உலகம்

அண்டைவீட்டாரின் ரகசிய தகவல்கள் வேண்டுமா? இதை தொழிலாக வைத்து சம்பாதித்து 2 வீடு வாங்கிய கொலம்பியா பெண்..!

கொலம்​பி​யா​வின் குயின்​டியோ மாகாணம், அர்மேனியா​வைச் சேர்ந்த 67 வயது மிரி​யம், பக்​கத்து வீடு​களில் நடக்​கும் ரகசிய கதைகளை சேகரித்து விற்​பதை ஒரு தொழிலாகவே செய்து வரு​கிறார்.

மிரி​யம் என்ற கொலம்பிய பெண்

கொலம்​பி​யா​வின் குயின்​டியோ மாகாணம், அர்மேனியா​வைச் சேர்ந்த 67 வயது மிரி​யம், பக்​கத்து வீடு​களில் நடக்​கும் ரகசிய கதைகளை சேகரித்து விற்​பதை ஒரு தொழிலாகவே செய்து வரு​கிறார். தன்னை சுற்றி நடக்கும் அன்றாட நிகழ்வுகளை கவனித்து அதனை விற்று வருகிறார்.

ஆர்வமுள்ள வடிக்கையாளர்

அண்டை வீட்டாரின் வீடுகளில் நடக்கும் சம்பவங்களின் தகவல்​களின் உண்​மைத்​ தன்​மையுடன் கூடிய புகைப்​படங்​கள் மற்​றும் குறிப்புகளை உள்​ளடக்​கிய ஒரு தொகுப்பை தனது வீட்டில் சேமித்து வைத்திருகிறார்.

குறிப்பாக திரு​மணத்தை மீறிய உறவு, குடும்​பச் சண்​டைகள் போன்ற சுவாரசி​ய​மான அண்டை வீட்டு செய்திகளை கேட்க ஆர்வமுள்ளவர்களுக்கு விற்று வருகிறார்.

700,000 கொலம்​பிய பேசோ

ஒரு முறை ஒரு நபரின் தகவல்களை சேகரித்து கொடுப்பதற்கு சுமார் 7,00,000 கொலம்​பிய பேசோக்​கள் (தோராய​மாக ரூ.21,073) வரை கட்​ட​ண​மாகப் பெற்​றுள்​ளார் மிரி​யம்.

இரண்டு வீடு

இந்த வித்தியாசமான செயல் மூலம் சம்பாதித்து சொந்தமாக இரண்டு வீடுகளை வாங்கியிருப்பதாகவும், இதன் மூலம் அன்றாட செலவுகளை கவனித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் இதன் மூலம் சம்பாதித்த பண பெட்டிகள் நிரம்பிய ஒரு பெட்டியியையும் வாடிக்கையாளர்களுக்கு அவர் காட்டினார்.

வதந்திகளின் ராணி

மிரியம் தனது பணியை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டு செயல்படுவதாகவும், ஆதாரம் இல்லாமல் தகவல்களைப் பரப்புவதில்லை என்றும் தெரிவித்தார்.

அக்கம்பக்கத்தில் நடக்கும் ஏறக்குறைய எல்லாவற்றையும் அறிந்திருப்பதால் அவருக்கு 'வதந்திகளின் ராணி' என்ற புனைப்பெயர் கிடைத்துள்ளதாகவும், மேலும் புறம் பேசுவதுதான் என் வாழ்க்கை அது என் ரத்தத்தில் ஊறிப்போயுள்ளது என்றும் மிரியம் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT