தலைநகர் டெல்லியில் 98வது அகில பாரதிய மராத்தி சாகித்ய சம்மேளனத்தின் தொடக்க விழா நடைபெற்றது.
மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிசுடன் சேர்ந்து, சரத் பவார் மாநாட்டைத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, சரத் பவார் நார்காலியில் அமர்வதற்கு உதவி செய்தார். பின்னர் சரத் பவாருக்கு மோடி கொடுப்பதற்கு தண்ணீர் கொடுத்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.
98வது அகில பாரதிய மராத்தி சாகித்ய சம்மேளனத்தில் பேசிய பிரதமர் மோடி, "மகாராஷ்டிரா மராத்தி மற்றும் இந்தி சினிமாவுக்கு ஒரு புதிய உச்சத்தை அளித்திருக்கிறது. சத்ரபதி சம்பாஜி மகாராஜின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட 'சாவா' திரைப்படம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது" என்று தெரிவித்தார்.
சரத் பவாரும் பிரதமர் மோடியும் ஒரே மேடையில் அமர்ந்துள்ளது, இந்தியா கூட்டணியில் விரிசலா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
#WATCH | Delhi: Prime Minister Narendra Modi and NCP chief Sharad Pawar at the inauguration of the 98th Akhil Bharatiya Marathi Sahitya Sammelan.(Source: DD News) pic.twitter.com/W2TJpqyeqv