search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளம்பெண்கள்"

    • கஞ்சா முதல் கொக்கைன் வரை போதை பொருட்கள் நடமாட்டம் அதிகரிப்பதே இதற்கு முக்கிய காரணம் என்கிறார்கள் போலீசார்.
    • சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை கஞ்சா போதை அடிமைப்படுத்தி வைத்துள்ளது.

    சென்னை:

    தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு தொழில் விஷயமாக வெளி நாடுகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வருகை தருகிறார்கள். இதுபோன்று வருகை தருபவர்களில் பெரும்பாலானோர் பல நாட்கள் வரையில் தங்கி இருப்பார்கள். அதுபோன்ற நேரங்களில் போதை பழக்கத்துக்கு அடிமையானவர்கள் இரவு நேர மதுபான விடுதிகளை நாடிச் செல்வார்கள்.

    சென்னையில் போதை பொருட்களை பயன்படுத்துவதற்காகவே இரவு நேர நடன விடுதிகள் பல செயல்படுகின்றன. இந்த விடுதியில் இளம் வாலிபர்களுக்கு இணையாக இளம் பெண்கள் பலரும் போட்டிப் போட்டுக் கொண்டு போதையில் மிதப்பது நாளுக்கு நாள் அதிகரிக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

    கஞ்சா முதல் கொக்கைன் வரை போதை பொருட்கள் நடமாட்டம் அதிகரிப்பதே இதற்கு முக்கிய காரணம் என்கிறார்கள் போலீசார்.

    வெளிநாடுகளில் இருந்து கொக்கைன் உள்ளிட்ட போதை பொருட்கள் விமானம் மூலமாக கடத்தி வரப்பட்டு சத்தமில்லாமல் சப்ளை செய்யப்பட்டு வருவதும் தெரிய வந்துள்ளது. சென்னை விமான நிலையத்தில் ரூ.28 கோடி மதிப்பிலான கொக்கைன் பிடிபட்டது.

    தொடர்பாக அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது அவர் அதிர்ச்சி அளிக்கும் வகையில் பல்வேறு தகவல்களை தெரிவித்தார். 'பப்' என்று அழைக்கப்படும் இரவு நேர விடுதிகளில் 'கொக்கைன்' பயன்படுத்தப்படுகிறது. சென்னையில் இது சர்வ சாதாரணமாகிவிட்டது. குறிப்பாக இளம் பெண்களிடம் கொக்கைன் பயன் படுத்தும் பழக்கம் அவர்களது ஆண் நண்பர்களிடமிருந்தே தொற்றிக் கொண்டுள்ளது. இது போன்று போதை பழக்கத்துக்கு அடிமையாகும் பெண்களால் அதில் இருந்து எளிதாக மீண்டு வர முடிவது இல்லை.

    சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை கஞ்சா போதை அடிமைப்படுத்தி வைத்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்படும் கஞ்சா பொட்டலங்கள் சென்னை மாநகர் முழுவதும் ஏதாவது ஒரு வழியில் மாணவர்களையும், இளம் வயதுடையவர்களையும் சென்றடைந்து விடுகிறது. உணவு டெலிவரி செய்பவர்களில் சிலர் கஞ்சா பொட்டலங்களை கடத்தி விற்பனை செய்தும் வருகிறார்கள். செல்போனில் தொடர்பு கொண்டு பேசியும் பலர் விற்பனை செய்கிறார்கள். சென்னை மாநகரில் குட்கா போன்ற பொருட்களை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்த போதிலும் கடைகளில் அது தாராளமாக கிடைத்து கொண்டு தான் இருக்கிறது. இப்படி சென்னையில் போதை பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க முடியாமல் அதிகாரிகள் தவிக்கும் நிலையே நீடித்து வருகிறது.

    • தன்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால் நிர்வாண வீடியோவை வலைதளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டினார்.
    • பெண்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவையைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர் கிளப் அவுஸ் என்ற டேட்டிங்கை பயன்படுத்தி வந்தார். இதன்மூலம் சென்னை திருவொற்றியூரை சேர்ந்த ஏ.சி. மெக்கானிக் திலீப் குமார் என்பவர் பழக்கமானார்.

    இது நாளடைவில் காதலாக மாறியது. திலீப் குமாரின் வற்புறுத்தலுக்கு இணங்க அந்த பெண் வீடியோ காலில் நிர்வாணமாக தோன்றினார். நாளடைவில் தீலிப்குமாரின் நடவடிக்கை சரியில்லாததால் அந்த பெண் பழகு வதை நிறுத்திக்கொண்டார்.

    இதனால் ஆத்திரமடைந்த திலீப்குமார் தன்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால் நிர்வாண வீடியோவை வலைதளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டினார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் புதுவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து திலீப்குமாரை தேடி வந்தனர். வேலைக்காக துபாய் சென்றிருந்த திலீப்குமாரை இந்தியாவுக்கு வரவழைத்து அவரை கைது செய்தனர்.

    இது குறித்து சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகேயன், கீர்த்தி ஆகியோர் வெளியிட்டுள்ள எச்சரிக்கை பதிவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 8 மாதங்களில் 15-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்களில் கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் புகார் கொடுத்த பெண்ணிற்கு தெரிந்தவராகவோ அல்லது முன்னாள் காதலர், உறவினராகவோ இருக்கின்றனர்.

    எனவே குறிப்பாக பெண்கள் யாரையும் நம்பி தங்களுடைய தனிப்பட்ட புகைப்படங்களையோ வீடியோக்களையும் எக்காரணம் கொண்டும் பகிர வேண்டாம்.

    மேலும் ஆண் நண்பர்களோ காதலர்கள் அல்லது உங்களுக்கு பழக்கப்பட்டவர்களோ அவர்கள் கேட்பதற்கு இணங்க வீடியோ காலில் பேச வேண்டாம்.

    பெண்களை மிரட்ட பயன்படுத்தப்படுகின்ற புகைப்படங்கள் பாதிக்கப்பட்ட பெண்களாகவே எடுக்கப்பட்ட அல்லது பகிரப்பட்ட புகைப்படங்களாக தான் உள்ளது.

    எனவே பெண்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    • கமுதியில் வளர் இளம்பெண்களுக்கு கல்வி கருத்தரங்கு நடந்தது.
    • மாணவிகள் தங்களுடைய சந்தேகங்களை கேட்டு தெரிந்துகொண்டனர்.

    பசும்பொன்

    கமுதி ஷத்திரிய நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் வளர் இளம்பெண்களுக்கான கல்வி கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது. பள்ளியின் நிர்வாக குழு தலைவர் சண்முகராஜ் பாண்டியன், செயலர் சங்கர் ஆகியோர் தலைமை தாங்கினர். பொருளாளர் சரவணன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை சிந்துமதி வரவேற்று பேசினார். கமுதி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் விஜயா, டாக்டர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    கூட்டத்தில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட அலுவலர் முருகேசன், ஆலோசகர் ஆயிஷாகனி, ஆய்வு கூட நுட்புனர் நாகேஸ்வரன், கணினி மதிப்பீட்டு உதவியாளர் ராணி, மூத்த செவிலியர் தனலெட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு வளர் இளம் பருவத்தினருக்கான பிரச்சினைகளும் அதற்குரிய தீர்வுகளும் குறித்து மாணவிகளுக்கு விரிவாக எடுத்துரைத்தனர். இதில் மாணவிகள் தங்களுடைய சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டனர்.

    • காதல் விவகாரம் இளம்பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • இளம்பெண்ணின் பெற்றோர் கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்தனர்.

    கோவை,

    கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள சென்னியாண்டவர் கோவில் வீதியை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர் தெக்கலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இவருக்கு கும்பகோணத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசியும், நேரில் சந்தித்தும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் இளம்பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தங்களை பிரித்து விடுவார்களோ என்ற பயத்தில் இளம்பெண் இருந்தார்.

    சம்பவத்தன்று அவர் உடல்நிலை சரி இல்லை என கூறி வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இளம்பெண் தனது காதலனுடன் ஓட்டம் பிடித்தார். மகள் வீட்டில் இல்லாதது கண்டு அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

    அவர்கள் இளம்பெண்ணை அக்கம் பக்கத்தில் தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து இளம்பெண்ணின் பெற்றோர் கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடியை சேர்ந்தவர் 23 வயது பட்டதாரி இளம்பெண். இவர் உடுமலையை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த இளம்பெண் மாயமானார். அவரை அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

    இது குறித்து இளம்பெண்ணின் பெற்றோர் கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இளம்பெண் அவரது காதலனுடன் சென்றது தெரியவந்தது. போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.

    • இளம்பெண்கள் மாயமானார்கள்.
    • பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    மதுரை

    மதுரை பழங்காநத்தம் திருவள்ளுவர் நகர் 6-வது தெருவை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவரது மகள் அபிநயா. இவர் சம்பவத்த ன்று வீட்டில் இருந்து திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் சுப்பிரமணியபுரம் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர். பழங்காநத்தம் பசும்பொன் நகர் ஜூவா தெருவை சேர்ந்தவர் சண்முகலட்சுமி. இவரது மகள் சங்கீதா. சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. தோழி கள், உறவினர்கள் வீட்டில் விசாரித்தும் பலனில்லை.

    இது தொடர்பாக சண்முகலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை கரிமேடு பொன்னகரம் பிராட்வே பகுதியை சேர்ந்தவர் செந்தில். இவரது மகள் சுவேதா(வயது20). பட்டதாரியான இவர் வேலைக்கு செல்லாமல் பெற்றோருக்கு உதவியாக இருந்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த சுவேதா திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து அவரது தந்தை கரிமேடு போலீசில் புகார் செய்தார். அதில் பெத்தானியத்தைபுரத்தை சேர்்ந்த சூர்யா என்பவர் மகளை அழைத்து சென்றதாக குறிப்பிட்டி ருந்தார். இதன் அடிப்ப டையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • இளம்பெண்கள் உள்பட 4 பேர் மாயமானார்கள்.
    • பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    மதுரை

    மதுரை வெளிச்சநத்தம் வி.மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது பெண் புதூர் பகுதியில் உள்ள ஒரு மையத்தில் டைப்ரைட்டிங் பயின்று வருகிறார்.

    சம்ப வத்தன்று டைப்ரைட்டிங் மையத்திற்கு செல்வதாக கூறிச் சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டு பிடிக்க முடிய வில்லை.

    இது குறித்த புகாரின் பேரில் சத்திரப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்

    வாடிப்பட்டி அருகே உள்ள பெரிய ஊர்சேரியை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி பூமா (30). சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்க ளில் தேடி பார்த்தும் கண்டு பிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து அலங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் ராஜா புகார் செய்தார்.அலங்காநல்லூர் அருகே உள்ள மேலப்பனங்காடி வாகைகுளத்தை சேர்ந்தவர் ஆனந்தகுமார். சம்பவத்தன்று வேலைக்கு சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து ஆனந்த குமாரின் மனைவி ரதி அலங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.மதுரை குலமங்கலம் யோகநரசிம்மன் நகரை சேர்ந்தவர் சரவணகுமார். இவரது மகள் கீர்த்திகா (19). சம்பவத்தன்று வெளியே சென்று வருவதாக கூறிச் சென்ற இவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து சரவண குமார் மகளை கண்டுபிடித்து தருமாறு அலங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகின்றனர்.

    • உள்ளே வந்த ஒரு வாலிபர் வடிவேல் பாணியில் ‘பெண்ணின் கையை பிடிச்சு இழுத்திட்டானா...? யாருடா அது? என்று சவுண்டுவிட்டார்.
    • போலீசார் சுமார் அரைமணிநேர களேபரத்துக்கு பிறகு 3 பேரையும் வேனில் ஏற்றி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

    திருவல்லிக்கேணி போலீஸ் நிலையம்... எப்படியோ எந்த பிரச்சினையும் இல்லாமல் இன்றைய பொழுது ஓடிவிட்டது என்ற நினைப்போடு காவல் பணிக்கு சென்றிருந்த போலீசார் ஒவ்வொருவராக உள்ளே நுழைந்ததும் அணிந்திருந்த தொப்பியை கழற்றி மேஜை மீது வைத்தபடி அப்பாடா... என்று அவரவர் இருக்கைகளில் அமர்ந்தார்கள்.

    தங்கள் மேல் அதிகாரிகள் மற்றும் சக போலீசாரின் களைப்பை உணர்ந்து அங்கு நின்று கொண்டிருந்த போலீஸ்காரர் சார் டீ வாங்கிவர சொல்லட்டுமா? என்றதும் வேணாம்பா, இனி வீட்டுக்கு போக வேண்டியதுதானே. இரவு ரோந்து பணியில் யார் யார் இருக்கிறார்கள் என்ற விவரத்தை கேட்டுக் கொண்டு இருந்தபோது, வெளியே இருந்து ஒரு சிலர் பதட்டத்துடன் ஓடி வந்தார்கள்.

    சார்... சார்.... வாலாஜா சாலையில் சிலர் வம்பிழுத்து ரகளை செய்துகொண்டு இருக்கிறார்கள். பஸ்களை மறித்து வைத்திருக்கிறார்கள். வாகனங்கள் செல்ல முடியவில்லை என்றதும், ஆரம்பிச்சுட்டானுங்களா... நிம்மதியாக ஒரு நாளும் இருக்க விட மாட்டாங்களெ... என்ற படி கழற்றி வைத்த தொப்பிகளை எடுத்து மீண்டும் தலையில் மாட்டிக் கொண்டு மின்னல் வேகத்தில் ஓடினார்கள்.

    அங்கு சுடிதாரில் 3 இளம்பெண்கள் இருந்தனர். ஒருவர் நடுரோட்டில் சாவகாசமாக அமர்ந்து இருந்தார். மற்ற 2 பெண்களும் பஸ்சுக்கு அடியில் படுத்துக்கொண்டனர். பஸ், வாகனங்கள் அனைத்தும் நடுவழியில் நின்றது. போலீசாரை பார்த்ததும் ரோட்டில் அமர்ந்து இருந்த பெண் திடுதிப்பென்று எழுந்து ஓடும் போது கால்கள் தடுமாறியதை பார்த்ததும் ஓ... சங்கதி இதுதானா என்று போலீசார் தலையில் அடித்துக்கொண்டனர்.

    ஓடி சென்ற அந்த பெண் அங்கு நின்றிருந்த வாகனங்களுக்கு முன்பு சென்று ம்கூம்ம்... எந்த வாகனமும் நகரக்கூடாது என்று மறித்துக்கொண்டிருந்தார். ஏம்மா... என்னதான் உங்கள் பிரச்சினை? என்று விசாரிக்க நினைத்த போலீசார் 3 பெண்களும் புல் மூடில் இருப்பதை தெரிந்து கொண்டனர்.

    அங்கிருந்த பெண் போலீசார் அந்த பெண்களை இழுத்து அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால் அவர்களைவிட அந்த போதையிலும் அந்த பெண்கள் திடகாத்திரமாக இருந்தார்கள். உள்ளே ஏற்றி இருந்த சரக்கு செய்த வேலை. சரக்கு வாகனத்தை அவர்கள் பற்றிக் கொண்டதால் பெண்ணை பெண் போலீசாரால் அப்புறப்படுத்த முடியவில்லை.

    உடனே அங்கிருந்த ஆண் போலீஸ் ஓடிவந்து அந்த பெண்ணை கையை பிடித்து இழுத்தார். அவ்வளவு தான் ஒரு பெண்ணின் கையை பிடித்து ஒரு ஆண் இழுக்கலாமா? என்று உரிமை போராட்டத்தில் இறங்கிவிட்டார்.

    நடுரோட்டில் ஏதாவது பிரச்சினைகள் நடந்தால் வழிபோக்கர்களும் உள்ளே நுழைந்து ஏதாவது செய்வார்கள். அப்படித்தான் உள்ளே வந்த ஒரு வாலிபர் வடிவேல் பாணியில் 'பெண்ணின் கையை பிடிச்சு இழுத்திட்டானா...? யாருடா அது? என்று சவுண்டுவிட்டார்.

    அவ்வளவு தான்... ஏற்கனவே டென்ஷனில் இருந்த பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்த வாலிபரின் கன்னத்தில் பளார் என்று ஒன்று விட்டதும் 'அம்மா... என்று வடிவேல் பாணியிலேயே கன்னத்தை தடவியபடி அங்கிருந்து நகர்ந்தார்.

    செய்வதறியாமல் தவித்த போலீசார் சுமார் அரைமணிநேர களேபரத்துக்கு பிறகு 3 பேரையும் வேனில் ஏற்றி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

    3 பேரும் எந்த பதிலும் சொல்லும் நிலையில் அப்போது இல்லை. போதை தலைக் கேறி தன்னிலை மறந்தவர்களாக இருந்தார்கள். இனி என்ன செய்வது என்று அவர்களின் போதை தெளியும் வரை போலீசாரும் கண்விழித்து காத்திருந்தார்கள்.

    இன்று அதிகாலையில் ஓரளவு போதை தெளிந்த நிலையில் அவர்களிடம் விசாரித்த போது 3 பேரும் கண்ணகி நகரை சேர்ந்த கண்ணகிகள் என்பது தெரியவந்தது. திருவல்லிக்கேணியில் நேற்று நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் சமையல் கலைஞர்களிடம் வரவேற்பு பெண்களுக்கான பணிகளுக்காக வந்திருக்கிறார்கள். பணி முடிந்ததும் தங்கள் சீருடைகளை கலைந்துவிட்டு நாகரீக உடைக்கு மாறி இருக்கிறார்கள்.

    அதன்பிறகு தான் கொஞ்சம் சுதி ஏற்றிக் கொள்ளுவோம் என்ற முடிவுக்கு வந்து சரக்கு போட்டிருக்கிறார்கள். விவரங்களை உணர்ந்து கொண்ட போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துவிட்டு பெற்றோர்களை வரவழைத்து புத்திமதி சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

    குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு என்பார்கள். அதேபோல் என்ன தான் புத்திமதி சொன்னாலும் இவர்கள் காதில் ஏறுமா என்பது சந்தேகமே.

    போலீசாரின் பிரம்பு அந்த பெண்களின் கால்களில் பட்டையான தழும்பை உருவாக்கி இருந்தால் கொஞ்சம் யோசிப்பார்கள். இதில் எந்த உரிமை மீறலும் இல்லை. அவர்களை திருத்துவதற்கான வழிதான் என்பதை எல்லோரும் உணர வேண்டும்.

    • போலீஸ்காரர்-இளம்பெண்கள் உள்பட 6 பேர் மாயமானார்கள்.
    • இதுகுறித்த புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் மாணவனை தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் ஆயுதப்படை யில் காவலராக பணி புரிபவர் விவேக் (வயது 30). இவரது மனைவி கற்குவேலாயி (29). பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்ட இவர்கள் சூலக்கரை வ.உ.சி. நகர் பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

    விவேக் தனது செல்போ னில் பல பெண்களுடன் பேசி வந்துள்ளார். இதனை கற்குவேலாயி கண்டித்துள்ளார். ஆனால் விவேக் அதனை கண்டு கொள்ளவில்லை. இதனால் ஆயுதப்படை அலுவலகத்திற்கு நேரில் சென்று கற்குவேலாயி புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் விவேக் திடீரென மாயமானார். இதுகுறித்து அளித்த புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி அய்யனார் காலனியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகள் பாண்டிச்செல்வி (23). கவரிங் நகை கடையில் வேலை பார்த்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டியை சேர்ந்தவர் சுப்புலட்சுமி(45). இவரது மகள் அஸ்வினி (18). பிளஸ்-2 படித்து விட்டு பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று தண்ணீர் எடுத்து வருவதாக கூறிச்சென்றவர் மாயமானார். இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    திருத்தங்கல் எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்தவர் பாண்டீஸ்வரி (23). இவருக்கு சக்தி அய்யனார் என்பவருடன் திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர். கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

    சம்பவத்தன்று குழந்தை களுடன் வெளியே சென்று வருவதாக கூறிச்சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தாய் வீரசெல்வி அளித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசியை சேர்ந்தவர் யாகப்பன்(49). இவரது 17 வயது மகள் சிவகாசி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் ஏற்கனவே மாய மாகி அதன்பிறகு கள்ளக்குறிச்சி யில் இருந்து போலீசார் மீட்டு வந்தனர்.

    இந்த நிலையில் சம்ப வத்தன்று வீட்டில் இருந்தவர் மாயமாகி விட்டார். எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் லட்சுமியாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜமன்னார். இவரது மகள் ரமாதேவி(22). விருதுநகரில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து ராஜமன்னார் வன்னியம்பட்டி போலீசில் அளித்துள்ள புகாரில், பொட்டல்பட்டியை சேர்ந்த அஜித்குமார் என்பவர் தனது மகளை திருமணம் செய்து கொண்டதாக தகவல் வந்துள்ளதாகவும், இதுபற்றி விசாரித்து மகளை மீட்டுத்தர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மதுரை வலையபட்டி கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் மகாலட்சுமி(38). இவரது 17 வயது மகள் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    இவர் அதே பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரை காதலித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பிரச்சினை ஏற்பட்டு பெருங்குடி போலீசார் இருவரையும் எச்சரித்து அனுப்பினர்.

    இதையடுத்து மகளை அருப்புக்கோட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் அவர் அங்கிருந்து மாயமாகி விட்டார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அருப்புக்கோட்டை டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர் சூலக்கரை மேடு பகுதியை சேர்ந்தவர் மலர்கொடி.

    இவரது மகன் சிவசந்தோஷ் (12). 6ம் வகுப்பு படிக்கிறான். சம்பவத்தன்று வீட்டில் இருந்தவர் மாயமாகி விட்டான். எங்கு சென்றான்? என தெரியவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் மாணவனை தேடி வருகின்றனர்.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இளம்பெண்கள் உள்பட 4 பேர் மாயமாகினர்.
    • சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    விருதுநகர்,

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தனமாரி. இவரது மகள் அழகு பத்மா (வயது 27). இவருக்கு 2 வருடங்களுக்கு முன்பு கனகராஜ் என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு வயதில் கவி ஜெகத்ரா மகள் உள்ளார்.

    இந்த நிலையில் கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அழகு பத்மா தாய் வீட்டுக்கு வந்து விட்டார். சம்பவத்தன்று வெளியே சென்று வருவதாக கூறிச் சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் மம்சாபுரம் போலீஸ் நிலையத்தில் சந்தனமாரி புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அழகு பத்மாவை தேடி வருகின்றனர்.

    பட்டதாரி பெண்

    வத்திராயிருப்பு அருகே கூமாபட்டியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகள் துர்கா தேவி (வயது 23). இவர் பட்டப்படிப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்தார். சம்பவத்தன்று அத்தை மகளுடன் வெளியே சென்று வருவதாக கூறிச் சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. கூமாபட்டி போலீஸ் நிலையத்தில் மகளை கண்டு பிடித்து தருமாறு பெரியசாமி புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம் தாட்கோ காலனியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 33). கூலி வேலை செய்து வருகிறார். இவர் மனைவி மகாலட்சுமி மற்றும் 5 வயது மகள் குழலியுடன் திருச்செந்தூருக்கு பாதயாத்திரை சென்றுள்ளார். சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் ராஜபாளையத்திற்கு பேருந்தில் திரும்பி வந்துள்ளனர்.

    ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்திற்கு வந்தபோது பாத்ரூம் சென்ற மகாலட்சுமி திரும்பி வரவில்லை. தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. இதையடுத்து ராஜபாளை யம் வடக்கு போலீஸ் நிலையத்தில் கார்த்திக் புகார் அளித்தார். சப்- இன்ஸ்பெக்டர் செல்வ குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் அம்மன் சன்னதி தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் (17). இவர் கடந்த 15-ம் தேதி சொக்கநாதன் புதூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் மாயமானார். எங்கு சென்றார் என்று தெரியவில்லை.

    பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இவரது தந்தை வேலு சேத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • ராமநாதபுரத்தில் 3 இளம்பெண்கள் திடீரென மாயமானார்கள்.
    • ராமநாதபுரம் பஜார், மண்டபம் போலீசார் வழக்கு பதிவு செய்து இளம் பெண்களை தேடி வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் காட்டுப் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் தவமணி. ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அலுவலராக பணிபுரிந்து வருகிறார். தவமணியின் கணவர் இறந்து சுமார் 15 வருடங்கள் ஆகிறது. இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்தமகளுக்கு திருமணமாகி அவரது கணவருடன் வாழ்ந்து வருகிறார். இளைய மகள் ஜான்சிராணி(வயது20). கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு உடலில் தீக்காயம் ஏற்பட்டு அதனால் அவர் வெளியில் செல்லாமல் வீட்டிலே தாயாருடன் இருந்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று தவமணி வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு மாலை வீட்டிற்கு வந்த போது மகள் ஜான்சி ராணி மாயமாகி இருந்தார்.

    பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. தவமணி ராமநாதபுரம் பஜார் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.

    ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி. பட்டினத்தை சேர்ந்தவர் பஹ்ருதீன். மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மகள் இர்பானா (வயது20). சம்பவத்தன்று பஹ்ருதீன் மற்றும் அவரது மனைவியும் மருத்துவ சிகிச்சைக்கு திருச்சி சென்றனர். அப்போது இர்பானா மளிகை கடையை திறக்க செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார். ஆனால் வெகுநேரம் ஆகியும் கடையை திறக்காமல் மாயமானார். எங்கும் தேடியும் கிடைக்காததால் எஸ்.பி.பட்டினம் போலீஸ் நிலையத்தில் பஹ்ருதீன் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.

    மண்டபம் அருகே வேதாளை கிராமத்தைச் சேர்ந்தவர் மக்மூது. இவரது மகள் ஆயிஷத்துத்துல்பியா (வயது 20). இவர் நேற்று காலை திடீரென மாய மானார். மக்மூது அளித்த புகாரின் படி மண்டபம் போலீசார் வழக்கு பதிவு செய்து இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.

    • விருதுநகர் அருகே இளம்பெண்கள் உள்பட 3 பேர் மாயமாகினர்.
    • திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள பட்டம்புதூரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் பாண்டிச்செல்வி (வயது 22). நர்சிங் படிப்பு முடித்து விட்டு மில்லில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் வெளியே சென்றுவருவதாக கூறி சென்றவர் வீடு திரும்ப வில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    இதையடுத்து ராஜேந்திரன் அளித்த புகாரின்பேரில் சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருத்தங்கல் ஸ்ரீரெங்க நகர் பகுதியை சேர்ந்தவர் முத்துகணேசன். இவரது மகள் சித்ராதேவி (25). என்ஜினீயரிங் படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்துள்ளார். சம்ப வத்தன்று அருகில் உள்ள சகோதரி வீட்டுக்கு செல்வ தாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை.

    பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதையடுத்து முத்து கணேசன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருத்தங்கல் அருகே உள்ள செங்கமலநாச்சியார்புரம் பகுதியை சேர்ந்தவர் ஜீஸ் (34). தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இவரது சம்பளம் குறை வாக உள்ளதாக கூறி அவரது மனைவி ரஞ்சிதா (25) அடிக்கடி தகராறு செய்வாராம்.

    இந்த நிலை யில் சம்பவத்தன்று வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் சுவிட் ஆப் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரஞ்சிதா போலீசில் புகார் செய்தார்.

    இது குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புளியம்பட்டி- சத்தியமங்கலம் பகுதியில் இளம்பெண் மாயமான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர், கே. மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜ். இவரது மனைவி ஜோதிமணி (35). கணவன் -மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக ஜோதிமணி செலம்பரகவுண்டன் புதூரில் அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் வீட்டிலிருந்த ஜோதிமணி திடீரென மாயமாகிவிட்டார்.

    அவரை பல்வேறு இடங்களில் அவரது உறவினர்கள் தேடினர். எனினும் அவர் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது உறவினர்கள் புளியம்பட்டி போலீசில் புகார் செய்தனர்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான ஜோதிமணியை தேடி வருகின்றனர். இதைப்போல் சத்தியமங்கலம், திருவள்ளுவர் நகர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் குமார். அவரது மனைவி நீலா (38). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் நீலா தாளவாடியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு செல்வதாக சம்பவத்தன்று கூறிவிட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு வரவில்லை.

    இதனால் அவரது உறவினர்கள் நீலாவை பல்வேறு இடங்களில் தேடினர் எனினும் அவர் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. இதை அடுத்து அவரது உறவினர்கள் சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான நீலாவை தேடி வருகின்றனர்.

    ×