இந்தியாவில் பெண்களை விட பசுக்கள் பாதுகாப்பாக இருக்கின்றன - சிவசேனா

சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாமனாவுக்கு அளித்த பேட்டியில் பேசிய உத்தவ் தாக்ரே, இந்தியாவில் பெண்களை விட பசுக்கள் பாதுகாப்பாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். #ShivSena #BJP #UddhavThakre
இந்தியாவில் பெண்களை விட பசுக்கள் பாதுகாப்பாக இருக்கின்றன - சிவசேனா
Published on

பாஜகவின் கூட்டணி கட்சியான சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்ரே தனது கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாமனாவுக்கு பேட்டி அளித்தார். அப்போது, பசுக்களை பாதுகாப்பதாக நடத்தப்படும் வன்முறையால் உயிர்கள் பலியாவது குறித்து பேசிய அவர், இந்தியாவில் பசுக்கள் பாதுகாப்பாகத்தான் இருக்கின்றன, ஆனால் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், பாஜகவின் இந்துத்துவா கொள்கை போலியானது என்றும், இந்தியாவில் இந்துத்துவா கொள்கை பின்பற்றப்பட வேண்டும் என்பதை ஏற்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com