என் மலர்
ஆன்மிகம்
- சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
- ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு மாசி-28 (வியாழக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : நவமி மறுநாள் விடியற்காலை 5.56 மணி வரை பிறகு தசமி
நட்சத்திரம் : மூலம் நள்ளிரவு 12.12 மணி வரை பிறகு பூராடம்
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம் : தெற்கு
நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு திருமஞ்சன சேவை, முருகப்பெருமானுக்கு வைரவேல் தரிசனம்
சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம், மைசூர் மண்டபம் எழுந்தருளல். ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் புறப்பாடு. சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திர ரத வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சன சேவை.
குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமானுக்கும் தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கும் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாளுக்கு திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை, பவனி. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நன்மை
ரிஷபம்-வரவு
மிதுனம்-நிறைவு
கடகம்-பாராட்டு
சிம்மம்-நலம்
கன்னி-இன்பம்
துலாம்- பக்தி
விருச்சிகம்-லாபம்
தனுசு- ஆக்கம்
மகரம்-தனம்
கும்பம்-களிப்பு
மீனம்-ஆதரவு
- மகாவிஷ்ணுவுக்கும், பிரம்மாவுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்டது.
- ஹீரா நதி எனும் பாலாற்றில் நீராடிவிட்டு, பின்பு இக்கோவில் அருகில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராட வேண்டும்.
வேலூர் மாவட்டம் திருவிரிஞ்சிபுரத்தில் மரகதாம்பிகை உடனுறை மார்க்கபந்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை 'கடை ஞாயிறு' திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுகிறது. இந்த விழாவையொட்டி திறக்கப்படும் சிம்ம குளத்தில் நீராடி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை.
மகாவிஷ்ணுவுக்கும், பிரம்மாவுக்கும் தங்களில் யார் பெரியவர்' என்ற போட்டி ஏற்பட்டபோது, சிவனின் அடியையோ, முடியையோ காண்பவர்களே பெரியவர் என்று சொல்லப்பட்டது. அப்போது பிரம்ம தேவர் சிவனின் முடியை கண்டதாக பொய் கூறினார். இதனால் சிவபெருமானிடம் சாபம் பெற்ற பிரம்ம தேவர், இத்தலத்தில் உள்ள மார்க்கபந்தீஸ்வரரை பூஜித்து சாப விமோசனம் பெற்றதாக இக்கோவில் தல வரலாறு கூறுகிறது.
இந்த ஆலயத்தில் உள்ள சிம்ம தீர்த்தம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இக்குளத்தை ஆதி சங்கரர் பிரதிஷ்டை செய்ததாக கூறப்படுகிறது. இந்த குளம் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படுகிறது. அதாவது,
கார்த்திகை மாதம் நடைபெறும் கடை ஞாயிறு விழாவின் முந்தைய நாளான சனிக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு இக்குளம் திறக்கப்படும்.
முதலில், ஹீரா நதி எனும் பாலாற்றில் நீராடிவிட்டு, பின்பு இக்கோவில் அருகில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராட வேண்டும். அதைத் தொடர்ந்து சிம்ம வாய் முகம் கொண்ட சிம்ம தீர்த்தத்தில் நீராடி, ஈர உடையுடன் மடியில் பூ, பழம், தேங்காய் வைத்துக்கொண்டு கோவில் பிரகாரத்தில் படுத்து உறங்குகிறார்கள். அப்போது அவர்கள் கனவில் சிவபெருமான் தோன்றி, பழம், பூ, பாலாடை கொடுத்து குழந்தை வரம் அருள்வார் என்பது நம்பிக்கை.
வேலூர் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் செதுவாலை என்ற இடத்தில் இருந்து 1 கி.மீ. தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது.
- ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதிக்கு பால் அபிஷேகம்.
- புளியங்குடி வள்ளியம்மை கோவிலில் அலங்கார திருமஞ்சனம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு மாசி-27 (புதன்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : அஷ்டமி நாளை காலை 4.05 மணி வரை பிறகு நவமி
நட்சத்திரம் : கேட்டை இரவு 9.49 மணி வரை பிறகு மூலம்
யோகம் : சித்த, மரணயோகம்
ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை
ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதிக்கு பால் அபிஷேகம். மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோவர்த்தனகிரியில் பந்தலடி சென்று திரும்புதல் கண்ணன் அலங்காரம். வேலூர் கோட்டை ஸ்ரீ துர்க்கையம்மன், கதிராமங்கலம் ஸ்ரீ வனதுர்க்கையம்மன், பட்டீஸ்வரம் ஸ்ரீ துர்க்கை கோவில்களில் காலையில் சிறப்பு அபிஷேகம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம், கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை.
மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் கோவில்களில் திருமஞ்சன சேவை. விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் காலையில் அபிஷேகம். திருநெல்வேலி சமீபம் 4-ம் நவதிருப்பதி திருபுளியங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவிலில் அலங்கார திருமஞ்சனம். கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்க வாசகர் புறப்பாடு. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரிய பெருமாள் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-தேர்ச்சி
ரிஷபம்-தனம்
மிதுனம்-பரிசு
கடகம்-வரவு
சிம்மம்-தெளிவு
கன்னி-கடமை
துலாம்- இன்பம்
விருச்சிகம்-ஆதரவு
தனுசு- உயர்வு
மகரம்-பணிவு
கும்பம்-மேன்மை
மீனம்-ஆதரவு
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
சந்தித்தவர்களிடம் சிந்தித்துப் பேசவேண்டிய நாள். வேலை பளு அதிகரிக்கும். முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோக பிரச்சனை நீடிக்கும்.
ரிஷபம்
நண்பர்களால் நல்ல காரியம் ஒன்று நடைபெறும் நாள். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். வரன்கள் வாயில் தேடி வந்து சேரும்.
மிதுனம்
உற்சாகத்தோடு பணிபுரியும் நாள். உள்ளன்போடு பழகியவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். தேகநலன் கருதி ஒரு தொகையைச் செலவிடுவீர்கள்.
கடகம்
எதிலும் முன்னிலை வகிக்கும் நாள். சாமர்த்தியமான பேச்சுகளால் சாதனை படைப்பீர்கள். உறவினர்களின் சந்திப்பு கிட்டும். நவீன பொருட்களை வாங்குவதில் ஆர்வம் ஏற்படும்.
சிம்மம்
நினைத்ததை முடித்து நிம்மதி காணும் நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும்.
கன்னி
முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். சகோதர ஒற்றுமை பலப்படும். நேற்றைய பிரச்சனை ஒன்று இன்று நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
துலாம்
மகிழ்ச்சி கூடும் நாள். நினைத்தது நிறைவேறும். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். வரவு திருப்தி தரும். உத்தியோக உயர்வு உண்டு.
விருச்சிகம்
நல்ல காரியம் நடைபெறும் நாள். பிரியமான சிலரைச் சந்திக்க நேரிடும். நாவன்மையால் நல்ல பெயர் கிடைக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
தனுசு
போட்டிகளைச் சமாளித்து புகழ் காணும் நாள். திடீர் செலவுகள் இருந்தாலும் அதை ஈடுசெய்ய வரவு வந்துசேரும். பாகப் பிரிவினைகள் சுமூகமாக முடியும்.
மகரம்
யோகமான நாள். பொருளாதார நிலை உயரும். சகோதர வழி ஒத்துழைப்பு உண்டு. அயல்நாட்டிலிருந்து ஆதாயம் தரும் தகவல் வரலாம்.
கும்பம்
அன்றாடப் பணிகள் நன்றாக நடைபெறும் நாள். வீட்டு பராமரிப்பில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். கூட்டுத் தொழிலில் இருந்த பிரச்சனைகள் அகலும்.
மீனம்
இடமாற்றம் பற்றிய செய்தி வந்து சேரும் நாள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் வெறுப்புக்கு ஆளாக நேரிடும். வரவைவிட செலவு கூடும்.
- பங்குனி உத்திர திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் ஏப்ரல் 1-ந்தேதி நடைபெறுகிறது.
- 30-ந்தேதி மட்டும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் தங்க ரத புறப்பாடு நடைபெற உள்ளது.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் பங்குனி உத்திரமும் ஒன்றாகும். இவ்விழாவின் முக்கிய அம்சமே ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்து முருகபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவதுதான்.
இந்த வருடத்திற்கான திருவிழா வருகிற 26-ந்தேதி திருஆவினன்குடி கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழா நடைபெறும் 10 நாட்களும் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசாமி வெள்ளி காமதேனு, வெள்ளி ஆட்டு கிடா, வெள்ளியானை, தங்க குதிரை, தங்க மயில் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் மார்ச் 31-ந்தேதி நடைபெறும். அன்றைய தினம் இரவு வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசாமிக்கு திருக்கல்யாணமும், இரவு 9 மணி அளவில் வெள்ளி ரதத்தில் மணக்கோலத்தில் சுவாமி சன்னதி வீதி, கிரி வீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.
பங்குனி உத்திர திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் ஏப்ரல் 1-ந்தேதி நடைபெறுகிறது. அன்று மாலை 4.20 மணி அளவில் தேரோட்டம் நடைபெறும். ஏப்ரல் 4-ந்தேதி கொடி இறக்குதலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழா நடைபெறும் 10 நாட்களும் குடமுழுக்கு நினைவரங்கில் பக்தி சொற்பொழிவு, இன்னிசை, பரதநாட்டியம், நாதஸ்வர கச்சேரி, வீணை இன்னிசை, பொம்மலாட்டம், தேவராட்டம், சாக்ஷபோன் இசை நிகழ்ச்சி, நாட்டுப்புற பாடல்கள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேஷ் தலைமையிலான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
திருவிழா நடைபெறும் மார்ச் 30-ந்தேதி முதல் ஏப்ரல் 3-ந்தேதி வரை மலைக்கோவிலில் தங்க ரத புறப்பாடு நடைபெறாது என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 30-ந்தேதி மட்டும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் தங்க ரத புறப்பாடு நடைபெற உள்ளது.
- திருவாரூர் தியாகராஜர் புறப்பாடு.
- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு.
10-ந் தேதி (செவ்வாய்)
* மன்னார்குடி ராஜ கோபாலசுவாமி ராஜ அலங்காரம், அம்ச வாகனத்தில் திருவீதி உலா.
* சுவாமிமலை முருகப் பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* குரங்கணி முத்து மாலையம்மன் புறப்பாடு.
* சமநோக்கு நாள்.
11-ந் தேதி (புதன்)
* மன்னார்குடி ராஜ கோபாலசுவாமி கோவர்த்தனகிரியில் பந்தலடி சென்று திரும்புதல்.
* திருவாரூர் தியாகராஜர் புறப்பாடு.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு அலங்கார திருமஞ்சனம்.
* சமநோக்கு நாள்.
12-ந் தேதி (வியாழன்)
* திருபெரும்புதூர் மணவாள மாமுனிகள் புறப்பாடு.
* சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* கீழ்நோக்கு நாள்.
13-ந் தேதி (வெள்ளி)
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப் பல்லக்கில் புறப்பாடு.
* திருவாரூர் தியாகராஜர் பவனி.
* திருவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு.
* கீழ்நோக்கு நாள்.
14-ந் தேதி (சனி)
* காரடையான் நோன்பு.
* மன்னார்குடி ராஜ கோபாலசுவாமி காலை பல்லக்கில் பவனி, இரவு ராஜாங்க அலங்காரம்.
* திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், திருவரங்கம் நம்பெருமாள், மதுரை கூடலழகர் பெருமாள் தலங்களில் அலங்கார திருமஞ்சனம்.
* மேல்நோக்கு நாள்.
15-ந் தேதி (ஞாயிறு)
* முகூர்த்த நாள்.
* சர்வ ஏகாதசி.
* திருநெல்வேலி கரிய மாணிக்கப் பெருமாள் கோவிலில் பங்குனி உற்சவம் ஆரம்பம்.
* சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் புறப்பாடு.
* திருவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்க மன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
* உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள், திருப்பதி ஏழுமலையான் தலங்களில் புறப்பாடு.
* மேல்நோக்கு நாள்.
16-ந் தேதி (திங்கள்)
* முகூர்த்த நாள்.
* பிரதோஷம்.
* சங்கரன்கோவில் கோமதியம்மனுக்கு புஷ்பப் பாவாடை தரிசனம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் மூலவருக்கு அலங்கார திருமஞ்சனம்.
* மேல்நோக்கு நாள்.
- சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.
- திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு மாசி-26 (செவ்வாய்க்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : சப்தமி பின்னிரவு 2.02 மணி வரை பிறகு அஷ்டமி
நட்சத்திரம் : அனுஷம் இரவு 7.16 மணி வரை பிறகு கேட்டை
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
வடபழனி, திருத்தணி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம்
சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். குரங்கணி ஸ்ரீ முத்துமாலையம்மன் புறப்பாடு. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். திருவாதவூர் ஸ்ரீ தியாகராஜர் பவனி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம். திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய கோவிலான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சன சேவை.
திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை. திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்கார அர்ச்சனை. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ முருகப்பெருமான் பவனி. ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் தேவக்கோட்டை ஸ்ரீ சிலம்பணி விநாயகர் கோவில்களில் காலையில் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நலம்
ரிஷபம்-நன்மை
மிதுனம்-நற்செயல்
கடகம்-தாமதம்
சிம்மம்-ஆர்வம்
கன்னி-சாந்தம்
துலாம்- வரவு
விருச்சிகம்-உழைப்பு
தனுசு- வெற்றி
மகரம்-இன்பம்
கும்பம்-விவேகம்
மீனம்-இரக்கம்
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
அவசர முடிவெடுப்பதை தவிர்க்க வேண்டிய நாள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சிகளில் ஆதாயம் ஓரளவே கிடைக்கும்.
ரிஷபம்
முக்கிய புள்ளிகளை சந்தித்து முன்னேற்றம் காணும் நாள். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். கட்டிடப் பணி பாதியில் நிற்கின்றதே என்ற கவலை மாறும்.
மிதுனம்
அடிப்படை வசதிகளை பெருக்கிக்கொள்ளும் நாள். ஆரோக்கியப்பாதிப்புகள் அகலும். சொத்துகளிலிருந்த பிரச்சனைகள் தீரும். அலுவலகப் பணி துரிதமாக நடைபெறும்.
கடகம்
புதிய பாதை புலப்படும் நாள். ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு உண்டு. எதிலும் அவசரப்படாமல் செயல்படுவது நல்லது.
சிம்மம்
பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைக்கும். திட்டமிட்ட காரியத்தை திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். உத்தியோக முயற்சி கைகூடும்.
கன்னி
ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். குடும்ப உறுப்பினர்களால் குழப்பங்கள் உருவாகலாம். வாங்கல், கொடுக்கல்களில் விழிப்புணர்ச்சி தேவை.
துலாம்
பாக்கிகள் வசூலாகும் நாள். எடுத்த காரியங்களில் எளிதில் வெற்றி கிடைக்கும். உத்தியோக முயற்சி கைகூடும். நிகழ்கால தேவைகள் பூர்த்தியாகும்.
விருச்சிகம்
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். புதிய சந்தர்ப்பங்களை உபயோகப்படுத்திக் கொள்ளலாமா என்று சிந்திப்பீர்கள். காலை நேரத்தில் கலகலப்பான தகவல் வந்து சேரும்.
தனுசு
தெய்வீக நாட்டம் அதிகரிக்கும் நாள். சொத்துகளால் ஏற்பட்ட பிரச்சனை அகலும். சொந்தங்களின் ஒத்துழைப்பு குறைவாகவே இருக்கலாம்.
மகரம்
பிரச்சனைகள் இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். நிழல்போல தொடர்ந்து வந்த கடன் சுமை குறையும். நண்பர்கள் வழியில் உதவி கிட்டும். தொழில் வெற்றி நடைபோடும்.
கும்பம்
உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் நாள். நாட்டுப்பற்று மிக்கவர்கள் உங்கள்வீட்டு முன்னேற்றத்திற்கு வழி வகுப்பர். எதிர்பார்த்தபடியே லாபம் கிடைக்கும்.
மீனம்
நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும் நாள். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். அதிகார பதவியில் உள்ளவர்களின் ஆதரவு உண்டு. வருமானம் திருப்தி தரும்.
- மயூரகிரிச் சித்தரின் ஜீவசமாதியாக இருக்கலாம் என்ற கருத்தும் உண்டு.
- அமாவாசை தினங்களில் இங்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
வெற்றி வேலாயுத சுவாமி கோவிலின் கீழ் தென் கிழக்குப்பக்கம் பாம்பு புற்றுக்குத் தனிக்கோவில் அமைந்துள்ளது. பல புற்றுக்கண்களை உள்ளடக்கிய அப்புற்றில் தெய்வீக நாகம் குடிகொண்டுள்ளது. உத்திராயண காலமான தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள காலத்தில் அப்புற்று வளர்வதும், தட்சிணாயன காலமான ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரையிலான காலத்தில் அப்புற்று தேய்வதும் காலங்காலமாக நிகழ்ந்து வரும் அதிசயம் ஆகும்.
அப்புற்றை சுப்பராயர் என்று அழைக்கின்றனர். அப்பாம்பு புற்று மயில் போலக்காட்சி அளிக்கிறது. அப்புற்றின் மேற்புறம் இரண்டு நாகச்சிற்பங்கள் உள்ளன. வெளியில் நாகர் சிற்பமும், வேலும் உள்ளன. இது மயூரகிரிச் சித்தரின் ஜீவசமாதியாக இருக்கலாம் என்ற கருத்தும் உண்டு. அமாவாசை தினங்களில் இங்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
மேலும் அப்பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள் கதித்தமலையானை வழிபடும் முன்பு சுப்பராயர் சன்னதியில் பொங்கல் வைத்து வழிபாடு செய்கின்றனர். நாகதோஷம், ராகு-கேது தோஷம் ஆகியன நீங்க சிறப்பு வழிபாடும் செய்கின்றார்கள்.
- விசேஷ நாட்களில் மருதமலை முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
- பக்தர்கள் மலைப்பாதை வழியாக வாகனங்களிலும், படிக்கட்டுகள் வழியாகவும் மலைக்கோவிலுக்கு சென்று வருகின்றனர்.
கோவை மருதமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் பக்தர்களால் 7-ம் படைவீடு என அழைக்கப்படுகிறது.
இந்த கோவிலுக்கு கோவை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகளவிலான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.
குறிப்பாக விசேஷ நாட்களில் மருதமலை முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். பக்தர்கள் மலைப்பாதை வழியாக வாகனங்களிலும், படிக்கட்டுகள் வழியாகவும் மலைக்கோவிலுக்கு சென்று வருகின்றனர்.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து விட்டு, கோவில் முன்புள்ள கொடிமரம், ராஜகோபுரம் முன்பு நின்று புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்து செல்வர்.
இந்த நிலையில் மருதமலை முருகன் கோவிலில் நாளை முதல் செல்போன் பயன்படுத்தவும், புகைப்படம் எடுக்கவும் தடைவிதிக்கப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மார்ச் 10-ந் தேதி(நாளை) முதல் ராஜகோபுரம் நுழைவு வாயிலில் இருந்து ஆதிமூலவர் சன்னதி, சுப்பிரமணியசுவாமி சன்னதி, பாம்பாட்டி சித்தர் சன்னதி உள்பட அனைத்து சுவாமி சன்னதிகள் மற்றும் கோவில் வளாகத்திற்குள் செல்போன் பேசவும், புகைப்படம் எடுக்கவும் தடை செய்யப்பட்டுள்ளது.
எனவே பக்தர்கள் அனைவரும் கோவில் ராஜகோபுரம் நுழைவு வாயிலில் நுழைவதற்கு முன்பு தங்களது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு அமைதியான முறையில் சுவாமி தரிசனம் செய்ய ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் கோவிலில் பக்தர்கள் பயன்படுத்துவதற்காக லிப்ட் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில் பயணித்து பக்தர்கள் மலைக்கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் லிப்ட்டில் பயணிக்க கோவில் நிர்வாகம் நேற்றுமுதல் கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது. அதன்படி லிப்ட்டில் பயணிக்க பக்தர் ஒருவருக்கு ரூ.30 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
- கருவறை மற்றும் அர்த்தமண்டபத்துக்கு வெளியே துவார கணபதி ஸ்ரீமுருகப்பெருமானும் அருள்பாலிக்கின்றனர்.
- விநாயகர் கோவிலுக்கு உள்ளே செல்லும் வழியில் தேரடி முனீஸ்வரப் பெருமாள் அருள்பாலிக்கின்றார்.
இத்தலத்தில் அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்தியின் சிலா ரூபத் திருமேனி மிகவும் கவினுற வடிக்கப்பட்டுள்ளது சிறப்பான ஒன்றாகும். தென்திசை நோக்கி உலகின் முதல் ஞான குருவாக அமர்ந்து "ஓம்" என்னும் பிரணவப் பொருளை சனகாதி நால்வருக்கு உபதேசம் செய்த மூர்த்தியான இந்த தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் சிறந்த கல்வி ஞானமும் வாழ்க்கையில் உயர்வான நிலையும் கிடைக்கும் என்பது உறுதி.
மும்மலங்களால் கட்டுண்டு கிடக்கும் ஆன்மா, அவற்றினின்று விடுபட்டு, பரமாத்மாவுடன் சேர வேண்டும் என்ற அற்புத விளக்கத்தை உணர்த்தவே தம் வலது திருக்கரத்தை சின்முத்திரை 'காட்டி அருளும் இந்த தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் வழிபட்டால் நவக்கிரக குருவால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி வாழ்க்கை வளம் பெறும்.
கருவறை மற்றும் அர்த்தமண்டபத்துக்கு வெளியே துவார கணபதி ஸ்ரீமுருகப்பெருமானும் அருள்பாலிக்கின்றனர்.
ஆற்றங்கரை விநாயகர்
விநாயகர் கோவிலுக்கு உள்ளே செல்லும் வழியில் தேரடி முனீஸ்வரப் பெருமாள் அருள்பாலிக்கின்றார். சங்கராபரணி நதியில் நீராடிவிட்டு சந்நிதிக்கு வரும் பக்தர் ஆற்றங்கரையில் அருள்பாலிக்கும் விநாயகப் பெருமானை வலம் வந்து தரிசனம் செய்த பிறகே கோவிலுக்கு வந்து ஈசனைத் தரிசனம் செய்யவேண்டும்.
- மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி புன்னைமர வாகனத்தில் கண்ணன் அலங்காரம்.
- திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு மாசி-25 (திங்கட்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : சஷ்டி நள்ளிரவு 11.58 மணி வரை பிறகு சப்தமி
நட்சத்திரம் : விசாகம் மாலை 4.44 மணி வரை பிறகு அனுஷம்
யோகம் : மரண, சித்தயோகம்
ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
திருவான்மியூர், பெசன்ட்நகர், திருமயிலை, திருவிடைமருதூர் சிவன் கோவில்களில் சோமவார அபிஷேகம்
இன்று தேய்பிறை சஷ்டி விரதம். மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி புன்னைமர வாகனத்தில் கண்ணன் அலங்காரம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் மூலவருக்கு அலங்கார திருமஞ்சன சேவை. திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சனம். நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாளுக்கு காலையில் அலங்கார திருமஞ்சன சேவை. திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு.
கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ பூவண்ணநாதருக்கு காலையில் பால் அபிஷேகம். திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத்சுந்தர குசாம்பாள் சமேத ஸ்ரீ மகாலிங்க சுவாமி, திருமயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் ஸ்ரீ அராளகேசி அம்பாள் சமேத ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோவில்களில் காலையில் சிறப்பு சோமவார அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சனம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பக்தி
ரிஷபம்-லாபம்
மிதுனம்-பரிசு
கடகம்-இன்பம்
சிம்மம்-உறுதி
கன்னி-பாராட்டு
துலாம்- பரிவு
விருச்சிகம்-மகிழ்ச்சி
தனுசு- உண்மை
மகரம்-வெற்றி
கும்பம்-புகழ்
மீனம்-பணிவு






