என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • திருமண வயதை எட்டிய பிள்ளைகளுக்கு நல்ல வரன் வந்துசேரும்.
    • பெண்களுக்கு நினைத்தது நிறைவேறும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும்.

    சிம்ம ராசி நேயர்களே!

    மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு யோகாதிபதி செவ்வாயும் இணைந்திருக்கிறார். எனவே சென்ற மாதத்தைக் காட்டிலும் இந்த மாதம் சிறப்பாக இருக்கும். செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும். அதே நேரம் ஜென்மத்தில் கேதுவும், 7-ல் ராகுவும் இருப்பதால், தொழிலில் குறுக்கீடுகள் வந்து கொண்டுதான் இருக்கும். தைரியமும், தன்னம்பிக்கையும் மிக்க நீங்கள், அதை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்க நிலை மாற, சர்ப்ப கிரகங்களுக்குரிய தெய்வங்களை யோகபலம் பெற்ற நாளில் சென்று வழிபடுவது நல்லது.

    மிதுன - குரு

    மார்கழி 6-ந் தேதி, மிதுன ராசிக்கு குருபகவான் வக்ர இயக்கத்தில் செல்கிறார். அப்பொழுது அவரது பார்வை பதியும் இடங்கள் யாவும் புனிதமடைந்து நற்பலன் தரும். உங்கள் ராசிக்கு பஞ்சம - அஷ்டமாதிபதியானவர் குரு. அவரது பார்வை பலத்தால் சகோதர ஒற்றுமை பலப்படும். வழக்குகள் சாதகமாக முடியும். ஆடம்பரச் செலவுகளால் கரைந்த சேமிப்புகளை ஈடுகட்ட, புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் ஏற்பட்ட பிரச்சினை அகலும். பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேரும் வாய்ப்பு உருவாகும். அலுவலகத்தில் உங்கள் மரியாதை கூடும். பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி உண்டு. திருமண வயதை எட்டிய பிள்ளைகளுக்கு நல்ல வரன் வந்துசேரும்.

    இதுவரை தடைப்பட்ட சில காரியங்கள் இப்பொழுது துரிதமாக நடைபெறும். வியாபாரத்தில் உள்ள நெளிவு சுளிவுகளை கற்றுக்கொண்டு, அதை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள். இதுவரை பகையாக இருந்த உறவினர்கள், உங்களைத் தேடி வந்து பாசம் காட்டுவர். அரசியல் களத்தில் இருப்பவர்களுக்கு மக்களின் செல்வாக்கு அதிகரிக்கும். மகத்தான பொறுப்புகள் கிடைக்கும். கடல்தாண்டிச் சென்று பணிபுரிபவர்களுக்கு அங்கு 'குடியுரிமை கிடைக்கவில்லையே' என்ற கவலை அகலும். இடம் வாங்கும் யோகம் உண்டு. புதிய கூட்டாளிகள் மூலம் தொழில் முன்னேற்றம் காணும் நேரம் இது.

    தனுசு - சுக்ரன்

    மார்கழி 7-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் பஞ்சம ஸ்தானத்திற்கு செல்லும்போது, பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினை அகலும். வாழ்க்கையில் புதிய பாதை புலப்படும். முன்னேற்றத்தை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். செய்தொழிலில் மேன்மை உண்டு. புதிய ஆபரணங்கள் வாங்கி மகிழும் வாய்ப்பு கிட்டும். பிள்ளைகளின் வேலை சம்பந்தமாக எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவோடு நல்ல காரியங்கள் நடைபெறும்.

    மகர - செவ்வாய்

    மார்கழி 30-ந் தேதி மகர ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு உச்சம் பெறுகிறார்். உங்கள் ராசிக்கு யோகம் செய்யும் கிரகம் செவ்வாய் என்பதால் இக்காலம் ஒரு பொற்காலமாகவே அமையும். சொத்துக்களால் ஆதாயம் உண்டு. தங்களின் வியாபார தலத்தை வேறு ஒரு புதிய இடத்திற்கு மாற்ற முயற்சிப்பீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முன்னேற்றப் பாதையில் செல்ல வழிவகுத்துக் கொடுப்பர். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கூடும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு புதிய கூட்டாளிகள் வந்திணைவர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு உண்டு. கலைஞர்களுக்கு மதிப்பும், மரியாதையும் உயரும். மாணவ - மாணவிகளுக்கு, ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும். பெண்களுக்கு நினைத்தது நிறைவேறும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    டிசம்பர்: 17, 18, 19, 29, 30, ஜனவரி: 3, 4, 10, 11.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கிரே.

    கன்னி ராசி நேயர்களே!

    மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு தனாதிபதி சுக்ரனும் இணைந்து சஞ்சரிப்பதால், நல்ல சந்தர்ப்பங்கள் இல்லம் தேடி வரும். வருமானம் உயரும். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். கொடுத்த கடன் வசூலாகும். உடன் இருப்பவர்களால் நன்மை கிடைக்கும். உடன்பிறப்புகள் உறுதுணையாக இருப்பர். தொழில் முன்னேற்றம் ஏற்படும் மாதம் இது.

    மிதுன - குரு

    மார்கழி 6-ந் தேதி மிதுன ராசிக்கு குரு வக்ர இயக்கத்தில் செல்கிறார். அவரது பார்வை பதியும் ராசிகள் புனிதமடைந்து நற்பலன்களை வழங்கும். அந்த அடிப்படையில் குடும்ப ஸ்தானத்தை குரு பார்ப்பதால் குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். கடுமையாக முயற்சித்தும் இதுவரை நடைபெறாத காரியங்கள் இப்ெபாழுது துரிதமாக நடைபெறும். பொருளாதாரப் பற்றாக்குறையில் சிக்கித் தவித்த உங்களுக்கு இப்பொழுது புதிய பாதை புலப்படும். கொடுக்கல் - வாங்கல் ஒழுங்காகவும், சிறப்பாகவும் இருக்கும். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முன்வருவீர்கள்.

    சுக ஸ்தானத்தை குரு பார்ப்பதால் ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். இதுவரை ஏற்பட்ட மருத்துவச் செலவுகள் குறையும். பாயில் படுத்தவர்கள் பம்பரமாய் சுழன்று பணிபுரியும் சூழல் உருவாகும். வாசல் தேடி வரும் நண்பர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பர். உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்றம் உண்டு. உங்களுக்கு இடையூறாக இருந்த மேலதிகாரிகள் இப்பொழுது மாற்றப்படலாம். கேட்ட சலுகைகள் கிடைக்கும். பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பொறுப்புகள் கிடைக்கும்.

    தனுசு - சுக்ரன்

    மார்கழி 7-ந் தேதி தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் 4-ம் இடத்திற்கு வரும் இந்த நேரம் நல்ல சந்தர்ப்பங்கள் பலவும் வரப்போகிறது. குறிப்பாக பணத்தேவை பூர்த்தியாகும். புதிய இல்லம் கட்டிக் குடியேறும் வாய்ப்பு அல்லது இருக்கும் வீட்டை விரிவு செய்யும் அமைப்பு உண்டு. தாய்வழி ஆதரவு திருப்தி தரும். வைத்திருக்கும் பழைய வாகனத்தைக் கொடுத்துவிட்டு, புதிய வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். பயணம் பலன் தருவதாக அமையும். மகிழ்ச்சிகரமான ஆன்மிகப் பயணங்கள் உண்டு.

    மகர - செவ்வாய்

    மார்கழி 30-ந் தேதி மகர ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், செவ்வாய். அவர் உச்சம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. இக்காலத்தில் எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. திடீர் விரயங்கள் ஏற்படும். வியாபாரத்தில் சிக்கல்கள் உருவாகும். மேலும் தொழில் போட்டிகள் அதிகரிக்கும். உடல்நிலை பாதிப்பு காரணமாக ஒரு சில காரியங்களை தாமதமாகச் செய்ய நேரிடும். வாகனப் பழுதுகளால் மன வாட்டம் ஏற்படும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு மேல் முதலீடு செய்ய வாய்ப்புகள் உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளால் நன்மை உண்டு. கலைஞர்களுக்குப் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் அக்கறை கூடும். பெண்களுக்கு நிலையான வருமானம் உண்டு. பூமி யோகம் அமையும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    டிசம்பர்: 16, 17, 20, 21, ஜனவரி: 1, 2, 5, 6, 12, 13.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.

    துலாம் ராசி நேயர்களே!

    மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு விரயாதிபதி புதன் இணைந்திருக்கிறார். எனவே வருமானம் வந்தாலும் அதைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும். 'சேமிக்க முடியவில்லையே' என்று கவலைப்படுவீர்கள். பணம் கைகளில் புரளும் நேரத்தில் சுபச்செலவுகளைச் செய்வது நல்லது. பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். உறவினர் பகை அகலும். ஊர் மாற்றம் பற்றியும், உத்தியோக மாற்றம் பற்றியும் நீங்கள் சிந்தித்தபடியே செயல்படுவீர்கள்.

    மிதுன - குரு

    மார்கழி 6-ந் தேதி, மிதுன ராசிக்கு குரு வக்ர இயக்கத்தில் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், குரு பகவான். அவர் இப்பொழுது பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் ராசியைப் பார்க்கப் போகிறார். குரு, உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு பகைக்கிரகமாக இருந்தாலும், அதன் பார்வைக்கு பலன் அதிகம். எனவே இதுவரை இருந்த இடா்பாடுகள் அகலும். உடல்நலம் சீராகி உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். 'வாங்கிய கடனைக் கொடுக்க முடியவில்லையே.. கொடுத்த கடனை வாங்க முடிவில்லையே..' என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது கொடுக்கல் - வாங்கல்கள் ஒழுங்காகும்.

    சகாய ஸ்தானத்தையும் குரு பார்ப்பதால் காரிய வெற்றியும், பணப் புழக்கமும் அதிகரிக்கும். உடன்பிறப்புகள் உங்கள் பணிக்கு உறுதுணையாக இருப்பர். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குறிப்பாக பிள்ளைகளின் கல்யாணம் சம்பந்தமாகவோ, கடல் தாண்டிச் சென்று படிப்பது சம்பந்தமாகவோ முயற்சி எடுத்தால் அதில் அனுகூலம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களை விற்று, புதிய சொத்துக்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    தனுசு - சுக்ரன்

    மார்கழி 7-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியான சுக்ரன், அஷ்டமாதிபதியாகவும் விளங்குபவர். அவர் 3-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது வழக்குகள் சாதகமாக முடியும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். தொழில் நிலையத்தை இடமாற்றம் செய்யும் எண்ணம் மேலோங்கும். தூரத்து உறவினர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும். தொடர்ச்சியாக வந்த கடன் சுமை குறைய, புதிய வழிபிறக்கும். எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும் நேரம் இது.

    மகர - செவ்வாய்

    மார்கழி 30-ந் தேதி மகர ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 2,7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் உச்சம்பெறும் இந்த நேரம் அற்புதமான நேரமாகும். பொருளாதாரம் உச்ச நிலையை அடையும். புதிய பொறுப்புகள் தேடிவரும். அதிகார அந்தஸ்திற்கு சிலர் உயர்த்தப்படுவர். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தானாக வரும் பதவிகளை ஏற்றுக்கொள்ள முன்வருவீர்கள்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு மாற்றினத்தவர்களின் உதவி உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கலைஞர்களுக்கு சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். மாணவ - மாணவிகளுக்கு மதிப்பெண்கள் அதிகரிக்கும். பெண்களுக்கு வருமானம் திருப்தி தரும். வரன்கள் வாசல் தேடி வரும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    டிசம்பர்: 17, 18, 19, 23, 24, ஜனவரி: 3, 4, 7, 8.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.

    விருச்சிக ராசி நேயர்களே!

    மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்த பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் செவ்வாய் தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு தொழில் ஸ்தானாதிபதி சூரியன் இணைந்திருப்பதால் தொழில் முன்னேற்றம், வருமான உயர்வு வந்துசேரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி தரும். புகழ்மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து பல காரியங்களை முடித்துக்கொடுப்பர். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் தேடிவரும். மாதத் தொடக்கத்தில் குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிகிறது. சுபக் கிரகத்தின் பார்வை பதிவதால் சுபச் செய்திகள் வந்து சேரும்.

    மிதுன - குரு

    மார்கழி 6-ந் தேதி, மிதுன ராசிக்கு குரு வக்ர இயக்கத்தில் செல்கிறார். உங்கள் ராசிக்கு தன- பஞ்சமாதிபதியானவர் குரு. அவர் அஷ்டமத்தில் சஞ்சரித்தாலும், அவரது பார்வை தன ஸ்தானம் எனப்படும் 2-ம் இடத்தில் பதிகிறது. தன் வீட்டை, தானே பார்க்கும் குருவால் எண்ணற்ற நற்பலன்கள் இல்லம் தேடி வரப்போகிறது. வீடு கட்டும் முயற்சி அல்லது வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரிய பேச்சு கைகூடும். உறவினர் பகை அகலும். கொடுக்கல் - வாங்கல்களில் லாபம் உண்டு. குரு பார்க்கும் இடத்திற்கு பலன் அதிகம் என்பதால் 'குரு பார்க்க கோடி நன்மை' என்பார்கள். அந்த அடிப்படையில் குருவின் பரிபூரண பார்வை சுக ஸ்தானத்தில் பதிவதால் உடல்நலம் சீராகும். உயர்ந்த மனிதர்களின் பழக்கத்தால் பல நல்ல காரியங்களை செய்து முடிப்பீர்கள். அரசியல் களத்தில் இருப்பவர்களுக்கு, அதிகார அந்தஸ்தைப் பெறும் யோகம் கிடைக்கும். பயணங்கள் பலன் தருவதாக அமையும். புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சி கைகூடும். புனிதப் பயணங்களை மேற்கொள்வீர்கள். குறிப்பாக புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வரவேண்டுமென்ற எண்ணம் நிறைவேறும்.

    தனுசு - சுக்ரன்

    மார்கழி 7-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். சப்தம - விரயாதிபதி சுக்ரன் தன ஸ்தானத்திற்கு வரும்போது குடும்ப அமைதி கூடும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் முதல் ஆடம்பரப் பொருட்கள் வரை வாங்க செலவிடுவீர்கள். மேலும் திருமண வயதடைந்த பிள்ளைகளின் கல்யாணத்தை முன்னிட்டு, சீர்வரிசைப் பொருட்கள் வாங்கும் முயற்சி கைகூடும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும். வாங்கிய இடத்தை விற்பனை செய்வதன் மூலம் வரும் தொகையைக் கொண்டு, நடக்கும் தொழிலை விரிவு செய்வீர்கள். வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைத்து உதிரி வருமானங்கள் வரும் வாய்ப்பு உண்டு.

    மகர - செவ்வாய்

    மார்கழி 30-ந் தேதி மகர ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு உச்சம் பெறுகிறார். இக்காலம் உங்களுக்கு இனிய காலமாகும். எல்லா வழிகளிலும் நன்மை கிடைக்கும். ராசிநாதன் செவ்வாய் வலிமை அடைவதால் யோசிக்காது செய்த காரியங்களிலும் வெற்றி உண்டு. பூமி யோகமும், பிள்ளைகளின் வழியில் நல்ல காரியமும் நடைபெறும் சூழ்நிலையும் உருவாகும். நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு கூடுதல் லாபம் கிடைத்து மகிழ்ச்சி கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு உண்டு. கலைஞர்களுக்கு புகழும், புதிய ஒப்பந்தங்களும் வந்துசேரும். மாணவ- மாணவிகளுக்கு படிப்பில் முன்னேற்றம் உண்டு. பெண்களுக்கு குடும்பப் பொறுப்பு கூடும். கொடுக்கல் - வாங்கல்களில் ஆதாயம் உண்டு.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    டிசம்பர்: 20, 21, 26, 27, ஜனவரி: 5, 6, 9, 10.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு.

    • புதிய திட்டங்கள் தீட்டி வெற்றி காண்பீர்கள்.
    • வருமான அதிகரிப்பிற்கு வழிபிறக்கும்.

    மேஷ ராசி நேயர்களே!

    மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் லாப ஸ்தானாதிபதி சனி லாப ஸ்தானத்திலேயே சஞ்சரிக்கிறார். இதனால் பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். கொடுக்கல் - வாங்கல் நல்லபடியாக அமையும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது சஞ்சரிக்கிறார். பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி சூரியனும், உங்கள் ராசிநாதன் செவ்வாயும் இணைந்து சஞ்சரிப்பதால் இம்மாதம் இனிய மாதமாகவே அமையும்.

    மிதுன - குரு

    மார்கழி 6-ந் தேதி, மிதுன ராசிக்கு குரு வக்ர இயக்கத்தில் செல்கிறார். அப்பொழுது அவரது பார்வை பதியும் இடங்கள் பலம் பெறுகின்றன. இதன் விளைவாக கல்யாணக் கனவுகள் நனவாகும். நீண்ட நாட்களாக பேசிப் பேசி கைவிட்டுப் போன வரன்கள் இப்பொழுது மீண்டும் வரலாம். அவற்றை பரிசீலனை செய்து தகுந்ததை தேர்வு செய்ய உகந்த நேரம் இது. தந்தை வழியில் இருந்த பிரச்சினைகள் அகலும். தடைப்பட்ட காரியங்கள் தானாக முடிவடையும். முந்திய காலத்தில் நடைபெறாத சில காரியங்கள் இப்பொழுது படிப்படியாக நடைபெறத் தொடங்கும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடிய வழிபிறக்கும். பொருளாதார நிலை உயர வெளிநாடு செல்ல நினைத்தவர்களுக்கு, நல்ல நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம். ஏழரைச் சனி தொடங்க இருப்பதால், சுய ஜாதகத்தின் பலம் அறிந்து ஏற்றுக்கொள்வது நல்லது.

    தனுசு - சுக்ரன்

    மார்கழி 7-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் பாக்கிய ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரத்தில், பொன் - பொருள் சேர்க்கை ஏற்படும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அள்ளிக் கொடுக்கும் சுக்ரன் நல்ல இடத்திற்கு வருவதால், எல்லா வழிகளிலும் நன்மை கிடைக்கும். குறிப்பாக பொருளாதார நெருக்கடி அகலும். உத்தியோகத்தில் உயர் பதவிகளும், ஊதிய உயர்வும் கிடைப்பதற்கான அறிகுறி தென்படும். நல்ல சந்தர்ப்பங்கள் நாடிவரும் நேரம் இது.

    மகர - செவ்வாய்

    மார்கழி 30-ந் தேதி மகர ராசிக்கு செல்லும் செவ்வாய், அங்கு உச்சம் பெறுகிறார். ராசிநாதன் செவ்வாய் உச்சம்பெறும் இந்த நேரம், அற்புதமான நேரமாகும். எந்த செயலைச் செய்தாலும், அதற்கான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இடம் வாங்குவது, பூமி வாங்குவது போன்றவற்றில் ஆர்வம் கூடும். உடன்பிறப்புகளும், உடன் இருப்பவர்களும் உறுதுணையாக நடந்துகொள்வர். கடன்சுமை குறையும். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். புதிய திட்டங்கள் தீட்டி வெற்றி காண்பீர்கள்.

    பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கேட்ட சலுகைகள் கிடைக்கும். கலைஞர்களின் எண்ணங்கள் எளிதில் வெற்றிபெறும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் அக்கறை கூடும். பெண்களுக்கு திருமண முயற்சி கைகூடும். திடீர் மாற்றம் உருவாகும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    டிசம்பர்: 20, 21, 26, 27, ஜனவரி: 1, 2, 5, 6.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.

    ரிஷப ராசி நேயர்களே!

    மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்திலேயே உங்கள் ராசிநாதன் சுக்ரன், தன - பஞ்சமாதிபதியான புதனோடு இணைந்து சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இந்த யோகமான நேரத்தில் பொருளாதார நிலை உயரும். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். குடும்ப முன்னேற்றம் கூடும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். கடுமையாக முயற்சித்தும் இதுவரை நடைபெறாத காரியங்கள் இப்பொழுது துரிதமாக நடைபெறும். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து இணைவர். ஆயினும் ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.

    மிதுன - குரு

    மார்கழி 6-ந் தேதி, மிதுன ராசிக்கு குரு வக்ர இயக்கத்தில் செல்கிறார். அப்பொழுது அவரது பார்வை பதியும் இடங்கள் அனைத்தும் புனிதம் அடைகின்றன. உங்கள் ராசிக்கு அஷ்டம - லாபாதிபதியானவர் குரு. அவரது பார்வை பலத்தால் உத்தியோகம், தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த ஒரு சில காரியங்கள் இப்பொழுது துரிதமாக முடிவடையும். எதிரிகள் விலகுவர். லாபம் வரும் வழியைக் கண்டுகொள்வீர்கள். சென்ற மாதத்தில் தொழிலில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

    பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும் என்றாலும், குரு வக்ரமாக இருப்பதால் ஒரு சில சமயங்களில் மன வருத்தமும் வந்துசேரும். வெளிநாடு சென்று பணிபுரிய வேண்டு மென்று நினைத்தவர்களுக்கு, இப்பொழுது அதற்கான சூழல் உருவாகும். வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகள் சில நுணுக்கங்களை கற்றுக்கொடுப்பர்.

    தனுசு - சுக்ரன்

    மார்கழி 7-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், 6-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் சுக்ரன். அவர் அஷ்டமத்தில் சஞ்சரிப்பது அற்புதமான நேரமாகும். எதிர்பாராத திருப்பங்கள் பலவும் ஏற்படும். இடமாற்றம், வீடு மாற்றம் இனிமை தரும் விதம் அமையும். உத்தியோகத்தில் கூடுதல் உயர்வு கிடைத்து, சம்பள உயர்வு எதிர்பார்த்தபடி அமையும். எந்த காரியத்தை முயற்சித்தாலும், அது உடனடியாக முடிவடையும் நேரம் இது.

    மகர - செவ்வாய்

    மார்கழி 30-ந் தேதி மகர ராசிக்கு செல்லும் செவ்வாய், அங்கு உச்சம் பெறுகிறார். விரயாதிபதி உச்சம்பெறுவதால் இந்த நேரத்தில் விரயங்கள் அதிகரிக்கும். வீண் விரயங்களில் இருந்து விடுபட சுபவிரயங்களை மேற்கொள்ளுங்கள். பிள்ளைகளின் திருமணத்தை முன்னிட்டு சீர்வரிசைப் பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்தலாம். கட்டிய வீட்டைப் பழுது பார்க்கும் யோகம் உண்டு. வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் முயற்சி கைகூடும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகளில் மாற்றம் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு அதை விரிவு செய்யும் முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். கலைஞர்களுக்கு கவுரவம் உயரும். மாணவ - மாணவிகள் கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படித்து முடிப்பது உத்தமம். பெண்களுக்கு பணவரவு திருப்தி தரும். சுபச்செய்திகள் வந்துசேரும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    டிசம்பர்: 23, 24, 27, 28, ஜனவரி: 3, 4, 7, 8.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- நீலம்.

    மிதுன ராசி நேயர்களே!

    மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் புதன் 6-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். 'மறைந்த புதனால் நிறைந்த தன லாபம் உண்டு' என்பார்கள். எனவே பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும் மாதம் இது. சுக்ரனோடு புதன் இணைந்து 'புத சுக்ர யோக'த்தை உருவாக்குவதால், தொழில் மற்றும் உத்தியோகத்தில் கணிசமான லாபம் கைகளில் புரளும் வாய்ப்பு உண்டு. இம்மாதம் ஜென்ம குரு வரப்போவதால் திடீர் இடமாற்றங்கள், ஊர் மாற்றம் வரலாம். உத்தியோகத்தில் கூட ஒரு சிலருக்கு நீண்ட தூரங்களுக்கு மாறுதலாகி செல்லும் வாய்ப்பு உண்டு.

    மிதுன - குரு

    மார்கழி 6-ந் தேதி மிதுன ராசிக்கு குரு செல்கிறார். அங்ஙனம் ஜென்ம குருவாக வரும்பொழுது அவர் வக்ர இயக்கத்திலும் இருக்கிறார். எனவே ஆரோக்கியத் தொல்லைகளும், மருத்துவச் செலவுகளும் அதிகரிக்கும். திடீர் இடமாற்றங்களால் மனக்குழப்பம் ஏற்படும். உத்தியோகத்தில் வரும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளலாமா?, வேண்டாமா? என்பது பற்றி சிந்திப்பீர்கள். தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. தனித்து இயங்க முடியாமல் பிறரை சார்ந்திருப்பவர்கள் பொறுமையோடு செயல்பட வேண்டிய நேரம் இது. உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை மற்றவர்களிடம் கொடுப்பதால் ஒரு சில பிரச்சினைகள் உருவாகும்.

    'குரு இருக்கும் இடத்தைக் காட்டிலும் பார்க்கும் இடத்திற்கு பலன் அதிகம்' என்பார்கள். அந்த அடிப்படையில் பார்க்கும்பொழுது, அதன் பார்வை பலனால் சில நன்மைகளும் நடக்கும். சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். பிள்ளைகளால் உருவான பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். பெற்றோரின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு அது கைகூடும். பழைய வாகனங்களை கொடுத்துவிட்டு, புதிய வாகனங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். 'சொத்து விற்பனையால் வரும் லாபத்தைக் கொண்டு சுப காரியங்கள் நடத்தலாமா?' என்று யோசிப்பீர்கள்.

    தனுசு - சுக்ரன்

    மார்கழி 7-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் 7-ம் இடத்திற்கு வரும்போது வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைக்கும். அதேநேரம் கணவன் - மனைவி இருவரும் வேறு வேறு இடத்தில் பணிபுரியக்கூடிய சூழ்நிலை உருவாகும். வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் பணிபுரிய ஆசைப்பட்டவர்களுக்கு அது கைகூடும். தனுசு ராசியானது குருவிற்குரிய வீடு என்பதால், அதில் சஞ்சரிக்கும் பகை கிரகமான சுக்ரன் பலவித வழிகளிலும் திடீர் திடீரென மாற்றங்களைக் கொடுப்பார். மன வருத்தங்களும் அதிகரிக்கும்.

    மகர - செவ்வாய்

    மார்கழி 30-ந் தேதி மகர ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் உச்சம்பெறும் இந்த நேரத்தில் உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். உயர் அதிகாரிகள் உங்கள் வளர்ச்சிக்கு வழிகாட்டுவர். ஒரு சிலருக்கு கடல் கடந்து செல்லும் வாய்ப்பு கைகூடும். குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். வருமானம் உயரும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு இதுவரை ஏற்பட்ட வீண் பழிகள் அகலும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு இரட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கலைஞர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மாணவ - மாணவிகளுக்கு கல்வியில் ஈடுபாடு அதிகரிக்கும். பெண்களுக்கு பிரச்சினைகள் ஒவ்வொன்றாகத் தீரும். கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    டிசம்பர்: 26, 27, 29, ஜனவரி: 5, 6, 9, 10.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்.

    கடக ராசி நேயர்களே!

    மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்திலேயே அஷ்டமத்துச் சனி பலம்பெற்று சஞ்சரிக்கிறார். ஜென்மத்தில் சஞ்சரிக்கும் குருவும், வக்ர இயக்கத்தில் இருக்கிறார். எனவே இம்மாதம் சோதனைக் காலமாகவே இருக்கும். சிக்கல்களும், சிரமங்களும், சிறுசிறு தொல்லைகளும் வரலாம். பக்கபலமாக இருப்பவர்களை நம்பி எதையும் செய்ய இயலாது. பல பணிகள் பாதியிலேயே நிற்கும். சோதனைகளை சாதனைகளாக மாற்றிக் காட்ட வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். அந்த வழிபாட்டை முழுமையாக சனியின் மீது செலுத்த வேண்டிய நேரம் இது.

    மிதுன - குரு

    மார்கழி 6-ந் தேதி, மிதுன ராசிக்கு குரு வக்ர இயக்கத்தில் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு பகவான். அவர் 12-ம் இடத்திற்கு வரும்போது பயணங்கள் அதிகரிக்கும். பல வழிகளிலும் விரயங்கள் ஏற்படும். இடமாற்றம் திடீரென வந்து இதயத்தை வாட்டும். குரு பார்வை பதியும் இடங்கள் நன்மை தரும் என்பதால், தாய்வழி ஆதரவு கிடைக்கும். மற்ற சகோதரர்களிடம் அன்பு காட்டிய பெற்றோர், இப்போது உங்கள் மீதும் பாசம் காட்டுவர். இடம், பூமியால் ஏற்பட்ட பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும். பத்திரப் பதிவில் இருந்த தடை அகலும்.

    உத்தியோகத்தில் இதுவரை உங்களுக்கு தொல்லை கொடுத்து வந்த மேலதிகாரிகள் மாறுதலாகிச் செல்வர். எதிர்பாராத சலுகைகளைப் பெறுவீர்கள். வீடு கட்டும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். இதுவரை வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய எடுத்த புது முயற்சிக்கு பலன் கிடைக்கும். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து இணைவர். வருமானம் திருப்திகரமாக இருக்கும். வழக்குகள் சாதகமாக முடியும். வாகன மாற்றம் செய்ய உகந்த நேரம் இது.

    தனுசு - சுக்ரன்

    மார்கழி 7-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். சுகம் மற்றும் லாப ஸ்தானத்திற்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் 6-ம் இடத்திற்கு வரும் பொழுது, உத்தியோகத்தில் எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கலாம். ஒரு சிலர் விருப்ப ஓய்வில் வெளிவந்து சுயமாக எதையாவது செய்யலாமா? என்று சிந்திப்பர். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி நீங்கள் எடுத்த முடிவு வெற்றி பெறும். வெளிநாட்டு வணிகத்தால் ஆதாயம் காண்பீர்கள். சென்ற மாதத்தில் நடைபெறாமல் நழுவிச் சென்ற காரியங்கள், இப்பொழுது ஒவ்வொன்றாக நடைபெறத் தொடங்கும். பெண் வழிப் பிரச்சினைகள் தீர வழிபிறக்கும்.

    மகர - செவ்வாய்

    மார்கழி 30-ந் தேதி மகர ராசிக்குச் செல்லும் செவ்வாய், உச்சம் பெறுகிறார். இக்காலம் ஒரு பொற்காலமாகவே அமையும். யோகம் செய்யும் கிரகம் வலுவடைவதால் தேக நலன் சீராகும். செல்வ வளம் பெருகும். தெய்வப்பற்று அதிகரிக்கும். கூட்டு முயற்சியில் இருந்து விலகி தனித்து இயங்க முற்படுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் மூலம் நன்மை கிடைக்கும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய திருப்பங்கள் ஏற்படும். உறவினர்களிடையே இருந்த மனஸ்தாபங்கள் மாறும். வருமான அதிகரிப்பிற்கு வழிபிறக்கும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மேலிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு வங்கிகளில் ஒத்துழைப்பு உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். கலைஞர்களுக்கு புகழ்கூடும். மாணவ - மாணவிகளுக்கு கடின முயற்சி கல்வியில் வெற்றி தரும். பெண்களுக்கு உறவினர்களிடம் இருந்த மனக்கசப்பு மாறும். வரவும், செலவும் சமமாகும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    டிசம்பர்: 16, 27, 28, ஜனவரி: 1, 2, 7, 8.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பொன்னிற மஞ்சள்.

    • சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை.
    • ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு கார்த்திகை-28 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : தசமி இரவு 10.06 மணி வரை பிறகு ஏகாதசி

    நட்சத்திரம் : அஸ்தம் நண்பகல் 12.06 மணி வரை பிறகு சித்திரை

    யோகம் : அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    காஞ்சிபுரம், சமயபுரம், புன்னைநல்லூர், சோழவந்தான் மாரியம்மன் கோவில்களில் பால் அபிஷேகம்

    இன்று சுபமுகூர்த்த தினம். சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன், தஞ்சை புன்னைநல்லூர் ஸ்ரீ மாரியம்மன், சோழவந்தான் ஸ்ரீ ஜனகைமாரியம்மன் கோவில்களில் பால் அபிஷேகம். திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை. சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு. தேவகோட்டை ஸ்ரீ சிலம்பணி விநாயகர், ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் கோவில்களில் காலையில் அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-வரவு

    ரிஷபம்-அன்பு

    மிதுனம்-அமைதி

    கடகம்-பண்பு

    சிம்மம்-பணிவு

    கன்னி-இன்பம்

    துலாம்- உறுதி

    விருச்சிகம்-பாராட்டு

    தனுசு- நற்செயல்

    மகரம்-பக்தி

    கும்பம்-மேன்மை

    மீனம்-பயணம்

    • திருமாலுக்குரிய 108 திவ்ய தேசங்களில் 24-வது தலமாக இக்கோவில் போற்றப்படுகிறது.
    • . வேண்டுதல் நிறைவேறியதும் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்தும், வஸ்திரம் சாற்றியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

    திருவாரூர் மாவட்டம் திருச்சிறுபுலியூர் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது, தலசயனப் பெருமாள் கோவில்.

    திருமாலுக்குரிய 108 திவ்ய தேசங்களில் 24-வது தலமாக இக்கோவில் போற்றப்படுகிறது. திருவரங்கத்தில் பெரிய வடிவில் சயன கோலத்தில் அருளும் பெருமாள், இத்தலத்தில் பாலகனாக சயன கோலத்தில் காட்சி தருவது தனிச் சிறப்பாகும்.

    ஒரு சமயம் ஆதிசேஷனுக்கும், கருடனுக்கும் பகை ஏற்பட்டது. இந்த பகை நீங்குவதற்காக ஆதிசேஷன் இத்தலம் வந்து தலசயனப் பெருமாளை நோக்கி தவம் இயற்றினார். அவரது தவத்தில் மகிழ்ந்த பெருமாள், மாசி மாதம் வளர்பிறை ஏகாதசி தினத்தில் காட்சி அளித்தார். மேலும், அவரை தனது படுக்கையாக ஏற்றுக்கொண்டு, குழந்தை வடிவில் சயன கோலத்தில் காட்சி தருவதாக தல வரலாறு கூறுகிறது.

     

    கோவில் தோற்றம்

    கோவில் நான்கு நிலை ராஜகோபுரத்துடன் காணப்படுகிறது. கருவறையில் தலசயனப் பெருமாள், நந்த வர்த்தன விமானத்துடன் சிறிய வடிவில் சயன கோலத்தில் உள்ளார். அவர் பாதத்திற்கு அருகிலேயே வியாக்ரபாதர் காட்சி தருகிறார். ஆதிசேஷன் தனிச் சன்னிதியில் ஆனந்தாழ்வார் என்ற பெயருடன் காணப்படுகிறார்.

    ஆலயத்தில் சித்திரை வருடப்பிறப்பு, வைகாசி பிரம்மோற்சவம், ஆடிப்பெருக்கு, ஆடிப்பூரம், கிருஷ்ண ஜெயந்தி, நவராத்திரி, திருக்கார்த்திகை, மார்கழி வைகுண்ட ஏகாதசி, பங்குனி உத்திர விழா போன்றவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    நாக தோஷம்,மாங்கல்ய தோஷம், செவ்வாய் தோஷம், நவக்கிரக தோஷம் உள்ளவர்கள், எதிரிகளால் ஆபத்து உள்ளவர்கள் இங்கு வந்து வழிபாடு செய்கின்றனர். வேண்டுதல் நிறைவேறியதும் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்தும், வஸ்திரம் சாற்றியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

    கோவில் காலை 7 மணி முதல் 12 மணி வரையும், மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும். மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் 17 கிலோமீட்டர் தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது. கொல்லுமாங்குடி ரெயில் நிலையத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது.

    • திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம்.
    • திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு கார்த்திகை-27 (சனிக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : நவமி இரவு 8.49 மணி வரை பிறகு தசமி

    நட்சத்திரம் : உத்திரம் காலை 10.30 மணி வரை பிறகு அஸ்தம்

    யோகம் : மரணயோகம்

    ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் திருமஞ்சன சேவை

    திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம். திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள், மதுரை ஸ்ரீ கூடலழகப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சன சேவை. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி பால் அபிஷேகம். திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகநாத சுவாமி ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ முருகப் பெருமான் கோவில்களில் புறப்பாடு கண்டருளல். நயினார் கோவில் ஸ்ரீ சவுந்தர நாயகி திருவாடானை ஸ்ரீ சிநேக வல்லியம்மன் கோவில்களில் அபிஷேகம்.

    ஆழ்வார் திருநகரி, ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோ பால சுவாமி கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன சேவை. திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரெங்கராஜர் புறப்பாடு. திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் திருமஞ்சனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-உற்சாகம்

    ரிஷபம்-விவேகம்

    மிதுனம்-அன்பு

    கடகம்-பெருமை

    சிம்மம்-பக்தி

    கன்னி-பணிவு

    துலாம்- வாழ்வு

    விருச்சிகம்-லாபம்

    தனுசு- ஆதாயம்

    மகரம்-சிறப்பு

    கும்பம்-கடமை

    மீனம்-உண்மை

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    பரபரப்பாகச் செயல்பட்டுப் பாராட்டு மழையில் நனையும் நாள். பயணங்களால் பலன் கிடைக்கும். நாட்டுப் பற்றுமிக்கவர்களின் நல்லாதரவு உண்டு.

    ரிஷபம்

    தேசப்பற்றும் தெய்வப் பற்றும் மேலோங்கும் நாள். நீண்ட நாளைய நண்பர் ஒருவரின் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

    மிதுனம்

    சமுதாயப் பணிகளில் ஆர்வம் காட்டும் நாள். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். மாற்று இனத்தவர்கள் மனதிற்கினிய செய்தியைக் கொண்டுவந்து சேர்ப்பர்.

    கடகம்

    முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். கொடுக்கல் வாங்கல் ஒழுங்காகும். உறவினர்களின் ஒத்துழைப்பு உள்ளத்தை மகிழ்விக்கும்.

    சிம்மம்

    நண்பர்களைச் சந்தித்து நலம் காணும் நாள். தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும்.

    கன்னி

    கல்யாண முயற்சி கைகூடும் நாள். கடமையில் ஏற்பட்ட தொய்வு அகலும். தொலைபேசி வழித்தகவல் தொலைதூரப் பயணத்திற்கு உறுதுணைபுரியும்.

    துலாம்

    இடமாற்றச் சிந்தனைகள் மேலோங்கும் நாள். திடீர் பயணமொன்றால் தித்திக்கும் செய்தி வந்து சேரும். தொழில் போட்டிகளைச் சமாளிப்பீர்கள்.

    விருச்சிகம்

    புதிய பாதை புலப்படும் நாள். பொதுவாழ்வில் புகழ் கூடும். வருமானம் திருப்தி தரும். தொழிலில் புதிய பங்குதாரர்களைச் சேர்க்கும் எண்ணம் உருவாகும்.

    தனுசு

    பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும் நாள். முன்னேற்றப் பாதையில் செல்ல நண்பர்கள் வழிவகுப்பர். உத்தியோகத்தில் இடமாற்றம் உறுதியாகலாம்.

    மகரம்

    பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். வரன்கள் வாயில் தேடி வரும்.

    கும்பம்

    நாவடக்கத்தோடு நடந்துகொள்ள வேண்டிய நாள். வீண் விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் பிரச்சனை அதிகரிக்கும்.

    மீனம்

    சாமர்த்தியமாகப் பேசி சமாளிக்கும் நாள். விலையுயர்ந்த பொருட்களை வாங்கிமகிழ்வீர்கள். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும்.

    • கிழக்கு நோக்கி அமைந்துள்ள இக்கோவிலில் அருள்பாலிக்கும் சிவலிங்கத்தின் மீது பிரம்ம சூத்திரம் வரையப்பட்டுள்ளது.
    • சுவாமியின் இடதுபுறத்தில் அன்னை அகிலாண்டேஸ்வரி தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார்.

    கோயம்புத்தூர் மாவட்டம் கோட்டைமேடு பகுதியில் பழமை வாய்ந்த அகிலாண்டேஸ்வரி உடனாய சங்கமேஸ்வர சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. ஒரு சமயம் அசுரன் ஒருவன் சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்து, சாகா வரம் பெற்றான். தேவலோகத்தை ஆள வேண்டும் என்ற ஆசை கொண்ட அந்த அசுரன், தேவர்களையும், முனிவர்களையும் கொடுமைப்படுத்தினான். இதனால் வருந்திய தேவர்கள் இந்திரனிடம் முறையிட்டனர். இந்திரன் அவர்களிடம், சிவபெருமானை வேண்டும்படி கூறினார். அதன்படி, சங்கு புஷ்பங்கள் நிறைந்த இப்பகுதியில் தேவர்களும், முனிவர்களும் சிவபெருமானை வழிபட்டு வந்தனர். அசுரனை அழிக்குமாறு வேண்டினர். அதன்பின், சிவபெருமான் அசுரனை வதம் செய்ததாக கூறப்படுகிறது.

    சிவபக்தனான கரிகால் சோழ மன்னன், குழந்தை வரம் வேண்டி சிவபெருமானை வழிபட்டு வந்தான். ஒரு நாள், சிவன் அற்புதம் செய்த தலங்களில் சிவாலயங்கள் கட்டுவதாக கனவு கண்டான். இது குறித்து தனது குருவிடமும், ஆன்றோரிடமும் ஆலோசனைக் கேட்டான். அதன்படி, சிவன் அற்புதம் செய்த இடங்களில் கோவில்களை எழுப்பினான். அவ்வாறு அவன் கட்டிய சிவாலயங்களில் ஒன்றாக இக்கோவில் விளங்குகிறது.

    கிழக்கு நோக்கி அமைந்துள்ள இக்கோவிலில் அருள்பாலிக்கும் சிவலிங்கத்தின் மீது பிரம்ம சூத்திரம் வரையப்பட்டுள்ளது. இந்த அமைப்பானது, இறைவன் நம் தலைவிதியை மாற்றும் வல்லமை உள்ளவர் என்பதை குறிப்பதாக உள்ளது. மரணத்தருவாயில் உள்ள இளைஞர்கள் இங்கு வந்து வழிபட்டால், அவர்களது தலைவிதி மாறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    சுவாமியின் இடதுபுறத்தில் அன்னை அகிலாண்டேஸ்வரி தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார். கோவில் சுற்றுப் பிரகாரத்தில் காசி விஸ்வநாதர், நீலகண்டேஸ்வரர், சூரிய பகவான், காப்பு விநாயகர், தட்சிணாமூர்த்தி, பைரவர் ஆகியோர் காட்சி தருகின்றனர். 63 நாயன்மார்களின் திருவுருவ சிலைகளும் உள்ளன. ஒரு தூணில் மேற்கு நோக்கியபடி ஆஞ்சநேயர் காட்சி தருகிறார்.

    மூலவர் மற்றும் அம்பாளின் சன்னிதிக்கு இடையில் சோமாஸ்கந்தராக உள்ள முருகப்பெருமான், சூரபத்மனை வதம் செய்யும் கோலத்தில் காணப்படுகிறார். இவரது ஆறு முகங்களும் நேராக நோக்கிய நிலையில், 12 கைகளிலும் ஆயுதங்களை தாங்கியபடி காட்சி தருகிறார். கோவில் அமைப்பை பார்க்கும்போது, முருகனே மூலவராக அருள்பாலிக்கும் வகையில் உள்ளது.

    கோயம்புத்தூர் மாவட்டம் கோட்டைமேடு பகுதியில் ஈஸ்வரன் கோவில் வீதியில் இக்கோவில் அமைந்துள்ளது.

    • ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் தங்கப் பல்லக்கில் புறப்பாடு.
    • திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் கிளி வாகன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு கார்த்திகை-26 (வெள்ளிக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : அஷ்டமி இரவு 8.00 மணி வரை பிறகு நவமி

    நட்சத்திரம் : பூரம் காலை 9.21 மணி வரை பிறகு உத்திரம்

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை

    எமகண்டம் : பிற்பகல் 3.00 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    வள்ளியூர் ஸ்ரீ சுப்பிரமணியர் தெப்போற்சவம். ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகநாத சுவாமி திருவீதியுலா. மெய்பொருள் நாயனார் குரு பூஜை. திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் புறப்பாடு. வேலூர் கோட்டை துர்கையம்மன், கதிராமமங்கலம் ஸ்ரீ வனதுர்கையம்மன், பட்டீஸ்வரம் ஸ்ரீ துர்கையம்மன் தலங்களில் ஸ்ரீ துர்கையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்.

    திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. லால்குடி ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம், அலங்காரம். கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சனம். தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை தலங்களில் அபிஷேகம். திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் கிளி வாகன சேவை. இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் தலங்களில் காலை சிறப்பு பால் அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பயணம்

    ரிஷபம்-நேர்மை

    மிதுனம்-சிந்தனை

    கடகம்-சிறப்பு

    சிம்மம்-ஊக்கம்

    கன்னி-அமைதி

    துலாம்- கணிப்பு

    விருச்சிகம்-நட்பு

    தனுசு- இன்சொல்

    மகரம்-ஆர்வம்

    கும்பம்-அன்பு

    மீனம்-நற்செயல்

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    சந்தோஷம் அதிகரிக்கும் நாள். தைரியமும், தன்னம்பிக்கையும் கூடும். நண்பர்களின் ஒத்துழைப்போடு தொழில் முன்னேற்றம் காண்பீர்கள்.

    ரிஷபம்

    தாராளமாகச் செலவிட்டு மகிழும் நாள். தொழிலில் புதிய மாற்றங்களைச் செய்வது பற்றிச் சிந்திப்பீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள்.

    மிதுனம்

    அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். அன்பு நண்பர்களின் ஆதரவு பெருகும். அந்நிய தேசத்திலிருந்து அனுகூலத் தகவல் வரும்.

    கடகம்

    பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். புது முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் வருவதற்கான அறிகுறிகள் தோன்றும்.

    சிம்மம்

    லாபம் எதிர்பார்த்தபடியே கிடைக்கும் நாள். சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்து படைத்தவர்களின் சந்திப்பு கிடைக்கும்.

    கன்னி

    நல்லவர்களைச் சந்தித்து நலம் காணும் நாள். பணநெருக்கடி அகலும். விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்திணைவர்.

    துலாம்

    நட்பு வட்டம் விரிவடையும் நாள். தொழில் வளர்ச்சிக்கு முன்பின் அறிமுகமில்லாதவர்கள் கூட ஒத்துழைப்புச் செய்வர். உத்தியோக முயற்சி கைகூடும்.

    விருச்சிகம்

    வரவு திருப்தி தரும் நாள். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். அலுவலகப் பணி சம்பந்தமாகப் பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.

    தனுசு

    நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும் நாள். பிற இனத்தாரால் பெருமை வந்து சேரும். சாதுர்யமாகச் செயல்பட்டு பொருள் வரவைப் பெருக்கிக் கொள்வீர்கள்.

    மகரம்

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். குடும்பத்தில் குழப்பம் அதிகரிக்கும். கூட்டாளிகளால் தொல்லை உண்டு. வரவைக் காட்டிலும் செலவு கூடும்.

    கும்பம்

    யோகங்கள் வந்து சேர யோசித்து முடிவெடுக்க வேண்டிய நாள். மதியத்திற்கு மேல் மனக்கலக்கம் ஏற்படும். நண்பர்களால் தொல்லை உண்டு.

    மீனம்

    புகழ் கூடும் நாள். பயணங்களால் ஆதாயம் உண்டு. பஞ்சாயத்துக்கள் சாதகமாகும். பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும்.

    • அறிவியல் ரீதியாக ஓசோன் மண்டலம் பூமிக்கு மிக அருகில் வரும் காலம் என்பதால் இந்த மாதத்தில் அதிகாலையில் எழுந்து பெண்கள் வாசலில் கோலமிட வேண்டும்.
    • மார்கழி மாதம் இறை வழிபாட்டிற்கே உரிய மாதம்.

    தமிழ் மாதங்களில் மார்கழி மாதம் ஒன்பதாவது மாதமாகும். இந்த மாதம் முழுவதும் இறைவனுக்கு உகந்ததாகவே போற்றப்படுகிறது.

    மார்கழி மாதத்தில் சூரிய பகவான், குரு பகவானின் வீட்டில் சஞ்சரிக்கும் காலம். இது தேவர்கள் கண் விழிக்கும் அதிகாலை பொழுதாக சொல்லப்படுகிறது. அதாவது தேவர்களுக்கு பிரம்ம முகூர்த்த காலம் ஆகும். அவர்கள் கண் விழிக்கும் சமயத்தில், நாம் இறை வழிபாட்டில் ஈடுபட்டு, என்ன வேண்டிக் கொண்டாலும் அதை அப்படியே அவர்கள் அருள்வார்கள்.

    அறிவியல் ரீதியாக ஓசோன் மண்டலம் பூமிக்கு மிக அருகில் வரும் காலம் என்பதால் இந்த மாதத்தில் அதிகாலையில் எழுந்து பெண்கள் வாசலில் கோலமிட வேண்டும் என்றும், ஆண்கள் பஜனைக்கு செல்ல வேண்டும் என்றும் சொல்லி வைத்தார்கள்.

    மார்கழி மாதத்தில் சூரிய உதயத்திற்கு முன்பாக எழுந்து, குளித்து விட்டு இறை நாமங்களை ஒரு முறை சொன்னால் கூட, மற்ற நேரங்களில் ஒரு கோடி முறை நாம ஜபம் செய்ததற்கு சமம்.

    ஒரு ஆண்டில் பதினோரு மாதங்கள் கோவில்களுக்கு போக முடியாதவர்கள் மார்கழி மாதம் மட்டும் கோவிலுக்கு சென்றாலே வருடம் முழுவதும் கோவிலுக்கு சென்ற பலன்கள் கிடைத்துவிடும் என்பது ஐதீகம்.

    வருடத்தின் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு சிறப்பு உண்டு. ஒவ்வொரு வகையில் ஒவ்வொரு மாதமும் கொண்டாடப்படுகிறது. அவற்றில் மிக உயர்வானதாக சொல்லப்படுவது மார்கழி மாதம். இது இறை வழிபாட்டிற்கே உரிய மாதம் ஆகும். அதனால் தான் அர்ஜூனனுக்கு செய்த கீதை உபதேசத்தில், மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என கிருஷ்ண பகவான் விரும்பி சொல்லி உள்ளார்.

    • கூட்ட நெரிசலுக்கு தகுந்தாற்போல் “ஸ்பாட் புக்கிங்” எண்ணிக்கை அதிகரிக்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டது.
    • கடந்த சில நாட்களாக பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்தனர்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை கடந்த மாதம் (நவம்பர்) 17-ந்தேதி தொடங்கியது. அன்று முதல் தினமும் மாலையணிந்து விரதமிருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு சென்று வந்த வண்ணம் உள்ளனர்.

    பக்தர்கள் வருகை கட்டுக்கடங்காத வகையில் இருந்ததால் நடை திறக்கப்பட்ட நாளில் இருந்து தொடர்ச்சியாக கூட்ட நெரிசல் இருந்து வந்தது. இந்த விவகாரத்தில் ஐகோர்ட்டு தலையிட்டதன் காரணமாக கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தேவசம் போர்டு உடனடியாக அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது.

    ஆன்லைன் முன்பதிவு மூலமாக தினமும் 70 பேருக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்ட நிலையில், உடனடி முன்பதிவு (ஸ்பாட் புக்கிங்) மூலமாக 20 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்பட்டதை 5 ஆயிரமாக குறைக்கப்பட்டது.

    ஐகோர்ட் உத்தரவின் பேரில், கூட்ட நெரிசலுக்கு தகுந்தாற்போல் "ஸ்பாட் புக்கிங்" எண்ணிக்கை அதிகரிக்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டது. இதனால் கடந்த சில நாட்களாக பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்தனர்.

    இந்தநிலையில் தற்போது பக்தர்களின் வருகை மீண்டும் அதிகரித்திருக்கிறது. இதனால் தினமும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக நடை திறந்திருக்கும் நேரம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. முதலில் அதிகாலை 3 மணி முதல் மதியம் ஒரு மணி வரையிலும், பிற்பகல் 3 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் கோவில் நடை திறக்கப்பட்டிருந்தது. தற்போது அதில் 45 நிமிடங்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    மதியம் ஒரு மணிக்கு பதிலாக 1.30 மணிக்கும், இரவு 11 மணிக்கு பதிலாக 11.15 மணிக்கும் கோவில் நடை அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தினமும் கூடுதலாக 3,500 பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியும். சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு கூடுதலாக 45 நிமிடங்கள் கிடைத்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.

    • சிவபக்தனாக வீரபாகு பாண்டிய மன்னனுக்கும், விக்கிரமசோழனுக்கும் நீண்ட காலமாக பகை இருந்து வந்தது.
    • சிவபெருமானின் கோபத்தால் விக்கிரமசோழனின் கண்பார்வை பறிபோனது.

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தேவதானம் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது, நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோவில். தென் தமிழகத்தின் பஞ்சபூதத் தலங்களில் இக்கோவில் ஆகாயத் தலமாக போற்றப்படுகிறது.

    தல வரலாறு

    சிவபக்தனாக வீரபாகு பாண்டிய மன்னனுக்கும், விக்கிரமசோழனுக்கும் நீண்ட காலமாக பகை இருந்து வந்தது. விக்கிரசோழன், பாண்டிய மன்னன் மீது பலமுறை போர் தொடுத்தும், அவனை வெல்ல முடியவில்லை. இதனால், அவனை வஞ்சகத்தால் கொல்ல முடிவு செய்தான். அதன்படி, அவனுடன் நட்பு கொள்வதாகக் கூறி, நச்சு கலந்த ஆடையை தன்னுடைய சேவகனிடம் பரிசாக அனுப்பி வைத்தான். அந்த ஆடையை அணிந்தவர் எரிந்து சாம்பலாகி விடுவார்.

    இறைவன் அருளால், சோழ மன்னனால் தனக்கு ஏற்பட இருந்த சதித் திட்டத்தை பாண்டிய மன்னன் அறிந்து கொண்டான். தனக்கு பரிசாக அனுப்பி வைத்த நச்சு ஆடையை, அதைக் கொண்டு வந்த சேவகனுக்கே அணிவித்தான். சிறிது நேரத்தில் அந்த சேவகன் எரிந்து சாம்பலானான். நச்சு ஆடையை அணியவிடாமல் காப்பாற்றிய சிவபெருமானுக்கு பாண்டிய மன்னன் கோவில் எழுப்பினான். மேலும், இத்தல இறைவனுக்கு 'நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி' என்றும் பெயர் சூட்டினான்.

    அதே சமயம் சிவபெருமானின் கோபத்தால் விக்கிரமசோழனின் கண்பார்வை பறிபோனது. பிறகு, தன் தவறை உணர்ந்த விக்கிரமசோழன், பாண்டிய மன்னனிடம் மன்னிப்பு கேட்டான். மேலும், தனக்கு மீண்டும் கண்பார்வை கிடைக்க வேண்டி தேவதானம் வந்து இத்தல இறைவனை வழிபட்டான். அதன் காரணமாக விக்கிரமசோழனுக்கு ஒரு கண்பார்வை மட்டும் கிடைத்தது.

    இதையடுத்து மற்றொரு கண்ணுக்கும் பார்வை கிடைக்க வேண்டும் என்று வேண்டினான். அப்போது சிவபெருமான், ''மற்றொரு கண்ணுக்கும் பார்வை வேண்டும் என்றால், இவ்வூரின் அருகிலேயே இன்னும் ஒரு கோவிலை எழுப்பு'' என்று அசரீரியாக ஒலித்தார். அதன்படி அருகில் இருக்கும் சேத்தூர் என்ற இடத்தில் விக்கிரமசோழன் கோவில் கட்டினான். இதையடுத்து, அவனுக்கு மற்றொரு கண்பார்வையும் கிடைத்தது.

    அகத்திய முனிவரின் வேண்டுகோளுக்கு இணங்க, உலக மக்களின் நன்மைக்காக பார்வதி தேவி சிவபெருமானை நோக்கி ஊசி முனையில் நின்று தவம் இயற்றினார். இதனால் இங்குள்ள அம்பாள், தவமிருந்த நாயகி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

    கோவில் அமைப்பு

    கோவில் முகப்பு வாசலை தாண்டி உள்ளே நுழைந்ததும், கொடிமர மண்டபம் காணப்படுகிறது. அதில் கொடிமரம் அழகுற காட்சி அளிக்கிறது. அதையடுத்து, கொலுமண்டபம், தியான மண்டபம், அர்த்த மண்டபம், கர்ப்ப மண்டபம் என மண்டபங்கள் காணப்படுகின்றன. கருவறையில் லிங்க வடிவமாக நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி அருள்பாலிக்கிறார். கோவிலை சுற்றி தட்சிணாமூர்த்தி, விஷ்ணு - மகாலட்சுமி, பிரம்மா, சரஸ்வதி, கன்னிமூல கணபதி, வள்ளி - சமேத முருகப்பெருமான், சனீஸ்வரர், சண்டிகேஸ்வரர், பைரவர் ஆகியோர் வீற்றிருக்கிறார்கள். கோவில் வெளிச்சுற்று பிரகாரத்தில் திருக்கொழுந்தீஸ்வரர், கண் கொடுத்த சிவன், கண் எடுத்த சிவன் ஆகிய மூன்று சிவன் சன்னிதிகள் உள்ளன. கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள், இந்த மூன்று சன்னிதி களையும் வழிபட்டு வந்தால் விரைவில் கண் சம்பந்தப்பட்ட குறைபாடுகள் சரியாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    குழந்தை பாக்கியம் வேண்டி வரும் தம்பதியர், இக்கோவிலில் உள்ள நாகலிங்க மரத்தின் பூக்களை பறித்து சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். பின்பு, அந்தப் பூக்களை பிரசாதமாக பெற்று உண்டால் குழந்தை பாக்கியம் கிடைப்பதாக நம்பப்படுகிறது.

    அமைவிடம்

    விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் - புளியங்குடி சாலையில் ராஜபாளையத்தில் இருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ளது தேவதானம். அங்கிருந்து உள்ளே 3 கி.மீ. தூரத்தில் இக்கோவில் அமைந்துள்ளது.

    ×