மிசா குறித்து பேச முதலமைச்சர் விஜய்க்கு என்ன தகுதி இருக்கிறது - பரந்தாமன்

13 எம்எல்ஏக்கள் கேள்வி எழுப்பிய நிலையில் முதலமைச்சர் விஜய் பதில் அளிக்கவில்லை. முதலமைச்சர் பதில் அளிப்பதே மரபு.
Paranthamen
Published on
Summary

முதலமைச்சர் குறித்து அநாகரிகமாக விமர்சித்த பாஜக தலைவர் மீது நடவடிக்கை எடுக்க பயமா? என்று பரந்தாமன் கேள்வி எழுப்பினார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்டத்துறை இணைச்செயலாளர் பரந்தாமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* சட்டசபையில் எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி எழுப்பிய 15 கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் பதில் அளிக்கவில்லை.

* 13 எம்எல்ஏக்கள் கேள்வி எழுப்பிய நிலையில் முதலமைச்சர் விஜய் பதில் அளிக்கவில்லை. முதலமைச்சர் பதில் அளிப்பதே மரபு.

* பெண்கள் தொடர்பான வழக்குகளில் தொடர்புடையவர்கள் கூட மிசாவில் கைது செய்யப்படுவர் என நிர்மல்குமார் கூறுகிறார்.

* மிசா பற்றி பேசுவதற்கு முதலமைச்சர் விஜய்க்கும் அமைச்சர் நிர்மல்குமாருக்கும் எந்த தகுதியும் இல்லை.

* மிசாவில் கைதானோர் தாக்குதலுக்கு உள்ளானது குறித்த இஸ்மாயில் கமிஷன் பற்றி தெரியுமா?

* மிசாவில் அரசியல் கைதிகள் கொடுமைக்குள்ளானது பற்றிய ஆணைய அறிக்கையில் தெளிவாக உள்ளது.

* முதலமைச்சர் குறித்து அநாகரிகமாக விமர்சித்த பாஜக தலைவர் மீது நடவடிக்கை எடுக்க பயமா?

* ஆதாரம் வேணும், ஆதாரம் வேணும்னு கேட்டீங்களே, போதுமா? நான் சும்மாவே காட்டு காட்டுன்னு காட்டுவேன் என முதல்வர் வசனம் பேசுகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com