அத்துமீறி நுழைந்து டோனியின் காலில் விழுந்து சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இப்படி டோனி நின்றாலும் நடந்தாலும் அதனை சிஎஸ்கே ரசிகர்கள் கொண்டாகி வருகின்றனர்.

    அந்த வகையில் சிஎஸ்கே அணி அதிகாரப்பூர்வ சமூக வலைதளத்தில் டோனி குறித்து நெகிழ்ச்சி பதிவு வெளியிட்டுள்ளது. அந்த வாசகம் டோனிக்கு 100 சதவீதம் பொறுத்தமாக இருக்கிறது என ரசிகர்களை அதனை கொண்டாடி வருகின்றனர்.

    அதில் வயது முதிர்ந்த போதிலும்..

    வலிகள் மிகுந்த போதிலும்..

    வலிமை குறைந்த போதிலும்..

    வீரன் வாள் தரிப்பதை நிறுத்துவதில்லை!

    என பதிவிட்டிருந்தது.

    இதற்கு முன்பாக சிம்பு நடிப்பில் வெளியான பத்து தல என்ற படத்தில் நீ சிங்கம் தான் என்ற பாடல் பத்து தல சிம்புவை விட தல டோனிக்கே உரியதாக ஆகிவிட்டது என்பது போல் ரசிகர்கள் அதனை கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

    நாளை நடைபெறும் 61-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சிஎஸ்கே எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் சென்னையில் நடைபெறுகிறது. இதையடுத்து சிஎஸ்கே தனது கடைசி போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. இந்த 68-வது லீக் போட்டி பெங்களூருவில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த 2 போட்டியிலும் தோல்வி அடைந்தால் சிஎஸ்கே பிளே ஆஃப் வாய்ப்பை இழக்கும். டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் எஞ்சிய 2 போட்டிகளில் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் வாய்ப்பு பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டோனிக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவரால் நீண்ட நேரம் பேட்டிங் செய்ய முடியாது.
    • அப்படி செய்தால், அவரால் விளையாடவே முடியாத சூழல் உருவாகலாம்.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக திகழ்ந்த எம்.எஸ். டோனி, கேப்டன் பதவியை ருதுராஜ் கெய்க்வாட்டிம் ஒப்படைத்து, அவரை வழிநடத்தி வருவதுடன் பேட்டிங்கில் இறுதிக் கட்டத்தில் களம் இறங்கி விளையாடி வருகிறார்.

    கடைசி ஓவர் அல்லது அதற்கு முந்தைய ஓவரில் களம் இறங்குகிறார். அவர் களம் இறங்கினால் சிக்ஸ் நிச்சயம் என்ற அளவிற்கு சந்திக்கும் பந்துகளை பவுண்டரி லைனுக்கு வெளியே பறக்க விடுகிறார். இதனால் அவர் முன்னதாக ஏன் களம் இறக்கப்படுவதில்லை? என்ற விமர்சனம் எழுந்த வண்ணம் உள்ளது. அவர் முன்னதாக களம் இறங்கினால் உடனே அவுட்டாகிவிடுவார் என்ற எதிர் விமர்சனமும் வைக்கப்படுகிறது.

    இந்த நிலையில் எம்.எஸ். டோனி ஏன் கடைசி நேரத்தில் பேட்டிங் செய்ய வருகிறார் என்பது குறித்து சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் பிளமிங் விளக்கம் அளித்துள்ளார்.

    இது தொடர்பாக பிளமிங்க் கூறியதாவது:-

    டோனிக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவரால் நீண்ட நேரம் பேட்டிங் செய்ய முடியாது. அப்படி செய்தால், அவரால் விளையாடவே முடியாத சூழல் உருவாகலாம். அதனால்தான், போட்டியில் 2-4 ஓவர்கள் பேட்டிங் மற்றும் முழுவதுமாக கீப்பிங் செய்து புதிய கேப்டனுக்கு அறிவுரைகள் வழங்கி வருகிறார். அதைத் தொடர வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்.

    டோனிக்கு மாற்றாக வேறொரு கீப்பர் அணியில் உள்ளார். ஆனால் அவர் டோனி ஆகிவிட முடியாது. 9-வது இடத்தில் டோனி களமிறங்குகிறார் என்பதாலேயே அவரால் போட்டியில் தாக்கம் ஏற்படுத்த முடியாது என நினைத்து விடாதீர்கள்.

    இவ்வாறு பிளமிங் தெரிவித்துள்ளார்.

    • ரசிகர்கள் அனைவரும் டோனியை காண வருகின்றனர்.
    • நான் என்ன சொல்ல முடியும். எல்லோரும் அவரை விரும்புகின்றனர்.

    ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 168 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 139 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் சென்னை 28 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

    இந்த போட்டி முடிந்த பிறகு ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பஞ்சாப் அணியின் உரிமையாளரான ப்ரீத்தி ஜிந்தா பதில் அளித்துள்ளார். அதில் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் டோனியை புகழ்ந்து பேசியுள்ளார்.

    அதில், உங்களின் சொந்த மைதாங்களில் ரசிகர்களை வரவைப்பதற்காக ஏதாவது செய்ய வேண்டும். ஏனெனில் நேற்றைய ஆட்டத்தில் தரம்சாலா மைதானம் முழுவதும் மஞ்சள் நிற ஜெர்சிகள்தான் நிறைந்திருந்தது என ரசிகர் ஒருவர் X தளத்தில் கேள்வி எழுப்பினார்.

    அதற்கு ப்ரீத்தி ஜிந்தா கூறியதாவது:- ரசிகர்கள் அனைவரும் டோனியை காண வருகின்றனர். நான் என்ன சொல்ல முடியும். எல்லோரும் அவரை விரும்புகின்றனர்.

    இவ்வாறு கூறினார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • 9-வது இடத்தில் விளையாடுவதற்கு பதிலாக பேசாமல் டோனி பேட்டிங் செய்ய வராமலேயே இருக்கலாம்.
    • அவருக்கு பதிலாக பிளேயிங் லெவனில் ஒரு வேகப்பந்து வீச்சாளரை தேர்வு செய்வது அணிக்கு நன்மையை கொடுக்கும்.

    தர்மசாலா:

    ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் அடித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜடேஜா 43 ரன்கள் விளாசினார்.

    இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 139 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. சென்னை தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

    முன்னதாக இந்த போட்டியில் சென்னை அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ். தோனி தம்முடைய கெரியரிலேயே முதல் முறையாக 9-வது பேட்ஸ்மேனாக களமிறங்கினார். அப்போது ஹர்ஷல் படேல் வீசிய முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டான அவர் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தார்.

    இந்நிலையில் 9-வது இடத்தில் விளையாடுவதற்கு பதிலாக பேசாமல் டோனி பேட்டிங் செய்ய வராமலேயே இருக்கலாம் என்று ஹர்பஜன் சிங் விமர்சித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஒருவேளை 9-வது இடத்தில் பேட்டிங் செய்ய விரும்பினால் டோனி விளையாடக் கூடாது. அவருக்கு பதிலாக பிளேயிங் லெவனில் ஒரு வேகப்பந்து வீச்சாளரை தேர்வு செய்வது அணிக்கு நன்மையை கொடுக்கும். அவருக்கு முன்பாக வந்த தாகூர் எப்போதும் டோனியை போல் ஷாட்டுகளை அடித்ததில்லை. எனவே டோனி ஏன் இந்த தவறை செய்தார் என்பதை என்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை.

    அவருடைய அனுமதியின்றி சி.எஸ்.கே. அணியில் எதுவும் நடக்காது. எனவே டோனியை கீழே இறக்கும் முடிவை வேறு யாராவது எடுத்திருப்பார் என்று சொன்னால் அதை என்னால் ஏற்க முடியாது. கடைசி நேரத்தில் வேகமாக ரன்கள் தேவைப்பட்டபோது கடந்த போட்டிகளில் அசத்திய டோனி பஞ்சாப்புக்கு எதிரான இப்போட்டியில் பின்தங்கியது ஆச்சரியமாக இருந்தது. இன்று (அதாவது நேற்று) சி.எஸ்.கே. வெற்றி பெற்றாலும் நான் டோனியை முன்கூட்டியே பேட்டிங் செய்ய அழைப்பேன். இதற்காக ரசிகர்கள் என்ன சொன்னாலும் நான் இதையே சொல்வேன்.

    என்று ஹர்பஜன் கூறினார்.

    • பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • இந்த போட்டியில் சிஎஸ்கே வீரர் டோனி முதல் பந்தில் ஆட்டமிழந்தார்.

    ஐபிஎல் தொடரின் 53-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டி தரம்சாலாவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட்- ரகானே களமிறங்கினர்.

    இதில் ரகானே 9 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் கெய்க்வாட்டுடன் இணைந்த டேரில் மிட்செல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பின்னர் 32 ரன்களில் ருதுராஜ் கெய்க்வாட்டும், ஷிவம் துபே கோல்டன் டக் அவுட் முறையில் ராகுல் சஹாரின் முதல் ஓவரிலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

    அவர்களை தொடர்ந்து 30 ரன்களில் டேரில் மிட்செல்லும் அடுத்து வந்த மொயீன் அலி 17, சாண்ட்னர் 11, ஷர்துல் தாக்கூர் 17 என விக்கெட்டை இழந்தனர். அந்த நேரத்தில் ரசிகர்கள் முழக்கத்தில் மிகுந்த ஆரவாரத்துடன் டோனி களமிறங்கினார். ஆனால் யாரும் எதிர்பாராத விதத்தில் டோனி கோல்டன் டக் அவுட் முறையில் வெளியேறினார்.

    இதனால் மைதானமே சற்று அமைதியாக காட்சியளித்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எக்ஸ் தளத்தில் டக் அவுட் என்ற ஹேஸ்டேக் டிரெண்டாகி வருகிறது.

    இந்த போட்டியில் சிஎஸ்கே அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பழி தீர்த்தது.

    • சென்னை அணியில் துபே மற்றும் டோனி 0 ரன்னில் ஆட்டமிழந்தனர்.
    • பஞ்சாப் தரப்பில் ராகுல் சாஹர், ஹர்சல் படேல் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் கடைசி கட்டத்தை எட்டியுள்ளன. இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், முதலாவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற அணி பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி சென்னையின் தொடக்க வீரர்களாக ருதுராஜ்- ரகானே களமிறங்கினர். ரகானே 9 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த டெரில் மிட்செல் ருதுராஜூடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர். 32 ரன்னில் ருதுராஜ் அவுட் ஆனார். அடுத்து வந்த துபே கோல்டன் டக் அவுட் முறையில் வெளியேறினார்.

    அடுத்த சிறிது நேரத்தில் மிட்செல் 30 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். மொயின் அலி 17, சாட்னர் 11, ஷர்துல் தாகூர் 17, டோனி 0, என ஆட்டமிழந்தனர். இறுதி அதிரடி காட்டிய ஜடேஜா 43 ரன்கள் குவித்து அவுட் ஆனார்.

    இறுதியில் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 167 ரன்கள் குவித்தது. பஞ்சாப் தரப்பில் ராகுல் சாஹர், ஹர்சல் படேல் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    • ஷிவம் துபே ரன் ஏதும் அடிக்காமல் அவுட் ஆனார்.
    • எம்.எஸ். டோனி 18 ஆவது ஓவரில் களமிறங்கினார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

    சென்னை அணிக்கு துவக்க வீரர்களான கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். இவருடன் களமிறங்கிய ரஹானே 29 ரன்களை குவித்தார். அடுத்து வந்த ஷிவம் துபே ரன் ஏதும் அடிக்காமல் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.

    ரவீந்திர ஜடேஜா 2 ரன்களில் ஆட்டமிழக்க, இம்பேக்ட் வீரராக களமிறங்கிய ரிஸ்வி 21 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மொயின் அலி 15 ரன்களில் ஆட்டமிழக்க எம்.எஸ். டோனி 18 ஆவது ஓவரில் களமிறங்கினார்.

    இன்றைய போட்டியில் 11 பந்துகளை எதிர்கொண்ட எம்.எஸ். டோனி 14 ரன்களை குவித்தார். இதில் ஒரு புண்டரி, ஒரு சிக்சர் அடங்கும். கடைசி ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட எம்.எஸ். டோனி இரண்டு ரன்களை ஓட முயற்சித்த போது ரன் அவுட் ஆனார். இதன் மூலம் நடப்பு ஐ.பி.எல். தொடரில் எம்.எஸ். டோனி முதல் முறையாக தனது விக்கெட்டை இழந்துள்ளார்.

    இதன் காரணமாக சென்னை அணி போட்டி முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை குவித்தது. பஞ்சாப் சார்பில் ஹர்பிரீத் பிரார் மற்றும் ராகுல் சாஹர் தலா 2 விக்கெட்டுகளையும், ரபாடா, அர்ஷ்தீப் சிங் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    ×