பாலக்காடு கோட்டத்தில் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக, மங்களூரு சென்ட்ரல்- சென்னை சென்ட்ரல் இடையேயான வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
காச்சிக்குடாவில் இருந்து வருகிற 25-ந்தேதி வரையில் மாலை 5 மணிக்கு புறப்பட்டு புதுச்சேரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில், தற்காலிகமாக திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.
எழும்பூரில் இருந்து திருச்செந்தூருக்கு வரும் 26, 27, 28, 29 ஆகிய தேதிகளில் மாலை 4 மணிக்கு புறப்படும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் விருதுநகர்- திருச்செந்தூர் இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது.