இந்தியா

சைக்கிள் சாகசத்தால் உயிரிழந்த 16 வயது சிறுவன் - அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

நீரஜ் யாதவ் என்ற 16 வயது சிறுவன் சைக்கிள் சாகசம் செய்து வந்தான்.விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

மகாராஷ்டிரா தலைநகர் மும்பையின் மீரா-பயந்தர் பகுதியில் சைக்கிள் சாகசம் செய்தபோது சாலையோர சுவரின் மீது மோதி 16 வயது சிறுவன் நீரஜ் யாதவ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

நீரஜ் யாதவ் சைக்கிளில் சரிவான சாலையில் வேகமாக சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து சுவரில் மோதியுள்ளார். இதனால் தலையில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இவரது உயிர் பிரிந்துள்ளது.

SCROLL FOR NEXT