என் மலர்
வில்லனாக அறிமுகமாகி, தற்போது ஒட்டுமொத்த திரையுலகையும் தன்னை சூப்பர் ஸ்டார் என அழைக்க வைப்பவர்தான் நடிகர் ரஜினி. ரஜினிகாந்த் திரையில் அறிமுகமாகி இந்தாண்டோடு ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்தன. இதற்கு பல பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த திரைசாதனையை கொண்டாடும் வகையில், அவரது பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் தேதி, அவரது 'படையப்பா' படம் மீண்டும் திரையரங்குகளில் புதிய பொலிவுடன் திரையிடப்படுகிறது.
இந்த தகவலை சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார். மேலும் படையப்பா படம் தொடர்பான தனது அனுபவங்களை ரஜினி பகிர்ந்துகொள்ளும் ஒரு சிறப்பு க்ளிம்ப்ஸ் வீடியோவும் இன்று மாலை வெளியாகும் எனவும் தெரிவித்திருந்தார்.
ஆனால் வீடியோ வெளியாகவில்லை. இந்நிலையில் தொழில்நுட்ப கோளாறால் வீடியோ வெளியாக தாமதமாவதாக தெரிவித்துள்ளார். விரைவில் வீடியோ வெளியிடப்படும் எனவும் தெரிவிதார்.
ஆனால், ரசிகர்கள் நீண்ட நேரமாக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த நிலையில், வீடியோ வெளியாகவே இல்லை. இந்த நிலையில், சௌந்தர்யா ரஜினிகாந்த் புதிய போஸ்டருடன் அப்டேட் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில்," படையப்பா படத்தின் மாயாஜாலத்தை மீண்டும் அனுபவிக்கும் வகையில், தலைவரின் பிரத்யேக வீடியோ இன்றிரவு 7 மணிக்கு வௌியாகும்" என குறிப்பிட்டுள்ளார்.
சுனாமியல் குடும்பத்தை இழந்த நாயகன் கௌதம் கண்ணகி நகரில் வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த தீபா உமாபதியை ஐந்து பேர் சேர்ந்து கடத்தி கற்பழித்து கொன்றதாக கௌதமுக்கு தகவல் கிடைக்கிறது. இதை அறிந்த கௌதம் அவர்களை பழிவாங்க திட்டம் போடுகிறார்.
இறுதியில் தீபாவிற்கு என்ன ஆனது? அந்த ஐந்து பேர் யார்? கௌதம் அவர்களை பழிவாங்கினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் கதையின் நாயகனாக நடித்து இருக்கும் கௌதம், கண்ணகி நகர் மொழியை உள்வாங்கி, முக பாவனைகளில் வெளிப்படுத்துகிறார். நாயகியான தீபா உமாபதி எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். படத்தில் நடித்த மற்ற கதாபாத்திரங்கள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.
இயக்கம்
எல்லா உறவுகளையும் இழந்த பின்பு ஒரு மனிதனின் கடைசி முடிவு என்ன என்பதை மக்களுக்கு காட்டியிருகிறார் இயக்குனர் குணா. சென்னை தமிழ், கண்ணகி நகர், காட்சிப்படுத்திய விதம் அருமை. வலுவான காட்சிகள் இல்லாதது படத்திற்கு பலவீனம்.
இசை
தேவாவின் இசையில் பாடல்கள் படத்தின் முதுகெலும்பாக அமைந்திருக்கிறது. பின்னணி இசையை தேவையான அளவிற்கு கொடுத்து இருக்கிறார்.
ஒளிப்பதிவு
பா.மு.முஹம்மது ஃபர்ஹான் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
ரேட்டிங்- 2/5
- அவர் நடித்த முதல் படம் கிச்சா. அதனால் அவரை அவரது ரசிகர்கள் கிச்சா சுதீப் என அழைக்கிறார்கள்.
- இது கிச்சா சுதீப்பின் 47- வது படமாகும்.
கன்னட திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் கிச்சா சுதீப். அவர் நடித்த முதல் படம் கிச்சா. அதனால் அவரை அவரது ரசிகர்கள் கிச்சா சுதீப் என அழைக்கிறார்கள். இவர் நடிகர் விஜய்யின் புலி, நானியின் 'நான் ஈ' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இவரது நடிப்பில் கடைசியாக வெளியான மேக்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தை விஜய் கார்த்திகேயா இயக்கினார்.
இந்நிலையில் கிச்சா மீண்டும் விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இது கிச்சா சுதீப்பின் 47- வது படமாகும். இந்த படத்திற்கு மார்க் என பெயரிடப்பட்டுள்ளது.
மேலும், இப்படம் வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், மார்க் படத்தின் டிரெய்லர் தற்போது படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.
- அனில் ரவிபுடி அடுத்ததாக சிரஞ்சீவி நடிக்கும் 157 திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
- கேத்ரீன் தெரேசா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
கடந்த ஜனவரி மாதம் வெங்கடேஷ், மீனாட்சி சவுத்ரி மற்றும் ஐஷ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியானது சங்கராந்திகி வஸ்துனம் திரைப்படம். இப்படத்தை அனில் ரவிபுடி இயக்கினார்.
இப்படம் வெளியாகி பிளாக்பஸ்டர் திரைப்படமாக அமைந்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அனில் ரவிபுடி அடுத்ததாக சிரஞ்சீவி நடிக்கும் 157 திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
படத்திற்கு மன ஷங்கர வரபிரசாத் என தலைப்பு வைத்துள்ளனர். படத்தின் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். கேத்ரீன் தெரேசா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். படத்தை சாகு கரபதி மற்றும் சுஷ்மிதா கொனிடேலா தயாரிக்கின்றனர்.
இந்த படத்தின் முதல் பாடல் "மீசால பில்லா" அண்மையில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் 2வது பாடலான
"சசிரேகா" தற்போது வெளியாகி உள்ளது.
இப்பாடலை பீம்ஸ் செசிரோலியொ மற்றும் மது பிரியா ஆகியோர் பாடியுள்ளனர். இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகிறார் கதையின் நாயகன் நிவாஸ் ஆதித்தன். ஒரு கட்டத்தில் ஆன்லைன் ஆப் மூலம் கடன் வாங்குகிறார். இதனால், எதிர்பாராத விபரீதத்தை சந்திக்கிறார்.
இந்த கடனில் சூழல் என்ன ?, அதில் இருந்து அவர் தப்பித்தாரா? இல்லையா? என்பது படத்தின் மீதிக்கதை..
நடிகர்கள்
கதையின் நாயகன் நிவாஸ் ஆதித்தன், உணர்வுப்பூர்வமாக நடித்துள்ளார். அளவாக நடித்து தனது கதாபாத்திரத்திற்கும், திரைக்கதைக்கும் பலம் சேர்த்திருக்கிறார். மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அபிநய், நாயகனுக்கு இணையாக கவனம் ஈர்க்கிறார்.
ஆத்விக், எஸ்தர் ஆகியோரின் நடிப்பு படத்திற்கு கூடுதல் பலம்.
இயக்கம்
ஒரு சம்பவத்தின் மூலம் பல உண்மைகளை சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர் அபிஷேக் லெஸ்லி. உண்மை சம்பவத்தின் பின்னணியில், அதிர்ச்சிகரமான கற்பனை மூலம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்த முயற்சிக்கிறார். ஆங்காங்கே படத்தின் ஓட்டத்தில் வரும் தொய்வு படத்திற்கு பலவீனம். கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
இசை
படத்தின் பின்னணி இசை பாராட்டக்கூடியது.
ஒளிப்பதிவு
ஒளிப்பதிவாளர் சபரி நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
ரேட்டிங்- 1.5/5
- வில்லனாக அறிமுகமாகி, தற்போது ஒட்டுமொத்த திரையுலகையும் தன்னை சூப்பர் ஸ்டார் என அழைக்க வைப்பவர்
- விரைவில் க்ளிம்ஸ் வீடியோ வெளியாகும்
வில்லனாக அறிமுகமாகி, தற்போது ஒட்டுமொத்த திரையுலகையும் தன்னை சூப்பர் ஸ்டார் என அழைக்க வைப்பவர்தான் நடிகர் ரஜினி. ரஜினிகாந்த் திரையில் அறிமுகமாகி இந்தாண்டோடு ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்தன. இதற்கு பல பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த திரைசாதனையை கொண்டாடும் வகையில், அவரது பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் தேதி, அவரது 'படையப்பா' படம் மீண்டும் திரையரங்குகளில் புதிய பொலிவுடன் திரையிடப்படுகிறது.
இந்த தகவலை சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார். மேலும் படையப்பா படம் தொடர்பான தனது அனுபவங்களை ரஜினி பகிர்ந்துகொள்ளும் ஒரு சிறப்பு க்ளிம்ப்ஸ் வீடியோவும் இன்று மாலை வெளியாகும் எனவும் தெரிவித்திருந்தார். ஆனால் வீடியோ வெளியாகவில்லை. இந்நிலையில் தொழில்நுட்ப கோளாறால் வீடியோ வெளியாக தாமதமாவதாக தெரிவித்துள்ளார். விரைவில் வீடியோ வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
- அம்பிகா அனுபவ நடிப்பை வழங்கியுள்ளார்
- நாடக வடிவில் நகர்கிறது படம்.
கட்டுமான நிறுவனம் ஒன்றில் முதன்மை பொறியாளராக பணியாற்றுகிறார் படத்தின் நாயகி சாக்ஷி அகர்வால் (சாரா). சாராவுக்கும், அங்கு பணியாற்றும் மற்றொரு பொறியாளர் விஜய் விஷ்வாவுக்கும் காதல் மலர்கிறது. காதலுக்கு சாராவின் பெற்றோரும் ஒப்புதல் அளித்தனர். இச்சூழலில் கட்டிடங்களுக்கு கலப்பட மணல் அனுப்பி ஏமாற்றும் வெட்டுக்கிளிக்கும் (மிரட்டல் செல்வா) சாராவுக்கும் பகை ஏற்படுகிறது.
இவர்களுக்கு மத்தியில் கட்டுமான நிறுவனத்தில் வாட்ச்மேனாக இருப்பவர் ரோபோ சங்கர். காசுக்காக எதையும் செய்பவர். அவருடைய நண்பன் யோகிபாபு. இவர்களின் அனைவரின் கேலி, கிண்டல்களுக்கு உள்ளாகி, மதிக்கப்படாமல் அந்த இடத்தை சுற்றி கொண்டிருக்கும் ஒரு நபர் செல்லக்குட்டி. இவர்கள் அனைவரும் வெட்டுக்கிளிக்கு உதவியாக சாரவைக் கடத்த முயல்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு முன்னால் செல்லக்குட்டி சாராவையும், அவளது காதலரையும் கடத்துகிறார். செல்லக்குட்டி ஏன் சாராவை கடத்தவேண்டும்? கல்யாணம் நடந்ததா? என்பதே மீதிக்கதை.
நடிப்பு
தனக்கான ரோலில் கட்சிதமாக நடித்துள்ளார் சாக்ஷி அகர்வால். விஜய் விஷ்வா, சில காட்சிகளோடு காணாமல் போகிறார். படத்தின் இயக்குநர் செல்லக்குட்டி, வாட்டர்மெலன் ஸ்டார் திவாகரையே மிஞ்சுகிறார் என பார்வையாளர்கள் விமர்சனம் செய்வதற்கு ஏற்றார்போல ஓவர்டோஸ் நடிப்பு. அம்பிகா அனுபவ நடிப்பை வழங்கியுள்ளார். யோகி பாபு, ரோபோ சங்கர், பழைய ஜோக் தங்கதுரை ஆகியோரின் காமெடி பரவாயில்லை. ஆனால் ஆபாச வசனங்களை தவிர்த்திருக்கலாம். இறுதியாக நாடக வடிவில் நகர்கிறது படம்.
இயக்கம்
இயக்குநர் செல்லகுட்டி, தான் சொல்ல நினைத்த கதையில் எப்படியோ பாதியை சொல்லிவிட்டார். பவர் ஸ்டார், நடிப்பு அரக்கன் என அனைத்து கோமாளிகளையும் தூக்கி சாப்பிடும் அளவுக்கு அதிரடியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் செல்லகுட்டி, இயக்குநராக வெற்றி பெறவில்லை என்றாலும், ஒரு நடிகராக நிச்சயம் டிரெண்டாக வாய்ப்புள்ளது.
இசை
இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையில் பாடல்களும், பின்னணி இசையும் பரவாயில்லை.
ஒளிப்பதிவு
ஒளிப்பதிவாளர் ஜெ.லக்ஷ்மன் குமார் கதைக்கு ஏற்ப காட்சிகளை படமாக்கியுள்ளார். படத்தொகுப்பாளர் ஜான் ஆபிரகாம் இயக்குநரின் கதையை சிதைக்காத வகையில் காட்சிகளை தொகுத்திருக்கிறார்.
இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ்-ன் அடுத்த படத்தை அறிமுக இயக்குனரான மரியா ராஜா இளஞ்செழியன் இயக்குகிறார். அவர் பிரதீப் ரங்கநாதனின் 'லவ் டுடே' படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.
இந்தப் படத்தில் ஜிவி பிரகாஷ்-க்கு ஜோடியாக ஸ்ரீ கௌரி பிரியா நடிக்கிறார். மேலும் இந்த படத்தின் மூலம் 11 வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு அப்பாஸ் கம்பேக் கொடுக்கிறார். இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.
மேலும் இப்படத்தை பியாண்ட் பிக்சர்ஸ் (Beyond Pictures) நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படத்தின் டைட்டில் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டது. படத்திற்கு ஹேப்பி ராஜ் என பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் ஒரு ரொமாண்டிக் காமெடி படமாக இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
இன்று மாலை 'ஹாப்பி ராஜ்' படத்தின் First Look போஸ்டர் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், நடிகர் துல்கர் சல்மான் ஹாப்பி ராஜ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
- ரஜினியின் பிறந்தநாளான வரும் 12ம் தேதி அன்று படையப்பா ரீரிலீஸ் ஆகவுள்ளது.
- ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாள் வரும் 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. 75வது பிறந்தநாளை கொண்டாடும் ரஜினிக்கும் அவரது ரசிகர்களுக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் அவரது இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
ஏற்கனவே, ரஜினியின் பிறந்தநாள் அன்று படையப்பா ரீ ரிலீஸ் செய்யப்போவதாக தகவல்கள் வெளியான நிலையில், இன்று அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
அதன்படி, ரஜினியின் பிறந்தநாளான வரும் 12ம் தேதி அன்று சூப்பர் ஹிட் திரைப்படமான படையப்பா 4K தரத்தில் வெளியாக இருப்பதாக சவுந்தர்யா ரஜினிகாந்த் தனது எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்தார்.
இந்நிலையில், படையப்பா ரீ ரிலீஸ் குறித்து ரஜினிகாந்த் பேசியுள்ள வீடியோவின் ப்ரோமோவை சவுந்தர்யா ரஜினிகாந்த் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். முழு வீடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாயகன் கார்த்தீஸ்வரன், பல வழிகளில் மோசடி செய்து ரூ.5 ஆயிரம் கோடி சம்பாதிக்கிறார். அந்த பணத்தை எடுத்துக் கொண்டு வெளிநாட்டுக்கு தப்பித்து விட நினைக்கும் போது, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீநிதியிடம் சிக்கிக் கொள்கிறார்.
இறுதியில் போலீஸிடம் சிக்கிக் கொண்ட கார்த்தீஸ்வரன் தப்பித்தாரா? கார்த்தீஸ்வரன் செய்த மோசடிகள் என்ன? மோசடி செய்ய என்ன காரணம்? என்பதே படத்தின் மிதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் கதாநாயகனாக நடித்து இருக்கும் கார்த்தீஸ்வரனே படத்தை இயக்கவும் செய்து இருக்கிறார். பெண் போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் ஸ்ரீநிதி விசாரணை நடத்தும் காட்சிகளில் கவனிக்க வைத்து இருக்கிறார். கார்த்தீஸ்வரன் நண்பர்களாக ஆதவன், அகல்யா வெங்கடேசன் மற்றும் லிவிங்ஸ்டன், பிளாக் பாண்டி ஆகியோர் கொடுத்த வேலையை செய்துள்ளனர்.
இயக்கம்
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் அதிகரித்துக் கொண்டுதான் இருப்பார்கள் என்பதை படத்தில் விழிப்புணர்வோடு சொல்லி இருக்கிறார் இயக்குனர் கார்த்தீஸ்வரன்.
சொல்ல வந்த கதையை இன்னும் கூடுதலாக அழுத்தமாக சொல்லி இருக்கலாம். மோசடி செய்யும் காட்சிகளை பார்க்கும் போது செல்போனை தொடுவதற்கே பயமாக இருக்கிறது. தினமும் ஆன்லைன் மோசடியில் சிக்கி பணத்தை பறிகொடுக்கும் மக்களின் பரிதாப நிலையை அப்படியே சொல்லி இருக்கிறார்.
இசை
ஸ்ரீகாந்த் தேவாவின் இசை குத்தாட்ட பாடலுக்கு ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசையை அதிக இரைச்சலுடன் கொடுத்து இருக்கிறார்.
ஔிப்பதிவு
என்.எஸ்.ராஜேஷ் ஒளிப்பதிவில் காட்சிகளை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.
ரேட்டிங்- 2.5/5
நாயகன் உதய தீப், தனது தந்தையை 2 மாமன்கள் கொலை செய்துவிட்டதாக இருவரையும் பழிவாங்க துடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் மாமனின் மகளை காதலித்து வரும் உதய தீப் அவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறார்.
இந்த நேரத்தில் மாமன் ஒருவர் விபத்தில் மரணம் அடைகிறார். அவரது உடல் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில் எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தபோது மாமனின் உடல் காணாமல் போகிறது. பிணத்தை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதேஷ்பாலாவும் குடும்பத்தினரும் தீவிரமாக தேடிக் கொண்டிருந்தபோது இன்னொரு மாமனும் திடீரென மரணமடைகிறார்.
இறுதியில் காணாமல் போன மாமனின் உடல் கிடைத்ததா? இன்னொரு மாமன் எப்படி இறந்தார்? என்பதே படத்தின் மீதி கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் உதய தீப் இயல்பாகவும் காமெடி கலந்தும் நடித்துள்ளார். சில இடங்களில் ஓவர் ஆக்டிங் போல் இருக்கிறது. போலீஸ் அதிகாரியாக வரும் ஆதேஷ்பாலா காணாமல் போன பிணத்தையும் இன்னொரு மாமன் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்தும் காட்சிகளில் கவனிக்க வைத்து இருக்கிறார்.
மற்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் யாசர், மாஸ்டர் விஜய், கவிதா சுரேஷ், பிரேம், கே.சேஷாத்திரி ஆகியோர் நடிப்பு படத்துக்கு பக்கபலமாக அமைந்துள்ளன.
இயக்கம்
காணாமல் போகும் பிணத்தை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஆண்டனி அஜித். ஆரம்பத்தில் புரியாமல் செல்லும் திரைக்கதை, இறுதியில் சமூகத்தில் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ள போதை கலாச்சாரம் பற்றி பேசியிருப்பது சிறப்பு. இன்னும் அழுத்தமாக சொல்லி இருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.
இசை
சரண் ராகவன், வி.ஜே.ரகுராம் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்.
ஒளிப்பதிவு
பூபதி வெங்கடாசலத்தின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.
ரேட்டிங்- 2.5/5
- ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவான ஆவேஷம் படம் பெரும் வரவேற்பை பெற்றது.
- இப்படத்தில் சூர்யா காவல் அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா. தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்துள்ள 45-வது படமான 'கருப்பு' படம் விரைவில் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா, வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா 46 படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு வெளியாக இருக்கிறது.
இதனை அடுத்து, ஆவேஷம் படத்தின் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்ற ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிக்கிறார் சூர்யா. இது சூர்யாவின் 47-வது படமாகும். இப்படத்தில் ஃபஹத் பாசில் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் சூர்யா காவல் அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
மேலும் இந்த படம் மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் படமாக்கப்பட உள்ளது.
இந்நிலையில், நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஜித்து மாதவன் இணையும் "சூர்யா 47" திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது.
சென்னையில் நடந்த பூஜையில் நடிகர் சூர்யா, நடிகை நஸ்ரியா நசீம், இயக்குநர் ஜித்து மாதவன் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்
இதனையடுத்து சூர்யா 47 படம் தொடர்பான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.








