search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Summer"

    • மற்ற 2 குழுக்கள் நெல்லை மாநகர் பகுதிகளிலும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
    • போலீசார் மற்றும் தீயணைப்பு துறையில் பேரிடர் பயிற்சி பெற்ற வீரர்களும் தயார்படுத்தப் பட்டுள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

    இதனை தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு அருவி, மாஞ்சோலை, களக்காடு தலையணை உள்ளிட்ட பிரதான சுற்றுலா தளங்களுக்கு செல்வதற்கும், நீர் நிலைகளில் பொது மக்கள் குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இன்னும் சில நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மழை வெள்ள பாதிப்படையும் பகுதிகளில் மீட்பு பணிகளில் ஈடுபடுவதற்காக தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த உதவி கமிஷனர் முத்துகிருஷ்ணன் தலைமையில் 90 பேர் கொண்ட குழுவினர் நெல்லை வர வழைக்கப்பட்டுள்ளனர்.

    அதிவிரைவாக செல்லும் பைபர் படகுகள், வெள்ள பாதிப்புகளில் சிக்கி உள்ளவர்களை கண்காணிக்க அதிநவீன கேமராக்கள், மரங்கள் அறுவை எந்திரங்கள், ஜெனரேட்டர்கள், மருந்து உபகரணங்கள் என அதிநவீன உபகரணங்களுடன் வந்துள்ள மீட்பு படையினர் 3 குழுக்களாக பிரிக்கப்பட்டு கண்காணிப்பு பணியை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல் வழங்கி உள்ளது.

    மாவட்டத்தில் ஏதேனும் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டால் அங்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொள்ளும் விதமாக இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான இந்த குழு கண்காணித்து வருகிறது.

    இந்த குழுவின் செயல் பாடுகளை இன்று தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் உதவி கமிஷனர் முத்து கிருஷ்ணன் ஆய்வு செய்தார். தொடர்ந்து கடந்த ஆண்டுகளில் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளையும் அவர் பார்வையிட்டார்.

    அதன்படி நெல்லை மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகளை தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் ஆய்வு மேற்கொண்டு ஒரு குழுவை சேர்ந்த அதிகாரிகள் அனைத்து வகை உபகரணங்களுடன் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி அடிவாரத்திற்கும், மற்ற 2 குழுக்கள் நெல்லை மாநகர் பகுதிகளிலும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

    மாநகர் பகுதியில் உள்ள குழுவினர் பாதிப்பு குறித்த தகவல் கிடைக்கப்பெற்றால் உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. பேரிடர் கட்டுப்பாட்டு மைய உதவி எண்களும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளும் வகையில் மாவட்ட நிர்வாகத்தால் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் தவிர்த்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையில் பேரிடர் பயிற்சி பெற்ற வீரர்களும் தயார்படுத்தப் பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளும் வெள்ள பாதிப்பு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியை செய்து வருகின்றனர்.

    • ஹில்குரோவ் என்ற இடத்தில் தண்டவாளத்தில் பாறைகள் விழுந்தன.
    • நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    மேட்டுப்பாளையம்:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் பர்லியார் பகுதிகளில் நேற்றுமுன்தினம் இரவு பலத்த மழை கொட்டி தீர்த்தது.

    இந்த மழையால் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைரெயில் பாதையில் ஹில்குரோவ் என்ற இடத்தில் தண்டவாளத்தில் பாறைகள் விழுந்தன. இதனால் நேற்று மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையேயான மலைரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். தொடர்ந்து ரெயில்வே உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில், இருப்பு பாதை பிரிவு பொறியாளர், இளநிலை பொறியாளர் மற்றும் 20-க்கும் மேற்பட்ட ரெயில்வே தொழிலாளர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதனால் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று, நாளை ஆகிய 2 நாட்கள் மலைரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • சமையலுக்கு பீன்ஸ் வாங்குவதை இல்லத்தரசிகள் குறைத்து உள்ளனர்.
    • ஒரு கிலோ பீன்ஸ் ரூ200-க்கும், அவரைக்காய் ஒரு கிலோ ரூ.100-க்கும் விற்கப்படுகிறது.

    கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு இன்று 450 லாரிகளில் காய்கறி விற்பனைக்கு வந்தது.

    வரத்து குறைவால் பீன்ஸ், அவரைக்காய் விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது.

    மொத்த விற்பனையில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ200-க்கும், அவரைக்காய் ஒரு கிலோ ரூ.100-க்கும் விற்கப்படுகிறது. சில்லரை விற்பனை கடைகளில் பீன்ஸ் ரூ.250 வரை விற்கப்படுகிறது. இதனால் சமையலுக்கு பீன்ஸ் வாங்குவதை இல்லத்தரசிகள் குறைத்து உள்ளனர்.

    அதேபோல் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக விளைச்சல் பாதிப்பால் கத்தரிக்காய், பீர்க்கங்காய், முருங்கைக்காய், கொத்தவரங்காய், புடலங்காய், சவ்சவ் உள்ளிட்ட பச்சை காய்கறிகளின் விலையும் கடந்த வாரத்தை காட்டிலும் கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை அதிகரித்து உள்ளது.

    கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை விபரம் வருமாறு (கிலோவில்) :-

    உஜாலா கத்தரிக்காய்-ரூ.50, வரி கத்தரிக்காய்-ரூ.35, வெண்டைக்காய்-ரூ.35, பீன்ஸ்-ரூ.200, அவரைக்காய்-ரூ.100, ஊட்டி கேரட்-ரூ.45, பீட்ரூட்-ரூ.25, முள்ளங்கி-ரூ.30, நூக்கல்-ரூ.30, சவ்சவ்-ரூ.50, சுரக்காய்-ரூ.15, வெள்ளரிக்காய்-ரூ.25, முருங்கைக்காய்-ரூ.60, கோவக்காய்-ரூ.20, பாகற்காய்-ரூ.40, நைஸ் கொத்தவரங்காய்-ரூ.50, மாங்காய்-ரூ.25, பீர்க்கங்காய்-ரூ.50, புடலங்காய்-ரூ.50, தக்காளி-ரூ.22, நாசிக் வெங்காயம்-ரூ.26, சின்ன வெங்காயம்-ரூ.60, உருளைக்கிழங்கு-ரூ.26, பச்சை மிளகாய்-ரூ.60, இஞ்சி-ரூ.135.

    • மலைப்பாம்பு சமீபத்தில் பெய்த மழை வெள்ளத்தில் காடுகளில் இருந்து அடித்து வரப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
    • விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மலைப்பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அருகே குலையன்கரிசல் வடக்கு தெருவை சேர்ந்தவர் விவசாயி சுந்தரேச விஸ்வா. இவரது வீட்டில் இருந்த 5 கோழிகள் ஒன்றின் பின் ஒன்றாக காணாமல் போனது.

    இதனைத் தேடி அவரது வீட்டிற்கு கிழக்கு பகுதியில் உள்ள வாய்க்கால் கரை ஓரமாக சென்றுள்ளார். அப்போது வயல்வெளி பகுதியில் விலங்குகள் கால்நடைகள் நுழையாமல் இருப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த வலையில் சிக்கி தப்ப முடியாத நிலையில் 12 அடி நீள மலைப்பாம்பு ஒன்று நெளிந்து கொண்டு இருந்ததை பார்த்தார்.

    இந்த மலைப்பாம்பு தான் அவரது வீட்டில் இருந்த கோழிகளை தின்றுவிட்டு வேறு கோழி கிடைக்காததால் இரை தேடி வயல்வெளி பக்கம் வந்தது தெரிய வந்தது.

    இதுகுறித்து தகவலை தொடர்ந்து அக்கம்பக்கத்தில் உள்ள ஏராளமான பொதுமக்கள் பாம்பை பார்க்க குவிந்தனர். குலையன்கரிசல் ஊர் பகுதியில் இந்த மலைப்பாம்பு சமீபத்தில் பெய்த மழை வெள்ளத்தில் காடுகளில் இருந்து அடித்து வரப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    இது குறித்து தூத்துக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மலைப்பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

    • அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • குழுவினர் இன்று மழை பாதிப்பு உள்ள பகுதிகளுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

    நெல்லை:

    தமிழகத்தில் கோடை மழை பரவலாக பெய்ய ஆரம்பித்துள்ளது. குறிப்பாக நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் மாஞ்சோலை, தலையணை, நம்பிகோவில், மணிமுத்தாறு அருவி பகுதிகளுக்கு செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மேலும் 5 நாட்களுக்கு நெல்லையில் கனமழை, தென்காசியில் மிக கனமழைக்கான எச்சரிக்கை சென்னை வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இன்று (சனிக்கிழமை), நாளை (ஞாயிற்றுக்கிழமை), நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

    இதையடுத்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை எதிரொலியாக நெல்லை மாவட்டத்தில் மழையால் சேதங்கள் ஏற்பட்டால் உடனே மீட்பு பணியில் ஈடுபடுவதற்காக தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவினர் 90 பேர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் சென்னையில் இருந்து நெல்லைக்கு நேற்று வந்தனர். இவர்கள் பாளை ஆயுதப்படை மைதானத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பதற்காக ரப்பர் படகு மற்றும் மரங்கள் விழுந்தால் அதை அகற்ற தேவையான உபகரணங்கள், ஜெனரேட்டார்கள் உள்ளிட்டவைகளையும் கொண்டு வந்துள்ளனர். இந்த குழுவினர் இன்று மழை பாதிப்பு உள்ள பகுதிகளுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

    இதனையொட்டி இன்று காலை முதலே அவர்கள் தங்களுக்கு தேவையான உபகரணங்களை பிரித்து எடுத்துக்கொண்டு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு புறப்பட்டனர்.

    • சுற்றுலா பயணிகள் திருமூர்த்தி மலைக்கு வருகை தருகின்றனர்.
    • வனப்பகுதியில் பெய்த பலத்த மழையால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் அமணலிங்கேசுவரர் கோவில் உள்ளது. கோவிலின் அடிவாரத்தில் இருந்து 950 மீட்டர் உயரத்தில் உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி உள்ளது.

    அருவியில் விழுகின்ற மூலிகை தண்ணீரில் குளித்து புத்துணர்வு பெறவும், பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளை தரிசனம் செய்யவும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்தி மலைக்கு வருகை தருகின்றனர்.

    இந்தநிலையில் கோடை வெப்பத்தின் தாக்கத்தால் நீர் வரத்து இல்லாமல் வறண்டு வந்த பஞ்சலிங்க அருவிக்கு கடந்த 4 நாட்களாக நீர்வரத்து ஏற்பட்டு உள்ளது. இதற்கு குருமலை, குலிப்பட்டி, மேல் குருமலை உள்ளிட்ட அருவியின் நீராதாரங்களில் தொடர்ந்து மழைப்பொழிவு ஏற்பட்டு வருவதே காரணமாகும்.

    வனப்பகுதியில் பெய்த பலத்த மழையால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் அருவிக்கு குடும்பத்தோடு வருகை தந்த சுற்றுலா பயணிகள் உற்சாகத்தோடு குளித்து மகிழ்ந்தனர். மேலும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் கணிசமான அளவில் உயர்ந்து வருகிறது.

    • மலையை ஒட்டியுள்ள நீர் பிடிப்பு பகுதிகள் மற்றும் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
    • மெயின் அருவி, ஐந்தருவிக்கு தண்ணீர் வரத்து சற்று அதிகரித்து காணப்படுகிறது.

    தென்காசி:

    தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

    இந்நிலையில் தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் தொடரும் மழையின் காரணமாக மலையை ஒட்டியுள்ள நீர் பிடிப்பு பகுதிகள் மற்றும் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    குறிப்பாக முக்கிய சுற்றுலா தளமாக விளங்கி வரும் குற்றால அருவிகளான பழைய குற்றாலம், மெயின் அருவி, ஐந்தருவிக்கு தண்ணீர் வரத்து சற்று அதிகரித்து காணப்படுகிறது.

    பழைய குற்றால அருவிக்கு மேல் பகுதியில் உள்ள மலைப் பகுதியில் அதிக அளவு மழை பெய்ததன் காரணமாக இரவு முதல் பழைய குற்றால அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    மேலும் தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து மேலும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பது உள்ளிட்டவை குறித்து கர்நாடகம் கூறியது.
    • கர்நாடகம் தரப்பில் தமிழகத்தின் வாதம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

    புதுடெல்லி:

    காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் 96-வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் காணொலி வழியாக நடை பெற்றது.

    அப்போது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, ஜூன் மாதம் திறந்துவிடப்பட வேண்டிய தண்ணீர் 9.1 டி.எம்.சி. இது உள்பட மொத்தம் 16.6 டி.எம்.சி. தண்ணீரை ஜூன் மாதத்தில் பிலிகுண்டுலுவில் வழங்க வேண்டும். இதை வழங்கும்படி கர்நாடகத்துக்கு முறையாக உத்தரவிட வேண்டும் என தமிழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

    குறிப்பாக, வரும் ஜூன் 12-ந்தேதிக்கு பின்னர் தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடி தொடங்கும் நிலையில், தமிழக அரசு சார்பில் இந்தக் கோரிக்கை முன் வைக்கப்பட்டது. ஆனால், கர்நாடகம் தரப்பில் தமிழகத்தின் வாதம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

    தற்போது அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பது உள்ளிட்டவை குறித்து கர்நாடகம் கூறியது. அதே சமயம், பருவமழை பெய்து நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலிருந்து கர்நாடக அணைகளுக்கு தண்ணீர் வந்தால் தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க முடியும் எனவும் கர்நாடகம் கூறியது.

    இதைத் தொடர்ந்து, காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுத் தலைவர் வினீத் குப்தா நிலைமை குறித்து விளக்கினார்.

    அப்போது அவர் கூறு கையில், 'வருகிற தென் மேற்குப் பருவமழை இயல்பைவிட அதிகமாகப் பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ். அணைக்கு வினாடிக்கு 700 கனஅடி தண்ணீர் வரத்து உள்ளது. மற்ற பகுதிகளில் பெய்து வரும் மழையால் பிலிகுண்டுலுவில் கடந்த சில நாட்களாக வினாடிக்கு 1,000 கனஅடி தண்ணீர் வரத்து உள்ளது. இது கடந்த 15-ந்தேதி 1,100 கனஅடியாக அதிகரித்துள்ளது.

    மேலும், தற்போது இரு மாநிலங்களின் குடிநீர்த் தேவைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். பயிர் சாகுபடி தொடங்கப்படாத நிலையில், தற்போதைய நிலை தொடரும். இருப்பினும், வருகிற 21-ந்தேதி நடைபெறும் காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் 2023-24-ம் ஆண்டில் பிலுகுண்டுலுவில் வழங்கப்படாமல் இருக்கும் பற்றாக்குறை நீர் குறித்தும், கடந்த ஆண்டு நீர் கணக்கு குறித்தும் விவாதிக்கப்படும்' என்றார்.

    • தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கோடை வெயில் சுட்டெரித்தது.
    • கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மக்கள் வெயிலின் தாக்கத்தால் பெரும் அவதிப்பட்டனர்.

    தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கோடை வெயில் சுட்டெரித்தது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மக்கள் வெயிலின் தாக்கத்தால் பெரும் அவதிப்பட்டனர். அப்போது இயல்பைவிட 4, 5 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக இருந்தது

    இதற்கிடையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இடிமின்னல் காற்றுடன் கடந்த ஒரு வாரமாக கோடை மழை கொட்டி தீர்த்து வருகிறது.

    இந்நிலையில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களில் கடந்த மே 9 முதல் 15 வரை இயல்பை விட கூடுதலாக 58% மழை பெய்துள்ளது.

    இந்த குறிப்பிட்ட நாட்களில் 16.4 சென்டி மீட்டர் மழை பெய்ய வேண்டிய நிலையில் 25.9 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    • சங்ககிரி, சேலம், ஏற்காடு ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது
    • ஏற்காட்டில் கடந்த 2 நாட்களாக கடும் குளிர் நிலவி வருகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் நடப்பாண்டில் கோடை காலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. பின்னர் வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து கடந்த 2-ந் தேதி அதிக பட்சமாக 108 டிகிரி வெயில் பதிவானது. இதனால் பொது மக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீடுகளில் முடங்கினர்.

    இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. தொடர்ந்து பகல் 1 மணி வரை வெயில் அடிப்பதும், பின்னர் 2 மணியளவில் மழை பெய்வதும் வாடிக்கையாக உள்ளது . 4-வது நாளாக நேற்றும் பகல் 1 மணி வரை வெயில் அடித்த நிலையில் பிற்பகல் 2 மணியளவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது . குறிப்பாக ஏத்தாப்பூர், சங்ககிரி, சேலம், ஏற்காடு ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது .

    இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மாவட்டத்தில் 4-வது நாளாக நேற்று பெய்த மழையால் தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசி வருகிறது. இரவிலும் இந்த குளிர் நீடித்தது. இதனால் பொது மக்ககள் போர்வையை போர்த்தியபடியே தூங்கினர். மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று காலை 10 மணியளவில் தொடங்கிய மழை நள்ளிரவு வரையும் தூறலாக நீடித்தது. இதனால் ஏற்காட்டில் கடந்த 2 நாட்களாக கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் அங்கு வசிக்கும் பொதுமக்கள் கடும் குளிரில் தவித்து வருகிறார்கள்.

    சேலம் மாவட்டத்தில் அதிக பட்சமாக நேற்று ஏத்தாப்பூரில் 23 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சங்ககிரி 23, சேலம் மாநகர் 5.4, ஏற்காடு 3.2 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 80 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. இன்று காலையும் சேலம் மாநகரில் மழை தூறிய படியே இருந்தது. இதனால் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழகத்தில் கோடை மழை ஆங்காங்கே பெய்யத் தொடங்கி இருப்பதால், பல்வேறு இடங்களில் வெப்பம் குறைந்துள்ளது.
    • நேற்றும் தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் நிலவி வரும் அதிக வெப்ப அலை காரணமாக தொழிலாளர்களின் உடல்நலம் பாதிப்படைவதை தடுக்கும் பொருட்டு, திறந்த வெளியில் மேற்கொள்ளப்படும் அனைத்து கட்டுமான பணிகளும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மேற்கொள்ளக்கூடாது என கட்டுமான நிறுவனங்களுக்கு சென்னை தொழிலக பாதுகாப்பு சுகாதார இயக்குனர் நேற்று அறிவுறுத்தி இருந்தார்.

    இந்நிலையில் தமிழகத்தில் கோடை மழை ஆங்காங்கே பெய்யத் தொடங்கி இருப்பதால், பல்வேறு இடங்களில் வெப்பம் குறைந்துள்ளது. கடந்த சில தினங்களாக 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவாகும் இடங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கிறது. அந்தவகையில் நேற்றும் தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.

    தமிழகத்தில் வெப்ப அலையின் தாக்கம் குறைந்துள்ளதால் வழக்கம்போல் கட்டுமான பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    கட்டுமான நிறுவனங்களுக்கு அறிவுரை வழங்கும்படி, இணை இயக்குனர்களுக்கு, தொழிலக பாதுகாப்பு இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.

    • தமிழக தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
    • தமிழக அரசின் பொறுப்பற்ற தன்மையை காட்டுகிறது.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 13-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை பரவலாக மழை இருக்கும் என்று சென்னை வானிலை நிலையம் அறிவித்துள்ளது.

    சென்னை வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது எச்சரிக்கையை அளித்த போதும், வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடமும் தமிழக அரசும் தகுந்த முன்னேர்பாடுகள் செய்யாமல் பல்வேறு இடங்களில் அறுவடை செய்து விற்பனைக்கு வந்த நெல்மணிகளும் கொள்முதல் செய்த நெல்மணிகளும் உரிய பாதுகாப்பு இல்லாமல் மழையில் நனைந்து வீணாகியுள்ளது. இது தமிழக அரசின் பொறுப்பற்ற தன்மையை காட்டுகிறது.

    விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கடைமடைகளுக்கு எளிதாக செல்லும் வகையில் வாய்க்கால்களை தூர்வார வேண்டும். அதோடு கோடை காலங்களில் ஏரி, குளங்களையும் தூர்வாரி தண்ணீரை சேமிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இயற்கை அளிக்கும் மழை தண்ணீரை சேமிக்கும் திட்டம் கர்மவீரார் காமராஜர் ஆட்சிக்குப்பிறகு எந்த ஆட்சியாளரும் செய்யவில்லை என்பது வருத்தத்திற்குரியது.

    இனிமேலும் காலதாமதம் செய்யாமல் கோடைகாலம் முடிவதற்குள் மழைநீர் வடிகால் பணியையும், போக்குவரத்து சாலைகளை செப்பணிட்டும், இப்பணிகளை ஒருகாலக்கெடுவுக்குள் முடித்து மக்கள் பயடைய உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×