ரஜினிகாந்திடம் இருந்து மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்களை எதிர்பார்க்க முடியாது - திருமாவளவன்

ரஜினிகாந்திடம் இருந்து மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்களை எதிர்பார்க்க முடியாது என்று தொல். திருமாவளவன் எம்.பி., தெரிவித்துள்ளார்.
திருமாவளவன்
திருமாவளவன்
Published on

திருச்செந்தூர்:

துணை  ஜனாதிபதி வெங்கையா நாயுடு அவர்களின் பணி குறித்த ஆவணப் புத்தகம் ஒன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று வெளியிடப்பட்டது. உள்துறை மந்திரி அமித்ஷா இந்த புத்தகத்தினை வெளியிட்டார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்ட புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த்தும் பங்கேற்றார். 

இந்த விழாவில் ரஜினிகாந்த் பேசியபோது,“அமித்ஷாவும் மோடியும், கிருஷ்ணன் - அர்ஜூனன் போன்றவர்கள். காஷ்மீர் விவகாரத்திற்காக அமித்ஷாவுக்கு வாழ்த்துக்கள் காஷ்மீரை இரண்டாக பிரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை சிறப்பானது” என்றார்.

இது குறித்து விடுதலை சிறுத்தை கட்சி தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்.பி.,யுமான தொல்.திருமாவளவன் திருச்செந்தூரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 

“மோடி-அமித்ஷாவை மகாபாரதத்தில் இருந்து கிருஷ்ணன்-அர்ஜுனனுக்கு உவமையாக ரஜினிகாந்த் கூறியதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. ரஜினிகாந்திடம் இருந்து மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்களை எதிர்பார்க்க முடியாது. எனவே ரஜினியின் கருத்தில் எந்த ஆட்சேபனையும் இல்லை” என்று தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com