சட்டசபையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* மாண்புமிகு முதலமைச்சர் விஜய்க்கு திமுக எம்எல்ஏக்கள் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகள்.
* புதிய ஆட்சி அமைந்து 40 நாட்களை கடந்தநிலையில் ஆளுநர் உரையில் தவெக ஆட்சியில் செய்த சாதனை இல்லாதது ஏமாற்றமே.
* 40 நாட்களில் புதிய சாதனை, திட்டங்கள் இருக்கிறதா? என ஆவலுடன் காத்திருந்தோம். ஆனால் அதில் ஏமாற்றம் தான்.
* தமிழ்த்தாய் வாழ்த்து ஒரு முறையும் தேசிய கீதம் 2 முறையும் பாடப்பட்டதன் மூலம் அவையின் மரபு மீறப்பட்டுள்ளது.
* 2 முறை தேசிய கீதம் பாட வேண்டும் என இதற்கு முன்பும் ஆளுநர்கள் கோரிக்கை வைத்தார்கள்.
* ஆளுநர் வைத்த கோரிக்கையை எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கவில்லை.
* திமுக ஆட்சியில் இதே கோரிக்கை வைத்தபோது அதை நிராகரித்து பேரவையின் இறையாண்மையை காத்தோம்.
* பேரவையில் ஆளுநர் உரை வாசிக்கப்பட்ட நிலையில் நமது டெரிட்டரியை ஏன் ஆளுநரிடம் கொடுத்து விட்டீர்கள்?
சபாநாயகர்: எந்த அடிப்படையில் நாட்டுப்பண் இருமுறை பாடியது தவறு என கூறுகிறீர்கள்?
உதயநிதி: தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து, இறுதியில் தேசிய கீதம் பாடுவது தான் மரபு.
சபாநாயகர்: தமிழ்த்தாய் வாழ்த்தை பாட முடியாத சூழலை கடந்த காலங்களில் நாம் பார்த்தோம். தேசிய கீதம் இருமுறை பாடப்பட்டதில் என்ன தவறு இருக்கிறது.
உதயநிதி: தேசிய கீதத்தை 2 முறை பாட அனுமதித்தது சரி என்றால் தமிழ்த்தாய் வாழ்த்தையும் இருமுறை பாடியிருக்கலாமே.
* 2 முறை தேசிய கீதம் பாடிய நீங்கள் தமிழ்த்தாய் வாழ்த்தை இருமுறை பாடியிருக்க வேண்டியதுதானே?
* மரபை மீறி 2 முறை தேசிய கீதம் பாடியது ஏன் என்று தான் நாங்கள் கேள்வி கேட்கிறோம்.
* ஆளுநர் மகிழ்ந்தார் என கூறும் நீங்கள், தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை விட ஆளுநர் தான் உங்களுக்கு முக்கியமா?
* உங்களுக்கு ஆளுநர் முக்கியமா? தமிழ்த்தாய் வாழ்த்து முக்கியமா? என விளக்கம் தாருங்கள்.
* ஆட்டுக்கு தாடி, நாட்டுக்கு ஆளுநர் தேவையில்லை என பேரறிஞர் அண்ணா கூறினார்.
* ஆளுநர் உரையானது ரீல்ஸ் போடுவதற்கு உதவுமே தவிர உண்மைக்கு உதவாது.
சபாநாயகர்: அவையை பொறுத்தவரை யாரையும் தலையில் வைத்து கொண்டாட வேண்டிய அவசியம் இல்லை. அவையை பொறுத்தவரை அவை தலைவரின் விருப்பத்திற்கு ஏற்ப தான் நடைபெறும்.
உதயநிதி: கள எதார்த்தத்திற்கும் ஆளுநர் உரைக்கும் மிகப்பெரிய வேறுபாடு எங்களுக்கு தெரிகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.