என் மலர்
- வித் லவ் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
- அபிஷன் ஜீவின்ந்துக்கு ஜோடியாக அனஸ்வரா ராஜன் நடித்துள்ளார்.
சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளியான படம் 'டூரிஸ்ட் ஃபேமிலி'. கடந்த மே மாதம் வெளியான இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் இயக்கி இருந்தார். இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழ் குடும்பம் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்து சந்திக்கும் சவால்களை காமெடி கலந்து சொல்லப்பட்டு இருந்ததால் அனைவராலும் ரசிக்கப்பட்டது.
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை தொடர்ந்து அபிஷன் ஜீவின்ந்த் வித் லவ் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில், அபிஷன் ஜீவின்ந்துக்கு ஜோடியாக கேரளாவில் வளர்ந்து வரும் நட்சத்திரமான அனஸ்வர ராஜன் நடித்துள்ளார்.
இப்படத்தை 'டூரிஸ்ட் ஃபேமிலி', 'லவ்வர்' படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய மதன் இயக்கியுள்ளார். MRP என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், வித் லவ் படத்தில் இடம்பெற்றுள்ள முதல் பாடலான 'அய்யோ காதலே' பாடலை இன்று மாலை 6 மணிக்கு இசையமைப்பாளர் அனிருத் வெளியிடுவார் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்பாடலின் ப்ரோமோ நேற்று வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது.
- சிவகார்த்திகேயன் படத்தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார்.
- சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் என்கிற நிறுவனத்தின் மூலம் பல படங்களை தயாரித்து வருகிறார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் சிவகார்த்திகேயன் படத்தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் என்கிற நிறுவனத்தின் மூலம் ஏராளமான படங்களை தயாரித்து வருகிறார்.
சிவகாத்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்த கனா, அருவி, டாக்டர், டான், கொட்டுக்காளி, ஹவுஸ்மேட்ஸ் போன்ற திரைப்படங்கள் வெற்றி பெற்றன.
இந்நிலையில் அவருடைய தயாரிப்பில் வெளியாகும் புதிய படம் தொடர்பான அறிவிப்பை சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் அடுத்தப் படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து சிறப்பான திரைப்படங்களை சிவகார்த்திகேயன் தயாரித்து வருவதால், அவரின் அடுத்த படம் தொடர்பான அறிவிப்பும் மக்களிடையே கவனம் பெற்றுள்ளது.
- நடிகை சமந்தாவுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள ரசிகர் கூட்டம் அவரை சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
- அண்மையில் நடிகை நிதி அகர்வாலுக்கும் இதே போன்ற சம்பவம் நடந்தது
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கடை திறப்பு விழாவின்போது நடிகை சமந்தாவுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள பெரும் ரசிகர் கூட்டம் அவரை சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நடிகை சமந்தா கூட்ட நெரிசலில் இருந்து தப்பித்து வேகமாக தனது காருக்குள் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. நிதி அகர்வாலை தொடர்ந்து சமந்தாவும் சிகர்கள் கூட்டத்தில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் ராஜாசாப் படத்தில் பாடல் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் உள்ள பிரபலமான மாலில் நடைபெற்றது. அதில் நடிகை நிதி அகர்வால் கலந்துகொண்டார். நிகழ்ச்சியை முடித்துவிட்டு நடிகை அங்கிருந்து வெளியே வரும்போது ரசிகர்கள் சூழ்ந்துவிட்டனர். சிலர் அவரிடம் அத்துமீறி நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. இந்த கட்டுக்கடங்காத கூட்டத்தில் சிக்கி திணறிய நடிகை நிதி அகர்வால் பின்பு காரில் ஏறி புறப்பட்டு சென்றுவிட்டார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலானது.
இதனையடுத்து ரசிகர்களின் கட்டுப்பாடற்ற தன்மை மற்றும் சமூக பொறுப்பின்மை குறித்து கவலைகள் எழுப்புவதாக இணையத்தில் பலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
- படத்தின் ப்ரோமோஷனுக்காக சிவராஜ்குமார் சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
- மக்களுக்கு நல்லது செய்ய எதற்கு அரசியலுக்கு வரணும் என்று சிவராஜ்குமார் தெரிவித்தார்
சிவராஜ்குமார், உபேந்திரா நடித்துள்ள 45 திரைப்படம் வரும் 25ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக சிவராஜ்குமார் சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, "தமிழ்நாட்டில் சினிமா பிரபலங்களான MGR முதல் விஜய் வரை பலரும் அரசியலுக்கு வந்துள்ளனர். ஆனால் கர்நாடகாவில் ஏன் அப்படி இல்லை" என்று சிவராஜ்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த சிவராஜ்குமார், "மக்களுக்கு நல்லது செய்ய எதற்கு அரசியலுக்கு வரணும்... நடிகராக இருந்துகொண்டே உதவி பண்ணலாம். காரணம் இது என்னுடைய பணம்... யாரிடமும் பாரபட்சம் பார்க்காமல் உதவி செய்வேன்" என்று தெரிவித்தார்.
சில மாதங்களுக்கு முன்பு திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிவராஜ்குமார், "விஜய் அரசியலுக்கு வரும்போதே அவர் பேசியது எனக்கு பிடித்தது. விஜய் அரசியலுக்கு வந்ததை வரவேற்கிறேன். ஆனால் கரூர் கூட்டநெரிசலில் 41 உயிர் போனது கஷ்டமாக இருந்தது. விஜய் அரசியலில் நிதானமாக முடிவெடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- படையப்பா, டிச.12ஆம் ரீரிலீஸ் செய்யப்பட்டது.
- இதுதொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு வீடியோ எல்லாம் வெளியிட்டிருந்தார்.
நடிகர் ரஜினிகாந்தின் 50 ஆண்டுகால திரைப்பயணம், அவரது 75வது பிறந்தநாள் உள்ளிட்டவற்றை சிறப்பிக்கும் வகையில் அவரது பிளாக்பஸ்டர் படமான படையப்பா, டிச.12ஆம் ரீரிலீஸ் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு வீடியோ எல்லாம் வெளியிட்டிருந்தார். ரீரிலீஸுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ரஜினிகாந்தின் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் நீலாம்பரி கதாபாத்திரத்தில் நடித்து நம்மை மிரட்டிய ரம்யா கிருஷ்ணன் படையப்பா படத்தை திரையரங்கில் கண்டு ரசித்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.
- சென்னை அணியின் கேப்டனாக ஆர்யா செயல்பட்டு வருகிறார்.
- சென்னை ரைனோஸ் என இருந்த அணியை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் வாங்கியுள்ளார்.
செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்கில், சென்னை ரைனோஸ், மும்பை ஹீரோஸ், கர்நாடகா புல்டோசர்ஸ், தெலுங்கு வாரியர்ஸ், போஜ்புரி தபாங்ஸ், பெங்கால் டைகர்ஸ், கேரளா ஸ்டிரைக்கர்ஸ், பஞ்சாப் தி ஷெர் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.
திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி என்பதால், ஆண்டுதோறும் இதற்கான எதிர்பார்ப்பு, அதிகரித்து கொண்டு வருகிறது. சென்னை அணியின் கேப்டனாக ஆர்யா செயல்பட்டு வருகிறார். இதன் நிறுவனர் கங்கா பிரசாத்.
சென்னை அணியில் விஷ்ணு விஷால், ஜீவா, மிர்ச்சி சிவா, ஷாந்தனு, விக்ராந்த், பரத், பிர்த்வி, அஷோக் செல்வன், கலையரசன், ஆதவ் கண்ணதாசன், என்.ஜே. சத்யா, தாசரதி, ஷரவ் உட்பட பல முக்கிய நட்சத்திரங்கள் உள்ளனர்.
இந்நிலையில், சென்னை ரைனோஸ் என இருந்த அணியை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மற்றும் நடிகை ஸ்ரீபிரியா வாங்கியுள்ளனர். மேலும் சென்னை அணியின் பெயரை VELS CHENNAI KINGS என பெயர் மாற்றப்படுவதாக ஐசரி கணேஷ் அறிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கேப்டன் ஆர்யா உட்பட பல நட்சத்திர பட்டாளங்கள் கலந்து கொண்டனர்.
2026 ஜனவரியில் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் தொடர் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
- இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன், நரேன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
- கலைப்புலி எஸ். தாணு இந்த படத்தை தயாரிக்கிறார்.
இயக்குநர் மிஸ்கின் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி கூட்டணியில் "டிரெயின்" என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. கலைப்புலி எஸ். தாணு இந்த படத்தை தயாரிக்கிறார்.
இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன், நரேன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை ஃபௌசியா பாத்திமா மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை ஸ்ரீவத் மேற்கொள்கிறார்.
இந்நிலையில், 'டிரெயின்' படத்தின் முதல் பாடல் அடுத்த 48 மணி நேரங்களில் வெளியாகும் என தயாரிப்பாளர் தாணு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளார்.
- அபிஷன் ஜீவின்ந்துக்கு ஜோடியாக அனஸ்வரா ராஜன் நடித்துள்ளார்.
- ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளியான படம் 'டூரிஸ்ட் ஃபேமிலி'. கடந்த மே மாதம் வெளியான இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் இயக்கி இருந்தார். இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழ் குடும்பம் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்து சந்திக்கும் சவால்களை காமெடி கலந்து சொல்லப்பட்டு இருந்ததால் அனைவராலும் ரசிக்கப்பட்டது.
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை தொடர்ந்து அபிஷன் ஜீவின்ந்த் வித் லவ் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில், அபிஷன் ஜீவின்ந்துக்கு ஜோடியாக கேரளாவில் வளர்ந்து வரும் நட்சத்திரமான அனஸ்வர ராஜன் நடித்துள்ளார்.
இப்படத்தை 'டூரிஸ்ட் ஃபேமிலி', 'லவ்வர்' படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய மதன் இயக்கியுள்ளார். MRP என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், வித் லவ் படத்தில் இடம்பெற்றுள்ள 'அய்யோ காதலே' பாடல் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்பாடலின் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
- சமீபத்தில் அரசன் படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
- கோவில்பட்டியில் அரசன் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.
வெற்றி மாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் 'அரசன்'. இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
வடசென்னை கதைகளத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் சமுத்திரகனி , கிஷோர் , விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
கோவில்பட்டியில் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படத்தின் புரோமோ வீடியோவின் BTS வீடியோவை சிம்பு வெளியிட்டுள்ளார் .
- பராசக்தி படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்
- சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் நடித்துள்ள படம், 'பராசக்தி'. இது சிவகார்த்திகேயனின் 25வது படம்.
ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரித்துள்ள இப்படத்தில் அதர்வா, ரவி மோகன் மற்றும் பசில் ஜோசஃப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நாயகியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார்.
இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 14-ல் ஜனநாயகனுக்கு போட்டியாக இப்படம் ரிலீஸாக உள்ளது.
இதனிடையே இப்படத்தின் அடி அலையே, ரத்னமாலா பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில் இப்படத்தின் மூன்றாவது பாடலான, நமக்கான காலம் பாடல் வெளியாகி உள்ளது. இப்பாடலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
திரைப்படம் இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷன்கள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதன் ஒருபகுதியாக, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பராசக்தி படத்தின் WorldOfParasakthi என்ற நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், World of Parasakthi கண்காட்சி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால், வருகிற 25ம் தேதி வரை கண்காட்சி நீட்டிக்கப்பட்டுள்ளது. பகல் 12 மணி - இரவு 10 மணி வரை கண்காட்சியை கண்டுகளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பராசக்தி படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்
- சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் நடித்துள்ள படம், 'பராசக்தி'. இது சிவகார்த்திகேயனின் 25வது படம்.
ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரித்துள்ள இப்படத்தில் அதர்வா, ரவி மோகன் மற்றும் பசில் ஜோசஃப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நாயகியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார்.
இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 14-ல் ஜனநாயகனுக்கு போட்டியாக இப்படம் ரிலீஸாக உள்ளது.
இதனிடையே இப்படத்தின் அடி அலையே, ரத்னமாலா பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில் இப்படத்தின் மூன்றாவது பாடலான, நமக்கான காலம் பாடல் வெளியாகி உள்ளது. இப்பாடலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
திரைப்படம் இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷன்கள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதன் ஒருபகுதியாக, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பராசக்தி படத்தின் WorldOfParasakthi என்ற நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயனின் குடும்பத்தினர் 'World of Parasakthi' கண்காட்சிக்கு வந்து பார்வையிட்டனர்.
- 'மார்கோ' படத்தை தயாரித்த கியூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
- நியோக் திரைக்கதை எழுதுகிறார் .
மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. தள்ளுமலா, ஆலப்புழா ஜிம்கானா, அனுராக கரிக்கின் வெள்ளம் போன்ற படங்களை இயக்கிய மலையாளத் திரைத்துறையின் முக்கிய இளம் இயக்குநரான கலித் ரஹ்மான் இப்படத்தை இயக்குகிறார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான 'உண்டா' படத்திற்குப் பிறகு இந்த கூட்டணி இணையும் இரண்டாவது படம் இதுவாகும். நடிகர் உன்னி முகுந்தனின் ஆக்ஷன் த்ரில்லர் படமான 'மார்கோ' படத்தை தயாரித்த கியூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரஹ்மான் இயக்கும் இந்தப் படத்திற்கு நியோக் திரைக்கதை எழுதுகிறார் .
நடிகர்கள், மற்ற தகவல்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.








