இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் அ.தி.மு.க.வை மிரட்டுகிறது மத்திய அரசு: தா.பாண்டியன்

அகிலேஷ் யாதவிற்கு ஒரே நாளில் சைக்கிள் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது. ஆனால் இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அரசு அ.தி.மு.க.வை மிரட்டி வருகிறது என தா.பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.
இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் அ.தி.மு.க.வை மிரட்டுகிறது மத்திய அரசு: தா.பாண்டியன்
Published on

பெருந்துறை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் காரல் மார்க்ஸின் 200-வது ஆண்டு மற்றும் ரஷ்ய புரட்சியின் நூற்றாண்டு விழா சிறப்பு கருத்தரங்கம் பெருந்துறையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. நல்லப்பன் வரவேற்று பேசினார். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் தா.பாண்டியன் பேசியதாவது:-

தற்போது பா.ஜ.க. சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வெறும் கண்துடைப்புக்காக மட்டுமே. இவர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் பயிற்சி பெற்றவர் என்பதால் இவரை வெறும் பொம்மை ஜனாதிபதியாக வைத்து கொண்டு பா.ஜ.க. பின்புலத்தில் செயல்படும்.

கோவையில் அமைக்கப்பட்ட ஆதியோகி சிலை தொடர்பான விதிமீறல் வழக்கில் தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் இந்த சிலை அமைப்பதற்காக விதிகளை தளர்த்தி சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற சம்பவங்களை தவிர்க்கும் வகையில் இந்த மாதிரி கட்டப்பட்ட கட்டிடங்களை கண்காணிக்கத் தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மத்திய தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்கீடு வழக்கில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அகிலேஷ் யாதவிற்கு ஒரே நாளில் சைக்கிள் சின்னத்தை ஒதுக்கீடு செய்தது.

ஆனால் தமிழகத்தில் அ.தி.மு.க.விற்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அரசு அ.தி.மு.க.வை மிரட்டி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com