என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    ரசிகர்கள், பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா நடித்துள்ள புதிய படம் 'தாய் கிழவி'. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ள இந்தப் படத்தில் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான நிலையில், தாய் கிழவி படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. வசூல் ரீதியிலும் இந்தப் படம் வெற்றி பெற்றுள்ளது. தாய் கிழவி படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள், பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    இந்த வரிசையில், நடிகர் சிவகுமார் தாய் கிழவி படத்தை பார்த்துவிட்டு நடிகை ராதிகாவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து ராதிகா சரத்குமார் X தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "சிவகுமார் அண்ணா, நன்றி" என குறிப்பிட்டுள்ளார். இத்துடன் அவர் நடிகர் சிவகுமாருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் மற்றும் சிவகுமார் கைப்பட எழுதிக் கொடுத்த பாராட்டையும் புகைப்படமாக பதிவேற்றம் செய்துள்ளார்.

     

    அதன்படி சிவகுமார் எழுதி கொடுத்த பாராட்டில், "நடிக வேள் எம்.ஆர். ராதாவுக்கு ரத்தக் கண்ணீர், அவர் மகள் ராதிகாவுக்கு தாய் கிழவி. வாழ்த்துக்களுடன் சிவகுமார், சூர்யா, கார்த்தி, பிருந்தா குடும்பத்தினர்," என குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

    கொலைவெறி தாக்குதல் பெரும் வேதனையையும் மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறது.

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் இந்திரா காலனி உள்ளது. இங்குள்ள ஒரு டீக்கடை முன்பு சிலர் நேற்று இரவில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு 3 மோட்டார் சைக்கிள்களில் 9 பேர் கொண்ட மர்ம கும்பல் மதுபோதையில் வந்து, திடீரென பெட்ரோல் குண்டை வீசியது. பின்னர் சாலையில் கண்ணில் தென்பட்டவர்களை கொடூரமாக அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.

    இந்த சம்பவத்தில் மாற்றுத்திறனாளி உள்பட இரண்டு பேர் சம்பவ இடத்திலேய உயிரிழக்க, மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தில் குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மாநிலம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்த நிலையில் நாங்குநேரியில் நடந்த கொடூர சம்பவத்தில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ் X தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "நேற்று இரவு நாங்குநேரியில் சாமானிய மக்கள் மீது சமூகவிரோதிகள் சிலர் நிகழ்த்தியிருக்கும் கொலைவெறி தாக்குதல் பெரும் வேதனையையும் மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறது.

    வெறும் போதை திமிரில் தொடர்ந்து தென்மாவட்டங்களில் வன்முறையையும் சாதிய பெருமிதங்களையும் விஷமாக விதைத்து வளரும் அடுத்த தலைமுறையின் கனவுக்குள்ளும் நீங்கா சமூக பதற்றத்தை சமூக இடைவெளியை திட்டமிட்டு உருவாக்க முயலும் அத்தனை சமூக விரோதிகளையும் அடையாளம் கண்டு பெரும் உக்கிரத்தோடு அவர்களை அடக்கி ஒடுக்கி சிறைப்படுத்தி வன்முறையற்ற சமூக பிளவுகளற்ற தமிழகத்திற்கான நம்பிக்கையையும் உத்திரவாதத்தையும் உருவாக்குமாறு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார். 

    படங்களில் கதாபாத்திரத்திற்காக சில முயற்சிகளை செய்திருக்கிறேன்.

    தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வருபவர் நடிகை அபர்நதி. இவர் நடிப்பில் வெளியான `தேன்', `இறுகப்பற்று', `உடன்பால்' போன்ற திரைப்படங்கள் விமர்சன ரீதியில் பெரிதும் பாராட்டப்பட்டன. இதுதவிர்த்து இவர் நடித்த சில திரைப்படங்களிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

    அந்த வகையில், நடிகை அபர்நதி தற்போது "வெஞ்சென்ஸ்" திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் குறித்து பேசிய அபர்நதி, "எனக்கு நீண்ட நாட்களாக வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. வெஞ்சென்ஸ் படத்தில் அந்த ஆசை நிறைவேறியது. இதுவரை நான் நடித்த படங்களில் கதாபாத்திரத்திற்காக சில முயற்சிகளை செய்திருக்கிறேன்.

    தோற்றம், சருமத்தின் நிறம் என `தேன்', `இருகப்பற்று' போன்ற படங்களில் சில விஷயங்களை செய்ய வேண்டியிருந்தது. ஆனால், இந்தப் படத்திற்கு நான் உண்மையில் எப்படி இருப்பேனோ, அப்படியே என்னை காண்பித்துள்ளார்கள். ஒளிப்பதிவாளர் எம்.எஸ். பிரபு மிக அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறார்," என்றார்.

    உலகளவில் ரூ. 25 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.

    சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில் அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் நடித்துள்ள படம் 'வித் லவ்'. இப்படத்தின் மூலம் அபிஷன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அபிஷன் ஜீவிந்த் முன்னதாக தமிழில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற "டூரிஸ்ட் ஃபேமிலி" படத்தின் இயக்குநர் ஆவார்.

    காதல் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட "வித் லவ்" படத்தில் காவ்யா அனில், ஹரிஷ்குமார், சச்சின் நாச்சியப்பன், தேனி முருகன், ஆர்.ஜே. ஆனந்தி உள்ளிட்ட பலர் நடித்தனர். இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்தார். வித் லவ் திரைப்படம் உலகளவில் ரூ. 35 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.

    இந்நிலையில், வித் லவ் படத்தின் ஓ.டி.டி. அப்டேட் வெளியாகி உள்ளது. இந்தத் திரைப்படம் மார்ச் 6-ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் பெரும் வெற்றி பெற்ற நிலையில், இந்தப் படத்தின் ஓ.டி.டி. ரிலீஸ் அப்டேட் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    பெரிய பட்ஜெட் திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

    தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக உருவெடுத்து வருபவர் சாய் அபயங்கர். இன்டீ பாடல்கள் மூலம் பிரபலமான சாய் அபயங்கர் சமீபத்தில் வெளியான பல பெரிய திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும், நடிகர் சூர்யா மற்றும் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகி இருக்கும் கருப்பு திரைப்படத்திற்கும் இசையமைத்துள்ளார்.

    இதுதவிர மேலும், சில பெரிய பட்ஜெட் திரைப்படங்களுக்கு இசையமைத்து வரும் சாய் அபயங்கர் தனது அடுத்த இன்டீ பாடலுக்கான ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளார். "பவழ மல்லி" என தலைப்பிடப்பட்டுள்ள இந்த பாடலை விவேக் எழுத, ஸ்ருதி ஹாசன் பாடியுள்ளார். சாய் அபயங்கர் இசையில் உருவாகி இருக்கும் இந்தப் பாடல் வருகிற மார்ச் 5-ஆம் தேதி இரவு 7.00 மணிக்கு வெளியாகிறது.

    பவழ மல்லி பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோ சமூக லைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்தப் பாடல் திருமண பின்னணியில் உருவாகி இருக்கிறது. 

    இந்தப் படம் ஜெயிலர் படத்தை விட சிறப்பாக இருக்கும்.

    இயக்குநர் நெல்சன் மற்றும் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் "ஜெயிலர் 2." இந்திய திரையுலகின் பல உச்ச நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் 2 திரைப்படம் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ஜெயிலர் படம் குறித்த புதிய அப்டேட்டை நடிகர் சுராஜ் கொடுத்துள்ளார்.

    கென் கருணாஸ் இயக்கி நடித்துள்ள "யூத்" திரைப்படத்தில் சுராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கான நேர்காணல் ஒன்றில் பேசிய சுராஜ், "ஜெயிலர் 2 திரைப்படம் அருமையாக வந்திருக்கிறது. இந்தப் படம் ஜெயிலர் படத்தை விட சிறப்பாக இருக்கும்.

    எனக்கு நீண்ட காலமாக ரஜினி சாரை பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், இந்தப் படத்தில் அவருடன் பணியாற்றவே வாய்ப்பு கிடைத்து. ஜெயிலர் 2 படப்பிடிப்பில் ஒவ்வொரு ஷாட்டிலும் ரஜினி சார் ஆச்சர்யப்படுத்திக் கொண்டே இருந்தார். அவர் ஒரு வித்தைக்காரர்," என்றார்.

    தொடர்ந்து பேசிய அவர், "தனுஷ் சார் ஸ்டார் நடிகர். அவர் ஒருபக்கம் கமர்ஷியல் திரைப்படங்களும், மறுபக்கம் மரியான் மற்றும் அசுரன் போன்ற திரைப்படங்களிலும் நடிக்கிறார். அவர் தற்போது ஹாலிவுட் வரை சென்றுள்ளார்," என்றார். 

    • ரகசிய மிஷன் குறித்த விறுவிறுப்பான கதையாகும்.

    இந்தியில் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்ஷய் கண்ணா, சாரா அர்ஜுன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த டிசம்பரில் வெளியான படம் 'துரந்தர்'

    இத்திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.1350 கோடிக்கும் மேல் வசூலித்து மேஹா ஹிட் ஆனது.

    மூன்றரை மணி நேரம் நீளம் கொண்ட இந்த படம் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பதற்றத்தை மையமாகக் கொண்டு, இந்திய உளவுத்துறை மேற்கொள்ளும் ரகசிய மிஷன் குறித்த விறுவிறுப்பான கதையாகும்.

    கடந்த ஜனவரி 30 முதல் இந்தி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் இத்திரைப்படம் நெட்பிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கிறது.

    இதற்கிடையே இந்தப் படத்தின் இரண்டாம் பாகமான "துரந்தர்: தி ரிவெஞ்ச்" (Dhurandhar: The Revenge) திரைப்படம் வருகிற மார்ச் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி கவனம் பெற்றது.

    இந்நிலையில் இந்த படத்தின் நீளம் குறித்து தகவல் கிடைத்துள்ளது. முதல் பாகம் 3.30 மணி நேரத்துக்கும் அதிகமாக இருந்த நிலையில், இரண்டாம் பாகம் 4 மணி நேரம் ஓடக்கூடிய படமாக உள்ளது.

    சென்சாருக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட இப்படத்தின் நீளம் 3.55 மணி நேரம் ஓடக்கூடியதாக உள்ளதாக கூறப்படுகிறது.

    இது உறுதி செய்யப்பட்டால் துரந்தர்: தி ரிவெஞ்ச் இதுவரை வெளியான மிக நீளமான இந்தி படங்களில் ஒன்றாக மாறும்.  இரண்டாம் பாகத்தின் ட்ரெய்லர் ஹோலி பண்டிகையை முன்னிட்டு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    இதேபோல கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் மார்ச் 19 வெளியாக உள்ள டாக்சிக் திரைப்படத்தின் நீளம் 3 மணிநேரம் 15 நிமிடங்கள் என்று கூறப்படுகிறது.

    கேஜிஎப் 2 படத்திற்கு பிறகு யாஷ் நடிக்கும் படம் இது என்பதால் இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. துரந்தர் - டாக்சிக் ஆகிய இந்த இரண்டு படங்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

    ஒற்றை பெண்மணியாக பிள்ளைகளை வளர்த்து வந்த ராதிகாவிற்கு திடீரென உடல்நலம் மோசமாகிறது.

    சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா நடித்துள்ள புதிய படம் 'தாய் கிழவி'. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ள இப்படத்தில் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    பவனுதாயி என்கிற பெயரில் தாய் கிழவியாக ஊரில் வலம் வருபவர் ராதிகா. அங்குள்ளவர்களுக்கு வட்டிக்கு விட்டு மிரட்டி வட்டி வசூலில் ஈடுபட்டு வருகிறார்.

    ஒரு கட்டத்தில் கிழவி எப்போது இறக்கும் என ஊரே காத்திருக்கிறது. ராதிகாவிற்கு அருள்தாஸ், பால சரவணன், சிங்கம்புலி என 3 மகன்கள், ஒரு மகளும் இருக்கிறார்கள். ஒற்றை பெண்மணியாக பிள்ளைகளை வளர்த்து வந்த ராதிகாவிற்கு திடீரென உடல்நலம் மோசமாகிறது.

    இன்னும் சில நாட்களில் ராதிகா இறந்து விடுவார் என்று ஊரே காத்திருக்கிறது. அப்போது, ராதிகா 160 சவரன் சேர்த்து வைத்துள்ளது மகன்களுக்கு தெரியவருகிறது. பாசத்தால் இல்லாவிட்டாலும், நகை சொத்துக்காகவாவது தாய் ராதிகாவை காப்பாற்ற வேண்டும் என மெனக்கிடுகிறார்கள்.

    இறுதியில் தாய் கிழவி உயிர் பிழைத்தாரா? அந்த 160 சவரன் நகை என்னவாயிற்று? என்பது படத்தின் மீதிக்கதை.

    இப்படம் கடந்த 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில், ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இப்படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர்.

    சுமார் பத்து கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான 'தாய் கிழவி' படம் வெளியான முதல் நாளே நாடு முழுவதும் ரூ.2 கோடியே 50 லட்சத்திற்கும் மேல் வசூலித்தது.

    இந்நிலையில் 'தாய் கிழவி' படம் வெளியாகி 3 நாட்களில் ரூ.22 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

    இப்படத்தை தொடர்ந்து கமல் ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் சேயோன் படத்தை சிவகுமார் முருகேசன் இயக்க உள்ளார். இதன் அறிமுக டீசர் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

    • ஐசரி கணேஷ் படத்தை தயாரித்துள்ளார்.
    • ஜி.வி.பிரகாஷ் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் 'தேரே இஷ்க் மே'. இந்தியில் எடுக்கப்பட்ட இப்படம் தமிழில் வரவேற்பைப் பெறவில்லை என்றாலும், இந்தியில் ரூ.160 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிப் படமானது. தற்போது, தனுஷ் போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் நாயகியாக மமிதா பைஜுவும், முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் சுராஜ் வெஞ்சரமூடு, ஜெயராம் ஆகியோர் நடித்துள்ளனர்.

    கர எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், வெளியீட்டிற்கான பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி படம் ஏப்.30ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.  


    • நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கும், நர்மதா உதயகுமார் என்பவருக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
    • தாயும் சேயும் நலமாக உள்ளனர்.

    தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். ஆரம்பத்தில் இவர் நடிப்பில் வெளியான படங்கள் பெரும் வரவேற்பை பெறவில்லை என்றாலும் , பார்க்கிங், லப்பர் பந்து போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியையும், பாராட்டுகளையும் பெற்றுத்தந்தது.

    அதன்பின் கடந்தாண்டு வெளிவந்த டீசல் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தொடர்ந்து தாஷமக்கான் போன்ற படங்களில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவருக்கு பெண் குழந்தைப் பிறந்துள்ளதாக ஹரிஷ் கல்யாண் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவரது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில்,

    "எனது மனைவி நர்மதாவிற்கும் எனக்கும் இன்று (02.03.2026) பெண் குழந்தை பிறந்துள்ளதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தாயும் சேயும் நலமாக உள்ளனர். எங்களது வாழ்வின் இந்த அழகான புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் இவ்வேளையில், எங்களது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகள் காட்டிய அன்பு மற்றும் ஆசிகளுக்கு நாங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் 

    உங்களது தொடர்ச்சியான ஆதரவிற்கும், கனிவிற்கும் பத்திரிகை மற்றும் ஊடகத் துறையினருக்கு எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஓம் நமசிவாய" எனக் குறிப்பிட்டுள்ளார். 

    நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கும், நர்மதா உதயகுமார் என்பவருக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

    தயாரிப்பாளர் JK சரவணா முழுமையாக திரைப்பட தயாரிப்பில் கால்பதித்துள்ளார்.

    ஒரு திரைபடம், ஆன்மீகமும் வரலாறும் சங்கமிக்கும் பிரம்மாண்ட பயணம், மற்றொன்று ஒரு ஐயப்ப பக்தரின் வாழ்க்கைப் பயணம் – தந்த்ரா பிலிம்ஸ் அறிவித்த இரண்டு ஐயப்ப சுவாமியின் திரைப்படங்கள்!!

    தமிழ் திரைப்பட உலகில் ஆன்மீக உணர்வும் வரலாற்றுப் பெருமையும் ஒன்றிணையும் புதிய முயற்சியாக, தயாரிப்பாளர் JK சரவணாவின் தந்த்ரா பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் ஒரே நேரத்தில் இரண்டு முக்கிய திரைப்படங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்து, திரையுலகில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

    முன்னதாக சென்னை 600028, சென்னை 600028-2 படங்களை இணைந்து தயாரித்த தயாரிப்பாளர் JK சரவணா முழுமையாக தமிழ் திரைப்பட தயாரிப்பில் கால்பதித்துள்ளார். சுவாமி ஐயப்பனை மையமாக கொண்டு உருவாகும் இந்த இரண்டு படங்களின் தலைப்புகளை, பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.

    தந்த்ரா பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் முதல் படம் "தத் த்வம் அஸி" (Tat Twam Assi - அதுவாகவே நீ இருக்கிறாய்). இது சமகாலத்தில் நடைபெறும் ஆன்மீக ஆக்ஷன் திரைப்படமாக, சுவாமி ஐயப்பன் பக்தரின் வாழ்க்கை, அவரது நம்பிக்கை, பக்தி மற்றும் ஆன்மீக பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகிறது.

    இந்த திரைப்படத்தை, சுவாமி ஐயப்பன் பக்தியை மையமாகக் கொண்டு உருவாகிய 100 கோடி ரூபாய் வசூலை கடந்த சூப்பர் ஹிட் படமான "மாளிகப்புரம்" படத்தை இயக்கிய விஷ்ணு சசி சங்கர் இயக்குகிறார். ஆன்மீக கதைகளை உணர்வுப்பூர்வமாக திரையில் சொல்லும் அவரது அனுபவம், "தத் த்வம் அஸி" படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இரண்டாவது திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள "ஆர்ய கேரள வர்மன்", வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் பிரம்மாண்ட திரைப்படமாகும். இந்தப் படம் இதுவரை அதிகம் பேசப்படாத சுவாமி ஐயப்பனின் சுயசரிதை கதை, 16 -ஆம் நூற்றாண்டின் வரலாற்றுப் பின்னணியில், அவரது வீரத்தையும், ஆன்மீகத் தத்துவத்தையும் மையமாகக் கொண்டு உருவாகிறது.

    இந்த திரைப்படத்தை JK சரவணா மற்றும் ஆதித்யா தங்கிராலா இணைந்து இயக்குகிறார்கள். ஆன்மீகம், வீரம், பண்பாடு ஆகியவை இணையும் ஒரு சக்திவாய்ந்த காட்சிப் படைப்பாக "ஆர்ய கேரள வர்மன்" உருவாகவுள்ளது.

    இந்த இரண்டு படங்களின் டைட்டில் அறிவிப்பு நிகழ்வு, ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த ராஜா அண்ணாமலை புரம் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குநர் வெங்கட் பிரபு கலந்து கொண்டு புதிய படத்தின் தலைப்புகளை வெளியிட்டு படத்தின் தயாரிப்பு பணிகளை துவங்கி வைத்தார். 

    பிளாக் ஹூயுமர் கலந்த நகைச்சுவை திரைப்படமாக அரசியல் பின்னணியில் உருவாகிறது.

    உத்ரா புரொடக்ஷன்ஸ் மற்றும் டி.ஜே. இன்டர்நேஷனல் நிறுவனங்கள் தயாரிப்பில் செ. ஹரி உத்ரா எழுதி இயக்கும் புதிய திரைப்படத்திற்கு 'மாஸ்டர் பிளான்' என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் பூஜை இன்று எளிமையாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது. இந்தப் படம் கோலமாவு கோகிலா, டாக்டர், டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற திரைப்படங்களைப் போல அனைவரும் ரசிக்கும் வகையில் கலகலப்பான பிளாக் ஹூயுமர் கலந்த நகைச்சுவை திரைப்படமாக அரசியல் பின்னணியில் உருவாகவுள்ளது.

    இன்று நடைபெற்ற பூஜை விழாவில் தயாரிப்பாளர்கள் ஃபைவ் ஸ்டார் கதிரேசன், P.L. தேனப்பன், உள்ளிட்டோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். புதிய முயற்சியாக உருவாகும் இந்த திரைப்படம், அரசியலை சேர்ந்த ஆட்களால் ஏற்படும் பிரச்சனையில் நாயகன் நாயகியின் குடும்பம் சிக்கிக் கொள்வதும், அந்த குடும்பம் வில்லன்களிடம் இருந்து, எவ்வாறு மீண்டு வருகின்றது என்பதையும் நகைச்சுவை மற்றும் டார்க் ஹூமர் கலந்த அணுகுமுறையில் சொல்ல இருக்கிறது.

    இந்தப் படத்தில் தருண் விஜய் மற்றும் சாயாதேவி நாயகன், –நாயகியாக நடிக்கின்றனர். இவர்களுடன் திவ்யா ஜெகத், அப்புகுட்டி, கூல் சுரேஷ், சென்ட்ராயன், வினோத் சாகர், அருண் மைக்கேல் டேனியல், சம்பத் ராம், சாய் தீனா, பருத்தி வீரன் சரவணன், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்கின்றனர்.

    முழுக்க முழுக்க நகைச்சுவை ஹூமர் பின்னணியில் நகரும் இப்படம், குடும்ப உறவுகளையும் சமூகச் சிக்கல்களையும் சுவாரஸ்யமாக வெளிப்படுத்தவுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாத இறுதியில் துவங்கி, விழுப்புரம், செஞ்சி, தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறவுள்ளது. இயற்கை சூழலும் கிராமப்புற பின்னணியும் இணையும் வகையில் காட்சிகள் வடிவமைக்கப்படவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

    கலகலப்பான பிளாக் ஹூயுமர் காமெடியாக உருவாகும் 'மாஸ்டர் பிளான்' திரைப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

    ×