கர்நாடக தலைநகர் பெங்களூருவில் பைக்கில் சென்ற இளைஞர்கள் மதுபோதையில் பட்டாசை கொளுத்தி சாலையில் வீசியபடி சென்ற வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், ஆதித்யா (19) மற்றும் அக்ஷய் குமார் (18) என்ற 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். ஆதித்யாவின் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அதிவேகமாகவும், அலட்சியமாகவும் வாகனம் ஓட்டியதற்காகவும், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதற்காகவும் போக்குவரத்து போலீசார் ஆதித்யாவுக்கு அபராதம் விதித்தனர்.
In #Bengaluru..Two scooter-borne youths nabbed by the police after they were found throwing fire crackers on fellow motorists in HBR Layout. ?What do you call such people? pic.twitter.com/9lrCwYPLzJ